உருக்கமான கடிதம் எழுதி வைத்துவிட்டு இளைஞர் தற்கொலை – சென்னையில் சோகம்

சென்னை அயனாவரம் நாட்டு முத்தையால் கன் தெருவை சேர்ந்தவர் கலா. இவர் சென்னை மாநகராட்சியில் தற்காலிக  தூய்மை பணியாளராக வேலை செய்கிறார். இவருக்கு வெங்கடேஷ் என்ற மகனும், விஜய் என்ற மகனும் உள்ளனர். விஜய் பத்தாம் வகுப்புவரை படித்துவிட்டு தனது வீட்டின் அருகே உள்ள தனியார் இருசக்கர வாகனம் பழுது நீக்கும் கடையில் வாட்டர் வாஷ் செய்யும் வேலை செய்துவந்தார். இந்தச் சூழலில் நேற்று காலை 9 மணிக்கு கலா வியாசர்பாடியில் உள்ள சர்ச்சுக்கு சென்றுவிட்டு மதியம் … Read more

பிரசவத்திற்க்காக அனுமதிக்கப்பட்ட பெண் தவறான சிகிச்சையின் காரணமாக உயிரிழப்பு: உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு

தேனி: தேனி அரசு மருத்துவக்கல்லூரியில் பிரசவத்திற்க்காக அனுமதிக்கப்பட்ட பெண் தவறான சிகிச்சையின் காரணமாக உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது. இது குறித்து உடற்கூராய்வு நடத்த உத்தரவிட கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரிக்க உயர்நீதிமன்றம் மதுரை கிளை அரசு தரப்பில் விரி விளக்கம் பெற்று தெரிவிக்க உத்தரவிட்டது. தேனியை சேர்ந்த பூங்கொடி மனுதாக்கல் செய்துள்ளார். அதில் தனது மகள் கனிமொழிக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் மீண்டும் கருவுற்றதால் கடந்த ஜூன் மாதம் பிரசவத்திற்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரியில் அனுமதிக்கப்பட்டார். இந்த … Read more

பூத்துக் குலுங்கும் சூரியகாந்தி மலர்கள்! தென்காசியில் உருவான திடீர் சுற்றுலாத்தலம்!

தென்காசி மாவட்டத்தில் வாழ்வாதாரத்திற்கு பயிரிடப்பட்ட சூரியகாந்தி மலர்களால் திடீர் சுற்றுலாத்தலமாக மாறிய வயல் வெளிகள் கேரள மக்களால் நிரம்பி வழியத் துவங்கியுள்ளன. மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்திலுள்ள குற்றாலம், தென்காசி மாவட்டத்திலுள்ள பிரபல சுற்றுலாத்தலம். ஆனால் கடந்த சில வாரங்களாக சுரண்டையை சுற்றியுள்ள கிராமங்கள் திடீர் சுற்றுலாத்தலங்களாக மாறியுள்ளன. ஏன் அவை சுற்றுலாத்தலங்களாக மாறின என்பது குறித்து இத்தொகுப்பில் விரிவாகப் பார்க்கலாம். சுற்றுலாத்தலமாக உருவெடுத்த சூரியகாந்தி தோட்டங்கள்: தென்காசி மாவட்டம் சாம்பவர்வடகரை, சுந்தரபாண்டிபுரம், ஆய்க்குடி உள்ளிட்ட பகுதிகளில் வருடம் … Read more

மதுபான பாட்டில்களை மறுபயன்பாடு செய்வதில் சிக்கல்.. டாஸ்மாக் நிர்வாகம் வாதம்.!

சென்னை உயர் நீதிமன்றம் டாஸ்மாக் கடைகளில் விற்கப்படுகின்ற மதுபாட்டில்களை திரும்ப பெறுகின்ற திட்டம் வகுக்க வேண்டும் என்று டாஸ்மாக் நிர்வாகத்திற்கு உத்தரவிட்டிருந்தது. அத்துடன், சுற்று சூழலை பாதுகாக்கின்ற கடமை தமிழக அரசிற்கு இருக்கின்றது என குறிப்பிடப்பட்டிருந்தது. நீலகிரி மாவட்டத்தில் ஏற்கனவே, இந்த திட்டத்தை செயல்படுத்தியதை நீதிமன்றம் சுட்டிகாட்டியது. அங்கே, 29 லட்சம் மதுபாட்டில்கள் விற்கப்பட்டு, இதன் மூலம் 18 லட்சம் மதுபாட்டில்கள் மீண்டும் பெறப்பட்டதாகவும் தெரிவித்து இதற்கான  திட்டத்தை வகுக்க வேண்டுமென டாஸ்மாக் நிர்வாகத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. … Read more

குடிநீரில் சாக்கடை கலப்பதற்கு எப்போதுதான் விடிவு?- துயரத்தில் தவிக்கும் மதுரை மக்கள்

மதுரை: மதுரை மாநகராட்சியில் பாதாள சாக்கடை பிரச்சனைகளை சரி செய்யாததால் பெரும்பான்மை வார்டுகளில் உள்ள குடியிருப்பு சாலைகளில் பாதாள சாக்கடை கழிவு நீர் பொங்கி ஓடை போல் ஓடுகிறது. மதுரை மாநகராட்சியில் பழைய 72 வார்டுகளில் போடப்பட்ட பாதாள சாக்கடை தற்போது சிதலமடைந்து பராமரிப்பு இல்லாமல் அடிக்கடி கழிவு நீர் பொங்கி சாலைகளில் ஓடுகிறது. புதிதாக மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட 28 வார்டுகளில் பெரும்பாலான வார்டுகளில் பாதாள சாக்கடை வசதியில்லை. சில வார்டுகளில் இருந்தும் முறையான பராமரிப்பு இல்லாமல் … Read more

Tamil nadu schools holiday (Oct 2022): 5 நாட்கள் தொடர் விடுமுறை – மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்!

தமிழக பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு விடுமுறையாக ஐந்து நாட்கள் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில், கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, கடந்த இரண்டு ஆண்டுகளாக, பள்ளிகளில் நேரடி வகுப்புகள் நடைபெறவில்லை. இதன் காரணமாக ஆன்லைன் வாயிலாக பாடங்கள் நடத்தப்பட்டன. மேலும், பொதுத் தேர்வு எழுதிய மாணவர்கள் தவிர மற்ற வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகளும் நடைபெறவில்லை. நடப்பு 2022 – 2023 ஆம் கல்வி ஆண்டில், தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டு … Read more

பம்புக்கு மேல் ரோடு: அலப்பறை செய்த அதிமுக ஒப்பந்ததாரர்!

சாலைகள், மேம்பாலங்கள் என அரசின் திட்டங்கள் ஏலம் விடப்பட்டு ஒப்பந்ததாரர்களுக்கு வழங்கப்படுகிறது. அவர்கள் தலைமையில் மக்களுக்கான சாலைகள் போடப்படுகிறது. அது தரமாக இருக்க வேண்டும் இல்லையா ?. ஆனால், கட்சிகளை கைக்குள் போட்டுக்கொண்டு சாலை போடுகிறோம் என்ற பெயரில் அவர்கள் செய்யும் அட்டூழியத்துக்கு அளவே இல்லாமல் போகும் சூழல் நிலவி வருகிறது. மக்களின் வரிப்பணத்தில் கட்டப்பட்ட ராசிபுரம் அருகே உள்ள சாலையில் லட்சணத்தை பொதுமக்களே கேள்வி கேட்டுள்ளனர்.  நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த பட்டணம் முனியப்பன் பாளையம் … Read more

போச்சம்பள்ளி அருகே ஒரு கிராம மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து திருப்பதி கோவிலுக்கு சென்றுள்ள சுவாரசிய சம்பவம்.!

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த பாரூர் அருகேயுள்ள கீழ்குப்பம் கிராமத்தில் உள்ள மக்கள் மழை பெய்ய வேண்டியும் புரட்டாசி மதங்களில் முதல் வாரம் நெல் அறுவடையை துவங்குவதற்கு முன்னதாக விரதமிருந்து ஐந்து ஆண்டுக்கு ஒரு முறை திருப்பதி கோவிலுக்கு செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு கீழ்குப்பம் கிராமத்தை சேர்ந்த மக்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக ஊரை காலி செய்து விட்டு பத்திற்கும் மேற்பட்ட பேருந்துகளில் திருப்பதிக்கு சென்றனர். இந்நிலையில் கீழ் குப்பம் கிராமம் முழுவதும் … Read more

அடிபம்பு மீது கான்கிரீட் சாலை போட்ட ஒப்பந்ததாரர்! இது நாமக்கல் சம்பவம்! தொடரும் அவலம்

ராசிபுரம் பகுதியில் சாலையில் காங்கிரீட் போடும் பணியின்போது அடிபம்பை அகற்றாமல் அப்படியே காங்கிரீட் போட்ட ஒப்பந்ததாரர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த பட்டணம் முனியப்பன் பாளையம் பகுதியில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த சில தினங்களாக சாலையில் சாக்கடை கால்வாய் மேல் பகுதியில் காங்கிரீட் அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. காங்கிரீட் அமைக்கும் ஒப்பந்தப் பணிகளை மதியழகன் என்பவர் … Read more

28-ம் தேதி’ இபிஎஸ் திருச்சி பயணம்.. பிரம்மாண்டத்தை நிரூபிக்க அதிமுகவினர் ஏற்பாடு

முன்னாள் அமைச்சர் சிவபதி இல்ல திருமண வரவேற்பு விழாவில் பங்கேற்பதற்காகவும், அதிமுக நிர்வாகிகள், தொண்டர்களை சந்திப்பதற்காகவும், எடப்பாடி பழனிசாமி வரும் 28-ம் தேதி திருச்சி வருகின்றார். அதிமுகவில் ஒற்றைத்தலைமை விவகாரத்தில் எழுந்த பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையே பொதுக்குழுவை கூட்டி பிரம்மாண்டம் காண்பித்ததற்கு பின், முதன்முறையாக இபிஎஸ் திருச்சிக்கு வருகிறார். அதிமுக முக்கிய நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் . இதனையடுத்து அவரை வரவேற்பது தொடர்பாக திருச்சி தெற்கு புறநகர் மாவட்ட செயலாளரும் முன்னாள் எம்.பி.யுமான ப.குமார் மற்றும் முன்னாள் … Read more