தண்டனை கைதியாக புழல் சிறையில் உள்ள சுபிக்‌ஷா சுப்பிரமணியன் ‘பேன்ட் – சட்டை’ அணிந்து வாதிடலாம்: உயர் நீதிமன்றம்

சென்னை: நிதி நிறுவன மோசடி வழக்கில் 20 ஆண்டு சிறை தண்டனை பெற்று புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சுபிக்‌ஷா சுப்பிரமணியன், தனக்கு எதிரான வழக்கு விசாரணைகளில், கைதி சீருடையில் அல்லாமல், வழக்கமான பேன்ட் – சட்டை அணிந்து காணொலி மூலம் வாதிட சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. சென்னை அடையாறு காந்திநகரில் விஸ்வபிரியா என்ற பெயரில் நிதி நிறுவனம் தொடங்கி, முதலீடுகளுக்கு அதிக வட்டி தருவதாக கூறி மக்களிடம் கோடிக்கணக்கில் பணம் வசூலித்து ஏமாற்றியதாக சுபிக்‌ஷா … Read more

அமெரிக்க குடியுரிமை பெற்ற குழந்தை மீட்கப்பட்டு சென்னை அழைத்து வரப்பட்டது

சென்னை: அமெரிக்காவில் தாய், தந்தை இறந்ததால் முறைகேடாக தத்து கொடுக்கப்பட்ட அந்நாட்டு குடியுரிமை பெற்ற குழந்தையை, பாட்டியும், சித்தியும் தமிழக அரசு உள்ளிட்ட பலரின் உதவியுடன் நீண்ட சட்டப் போராட்டம் நடத்தி சென்னைக்கு அழைத்து வந்தனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பிரவீன்குமார், திருச்சி மாவட்டம் தமிழ்ச்செல்வி தம்பதி, அமெரிக்காவில் மிசிசிப்பி மாநிலத்தில் வசித்து வந்தனர். பிரச்சினை காரணமாக கடந்த 2022-ம் ஆண்டு மே மாதம் 2-ம் தேதி இருவரும் தற்கொலை செய்து கொண்டனர். அமெரிக்காவில் அவர்களுக்கு பிறந்த … Read more

“மக்களை ஏமாற்றுவதில் விஞ்ஞான மூளை படைத்தவர் ஸ்டாலின்” – இபிஎஸ் சாடல் @ ராணிப்பேட்டை 

ராணிப்பேட்டை: “தமிழகத்தில் இதற்கு முன் ஒரு காவல் துறை டிஜிபி இருந்தார் சைலேந்திர பாபு. அவர் கஞ்சா கடத்தலை தடுப்பதற்காக ஆபரேஷன் 2.O, 3.O என்று ஓ போட்டுக் கொண்டே, ரிட்டையர்ட் ஆகி சென்றுவிட்டார். கஞ்சா ஆபரேஷன் என்றுகூறி ஒரு டிஜிபி எதுவுமே செய்யவில்லை. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்குலைந்துவிட்டது. கொலை, கொள்ளை, வழிப்பறி என தமிழகத்தில் நடக்காத நாளே கிடையாது” என்று ராணிப்பேட்டையில் நடந்த பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி … Read more

“மக்களை திசை திருப்புகிறது பாஜக” – கனிமொழி எம்.பி அடுக்கிய குற்றச்சாட்டுகள்

திருநெல்வேலி: “ஒருபக்கம் பிரதமருக்கு திடீரென்று தமிழ்ப் பாசம் வந்துவிட்டது. மறுபக்கம் அண்ணாமலையோ தமிழ் மக்களின் இந்தி எதிர்ப்பு போராட்டத்தைக் கொச்சைப்படுத்துகிறார். அந்தப் போராட்டத்தைப் பிஞ்சு போன செருப்புக்குச் சமம் என்று கூறுகிறார்” என்று கனிமொழி எம்.பி சாடியுள்ளார். திருநெல்வேலி மக்களவை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸை ஆதரித்து வள்ளியூரில் கனிமொழி எம்.பி.பேசுகையில், “வரக்கூடிய தேர்தல் என்பது எப்போதும் நாம் சந்திக்கின்ற தேர்தல் போல் இல்லை. இது மீண்டும் ஒரு சுதந்திரப் போராட்டம் என்று எண்ணக்கூடிய அளவில் … Read more

“தமிழகத்தில் பாஜகவை கொண்டு வந்ததே திமுக தான்!” – சீமான் குற்றச்சாட்டு @ திண்டுக்கல்

திண்டுக்கல்: “கடந்த தேர்தலில் பாஜக வந்துவிடும் என்று திமுக கூறியதைக் கேட்டு பயந்த கிறிஸ்தவ, இஸ்லாமிய மக்கள் நாம் தமிழருக்கு வாக்களிக்காமல் அவர்களுக்கு வாக்களித்தனர். ஆனால், திமுக இப்போது பாஜக வந்துவிட்டது, பாஜக வந்துவிட்டது என்று கூறுகின்றனர். நாம் தமிழருக்கு வாக்களித்து இருந்தால், தமிழகத்தில் பாஜக வளர்ந்திருக்குமா? வந்திருக்குமா? மக்கள் மறுபடியும் திமுகவுக்கு வாக்களித்தால் வளர்ந்துவிட்டது பாஜக என்று கூறுவார்கள்” என்று திண்டுக்கல்லில் பிரச்சாரம் மேற்கொண்ட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியுள்ளார். நாம் … Read more

“அன்று ஜெயலலிதா சட்டம் – ஒழுங்கை பாதுகாத்தது போலவே இன்று மத்தியில் மோடி ஆட்சி” – தினகரன் @ நெல்லை

திருநெல்வேலி: “இந்தியாவில் 3-வது முறையாக மோடி பிரதமராவது உள்ளங்கை நெல்லிக்கனி போல் தெரிந்த விஷயம்” என்று திருநெல்வேலி மக்களவை தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட அமமுக பொதுசெயலர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். திருநெல்வேலி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட நாங்குநேரி, தாழையூத்து பகுதிகளில் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனை ஆதரித்து அவர் பேசியது: “பிரதமர் மோடி கடந்த 10 ஆண்டுகளாக இந்தியாவில் ஒரு சிறந்த ஆட்சியை, மக்கள் விரும்புகின்ற ஆட்சியை தந்துள்ளார். இதனால் … Read more

TN Lok Sabha Election 2024: வேலூரில் திமுக வேட்பாளரிடம் சரமாரி கேள்வி

வேலூரில் திமுக வேட்பாளர் பிரச்சாரத்தின் போது ஐந்தாண்டுகளாக வரவில்லை ஏன் இப்போது வருகிறீர்கள் என ஒருவர் திடீரென கேள்வி கேட்டதால் ஏற்பட்ட வாக்குவாதத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

“என்னை வெற்றிபெறச் செய்தால் விஜயகாந்த் ஆத்மா சாந்தி அடையும்” – விஜய பிரபாகரன் பிரச்சாரம்

சிவகாசி: “மக்களவையில் தேமுதிக உறுப்பினர் இருக்க வேண்டும் என்பது விஜயகாந்தின் ஆசை. எனக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்தால் விஜயகாந்தின் ஆத்மா சாந்தி அடையும்” என சிவகாசியில் நடந்த பிரச்சாரத்தில் வேட்பாளர் விஜய பிரபாகரன் பேசினார். சிவகாசி அருகே எரிச்சநத்தம், நடையனேரி, எம்.புதுப்பட்டி, சொக்கலிங்கபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில், “உங்களை பார்த்து பேசுவது எனது சொந்தக்காரர்களிடம் பேசுவது போல் உள்ளது. நாம் அனைவரும் உறவினர்கள் தான். … Read more

மேற்கு தொடர்ச்சி மலையில் 3வது நாளாக பற்றி எரிந்து வரும் காட்டுத்தீ!

Latest News Forest Fire In Western Ghats :  3ஆவது நாளாக எரிந்து வரும் காட்டுத்தீயை அனைக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் வனத்துறையினர் மற்றும் தீத்தடுப்பு காவலர்கள்.  

தமிழகத்தில் தேர்தல் களம் இறங்கிய கேரள ஜீப்கள்! – இது தேனி ஸ்பெஷல்

தேனி: தேனி தொகுதியில் ஏராளமான கேரள ஜீப்கள் பிரச்சாரத்துக்காக களம் இறக்கப்பட்டுள்ளன. ஜெனரேட்டருடன் மைக், ஸ்பீக்கர், திறந்தவெளி மேல்புறம் உள்ளிட்ட வசதிகள் உள்ளதால் பல கட்சியினரும் இந்த விஷயத்தில் ‘கூட்டணி அமைத்து’ கேரள ஜீப்களை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். தேர்தல்களில் கூட்டமும், ஆர்ப்பாட்டமும் தவிர்க்க முடியாததாகி விட்டது. தேனி தொகுதியைப் பொறுத்தளவில் போட்டியிடும் கட்சியுடன், கூட்டணி கட்சி நிர்வாகிளும், தொண்டர்களும் ஒன்று சேர்ந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தேனி தொகுதி பரபரப்பான நிலையில் உள்ளது. பிரச்சாரத்தைப் … Read more