மயிலாடுதுறை: முதல் பிரசவத்திலேயே 3 குழந்தைகளை பெற்றெடுத்த தாய் – உறவினர்கள் மகிழ்ச்சி
மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் ஒரே பிரசவத்தில் 3 பெண் குழந்தைகளை தாய் ஒருவர் பெற்றெடுத்துள்ளார். மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா காட்டுச்சேரி கிராமத்தைச் சேர்ந்த தியாகராஜன் என்பவருக்கும் பிரவீனாவுக்கும் (25) கடந்த ஆண்டு ஜூலை மாதம் 7-ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் கருவுற்றிருந்த பிரவீனாவிற்கு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டது. அதில், அவரது வயிற்றில் 3 கருக்கள் வளர்வது தெரியவந்தது. இதையடுத்து கணவர் மற்றும் குடும்பத்தினர் பிரவீனாவை கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொண்டனர். … Read more