மயிலாடுதுறை: முதல் பிரசவத்திலேயே 3 குழந்தைகளை பெற்றெடுத்த தாய் – உறவினர்கள் மகிழ்ச்சி

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் ஒரே பிரசவத்தில் 3 பெண் குழந்தைகளை தாய் ஒருவர் பெற்றெடுத்துள்ளார். மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா காட்டுச்சேரி கிராமத்தைச் சேர்ந்த தியாகராஜன் என்பவருக்கும் பிரவீனாவுக்கும் (25) கடந்த ஆண்டு ஜூலை மாதம் 7-ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் கருவுற்றிருந்த பிரவீனாவிற்கு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டது. அதில், அவரது வயிற்றில் 3 கருக்கள் வளர்வது தெரியவந்தது. இதையடுத்து கணவர் மற்றும் குடும்பத்தினர் பிரவீனாவை கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொண்டனர். … Read more

பரபரப்பான விமான நிலையம்… 1 நிமிடத்தில் விமானியைக் கண்டுபிடிச்சா நீங்கதான் பாஸ்!

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் கண்ணுக்கும் மூளைக்கும் வேலை தருகிற நல்ல பொழுதுபோக்கு பயிற்சியாக இருக்கிறது. ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் முதலில் குழப்பத்தை ஏற்படுத்தினாலும் முடிவில் ஆச்சரியத்தில் ஆழ்த்தி நெட்டிசன்களை அசத்தி வருகிறது. இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் பரபரப்பாக இருக்கும் விமான நிலையத்தில், விமானியைக் காணவில்லை. இந்த டிஜிட்டல் ஓவியத்தில் உள்ள விமான நிலையத்தில் விமானி எங்கே இருக்கிறார் என்று 1 நிமிடத்தில் கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கதான் பாஸ். ஆப்டிகல் இல்யூஷன் … Read more

இலங்கை சிறையில் இருந்து 6 தமிழக மீனவர்கள் விடுதலை.! நீதிமன்றம் உத்தரவு.!

இலங்கை சிறையில் உள்ள 6 மீனவர்களையும் விடுதலை செய்து மன்னார் நீதிமன்றம் உத்தவிட்டுள்ளது. ராமேஸ்வரத்தில் இருந்து கடந்த 21 ஆம் தேதி 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் தமிழக மீனவர்கள் தனுஷ்கோடி, தலைமன்னார் இடையே மீன்பிடித்துக் கொண்டு இருந்தனர். அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி 6 மீனவர்களை கைது செய்தனர். அவர்களின் படகையும் பறிமுதல் செய்தனர். பின்னர் தலைமன்னார் கடற்படை முகாமுக்கு 6 பேரையும் அழைத்து சென்று விசாரணை செய்து, … Read more

காவிரியில் 2.3 இலட்சம் கன அடி நீர்… கரையோரப் பகுதிகள் நீரில் மூழ்கின

கர்நாடகத்தில் கனமழை பெய்து வருவதால் தமிழகத்துக்குக் காவிரியாற்றில் நீர்வரத்து நொடிக்கு இரண்டு இலட்சத்து முப்பதாயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. கர்நாடகத்தின் கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகள் ஏற்கெனவே நிரம்பியுள்ள நிலையில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இன்று காலை நிலவரப்படி கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து நொடிக்கு 68 ஆயிரத்து 100 கனஅடி நீரும், கபினி அணையில் இருந்து நொடிக்கு 15 ஆயிரம் கனஅடி நீரும் திறந்து விடப்பட்டுள்ளது. … Read more

சிறந்த கல்லூரிகளின் தரவரிசைப் பட்டியலில் தமிழக கல்லூரிகள் இடம்பெற்றுள்ளது மிகப் பெரிய சாதனை: ஆளுநர் ஆர்.என்.ரவி 

சென்னை: சிறந்த கல்லூரிகளுக்கான தரவரிசைப் பட்டியலில் நாட்டிலேயே முதல் பத்து இடங்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த கல்லூரிகள் இடம்பெற்றுள்ளது மிகப்பெரிய சாதனை என ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்தார். மத்திய கல்வித் துறை சமீபத்தில் உயர்கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் இடம் பெற்ற தமிழக கல்லூரிகள் கலந்து கொண்ட உயர்கல்வி மேம்பாடு என்ற கருத்தரங்கு தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி தலைமையில் ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது. இதில் சிறப்பான இடங்களை பெற்றுள்ள கல்வி நிறுவனங்களை சேர்ந்த … Read more

கர்நாடகாவில் பெய்யும் கனமழை: காவிரி ஆற்றில் வெள்ளம் – குடியிருப்புகளை சூழந்த தண்ணீர்

கர்நாடகாவில் தொடர்ந்து பெய்யும் கன மழையால் காவிரியாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ஒகேனக்கல் காவிரி கரையோர குடியிருப்பு பகுதிகளுக்குள் தண்ணீர் புகுந்தது. கர்நாடக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்துவருகிறது. இதனால் கர்நாடக அணைகளான கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து வினாடிக்கு சுமார் 83 ஆயிரம் கனஅடி உபரி நீர் காவிரியாற்றில் திறந்துவிடப்படுகிறது. இதையடுத்து, ஒகேனக்கல் காவிரியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இன்று (04.08.2022) காலை நிலவரப்படி காவிரியாற்றில் தமிழக எல்லையான பிலிகுண்டுவுக்கு … Read more

கூட்டமாக செல்லும் பன்றிகள்… சிங்கிளாக வரும் சிறுத்தை… 15 நொடிகளில் கண்டுபிடிச்சா மாஸ்!

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் விதவிதமாக இணையத்தில் வெளியாகி நெட்டிசன்களை ஈர்த்து வைரலாகி வருகிறது. ஆப்டிகல் இல்யூஷன் படங்களின் சுவாரசியத்தில் மூழ்கிப்போகும் நெட்டிசன்கள் வெறித்தனமாக விடைதேடி வருகிறார்கள். இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் காட்டில் பன்றிகள் கூட்டமாக சென்றுகொண்டிருக்க சிங்கிளாக வரும் சிறுத்தை பன்றிகளை வேட்டையாடப் பார்க்கிறது. அந்த சிறுத்தையை 15 நொடிகளில் கண்டுபிடிச்சா நிஜமாவே நீங்க மாஸ்தான். ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் விடை தேடுவது என்பது கண்ணாடிகளுக்கு இடையே வைரத்தை தேடுவதைப் போன்றது. … Read more

அநாகரிகமான வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டாம்: தொண்டர்களுக்கு ஓபிஎஸ் வேண்டுகோள்

சென்னை: “அரசியல் ரீதியாக நம்மை யாராவது தாக்கினாலும், சொல்லுக்குச் சொல், வாதத்திற்கு வாதம், பேச்சுக்கு பேச்சு என்ற அளவிலே நயத்தகு நாகரிகம் மிக்கவர்களாக நடந்து கொள்ள வேண்டுமே தவிர, அவர்கள் அநாகரிகமாக நடந்து கொள்கிறார்கள் என்பதற்காக நாமும் அநாகரிகமான வார்த்தைகளை பயன்படுத்த வேண்டாம்” என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “யாமறிந்த மொழிகளிலேயே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்” என்ற பாரதியாரின் வரிகளும், “திங்களோடும், செழும் பரிதி தன்னோடும், விண்ணோடும், உடுக்களோடும், … Read more

வசதி படைத்தவர்கள் ரேஷனில் பொருட்கள் வாங்குகிறார்களா ? அறிக்கை அளிக்க உத்தரவு

வசதி படைத்த நபர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் நியாய விலைக் கடைகளில் அத்தியாவசிய பொருட்களை வாங்குகிறார்களா என்று விசாரணை செய்து பொது விநியோகத் திட்ட அலுவலர்கள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என உணவுத்துறை உத்தரவிட்டுள்ளது. பொதுமக்களுக்கு உணவுப் பொருட்களை விநியோகிக்கும் நியாய விலைக் கடைகள் சரியாக செயல்படவும், இருக்கும் உணவு பற்றாக்குறைகளை கலையவும் சரியான அடிப்படை தேவையுள்ள பொதுமக்கள் விரைவில் பயன்பெறவும் அதுகுறித்து ஆலோசிக்க உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வுக்கூட்டத்தில் பலதரப்பட்ட விசயங்கள் … Read more

அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் தரவரிசைப் பட்டியல் வெளியீடு: நாளை முதல் கலந்தாய்வு

சென்னை: தமிழகத்தில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதனையடுத்து நாளை கலந்தாய்வு தொடங்குகிறது. மாநிலத்தில் மொத்தம் 163 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் இளநிலை பட்டப் படிப்புகளில் 1.3 லட்சத்துக்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன. இதற்கான மாணவர் சேர்க்கை இணையவழியில் நடத்தப்பட்டது. அதன்படி, நடப்பாண்டு சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு கடந்த ஜூன் 20 முதல் ஜூலை 27-ம் தேதி வரை நடைபெற்றது. மொத்தம் 4 லட்சத்து 7,045 மாணவர்கள் … Read more