சுதந்திரம் முதல் இன்று வரை.. 4000 தபால் தலைகளை சேகரித்துள்ள ஆசிரியருக்கு ஆட்சியர் பாராட்டு

சுதந்திரம் கிடைத்ததில் இருந்து இன்று வரை வெளியிடப்பட்டுள்ள 4,000 தபால் தலைகளை சேகரித்து வைத்திருக்கிறார் விழுப்புரம் பள்ளி ஆசிரியர் ஒருவர். மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் ஆர்வத்தை தூண்டவும் நீண்ட நாட்களாக இந்த பணியை செய்து வருவதாக பெருமிதம் கொள்கிறார் அவர். தகவல் பரிமாற்றம் என்று சொன்னாலே அது கடிதப் போக்குவரத்தாக இருந்த காலம் கொஞ்சம் கொஞ்சமாக மாறி இப்போது அது எங்கே என்று தேடும் நிலைக்கு வந்துவிட்டோம். இப்படி கடிதப் போக்குவரத்து இருந்த காலங்களில் கடிதங்களை கொண்டு செல்ல அரசாங்கத்திற்கு ஒரு தொகை … Read more

4-வது நாளாக தேடுதல் வேட்டை… ட்ரோன் உதவி… காயமடைந்த காட்டு யானையை பிடிக்க தீவிரம்

கோவை மாவட்டம் ஊக்கையனூர் பகுதியில் நான்காவது நாளாக வனத்துறை அதிகாரிகள் வன பகுதியை மேப் கொண்டு ஆலோசனை செய்தும், ட்ரோன் கேமரா மூலம் காட்டு யானையை தேடி வருகின்றனர் தமிழக கேரள எல்லை பகுதியான கொடுங்கரை பகுதியில் 8 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு  வாயில் காயத்துடன் காணப்பட்டது  இதனை அடுத்து கோவை மண்டல தலைமை வன பாதுகாவலர் ராமசப்பிரமணியன் தலைமையில் 7 குழுக்களும் கேரள வனத்துறை சார்பில் 4 … Read more

அலுவலகத்திற்குள் புகுந்து பைனான்சியரை வெட்டி படுகொலை செய்த கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு

வேளாங்கண்ணியில் அலுவலகத்திற்குள் புகுந்து பைனான்சியரை வெட்டி படுகொலை செய்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். மனோகர் என்ற அந்த பைனான்சியர், இரவு அலுவகத்தில் நண்பருடன் பேசிக்கொண்டிருந்தபோது 4 இருசக்கர வாகனங்களில் வந்த 8 பேர் கும்பல் உள்ளே புகுந்து மனோகரை அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. தடுக்க முயன்ற அவரது நண்பரின் கையிலும் அரிவாளால் வெட்டிவிட்டு அந்த கும்பல் தப்பியோடியது.     Source link

“நீங்கள் பேசுவது அபத்தத்தின் உச்சம்” – தென் கொரிய அதிபரை விமர்சித்த கிம்மின் சகோதரி

பியாங்யாங்: “நீங்கள் பேசுவது அபத்தத்தின் உச்சம்” என்று தென் கொரிய அதிபரை கிம்மின் சகோதரி கடுமையாக விமர்சித்துள்ளார். “வடகொரியா அணு ஆயுத சோதனைகளை கைவிட்டால் நாங்கள் பொருளாதார உதவிகளை செய்யத் தயார்” என தென் கொரிய அதிபர் யூன் சுக்-இயோல் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், தென் கொரியாவின் கருத்தினை கிம்மின் சகோதரியும், வட கொரியாவின் சக்தி வாய்ந்த பதவியில் இருப்பவருமான கிம் யோ ஜாங் கடுமையாக விமர்சித்திருக்கிறார். இதுகுறித்து அவர் கூறும்போது, “தென்கொரிய அதிபரின் இந்த அழைப்பு … Read more

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு அறிக்கையை வெளியிடுக! – திமுக அரசுக்கு கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்!

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் சமர்ப்பித்த அறிக்கையை வெளியிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் வலியுறுத்தி உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து உள்ளதாவது: தூத்துக்குடி துப்பக்கிச் சூடு சம்பவம் குறித்து விசாரிப்பதற்கு உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணைக் குழு 3,000 பக்கங்கள் கொண்ட தனது அறிக்கையை 2022 மே … Read more

சிகரெட்டுக்கு பணம் பணம் வேணுமா? கடைக்காரர் காதை கடித்த காவலர்….!

கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள திருவள்ளுவர் பேருந்து நிலையம் முன்பு சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் கதவு இல்லாததால் இரவு நேரத்தில் தார்பாலினால் கதவை மூடி வைத்துவிட்டு கடைக்குள்ளேயே உறங்குவது வழக்கம். இதேபோன்று கடையில் செந்தில்குமாரின் மகன் செல்வசிவா தந்தைக்கு உதவியாக இருந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று நள்ளிரவு 2 மணி அளவில் தார்பாலினை திறந்து உள்ளே வந்த சிவகங்கை மாவட்டம் கீதக்காதியைச் சேர்ந்த போலீஸாக்காரரான முகமது ஆஷிக்  என்பவர் … Read more

பிள்ளையார்பட்டியில் விநாயகர் சதுர்த்தி விழா 22ல் துவக்கம்: 31ம் தேதி தீர்த்தவாரி உற்சவம்

திருப்புத்தூர்: பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் சதுர்த்தி பெருவிழா வரும் 22ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. சிவகங்கை மாவட்டம், திருப்புத்தூர் அருகே பிள்ளையார்பட்டியில் பிரசித்தி பெற்ற கற்பக விநாயகர் கோயில் உள்ளது. வரும் 31ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இக்கோயிலில் வரும் 22ம் தேதி காலை கொடியேற்றத்துடன் சதுர்த்தி பெருவிழா துவங்குகிறது. அன்று இரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர் எழுந்தருளி திருவீதி உலா நடைபெறும். 2ம் நாள் முதல் 8ம் … Read more

கிருஷ்ண ஜெயந்தி: குழந்தைக்கு கிருஷ்ணர் வேடமிட்டு மகிழ்ந்த இஸ்லாமிய தம்பதி

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கிருஷ்ணர் வேடமிட்டு கொண்டாட ஆசைபட்ட குழந்தைக்கு ஆசையாய் கிருஷ்ணர் வேடம் அணிவித்து மகிழ்ந்துள்ளனர் இஸ்லாமிய தம்பதியினர். செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் அடுத்த மாடம்பாக்கம் பகுதியில் வசித்து வருபவர்கள் இதயதுல்லா- தாஹிதா பேகம் தம்பதி. இஸ்லாமிய தம்பதியான இவர்களுக்கு இரண்டு பெண் பிள்ளைகள். அதில் 5 வயது நிரம்பிய இரண்டாவது குழந்தை ஹேனா, கிருஷ்ண ஜெயந்தியான இன்று டிவியில் சுட்டிக் கிருஷ்ணரை பற்றிய நிகழ்வுகளை பார்த்துவிட்டு, பெற்றோரிடம் கிருஷ்ணர் வேடமிடுமாறு ஆசையாய் கேட்டுள்ளார். பெற்றோர்களும் … Read more

தமிழக பாஜக தலைவர் போலத்தான் கட்சியினரும் : அமைச்சர் செந்தில் பாலாஜி விமர்சனம்

வருகிற 24-ஆம் தேதி கோவையில் நடைபெறும் விழாவில் பங்கேற்றும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  சுமார் ஒரு லட்சத்து 6 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க இருப்பதாகவும் அப்போது மாற்றுக் கட்சிகளில் இருந்து முக்கிய பிரமுகர்கள் பலர் திமுகவில் இணை உள்ளதாகவும் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். அது தொடர்பாக கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன்,மாநகர மற்றும் மாவட்ட  காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய அமைச்சர் செந்தில் பாலாஜி, பின்னர் செய்தியாளர்களை … Read more

“வட்டாட்சியருக்கு இருக்கை வழங்காதது திமுக அரசின் சாதிய வன்மத்தின் உச்சம்” – அண்ணாமலை

சென்னை: “வட்டாட்சியருக்கு இருக்கை வழங்காதது திமுக அரசின் சாதிய வன்மத்தின் உச்சம்” என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், “திருவள்ளூர் மாவட்டம் ஈகுவார்பாளையத்தில் நடந்த அரசு விழாவில் வட்டாட்சியர் கண்ணனுக்கு இருக்கை வழங்காதது இந்த திமுக அரசின் சாதிய வன்மத்தின் உச்சம். அவர் பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்பதால்தான் இருக்கை வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. அந்த விழாவில் துணை வட்டாட்சியர், சட்டமன்ற உறுப்பினர் அதுமட்டுமின்றி, அங்கு … Read more