கிருஷ்ண ஜெயந்தி இன்று கொண்டாட்டம்: ஆளுநர், அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து

சென்னை: நாடு முழுவதும் கிருஷ்ண ஜெயந்தி இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழக ஆளுநர், அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். ஆளுநர் ஆர்.என்.ரவி: உலக நன்மைக்காக, அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியாவை முழு வளர்ச்சியடைந்த நாடாக மாற்றும் பணியில் அடியெடுத்து வைத்திருக்கும் இந்த பொற்காலத்தில், முழுமையாகவும், மிகுந்த அர்ப்பணிப்புடனும், ஆர்வத்துடனும் நமது கடமையை மேற்கொள்ள வேண்டும். தேசத்தின் விழுமிய லட்சியத்தை நிறைவேற்றவும், நம்மால் இயன்ற அனைத்தையும் செய்வதற்கும் இந்த நன்னாளில் அனைவரும் நம்மை அர்ப்பணிப்போம். எதிர்கட்சித் தலைவர் … Read more

திருச்சி அகதிகள் சிறப்பு முகாமில் 60 செல்போன்கள் பறிமுதல்

திருச்சி: திருச்சியில் அகதிகள் சிறப்பு முகாமில் போலீஸ் நடத்திய சோதனையில் 60 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அகதிகள் சிறப்பு முகாமில் போதைப்பொருள், ஆயுதங்கள் உள்ளதா என 100-க்கும் மேற்பட்ட போலீஸ் சோதனை நடத்தி வருகின்றனர்.

மின்கட்டண உயர்வு தொழில்களை முடக்கும் – தொழிற் சங்க நிர்வாகிகள் எதிர்ப்பு ..!

தமிழகத்தில் மின் கட்டண உயர்வு குறித்து கருத்து கேட்பு கூட்டம் நேற்று மதுரை லட்சுமி சுந்தரம் ஹாலில் நடந்தது. இந்தக்கூட்டத்தில்  பொதுமக்கள், வர்த்தகர்கள், தொழிற் சங்க நிர்வாகிகள் மின் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர் . இந்நிலையில், தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க தலைவர் ஜெகதீசன் தெரிவித்ததாவது: காற்றாலை உற்பத்தி மின்சாரத்தை சேமிக்கும் வசதியை செய்யாததால் ரூ. ஆயிரத்து தொள்ளாயிரம்  கோடி இழப்பு ஏற்பட்டது என தெரிவிக்கப்ட்டுள்ளது. ஆண்டுதோறும் ஆறு சதவீதம் உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. இங்கு … Read more

தமிழகத்தில் 18 நாட்களில் 37.81 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலுடன் ஆதாரை இணைத்தனர்

சென்னை: தமிழகத்தில் 18 நாட்களில் 37.81 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் இணைப்பை இணைத்துள்ளனர். வாக்காளர் பட்டியலில் உள்ள குறைகளைப் போக்கும் வகையிலும், இரட்டைப் பதிவுகள் உள்ளிட்ட சிக்கல்களைத் தீர்க்கவும் வாக்காளர் பட்டியலுடன் ஆதாரைஇணைக்கும் பணி கடந்த 1-ம் தேதி தொடங்கியது. இந்நிலையில், வாக்காளர் பட்டியலுடன் ஆதார் இணைப்புக்காக ஆக. 1-ம் தேதி முதல் வாக்காளர் பதிவு அலுவலர்கள் வீடுவீடாகச் சென்று, விவரங்களைப் பெற்று இதற்கான ‘கருடா’ செயலியில் பதிவு செய்து வருகின்றனர். இதுகுறித்து தமிழக … Read more

பூஞ்சேரி கிராமமும், வெடித்த சர்ச்சையும்… நிஜமாவே நரிக்குறவர், இருளர் குடும்பங்கள் பயன்பெற்றனவா?

செங்கல்பட்டு மாவட்டம் பூஞ்சேரியை சேர்ந்த நரிக்குறவ மற்றும் இருளர் சமூகத்தை சேர்ந்த பெண்களுக்கு வழங்கிய கடன் உதவி கிடைக்கவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்தது. குறிப்பாக நரிக்குறவ பெண் அஸ்வினி பேசும் வீடியோ பல்வேறு ஊடகங்களில் வெளியாகி சர்ச்சையானது. அதில் அவர், எங்கள் பகுதிக்கு முதல்வர் வந்து பல்வேறு நலத்திட்ட உதவிகள் அளித்தார்கள். ஆனால் எதுவும் வந்து சேரவில்லை. சுமார் ஓராண்டாகி விட்டது. கடன் தர வங்கி அதிகாரிகள் மறுக்கின்றனர். எங்களிடம் அனைத்து ஆதாரங்களும் இருக்கின்றன. ஆனால் உதவிகள் … Read more

கோவையில் மருத்துவ கல்லூரி மாணவர் தற்கொலை!

கோவையில் முதுகலை பட்ட படிப்பு படிக்கும் அரசு மருத்துவ கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆந்திரா மாநிலம் நெல்லூர் பகுதியை சேர்ந்த பிரவின் அன்னதத்தா (33) இவர் எம்பிபிஎஸ் (இளங்கலை மருத்துவம் மற்றும் இளங்கலை அறுவையியல்) அங்குள்ள மருத்துவ கல்லூரியில் படித்து முடித்து விட்டு கோவை அரசு மருத்துவ கல்லூரியில் முதுகலை பட்டத்தில் மருத்துவ பிரிவில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.  இவர் கோபாலபுரம் பகுதியில் … Read more

புதுக்கோட்டை: போக்சோ வழக்கில் சிறையில் இருக்கும் கோயில் பூசாரி மீது பாய்ந்த குண்டாஸ்

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் சிறையில் இருக்கும் கோயில் பூசாரியை குண்டர் சட்டத்தில கைது செய்ய புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமிக்கு, கடந்த 5 மாதங்களுக்கு முன்பு வயிற்று வலி பிரச்னை இருந்துள்ளது. இதை அறிந்த கோயில் பூசாரி பழனி (65) என்ற முதியவர் சிறுமியின் தாயாரை அணுகி சிறப்பு பூஜை மூலம் சிறுமியின் வயிற்றில் வலியை குணப்படுத்தலாம் என கூறியுள்ளார். இதனை நம்பிய … Read more

பில்கிஸ் பானோ வழக்கு தீர்ப்பு: 11 பேரை குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்த நீதிபதி என்ன சொல்கிறார்?

2002 குஜராத் கலவரத்தின் போது பில்கிஸ் பானோவை கூட்டுப் பலாத்காரம் செய்து அவரது குடும்ப உறுப்பினர்களைக் கொன்றதற்காக 2008 இல் 11 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்த நீதிபதி (ஓய்வு) யு டி சால்வி, வியாழன் அன்று “பாதிக்கப்படுகிறவருக்கு தான் அது நன்றாகத் தெரியும்” என்றார். தண்டனையை நீக்குவதற்கான விண்ணப்பத்தை குஜராத் அரசு குழு ஏற்றுக்கொண்டதையடுத்து, 11 குற்றவாளிகள் திங்கள்கிழமை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர். விசாரணைக்கு தலைமை தாங்கிய, மும்பை நகர சிவில் மற்றும் செஷன்ஸ் நீதிமன்றத்தில் … Read more