புதுச்சேரியில் ரேஷன் கடைகளை திறக்கக் கோரி சிபிஎம் ஊர்வலம்: போலீஸ் தடுத்ததால் மறியல்

புதுச்சேரி: ரேஷன் கடைகளைத் திறக்கக் கோரி ஊர்வலமாக வந்த சிபிஎம் கட்சியினரை போலீஸார் தடுத்ததால் நேரு வீதியில் 2 மணிநேரம் மறியலில் அவர்கள் ஈடுபட்டனர். புதுச்சேரி மாநிலத்தில் புதுச்சேரி, காரைக்கால், மாஹி மற்றும் ஏனாம் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் கடந்த மூன்று ஆண்டுகளாக ரேஷன் கடைகள் மூடி வைக்கப்பட்டுள்ளது. மக்களுக்கு இலவசமாகவும், மானிய விலையிலும் வழங்கப்பட்டு வந்த அரிசி மற்றும் இதர உணவு பொருட்கள் கிடைக்கவில்லை. இதனால் ரேஷன் கடைகளைத் திறக்கக் கோரி தலைமைச்செயலகம் நோக்கி ஊர்வலம் … Read more

குன்னூர் அருகே மக்களை மிரட்டும் 3 கரடிகள்: அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

ரகுமான், கோவை coonoor news tamil: குன்னூர் அருகேயுள்ள அளக்கரை கிராம பகுதியில் கடந்த 8 மாதங்களாக இரண்டு குட்டிகளை முதுகில் சுமந்து வலம் வந்த தாய்கரடி உட்பட மூன்று கரடிகள் தற்போது குட்டிகள் பெரிதாக வளர்ந்துள்ளதால் அப்பகுதி மக்கள் அச்சம் – கூண்டு வைத்து பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கிராமப் பகுதிகளில் சமீபகாலமாக கரடிகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், குன்னூர் அருகேவுள்ள அளக்கரை கிராம பகுதியில், கடந்த 8 மாதங்களாக … Read more

கன்டெய்னர் லாரி மீது கார் மோதி விபத்து – ஒருவர் உயிரிழப்பு

கண்டெய்னர் லாரி மீது கார் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நீலகிரி மாவட்டம் ஊட்டியை சேர்ந்தவர் சுதாகர். இவர் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள சகோதரி வீட்டிற்கு சென்று விட்டு நேற்று காரில் மீண்டும் ஊட்டியை நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்பொழுது திருப்பத்தூர் மாவட்டம் நெக்குந்தி அருகே சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தபோது, ஓசூர் நோக்கி முன்னால் சென்ற கன்டெய்னர் லாரி மீது கார் மோதி, சாலையின் நடுவே கவிழ்ந்தது. இதில் சுதாகர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து … Read more

உளுந்தூர்பேட்டையில் காணாமல் போன +2 மாணவிகள் 24 மணி நேரத்திற்குள் மீட்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் காணாமல் போன +2 மாணவிகள் இரண்டு பேர் போலீசாரின் உதவியால் 24 மணிநேரத்திற்குள் கண்டுபிடிக்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர். அங்குள்ள களமருதூர் கிராமத்தை சேர்ந்த ஒரு மாணவியும், கீழ்குப்பம் கிராமத்தை சேர்ந்த மற்றொரு மாணவியும் நேற்று பள்ளிக்கு வரவில்லை என தகவல் வந்ததால், பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். இதன்படி தனிப்படை அமைத்து தேடிய போலீசார் தோழிகள் இருவரும் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருப்பதை கண்டுபிடித்தனர். உடனடியாக பெற்றோரை அழைத்துக்கொண்டு சென்னை வந்த … Read more

பிரபல தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் வீடுகள் உள்பட 40 இடங்களில் வருமான வரி சோதனை – முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல்

சென்னை: திரைப்பட ஃபைனான்சியர் அன்புச்செழியன், தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, எஸ்.ஆர்.பிரபு, ஞானவேல் ராஜா உள்ளிட்டோர் வீடு, அலுவலகம் என சுமார் 40 இடங்களில் நேற்று வருமான வரி சோதனை நடைபெற்றது. இதில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. தமிழ்த் திரைப்படத் துறையைச் சேர்ந்தவர் ஜி.என்.அன்புச்செழியன். சினிமாவுக்கு ஃபைனான்ஸ் செய்வது, திரையரங்கம், ஓட்டல் உள்ளிட்ட தொழில்களில் ஈடுபட்டுள்ளார். மதுரையைச் சேர்ந்த இவர் `கோபுரம் பிலிம்ஸ்’ என்ற பெயரில் சினிமா தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். வெள்ளக்கார துரை, … Read more

ஏரியில் மீன் பிடிப்பதில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக இளைஞர் வெட்டிக்கொலை

ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி அருகே ஏரியில் மீன் பிடிப்பதில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக நடந்த தகராறில் இளைஞரை வெட்டிக்கொன்றதாக இருவரை போலீசார் தேடி வருகின்றனர். ராம்பாளையம் பகுதியை சேர்ந்த சுப்பிரமணி, அப்பகுதியில் உள்ள விளாரி ஏரியில் மீன்பிடிப்பதற்கான குத்திகையை எடுத்துள்ளார். இந்நிலையில் அதே பகுதியில் சேர்ந்த 21 வயதான கலையரசன், இரவு நேரங்களில் குத்தகைக்காரர்களுக்கு தெரியாமல் விளாரி ஏரியில் மீன் பிடித்து வந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கலையரசன் உடன் சுப்பிரமணியின் நண்பர்கள் தினகரன், அசோக் தகராறு … Read more

விழுப்புரம் அருகே 60 ஆண்டுகளுக்குப் பிறகு தருமர் பட்டாபிஷேக திருவீதி உலா

விழுப்புரம்: விழுப்புரம் அருகே மேல்பாதி கிராமத்தில் உள்ள ஸ்ரீ தருமராஜா திரௌபதியம்மன் கோயிலில் 60 ஆண்டுகளுக்கு பிறகு தர்மர் பட்டாபிஷேக திருவீதி உலா இன்று நடைபெற்றது. மேல்பாதி கிராமத்தில் உள்ள ஸ்ரீ தருமராஜா திரௌபதியம்மன் கோயிலில் 60 ஆண்டுகளுக்கு ஒருமுறை திருவிழா நடைபெறுவது வழக்கம். இதில் முக்கிய திருவிழாவான தருமர் பட்டாபிஷேக திருவீதி உலாவையொட்டி ஒரு மாதம் முன்பே கிராமத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டுக்கும் ரூ 5 ஆயிரம் பிரிவு தொகை வழங்க வேண்டும் என கிராம … Read more

என்னை அசிங்கப்படுத்திட்டீங்க… ஜீ தமிழுக்கு எதிராக செம்பருத்தி நடிகை ஆதங்கம்

ஜீ தமிழின் செம்பருத்தி சீரியல் வெற்றிவிழாவில் தன்னை அசிங்கப்படுத்திவிட்டதாக வில்லி நடிகை புகார் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சின்னத்திரை சீரியல்கள் தற்போது இல்லத்தரசிகள் மட்டுமல்லாது இளைஞர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் ஜீ தமிழின் செம்பருத்த சீரியல் 5 வருடங்களாக ஒளிபரப்பாகி சீரிய மக்களின் நெஞ்சங்களை கவர்ந்தது. ஷபானா, விஜே அக்னி, பிரியா ராமன் உள்ளிட்ட பலர் முக்கிய கேரக்டரில் நடித்த இந்த சீரியல் நேற்று முன்தினத்துடன் முடிவடைந்தது. இறுதியில், வில்லி … Read more

மதுரை விமான நிலைய விரிவாக்கப் பணித் திட்டத்தின் நிலை என்ன? – ஒரு பார்வை

மதுரை: மதுரை விமான நிலையம் விரிவாக்கப் பணித் திட்டமும், சர்வதேச விமான நிலையம் அந்தஸ்து நடவடிக்கையும் கிடப்பில் போடப்பட்டுள்ள நிலையில், தென் மாவட்ட அமைச்சர்கள், எம்பி-கள் ஆகியோர் இதற்கான முயற்சியை எடுக்க வேண்டும் என்று தொழில்துறையினர், பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். தென் தமிழகத்தில் மதுரை விமான நிலையம் உள்நாட்டு போக்குவரத்தில் முக்கியத்துவம் வாய்ந்த விமான நிலையமாக செயல்படுகிறது. உள்நாட்டு பயணிகள் வருகையில் திருச்சியை விட மதுரை விமான நிலையத்தில் அதிகம். கோவையைவிட வெளிநாட்டுப் பயணிகள் அதிகம். மதுரையை விட … Read more

சினிமாவில் மூன்றாம் தலைமுறை; அரசியலில் மங்கும் என்டிஆர் குடும்பம்!

ஆந்திராவில் அசைக்க முடியாத அரசியல் சக்தியாக திகழ்ந்தவர் என்டி ராமாராவ். இவரின் 4ஆவது இளைய மகள் உமா மகேஸ்வரி ஹைதராபாத்தில் மர்மமான முறையில் சடலமாக மீட்டெடுக்கப்பட்டுள்ளார்.உமா மகேஸ்வரியின் உயிரிழப்பு தற்கொலை என்று சொல்லப்பட்டாலும், அவரின் மரணத்திலும் மர்மம் நீள்கிறது. என்டி ராமாராவ், 1943ஆம் ஆண்டு மே மாதம் பஸ்வராமா தராக்கம் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்தத் தம்பதியருக்கு 12 குழந்தைகள் பிறந்தனர்.சினிமாவில் கொடிகட்டி பறந்த என்டிஆர் அரசியலிலும் கால்பதித்தார். தெலுங்கு தேசம் என்ற கட்சியை உருவாக்கி, சந்தித்த … Read more