கரோனா தொற்று இன்னும் விலகவில்லை என்பதை உணர்ந்து தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் – முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்

சென்னை: கரோனா வைரஸ் தொற்று இன்னும் விலகவில்லை என்பதை உணர்ந்து, நம்மைப் பாதுகாக்க தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று பொதுமக்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்தியாவில் கரோனா தடுப்பூசிகள் செலுத்தும் பணி 2021-ம் ஆண்டு ஜன.16-ம் தேதி தொடங்கியது. தற்போதைய நிலையில் 12 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. தமிழகத்தில் அனைவருக்கும் விரைவாக தடுப்பூசி செலுத்த வாரந்தோறும் சனிக்கிழமைகளில் 50 ஆயிரம் இடங்களில் 28 மெகா முகாம்களும், மாதந்தோறும் ஒரு லட்சம் இடங்களில் … Read more

இனி ஒரே தலைவர் எடப்பாடிதான்: அ.தி.மு.க பொதுக்குழுவில் தலைவர்கள் பேச்சு!

அதிமுக பொதுக்குழு கூட்டம் ஏற்கெனவே திட்டமிட்டபடி, சென்னை, வானகரம் ஸ்ரீவாரு மண்டபத்தில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்கும் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு RFID தொழில்நுட்பத்துடன் அதிநவீன அடையாள அட்டை வழங்கப்பட்டது. போலி உறுப்பினர்களை தடுக்க நுழைவு வாயிலில்16 ஸ்கேனர்களுடன் தீவிர பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. இதற்கிடையே, ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ், இபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே திடீரென மோதல் நிகழ்ந்தது. இரு தரப்பினரும், ஒருவர் மீது ஒருவர் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். கார்கள் அடித்து நொறுக்கப்பட்டன.  இதனால், … Read more

உலக நாடுகளின் கவனம் ஈர்த்த இந்தியாவின் தேசிய சின்னம் : திறந்து வைத்தார் பிரதமர் மோடி.!

புதிய பாராளுமன்ற கட்டிடம் மத்திய விஸ்டா மறு அபிவிருத்தி திட்டத்தின் கீழ், டாடா நிறுவனம் சார்பில் கட்டப்பட்டு வருகிறது. இந்த புதிய பாராளுமன்ற கட்டிடம் ரூ.971 கோடி செலவில் அதிநவீன வசதியுடன் அமைக்கப்படுகிறது.  மேலும், இந்த புதிய பாராளுமன்ற கட்டிடம் எதிர்காலத்தில் மக்களவையில் 888 உறுப்பினர்களும், மாநிலங்களவையில் 384 உறுப்பினர்களும் அமர்வதற்கு ஏற்ற வகையில்  அமைக்கப்படுகிறது. இந்த புதிய கட்டிடத்தில் பாராளுமன்ற  கூட்டத்தின் போது 1,224 உறுப்பினர்கள் பங்கேற்கும் வகையில் கட்டப்படுகிறது. இந்த புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் … Read more

பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து திருட்டில் ஈடுபட்ட மர்மநபர்.!

தஞ்சை மாவட்டம் பேராவூரணி பேரூராட்சிக்குட்பட்ட நாட்டாணிக்கோட்டை கிராமத்தில் பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து திருட்டில் ஈடுபட்டவனை சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் தேடி வருகின்றனர். வாட்டர்டேங்க் பகுதியில் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரான வெங்கட்ராமன் என்பவர் மனைவி இறந்த நிலையில் தனியாக வசித்து வருகிறார். இவர் பெங்களூரில் உள்ள தனது மகள் வீட்டிற்கு சென்றிருந்த நிலையில், அங்கிருந்தபடி தனது வீட்டில் இருந்த சிசிடிவி காட்சிகளை நேற்று தனது மொபைல் போன் மூலம் ஆய்வு செய்த போது அதிகாலை … Read more

அதிமுக கிளை செயலாளர் டு பொதுச்செயலாளர்: பழனிசாமியின் அரசியல் பயணம் – ஒரு டைம்லைன் பார்வை

1954-ம் ஆண்டு பிறந்த பழனிசாமி, அரசியல் ஆர்வம் மற்றும் எம்ஜிஆர் மீது கொண்ட பற்றால் 1974-ல் அதிமுகவில் தனது 20-வது வயதில் இணைந்தார். அதிமுகவில் ஒரு அடிப்படை தொண்டன்கூட தலைமைப் பொறுப்புக்கு வரமுடியும் என்பதை முதல்வராகி நிரூபித்த பழனிசாமி, தற்போது இடைக்கால பொதுச்செயலாளர் பதவியையும் வசமாக்கியுள்ளார். 1974 -ல் அதிமுகவில் இணைந்து, சிலுவம்பாளையம் கிளைச் செயலாளரானார். அதன்பின் ஒன்றியம், மாவட்டப் பொறுப்புகளில் நியமிக்கப்பட்டார். 1989 – எம்ஜிஆர் மறைவுக்குப்பின் ஜானகி, ஜெயலலிதா அணி என இரு அணிகள் … Read more

இடைக்கால பொதுச் செயலாளர் இ.பி.எஸ்: ராமதாஸ், அன்புமணி வாழ்த்து

சென்னையில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக  தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள  எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு, டாக்டர் அன்புமணி ராமதாஸ் மற்றும் அன்புமணி வாழ்த்து தெரிவித்துள்ளார்.   அதிமுக தலைமை அலுவலகத்தில்  எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களுக்கும், பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர்களுக்கும்  கடும் மோதல் நிலவியது. இந்நிலையில் அதிமுகவின் தலைமை அலுவலகத்தை ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கைப்பற்றி உள்ளனர்.   அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் நடைபெற்றுவருகிறது. 16 தீர்மானங்களில் 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  நிரந்தர பொதுச் செயலாளராக … Read more

மேகதாது ஆணை விவகாரம் : உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு.!

காவிரி ஆணைய கூட்டத்தில் மேகதாது பற்றி விவாதிக்க தடை கேட்டு தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது. இந்த வழக்கை விசாரிக்க வேண்டாம் என கர்நாடகா அரசு கோரிக்கை விடுத்தது. இந்த கோரிக்கையை உச்சநீதிமன்ற நீதிபதிகள் நிராகரித்தனர்.  காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகா அரசு முடிவு செய்துள்ளது. கர்நாடகா அரசின் இந்த முடிவிற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.  இதனை தொடர்ந்து தமிழக அரசு காவிரி ஆணைய கூட்டத்தில் மேகதாது பற்றி விவாதிக்க … Read more

சிங்கப்பூரில் வேலை வாங்கித் தருவதாக கூறி 150 இளைஞர்களிடம் மோசடி.. வெற்றிக்கொடி கட்டு பட பாணியில் சம்பவம்..!

சிங்கப்பூரில் வேலை வாங்கித் தருவதாக கூறி 150 இளைஞர்களிடம் தலா 1 லட்சம் ரூபாய் பெற்று கொண்டு மோசடி செய்ததாக கூறப்படும் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்குமாறு கோயம்புத்தூர் எஸ்.பி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. வடவள்ளியில் இயங்கி வரும் afford tours and travels நிறுவனம், சிங்கப்பூரில் உள்ள கட்டுமான நிறுவனத்தில் வேலை வாய்ப்பு உள்ளதாக விளம்பரப்படுத்தி உள்ளது. அதனை பார்த்து விண்ணப்பித்தவர்களிடம் முன்பணமாக 1 லட்ச ரூபாய் முதல் 2 லட்ச ரூபாய் வரை பெற்று … Read more

குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பாக ஜூலை 17-ல் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடக்கிறது

சென்னை: குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிப்பது குறித்து விவாதிக்க ஜூலை 17-ம் தேதி, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நடக்க உள்ளது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தின் பதவிக்காலம் ஜூலை 24-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து, புதிய குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜூலை 18-ம் தேதி நடக்கிறது. அரசு கொறடா அறிவிப்பு இந்தத் தேர்தலில், ஆளும் பாஜக கூட்டணி சார்பில் திரவுபதி முர்முவும், எதிர்க்கட்சிகள் சார்பில் … Read more

ஓ.பி.எஸ் இனி அரசியல் அனாதை: பொதுக் குழுவில் நத்தம் விஸ்வநாதன் தாக்கு

ஓ. பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் அதிமுக தலைமை அலுவலகத்துக்குள் நுழைந்துள்ள நிலையில், சென்னை வானகரத்தில் நடைபெற்று வரும் அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், ஓ.பி.எஸ் இனி அரசியல் அனாதை என்று நத்தம் விஸ்வநாதன் கடுமையாகத் தாக்கிப் பேசியுள்ளார். அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடர்பான தீர்ப்பு வெளியாவதற்கு முன்னதாக அதிமுக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுக தலைமை அலுலகத்துக்கு சென்றார். அங்கே ஓ.பி.எஸ் உள்ளே செல்வதற்கு இ.பி.எஸ் ஆதரவாளர்கள் தடை ஏற்படுத்தினர். அதிமுக அலுவலகத்தின் கதவைப் பூட்டிவைத்தனர். இதனால், அங்கெ … Read more