“ஆடி கிருத்திகை… முருகப்பெருமானின் அருள் கிடைக்க பிரார்த்திப்போம்” – பிரதமர் மோடி

சென்னை: “முருகப்பெருமானின் அருள் எப்போதும் நமக்கு கிடைக்க பிரார்த்திப்போம்” என்று ஆடி கிருத்திகையை ஒட்டி பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் உள்ள முருகன் கோயில்களில் ஆடி கிருத்திகை விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஆடி கிருத்திகையை ஒட்டி பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ஆடி கிருத்திகை நன்னாளில் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகள். முருகப்பெருமானின் அருள் எப்போதும் நமக்கு கிடைக்க பிரார்த்திப்போம். நம் சமூகம் நலத்துடனும் … Read more

கள்ளக்குறிச்சி மாணவி உடல் அடக்கம் – ஊர் மக்கள் கண்ணீர்

கள்ளக்குறிச்சியில் மரணமடைந்த பள்ளி மாணவி  உடல் இறுதிச் சடங்குக்கு பின் அடக்கம் செய்யப்பட்டது. அப்போது அவரது பெற்றோர் மட்டுமல்லாமல் ஊர் மக்களும் கண்ணீர் அஞ்சலி செலுத்தியது காண்போரை கலங்கச் செய்தது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் பிளஸ் 2 மாணவி கடந்த 12-ம் தேதியன்று பள்ளி வளாகத்தில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார். மாணவி தற்கொலை செய்து கொண்டதாக பள்ளி நிர்வாகம் தெரிவித்தது. ஆனால், மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பெற்றோரும், உறவினர்களும் குற்றம்சாட்டி வந்தனர். … Read more

பயணிகளுக்கு குட் நியூஸ்.. ஐபே வசதியை பயன்படுத்தினால் விரைவாக பணம் கிடைக்கும்..!

இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் எனப்படும் ஐஆர்சிடிசி இணையதளம் மூலம், 80 சதவீதத்துக்கும் மேற்பட்ட பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்கின்றனர். பயணத்தை ரத்து செய்ய விரும்புவோர், ஐஆர்சிடிசி இணையதளத்திலேயே ரத்து செய்து பணத்தை திரும்ப பெறலாம். இதில், மற்ற வங்கிகளின் சார்பில் செய்யப்படும் கட்டண பரிவர்த்தனையை விட, ஐஆர்சிடிசி-க்கு சொந்தமான ‘ஐபே’ மூலம் டிக்கெட் முன்பதிவு செய்து, ரத்து செய்தால், பணம் தாமதம் இன்றி கிடைக்கும்.இது குறித்து, ஐஆர்சிடிசி அதிகாரிகள் கூறியதாவது: ‘வங்கிகளின் மூலம் … Read more

சென்னை அடுத்த மணலி சாத்தாங்காட்டில் 1,200 ஆண்டு பழமையான ஐம்பொன் நடராஜர் சிலை மீட்பு: ஆசியாவின் 3 – வது பெரிய சிலை என டிஜிபி ஜெயந்த் முரளி தகவல்

சென்னை: சென்னையை அடுத்த மணலியில் 1,200 ஆண்டு பழமையான நடராஜர் சிலை மீட்கப்பட்டுள்ளது. சென்னையை அடுத்த மணலி சாத்தாங்காடு பகுதியில் உள்ள இரும்பு, எஃகு குடோனில் பழங்கால நடராஜர் சிலை பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக தமிழக காவல் துறையின் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, டிஜிபி ஜெயந்த் முரளி உத்தரவின் பேரில், டிஎஸ்பி முத்துராஜா தலைமையிலான தனிப்படை போலீஸார் விரைந்து சென்று சோதனை நடத்தி, சுமார் 4.5 அடிஉயரம் உள்ள ஐம்பொன் … Read more

அழுகிய நிலையில் கிணற்றில் கிடந்த இரண்டு ஆண் சடலங்கள் – போலீசார் விசாரணை

விவசாய கிணற்றில் அழுகிய நிலையில் கிடந்த 2 ஆண் சடலங்களை மீட்ட போலீசார் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்த மல்லசமுத்திரம் பாலமேடு பதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியம் என்பவரது விவசாய கிணற்றில் 40 வயது மதிக்கத்தக்க இரண்டு ஆண் சடலங்கள் அழுகிய நிலையில் கிடப்பதாக அப்பகுதி பொதுமக்கள் மல்லசமுத்திரம் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர், இதையடுத்து அங்கு சென்ற காவல் துறையினர், தீயணைப்பு துறையினரின் உதவியுடன் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி … Read more

ஏஜி பொன் மாணிக்கவேல் மீது சிபிஐ விசாரணை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையின் முன்னாள் தலைவர் ஏ.ஜி.பொன் மாணிக்கவேல் மீதான குற்றப் பத்திரிக்கையில், ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரிக்கும், சிலை திருடர்களுக்கும் இடையே உள்ள சந்தேகத்தை விசாரணை நடத்த சிபிஐக்கு சென்னை உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. பிரபல சிலை வியாபாரியான தீனதயாளனுக்கு மன்னிப்பு வழங்க ஏற்பாடு செய்தல், வெளியுறவுக் கொள்கை குறித்த அவரது கருத்துகள் மற்றும் நடவடிக்கைகளை மறைத்தல் மற்றும் பழங்கால சிலைகளை கடத்தியதற்காக சிறையில் அடைக்கப்பட்ட சுபாஷ் சந்திர கபூர் வசம் உள்ள … Read more

குடியரசுத் தலைவராக தேர்வாகியுள்ள திரௌபதி முர்முவுக்கு .. ஈபிஎஸ் நேரில் வாழ்த்து.!

குடியரசுத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள திரௌபதி முர்மு உடன் ஈபிஎஸ் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். தற்போதைய இந்திய குடியரடிசுத் தலைவரான ராம்நாத் கோவிந்தின் பதவி காலம் நாளை மறுதினம் ஜூலை 24ம் தேதி முடிவடைகிறது. எனவே அவருக்கு இன்று நாடாளுமன்ற மைய மண்டபத்தில் பிரிவு உபசார விழா நடைபெறுகிறது.  இந்த நிகழ்ச்சியில், கலந்துகொள்வதற்காக தற்போதைய அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றுள்ளார்.  மேலும், அவர் புதிய குடியரசுத் தலைவராக தேர்வாகியுள்ள திரௌபதி முர்மு … Read more

ஆசிரியர்கள் நியமனத்தில் ஊழல்.. தொழில்துறை அமைச்சர் கைது..!

பள்ளிகளில் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் நியமனம் செய்வதில் நடைபெற்ற ஊழல் தொடர்பான வழக்கில், மேற்கு வங்க மாநில தொழில்துறை அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி கைது செய்யப்பட்டார். கடந்த 2016-ம் ஆண்டு, மேற்கு வங்க மாநிலத்தின் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான அரசு, பள்ளிகளில் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் நியமிப்பதற்கு தேர்வு நடத்தியது. இதையடுத்து, இந்த நியமனத்தில் ஊழல் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்ததால், சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது. அத்துடன், 100 கோடி ரூபாய் அளவில் ஊழல் நடைபெற்றதாக புகார் … Read more

பழனிசாமி 4 நாள் பயணமாக டெல்லி சென்றார்: பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க திட்டம்

சென்னை: அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் பழனிசாமி 4 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ளார். குடியரசுத் தலைவர் தேர்தலில்பாஜக கூட்டணி சார்பில் போட்டியிட்ட திரவுபதி முர்மு வெற்றி பெற்றுள்ளார். தற்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வரும் 24-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி சார்பில் டெல்லியில் உள்ள ஓட்டலில் நேற்று மாலை பிரிவுபசார விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் பங்கேற்குமாறு அதிமுகவை சேர்ந்த பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் உட்பட பாஜக கூட்டணி … Read more

பிரியா விடைகொடுத்த கிராம மக்கள்.. மண்ணுக்குள் மறைந்தார் மாணவி ஸ்ரீமதி..!

மாணவி ஸ்ரீமதியின் உடல் அவருடைய சொந்த ஊரான கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத்தில் இன்று காலை 11 மணியளவில் நல்லடக்கம் செய்யப்பட்டது. மாணவி ஸ்ரீமதியின் உடல் அவருடைய பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், சொந்த ஊரான கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத்தில் ஐஸ் பெட்டியில் வைக்கப்பட்டிருந்தது. எந்தவித இடையூறும் இல்லாமல் ஸ்ரீமதியின் உடலுக்கு இறுதிச் சடங்கு செய்வதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்றது. இந்த நிலையில், சற்றுமுன் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மாணவி ஸ்ரீமதியின் இறுதி ஊர்வலம் தொடங்கியது. இறுதி … Read more