செஸ் ஒலிம்பியாட்: சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு ஜூலை 28-ல் உள்ளூர் விடுமுறை விட வாய்ப்பு

சென்னை: செஸ் ஒலிம்பியாட் தகவல்களை தெரிந்துகொள்ள இணையதளம் மற்றும் செயலியை உருவாக்கும் பணி நடைபெற்று வருகிறது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு 28-ம் தேதி அன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்க வாய்ப்பு உள்ளது. 44-வது செஸ் ஒலிம்பியாட் மாமல்லபுரத்தில் வரும் 28-ம் தேதி முதல் 10ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமை செயலகத்தில் அனைத்து அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார். இதில் சர்வதேச செஸ் விளையாட்டு வீரர்கள் … Read more

மதுரை மல்லிகைப்பூ திடீர் விலை உயர்வு: ஆடி முதல் வெள்ளி என்பதால் கிலோ ரூ.1,200

மதுரை: மதுரை மல்லிகைப்பூ திடீரென்று விலை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. ஆடி முதல் வெள்ளி என்பதால் ரூ.500க்கு விற்ற மதுரை மல்லிகைப்பூவின் விலை இன்று திடீரென்று விலை கிலோ ரூ.1,200-க்கு உயர்ந்துள்ளது. மதுரை மல்லிகைக்கு உள்ளூர் சந்தைகள் முதல் உலக சந்தைகள் வரை வரவேற்பு உண்டு. ஒருங்கிணைந்த மதுரை மாவட்டத்தில் உற்பத்தியாகும் மல்லிகைப்பூக்களுடைய மனமும், நிறமும் சிறப்பு மிக்கது. தமிழகத்தின் பிற மாவட்டங்களில் உற்பத்தியாகும் மல்லிகைப்பூக்களில் மதுரை மல்லிகையின் மனமும், நிறமும் இருக்காது. அதனாலே நறுமணப்பொருட்கள் தயாரிக்க உலக … Read more

மகா சங்கமத்தில் புதிய திருப்பம் : அர்ச்சனா இப்படி ஏமாந்து விட்டாரே…

சின்னத்திரையில் விஜய் டிவி சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. மற்ற சேனல்களை காட்டிலும் விஜய் டிவி சீரியல்கள் டிஆர்பி ரேட்டிங்கிலும் முக்கிய இடத்தை பெற்று வருகிறது. சீரியல் மட்டுமல்லாது அதில் நடித்து வரும் நடிகர் நடிகைகளுக்கும் ரசிர்கள் பட்டாளம் ஏராளம். அந்த வகையில் இல்லத்தரசிகள் மத்தியில் வரவேற்பை பெற்று வரும் சீரியல்களில் ஒன்று ராஜா ராணி 2. தொடக்கத்தில் ஓரளவு வரவேற்பை பெற்ற இந்த சீரியல் தற்போது பரபரப்பின் உச்சமாக சென்றுகொண்டிருக்கிறது. ஆனால் … Read more

கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியின் இறுதிச்சடங்கு இப்படித்தான் நடக்கும்., சற்றுமுன் காவல்துறை தரப்பில் அறிவிப்பு.!

இன்று கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி ஸ்ரீமதியின் உடலை பெற்றுக் கொள்ள அவரின் பெற்றோருக்கு உத்தரவு கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் காவல்துறை தாக்கல் செய்த மனு மீதான விசாரணை வந்தது. அப்போது, உச்சநீதிமன்ற தீர்ப்பின் நகலை நீதிபதி சதீஷ்குமார் முன்பு மாணவியின் பெற்றோர் தாக்கல் செய்தனர்.  வழக்கு விசாரணையில், கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் தடவியல் நிபுணர் உடல் கூறாய்வு எவ்வாறு நடைபெறும் என்பது குறித்தும், நீதிபதியிடம் விளக்கம் அளிக்கப்பட்டது. அப்போது நீதிபதி, “நீதிமன்றம் மீது நம்பிக்கை உள்ளதா? இல்லையா? நீதிமன்றம் … Read more

சென்னை கோயம்பேடு முதல் வடபழனி வரை 100 அடி சாலையில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம்

சென்னை: கோயம்பேடு முதல் வடபழனி சாலையில் நாளை முதல் 10 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்படவுள்ளதாக சென்னை போக்குவரத்து காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 100 அடி சாலையில் கோயம்பேடு முதல் வடபழனி வரை போக்குவரத்தை மேம்படுத்துவதற்கு ஏதுவாக நாளை முதல் 10 நாட்கள் சோதனை ஓட்டமாக போக்குவரத்து மாற்றம் செய்யப்படவுள்ளது. பொதுமக்கள் இது குறித்து ஆலோசனைகள் 044-23452362, 044-42042300 என்ற எண்ணில் தெரிவிக்கலாம் என்று போக்குவரத்து காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டள்ளது. போக்குவரத்து மாற்றத்தின் முழு … Read more

ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு திருட்டில் ஈடுபட்ட 6 சிறார் கைது

மதுரையில் ஆடம்பர வாழ்க்கைக்காக விலை உயர்ந்த இருசக்கர வாகனங்கள், செல்போன் திருட்டில் ஈடுபட்டு வந்த இளம் சிறார்கள் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் அவர்களிடமிருந்து செல்போன், இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.  மதுரை தல்லாகுளம் பகுதியில் உள்ள காட்டு பிள்ளையார் கோவில் பகுதியில் அரிவாள், வாள் போன்ற ஆயுதங்களுடன் ஒரு கும்பல் தகராறில் ஈடுப்பட்டுக்கொண்டிருப்பதாக தல்லாகுளம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில் தனிப்படையினர் சம்பவ இடத்திற்குச் சென்றனர். போலீசை பார்த்ததும் அந்த … Read more

கலைஞர் கருணாநிதியின் எழுத்தாற்றலை நினைவுக்கூற நடுக்கடலில் பேனா வடிவில் நினைவுச்சின்னம்

மறைந்த முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான கலைஞர் மு.கருணாநிதியின் எழுத்தாற்றலை என்றென்றும் நினைவுக்கூறும் வகையில் சென்னை மெரினாவின் நடுக்கடலில் 134 அடி உயர பேனா வடிவத்துடன் நினைவு சின்னம் அமைக்கப்படவுள்ளது. சுமார் 80 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும் இந்த நினைவு சின்னத்தை பார்க்க மக்கள் செல்வதற்காக கண்ணாடி தரையுடன் கூடிய நடைப்பாலம் அமைக்கப்படுகிறது. 650 மீட்டர் நீளமுள்ள இந்த இரும்பு பாலம் தரையில் 290 மீட்டரும், கடலில் 360 மீட்டர் நீளமும் கொண்டதாக இருக்கும். கடலோர … Read more

திருப்பத்தூரில் கனமழை: 9-வது முறையாக நிரம்பிய ஆண்டியப்பனூர் அணை

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் 9-வது முறையாக ஆண்டியப்பனூர் அணை இன்று (வெள்ளிக்கிழமை) நிரம்பியது. அதேபோல, பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 20 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. தமிழகத்தில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாவே அவ்வப்போது பரவலாக மழை பெய்து வந்தது. கடந்த 4 நாட்களுக்கு முன்பு வாணியம்பாடி, ஆம்பூர், ஆலங்காயம், வடபுதுப்பட்டு, மாதனூர் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த … Read more

கடன் தொல்லையால் உயிரிழந்த பெண் – தற்கொலைக்கு தூண்டியதாக மற்றொரு பெண் கைது

ஆவடியில் கடன் தொல்லையால் விஷம் குடித்த பெண் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பலியானார். தற்கொலைக்கு தூண்டியதாக பக்கத்து வீட்டுப்பெண் செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார் ஆவடி அருகே திருநின்றவூர் ராமர் கோயில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் ஜெயபிரகாஷ். இவரது மனைவி பவானி(34). பவானி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு குடும்ப செலவிற்கு பணம் தேவைப்பட்டதால் அதே பகுதியில் வசிக்கும் விஜயலட்சுமி என்பவரிடம் இரண்டு லட்சம் ரூபாய் வட்டிக்கு கடனாக வாங்கி உள்ளார். ஆனால் வாங்கியக் கடனை அவரால் திருப்பி செலுத்த முடியவில்லை. … Read more

எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு: முன்னணியில் எந்த மாநிலங்கள்?

பட்டியலின சாதிகளை சேர்ந்தவர்கள் மற்றும் பழங்குடியினருக்கு எதிராக நடைபெறும் குற்றங்கள் அதிகரித்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலில் இருந்து தெரியவந்துள்ளது. தெலுங்கான எம்பிக்கள் கோமதி ரெட்டி, வெங்கட் ரெட்டி, மான்னே ஸ்ரீனிவாஸ் ரெட்டி எழுப்பிய கேள்விக்கு மத்திய உள்துறை அமைச்சர் அஜய் குமார் மிஸ்ரா பதிலளித்தார். கடந்த 2018ம் ஆண்டு பட்டியலின சாதிகளுக்கு எதிராக 42,793 குற்ற சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இதுவே 2020ஆம் ஆண்டு 50,000 ஆக அதிகரித்துள்ளது. பழங்குடியினருக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட வன்முறை சம்பவங்கள் … Read more