ஆட்டோ மெக்கானிக் அரிவாளால் வெட்டி படுகொலை.. 6 பேர் கொண்ட கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு!

மதுரையில் ஆட்டோ மெக்கானிக்கை அரிவாளால் வெட்டி கொலை செய்த 6பேர் கொண்ட கும்பலை காவல்துறையினர் தேடி வருகின்றனர். மதுரை எல்லிஸ் நகர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச்  சேர்ந்த பிரகாஷ் என்பவர் ஆட்டோ மெக்கானிக்காக பணியாற்றி வந்துள்ளார். நேற்று மாலை வழக்கம் போல் வீட்டு வாசலில் செல்போனில் விளையாடி கொண்டிருந்த போது அங்கு வந்த நண்பர் ஆசிப் உள்ளிட்ட 6 பேர் கொண்ட கும்பல் அரிவாள், கத்தி போன்ற ஆயுதங்களால் தாக்கியுள்ளது. இதில் பலத்த காயம் அடைந்த … Read more

முன்னாள் எம்.பி. வசந்தகுமாரின் 2-ம் ஆண்டு நினைவு தினம்

சென்னை/நாகர்கோவில்: காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்.பி. வசந்தகுமாரின் 2-ம் ஆண்டு நினைவு தினம் சென்னை மற்றும் நாகர்கோவிலில் நேற்று அனுசரிக்கப்பட்டது. சென்னை சத்யமூர்த்தி பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில், காங்கிரஸ் மூத்த தலைவரும், வசந்தகுமாரின் சகோதரருமான குமரி அனந்தன் பங்கேற்று, வசந்தகுமார் படத்துக்கு மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “காங்கிரஸ் பரம்பரையில் வந்த நான் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருந்து, கட்சிக்காக உழைத்தேன். அதேபோல, எங்கள் குடும்பத்தை சேர்ந்தவர்கள் காங்கிரஸ் கட்சிக்காக … Read more

சேலம்; செல்போன் டவரையே அபேஸ் செய்த கில்லாடிகள்

சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே உள்ள எம் பெருமாள்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது சொந்தமான இடத்தில் 2001 ஆம் ஆண்டு தனியார் நிறுவனம் சார்பில் செல்போன் டவர் அமைக்கப்பட்டது. மேலும், செல்போன் டவரை பாதுகாக்க அந்த பகுதியை சேர்ந்த ஒருவரை நியமித்திருந்தனர். இந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் இறுதியில் 10 பேர் கொண்ட கும்பல் ஒன்று அங்கிருந்த பாதுகாவலர்களிடம் சில போலியான ஆவணங்களை காட்டி செல்போன் டவர் செயல்படாமல் உள்ளது,  எனவே அதை கழற்றி … Read more

விழுப்புரம் மாவட்டம் கோரையாற்றில் தரைப்பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதால் பரபரப்பு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே கோரையாற்றில் தற்காலிக தரைப்பாலம் அடித்துச் செல்லப்பட்டது. இதனால் மூன்று கிராம மக்களுக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. தென்பெண்ணை ஆற்றில் இருந்து ஆற்காடு என்ற கிராமத்திலிருந்து பிரிந்து செல்லும் ஆறுதான் கோரையாறு ஆகும். இந்த ஆறு ஆற்காடு கிராமத்திலிருந்து பிரிந்து சென்று ஏனாதிமங்கலம் ஆற்றில் மீண்டும்  இணைகிறது. இதனிடையே மாரங்கியூர், ஏனாதிமங்கலம் இடையே கோரையாற்றின் தற்காலிக தரைப்பாலம் அமைக்கப்பட்டது. மழைக்காலங்களில் தரைப்பாலம் அடித்துச் செல்வதால் அங்கு மீண்டும் 24 லட்சம் மதிப்பீல் கோரையாற்றில் … Read more

கிணத்தை காணோம் பாணியில் செல்போன் டவரையே தூக்கிய கும்பல்: விசாரணையில் வெளியான பகீர் தகவல்

வாழப்பாடி அருகே 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான செல்போன் டவரை நூதன முறையில் திருடிச் சென்ற 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே எம்.பெருமாபாளையம் கிராமத்தைச் சேர்ந்த சுப்ரமணி என்பவரது இடத்தில் கடந்த 2001 ஆம் ஆண்டு தனியார் நிறுவனம் சார்பில் செல்போன் டவர் அமைக்கப்பட்டது. இந்த செல்போன் டவரை பாதுகாக்க அப்பகுதியை சேர்ந்த ஒருவரை நியமித்து இருந்தனர். இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் இறுதியில் பத்து பேர் கொண்ட கும்பல் அங்கிருந்த … Read more

சாலையை கடக்க முயன்றபோது கார் மோதி மேஸ்திரி உயிரிழப்பு

திருப்பூர் மாவட்டத்தில் சாலையை கடக்க முயன்ற போது கார் மோதிய விபத்தில் மேஸ்திரி உயிரிழந்துள்ளார். திருப்பூர் மாவட்டம் நம்பகவுண்டன்பாளையம் கரையூரைச் சோ்ந்தவா் கிரி (வயது 40). இவா் முத்தூரிலுள்ள ஒரு தனியாா் கட்டுமான நிறுவனத்தில் மேஸ்திரியாக வேலை செய்து வந்தாா். இவரது மனைவி சுவேதா. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் ஓடைப்பாலம் அருகே கிரி சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்பொழுது முத்தூர் நோக்கி வந்த கார் ஒன்று எதிர்பாராதவிதமாக கிரி மீது மோதியது. இதில் பலத்த … Read more

முதுநிலை ஆசிரியர் பணித் தேர்வுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியல் வெளியீடு

சென்னை: முதுநிலை ஆசிரியர் பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்புக்குத் தேர்வு செய்யப்பட்ட பட்டதாரிகளின் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக டிஆர்பி வெளியிட்டுள்ள அறிவிப்பு: தமிழகத்தில் 2020-21-ம் ஆண்டு முதுநிலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் நிலை-1, கணினிப் பயிற்றுநர் நிலை-1 ஆகிய பணியிடங்களுக்கு நேரடி நியமனத்துக்கான கணினிவழி தேர்வு கடந்த பிப்ரவரி 12 முதல் 20-ம் தேதி வரை நடைபெற்றது. சுமார் 2 லட்சம் பேர் இத்தேர்வை எழுதினர். தேர்வு முடிவு ஜூலை 4-ல் … Read more

40 ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்ட சிலை அமெரிக்காவில் கண்டுபிடிப்பு! பகீர் பின்னணி!

தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தொடர்ந்து தமிழக கோவில்களில் திருடப்பட்ட சிலைகளை புகார்கள் அடிப்படையில் கண்டுபிடித்து அச்சிலைகளை மீட்டு  அவற்றை திருடியவர்களையும் கைது செய்து வருகின்றனர்.  அதே வேளையில் மற்றொரு புறம் புகார் பதிவாகாத சிலைகளும் மீட்கப்பட்டு வருகின்றன. அதாவது சிலை கடத்தல் கும்பல் அல்லது இடைத்தரகர்கள் மூலம் விற்பனை செய்ய முயலும் போதும் அல்லது கலைபொருட்கள் விற்பனையகங்களிலும் திடீர் சோதனை நடத்தி திருடப்பட்ட சிலை அல்லது கடத்தல்காரர்களிடம் வாங்கப்பட்ட சிலைகளை மீடகின்றனர். அச்சிலைகளை … Read more

சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டல திட்டத்திற்கு எதிர்ப்பு: ஒன்றிய அரசின் திட்டத்தை எதிர்த்து மக்கள் போராட்டம்

நீலகிரி: ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டல திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கூடலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் முழு அடைப்பு போராட்டம் தொடங்கியிருக்கிறது. கடந்த 2019 ம் ஆண்டு நாடு முழுவதும் புலிகள் காப்பகங்கள் மற்றும் தேசிய பூங்காக்களின் எல்லைகளில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலமாக ஒன்றிய அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பை வெளியிட்டு இரண்டு ஆண்டுகள் முடிந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் 3 ம் தேதி உச்சநீதிமன்றம் … Read more

மதுரையில் விசாரணை கைதி உயிரிழப்பு – என்ன காரணம்?

மதுரை மத்திய சிறையில் விசாரணை கைதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த அலிசேட் என்ற 62 வயது முதியவர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு விசாரணை கைதியாக மதுரை மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் அவருக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டதாக போலீசார் கூறுகின்றனர். அதனைத் தொடர்ந்து அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட  நிலையில் , அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். அலிசேட் ஏற்கெனவே சர்க்கரை மற்றும் … Read more