சாட்டை வீசிய இறையன்பு ஐஏஎஸ்; ஆடிப்போய் கிடக்கும் அதிகாரிகள்!

சென்னை அடுத்த கும்மிடிப்பூண்டி, ஆத்துப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் அமிர்தம். கடந்த ஆண்டு சுதந்திர தினத்தின் போது, அமிர்தம் தேசிய கொடி ஏற்ற முன்வந்தபோது அவரது சாதியை காரணம் காட்டி அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்ததால் குறிப்பிட்ட ஊராட்சியின் செயலாளர் சசிகுமார் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார். தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த விவகாரம் ஒருவழியாக ஓய்ந்தது. இந்த நிலையில், நம் நாட்டின் 75வது சுதந்திர தினம் நாளை கொண்டாடப்பட இருக்கிறது. நாடு சுதந்திரம் … Read more

"மூச்சுப்பிடித்து விளையாடுகிறார் என நினைத்தோம்”..குழந்தைகள் முன்பே பறிபோன தந்தையின் உயிர்!

குழந்தைகளுடன் கிணற்றில் குளிக்க சென்ற தந்தை நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அருகே நிகழ்ந்துள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அடுத்த கும்மிடிக்கான் பட்டி ஊராட்சிக்குட்பட்ட சென்னன் என்னும் பகுதியில் தனிநபருக்கு சொந்தமான கிணற்றில் அதே பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் என்பவர் தன்னுடைய மகன் மற்றும் மகளுடன் குளிக்க சென்றுள்ளார். இந்நிலையில், சுமார் ஒரு மணி நேரமாக கிணற்றில் பிள்ளைகள் மற்றும் நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்த சீனிவாசன் திடீரென உள்ளிருந்து ஒரு முறை வெளியே வந்து … Read more

போதைப்பொருள் தடுப்பு | முதல்வரை குறை சொல்ல இபிஎஸ்-க்கு தகுதி இல்லை; அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: “அதிமுகவின் 10 ஆண்டுகால ஆட்சியில் கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் ஒழிப்பு தொடர்பாக சரிவர நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல், தங்களது கடமைகளிலிருந்து தவறியதன் காரணமாகவே போதைப் பொருட்களின் பயன்பாடு தமிழகத்தில் அதிகரித்துவிட்டது என்பது தற்போதைய அரசு எடுத்து வரும் கடுமையான நடவடிக்கைகளிலிருந்து தெரியவருகிறது. போதைப் பொருட்களின் புழக்கம் கடந்த அதிமுக ஆட்சியின் போது கட்டவிழ்த்து விடப்பட்டதால் அதனுடைய பாதிப்பு தற்போதும் தொடர்கிறது” என்று தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் … Read more

தமிழக மக்களே உஷார்..! – 5 நாட்களுக்கு வெளுத்து வாங்கப் போகும் மழை!

தமிழகம், புதுச்சேரியில் அடுத்த ஐந்து நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது: மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 14.08.2022 முதல் 15.08.2022 வரை: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 16.08.2022 முதல் 18.08.2022 வரை: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் … Read more

”இன்று இந்த முடிவை எடுக்கிறேன்”.. கணவரின் இறப்பை அடுத்து மீனா எடுத்த மனிதநேயமிக்க முடிவு

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக ஒருகாலத்தில் திகழ்ந்தவர் நடிகை மீனா. இவரது கணவர் அண்மையில் நுரையீரல் பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தநிலையில், கடந்த ஜூன் மாதம் 29-ம் தேதி நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சைக்காக நுரையீரல் கிடைக்காததால் சிகிச்சை பலனின்றி காலமானார். இந்த சம்பவம் திரைப் பிரபலங்கள், ரசிகர்கள் உள்பட அனைவரையுமே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்நிலையில், இன்று தன்னுடைய இன்ஸ்டாவில் முக்கிய பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில் உடல் உறுப்பு தானம் மேற்கொள்வது என்ற … Read more

நாமக்கல்: இருசக்கர வாகனம் மீது டேங்கர் லாரி மோதி விபத்து – வாலிபர் பலி

நாமக்கல் மாவட்டத்தில் இருசக்கர வாகனம் மீது டேங்கர் லாரி மோதிய விபத்தில் வாலிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நாமக்கல் மாவட்டம் சித்தாராம்பாளையம் பகுதியை சேர்ந்த கருணாநிதி என்பவரின் மகன் ராஜ்குமார் (33). இவரது மனைவி தீபிகா. ராஜ்குமார் திருசெங்கோடு பகுதியில் உள்ள லாரி பட்டறையில் பெயிண்டராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் ராஜ்குமார் இருசக்கர வாகனத்தில் மனைவியை அழைத்துக்கொண்டு, மனைவியின் சொந்த ஊரான பொட்டிரெட்டிபட்டியில் விட்டுவிட்டு மீண்டும் திருசெங்கோடு நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்பொழுது எருமைப்பட்டி அருகே வந்தபோது … Read more

மதுரை | மது அருந்திவிட்டு வந்தால் கிராம சபை கூட்டத்தில் பங்கேற்க தடை: அதிரடி காட்டும் ஊராட்சி

மதுரை: மது குடித்துவிட்டு வந்தால் கிராம சபை கூட்டத்தில் பங்கேற்க மதுரை கம்பூர் ஊராட்சி தடை விதித்துள்ளது. சுதந்திர தினத்தை முன்னிட்டு நாளை ஆகஸ்ட் 15 ஆம் தேதி அனைத்து கிராம பஞ்சாயத்துகளிலும் கிராம சபை கூட்டங்கள் நடக்கிறது. இந்தக் கூட்டங்களில் பங்கேற்க கிராம பஞ்சாயத்துகள் சார்பில் போஸ்டர் அடித்தும், வாட்ஸ் அப் மூலமும் பொதுமக்களுக்கு தகவல் தெரிவிக்கப்படுகிறது. மதுரை கொட்டாம்பட்டி ஒன்றியம், கம்பூர் ஊராட்சியில் மற்ற கிராம பஞ்சாயத்துகளை போல் நாளை ஆகஸ்ட் 15 ஆம் … Read more

பாஜகவுக்கு அடுத்த ஷாக்; தலைவரை தட்டி தூக்கியது போலீஸ்!

இந்தியாவின் 75வது ஆண்டு சுதந்திர தின விழாவை முன்னிட்டு, தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் கடந்த 11ம் தேதி தமிழக பாஜக சார்பில் பாதயாத்திரை நடைபெற்றது. இந்த பாதயாத்திரையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், பாஜக மாநில துணை தலைவருமான கே.பி.ராமலிங்கம் தலைமையில் ஏராளமானோர் கலந்து கொண்டார். அப்போது பாப்பாரப்பட்டி பழைய பஸ் நிலையத்தில் இருந்து தியாகி சுப்பிரமணிய சிவா மணி மண்டபம் வரையில் ஊர்வலமாக பாஜகவினர் சென்றனர். இதை தொடர்ந்து தியாகி சுப்பிரமணிய சிவா நினைவிடத்தில் அமைக்கப்பட்டு உள்ள … Read more

அதிமுக பொதுச் செயலாளர் தேர்ந்தெடுக்க ஆலோசனைக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்து போஸ்டர்கள்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்து ஓபிஎஸ் இபிஎஸ் இருவரும் தனித்தனியே பிரிந்துள்ளனர். இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இந்நிலையில் சேலம் மாநகர் முழுவதும் அதிமுக பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்க ஆலோசனை கூட்டத்திற்கு கலந்து கொள்ளும்படி போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. இந்த போஸ்டரில் எம்ஜிஆர் அவர்கள் அதிமுக கட்சி தொடங்கிய 1972 ஆம் ஆண்டு கட்சியின் சட்ட விதிகளை உருவாக்கி அதில் அதிமுக கட்சியின் பொதுச்செயலாளரை அடிப்படை உறுப்பினர்கள் தொண்டர்கள்தான் தேர்ந்தெடுக்கும் உரிமையை வழங்கி … Read more

சென்னை தினம் – சமூக வலைதள ரீல்ஸ் போட்டிகளில் பங்கேற்க மக்களுக்கு மாநகராட்சி அழைப்பு 

சென்னை: ஆகஸ்ட் 22ல் ‘சென்னை தினம்’ கொண்டாடப்படுவதை ஒட்டி சமூக வலைதள ரீல்ஸ் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் பங்கேற்க சென்னை மாநகராட்சி பொது மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: சென்னை தினத்தைக் கொண்டாட பெருநகர சென்னை மாநகராட்சி உங்களை அழைக்கிறது. 1639 ஆம் ஆண்டு மெட்ரசாக உருவான நம்முடைய சென்னை, சிங்கார சென்னையாக வளர்ந்து இன்று பிரம்மாண்ட பரிமாணத்தில் பல பகுதிகளைச் சார்ந்த மக்களின் வாழ்க்கைக்கு வழிகாட்டி, எல்லோருடைய மனதிலும் … Read more