பேரண்டூர் கிராமத்தில் 500 ஏக்கர் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கியது: நஷ்ட ஈடு வழங்க விவசாயிகள் கோரிக்கை

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை அருகே பேரண்டூர் கிராமத்தில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கிவிட்டதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை  அருகே பேரண்டூர்,  பனப்பாக்கம், பாலவாக்கம் பகுதிகளில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றார்கள். இவர்களின் முக்கிய தொழில் விவசாயம். இங்குள்ள விவசாயிகள்  500க்கும் மேற்பட்ட  ஏக்கர் நிலங்களில் நெல் பயிர் சாகுபடி செய்துள்ளனர். தற்போது இங்குள்ள நெற்பயிர்கள் அனைத்தும் விளைந்து இன்னும் சில நாட்களில் அறுவடைக்கு தயாராக இருந்தது. இந்த நிலையில், மேற்கண்ட பகுதிகளில் கடந்த  … Read more

`என் பக்கம்தான் தொண்டர்கள் இருக்காங்க; இபிஎஸ் பக்கம் இருப்பது குண்டர்கள்’- ஓபிஎஸ் பேச்சு

தான் முதல்வராகவோ கட்சி தலைவராகவோ, வர ஆசைபடவில்லை என்றும், கட்சி ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்பதே தனது ஆசை என்றும் ஒ.பன்னீர்செல்வம் பேசியுள்ளார். அதிமுகவில் உட்கட்சி மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில் ஓபிஎஸ்-க்கு ஆதரவாக திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகள் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் அன்பழகன் மற்றும் சுப்புரத்தினம் தலைமையில் பெரியகுளம் அருகே உள்ள ஓபிஎஸ் பண்ணை வீட்டில் ஓபிஎஸை சந்தித்து 500க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் தங்களது ஆதரவை தெரிவித்தனர். அவர்களுக்கு நன்றி தெரிவித்து பின்னர் … Read more

வளரும் குழந்தைகளுக்கு கண் பார்வை கூர்மை அடைய… இந்த விதையால் இவ்ளோ நன்மையா?

Sunflower seeds improves eye power Siddha health tips in Tamil: நாம் அன்றாடம் சாப்பிடும் உணவுகள் அல்லது பழங்கள் மூலமே நம்முடைய ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம். அதேநேரம், சில உணவுப்பொருட்கள் அல்லது பழங்களை நாம் அதிகம் எடுத்துக் கொள்ளாமலோ அல்லது இதுவரை தவிர்த்தோ வந்திருப்போம். ஆனால் அவற்றிலும் அற்புதமான ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. அவற்றை நம் வழக்கமான உணவாக மாற்றி, நம் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம். அத்தகைய பொருட்களையும், அவற்றின் ஆரோக்கிய நன்மைகளையும் இப்போது பார்ப்போம். கண் … Read more

சிறை அதிகாரி வீட்டை கொளுத்திய மர்ம நபர்கள்.. காவல்துறையினர் தீவிர விசாரணை..!

சிறை அதிகாரி வீட்டை மர்ம நபர்கள் கொளுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் கேப்பர் மலையில் மத்திய சிறைச்சாலை உதவி ஜெயிலராக பணியாற்றி வருபவர் மணிகண்டன். இவர் கடந்த 3 நாட்களுக்கு முன்பு தஞ்சாவூருக்கு சென்ற நிலையில், அவரது மனைவி பவ்யா, இரண்டு மகன்கள் மற்றும் தாய் தந்தை என 5 பேர் வீட்டில் இருந்து வந்துள்ளனர். இன்று அதிகாலை அவரது வீட்டில் இருந்து எரிந்த வாடை வீசியதால் வெளியே வந்து பார்த்த போது சமையலறையில் பெட்ரோல் … Read more

இயற்கையையும் ஆரோக்கியத்தையும் காக்க இயற்கை விவசாயமே தீர்வு: ஈஷா கருத்தரங்கில் பாமயன் பேச்சு

திருச்சி: இயற்கையையும், நம் ஆரோக்கியத்தையும் பாதுகாக்க இயற்கை விவசாயமே தீர்வாக இருக்கிறது என ஈஷா விவசாய கருத்தரங்கில் பிரபல வேளாண் வல்லுநர் பாமயன் கூறினார். இதுகுறித்து ஈஷா பவுண்டேஷன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: திருச்சி எஸ்.ஆர்.எம் மருத்துவக் கல்லூரியில் இன்று(ஆகஸ்ட் 28) நடைபெற்ற மாபெரும் நெல் சாகுபடி கருத்தரங்கு மற்றும் கண்காட்சியில் தமிழ்நாடு முழுவதும் இருந்து விவசாயிகள் கலந்து கொண்டனர். இந்த கருத்தரங்கில் பாமயன் இயற்கை விவசாயத்தின் அவசியம் மற்றும் பாரம்பரிய நெல் ரகங்களின் முக்கியத்துவம் குறித்து … Read more

ராகுல் காந்தியின் நடை பயணத்தை துவங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்..! – கே.எஸ்.அழகிரி அறிவிப்பு..!

தேச ஒற்றுமைக்காக ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் டெல்லி வரை நடைபயணம் மேற்கொள்ள உள்ளார். இந்த நடை பயணத்தை முதலமைச்சர் துவக்கி வைக்க உள்ளார். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை பயணத்தை ராகுல் காந்தி மேற்கொள்ள உள்ள நிலையில், அது தொடர்பாக சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்தில் காங்கிரஸ் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, அகில இந்திய எஸ்.சி. பிரிவு தலைவர் ராஜூ லிலோதியா, … Read more

நிலக்கடலை பயிரினை தாக்கும் சுருள்பூச்சிகளை ஒருங்கிணைந்த முறையில் கட்டுப்படுத்தலாம்: வேளாண் அதிகாரிகள் ஆலோசனை

புதுக்கோட்டை: நிலக்கடலைச் சாகுபடி மேற்கொள்ளும் ​புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் நிலக்கடலைப் பயிரினைத் தாக்கும் சுருள்பூச்சிகளை ஒருங்கிணைந்த முறையில் கட்டுப்படுத்திடலாம் எனப் புதுக்கோட்டை மாவட்ட வேளாண்மை துறை அதிகாரிகள்ஆலோசனை தெரிவித்துள்ளனர். ​தற்போது புதுக்கோட்டை மாவட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலக்கடலைப் பயிரினைத் தாக்கும் சுருள்பூச்சிகளை உரிய பாதுகாப்பு முறையினைக் கடைபிடித்து ஒருங்கிணைந்த முறையில் கட்டுப்படுத்திடலாம். தாக்குதல் அறிகுறிகள்: சுருள்பூச்சிப் புழுக்கள் இலைகளைத் துளைத்து உண்ணும். இப்புழுக்கள் தொடக்கத்தில் நடுநரம்பில் துளையிட்டு அதனுள் இருக்கும். பின்பு வளர்ந்த புழுக்கள் இலைகளைச் சுருட்டி … Read more

“உயிரே போனாலும் நிலத்தை கொடுக்க மாட்டோம்” – 8 வழிச்சாலை திட்டத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலை : சென்னை – சேலம் 8 வழிச் சாலைத் திட்டத்தை எதிர்த்தும், திட்டத்துக்கு ஆதரவாக பேசி வரும் பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலுவை கண்டித்து திருவண்ணாமலை மாவட்டத்தில் 2 இடங்களில் இன்று(28-ம் தேதி) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை – சேலம் இடையே 8 வழிச் சாலை திட்டத்துக்கு அதிமுக ஆட்சி முனைப்பு காட்டியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருவண்ணாமலை, தருமபுரி, சேலம், கிருஷ்ணகிரி, காஞ்சிபுரம் என 5 மாவட்டங்களில் போராட்டம் நடைபெற்றது. விவசாயிகள், கிராம மக்கள் … Read more

நாளை முதலமைச்சர் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம்..! – எடுக்கப்போகும் முக்கிய முடிவுகள்..!

தமிழக அமைச்சரவை கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை நடைபெற உள்ளது . சென்னை தலைமைச் செயலகத்தில் மாலை 6 மணிக்கு நடக்கும் இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் பங்கேற்று தமிழகத்தின் நலன் சார்ந்த பல்வேறு முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்கிறார்கள். குறிப்பாக சென்னையை அடுத்த பரந்தூரில் அமைய உள்ள 2-வது விமான நிலைய விவகாரம் முக்கியமான இடத்தை பிடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை அறிக்கை முதலமைச்சரிடம் … Read more

சென்னைக்கு இன்னொரு விமான நிலையம் தேவை – அழகிரி

செப்டம்பர் 7ஆம் தேதி, கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை பயணத்தை ராகுல் காந்தி மேற்கொள்ள உள்ள நிலையில், அது தொடர்பாக, சென்னையில் உள்ள தமிழக காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் காங்கிரஸ் மூத்த நிர்வாகிகளுடன், தேசிய ஒருங்கிணைப்பாளர் ராஜூ தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றுது. இந்தக் கூட்டத்தில்,தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே .எஸ். அழகிரி,காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் செல்வபெருந்தகை, மூத்த காங்கிரஸ் தலைவர்கள் தங்கபாலு, ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்,திருநாவுக்கரசர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். ஆலோசனை கூட்டத்திற்கு … Read more