`அங்க நிக்குது திமுக-வின் விஞ்ஞானபூர்வ ஊழல் திறமை!’- அண்ணாமலை கடும் விமர்சனம்!

சில தினங்களுக்கு முன் தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் எம்.எல்.ஏ அசோக்குமாரின் பேரக்குழந்தைகளுக்கு காதணி விழா நடைபெற்றது. அதில் 11 கோடி ரூபாய் மொய் பணம் பெறப்பட்டிருந்ததாக செய்திகள் வெளியாகின. 1,200 கிலோ கறி விருந்து சமைக்கப்பட்டு, சுமார் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் இதில் கலந்து கொண்டனர் என்றும், நிகழ்ச்சியில் மொய் எழுதுவதற்காக 18 இடங்களில் தனியாக பந்தல் அமைக்கப்பட்டன என்றும் தகவல்கள் வெளிவந்தன. தொடர்புடைய செய்தி: எம்எல்ஏ வீட்டு காதணி விழா… 1200 கிலோ கறி விருந்து.. மொய் மட்டும் இத்தனை … Read more

இபிஎஸ், ஓபிஎஸ் தரப்பு மூத்த வழக்கறிஞர்கள் காரசார வாதம்: அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் தீர்ப்பை தள்ளிவைத்து உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் இபிஎஸ் – ஓபிஎஸ் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் காரசாரமாக வாதிட்டனர். இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர். ‘கடந்த ஜூலை 11-ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது. அதிமுகவில் ஜூன் 23-ம் தேதிக்கு முன்பு இருந்த நிலையே தொடர வேண்டும்’ என்று சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் உத்தரவிட்டிருந்தார். இதை எதிர்த்து … Read more

14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

அடுத்த ஐந்து தினங்களுக்கான மழை பற்றிய முன்னறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில், “தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்றும் நாளையும் (26.08.2022 மற்றும் 27.08.2022) தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கரூர், நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர் மற்றும் … Read more

வானிலை எச்சரிக்கை: தமிழகம் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்றும் நாளையும் கனமழை

வானிலை தகவல்: இன்றும் நாளையும் (26-08-2022 மற்றும் 27-08-2022) தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.   நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர்,  தேனி, திண்டுக்கல், ஈரோடு, கரூர், நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர்  மற்றும்  திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிமை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் … Read more

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு: செப். 23க்கு ஒத்திவைத்தது உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றம்

நீலகிரி: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பான விசாரணையை செப்டம்பர் 23க்கு உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றம் ஒத்திவைத்தது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான  நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24-ம் தேதி கொள்ளை முயற்சி நடந்தது. இதில், எஸ்டேட்டின் காவலாளி ஓம்பகதூர் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பங்களாவில் நடைபெற்ற இந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து … Read more

போலீஸ் ஸ்டேஷனுக்குள் புகுந்து ரகளை; போதை இளைஞரால் வெளியேறிய போலீஸ்.. நடந்தது என்ன?

குளச்சல் காவல் நிலையத்தில் புகுந்து காவலர்களை தாக்க முயன்ற இளைஞரை தடுக்க வந்த தாய் மற்றும் தந்தையை அந்த இளைஞர் தாக்கும் பரபரப்பு வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் காவல் நிலையம் அருகே உள்ள மதுபானக் கடையில் மது அருந்திய சில இளைஞர்கள் அந்தப் பகுதியில் உள்ள சாலையில் நின்று கொண்டு அந்த வழியாக சென்றவர்களிடம் வம்பிழுத்து தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இந்தத் தாக்குதல் சம்பவத்தில் … Read more

14 செகண்ட் டைம்… இதில் யானை எங்க இருக்குன்னு கண்டுபிடிங்க!

இந்த படத்தில் உள்ள யானையை 14 நொடிகளில் கண்டுபிடிப்பதே இன்றைக்கான உங்களது டாஸ்க் . சமீப காலத்தில் இந்த ஆப்டிகல் இல்யூஷன் இணையதளத்தை ஆதிக்கம் செலுத்துகிறது. இந்நிலையில் இது நன்றாக வைராகி வருகிறது. மனதின் ஒருமைப்பட்டுக்கும். மூளையின் ஆற்றலை அதிகரிக்கவும் இந்த விளையாட்டு பயன் தரும். எப்போதும் இணையத்தில் குவியும் இன்ஸ்டா ரீல்ஸ்கள் மற்றும் வீடியோக்களை பார்த்து நமது கிரேட்டிவ் யோசனை பாதிக்கப்பட்டிருக்கும். இதனால் பலருக்கு கவனச் சிதரல் ஏற்படுகிறது. இந்நிலையில் இந்த ஆப்டிகல் இல்யூஷன் வகை … Read more

#Breaking | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இயக்குனர் பாரதிராஜா.! மேல்சிகிச்சைக்காக மருத்துவமனை மாற்றம்.!

தி.நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இயக்குனர் பாரதிராஜா மேல் சிகிச்சைக்காக எம்.ஜி.எம் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். கோலிவுட் சினிமாவில் பிரபல இயக்குனர் பாரதிராஜா கடந்த வாரம் மதுரை விமான நிலையத்தில் மயக்கமடைந்த காரணத்தால் ஒரு நாள் மதுரையிலேயே ஓய்வெடுத்துவிட்டு பின், சென்னைக்கு திரும்பினார். அதன்பின்னர் நீலாங்கரையில் இருக்கும் தனது இல்லத்தில் ஓய்வெடுத்த நிலையில் அவருக்கு மீண்டும் அஜீரண கோளாறு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, சென்னையில் இருக்கும் மருத்துவமனையில் பாரதிராஜா பரிசோதனைக்கு அனுமதிக்கப்பட்டார். அவருக்கு … Read more

ஈரோடு அருகே கருணாநிதி சிலை திறப்பு: நிகழ்ச்சியில் பங்கேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

ஈரோடு: ஈரோடு மாவட்டம் கோபியை அடுத்த கள்ளிப்பட்டியில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் முழு உருவச்சிலையை முதல்வர் ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். சிலைத் திறப்பு விழாவில் முதல்வர் பேசியதாவது: தந்தையின் சிலையைத் திறக்கும் மகனாக அல்லாமல், தலைவர் சிலையைத் திறக்கும் தொண்டனாக நான் வந்திருக்கிறேன். கருணாநிதியின் சிலையை பார்க்கும்போது நாம் உணர்வை, உத்வேகத்தை, உற்சாகத்தை, மகிழ்ச்சியை பெறுகிறோம். கருணாநிதியைப்போல, பேச, எழுத, உழைக்க முடியாது என்றாலும், அவர் நினைத்த காரியங்கள் அனைத்தையும் முடிக்க வேண்டும் என உறுதி … Read more

பிடிஆர் மீது தாக்குதல்: அண்ணாமலை போட்ட திட்டமா? லீக்கான ஆடியோவால் அதிர்ச்சி!

மதுரையில் தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது பாஜக நிர்வாகி செருப்பு வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த செயலில் ஈடுபட்டவர்கள் காவல் துறையால் கைது செய்யப்பட்டனர். ஆனால் இதன் பின்னணியில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இருக்கலாம் என அப்போதே யூகங்கள் கிளம்பின. இந்நிலையில் தற்போது இந்த சம்பவம் நடைபெறுவதற்கு சற்று முன்பு அண்ணாமலை மதுரை மாவட்ட பாஜக தலைவர் சுசீந்திரனுடன் பேசியதாக ஆடியோ ஒன்று சமூகவலைதளங்களில் பரவி வருகிறது. அந்த … Read more