கேன் குடிநீர் விநியோகிக்கும் முன் அறிக்கை வெளியிட வேண்டும்: உயர்நீதி மன்றம் அறிவுறுத்தல்

Chennai Tamil News: கேன்களில் விநியோகிக்கும் தண்ணீரின் சுகாதாரத்தைக் குறித்து அறிக்கை வெளியீட சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. 2019ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட மனு கடந்த வாரம் விசாரணைக்கு வந்துள்ளது. அப்போது நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன் மற்றும் பி.டி.ஆஷா ஆகியோர் அடங்கிய அமர்வில் இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. கேன்களில் குடிநீர் விநியோகிக்கும் நிறுவனங்கள் பின்பற்றவேண்டிய வழிமுறைகள், காலாவதியின் குறிப்பிடுகள், பிளாஸ்டிக்கை மறுசுழச்சிற்கும் முறை ஆகியவற்றை அறிக்கையாக தாக்கல் செய்யுமாறு தமிழக அரசிற்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல் விடுத்துள்ளது. … Read more

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு | நடவடிக்கைக்குப் பின் பேரவையில் அருணா ஜெகதீசன் ஆணைய இறுதி அறிக்கை – அரசு விளக்கம்

சென்னை: “ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள அலுவலர்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, நடவடிக்கை எடுத்ததற்கான அறிக்கையுடன், ஆணையத்தின் இறுதி அறிக்கை தமிழ்நாடு சட்டப்பேரவையில் வைக்கப்படும்” என்று தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்துள்ளார். இதுகுறித்து சனிக்கிழமை அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: “தூத்துக்குடியில் கடந்த 2018 மே 22 அன்று ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி பேரணி நடத்திய உள்ளூர் மக்களின் மீது காவல் துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதற்கான காரணங்கள், சூழ்நிலைகள் … Read more

ரமணா திரைப்பட பாணியில் மோசடி: மருத்துவரின் பதிவு நீக்கம் செல்லும் – உயர் நீதிமன்றம்!

சிகிச்சையில் இருந்த நோயாளியை நலமுடன் இருப்பதாக சான்றிதழ் வழங்கிய புகாருக்கு உள்ளான மருத்துவரின் பதிவை இரண்டு ஆண்டுகளுக்கு நிறுத்திவைத்த தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் உத்தரவை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து விட்டது. சென்னை தனியார் மருத்துவமனையில் உடல் நலக்குறைவு காரணமாக 2015ம் ஆண்டு செப்டம்பர் 27இல் அனுமதிக்கப்பட்ட பிச்சுமணி என்பவர், தீவிர சிகிச்சை பலனளிக்காததால், அக்டோபர் 11இல் இறந்துள்ளார். இதற்கிடையில் தன் தந்தை ஆரோக்கியமாக இருப்பதாக கூறி தனது சகோதரரின் மாமனாரான கோவையை … Read more

சூரிய ஒளி மூலம் மூன்று சக்கர வாகனத்தை இயக்கி கோவில்பட்டியில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வியாபாரி

கோவில்பட்டி: கோவில்பட்டியில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் பொருட்டு சூரிய ஒளி மூலம் இயங்கும் மூன்று சக்கர வாகனத்தில் சென்று பொருட்களை வியாபாரி விற்பனை செய்து வருகிறார். கோவில்பட்டி ஊரணி தெருவை சேர்ந்தவர் செல்வகுமார் (42). பல்பு, பத்தி, சாம்பிராணி, மாவு வகைகள் உள்ளிட்ட பொருட்களை கடைகளுக்கு சப்ளை செய்து வியாபாரம் செய்கிறார். இருசக்கர வாகனத்தில் கடைகளுக்கு சென்று சப்ளை செய்து வந்த இவர், பெட்ரோலுக்கு தினமும் ரூ.100 முதல் 200 வரை செலவு செய்து வந்துள்ளார். இந்நிலையில் பெட்ரோல் … Read more

இளைஞர் தற்கொலை – காதல் விவகாரமா? என போலீஸ் விசாரணை

விழுப்புரத்தில் பி.இ பட்டதாரி இளைஞர் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்துகொண்டார். காதல் விவகாரத்தில் தற்கொலையா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் அடுத்த எஸ். கொல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுதர்சன். இவர் சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.இ படிப்பை முடித்துவிட்டு வீட்டில் தனியாக இருந்துள்ளார். திடீரென வீட்டில் யாரும் இல்லாதபோது, இவர் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாக அக்கம் பக்கத்தினர் மீட்டு திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் … Read more

திருச்சி | கட்டிய இரண்டே மாதத்தில் உடைந்து விழுந்த மழை நீர் வடிகால் பாலம்.!

திருச்சி கே.கே.நகர் அய்யப்ப நகர் பகுதியில் கடந்த 2 ஆண்டுகளாக பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்துவதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து பல்வேறு தெருக்களில் மழை நீர் வடிகால் கட்டும் பணியும் நடந்து வருகிறது.  இந்த நிலையில், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அய்யப்ப நகர் நேதாஜி தெரு முழுவதும் ரூ. 25 லட்சம் மதிப்பீட்டில் மழை நீர் வடிகால் மற்றும் குறுக்கு பாலம் அமைக்கப்பட்டது. இதற்கான பணி நிறைவு பெற்ற இரண்டு மாதத்தில் … Read more

பரந்தூர் நீர்நிலைகள் பாதுகாப்பு நடவடிக்கைகள் என்னென்ன? – அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம்

சென்னை: “பரந்தூரில் உள்ள நீர் வழித்தடங்களில் நீர் ஓட்டம் எந்தவித தடையும் இன்றி தமிழக அரசால் தொடர்ந்து பராமரிக்கப்படும். விமான நிலைய செயல்பாட்டினால் சுற்றுப்பகுதி நீர்நிலைகள் எவ்வித பாதிப்பும் இன்றி பாதுகாக்கப்படும்” என்று தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” பரந்தூரில் உள்ள நீர் வழித்தடங்களில் நீர் ஓட்டம் எந்தவித தடையும் இன்றி தமிழ்நாடு அரசால் தொடர்ந்து பராமரிக்கப்படும். பெரிய நெல்வாய் ஏரி (360 ஏக்கர்) திட்ட செயல்பாட்டு … Read more

ஒரே வாரம் தான்… ஈபிஎஸ் கூடாரம் காலி.. ஓபிஎஸ் எடுத்த மாஸ்டர் முடிவு..!

ஓபிஎஸ்ஐ முதலமைச்சராக்காமல் எடப்பாடியை முதலமைச்சராக ஜெயலலிதா ஆக்கி இருந்தால் அம்மாவிற்கே துரோகம் செய்திருப்பார் எடப்பாடி, மீண்டும் ஜெயலலிதாவிடம் முதலமைச்சர் பதவியை அளித்திருக்க மாட்டார் என கோவை செல்வராஜ் தேனியில் பேட்டியளித்துள்ளார். கோவை செல்வராஜ் பேசியதாவது, கட்சிக்காக உழைக்காவிட்டால் நான்கரை ஆண்டுகள் இபிஎஸ் முதல்வராக இருந்திருக்க முடியாது. சசிகலாவால் முதல்வரான இபிஎஸ் சசிகலாவை கட்சியை விட்டு நீக்கியது துரோகமா..? அதிமுக ஆட்சி நடைபெற வேண்டும் என்பதற்காக முதலமைச்சர் பதவியை சசிகலாவுக்கு விட்டுக் கொடுத்தது துரோகமா? இபிஎஸ் கட்சியை கைப்பற்றி … Read more

ஸ்மார்ட் சிட்டி ஊழல் விசாரணை அறிக்கை முதலமைச்சரிடம் ஒப்படைக்கப்பட்டது

சென்னை: ஸ்மார்ட் சிட்டி ஊழல் தொடர்பான அறிக்கை இன்று முதலமைச்சரிடம் தாக்கல் செய்யப்பட்டது. விசாரணை அறிக்கையை ஒரு நபர் ஆணைய தலைவர் டேவிதர் முதலமைச்சர் முக ஸ்டாலினிடம் தாக்கல் செய்தார். அதிமுக ஆட்சியில் நடைபெற்ற ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஊழல் தொடர்பாக விசாரிக்க ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி டேவிதார் தலைமையில் கடந்த மே மாதம் குழு அமைக்கப்பட்டது. ஊழல் குறித்து விசாரித்த ஒரு நபர் ஆணையம், 200 பக்கங்கள் கொண்ட அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. இந்த அறிக்கையில் … Read more

குன்னூர் பகுதியில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு: வியாபாரிகள் மகிழ்ச்சி

குன்னூர்:  குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களை காண தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகின்றனர். அவ்வாறு வரக்கூடிய சுற்றுலா பயணிகள் இதமான கால நிலையில் இயற்கையை ரசித்தபடி தேயிலை தோட்டங்கள் மத்தியில் மேக மூட்டங்களை ரசித்தபடி  புகைப்படங்கள் மற்றும் செல்பி எடுக்க அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே தென்மேற்கு பருவமழை ஓய்ந்த நிலையில் … Read more