பெரும்பாறை புல்லாவெளி அருவியில் ரீல்ஸ் செய்யும்போது தவறி விழுந்த இளைஞரின் உடல் கண்டெடுப்பு..!

திண்டுக்கல் மாவட்டம் பெரும்பாறை புல்லாவெளி அருவியில் இருந்து ரீல்ஸ் செய்யும் போது தவறி விழுந்த இளைஞரின் உடல், 7 நாட்களுக்கு பின் கண்டெடுக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்த அஜய் பாண்டியன் என்பவர், கடந்த 3ஆம் தேதியன்று புல்லாவெளி அருவியில் குளித்துவிட்டு சமூகவலைதளங்களில் ரீல்ஸ் பதிவிட வீடியோ எடுத்தபோது தவறி விழுந்து மாயமானார். இவரை தேடும் பணியில் 40க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்ட நிலையில், மீனாட்சி ஊத்து என்ற இடத்தில் 400 அடி பள்ளத்தில் சடலமாக … Read more

கருணாநிதி, ஜெயலலிதா… செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா மேடையில் முன்னாள் முதல்வர்களின் படங்கள்

சென்னை: 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளின் நிறைவு விழா மேடையில், முன்னாள் கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோரது படங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளின் நிறைவு விழா நேரு உள் விளையாட்டரங்கில் இன்று நடைபெற்று வருகிறது. நிறைவு விழா மேடையில் தமிழக முன்னாள் முதல்வர்களான ராஜாஜி, காமராஜர், அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரது படங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. முன்னாள் முதல்வர்கள் குறித்த குறிப்புகளுடன் கூடிய திரையிடலும் ஒளிபரப்பப்பட்டன. மேலும், நாட்டின் 75-வது சுதந்திர தினத்தையொட்டி, பார்வையாளர்களுக்கு … Read more

தமிழகத்தில் தொடரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை.. மெத்தனம் காட்டும் ஸ்டாலின்.. வி.பி. துரைசாமி பரபரப்பு குற்றச்சாட்டு!

நாமக்கல்லில் மாவட்ட பாஜக சார்பில் பொதுமக்கள் வீடுகளில் தேசியக் கொடியை ஏற்றுவதற்கு, தேசியக்கொடி வழங்கும் பணிகளை அக்கட்சியின் மாநில துணைத்தலைவர் வி.பி. துரைசாமி தொடங்கி வைத்தார். மேலும் நாமக்கல் நகரில் உள்ள பொய்யேரி கரை பகுதியில் வீடு வீடாக சென்று பொது மக்களுக்கு தேசியக் கொடிகளை, வழங்கினார். அப்போது பொதுமக்களிடம் ஆகஸ்ட் 13, 14, 15 தேதிகளில் தேசிய கொடி ஏற்றி வைத்து 75-வது சுதந்திர பெருவிழாவை சிறப்பாக கொண்டாடுமாறு கேட்டுக் கொண்டார். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய … Read more

கேலோ இந்தியா திட்டத்தை தமிழக அரசு சரியாக பயன்படுத்திக்கொள்ளவில்லை – பாஜக அண்ணாமலை புகார்

விளையாட்டுகளை ஊக்குவிக்க மத்திய அரசு செயல்படுத்தி வரும் கேலோ இந்தியா திட்டத்தை தமிழக அரசு சரியாக பயன்படுத்திக்கொள்ளவில்லை என பாரதிய ஜனதாவின் மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். விளையாட்டு துறையில் தமிழகத்திற்கு மத்திய அரசு உரிய நிதி ஒதுக்கீடு செய்யவில்லை என விமர்சனங்கள் எழுந்த நிலையில், அண்ணாமலை அறிக்கை ஒன்றை வெளியிட்டுளார். மாநில அரசின் திட்டப் பரிந்துரைகளின் அடிப்படையில் மத்திய அரசு நிதி வழங்கி வருவதாக சுட்டிக்காட்டியுள்ள அவர், மற்ற மாநிலங்கள் இந்த திட்டத்தை சரியாக பயன்படுத்தி மத்திய அரசிடம் நிதி பெற்று தங்களது மாநில விளையாட்டு உட்கட்டமைப்பை  மேம்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். ஆனால் இத்திட்டத்தை சரியாக … Read more

திமுகவிற்கு விலைபோன சினேகன்..? பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ள பேட்டி.!

திரைப்பட பாடலாசிரியராகவும், கவிஞராகவும் இருந்து வருபவர் சினேகன். இவர் சினேகம் என்ற பெயரில் ஒரு அறக்கட்டளையை துவங்கி நடத்தி வருகின்றார்.  இத்தகைய நிலையில் இவர் சென்னை காவல் துறை ஆய்வாளர் அலுவலகத்தில் சமீபத்தில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரில் பிரபல சின்னத்திரை நடிகை விஜயலட்சுமி தனது அறக்கட்டளை பெயரை பயன்படுத்தி பணம் மோசடி செய்து வருகிறார் என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில் சினேகன் வைத்துள்ள இந்த குற்றச்சாட்டை நடிகை ஜெயலட்சுமி மறுத்து இருக்கிறார். இதுகுறித்து அவர் சென்னை … Read more

‘பாரத் கவுரவ்’, ‘வந்தே பாரத்’ பெயரில் தனியார் மயம்: எஸ்ஆர்எம்யு ஆர்ப்பாட்டம்

கரூர்: தனியாருக்கு ரயில்கள் தாரை வார்ப்பதாகக் கூறி, எஸ்ஆர்எம்யு (சதர்ன் ரயில்வே மஸ்தூர் யூனியன்) சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ‘பாரத் கவுரவ் என்ற பெயரில் 150 விரைவு ரயில்களையும், வந்தே பாரத் என்ற பெயரில் 200 அதிவிரைவு ரயில்களை தனியாருக்கு தாரை வார்க்கும் முடிவை கைவிடவேண்டும்’ என வலியுறுத்தி எஸ்ஆர்எம்யு (சதர்ன் ரயில்வே மஸ்தூர் யூனியன்) சார்பில், ‘ரயில்வேயை காப்போம். தேசத்தை காப்போம்’ பிரச்சார இயக்கத்தில், இன்று (ஆக. 9) கரூர் கிளை செயலாளர் எம்.அன்பழகன் தலைமையில் … Read more

அடிச்சு வெளுக்கும் கனமழை: எட்டு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!

இரு மாவட்டங்களில் மிக கனமழையும், ஆறு மாவட்டங்களில் கனமழையும் வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அந்த அறிவிப்பில், “மேற்குதிசைக்காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 09.08.2022: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், வடதமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், தேனி, … Read more

'அணை வலுவாகவே உள்ளது; கேரள மக்களின் பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்யும்' – மு.க. ஸ்டாலின்

முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக இருப்பதாக கேரள முதலமைச்சருக்கு தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் கடிதம் எழுதியிருக்கிறார். கேரள மக்களின் பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்யும் என்றும் அந்த கடிதத்தில் மு.க. ஸ்டாலின் கூறியிருக்கிறார். விதிகளின்படியே முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுகிறது என்றும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் கூறியிருக்கிறார். இதையும் படிக்க: `என்னையா விரட்ட பார்க்குறீங்க…?’ வனத்துறையினரை அலறவிட்டு காட்டுக்குள் தப்பியோடிய யானை! Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

75ஆம் ஆண்டு சுதந்திர தினம்; மகாபலிபுரத்தில் சர்வதேச காத்தாடி திருவிழா

Chennai Tamil News: சுதந்திரத் தினத்தை ஒட்டி, சென்னையில் மக்களை மகிழ்விப்பதற்காக சில நிகழ்ச்சிகளை ஆகஸ்ட் 13ஆம் தேதி தொடங்கி 15ஆம் தேதி வரை நடத்தவுள்ளனர். தமிழ்நாடு சுற்றுலாத் துறை மற்றும் குளோபல் மீடியா பாக்ஸ் இணைந்து நடத்தும் இந்த நிகழ்ச்சி மகாபலிபுரத்தில் நடைபெறுகிறது. சென்னை மக்களுக்காக நடத்தப்படும் இந்த நிகழிச்சிகளின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: சர்வதேச காத்தாடி விழா தமிழ்நாட்டு சுற்றுலாத் துறை மற்றும் குளோபல் மீடியா பாக்ஸ் இணைந்து நடத்தும் சர்வதேச காத்தாடி திருவிழா … Read more

இருசக்கர வாகனம் மோதி மூதாட்டி உயிரிழப்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில் இருசக்கர வாகன மோதிய விபத்தில் மூதாட்டி ஒருவர் உயிரிழந்து உள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் இரணியல்கோணம் கீழ மணியன்குழியை சேர்ந்தவர் ஸ்ரீகுமார். இவரது மனைவி ஷர்மிளா (55). இவர் சம்பவத்தன்று இரவு தனது சகோதரனுடன் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்பொழுது அந்த வழியாக வேகமாக வந்த இருசக்கர வாகனம் ஒன்று ஷர்மிளா மீது மோதி விட்டு நிற்காமல் சென்றுள்ளது. இதில் படுகாயமடைந்த ஷர்மிளாவை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி … Read more