கள்ளக்குறிச்சி: பள்ளியில் இருந்து எடுத்துச்சென்ற பொருட்களை திரும்ப ஒப்படைக்கும் மக்கள்

கள்ளக்குறிச்சி பள்ளியில் நடந்த வன்முறையின்போது எடுத்துச் செல்லப்பட்ட பொருட்களை பொதுமக்கள் திருப்பி ஒப்படைத்து வருகின்றனர். கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் நடந்த வன்முறையின்போது பள்ளியில் இருந்து எடுத்துச் சென்ற பொருட்களை திரும்ப ஒப்படைக்குமாறு காவல்துறை வேண்டுகோள் விடுத்திருந்தது. இதை ஏற்ற பொதுமக்கள் தாங்கள் எடுத்துச் சென்ற பொருட்களை சாலை ஓரங்களில் வீசிச் சென்று வருகின்றனர். இதில், வாட்டர் பியூரிபயர் மெஷின், மேசைகள், நாற்காலிகள், சிலிண்டர், சமையல் பாத்திரம், ஃபேன், இரும்பு கிரில் கதவுகள் உள்ளிட்ட பொருட்கள் கனியாமூர் மாரியம்மன் … Read more

சென்னை மெட்ரோ ரயிலில் கலாச்சார, பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள்: எங்கே, எப்போது?

சி.எம்.ஆர்.எல்., சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களிலும், ரயில்களிலும் நேரடி இசை நிகழ்ச்சிகள் நடத்த முடிவுசெய்துள்ளது. இந்த வார இறுதியில் நிகழ்ச்சிகள் தொடங்கி ஒரு மாதத்திற்கு நடக்கவிருக்கிறது. மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை இந்த நிகழ்ச்சிகளை நடத்த சென்னை மெட்ரோ திட்டமிட்டுள்ளது. தமிழ் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை பறைசாற்றும் நேரடி இசை நிகழ்ச்சி ஜூலை 23-ம் தேதி உயர்நீதிமன்ற மெட்ரோ நிலையத்தில் தொடங்குகிறது, அதைத் தொடர்ந்து ஜூலை 30-ம் தேதி விமான நிலையத்தில் … Read more

பள்ளி மாணவியை ஏமாற்றி கர்ப்பமாக்கிய தாய்மாமன்.. போக்சோவில் கைது.!

பள்ளி மாணவியை ஆசை வார்த்தை கூறி கர்ப்பமாக்கிய தாய்மாமனை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த வடகோடி கிராமத்தை சேர்ந்த யாசகன் மகன் ராஜதுரை என்பவர் வசித்து வருகிறார். இவர் அந்த பகுதியில் எலக்ட்ரிக்கல் போர்டு டிசைனிங் வேலை செய்து வருகிறார். அவரது மாமன் மகள் வித்யா (வயது 16) இவர் அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் தனது தாய் மாமனான ராஜதுரை கடைக்கு சென்று … Read more

அதிமுக அலுவலக வன்முறை வழக்கு | காவல் துறை பதிலளிக்கும் வரை 11 பேர் மீது கைது நடவடிக்கை கூடாது: ஐகோர்ட்

சென்னை: அதிமுக பொதுக்குழு அன்று நடைபெற்ற கலவரம் தொடர்பாக 4 மாவட்ட செயலாளர்கள் முன்ஜாமீன் கோரிய வழக்கில் காவல் துறை பதிலளிக்கும் வரை கைது செய்யக் கூடாது என சென்னை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜூலை 11-ம் தேதி இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்களிடையே நடந்த மோதல் தொடர்பாக உதவி ஆய்வாளர் காசுப்பாண்டி அளித்த புகாரின் பேரில் ராயப்பேட்டை போலீஸார் இபிஎஸ் ஆதரவாளர்கள் 200 பேர், … Read more

கள்ளக்குறிச்சி: `மாணவி உடலை பெற்றோர் பந்தயம் கட்டாதீர்கள்’- எச்சரித்த நீதிமன்றம்

கள்ளக்குறிச்சி மாணவி உடலை ஒப்படைப்பது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை இன்று மீண்டும் தொடங்கியது. அப்போது உச்சநீதிமன்ற உத்தரவு நகலை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார் முன்பு அரசு தரப்பு வழக்கறிஞர் தாக்கல் செய்தார். அந்த அறிக்கையில், `இரண்டாவது உடல் கூராய்வில் புதிதாக எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை’ என அரசு தரப்பில் நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது. இருமுறையும் உடல் கூராய்வு முழுமையாக வீடியோ பதிவு செய்யப்பட்டதாகவும் நீதிமன்றத்தில் விளக்கம் தரப்பட்டது. இந்நிலையில் அரசு தரப்பு விளக்கத்தில் அதிருப்தி … Read more

பறை அடிக்க கிளம்பிய எதிர்ப்பு; மேடையில் மோதலுக்கு தயாரான சீமான்: செய்யாறு பரபரப்பு

சீமான், எப்போதும் தமிழகத்தின் வாழ்வாதார உரிமைகளை மீட்டெடுப்பது, கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்துவது, இயற்கை வேளாண்மை என மிகவும் உணர்ச்சிகரமாக பேசக்கூடியவர். தனது அரசியல் கட்சியை மேலும் வலுவாக்க, `சுற்றுச்சூழல் பாசறை’ என்ற அமைப்பை தொடங்கி மரம் நடுதல், கண்மாய் தூர்வாருதல், பனைவிதை சேகரித்தல் எனச் சூழல் பணிகளையும் முன்னெடுத்து வருகிறார். இந்நிலையில், செய்யாறு பிரம்மதேசம் கிராமத்தில் உள்ள ராஜேந்திர சோழன் கோவிலில், நாம் தமிழர் கட்சி சார்பாக, வியாழக்கிழமை ராஜேந்திர சோழன் பெருவிழா நடத்தப்பட்டது. கூட்டத்தில் பேசிய … Read more

#BigBreaking || விருதுகளை வாரி குவித்த சூரரைப் போற்று.!

மத்திய அரசு ஆண்டு தோறும் நாடு முழுவதும் வெளியான மிகச் சிறந்த திரைப்படங்களுக்கும், ஒவ்வொரு துறை சார்ந்த கலைஞர்களுக்கு சிறப்பு விருதுகளையும் வழங்கி, பாராட்டியும், கவுரவப்படுத்தியும் வருகிறது.  இந்நிலையில், சிறந்த திரைப்படங்களுக்கான 68-வது தேசிய திரைப்பட விருதுகள் விவரம் டெல்லியில் அறிவிக்கப்பட்டு வருகிறது. 2020ம் ஆண்டு வெளியான திரைப்படங்களுக்கு பல்வேறு பிரிவுகளில் விருதுகளை அறிவிக்கிறது மத்திய அரசு அறிவித்து வருகிறது. அதில்,  * சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த பின்னணி இசை, சிறந்த … Read more

கொசுவை கட்டுப்படுத்த தெருத் தெருவாக புகை அடிக்கும் சென்னை மாநகராட்சி

சென்னை: பருவ மழையின் காரணமாக அதிகரிக்கும் கொசுக்களின் பெருக்கத்தை கட்டுப்படுத்த தெருத் தெருவாக புகைப் பரப்பும் பணி, சென்னையில் நாளை முதல் தொடங்கப்படவுள்ளது. தென்மேற்கு பருவமழையினை முன்னிட்டு, சென்னையில் ஒரு சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, கொசுப்புழுக்களின் பெருக்கம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதன் காரணமாக டெங்கு, மலேரியா மற்றும் சிக்குன்குனியா போன்ற பல்வேறு நோய்கள் பரவவும் வாய்ப்புள்ளது. மேலும், மழைக் காலத்திற்கு முன்பாக சென்னையில் கொசுக்களின் பெருத்தகத்தை கட்டுப்படுத்த சென்னை மாநகராட்சி சார்பில் … Read more

சத்தியமங்கலம்: ஊருக்குள் புகுந்து விளை நிலங்களை துவம்சம் செய்த காட்டு யானைகள்

ஆசனூர் பகுதியில் ஊருக்குள் புகுந்த இரண்டு காட்டு யானைகளால், மலைக் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர். சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் ஏராளமான காட்டு யானைகள் வசிக்கின்றன. இரவு நேரத்தில் வனப்பகுதியை விட்டு வெளியேறும் காட்டு யானைகள் அருகாமையில் உள்ள கிராமங்களில் புகுந்து விவசாயிகள் பயிரிட்டுள்ள பயிர்களை சேதப்படுத்துவது தொடர்கதையாக உள்ளது. இந்த நிலையில் இன்று காலை ஆசனூர் வனப்பகுதியை விட்டு வெளியேறிய 2 காட்டு யானைகள் அப்பகுதியில் உள்ள விவசாய தோட்டத்திற்குள் புகுந்து குடியிருப்பின் அருகே முகாமிட்டன. காட்டு … Read more

WI vs IND 1st ODI: கேப்டனாக தவான்… இந்தியாவின் ஆடும் லெவன் இதுதான்!

West Indies vs India (WIvsIND), 1st ODI Match Live score updates in tamil: வெஸ்ட் இண்டீஸ் மண்ணிற்கு சுற்றுப்பயணமாக சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகளில் கலந்து கொண்டு விளையாடுகிறது. இதில் முதலில் ஒரு நாள் போட்டிகள் (ஜூலை 22, 24 மற்றும் 27-ம் தேதி) டிரினிடாட்டின் போர்ட் ஆப் ஸ்பெயினில் உள்ள குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் நடத்தப்படுகிறது. அதன்படி, இந்தியா– வெஸ்ட் இண்டீஸ் … Read more