அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த துணைநடிகை திவ்யபாரதி மாயம்!

திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த துணைநடிகை திவ்யபாரதி மாயமானது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். தாடிக்கொம்பு பகுதியைச் சேர்ந்த திவ்யபாரதி மீது பகலவன் ராஜா என்பவர் மோசடி புகார் மனு அளித்தது மட்டுமின்றி பணம் மற்றும் கார், நகை போன்றவைகளை கேட்கும் ஆடியோவையும் வெளியிட்டு இருந்தார். இந்நிலையில், திவ்யபாரதி வீட்டில் கொசு மருந்து லிக்யூடை குடித்ததால் அவரை திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். திடீரென மாயமான திவ்யபாரதி அங்கிருந்து தப்பி தனியார் … Read more

பிளஸ் 1 மாணவர்களுக்கு தமிழ் ஒலிம்பியாட் தேர்வு: ஆக.22 முதல் விண்ணப்பிக்கலாம்

சென்னை: தமிழகத்தில் சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ உள்ளிட்ட அனைத்து பாடத்திட்ட பள்ளிகளிலும் பிளஸ் 1 படிக்கும் மாணவர்களுக்கு நடத்தப்படும் தமிழ் ஒலிம்பியாட் தேர்வுக்கு ஆக. 22-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்ட அறிவிப்பு: தமிழ் மரபு பற்றிய அறிவும் இலக்கிய ஆற்றலும் மிக்க இளைய சமுதாயத்தை உருவாக்கும் நோக்கில் நடத்தப்படும் தமிழ் ஒலிம்பியாட் தேர்வு மிக முக்கியமானது. தமிழ் மொழி இலக்கியத்திறனை மாணவர்கள் மேம்படுத்திக் கொள்ளும் வகையில் இந்தகல்வியாண்டு முதல் தமிழ் இலக்கிய … Read more

தரமணி, ஐடி காரிடாரில் பராமரிப்புப் பணி.. சென்னையில் இந்த பகுதிகளில் இன்று மின்வெட்டு

தரமணி, ஐடி காரிடாரில் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், சென்னையின் சில பகுதிகளில் இன்று மின்சாரம் நிறுத்தப்படும் என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் அறிவித்துள்ளது. சென்னையின் சில பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும், பணிகள் முடிந்தால் மதியம் 2 மணிக்குள் விநியோகம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐடி காரிடார் தரமணி: குறிஞ்சி நகர் 1, 13, 14 & 15 தெருக்கள், … Read more

தொடர் மழை காரணமாக.. சதுரகிரி மலைக் கோயிலுக்கு செல்ல அனுமதி ரத்து.!

மலைப்பகுதிகளில் மழை பெய்வதால் சதுரகிரிக்கு பக்தர்கள் செல்ல அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் உள்ளது. தரைமட்டத்தில் இருந்து சுமார் 4700 அடி உயரத்தில் சுந்தர மகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்து, ஒவ்வொரு மாதமும் பிரதோஷம் மற்றும் அமாவாசை மற்றும் பௌர்ணமி தினங்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். இந்தநிலையில் தற்போது மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் அவ்வப்போது … Read more

லிப்ட் கேட்டு பைக்கில் வந்த மைதிலி மாயமான மர்மம்.. கணவன் செய்த காரியம்..! துணிக்குவியலுக்குள் மறைத்த கொடுமை..!

சென்னை மாநகராட்சி தூய்மை பணியாளர் மாயமான சம்பவத்தில், உடன் வேலை பார்ப்பவருடன் மோட்டார் சைக்கிளில் லிப்ட் கேட்டு வந்திறங்கிய மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை கணவனே கொலை செய்து மறைத்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. திருவொற்றியூர் பூங்காவனம் பகுதியை சேர்ந்த மணிமாறன், தனியார் நிறுவனத்தில் ஹவுஸ் ஹீப்பிங் வேலை செய்து வருகின்றார். இவரது மனைவி மைதிலி சென்னை மா நகராட்சியின் ஒப்பந்த தூய்மை பணியாளராக திருவொற்றியூர் 1வது மண்டலத்தில் பணிபுரிந்து வந்தார். கடந்த 3 ந்தேதி வேலைக்கு … Read more

சூதாட்டத்துக்கு தடை விதிக்க கருத்து கேட்பதா? – பழனிசாமி குற்றச்சாட்டு

ஈரோடு: திமுக அரசுடன் ஆன்லைன் சூதாட்டம் நடத்துவோர் கைகோர்த்துள்ளனர். அதனால், சூதாட்டத்துக்கு தடை சட்டம் கொண்டு வராமல், கருத்து கேட்டு காலம் கடத்துகின்றனர் என எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி குற்றம்சாட்டினார். ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் அதிமுக சார்பில் நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளருமான பழனிசாமி பேசியதாவது: அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட அவிநாசி-அத்திக்கடவு திட்டம் இதுவரை நிறைவடையவில்லை. இத்திட்டம் நிறைவேற்றப்பட்டு இருந்தால், தற்போது பவானிசாகர் உபரிநீர் அனைத்து ஏரிகளுக்கும் நிரப்பப்பட்டு இருக்கும். … Read more

சென்னையில் இன்று போக்குவரத்து மாற்றம்

செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவையொட்டி, சென்னையில் இன்று போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்துத் காவல்துறை அறிவித்துள்ளது. நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெறும் நிறைவு விழாவையொட்டி, ராஜாமுத்தையா சாலை, ஈ.வே.ரா. பெரியார் சாலை, மத்திய சதுக்கம் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதை எதிர்கொள்ளும் விதமாக, பொதுமக்கள் தங்கள் பயணத்தை திட்டமிடுமாறு போக்குவரத்து காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும், நண்பகல் ஒரு மணிமுதல் சூளை நெடுஞ்சாலை சந்திப்பிலிருந்து ராஜாமுத்தையா சாலை வழியே வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை … Read more

மின்சார திருத்த சட்ட மசோதாவால் ஏழைகளுக்கு பாதிப்பு; அனைத்து கட்சிகளும் எதிர்க்க செந்தில் பாலாஜி அழைப்பு

Senthil Balaji asks all parties to oppose electricity amendment bill: மின்சார திருத்த சட்ட மசோதா சாமானிய மக்களுக்கு கூட பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், அனைத்து அரசியல் கட்சிகளும் எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும் என தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார். மின்சார திருத்த சட்ட மசோதா குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி பேசியதாவது, மின்சார திருத்த சட்ட மசோதா ஏழை, எளிய மக்கள், நெசவாளர்கள் என ஒட்டுமொத்த மக்களையும் பாதிக்கும். … Read more

விசாரணைக் கைதி விக்னேஷ் கொலை வழக்கில் காவல் துறையினருக்கு ஜாமீன்

சென்னை:காவல் நிலையத்தில் விசாரணைக் கைதி விக்னேஷ் மரணமடைந்த வழக்கில், 90 நாட்கள் கடந்தும் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படாததால், வழக்கில் கைதான காவல் துறையினர் 6 பேருக்கு சட்டபூர்வ ஜாமீன் வழங்கி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை பட்டினப்பாக்கத்தைச் சேர்ந்த விக்னேஷ் என்ற இளைஞரை, கடந்த ஏப்ரல் 18-ம் தேதி தலைமைச் செயலக காலனி காவல் நிலையத்தினர் விசாரணைக்கு அழைத்து சென்ற நிலையில், மறுநாள் மர்மமான முறையில் காவல் நிலையத்தில் உயிரிழந்தார். சந்தேக மரணம் … Read more