அஞ்சலகங்களில் 8.7 லட்சம் தேசியக் கொடிகள் விற்பனை

சென்னை: சுதந்திர தினத்தை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் அஞ்சல் நிலையங்கள் மூலம் மொத்தம் 8.7 லட்சம் தேசியக் கொடிகள் விற்பனை செய்யப்பட்டன. இதன்மூலம் ரூ.2.17 கோடி வருவாய் கிடைத்தது. இதுபற்றி சென்னை நகர மண்டல அஞ்சல் துறை தலைவர் ஜி.நட்ராஜ் கூறியதாவது: சுதந்திர தினத்தை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் அஞ்சல் நிலையங்களில் 8.71 லட்சம் கொடிகள் விற்பனையாகின. இதில், அதிகபட்சமாக சென்னை நகர மண்டலத்தில் 2.74 லட்சம் கொடிகளும், மத்திய மண்டலத்தில் 2.32 லட்சம், மேற்கு மண்டலத்தில் … Read more

எய்ம்ஸ் 3 ஆண்டு தாமதத்தால் ரூ.713.80 கோடி கூடுதல் செலவு: அமைச்சர் மா.சுப்ரமணியன் தகவல்

ராமநாதபுரம்: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை உரிய நேரத்தில் கட்டுமான பணி தொடங்காமல் 3 ஆண்டு தாமதம் செய்ததால் ரூ.713.80 கோடி கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளது என மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். ராமநாதபுரத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று அளித்த பேட்டி: கடந்த 2019ம் ஆண்டு ரூ.1,264 கோடி மதிப்பில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய அடிக்கல் நாட்டப்பட்டது. தற்போது, எய்ம்ஸ் மருத்துவமனை அமைய திட்ட மதிப்பீடு ரூ.1,977 கோடியாக அதிகரித்துள்ளது. … Read more

உடனடியாக ரூ.220 கோடி செலுத்த தமிழக மின்வாரியம் முடிவு

சென்னை: மின் சந்தையில், தமிழக அரசின் மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (டான்ஜெட்கோ), தினமும் சுமார் 10 மில்லியன் யூனிட் மின்சாரத்தை கொள்முதல் செய்து வருகிறது. இவ்வாறு கொள்முதல் செய்யும் மின்சாரத்துக்கான கட்டணத்தில் ரூ.926.11 கோடியை செலுத்தாமல், தமிழக மின் வாரியம் நிலுவையில் வைத்துள்ளது. இதன்காரணமாக, மின்சாரத்தை கொள்முதல் செய்யவும், உபரி மின்சாரத்தை விற்கவும் தமிழக மின் வாரியத்துக்கு, பவர் சிஸ்டம் ஆபரேஷன் கார்ப்பரேஷன் நிறுவனம் தடை விதித்துள்ளது. இதனால், தமிழகத்தில் மின்வெட்டு ஏற்படும் நிலை … Read more

மாத்திரை அட்டை வடிவில் திருமண அழைப்பிதழ்

வேட்டவலம்: திருவண்ணாமலையில் புதுமுயற்சியாக மாத்திரை அட்டை வடிவில் அச்சடிக்கப்பட்டுள்ள திருமண அழைப்பிதழ், சமூக வலைதளங்களில் வைரலாகி வரவேற்பை பெற்று வருகிறது. திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் பகுதியை சேர்ந்தவர் எழிலரசன். இவர் திருவண்ணாமலை தனியார் மருந்தியல் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த செவிலியர் வசந்தகுமாரிக்கும் அடுத்த மாதம் (செப்டம்பர்) 5ம் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் திருமண அழைப்பிதழை மாத்திரை அட்டை போன்று வடிவமைத்துள்ளனர். மருந்தின் பெயர் இருக்க வேண்டிய … Read more

சிவசேனாவுக்கு நடந்ததுதான் இங்கே திமுகவுக்கும் நடக்கும்: அண்ணாமலை

புதுக்கோட்டையில் நேற்றிரவு பாஜக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் , அக்கட்சியின் மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை பேசியது: புதுக்கோட்டை எம்.பி தொகுதிசிலரின் ஆதாயத்துக்காக 4 பகுதிகளாக துண்டாடப்பட்டுள்ளது. தொகுதி மறு சீரமைப்பு வரும்போது புதுக்கோட்டை எம்.பி தொகுதி மீண்டும் உருவாக்கப்படும். சமூக நீதி, சமநீதி பேசும்திமுக ஆட்சியில், சுதந்திர தினத்தில் 20 ஊராட்சி மன்றத் தலைவர்களால் தேசியக் கொடியேற்ற முடியவில்லை. 22 ஊராட்சி மன்றத் தலைவர்களால் அவர்களின் நாற்காலியில் அமர முடியவில்லை. 42 ஊராட்சி மன்றத் தலைவர்களின் பெயர்ப் … Read more

எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தீப்பிடித்து எரிந்தது: வடமதுரை அருகே அதிர்ச்சி

வடமதுரை: வடமதுரை அருகே நான்கு வழிச்சாலையில் ஓடிக் கொண்டிருந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திண்டுக்கல்லை சேர்ந்தவர் அருள்ஜோதி (33). இவர் திருச்சி மாவட்டம், வையம்பட்டியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதிதாக எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கினார். நேற்று காலை ஸ்கூட்டரில் திண்டுக்கல்லில் இருந்து வேலைக்கு சென்றார். பின்னர் மீண்டும் பணி தொடர்பாக ஸ்கூட்டரில் வடமதுரையை நோக்கி வந்து கொண்டிருந்தார். திண்டுக்கல் – … Read more

வேலூரில் போலி மாற்றுத்திறனாளி அடையாள அட்டை வாங்கி கொடுத்தவர் குண்டாசில் கைது

வேலூர்: வேலூர் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணன் கடந்த ஏப்ரல் மாதம் எஸ்பியிடம் அளித்த புகார் மனுவில், வேலூர் மாவட்டத்தில் மாற்றத்திறனாளிகள் அல்லாதவர்கள் போலி மருத்துவ சான்றிதழ் பெற்று மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டையை பெற்று நலத்திட்ட உதவிகளை பெற்று வருகின்றனர்  என்று குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து எஸ்பி ராஜேஷ்கண்ணன் உத்தரவின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் முதல்கட்டமாக போலி சான்றிதழ் மூலம் தேசிய அடையாள அட்டை … Read more

கடலூர்: மின்சாரம் தாக்கி இளைஞர் பலி

கடலூர் மாவட்டத்தில் மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சென்னையைச் சேர்ந்தவர் மோசஸ்(18). இவருக்கு பெற்றோர் இல்லாததால், கடலூர் மாவட்டம் கணிசப்பாக்கம் பகுதியில் உள்ள தாய் மாமன் வீட்டில் தங்கி, மளிகை கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.  இந்நிலையில் இன்று காலை வழக்கமாக வேலைக்கு செல்வதற்காக குளித்துவிட்டு பாத்ரூமில் இருந்து வெளியே வந்துள்ளார். அப்பொழுது மழை பெய்ததால் தரை வழிக்கு உள்ளது. மோசஸ் கீழே விழாமல் இருக்க அருகில் இருந்த … Read more

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியை நிர்வகிக்க சிறப்பு அதிகாரியை நியமிக்க வேண்டும்: கல்வியாளர்கள் கோரிக்கை

சென்னை: “கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியை நிர்வகிப்பதற்கு ஒரு சிறப்பு அதிகாரியை நியமித்து குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறையின் தாமதப்போக்கும், மெத்தனப்போக்கும் விசாரணையைப் பாதிக்கும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்” என்று தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சருக்கு கல்வியாளர்கள் கடிதம் எழுதியுள்ளனர். பேராசிரியர்கள் வே.வசந்தி தேவி, அ.மார்க்ஸ், கே.ஏ.மணிக்குமார், கல்விமணி, ப.சிவக்குமார், வீ.அரசு, ஆர்.முரளி, கே. இராஜூ, அ.கருணானந்தம், பி.ராஜமாணிக்கம், சரஸ்வதி கோவிந்தராஜ், எஸ்.கோச்சடை, மு.திருமாவளவன், பி.ரத்தினசபாபதி, க. கணேசன், … Read more