பல மாவட்டங்களுக்கு போதை மருந்தை விற்பனை செய்த பொறியியல் பட்டதாரி கைது..!

தமிழகம், புதுச்சேரி, கேரளாவில் உள்ள மாணவர்களை போதை ஊசிகளுக்கு அடிமையாக்கிய திருச்சியைச் சேர்ந்த பெண் உட்பட 6 பேரை, போலீசார் கைது செய்தனர். தேனி மாவட்டத்தில் உள்ள சின்னமனுாரில் இளைஞர்கள் போதை ஊசி செலுத்துவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலை அறிந்து அங்கு சென்ற தனிப்படை போலீசார், உத்தமபாளையம் இந்திரா நகர் முகமது மீரான் வயது 22, சின்னமனுார் சாமிகுளத்தைச் சேர்ந்த மாணிக்கம் வயது 19, ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தினர்.அவர்களிடம் நடத்திய விசாரணையில், … Read more

70-வது பிறந்தநாள் | விஜயகாந்தை நேரில் சந்தித்து தொண்டர்கள் வாழ்த்து

சென்னை: தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் இன்று தனது 70-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதையொட்டி அவரை கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் நேரில் சந்தித்து தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர். தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்தின் 70-வது பிறந்தநாள் இன்று அக்கட்சியின் சார்பில் வறுமை ஒழிப்பு தினமாக பல்வேறு இடங்களில் கொண்டாடப்படுகிறது. இதனைத்தொடர்ந்து, கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் ரசிகர்களின் வாழ்த்துகளைப் பெறுவதற்காக, விஜயகாந்த் சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை அலுவலகத்திற்கு வந்திருந்தார். முன்னதாக காரில் வந்த … Read more

அரசு பள்ளி வளாகத்தில் விஷம் குடித்த மாணவர்

ஆத்தூர்: சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே காட்டுக்கோட்டையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் சதாசிவபுரம் கிராமத்தைச் சேர்ந்த கிரிநாத்(17) என்பவர் 12ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் கடந்தாண்டு நடைபெற்ற 11ம் வகுப்பு தேர்வில் 4 பாடப்பிரிவுகளில் தோல்வி அடைந்தார். இதையடுத்து, துணை தேர்வில் கலந்து கொண்டு  4 பாடப்பிரிவுகளுக்கான தேர்வினை எழுதினார். இதன் முடிவு நேற்று முன்தினம் வெளியானது. இதில், கணிதம் மற்றும் வேதியியல், இயற்பியல் ஆகிய பாடப்பிரிவுகளில் மீண்டும் கிரிநாத் தோல்வியடைந்தார். நேற்று காலை வழக்கம்போல் … Read more

தினமும் 3 வேளை வெந்தயம்… சுகர் இருக்கிறவங்க இதை ட்ரை பண்றீங்களா?

இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் சந்திக்கும் முக்கிய பிரச்சினை நீரிழிவு நோய். உடல் ரத்தத்தில் சர்ககரையின் அளவு சமநிலை தவறும்போது இந்நோய் தாக்கம் ஏற்படுகிறது. நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உணவு கட்டுப்பாட்டை கடைபிடிப்பது மிகவும் அவசியம். அதே சமயம் இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சில இயற்கை முறை உணவுகள் மூலம் உடலின் அதிகப்படியான சர்க்கரையை கட்டுப்படுத்தலாம். தங்கள் சாப்பிடும் உணவின் மூலமாகவே நீரிழிவு நோயாளிகள் தங்களின் உடலில் உள்ள சர்க்கரையின் அளவை சீரான நிலைக்கு … Read more

“அழிப்பதை ஏற்க முடியாது” – பரந்தூர் கருத்து கேட்பில் அன்புமணி ஆவேசம்

காஞ்சிபுரம்: “ஒருபக்கம் வளர்ச்சி, மற்றொரு பக்கம் விவசாயம், வேளாண்மை, சுற்றுச்சூழல் இரண்டையுமே சமமாக எடுத்துச் செல்ல வேண்டும். ஒன்றை அழித்துதான் இன்னொன்றை நான் கொண்டு வருவேன் என்று கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது” என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் விமான நிலையம் அமைப்பது தொடர்பாக கிராம மக்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் பாமக சார்பில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசியது: “இது எந்த … Read more

சாத்தான்குளம் வியாபாரிகள் கொலை வழக்கின் விசாரணை நிலை என்ன?.. அறிக்கையளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை:  தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த செல்வராணி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘என் கணவர் ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் ஆகியோர் சாத்தான்குளம் போலீசாரால் கடுமையாக தாக்கப்பட்டு கொல்லப்பட்டனர். இந்த வழக்கின் விசாரணையை மதுரை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்குமாறு உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார். இந்த மனு நீதிபதி கே.முரளிசங்கர் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. முதலாவது கூடுதல் மாவட்ட நீதிபதி தரப்பில், வழக்கின் விசாரணையை முடிக்க … Read more

’திருக்குறள் மொழிப்பெயர்ப்பில் உள்நோக்கம்’.. ஜி.யு.போப்பை விமர்சித்த ஆளுநர் ஆர்.என்.ரவி

திருக்குறள் மொழிப்பெயர்ப்பில் இருந்து பக்தி என்ற ஆன்மா வேண்டுமென்றே நீக்கப்பட்டுள்ளதாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி விமர்சித்துள்ளார். டெல்லி லோதி எஸ்டேட்டில் உள்ள தமிழ் கல்விக்கழகம் மேல்நிலை பள்ளி வளாகத்தில் 1,500 கிலோ எடை கொண்ட திருவள்ளூர் சிலையை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி திறந்து வைத்தார். அதில் பேசிய ஆளுநர், திருவள்ளுவர் நமது பிரபஞ்சத்தின் விடிவெள்ளி என்றார். திருக்குறள் என்பது தற்போது ஒரு கருத்துரை, வாழ்வியல் அடங்கிய ஒரு புத்தகமாக சுருங்கி விட்டதாகவும், ஆனால் திருக்குறள் என்பது அதற்கும் … Read more

ஜி.வி.பிரகாஷ் நடித்த பென்சில் பட இயக்குனர் திடீர் மரணம்

ஜி.வி.பிரகாஷை வைத்து பென்சில் என்ற படத்தை இயக்கிய இயக்குனர் மணி நாகராஜ் திடீரென மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் கடந்த 2016-ம் ஆண்டு வெளியான படம் பென்சில். ஸ்ரீதிவ்யா நாயகியாக நடித்திருந்த இந்த படம் சஸ்பென்ஸ் த்ரில்லர் பாணியில் திரைக்கதை அமைக்கப்பட்டிருந்தது. ஜி.வி.பிரகாஷ் பள்ளி மாணவராக நடித்த இந்த படத்தை இயக்குனர் மணி நாகராஜ் இயக்கியிருந்தார். இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து இயக்குனர் மணி நாகராஜ் அடுத்ததாக வாசுவின் கர்பிணிகள் என்ற … Read more

மேல்முறையீட்டு வழக்கில் அனல்பறந்த வாதங்கள்.. தீர்ப்பு ஒத்திவைப்பு.!

அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற தனிநீதிபதியின் உத்தரவை எதிர்த்து, எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் உயர் நீதிமன்றம் ஒத்திவைத்தது. இறுதிகட்ட விசாரணையில் அனல்பறக்கும் வாதங்கள் அரங்கேறின. உயர்நீதிமன்ற நீதிபதிகள் எம்.துரைசாமி, சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நடைபெற்ற இறுதி விசாரணையில், காலையில் இபிஎஸ் தரப்பு வாதங்கள் முன் வைக்கப்பட்டன.  ஓபிஎஸ் உள்ளிட்ட மனுதாரர்கள் தரப்பில்  கோரப்படாத நிவாரணத்தை தனிநீதிபதி வழங்கியது அசாதாரணமானது என்றும் இபிஎஸ் தரப்பில் … Read more

அமைச்சர் உறுதி அளித்ததால் மவுனப் போராட்டத்தை நிறுத்திக்கொண்ட பாஜக விவசாய அணி

கோவை: மவுனப் போராட்டம் நடத்திய பாஜக விவசாய அணி போராட்டக்காரர்களை தமிழக அமைச்சர் முத்துசாமி இன்று நேரில் சந்தித்து அவினாசி – அத்திக்கடவு திட்டம் நிறைவேற்றுவதாக உறுதியளித்ததை அடுத்து போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பாஜக விவசாய அணி தெரிவித்துள்ளது. இதுகுறித்து பாஜக விவசாய அணி வெளியிட்டுள்ள அறிக்கையில், “ரூ.1856.88 கோடி செலவில் 96.5% முடிக்கப்பட்ட அவினாசி – அத்திக்கடவு திட்டம் வெறும் 2.2 கி.மீ தூரத்திற்கு குழாய் பதிக்காமல் 17 மாதங்களாக தடைப்பட்டு நிற்பதையும்,ஈரோடு வருகைபுரியும் தமிழக … Read more