கடன் செயலிகளுக்கு தடை விதிக்குமா தமிழக அரசு? வேல்முருகன் வைத்த கோரிக்கை!

ஒன்றிய அரசும், தமிழ்நாடு அரசும் நேரடியாகத் தலையிட்டு, சட்டவிரோதமாக செயல்படும் தனியார் நிதி நிறுவனங்களையும், கடன் செயலிகளையும் தடை செய்ய வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்திய அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கை, ஜிஎஸ்டி வரித் தாக்குதல் போன்றவை ஏற்படுத்திய மிகப்பெரும் பாதிப்புகளிலிருந்து மீள்வதற்கு முன்பாகவே, கொரோனா பொதுமுடக்கம் ஏற்படுத்திய பெருந்தாக்கம் பல குடும்பங்களை வாழ்வாதாரமின்றி நிலை குலைய வைத்துவிட்டது. இதன் காரணமாக, தங்களது … Read more

அரசியல் கட்சிகளுடன் தொடர்புடையவரா! நல்லாசிரியர் விருது கிடையாது!.. இதோ புதிய விதிமுறை

இந்த ஆண்டு வழங்கப்படவிருக்கும் நல்லாசிரியர் விருதுகளுக்கான பரிந்துரைகள் சிலவற்றை பள்ளி கல்வித்துறை தற்போது வெளியிட்டுள்ளது.   டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணனின் பிறந்த தினமான செப்டம்பர் 5-ம் நாளன்று ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்நாளில் சிறப்பான கல்விப்பணி ஆற்றிய ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் பெயரால் நல்லாசிரியர் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. 38 மாவட்டங்களில் இருந்து 386 ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்படுவது வழக்கம். நடப்பு ஆண்டுக்கான டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெறுவதற்கு ஏற்கெனவே உள்ள … Read more

#விருதுநகர் || இருசக்கர வாகனம் மோதி ஒருவர் உயிரிழப்பு

விருதுநகர் மாவட்டத்தில் இருசக்கர வாகனம் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். விருதுநகர் மாவட்டம் காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் போத்திராஜ்(42). இவர் திருநெல்வேலி செல்வதற்காக இருசக்கர வாகனத்தில் சாத்தூர் சாலையில் சென்று கொண்டிருந்தார்.  அப்பொழுது சாலை நடுவே சென்ற ஒருவர் மீது எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனம் மோதியது. இதில் போத்திராஜூம், சாலை நடுவே சென்றவரும் படுகாயமடைந்துள்ளனர். இதையடுத்து அப்பகுதியில் இருந்தவர்கள் போத்திராஜை மீட்டு சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் சாலையின் நடுவே சென்றவரை சிகிச்சைக்காக … Read more

மின்கட்டணம், சொத்து வரிக்கு அடுத்து பஸ் கட்டணமும் உயரப்போகிறது: இபிஎஸ்

சேலம்: “ஒருபக்கம் மின்கட்டண உயர்வு, இன்னொரு பக்கம் சொத்துவரி உயர்வு, விரைவாக பேருந்து கட்டணமும் உயரப்போகிறது” என்று எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். சேலத்தில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளரும், எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “பத்தாண்டு காலம் அதிமுக தொடர்ந்து ஆட்சியில் இருந்தது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் நான் முதல்வராக இருந்தேன். பல்வேறு பிரச்சினைகள் இருந்தன. இருந்தாலும், மக்கள் துன்புறும்போது, மக்கள் பாதிக்கப்படாதவாறு, … Read more

ரஜினி -ஆர்.என்.ரவி சந்திப்பும், எழுந்துள்ள சந்தேகங்களும்!

தமது டெல்லி பயணத்தை முடித்த கையோடு, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை நடிகர் ரஜினிகாந்த் சந்தித்து பேசியுள்ள நிகழ்வு தமிழக அரசியலில் பரபரப்பை பற்ற வைத்துள்ளது. ஆளுநருடனான தமது சந்திப்பு மரியாதை நிமித்தமானது என்று வழக்கமாக சொல்வதை போன்றே இன்றும் ரஜினி செய்தியாளர்களிடம் கூறியிருந்தால் பரவாயில்லை. ஆனால், ‘ஆளுநருடன் நான் அரசியலும் பேசினேன்; ஆனால் எனக்கு அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை’ என்று முன்னுக்கு பின் முரணாக ரஜினி கூறியுள்ளது பல்வேறு யூகங்களுக்கு வழி வகுத்துள்ளது. யூகம் 1: … Read more

’’என் உயிருக்கு உத்தரவாதம் இல்லை’’ -வெளிநாட்டில் கதறும் மகன்; மீட்டு தரும்படி தாய் கண்ணீர்

வெளிநாட்டு வேலை மோகத்தால் தவறான நபர்கள் மூலம் கம்போடியா நாட்டிற்குச் சென்று மோசடி கும்பலிடம் சிக்கி, ’’என்னைச் சுற்றி என்ன நடக்கிறது எனத் தெரியவில்லை; என் உயிருக்கு உத்தரவாதம் இல்லை’’ எனக் கதறும் தனது மகனை மீட்டு தரும்படி தாய் கண்ணீருடன் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார். நெல்லை மாவட்டம் முனைஞ்சிப்பட்டி அருகே காரியாண்டி கிராமத்தைச் சேர்ந்த கலியன் – சிதம்பரவடிவு தம்பதியின் மகன் மகேஷ் (27). நாகர்கோவிலைச் சேர்ந்த ஏஜெண்டுகள் மூலம் தனது மகன் கம்போடியா … Read more

சாட்டையடி, தேங்காய் உடைத்தல்.. வடமதுரையில் பக்தர்கள் வினோத வழிபாடு.!

வடமதுரை அருகே மதுரை வீரன் கோவில் 32 பந்தி தெய்வங்களின் திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவில், மின் அலங்காரம் செய்யப்பட்ட ரதத்தில் சாமி புறப்பட்டது. பக்தர்கள் கரகாட்டம், வாணவேடிக்கையுடன் சாமியை ஊர்வலமாக அழைத்துச் சென்றனர். இன்று காலை கங்கையில் இருந்து ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு அபிஷேகங்கள் அனைத்தும் சிறப்பாக நடந்து முடிந்த பின்னர், கோவிலின் முன்பு பக்தர்கள் வரிசையாக அமர்ந்தனர். கோவில் பூசாரி கோவிந்தா கோவிந்தா என்று கூறி பக்தர்களின் தலையில் தேங்காயை உடைத்து வந்தார். அதன் … Read more

கம்போடியா நாட்டில் சிக்கித்தவிக்கும் தனது மகனை மீட்டுத்தருமாறு தாய் கண்ணீருடன் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை!

கம்போடியா நாட்டில் மோசடி கும்பலிடம் சிக்கித்தவிக்கும் தனது 27 வயது மகன் மகேஷை மீட்டுத்தருமாறு தாய் கண்ணீருடன் நெல்லை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர் வேலைக்காக அழைத்துச்சென்று கம்போடியாவில் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுமாறு நாகர்கோவிலை சேர்ந்த ஏஜென்ட்டுகள் ஆண்ட்ரூ அந்தோணி மற்றும் சிவக்குமார் தனது மகனை துன்புறுத்துவதாகவும், அவர்களுக்கு இதுவரை 1 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்துள்ளதாகவும் மகேஷின் தாய் புகார் தெரிவித்துள்ளார். தனது மகன் மகேஷ் அனுப்பிய வீடியோ … Read more

ஏற்காட்டில் அனுமதியின்றி மரம் வெட்டி கடத்தல்: 2 லாரிகளை பறிமுதல் செய்து ஆட்சியர் நடவடிக்கை

சேலம்: ஏற்காடு, செம்மநத்தம் கிராமத்தில் ஆய்வுப் பணியில் ஈடுபட்ட ஆட்சியர் கார்மேகம், அனுமதியின்றி மரங்களை வெட்டி கடத்திய இரண்டு லாரிகளை பறிமுதல் செய்து, வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். ஏற்காடு, செம்மநத்தம் கிராமத்தில் ஆட்சியர் கார்மேகம் நேற்று இரவு ஆய்வு பணியில் ஈடுபட்டார். அப்போது, இரண்டு லாரிகளில் மரங்கள் வெட்டி எடுத்து கொண்டு செல்லப்பட்டது. அந்த இரண்டு லாரிகளையும் ஆட்சியர் கார்மேகம் நிறுத்தி, மரம் வெட்டி எடுத்து செல்ல உரிய அனுமதி பெறப்பட்டுள்ளதா என்றும், அதற்கான … Read more

'ஓபிஎஸ் எங்கு வேண்டுமானாலும் செல்லட்டும்' – எடப்பாடி பழனிசாமி அதிரடி!

எங்கு வேண்டுமானாலும் செல்லட்டும்; அதைப் பற்றி தனக்கு கவலையில்லை என, தெரிவித்து உள்ளார். சேலம் மாவட்டம் எடப்பாடியில், அதிமுக இடைக்கால பொதுச் செயலாளரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 1.95 கோடி மதிப்பீட்டில், 24 முடிவற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்தார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது: விவசாயிகளுக்கு பயனளிக்கக் கூடி வகையில் மேட்டூர் அணையின் உபரி நீரை மேட்டூர், ஓமலூர், எடப்பாடி, சங்ககிரி, ஆகிய … Read more