தமிழக பாஜக தலைவர் போலத்தான் கட்சியினரும் : அமைச்சர் செந்தில் பாலாஜி விமர்சனம்

வருகிற 24-ஆம் தேதி கோவையில் நடைபெறும் விழாவில் பங்கேற்றும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  சுமார் ஒரு லட்சத்து 6 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க இருப்பதாகவும் அப்போது மாற்றுக் கட்சிகளில் இருந்து முக்கிய பிரமுகர்கள் பலர் திமுகவில் இணை உள்ளதாகவும் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். அது தொடர்பாக கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன்,மாநகர மற்றும் மாவட்ட  காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய அமைச்சர் செந்தில் பாலாஜி, பின்னர் செய்தியாளர்களை … Read more

“வட்டாட்சியருக்கு இருக்கை வழங்காதது திமுக அரசின் சாதிய வன்மத்தின் உச்சம்” – அண்ணாமலை

சென்னை: “வட்டாட்சியருக்கு இருக்கை வழங்காதது திமுக அரசின் சாதிய வன்மத்தின் உச்சம்” என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், “திருவள்ளூர் மாவட்டம் ஈகுவார்பாளையத்தில் நடந்த அரசு விழாவில் வட்டாட்சியர் கண்ணனுக்கு இருக்கை வழங்காதது இந்த திமுக அரசின் சாதிய வன்மத்தின் உச்சம். அவர் பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்பதால்தான் இருக்கை வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. அந்த விழாவில் துணை வட்டாட்சியர், சட்டமன்ற உறுப்பினர் அதுமட்டுமின்றி, அங்கு … Read more

இது நம்ம ‘சென்னை’; வரலாறு முக்கியம் அமைச்சரே!

தமிழ் திரைப்படங்களில் பெரும்பாலும் சென்னையின் அடையாளமாக செண்ட்ரல் ரயில் நிலையத்தை காட்டுவது வழக்கம். அதையும் தாண்டி சென்னைக்கு என பல்வேறு சிறப்பு அம்சங்கள் உள்ளன. சென்னையாம்.. அது எல்லாம் ஒரு ஊரா? என, தமிழகத்தின் குக்கிராமங்களில் உள்ளவர்கள் தூற்றுவது உண்டு. அதே சமயம் ‘இது நம்ம சென்னை’ என ஆராதிக்கும் சென்னைவாசிகளும் உண்டு. தமிழகத்தின் தலைநகரான சென்னை தோற்றுவிக்கப்பட்ட தினமான கி.பி 1639ம் ஆகஸ்ட் மாதம் 22ம் தேதியை நினைவூட்டும் விதமாகவே கடந்த 2004ம் ஆண்டு முதல் … Read more

திருமண வரவேற்புக்கு ரூ.250 கோடி செலவு செய்த முன்னாள் எம்.பி!

பல பெரிய ஆடம்பர திருமணங்கள் தலைப்புச் செய்திகளை பிடித்திருக்கிறது. ஆனால் தெலுங்கானா மாநிலம் கம்மத்தில் நடந்த இந்தத் திருமண வரவேற்பு செலவழிக்கப்பட்ட தொகைக்காக மட்டுமின்றி அழைக்கப்பட்ட விருந்தினர்களின் எண்ணிக்கையிலும்  செய்திகளை எட்டிப்பிடித்திருக்கிறது .  தொழிலதிபரும் கம்மம் மக்களவையின் முன்னாள் எம்.பி.யுமான பொங்குலேடி சீனிவாச ரெட்டியின் மகள் ஸ்வப்னி ரெட்டியின் திருமண வரவேற்பு கடந்த புதன்கிழமை நடைபெற்றது இந்த வரவேற்பு நிகழ்வுக்காக ரூ.250 கோடி செலவு செய்யப்பட்டதாக கூறப்பட்டிருக்கிறது.  முன்னதாக திருமணம் கடந்த 12ம் தேதி ஸ்வப்னிக்கு இந்தோனேசியாவின் … Read more

ஓட்டேரியில் கலைஞர் நினைவு தின பொதுக்கூட்டம்; கொள்கை ரீதியாக பிரதமரை எதிர்க்கும் ஒரே தலைவர் மு.க.ஸ்டாலின் மட்டுமே: காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பேச்சு

பெரம்பூர்: கலைஞர் கருணாநிதியின் 4ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை கிழக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில், ‘உடன்பிறப்பே எங்கள் உயிர்சொல்’ என்ற தலைப்பில் சென்னை ஓட்டேரி நம்மாழ்வார்பேட்டையில் நேற்று பொதுகூட்டம் நடந்தது. இளைஞரணி துணை அமைப்பாளர் லோகேஷ் தலைமை வகித்தார். இதில், அமைச்சர் பி.கே.சேகர்பாபு, கலாநிதி வீராசாமி எம்பி, மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பேசியதாவது: சட்டமன்றத்தில் கலைஞரிடம் நான் கற்றது ஏராளம். … Read more

கோவை: பெரும் தொல்லையாக மாறிய நாய்கள்… 6 மாதங்களில் 4,400 பேருக்கு நாய்க்கடி சிகிச்சை

கோவை மாநகர் பகுதிகளில் கடந்த ஆறு மாதங்களில் மட்டும், நாய் கடிக்கு 4,400-க்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுள்ளனர். கோவையில் தெருநாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இரவுநேரம் பணி முடிந்து வரும் பொதுமக்களுக்கு மிகுந்த தொந்தரவை தருகின்றது. வாகன ஓட்டிகளை நாய்கள் துரத்தி செல்வதால், பதட்டத்தில் நிலை தடுமாறி வாகனங்களில் இருந்து விழுந்து விபத்து ஏற்படுகிறது. குறிப்பாக உக்கடம் புல்லுக்காடு, G M நகர், கரும்புக்கடை, பீளமேடு போன்ற பல்வேறு இடங்களில் பிரச்னை தொடர்கதையாக … Read more

கோவை ரயில் நிலையத்தை ஆய்வு செய்த ஸ்டாண்டிங் கமிட்டி: ‘டி.ஆர் பாலு எம்.பி.வராதது ஏமாற்றம்’ – வானதி சீனிவாசன்

Coimbatore News in Tamil: கோவை ரயில் நிலையத்தை ரயில்வே ஸ்டாண்டிங் கமிட்டி சார்பில் 16 எம்பிக்கள் ஆய்வு மேற்கொண்ட நிலையில், அதன்பிறகான பேட்டியில் பேசிய சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், ‘இந்த ஆய்வில் டி.ஆர் பாலு எம்.பி.வராதது ஏமாற்றம் அளிக்கிறது’ என்று தெரிவித்துள்ளார். கோவை ரயில் நிலையத்தில் இந்தியன் ரயில்வே கமிட்டி சேர்மன் ராதா மோகன் சிங் தலைமையில் 16 எம்.பி-கள் மற்றும் கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் ஆகியோரும் ஆய்வு … Read more

கேரளாவிற்கு கொண்டு செல்லப்பட்ட பாலில் கலக்கப்பட்ட யூரியா.! பறிமுதல் செய்த அதிகாரிகள்.!

திண்டுக்கல்லில் இருந்து கேரளாவுக்கு அனுப்பப்பட்ட பாலில் யூரியா கலப்படம் இருந்ததால் 12 ஆயிரத்து 750 லிட்டர் பால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.  திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு தனியாருக்கு உரிமையான அகிலா ட்ரான்ஸ்போர்ட் டேங்கர் லாரியில் கொண்டு செல்லப்பட்ட பால் மீனாட்சிபுரம் சோதனை சாவடியில் தமிழக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளால் பரிசோதனை செய்யப்பட்டது.  அப்போது, அந்த பாலில் யூரியா கலக்கப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து, அந்த லாரியில் இருந்த 12 ஆயிரத்து 750 லிட்டர் பாலை … Read more

ஆசிரியை தாக்கியதால் 2ஆம் வகுப்பு மாணவனுக்கு தலையில் வீக்கம்.. பள்ளி நிர்வாகத்திடம் போலீசார் விசாரணை..!

திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு செயிண்ட் ஜோசப் மெட்ரிக் பள்ளியில் 2ம் வகுப்பு மாணவனை ஆசிரியை தாக்கியதால் மாணவனுக்கு தலையில் வீக்கம் ஏற்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வெங்கட்ராமன் – சாந்தி தம்பதியின் 7 வயது மகனை, பள்ளியில் ஆசிரியை ஒருவர் கம்பால் தலையில் தாக்கியதாக கூறப்படுகிறது. சிறுவனின் தலையில் வீக்கம் இருப்பதைக் கண்டு பெற்றோர் பள்ளிக்குச் சென்று கேட்ட போது, முறையாக பதில் அளிக்காத பள்ளி நிர்வாகம் டி.சி வாங்கிக் கொண்டு செல்லுமாறு கூறியதாக … Read more

திருமங்கலம் அரசு ஹோமியோபதி மருத்துவக் கல்லூரிக்கு புதிய கட்டிடம்: மா.சுப்பிரமணியன் உறுதி

மதுரை; ‘‘மழைக்காலத்தில் தண்ணீர் தேங்கும் திருமங்கலம் அரசு ஹோமியோபதி மருத்துவக் கல்லூரிக்கு 2 ஆண்டுகளில் புதிய கட்டிடம் கட்டப்படுகிறது’’ என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் தெரிவித்தார். மதுரை திருமங்கலத்தில் உள்ள அரசு ஹோமியாபதி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் ஆய்வு செய்தார். அதன்பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறியது: “திருமங்கலம் அரசு ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி பழம் பெருமை வாய்ந்த மருத்துவக் கல்லூரியாகும். 1975-ஆம் … Read more