தமிழகத்தில் தற்கொலைகளை தடுப்பதற்காக எலி பேஸ்ட் மற்றும் சாண பவுடரை தயாரிக்கவும், விற்பனை செய்யவும் தடை விதிக்க முடிவு

தமிழகத்தில் தற்கொலைகளை தடுப்பதற்காக எலி பேஸ்ட் மற்றும் சாண பவுடரை தயாரிக்கவும், விற்பனை செய்யவும் தடை விதிக்க சட்டம் கொண்டுவர இருப்பதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி பணிகளை உடனடியாக துவங்க வலியுறுத்தி மத்திய சுகாதாரத் துறை அமைச்சரை சந்திக்க விரைவில் டெல்லி செல்ல இருப்பதாக தெரிவித்தார்.   Source link

“நிதியமைச்சர் தியாகராஜன் அவர்களே… நீங்கள் பேசியது அகங்காரத்தின் வெளிப்பாடு” – தமிழக பாஜக

சென்னை: “மத்திய அரசை கேள்விகேட்கும் நீங்கள், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டீர்களா?” என்று தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனுக்கு தமிழக பாஜக கேள்வி எழுப்பியுள்ளது. இதுகுறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள அறிக்கையில், ”நான் ஏன் மற்றவர்களுடய கருத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும்? என் முதல்வர் எனக்கு ஒரு பணியினை கொடுத்தார். அதை நான் செவ்வனே செய்துகொண்டிருக்கிறேன். மத்திய அரசையே மிஞ்சும் அளவிற்கு என் செயல்பாடு உள்ளது. மத்திய அரசின் கருவூலத்திற்கு தமிழகம் அதிக அளவில் … Read more

கள்ளக்குறிச்சி கலவரம்: சென்னை உயர் நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல்!

கள்ளக்குறிச்சி பள்ளி கலவரம் தொடர்பாக சட்ட விரோதமாக கைது செய்யப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கக் கோரியும், கைது செய்யப்பட்ட அப்பாவிகளை அடையாளம் காணக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணத்தை அடுத்து மூன்று நாட்களுக்கு பின் பள்ளியில் நடந்த கலவரம், தீ வைப்பு சம்பவங்கள் தொடர்பாக சிறப்பு புலனாய்வு போலீசார், அப்பகுதியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர். இதில் அப்பாவிகளும் கைது செய்யப்பட்டு உள்ளதால் அவர்களை அடையாளம் … Read more

பொதுமக்களை நோக்கி காரி உமிழும் திமுக பெண் கவுன்சிலர் வீடியோ வைரல்

சேலம் மாநகராட்சி செவ்வாப்பேட்டை 30 வது வார்டு அய்யாசாமி தெரு உள்ளது. இப்பகுதியின் கவுன்சிலர் திமுக கட்சியை சேர்ந்த அம்சா. கடந்த 15 நாட்களுக்கு முன்பு குடிநீர் செல்லும் குழாயில் பழுத்தாகியுள்ளது. இதுகுறித்து திமுக பெண் கவுன்சிலர் அம்சா சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் குடிநீர் செல்லும் குழாயை விரைந்து சீர்படுத்த உத்தரவிட்டுள்ளார். உடனடியாக சம்பந்த இடத்திற்கு வந்த சேலம் மாநகராட்சி பணியாளர்கள் குடிநீர் குழாயில் உள்ள பழுதினை கண்டறிந்து மூன்று வீடுகளில் உள்ள குழாய்களில் அடைப்பு இருப்பதை கண்டறிந்துள்ளனர். … Read more

புதுச்சேரி வீராம்பட்டினம் செங்கழுநீரம்மன் கோயிலில் ஆடித் தேரோட்டம்

புதுச்சேரி: புதுச்சேரி வீராம்பட்டினம் செங்கழுநீரம்மன் கோயிலில் இன்று நடந்த ஆடித் தேரோட்டத்தில் கவர்னர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமி ஆகியோர் பங்கேற்று வடம்பிடித்து தேரை இழுத்து தொடங்கி வைத்தனர். புதுச்சேரி அரியாங்குப்பம் அடுத்த வீராம்பட்டினத்தில் பிரசித்தி பெற்ற செங்கழுநீரம்மன் கோயில் உள்ளது. இங்கு ஆடித்திருவிழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய நிகழ்வான ஆடித் தேரோட்டம் இன்று காலை 8 மணிக்கு நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், முதல்வர் ரங்கசாமி ஆகியோர் பங்கேற்று தேரை … Read more

ஆவினில் பலாப்பழ ஐஸ்கிரீம், கோல்டு காஃபி உள்ளிட்ட 10 புதியப் பொருட்கள் அறிமுகம்

சென்னை: ஆவின் மூலம் தயாரிக்கப்பட்ட பலாப்பழ ஐஸ்கிரீம், கோல்டு காஃபி உள்ளிட்ட 10 புதிய பொருட்களை அறிமுகப்படுத்திய பால் வளத்துறை அமைச்சர் நாசர், இந்தப் புதிய பொருட்கள் மூலம் மாதம் ரூ.2 கோடி வரை லாபம் வரும் என எதிர்பார்க்கப்படுவதாக கூறியுள்ளார். ஆவின் சார்பில் 10 புதிய பொருட்களை அறிமுகம் செய்து வைத்து பால்வளத் துறை அமைச்சர் நாசர், சென்னை நந்தனத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “ஏழை, எளிய மக்கள், நடுத்தர மக்கள் … Read more

எடப்பாடி பழனிசாமியை 'கழற்றி' விட ஓபிஎஸ் முடிவு – ர.ர.,க்கள் ஷாக்!

” போனால் போகட்டும்; பொதுக்குழு உறுப்பினர்கள் பக்கம் வருவார்கள்” என, முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் தெரிவித்து உள்ளார். கடந்த ஜூலை மாதம் 11 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில், இடைக்கால பொதுச் செயலாளராக, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லாது என, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பு அளித்துள்ளார். இந்த தீர்ப்பு, ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் மகிழ்ச்சியில் உள்ளனர். தீர்ப்புக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், “அதிமுக நலன் கருதி, எடப்பாடி … Read more

பெண் ஓட்டிச் சென்ற எலக்ட்ரிக் ஸ்கூட்டர் திடீரென்று தீப்பற்றி எரிந்தது: திண்டுக்கல்லில் பரபரப்பு

பெண் ஒருவர் ஓட்டிச் சென்ற மின்சார ஸ்கூட்டர் திடீரென்று தீப்பற்றி எரிந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. திண்டுக்கல்லை சேர்ந்தவர் அருள்ஜோதி. இவருக்கு வயது 33. இவர் திருச்சி மாவட்டம் வையம்பட்டியில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர் இன்று தனது எலக்ட்ரிக் பேட்டரி ஸ்கூட்டரில் திண்டுக்கல் நோக்கி சென்று கொண்டிருந்தார். திருச்சி திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் வேடசந்தூர் அருகே அய்யலூர் மேம்பாலத்தில் ஸ்கூட்டர் சென்று கொண்டிருந்த பொழுது, திடீரென … Read more

மேட்டூர் அணை நிலவரம்: நீர்வரத்து 15,000 கனஅடியாக சரிவு

சேலம்: மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 15,000 கனஅடியாக சரிந்துள்ளது. மேட்டர் அணையின் நீர்மட்டம் 120 அடியாக, வினாடிக்கு 15,000 கனஅடி வீதம் தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 600 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

மாட்டு மந்தையில் மறைந்திருக்கும் கரடி… 8 நொடிகளில் கண்டுபிடிச்சா நீங்க கில்லி!

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணையத்தில் நெட்டிசன்களை காந்தம் போல ஈர்த்து மாயாஜாலம் நிகழ்த்திக்கொண்டிருக்கிறது. நெட்டிசன்கள் அதன் சுவாரசியத்தில் கிறங்கிப் போய் வெறித்தனமாக படங்களைப் பார்த்து விடை தேடிக்கொண்டிருக்கிறார்கள். அதிலும், விலங்குகளைக் கண்டுபிடியுங்கள் என்று வெளியாகும் ஆப்டிகல் இல்யூஷன்கள் ஒரு சூறாவளியைப் போல இணையத்தை தாக்கிக்கொண்டிருக்கிறது. இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், மாட்டு மந்தையில் ஒரு கரடி மறைந்திருக்கிறது. அந்த கரடியை 8 நொடிகளில் கண்டுபிடிச்சா நீங்கதான் கில்லி. ஏனென்றால், இந்த புதிர் மிகவும் … Read more