சுவர் ஏறிக்குதித்து விளையாட சென்ற சிறுவன்.. உயரழுத்த மின் கம்பி உரசியதில் நேர்ந்த பரிதாபம்

கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சியில் மின்சாரம் தாக்கி சிறுவன் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மணல் ஆலை சுவரை எட்டி குதித்து விளையாட சென்றபோது உயரழுத்த மின் கம்பியில் உரசியதால் இந்த விபரீதம் ஏற்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் கடியபட்டணம் கிறிஸ்துராஜா தெருவைச் சேர்ந்தவர் ஜேம்ஸ். இவரது மகன் நிகிலன்(15). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10வது வகுப்பு படித்து வந்தார். இவரும், அதே பகுதியைச் சேர்ந்த அவருடைய நண்பர்கள் நான்கு பேர் உட்பட ஐந்து பேரும் … Read more

நீர்நிலை பகுதியில் சாஸ்த்ரா பல்கலை.? தமிழக அரசுக்கு ஐகோர்ட் முக்கிய உத்தரவு

High court orders Tamilnadu Govt to produce Sastra university water encroachment evidence: தஞ்சாவூரில் உள்ள சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தின் ஒரு பகுதி நீர் நிலையில் அமைந்துள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக உரிய ஆவணங்களை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் திருமலை சமுத்திரம் கிராமத்தில் சாஸ்த்ரா நிகர்நிலை பல்கலைகழகம் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்தப் பல்கலைக்கழகத்தின் ஒரு பகுதி கட்டிடங்கள் நீர் நிலைகளில் அமைந்துள்ளதாக … Read more

“தனியார்மயம் அல்ல… மேம்படுத்தி வருகிறோம்” – போக்குவரத்துத் துறை அமைச்சர் விளக்கம்

சென்னை: “போக்குவரத்து துறையை தனியார்மயம் ஆக்கும் நடவடிக்கை இல்லை” என்று போக்குவரத்து அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார். சென்னை மாநகர பேருந்துகளை தனியாருக்கு தாரை வார்க்கும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியிருந்தார். இதற்கு போக்குவரத்து அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார். அந்த விளக்கத்தில், “தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் கிராம மக்கள் உட்பட அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் நிறைவான போக்குவரத்து சேவை ஆற்றி வருகிறது. மேலும் … Read more

சாஸ்த்ரா பல்கலைக்கழக நில ஆக்கிரமிப்பு வழக்கு: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

சிறு ஆக்கிரமிப்புகளை அகற்ற செல்லும்போதெல்லாம், முதலில் சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தின் 31 ஏக்கர் அரசு நில ஆக்கிரமிப்பை அகற்றி விட்டு வாருங்கள் என்று மக்கள் எதிர்ப்பதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் திருமலை சமுத்திரம் கிராமத்தில் சாஸ்த்ரா நிகர்நிலை பல்கலைக்கழகம் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. கடந்த 35 ஆண்டுகளாக அனுபவித்து வரும் 31.37 ஏக்கர் பரப்பளவிலான அரசு புறம்போக்கு நிலத்தை தங்களுக்கு ஒதுக்கும்படியும், வித்தியாச தொகையும் செலுத்தத் தயாராக இருப்பதாகவும் … Read more

"அணைக்கட்டு உடையட்டும் எல்லாம் தகர்ந்து போகட்டும்" -முல்லைப்பெரியாறு பற்றி சர்ச்சை பாடல்.!

முல்லைப் பெரியாறு அணை குறித்து அவதூறு பரப்பும் வகையில் கேரளாவின் ஒரு குழுவினரால் வெளியிடப்பட்டுள்ள அனிமேஷன் பாடல் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் 136 அடியை தாண்டும்போது கேரளாவில் சர்ச்சைகளும், முல்லைப் பெரியாறு அணை குறித்த விவாதங்கள் எழுவதும் பேசுபொருள் ஆவதும் வாடிக்கையாகி வருகிறது. அந்த வகையில் தற்போது முல்லைப் பெரியாறு அணை நிரம்பி 139 அடியை நெருங்கியுள்ள நிலையில் கேரளாவைச் சேர்ந்த ஒரு குழுவினர் முல்லைப் பெரியாறு அணை … Read more

கோவை ஆனைமலை, அம்பராம்பாளையம் பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த ஆழியார் அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்து வரும் கனமழையால் பொள்ளாச்சி அருகே உள்ள 120 அடி கொள்ளளவு கொண்ட ஆழியார் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பால் அணையின் நீர்மட்டம் 117.5 அடியை எட்டியுள்ளது. மேலும் வால்பாறை, அப்பர், ஆழியாறு போன்ற பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் ஆழியார் அணைக்கு தண்ணீர் 3174 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து அப்படியே உபரி நீர் … Read more

பாலத்தின் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து.! வாலிபர் பலி

திருவள்ளூர் மாவட்டத்தில் பாலத்தின் மீது இருசக்கர வாகன மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்து உள்ளார். திருவள்ளூர் மாவட்டம் அத்திமாஞ்சேரிப்பேட்டை காந்தி தெருவை சேர்ந்தவர் பாலகுமார். இவர் வெளியகரம் அரசு மருத்துவமனையில் தற்காலிக ஊழியராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் வேலையை முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்பொழுது கர்லம்பாக்கம் அருகே இருசக்கர வாகனம் வந்தபோது, திடீரென நிலை தடுமாறி பாலத்தின் மீது மோதி கவிழ்ந்தது. இதில் பலத்த காயமடைந்த பாலகுமாரை மீட்டு … Read more

எவ்வளவு தண்ணீர் சென்றாலும் நிரம்பாத அதிசய கிணறு குறித்து ஐஐடி குழுவினர் விளக்கம்!

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே தண்ணீரை உள்வாங்கும் அதிசிய கிணற்றில் ஆய்வு நடத்திய ஐ.ஐ.டி குழுவினர், கிணற்றுக்கடியில் சுண்ணாம்பு பாறைகளால் ஆன பாதாள குகைகள் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர். கடந்தாண்டு பருவமழையின்போது அதிகளவு தண்ணீர் சென்றும் அந்த கிணறு நிரம்பாமல் இருந்தது. நவீன தொழில்நுட்ப கருவிகளுடன் 3 மாதங்களாக அப்பகுதியில் உள்ள 160 கிணறுகளில் ஐஐடி குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, குறிப்பிட்ட அந்த கிணற்றுக்கு அடியில் இருக்கும் சுண்ணாம்பு பாறைகள், பல ஆயிரம் ஆண்டுகளாக மழைநீரில் கரைந்து … Read more

மாணவியரின் வங்கிக் கணக்கில் ஒவ்வொரு மாதமும் 7-ம் தேதி ரூ.1000 – ரூ.698 கோடி ஒதுக்கியது தமிழக அரசு 

சென்னை: அரசுப் பள்ளியில் படித்து உயர் கல்வி பயிலும் மாணவியருக்கான ரூ.1000 உயர் கல்வி உதவித் தொகை ஒவ்வொரு மாதமும் 7-ம் தேதி செலுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவிகளின் உயர் கல்வி சேர்க்கையை உயர்த்த, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் மூலம் செயல்படுத்தப்படும் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதித்திட்டத்தின் கீழ் அரசுப் பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயின்று … Read more

ரஜினியின் கைக்கு போகும் அதிமுக… திமுகவை வீழ்த்த பாஜக மாஸ்டர் பிளான்?

போர் வரட்டும்… புரட்சி வெடிக்கட்டும்…என்றெல்லாம் பஞ்ச் டயலாக் பேசி, தனது ரசிகர்களை உசுப்பேத்தி அவர்களுக்கு அரசியல் ஆர்வத்தை மூட்டிய ரஜினிகாந்த், 2021 சட்டமன்ற தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்னர், தமது உடல்நிலையை காரணங்காட்டி தீவிர அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்து பல லட்சக்கணக்கான ரசிகர்களை ஏமாற்றினார். ஆளுநருடன் திடீர் சந்திப்பு: ரஜினியின் அந்த அறிவிப்புக்கு பிறகு, எல்லாரும் போய் அவங்க அவங்க பேரன்,பேத்திகளை நல்லா படிக்க வையுங்கய்யான்னு டயலாக் பேசாத குறையாக நொந்துப் போயிருந்த அவரது ரசிகர்களுக்கு … Read more