கல்லூரி நிர்வாகத்தின் மீது தமிழ்நாடு அரசு இதுவரை நடவடிக்கை எடுக்காதது ஏன்? – சீமான் கேள்வி.!

அரசு உதவிப்பெறும் சென்னை ஜெயின் கல்லூரியைத் தனியார் கல்லூரியாக மாற்றும் முயற்சியைத் தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில், “சென்னை துரைப்பாக்கத்தில் தமிழ்நாடு அரசின் உதவியுடன் இயங்கி வரும் ஜெயின் கல்லூரியைச் சுயநிதிக் கல்லூரியாக மாற்றி லாபம் சம்பாதிக்கும் நோக்கத்துடன், அக்கல்லூரி நிர்வாகம் செயல்பட்டு வருவது மாணவர்களிடமும், பெற்றோர்களிடமும் மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது.  கடந்த ஐம்பது ஆண்டுகளாக தலைநகரில் … Read more

சொத்துக்காக மனைவியை கொலை செய்த கணவன் கைது.. தீக்குளித்து தற்கொலை செய்துக் கொண்டதாக நாடகமாடியது அம்பலம்.!

விழுப்புரம் அருகே, சொத்துக்காக மனைவியை கொலை செய்துவிட்டு, அவர் தீக்குளித்து தற்கொலை செய்துக் கொண்டதாக கூறி நாடகமாடிய கணவனை போலீசார் கைது செய்தனர். புதுப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் செல்லக்கண்ணு – ஞானம்மாள் தம்பதி. இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ள நிலையில் மூவரும் திருமணமாகி வெவ்வேறு இடத்தில் வசித்து வருகின்றனர். ஞானம்மாள் பெயரில் உள்ள 1.5 ஏக்கர் நிலத்தை தனது பெயருக்கு மாற்றி எழுதி கொடுக்கும் படி செல்லக்கண்ணு கேட்டு வந்ததாகவும் அதனை கொடுக்க மறுத்த … Read more

மதுரையில் 66 ஏக்கரில் ஜல்லிக்கட்டு மைதானம் – சிறப்பு அம்சங்கள் என்ன?

சென்னை: மதுரையில் 66 ஏக்கரில் ஜல்லிக்கட்டு மைதானம் அமைப்பதற்கான மாஸ்டர் பிளான் தயாரிக்க தமிழக சுற்றுலாத்துறை முடிவு செய்துள்ளது. தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடரில் 110 விதியின் கீழ் மதுரை, அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுக்கென தனி பிரம்மாண்ட மைதானம் அமைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதைத்தொடர்ந்து அலங்காநல்லூர் பகுதியில் ஜல்லிக்கட்டு மைதானம் அமைக்கும் இடங்களை தேர்வு செய்யும் பணி தொடங்கியது. இதன்படி கீழக்கரை மற்றும் சின்ன இலந்தை குளம் ஆகிய கிராமங்களில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் … Read more

ஓபிஎஸ், இபிஎஸ் ஆதரவாளர்களிடையே கைகலப்பு, மண்டை உடைப்பு – ராமநாதபுரத்தில் பரபரப்பு

ராமநாதபுரத்தில் ஓபிஎஸ், இபிஎஸ் ஆதரவாளர் இடையே மோதல் ஏற்பட்டது. இதில், இரண்டு பேருக்கு மண்டை உடைந்து சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். ராமநாதபுரம் பேருந்து நிலையம் அருகே தனியார் திருமண மஹாலில் அதிமுகவின் ஒற்றை தலைமையை வலியுறுத்தி மாவட்ட செயலாளர் எம்.ஏ. முனியசாமி தலைமையில் அதிமுக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தின்போது ஓபிஎஸ் தரப்பை சேர்ந்த ஆதரவாளர்கள் உள்ளே புகுந்தனர். எடப்பாடி பழனிச்சாமியை ஒற்றை தலைமை கொண்டுவர தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளதாக கூறியதை அடுத்து, ஓபிஎஸ் தரப்பினர் ரகளையில் … Read more

எல்லாரும் சேலஞ்ச் பண்ணி விளையாட இது என்ன ப்ளே கிரவுண்டா? சீரியல் கலாய் மீம்ஸ்

சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் சீரியலும் ரியாலிட்டி ஷோக்களும், நாளுக்கு நாள் பரபரப்பை விறுவிறுப்பை அதிகப்படுத்தி வருகினறன. அதுமட்டுமல்லாமல் இல்லத்தரசிகள் இளைஞர்கள் அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழத்தினாலும் சில சமயங்களில் பொறுமையை ரொம்பவே சோதித்துவிடுகின்றன. ஆனால் இந்த சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்களை விடவும் இந்த நிகழ்ச்சிகள் தொடர்பான மீம்ஸ்கள் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. அரசியல் மற்றும் முக்கிய நிகழ்வுகள் பற்றி மீம்ஸ் பதிவிட்டு வந்த நெட்டிசன்கள் தற்போது சின்னத்திரை நிகழ்ச்சிகளை கையில் … Read more

வாழ்வாதாரத்தை மீட்கப் போராடும் மாற்றுத் திறனாளிகளின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் – வங்கிகளுக்கு மநீம வலியுறுத்தல்.!

வாழ்க்கையையே சவாலாகக் கொண்டு, வாழ்வாதாரத்தை மீட்கப் போராடும் மாற்றுத் திறனாளிகளின் நீண்டநாள் கோரிக்கையான எளிதில் கடனுதவி, வங்கி, ஏடிஎம் மையங்களில் சாய்தள வசதி உள்ளிட்ட கோரிக்கைகளை வங்கிகள் உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று, மக்கள் நீதி மய்யம் மாநில செயலாளர் செந்தில் ஆறுமுகம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில், “மாற்றுத் திறனாளிகளின் கூட்டமைப்பான டிசம்பர் 3 இயக்கம் சார்பில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அண்மையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டு … Read more

நடிகர் விக்ரமிற்கு லேசான நெஞ்சு வலி, அவருக்கு மாரடைப்பு இல்லை – மருத்துவமனை நிர்வாகம்

நடிகர் விக்ரமிற்கு லேசான நெஞ்சு வலி ஏற்பட்டதாகவும் அவருக்கு மாரடைப்பு இல்லை என்றும் சென்னை காவேரி மருத்துவமனை நிர்வாகம் விளக்கமளித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், விக்ரமிற்கு மருத்துவ நிபுணர்கள் மூலம் சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகவும், அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவர் விரைவில் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புவார் என்றும் மருத்துவமனை நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது. Source link

அதிமுக பொதுக்குழு கூட்ட வழக்கு: ஓபிஎஸ் – இபிஎஸ் தரப்பின் 3 மணி நேர வாதங்களின் விவரம்

சென்னை: ஜூலை 11-ம் தேதி நடைபெறவுள்ள அதிமுக பொதுக்குழுவுக்கு ஓபிஎஸ் தரப்பில் கூட்டத்திற்கு தடை விதிக்க கோரியும், இபிஎஸ் தரப்பில் வழக்கை தள்ளுபடி செய்யக் கோரியும் மூன்று மணி நேரம் வாதிடப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, வழக்கின் தீர்ப்பை வரும் திங்கட்கிழமைக்கு (ஜூலை 11) ஒத்திவைத்து உத்தரவிட்டார். சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்திருந்த மனுவில், "பொதுக்குழு கூட்டத்திற்கு 15 நாட்களுக்கு முன்பாக அழைப்பு விடுக்க வேண்டும். … Read more

செங்கல்பட்டு அருகே லாரி மீது பேருந்து மோதி விபத்து – 2 பெண்கள் உட்பட 6 பேர் பலி

செங்கல்பட்டு அருகே லாரி மீது பேருந்து மோதிய விபத்தில் 2 பெண்கள் உட்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

பொன்னியின் செல்வன் பங்க்ஷன் ரவுண்ட் அப்

தமிழ் சினிமா மட்டுமில்லாமல் இந்திய சினிமா உலகமே ஆவலுடன் எதிர்பார்த்திருந்த இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம், செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், வெள்ளிக்கிழமை மாலை பொன்னியின் செல்வன் படத்தின் டீசர் வெளியானது. எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ நாவலை அடிப்படையாகக் கொண்டு இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் இரண்டு பாகங்களாக தயாராகி உள்ளது. பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாராகி வரும் இந்த திரைப்படத்தை … Read more