முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் மருத்துவமனையில் இருந்து இன்று வீடு திரும்புகிறார்.?

கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இன்று வீடுதிரும்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இன்று வீடுதிரும்ப உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த 4 நாட்களாக சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.  கடந்த 18 … Read more

சின்னசேலம் மாணவி உடலை வாங்க பெற்றோர் மறுப்பு – உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை

கள்ளக்குறிச்சி: சின்னசேலம் தனியார் பள்ளியில் உயிரிழந்த மாணவியின் உடலை வாங்க பெற்றோர் மறுப்புத் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, மாணவியின் உடலைப் பெற்றுக் கொள்ளுமாறு அவரது வீட்டில் வருவாய்த் துறையினர் நோட்டீஸ் ஒட்டியுள்ளனர். இதற்கிடையில், பெற்றோர் தரப்பு உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு தொடர்பாக இன்று (ஜூலை 21) விசாரணை நடைபெறுகிறது. கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்த ராமலிங்கத்தின் 16 வயதான மகள், சின்னசேலம் அடுத்த கனியாமூரில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். … Read more

அதிமுக தலைமை அலுவலக சாவி இபிஎஸ் வசம் – உயர் நீதிமன்ற தீர்ப்பை மேல்முறையீடு செய்யும் ஓபிஎஸ் தரப்பு

சென்னை: சீல் வைக்கப்பட்டுள்ள அதிமுக அலுவலகத்தின் சாவியை, இபிஎஸ் வசம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டுள்ள உயர் நீதிமன்றம், ஒரு மாதத்துக்கு தொண்டர்களை கட்சி அலுவலகத்துக்குள் அனுமதிக்கக் கூடாது என நிபந்தனை விதித்துள்ளது. ஒற்றைத் தலைமை விவகாரம் தொடர்பாக கடந்த 11-ம் தேதி அதிமுக பொதுக்குழுக் கூட்டம் நடந்தபோது, ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகம் முன் ஓபிஎஸ்-இபிஎஸ் ஆதரவாளர்கள் மோதிக் கொண்டனர். இதையடுத்து, கட்சி அலுவலகத்துக்கு கோட்டாட்சியர் சீல் வைத்தார். அலுவலகத்துக்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக் கோரி ஓபிஎஸ்-இபிஎஸ் … Read more

'தேர்தலில் வெற்றிப்பெற கூப்பனும் பணமும் முக்கியம்.. ஆனால்' – நத்தம் விஸ்வநாதன் பேச்சு

“வரும் காலங்களில் தேர்தலில் வெற்றி பெற கூப்பன்கள் மற்றும் பணம் வழங்குதல் முக்கியம்தான். ஆனாலும் பணம் மட்டுமே வெற்றியை தேடி தராது” என்று திண்டுக்கல்லில் நடைபெற்ற அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில், அதிமுக துணை பொதுச்செயலாளர் நத்தம் விஸ்வநாதன் பேசிய சர்ச்சை பேசால் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல் – நத்தம் சாலையில் உள்ள அதிமுக மாவட்ட தலைமை அலுவலகத்தில் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டம் அதிமுகவின் கழக துணை பொது செயலாளராக … Read more

காவிரியில் கரைபுரளும் வெள்ளம்: தடுப்புச் சுவர்களுக்கு ஆபத்து

க.சண்முகவடிவேல், திருச்சி மேட்டூரில் இருந்து 1 லட்சம் கனஅடிக்கும் மேல் காவிரியில் தண்ணீர் திறந்து விடப்பட்டிருப்பதால் திருச்சி, நாமக்கல் மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு விவசாய நிலங்கள், குடியிருப்பு பகுதிகளை தண்ணீர் சூழந்திருக்கின்றது. மேலும் முக்கொம்புவில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டிருப்பதால் இருகரை தொட்டு தண்ணீர் ஆர்ப்பரிக்கின்றது. இதனால் கொள்ளிடம் கரையோரங்களில் வசித்து வந்தவர்கள் பாதிப்படைந்திருக்கின்றனர். மேலும், ஸ்ரீரங்கம் தாத்தாச்சாரியார் தோப்பு கிழக்கு பகுதி காவிரி அற்றில் 2010-ல் நபார்டு நிதி உதவியின் கீழ் கட்டப்பட்ட … Read more

சொத்து தகராறு.. அண்ணியை ஓட ஓட வெட்டிய கொழுந்தனார்.. கடலூரில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!

சொத்து பிரச்சனையால் பெண்ணை அரிவாளால் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம், நாவலூர் கிராமத்தை சேர்ந்தவர் காவேரி. அவரது கணவர் இறந்துவிட்டதால் குழந்தைகளுடன் தனியே வசித்து வருகிறார். இவருக்கும் அவரது கணவரின் சகோதரருக்கும் இடையே தகராறு இருந்துள்ளது. இந்நிலையில், சம்பவதன்று சொத்து பிரச்சனை தொடர்பாக இருவருக்கும் இடையில் மீண்டும் தகராறு ஏற்பட்டது. ஒருகட்டத்தில் வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது. இதனால், அங்கிருந்த அரிவாள் மனையால் சுப்ரமணியன் அண்ணி காவேரியை ஓட ஓட வெட்டியுள்ளார், அவரை மீட்ட … Read more

நடிப்பிற்கோர் நடிகர் திலகம்!

இன்று, நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 21வது நினைவுநாள்…. வசன உச்சரிப்பாலும், முகபாவனையாலும் ஈடுஇணையற்ற நடிகராகத் திகழ்ந்து, உணர்வுப்பூர்வமான நடிப்பால் சிகரம் தொட்டவரைப் பற்றிய ஒரு செய்தித் தொகுப்பு.. 1952 ல் அறிமுகமான முதல் திரைப்படமான பராசக்தியில் கலைஞர் கருணாநிதியின் கைவண்ணத்தில் உருவான வசனங்களுக்கு தன்னுடைய சிறப்பான வசன உச்சரிப்பால் உயிர் கொடுத்தவர் சிம்மக்குரலோன் சிவாஜி கணேசன்.! அபார ஞாபகசக்தியால் மிக நீண்ட வசனங்களையும் ஒரே மூச்சில் பேசும் வல்லமை படைத்தவராகத் திகழ்ந்தார் சிவாஜி… திருவிளையாடல், கந்தன்கருணை … Read more

தமிழகத்தில் 12 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்

சென்னை: உளவுத்துறை ஐஜி ஆசியம்மாள் உட்பட 12 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து உள்துறை செயலர்கே.பணீந்திரரெட்டி வெளியிட்ட அறிவிப்பு: மத்திய அரசு பணியில் இருந்து மாநில அரசு பணிக்கு திரும்பி, காத்திருப்போர் பட்டியலில் இருந்த கே.ஏ.செந்தில்வேலன், உளவுத்துறை ஐஜியாகவும், அப்பதவியில் இருந்த என்.இசட்.ஆசியம்மாள் சென்னை அமலாக்கப் பிரிவு ஐஜியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். சென்னை பூக்கடை துணை ஆணையர் எஸ்.மகேஸ்வரன் மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் கண்காணிப்பாளராகவும், சென்னை போக்குவரத்து துணை ஆணையர்(வடக்கு) ஆல்பர்ட் ஜான் பூக்கடை … Read more

Tamil News Live Update: குடியரத் தலைவர் தேர்தல்.. வெல்லப் போவது யார்?

Go to Live Updates Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது. Tamil News Latest Updates குரூப்-1 போட்டித் தேர்வு அறிவிப்பு துணை ஆட்சியர், டி.எஸ்.பி. உள்ளிட்ட 92 காலி பணியிடங்களுக்கான குரூப்-1 போட்டித் தேர்வு அறிவிப்பு வெளியானது. டிஎன்பிஎஸ்சி  அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இன்று முதல் … Read more