தமிழகம் முழுவதும் 76 டிஎஸ்பிக்கள் பணியிட மாற்றம்: டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவு

சென்னை: தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பணிபுரியும் டிஎஸ்பிக்கள் 76பேரை பணியிட மாற்றம் செய்துடிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது. சென்னை பொருளாதார குற்றப்பிரிவில் பணிபுரியும் சம்பத், ராமநாதபுரம் நில மோசடி தடுப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். சேலம் மாவட்டத்தில் பணிபுரிந்த ஆல்பர்ட், திருச்சி மாவட்டநில மோசடி தடுப்பு பிரிவுக்கும், தென்காசி மாவட்டம் புளியங்குடியில் பணிபுரிந்த கணேஷ், கன்னியாகுமரி மாவட்டம் தக்கலைக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதேபோல, தூத்துக்குடி மாவட்டம் மணியாச்சியில் பணிபுரியும் சங்கர், திருநெல்வேலி … Read more

விவசாயத்தை மையமாக வைத்து மோடி தலைமையில் ராம ராஜ்ஜியம் அமையும் – அண்ணாமலை

விவசாயத்தை மையமாக வைத்து இந்தியாவில் மோடி தலைமையிலான ராம ராஜ்ஜியம் அமையும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். விவசாயிகள் வாழ்வுரிமை மாநாடு கடந்த மூன்று நாட்களாக சேலத்தில் நடைபெற்று வந்தது. இந்த மாநாட்டின் நிறைவு விழாவில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பங்கேற்றார். அப்போது பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசும்போது… விவசாயம் செய்து பிழைக்க முடியாது என்று கருதிக் கொண்டிருந்த நேரத்தில் கடந்த எட்டு ஆண்டுகளில் விவசாயம் செய்து பிழைக்க முடியும் என்ற … Read more

Tamil News Live Update: செஸ் ஒலிம்பியாட்.. அஜர்பைஜான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பிரக்ஞானந்தா வெற்றி

Go to Live Updates Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது. Tamil News Latest Updates செஸ் ஒலிம்பியாட் செஸ் ஒலிம்பியாட் 9ம் சுற்றில், அஜர்பைஜான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தமிழக வீரர் பிரக்ஞானந்தா வெற்றி பெற்றார். சர்வதேச கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற பிரனவ் … Read more

சுதந்திர தினத்தை முன்னிட்டு வீடுகளில் ஏற்ற தேசிய கொடியை வழங்கினார் மாவட்ட ஆட்சியர்.!

சுதந்திர தினத்தை முன்னிட்டு வீடுகளில் கொடியேற்ற தேசிய கொடியை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். நாடு முழுவதும் வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதி 75-வது சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அனைத்து வீடுகளிலும் தேசிய கொடியை ஏற்றுமாறு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.  இந்த நிலையில் தேசியக்கொடி ஏற்றுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சிவகங்கை மாவட்டம் கீழப்பூங்கொடி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு தேசியக்கொடி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் கலந்து கொண்டு … Read more

பழுது நீக்குவதற்காக முதல்முறையாக அமெரிக்க கப்பல் சென்னை வருகை

சென்னை: பழுது நீக்குவதற்காக முதல்முறையாக அமெரிக்க கடற்படை கப்பல் சென்னை அடுத்த காட்டுப்பள்ளிக்கு வந்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம் காட்டுப்பள்ளியில் எல் அண்டு டி கப்பல் கட்டுமான நிறுவனம் உள்ளது. தற்போது, இந்தியா – அமெரிக்கா இடையே செய்யப்பட்ட ஒப்பந்த அடிப்படையில், அமெரிக்ககடற்படையைச் சேர்ந்த சார்லஸ் டிரியூ என்ற கடற்படை சரக்குக் கப்பல் பழுது மற்றும் பராமரிப்பு சேவைக்காக, முதல்முறையாக நேற்று இங்கு வந்தது. இக்கப்பலை எல் அண்டு டி துறைமுகத்தில், மத்திய பாதுகாப்புத் துறை செயலர் அஜய்குமார் … Read more

ஆடல் பாடல் நிகழ்ச்சியில் பாம்பு வித்தை காட்டிய பாம்பாட்டி கைது

ஓட்டப்பிடாரம் அருகே கோவில் திருவிழாவில் நடந்த ஆடல் பாடல் நிகழ்ச்சியில் பாம்பு வித்தை காட்டியதாக பாம்பட்டி கைது செய்யப்பட்டார். தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள எஸ்.குமாரபுரம் கிராமத்தில் கடந்த மாதம் 7ஆம் தேதி காளியம்மன் கோயில் கொடை விழா நடந்தது. கொடை விழாவில் ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் நடந்தன. இந்த நிகழ்ச்சியில் பாம்பு பிடி வீரர் நல்ல பாம்பை வைத்து வித்தை காட்டினார். அப்போது அதை செல்போனில் வீடியோ எடுத்த நபர், சமூக வலைதளங்களில் பதிவிட்ட … Read more

உளுந்து அரைக்க வேண்டாம்: 15 நிமிடத்தில் மொறு மொறு மெதுவடை

உளுந்து சேர்க்காமல் எப்படி வடை செய்வது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.   வெங்காயம், மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவை போட்டு அதனுடன் ரவை, தயிர், பச்சரிசி மாவு, தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து ஒன்றரை கப் அளவிற்கு தண்ணீர் விட்டு கெட்டியாக இல்லாமல் கலந்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த கலவையுடன் பச்சை மிளகாய், வெங்காயம், இஞ்சி துருவல், மிளகைத் தூளாக இல்லாமல் இடித்து சேருங்கள். அதனுடன் சீரகத்தை … Read more

தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் இடங்களில் நடந்த 33-வது முகாமில் 16.86 லட்சம் பேருக்கு தடுப்பூசி

சென்னை: தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் இடங்களில் நடந்த 33-வது சிறப்பு மெகா முகாமில் 16.86 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டது. சென்னையில் மட்டும் 2 ஆயிரம் இடங்களில் முகாம் அமைத்து தடுப்பூசி போடப்பட்டது. இந்தியாவில் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, தடுப்பூசி போடும் பணி கடந்த2021 ஜனவரி 16-ம் தேதி தொடங்கியது. தற்போது 12 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்படுகிறது. 2 தவணைதடுப்பூசி போட்டு 6 மாதம் நிறைவடைந்தவர்களுக்கு பூஸ்டர் … Read more

Today Rasi Palan 08th August 2022: இன்றைய ராசிபலன்

Rasipalan 08th August 2022, Monday ராசிபலன் ஆகஸ்ட் 08 திங்கள்கிழமை 2022: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம். Today Rasi Palan 08th August 2022: இன்றைய ராசி பலன், ஆகஸ்ட் 08ம் தேதி 2022ராசி … Read more

2047-ம் ஆண்டு உலக நாடுகளை இந்தியா வழிநடத்தும்.. மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்.!

ஓலம் என்கிற தலைப்பிலான காணொளி வெளியீட்டு விழா சென்னை அரும்பாக்கம் டி.ஜி. வைஸ்ணவா கல்லூரியில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மத்திய செய்தி மற்றும் தகவல் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் பேசியதாவது, உலகின் தலை சிறந்த நாடாக இந்தியா உள்ளது. குறிப்பாக கடந்த 8 ஆண்டுகளில் இந்த நாடு அடைந்துள்ள வளர்ச்சியை அனைவரும் கண்கூடாக காண முடியும். ஆங்கிலேயர்களுக்கு எதிராக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட சுதேசி கப்பலை இயக்கிவர் வ.உ. சிதம்பரனார். அவரது தற்சார்பு … Read more