#திருவண்ணாமலை || மனமுடைந்த கணவர் தூக்கு போட்டு தற்கொலை.!

திருவண்ணாமலை மாவட்டத்தில் மனமுடைந்த கணவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். திருவண்ணாமலை மாவட்டம் மாமண்டூர் காலனி பகுதியை சேர்ந்தவர் லாரி ஓட்டுநர் ரவிச்சந்திரன்(48). இவரது மனைவி குமாரி. இவர்களுக்கு மூன்று மகள்கள் உள்ளனர். இந்நிலையில் உறவினருக்கு திருமணம் என்பதால் நகை வாங்குவதற்கு நேற்று மனைவி குமாரி ஆரணிக்கு சென்றுள்ளார். அப்பொழுது ரவிச்சந்திரன் நாளும் வருகிறேன் என்று கூறியுள்ளார். ஆனால் மனைவி குமாரி நீங்கள் வர வேண்டாம் என்று கூறிவிட்டு சென்றுள்ளார். இதனால் மனம் உடைந்த ரவிச்சந்திரன் … Read more

 வேறுவேறு செல்ஃபோன்களை காட்டச்சொல்லி செல்ஃபோனை திருடிக்கொண்டு ஒருவன் ஓடிய திருடன்.!

திருப்பூர் – பல்லடம் சாலையில் உள்ள செல்ஃபோன் விற்பனை கடை ஒன்றில், செல்ஃபோன் வாங்குவது போல் நடித்து ஊழியரை திசை திருப்பி 10 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான செல்ஃபோனை திருடிக்கொண்டு ஒருவன் ஓடிய காட்சிகள் சிசிடிவி கேமிராவில் பதிவாகி உள்ளன. விக்னேஷ் என்பவருக்கு சொந்தமான கடையில் நேற்று மாலையில் அரங்கேறிய இந்த திருட்டு தொடர்பாக வீரபாண்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.      Source link

சிறுவாணி அணை மற்றும் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை – 20.07 அடிக்கு நீர்மட்டம் உயர்வு

கோவை: சிறுவாணி அணை மற்றும் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. இன்றைய (ஜூலை 7-ம் தேதி) நிலவரப்படி அணையில் 20.07 அடிக்கு நீர் இருப்பு உள்ளது. கோவை மாவட்டத்தின் முக்கிய நீராதாரமான சிறுவாணி அணை கேரள மாநிலத்தின் பாலக்காட்டில் மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 863.40 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இந்த அணையில் 49.50 அடி வரை நீரைத் தேக்க முடியும். ஆனால், அணையின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு கேரள … Read more

ஓ.பி.எஸ் வழக்கு: வெள்ளிக் கிழமைக்கு ஒத்திவைப்பு; இ.பி.எஸ் பதில் அளிக்க உத்தரவு

சென்னையில் ஜூலை 11ஆம் தேதி நடைபெறவிருக்கும் அதிமுக பொதுக்குழுக் கூட்டத்துக்கு தடை விதிக்கக் கோரி ஓ. பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை சென்னை உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைத்துள்ளது. மேலும், அடுக்கடுக்கான கேள்வி எழுப்பிய நீதிபதி, இ.பி.எஸ் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளார். அதிமுகவில் ஒற்றைத் தலைமை தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் – எடப்பாடி பழனிசாமி இடையே மோதல் ஒவ்வொரு நாளும் உச்ச கட்டத்தை அடைந்து வருகிறது. ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் இருவரும் சட்டப் … Read more

#ஓசூர் || இரு சக்கர வாகனம் லாரி மோதி விபத்து.. கணவன் மனைவி பரிதாப பலி..!

இரு சக்கர வாகனம் மீது லாரி மோதியதில் கணவன் மனைவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம். ஓசூரை சேர்ந்தவர் அன்பு. இவர் தன் மனைவி மற்றும் 4 மாத குழந்தையுடன் ஐங்குந்தம் பகுதிக்கு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது சாமல்பள்ளம் என்ற பகுதியில் அவர்கள் சென்று கொண்டிருந்த போது  எதிர்பாராத விதமாக  லாரி ஒன்று சாலையை கடக்க முயன்றதால் , அன்புவின் இரு சக்கர வாகனத்திற்கு பின்னால் வந்த லாரி இருசக்கர … Read more

ப்ரி மெட்ரிக் கல்வி உதவித் தொகைத் திட்டத்திற்கான புதிய வழிகாட்டுதல் வெளியீடு.!

மத்திய அரசு கொண்டுவந்த மாற்றங்களின் அடிப்படையில் ப்ரி மெட்ரிக் கல்வி உதவித் தொகைத் திட்டத்திற்கான புதிய வழிகாட்டுதல்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன் படி, 9 மற்றும் 10ஆம் வகுப்பில் பயிலும் ஆதிதிராவிட மாணவர்களும், 1 முதல் 10ஆம் வகுப்பு வரை பயிலும் சுகாதார பணியாளர்களின் பிள்ளைகளும் உதவித்தொகை பெற தகுதியடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மாணவர்கள் தொலைபேசி எண்ணை ஆதாருடன் இணைக்க வேண்டும் என்றும் ஆதாருடன் இணைந்த வங்கிக்கணக்குக்கே கல்வி உதவித்தொகை அனுப்பி வைக்கப்படும் என்றும் … Read more

குள்ளஞ்சாவடி அருகே டிரான்ஸ்பார்மரில் மோதி எரிந்த  தனியார் பேருந்து – நல்வாய்ப்பாக உயிர் தப்பிய பயணிகள்

கடலூர்: கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே தனியார் பேருந்து டிரான்ஸ்பார்மரில் மோதி எரிந்து விபத்துக்குள்ளானது. நல்வாய்ப்பாக பேருந்தில் இருந்த பயணிகள் உயிர் தப்பினர். எனினும், இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியது. கடலூரில் இருந்து இன்று (ஜூலை 7) இரவு 7 மணி அளவில் தனியார் பேருந்து ஒன்று 30 பயணிகளுடன் விருத்தாச்சலம் புறப்பட்டு சென்றது. பேருந்து குள்ளஞ்சாவடி அருகே உள்ள பெரிய காட்டு சாலை பகுதியில் சென்று கொண்டிருந்தபோது எதிரே பைக்கில் … Read more

சென்னையில் காற்று மாசு அளவு எவ்வளவு? கூடியதா குறைந்ததா?

இந்தியாவில் காற்று மாசு அதிகம் ஏற்படும் 10 நகரங்களில் ஒன்றான சென்னையில் இந்தாண்டு காற்றின் தரம் அதிகரித்துள்ளது. சிக்காகோ பல்கலைக்கழகத்தின் ஆற்றல் கொள்கை நிறுவனம் இந்தியாவில் காற்று மாசுபாடு காரணமாக, சராசரி ஆயுளில் டெல்லியில் வசிப்பவர்களுக்கு 10 வருடமும் நாட்டின் மற்ற பகுதிகளில் வசிப்பவர்களுக்கு 5 வருடமும் குறைவதாகவும் ஆய்வில் கண்டறிந்துள்ளது. இதற்கிடையே தேசிய சுத்தமான காற்று திட்டம் (National clean air programme) மூலம் இந்திய அரசு காற்று மாசுபாடு குறித்து மக்களுக்கு விழிப்புணர்வும், காற்றில் … Read more

எறையூரில் 350 ஏக்கர் நிலம்… நரிக் குறவர்களுக்கு பட்டா கிடைக்குமா?

க.சண்முகவடிவேல், திருச்சி பெரம்பலூர் மாவட்டம், எறையூரில் நரிக்குறவர்கள் சமூகத்தினர் சாகுபடி செய்து வரும் நிலத்துக்கு பட்டா வழங்கக்கோரி நரிக்குறவர்கள் நலச் சங்கத்தினர் திருச்சியில் அமைச்சர்களிடம் மனு அளித்துள்ளனர். இதனால், அவர்களுக்கு எறையூரில் 350 ஏக்கர் நிலம் பட்டா கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவரும், சீர் மரபினர் அமைப்பின் பொறுப்பாளருமான அய்யாக்கண்ணு தலைமையில் நரிக்குறவர் நல சங்க தலைவர் கணேசன், செயலாளர் நம்பியார், பொருளாளர் பாபு ஆகியோர் இன்று திருச்சி … Read more

காளி ஆவணப்படம் ஒளிபரப்பப்பட மாட்டாது – மன்னிப்பு கேட்டு கனடா நாட்டு இஸ்லாமிய கலை மற்றும் கலாச்சாரத்தை பரப்பி வரும் ஆகா கான் அருங்காட்சியகம் அறிக்கை.!

கனடா நாட்டின் டொரன்டோ நகரில் ‘ஆகா கான்’ அருங்காட்சியகம் அமைந்துள்ளது. இதன் முக்கிய செயல் இஸ்லாமிய கலை மற்றும் கலாச்சாரத்தை பரப்பி வருவதுதான்.  இந்நிலையில், இந்த ‘ஆகா கான்’ அருங்காட்சியகத்தில் டொரன்டோ மெட்ரோ பாலிடன் பல்கலைக்கழகத்தின் பல்வேறு இன, கலாச்சார பின்னணி உடைய மாணவர்கள் தயாரித்த 18 ஆவணப்படங்களை ஒளிபரப்ப திட்டமிடப்பட்டது. அதன்படி, தமிழகத்தைச் சேர்ந்த லீனா மணிமேகலையின் (கனடாவில் வசித்து வருபவர்) ‘காளி’ என்ற ஆவணப்படமும் இடம்பெற்றது. இந்த படத்தில் இந்து கடவுளை இழிவுபடுத்தும் வகையில் … Read more