புதுவை சட்டசபையில் திமுக, காங். வெளிநடப்பு

புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபையில் இன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது திமுக எம்எல்ஏ சம்பத் பேசுகையில், ‘ஆளுநர் உரையை கேட்பதற்கு இனிமையாக இருந்தது. ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது என்பது போல் தான் ஆளுநரின் உரை இருந்தது. என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக கூட்டணி ஆட்சிக்கு வந்தால், மத்தியில் இருந்து நிதி கிடைக்கும் என மக்களிடம் வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்தார்கள். ஆனால் எந்த நிதியும் வரவில்லை.என்றார். அப்போது அமைச்சர் சாய் ஜெ சரவணன்குமார் குறுக்கிட்டு கூட்டணியில் இருப்பதால் … Read more

சேலம்: சொகுசு பேருந்தில் பயங்கரமாக மோதிய ஆம்னி கார்… சிறுமி உட்பட 6 பேர் பரிதாபமாக பலி

ஆத்தூர் அருகே சொகுசு பேருந்தின் மீது ஆம்னி கார் மோதிய விபத்தில் சிறுமி உட்பட ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். துக்க நிகழ்வுக்கு சென்ற போது விபத்து நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. சேலம் மாவட்டம், ஆத்தூர் கிரைன் பஜார் பகுதியை சேர்ந்த ஆட்டோ மெக்கானிக்கான ஆறுமுகம் என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன் உயிரிழந்தார். இவருடைய 30 வது நாள் காரியத்திற்காக உறவினர்கள் அவரது வீட்டிற்கு சென்றுள்ளனர். அவர்கள் சென்ற காரை ராஜேஷ் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். கார் சேலம் … Read more

வீடு கட்டும் திட்டத்தில் காமராஜர் பெயர் நீக்கம்: புதுச்சேரி பேரவையில் திமுக – பாஜக கடும் வாக்குவாதம்

புதுச்சேரி: வீடு கட்டும் திட்டத்தில் காமராஜர் பெயரை நீக்கியதற்கு திமுக எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து பாஜகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் புதுச்சேரி சட்டப்பேரவையில் பரபரப்பு ஏற்பட்டது. 2022-23ம் ஆண்டுக்கான் புதுச்சேரி நிதிநிலை அறிக்கையை அம்மாநில முதல்வரும், நிதியமைச்சருமான ரங்கசாமி நேற்று தாக்கல் செய்தார். பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் நாளான இன்று கேள்வி நேரம் நடைபெற்றது. அதில் பேசிய திமுக சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் “கல் வீடு கட்டும் திட்டம் காமராஜர் பெயரில் இருந்தது. தற்போது இத்திட்டத்தை பிரதம மந்திரி … Read more

ஓ.பன்னீர்செல்வம் கையில் அதிமுக – எடப்பாடி பழனிசாமி அப்செட்!

அணியில் உள்ள மாவட்ட செயலாளர்கள், பக்கம் தாவ இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த ஜூலை மாதம் 11 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக, ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கில், அண்மையில் தீர்ப்பு அளித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன், இடைக்காலப் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டது செல்லாது என்றும், அதிமுகவில் ஜூன் மாதம் 23 ஆம் தேதி இருந்த நிலையே தொடரும் என்றும் தீர்ப்பு அளித்தார். இந்த தீர்ப்பு, எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு … Read more

நாடு முழுவதும் நடைபயணம் செய்து காந்திய கொள்கையை பரப்பி வரும் கருப்பையா

திருப்பதி: தேசப்பிதா மகாத்மா காந்தியின் அகிம்சை, கொள்கை, நாட்டின் ஒற்றுமையை உட்பட பல கருத்துக்களை வலியுறுத்தி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நாடு முழுவதும் சைக்கிள் பயணம் மற்றும் நடைபயணம் மேற்கொண்டு வரும் காந்தியவாதியான எம் கருப்பையாவைப் பற்றி தெரிந்துக்கொள்ளுவோம். அகில இந்திய காந்திய இயக்கத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் செயலாளராகப் பணிபுரியும் மதுரையைச் சேர்ந்த கருப்பையா 1992 ஆம் ஆண்டு சைக்கிள் மற்றும் நடைபயணம் பயணத்தைத் தொடங்கி இதுவரை 97,000 கி.மீ. தூரம் கடந்துள்ளார். 2000 ஆம் … Read more

2021 – ஆம் ஆண்டு தொழிற்பயிற்சி நிலைய பயிற்சியாளர் சேர்க்கை அறிவிப்பு: மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்த்தி

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் புதியதாக துவங்கியுள்ள ஓரகடம் (சிப்காட் தொழிற் பூங்கா) அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்திற்கு 100% சேர்க்கை மேற்கொள்ளும் பொருட்டு 24.06.202 முதல் 20,07.2022 வரை முதற்கட்ட கலந்தாய்வு நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து ஏற்பட்ட காலியிடங்களை நிரப்பிடும் பொருட்டு 18.08.202 முதல் 23.08.2022 வரை இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடைபெறவுள்ளது. எனவே பயிற்சியில் சேர விரும்பும் மாணவர்கள் உரிய சான்றிதழ்களுடன் அரசினர் தொழிற் பயிற்சி நிலையம், ஓரகடம், சேர்க்கை உதவி மையத்தினை அணுகவும் என்று … Read more

புரட்டாசி மகாளய அமாவாசை – மதுரையிலிருந்து காசிக்கு விமான சுற்றுலா!

புரட்டாசி மாதம் மகாளய அமாவாசையை முன்னிட்டு மதுரையில் இருந்து காசிக்கு விமான சுற்றுலா செல்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் மதுரையிலிருந்து பல்வேறு ஆன்மீக சுற்றுலாக்களை நடத்தி வருகிறது. தற்பொழுது புரட்டாசி மகாளய அமாவாசையை முன்னிட்டு மதுரையிலிருந்து கயா, வாரணாசி மற்றும் அலகாபாத் போன்ற ஆன்மிகத் தலங்களுக்கு விமானம் மூலம் சுற்றுலா நடத்த இருக்கிறது. இந்த 6 நாட்கள் சுற்றுலா, செப்டம்பர் 24 அன்று மதுரையில் இருந்து துவங்குகிறது. விமான கட்டணம் … Read more

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியை சீரமைக்க கோரிய வழக்கு: 10 நாட்களில் முடிவெடுக்க ஆட்சியருக்கு உத்தரவு

சென்னை: கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவியின் மரணத்தையடுத்து சூறையாடப்பட்ட பள்ளியை சீரமைக்கவும், பள்ளியை மீண்டும் திறக்கவும் அனுமதி கோரி அளிக்கப்பட்ட மனு மீது 10 நாட்களுக்குள் முடிவெடுக்க மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் மாணவி மரணமடைந்ததைத் தொடர்ந்து கடந்த ஜூலை 17-ம் தேதி அப்பள்ளி வளாகத்துக்குள் புகுந்த போராட்டக்காரர்கள் பள்ளியை அடித்து நொறுக்கி சூறையாடினர். இந்த கலவரத்தை தொடர்ந்து பள்ளி மூடப்பட்டு யாரும் நுழையக் கூடாது என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. … Read more

விலைவாசி உயர்வு அனைவருக்கும் பொதுதானே! -அப்போ அரசு ஊழியர்களுக்கு மட்டும் ஏன் அகவிலைப்படி ?

அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வை கருத்தில் கொண்டு மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு இருமுறை அகவிலைப்படி உயர்வு அளிக்கப்பட்டு வருகிறது. இதன்படி, ஆகஸ்ட் 15 ஆம் தேதி நாட்டின் 75 ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்தின்போது தமிழக அரசு ஊழியர்ககள் மற்றும் ஆசிரியர்களுக்கு இனிப்பான செய்தியாக இருக்கட்டுமே என்று அகவிலைப்படி 3 %அதிகரிக்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். முதல்வரின் இந்த அறிவி்ப்பை அடுத்து அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்து 31% ஆக இருந்து வந்த DA … Read more

ஆர்டர்லி முறையை 4 மாதங்களில் ஒழிக்க வேண்டும் : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

காவல்துறையில் பணியாற்றும் மாணிக்கவேல் என்பவர், வேறு இடத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டதால், காவலர் குடியிருப்பில்  ஒதுக்கப்பட்ட வீட்டை காலி செய்யும்படி 2014-ம் ஆண்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதை எதிர்த்து மாணிக்கவேல் தொடர்ந்த வழக்கை விசாரித்த  நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், காவல்துறை உயர் அதிகாரிகளின் வீடுகளில் ஆர்டர்லி, வாகனங்களில் கருப்பு ஸ்டிக்கர், சொந்த வாகனங்களில் அரசு முத்திரை பயன்படுத்தப்படுவது போன்ற விவகாரங்கள் குறித்து விசாரித்தார் . டிஜிபி கடந்த வாரம் தாக்கல் செய்த அறிக்கையில், ஆர்டர்லி முறையை ஒழிக்க தமிழக அரசு … Read more