எடப்பாடி டீமின் எட்டப்பன்… அந்த 2 பேரை வச்சு ஓபிஎஸ் போடும் புது திட்டம்?

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் அதிமுக கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமியின் முதலாமாண்டு திதி நாள் இன்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி தலைவர்கள் பலரும் நேரில் வந்து மரியாதை செலுத்தினர். அந்த வகையில் சென்னை மேற்கு மாவட்ட செயலாளரும், ஓபிஎஸ் ஆதரவாளருமான கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி பெரியகுளம் வந்திருந்தார். அவர் மரியாதை செலுத்திய பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசுகையில், தர்மயுத்தம் நடத்திய ஓபிஎஸ் அவர்களை நயவஞ்சகமாக கூட்டு சேர்த்து பின்னர் காலை வாரி விட்டுள்ளார் . ஓபிஎஸ் உடன் … Read more

ஊத்துக்குளி வெண்ணை தொழிலுக்கு வந்த சிக்கல்

உலக புகழ்பெற்று விளங்கும் ஊத்துக்குளி வெண்ணை உற்பத்திக்கு தேவையான எருமைப் பாலுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்ப்பட்டு வருவதால்,வெண்ணை உற்பத்தி தொழிலே அழிந்து வருவதாக ஊத்துக்குளி வெண்ணை உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் பாரம்பரியமான வெண்ணை உற்பத்திக்கு பெரும் பங்காற்றி வந்த எருமைகளை விவசாயிகள் வளர்ப்பதை குறைத்தும், வளர்க்கும் எருமைகளை விற்பது அதிகரித்து வருவதால், ஊத்துக்குளியின் பெயரை உலக புகழ்பெற வைக்க காரணமாக இருந்த எருமை வெண்ணை உற்பத்தி முழுவதுமாக அழியும் நிலையை எட்டி உள்ளது. திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியில் … Read more

மருத்துவத்துறையில் பணியாற்றும் ஜோடியின் திருமணம்: திருமணத்திற்கு மாத்திரை அட்டை வடிவில் திருமண அழைப்பிதழ்..

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் மருத்துவத்துறை ஜோடியின் திருமணத்திற்கு மாத்திரை அட்டை வடிவில் திருமண அழைப்பிதழ் வடிவமைத்துள்ளனர். வேட்டவலம், திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் பாரதி தெருவைச் சேந்தவர் எழிலரசன் முதுநிலை மருந்தியல் பட்டதாரி இவர் திருவண்ணாமலை தனியார் மருந்தியல் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் அதே தெருவைச் சேர்ந்த வசந்தகுமாரி முதுநிலை செவிலியர் ஆகிய இருவருக்கும் செப்டம்பர் மாதம் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இவர்கள் இருவரும் மருத்துவம் சார்ந்த துறையில் பணியாற்றுவதால் அந்த துறை சார்ந்து தங்களின் … Read more

Tamil news today live: சிபிஐ மூலம் எதிர்க்கட்சிகளை முடக்குகிறது மத்திய அரசு – அரவிந்த் கெஜ்ரிவால்

Go to Live Updates பெட்ரோல் டீசல் விலை பெட்ரோல் டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை.  சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63-க்கும், டீசல் விலை ரூ.94.24-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சையில் தவறு இல்லை முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சையில் தவறு இல்லை என எய்ம்ஸ் மருத்துவக்குழு ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் 3 பக்க அறிக்கையை அளித்துள்ளது. மருத்துவர் சந்தீப் சேத் தலைமையிலான 7 பேர் கொண்ட எய்ம்ஸ் மருத்துவக்குழு … Read more

ரூ.5 கோடி கடனுக்காக கடத்தப்பட்ட தொழிலதிபர்.. 2 மணி நேரத்தில் மீட்ட போலீஸ்..!

சென்னையில், மணல் குத்தகை எடுத்து தருவதாக கூறி  5 கோடி ரூபாய் பெற்று திருப்பிச் செலுத்தாத ரியல் எஸ்டேட் அதிபரை கடத்திய கும்பலை, காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த தகவலை வைத்து இரண்டு மணி நேரத்தில் கைது செய்த போலீசார், தொழிலதிபரை பத்திரமாக மீட்டனர்.  நிதி மற்றும் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு வரும் சரவணன், மயிலாடுதுறையை சேர்ந்த ஆரோக்கியராஜ் என்பவரிடம், 5 கோடி ரூபாய் வாங்கியதாக கூறப்படுகிறது. பலமுறை வாங்கிய தொகையை திருப்பி கேட்டும் சரவணன் … Read more

புதிய மின் கட்டண முன்மொழிவால் வீட்டு நுகர்வோருக்கு என்னென்ன பாதிப்பு?

தமிழக மின் வாரியத்தின் சார்பில் விநியோகிக்கப்படும் மின்சாரத்துக்கான கட்டணத்தை உயர்த்தும் நடவடிக்கைகளை, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் மேற்கொண்டுள்ளது. இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு, கட்டண விவரங்கள் குறித்த தங்களது கருத்துக்களை பொதுமக்கள், தொழில்துறையினர் தெரிவிக்க கருத்துக்கேட்பு கூட்டம் கோவை, மதுரையில் நிறைவடைந்துள்ளது. சென்னையில் நாளை (ஆக.22) கூட்டம் நடைபெற உள்ளது. இந்நிலையில், புதிய முன்மொழிவால் வீட்டு நுகர்வோருக்கு உயரும் கட்டணம் குறித்து கோயம்புத்தூர் கன்ஸ்யூமர் காஸ்செயலர் கே.கதிர்மதியோன் கூறியதாவது: தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் புதிய முன்மொழிவின்படி … Read more

டெல்லிக்கு அடிக்கடி ஃபோன் போடும் பிடிஆர்… என்ன காரணம்?

பிடிஆர் விருப்பம்: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை தலைவராகவும், அனைத்து மாநிலங்களின் நிதியமைச்சர்களை உறுப்பினர்களாகவும் கொண்டுள்ள ஜிஎஸ்டி கவுன்சிவின் கூட்டம் பல்வேறு மாநிலங்களின் தலைநகரம் அல்லது பிரபல நகரங்களில் நடைபெற்று வருகிறது. கடைசியாக 47 ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் ஹரியானா மாநில தலைநகர் சண்டிகரில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் பங்கேற்ற தமிழக நிதியமைச்சர் பிடிஆர், அடுத்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தை தமிழகத்தின் மதுரை மாநகரில் நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார். அவரது கோரிக்கையை ஏற்றுகொள்ளும் … Read more

அடம் பிடித்து நாடகம் ஆடும் ஆளுநர் – சிபிஎம் கண்டனம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், பல்கலை கழக துணை வேந்தர்கள் நியமனத்தை, மாநில அரசே மேற்கொள்ளும் சட்ட வரைவிற்கு ஒப்புதல் மறுத்து ஆளுநர் அடம் பிடித்துள்ளார். தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை விடவும் தனக்கு அதீத அதிகாரங்கள் இருப்பதாக காட்டிக்கொள்ளும் அடாவடித்தனத்தின் தொடர்ச்சியே இதுவாகும். குஜராத், தெலங்கானா மாநிலங்களில் துணை வேந்தர் நியமனத்தை மாநில அரசுகளே மேற்கொள்கின்றன. அங்கு UGC விதிமுறைகளின்படியே நியமனங்கள் நடக்கின்றன. அதையே தமிழ் நாட்டிலும் கொண்டுவர அரசு முடிவு செய்துள்ளது. … Read more

எடையூர் முதல் கோட்டகம் வரை ஜல்லி கற்கள் பெயர்ந்துள்ள சாலையை சீரமைக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

முத்துப்பேட்டை: திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அடுத்த எடையூர் கிழக்கு கடற்கரை சாலை வாண்டையார் பேருந்து நிறுத்தம் முதல் அனுமந்தன் கோட்டகம் வரையிலான சுமார் ஒரு கிலோ மீட்டர் சோத்திரியம் சாலை இப்பகுதி மக்களின் முக்கிய சாலையாகும். இந்த சாலை போட்டு சுமார் 12 வருடங்களுக்கு மேலாகிறது. இவ்வழியாக தான் எடையூர், முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி ஆகிய பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்லவேண்டும். குறிப்பாக பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் மாணவிகள், அதேபோன்று சுற்று பகுதியை சேர்ந்த மக்கள் தொலைதூரம் செல்ல … Read more

ஜெயலலிதாவுக்கு சிகிச்சை | அப்பல்லோ மருத்துவமனை மீது தவறே இல்லை: எய்ம்ஸ் மருத்துவக் குழு அறிக்கை

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் அப்பல்லோ மருத்துவமனை எவ்வித குறையும் வைக்கவில்லை. அங்கு அளிக்கப்பட்ட அனைத்து சிகிச்சைகளுமே முறையான மருத்துவ நடைமுறைகளுக்கு உட்பட்டே இருந்துள்ளது என்று எய்ம்ஸ் மருத்துவக் குழு தெரிவித்துள்ளது. ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சந்தேகம் எழுப்பிய நிலையில் அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி இது குறித்து விசாரிக்க ஒரு நபர் ஆணையம் ஒன்றை அமைத்தார். அந்த ஆணையத்திற்கு உதவ எய்ம்ஸ் மருத்துவர்கள் கொண்ட 7 பேர் … Read more