3% அகலவிலைப்படி உயர்வை ஜன.1 முதல் அமலாக்க வேண்டும்: ஆசிரியர் சங்கம்

தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் மாநில தலைவர் தீனதயாள் தலைமையில் பூந்தமல்லியில் நடைபெற்றது. பொதுச் செயலாளர் ஜான் வெஸ்லி, பொருளாளர் ருக்மாங்கதன், தலைமைச் செயலாளர் ஜெயராமன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் 3 சதவீத அகவிலைப்படியை உயர்த்தியதற்கு தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும் அகவிலைப்படியை ஜூலை 1 முதல்வழங்காமல் ஜனவரி 1 முதல் அகவிலைப்படியை உயர்த்தி 34 சதவீதமாக நிலுவைத் தொகையுடன் வழங்க வேண்டும். 2019 ஏப்.1 முதல் கடந்த … Read more

ஆர்எஸ்எஸ்க்கு திருமாவளவன் ஆதரவு அளிக்க வேண்டும் – வானதி அழைப்பு

பாஜக தகவல் தொழில்நுட்ப அணியின் தரவு மேலாண்மை பிரிவினருக்கு பயிற்சி கொடுக்க பெரம்பலூரில் முகாம் அமைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு கோவை தெற்கு எம்எல்ஏ சிறப்பு விருந்தினராக வருகை தந்தார். அதற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய வானதி சீனிவாசன் இவ்வாறு கூறினார்… இந்து மத நம்பிக்கைகளுக்கு எதிராக பேசுவதை தலைவர் ஸ்டாலின் மற்றும் அக்கட்சியின் மூத்த தலைவர்கள் வழக்கமாக வைத்துள்ளனர். இந்து மத நம்பிக்கைகளை புண்படுத்துவார்கள் மீது புகார் கொடுத்தாலும் திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை…. … Read more

ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுக்களை தமிழகத்தில் தடை செய்ய கடுமையான சட்டம்: பாப்புலர் ப்ரண்ட் வலியுறுத்தல்

சென்னை: பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா மாநில தலைவர் எம்.முகமது சேக் அன்சாரி வெளியிட்ட அறிக்கை:இணையத்தின் வழியாக பணத்தை வைத்து விளையாடும் எண்ணற்ற ஆன்லைன் சூதாட்ட செயலிகள் சமீபகாலமாக பெருகி வருகிறது. குறிப்பாக கொரோனா காலக்கட்டத்தில் மக்கள் வீடுகளில் முடங்கிய சூழ்நிலையில் பணத்தேவையை பூர்த்தி செய்து கொள்ளவும், பேராசையின் காரணமாகவும் பலர் இந்த ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமைகளாக மாறினர். தற்போது சூதாட்ட செயலிகளால் கடனில் சிக்கி தற்கொலை முயற்சிகளை மேற்கொள்பவரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக பலர் … Read more

போலீஸ் வாகனத்திலிருந்து தப்பி மரணித்த நபர்! விசாரணைக்கு அழைத்து சென்றபோது விபரீதம்

செஞ்சி அருகே விசாரணைக்கு அழைத்து வந்த ஒருவர் சிறுநீர் கழிப்பதாகக் கூறி காவலர் வாகனத்திலிருந்து தப்பியோடி தூக்கு மாட்டி கொண்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள சூரப்பந்தங்கள் கிராமத்தைச் சார்ந்த 18 வயது மதிக்கத்தக்க மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணை, வன்கொடுமை செய்துவிட்டதாக அவரது தாய் மீனாட்சி செஞ்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். இதையடுத்து அதே பகுதியைச் சேர்ந்த சம்பத், ராமலிங்கம் மற்றும் வெங்கடேசன் ஆகிய … Read more

மதுரையில் மாபெரும் புத்தகக் காட்சி தமுக்கம் அரங்கில் செப்.2-ல் தொடக்கம்

மதுரை: மதுரையில் மாபெரும் புத்தக கண்காட்சி தமுக்கம் அரங்கில் செப். 2-இல் தொடங்கும் என மதுரை ஆட்சியர் அனீஷ்சேகர் தகவல். இது தொடர்பாக மதுரை ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது. “மதுரையில் கடந்த 2005 முதல் தென்னிந்திய புத்தக பதிப்பாளர் சங்கம் சார்பில், ஆண்டுதோறும் புத்தக கண்காட்சி நடக்கிறது. தமிழக முதல்வர் புத்தக வாசிப்பை ஒரு மக்கள் இயக்கமாக எடுத்துச் செல்ல உத்தரவிட்டுள்ளார். அதன்பேரில், மதுரை மாவட்ட நிர்வாகம் சார்பில், செப்., 2ம் தேதி முதல் 12ம் … Read more

இபிஎஸ் – ஓபிஎஸ்ஸை ஜோடி சேர்த்த திருவாரூர் திருமணம்!

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் அவர்களின் நெருங்கிய உறவினர் இல்ல திருமணம் இன்று நடைபெற்றது. இதில் மணமக்களுக்கு திருமண வாழ்த்து தெரிவிக்கும் வகையில் திருமண மண்டபத்தில் வாயிலில் டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. அதில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோரது புகைப்படங்களும், ஓபிஎஸ் அணியை சேர்ந்த் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தின் படமும், இ.பி.எஸ் அணியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் ஆகியோரின் படமும் இடம்பெற்றுள்ளது. மேலும், திருமண அழைப்பிதழிலும் கூட எடப்பாடி பழனிசாமி … Read more

''இபிஎஸ்-ஐ அழிக்க அந்த அணிக்கு சென்றுள்ளீர்கள் கே.பி.முனுசாமி; அதை செய்யுங்கள்”- புகழேந்தி

“நிறம் மாறும் அரசியல் பச்சோந்திகளில் முதன்மையானவர் கேபி.முனுசாமி” என்று பெங்களூரு புகழேந்தி விமர்சனம் செய்துள்ளார். அதிமுகவின் இபிஎஸ் ஆதரவாளரான கேபி.முனுசாமி, ஓபிஎஸ் குறித்து தெரிவித்துள்ள கருத்துக்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அதிமுக முன்னாள் நிர்வாகியும், ஓபிஎஸ் ஆதரவாளருமான பெங்களூர் புகழேந்தி ஓசூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “அரசியலில் நிறம் மாறும் பச்சோந்திகள் பல உண்டு. அதில் ஒரு பச்சோந்தி கேபி.முனுசாமி. அவர் இப்போது தியாகத்தை பற்றி பேசி வருகிறார். அதிமுகவுக்காக எத்தனையோ பேர் உயிரிழந்துள்ளனர்; … Read more

தேர்தலுக்காக சிந்திக்கும் கட்சிகளுக்கு நடுவில் அடுத்த தலைமுறைக்காக சிந்திக்கும் கட்சி பாமக: அன்புமணி

தேர்தலுக்காக சிந்திக்கும் கட்சிகளுக்கு நடுவில் பாமக மட்டுமே அடுத்த தலைமுறைக்காக சிந்திக்கிறது, என தருமபுரியில் நடந்த பிரச்சார நடைபயணத்தின்போது அன்புமணி ராமதாஸ் எம்.பி பேசினார். தருமபுரி மாவட்ட நீர்நிலைகளுக்கு காவிரி உபரிநீரை வழங்கும் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஒகேனக்கல்லில் இருந்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி நேற்று முன்தினம் பிரச்சார நடைபயணம் தொடங்கினார். 2-வது நாளான நேற்று தருமபுரி அடுத்த குரும்பட்டி டீக்கடை பகுதியில் இருந்து நடைபயணம் தொடங்கினார். சோலைக்கொட்டாய், … Read more

தூத்துக்குடி துப்பாக்கிசூடு: அறிக்கையை மறைக்கிறதா அரசு? டிடிவி சரமாரி கேள்வி

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டத்தில் போலீசார் 13 பேரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்தனர். இதுகுறித்து விசாரிக்க நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வந்த நிலையில் அண்மையில் அவர் அரசிடம் அறிக்கை தாக்கல் செய்தார். அந்த அறிக்கையில், தூத்துக்குடி துப்பாக்கிசூடு சம்பவத்தில் எவ்வித வழிமுறைகளையும் அலுவலர்கள் பின்பற்றவில்லை என்றும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் எனவும் பரிசீலிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இதுதொடர்பாக ட்வீட் போட்டுள்ளார். … Read more

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த மழை

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்துவருகிறது. ராமாபுரம், போரூர் பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. அதேபோல் நந்தனம், ஐயப்பன்தாங்கல், மாங்காடு, ஆதம்பாக்கம், ஆலந்தூர், மாம்பலம், மாங்காடு, குன்றத்தூர், பூந்தமல்லி, காசிமேடு, ராயபுரம், சென்ட்ரல், புரசைவாக்கம் பட்டாளம், ஓட்டேரி மற்றும் சூளை உள்ளிட்ட சென்னையின் பல்வேறு இடங்களில் கடந்த அரை மணி நேரமாக பரவலாக இடியுடன் கூடிய மழை பெய்துவருகிறது. கோடம்பாக்கம், கே.கே.நகர், அசோக் பில்லர், ஜாபர்கான்பேட்டை, சைதாப்பேட்டை, கிண்டி, துரைபாக்கம், வேளச்சேரி, அண்ணாநகர் … Read more