கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியை சீரமைக்க கோரிய வழக்கு: 10 நாட்களில் முடிவெடுக்க ஆட்சியருக்கு உத்தரவு

சென்னை: கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவியின் மரணத்தையடுத்து சூறையாடப்பட்ட பள்ளியை சீரமைக்கவும், பள்ளியை மீண்டும் திறக்கவும் அனுமதி கோரி அளிக்கப்பட்ட மனு மீது 10 நாட்களுக்குள் முடிவெடுக்க மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் மாணவி மரணமடைந்ததைத் தொடர்ந்து கடந்த ஜூலை 17-ம் தேதி அப்பள்ளி வளாகத்துக்குள் புகுந்த போராட்டக்காரர்கள் பள்ளியை அடித்து நொறுக்கி சூறையாடினர். இந்த கலவரத்தை தொடர்ந்து பள்ளி மூடப்பட்டு யாரும் நுழையக் கூடாது என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. … Read more

விலைவாசி உயர்வு அனைவருக்கும் பொதுதானே! -அப்போ அரசு ஊழியர்களுக்கு மட்டும் ஏன் அகவிலைப்படி ?

அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வை கருத்தில் கொண்டு மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு இருமுறை அகவிலைப்படி உயர்வு அளிக்கப்பட்டு வருகிறது. இதன்படி, ஆகஸ்ட் 15 ஆம் தேதி நாட்டின் 75 ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்தின்போது தமிழக அரசு ஊழியர்ககள் மற்றும் ஆசிரியர்களுக்கு இனிப்பான செய்தியாக இருக்கட்டுமே என்று அகவிலைப்படி 3 %அதிகரிக்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். முதல்வரின் இந்த அறிவி்ப்பை அடுத்து அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்து 31% ஆக இருந்து வந்த DA … Read more

ஆர்டர்லி முறையை 4 மாதங்களில் ஒழிக்க வேண்டும் : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

காவல்துறையில் பணியாற்றும் மாணிக்கவேல் என்பவர், வேறு இடத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டதால், காவலர் குடியிருப்பில்  ஒதுக்கப்பட்ட வீட்டை காலி செய்யும்படி 2014-ம் ஆண்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதை எதிர்த்து மாணிக்கவேல் தொடர்ந்த வழக்கை விசாரித்த  நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், காவல்துறை உயர் அதிகாரிகளின் வீடுகளில் ஆர்டர்லி, வாகனங்களில் கருப்பு ஸ்டிக்கர், சொந்த வாகனங்களில் அரசு முத்திரை பயன்படுத்தப்படுவது போன்ற விவகாரங்கள் குறித்து விசாரித்தார் . டிஜிபி கடந்த வாரம் தாக்கல் செய்த அறிக்கையில், ஆர்டர்லி முறையை ஒழிக்க தமிழக அரசு … Read more

தேவாலயங்களை சீரமைக்க நிதி உதவி பெற விண்ணப்பிக்கலாம்: காஞ்சிபுரம் கலெக்டர் தகவல்

காஞ்சிபுரம்: காஞ்சீபுரம் மாவட்டத்தில் சொந்த கட்டிடங்களில் இயங்கும் தேவாலயங்களை பழுதுபார்த்தல் மற்றும் சீரமைத்தல் பணிகளை மேற்கொள்வதற்கு நிதி உதவி வழங்கும் திட்டம் 2016-17 முதல் அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் தேவாலயங்களில் ஏற்பட்டுள்ள பழுதுகள் மற்றும் பராமரிப்பு பணிகளுக்காக தேவாலயங்களில் ஏற்பட்டுள்ள பழுதுகள் மற்றும் தேவாலய கட்டிடத்தின் வயது போன்றவற்றை கருத்தில் கொண்டு 10-15 ஆண்டுகள் வரை இருப்பின் ரூ.1 லட்சமும், 15-20 ஆண்டுகள் வரை இருப்பின் ரூ.2 இலட்சமும் 20 ஆண்டுகளுக்கு மேல் … Read more

“அந்த மாணவிகள் என்மகளின் ஃப்ரெண்ட்தானா? ஆதாரத்த காட்டுங்க’-கள்ளக்குறிச்சி மாணவியின் தாயார்

45 நாட்களாகியும் மர்மம் ஏன் இன்னும் மர்மமாகவே இருக்கிறது என்று விழுப்புரத்தில் பேட்டியளித்த கள்ளக்குறிச்சி மாணவி  தாயார் செல்வி வருத்தம் தெரிவித்துள்ளார்.  கள்ளக்குறிச்சி மாணவி வழக்கில் நேற்றைய தினம் பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவக்குழுவின் ஆய்வறிக்கையில் முதல் மற்றும் இரண்டாம் பிரேத பரிசோதனை விவரங்கள் விழுப்புரம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியானது. அதனையடுத்து உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, பரிசோதனை அறிக்கை விவர நகல்களை வழங்கும்படி மாணவியின் தாயார் மனுதாக்கல் செய்துள்ளார். அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தாயார் செல்வி, … Read more

பழனி கோயில் திருமஞ்சன கட்டண உரிமை யாருக்கு? ஐகோர்ட் முக்கிய உத்தரவு

பழனி முருகன் கோயில் திருமஞ்சனத்திற்கான கட்டணத்தை பெறுவதற்கு பண்டாரங்களே தகுதியானவர்கள் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.பழனி முருகன் கோயில் அர்ச்சகர் சங்கம் சார்பில் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், “பழனி முருகன் கோயிலில் பூஜைகள் செய்வதற்கான கட்டணம் இந்து சமய அறநிலைய துறையின் ஆணையர் சார்பாக இறுதி செய்யப்பட்டது. ஒரு பூஜைக்கு ரூபாய் 9 ரூபாய் 40 பைசா என நிர்ணயம் செய்யபட்டுள்ளது.இதில், கோயில் பங்காக 6 ரூபாய் 40 … Read more

#காஞ்சிபுரம் || விடுதி மாணவர் தூக்கிட்டு தற்கொலை.. காவல்துறையினர் விசாரணை..!

விடுதியில் தங்கி இருந்த மாணவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகாரை சேர்ந்த அலோக்குமார் என்பவர் காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புத்தூர் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் 2 ம் ஆண்டு படித்து வருகிறார். செமஸ்டர் விடுமுறைக்கு ஊருக்கு செல்லாமல் அவர் விடுதியிலேயே தங்கியுள்ளார். இந்நிலைய்யில், அவரது அறையில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால், அதிர்ச்சியடைந்த மாணவர்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் அறைக்கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த … Read more

வேலை வழங்காமல் புதிதாக நிலம் எடுக்க என்எல்சி-யை அனுமதிக்க மாட்டோம்: அன்புமணி

சென்னை: நெய்வேலியில் ஏற்கெனவே நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை வழங்காமல் புதிதாக நிலம் எடுக்க அனுமதிக்க மாட்டோம் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உறுதிபட கூறியுள்ளார் இது குறித்து இன்று அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்: “என்எல்சி சுரங்க விரிவாக்கம், புதிய சுரங்கத்திற்காக நிலம் கையகப்படுத்தும் நோக்கத்துடன் கடலூர் மாவட்டம் தென்குத்து, வானதி ராயபுரம் பகுதிகளுக்கு இயந்திரங்களுடன் வந்த அதிகாரிகளை அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் முற்றுகை போராட்டம் நடத்தி திருப்பி அனுப்பியுள்ளனர். நெய்வேலி … Read more

தமிழ்நாட்டில் நான்கு நாள்களுக்கு கனமழை: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

தமிழ்நாடு, புதுச்சேரிக்கான வானிலை முன்னறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில், “மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று (23.08.2022) தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், திருப்பூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி, டெல்டா மாவட்டங்கள் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் … Read more

தூத்துக்குடியில் அடுத்தடுத்து 23 சிறார்கள் – வெளியான அதிர்ச்சி பின்னணி !!

கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களின் பழக்க வழக்கங்கள் கல்லூரி மாணவர்களைக் கடந்து தற்போது பள்ளி மாணவர்களிடமும் வேகமாக பரவ தொடங்கி விட்டது. இதனால் மாணவர்களால் மற்றவர்களுக்கு ஏற்படும் சிரமங்களும், எல்லை மீறல்களும், அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அப்படி சிறு சிறு பிரச்சினைகளில் அடியெடுத்து வைக்கும் மாணவர்களின் பாதை கொலை,கொள்ளை போன்ற குற்ற சம்பவங்களில் சென்று முடிகிறது. தமிழகம் முழுக்க அரங்கேறும் கொலை, கொள்ளை போன்ற சம்பவங்களில் போலீசார் பிடியில், சிறார்கள் சிக்காத ஊரே இருக்காது. அப்படியாகிவிட்டது … Read more