வியட்நாம் உள்ளிட்ட நாடுகளில் உள்ள 5 பல்கலைக்கழகங்களில் விரைவில் தமிழ் இருக்கை – முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: இந்தோனேசியா, வியட்நாம் உள்ளிட்ட 5 தெற்காசிய நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களில் விரைவில் தமிழ் இருக்கை அமைக்கப்படும் என செம்மொழித் தமிழ் விருது வழங்கும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி வலியுறுத்தலின் பேரில் மத்திய அரசால் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் அமைக்கப்பட்டது. இந்த நிறுவனத்தின் தலைவராக தமிழக முதல்வர் உள்ளார். கடந்த 2008-ல் கருணாநிதி தனது சொந்த நிதி ரூ.1 கோடியை வைப்புத் தொகையாக அளித்து, கலைஞர் மு.கருணாநிதி செம்மொழி … Read more

கும்மிடிப்பூண்டி காவல் நிலையத்தில் விநாயகர் சதுர்த்தி விழா ஆலோசனை கூட்டம்

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி காவல் நிலையத்தில் விநாயகர் சதுர்த்தி விழா குறித்தும், விநாயகர் சிலை வைப்பது, ஊர்வலம் செல்வது குறித்த ஆலோசனை கூட்டம் ஆய்வாளர் பாலசுப்பிரமணியம் தலைமையில் நேற்று நடைபெற்றது. கும்மிடிப்பூண்டி காவல் நிலைய வளாகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்திற்கு கும்மிடிப்பூண்டி காவல் துணை கண்காணிப்பாளர் கிரியோ சக்தி சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டாார். இந்நிகழ்வில் கும்மிடிப்பூண்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளை சேர்ந்த பல்வேறு அமைப்புகள், வழக்கமாக விநாயகர் சதுர்த்தியை ஒட்டி சிலை வைத்து விழா … Read more

இயக்குனர் லிங்குசாமிக்கு 6 மாத சிறை தண்டனை..!

நடிகர் கார்த்தி நடித்த படத்தை தயாரிக்க பெற்ற கடனை திரும்ப செலுத்தாத வழக்கில் இயக்குனர் லிங்குசாமிக்கு 6 மாதங்கள் சிறை தண்டனை விதித்து சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2014ஆம் ஆண்டில் ‘எண்ணி ஏழு நாள்’ என்ற படத்தை தயாரிக்க, பி.வி.பி. பைனான்ஸ் நிறுவனத்திடமிருந்து ஒரு கோடியே 3 லட்சம் ரூபாயை திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்திற்காக லிங்குசாமி கடனாக பெற்றார். அப்போது, அவர் கொடுத்த 35 லட்சம் ரூபாய்க்கான காசோலை பணமில்லாமல் திரும்பியதால், பி.வி.பி. நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. … Read more

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நடந்த ஊழல் தொடர்பான விசாரணை அறிக்கை மீது முதல்வர் நடவடிக்கை: அமைச்சர் கே.என்.நேரு தகவல்

சென்னை: ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகளில் நடைபெற்ற ஊழல் தொடர்பான ஒருநபர் விசாரணைக் குழு அறிக்கை மீது முதல்வர் உரிய நடவடிக்கை எடுப்பார் என்று நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று செய்தியாளர்களிடம் அமைச்சர் கே.என்.நேரு கூறியதாவது: ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகளில் நடைபெற்ற ஊழல் தொடர்பான ஒரு நபர் விசாரணைக் குழு அறிக்கையை முதல்வர் ஸ்டாலினிடம், விசாரணைக் குழு தலைவர் டேவிதார் 2 நாட்களுக்கு முன்பு வழங்கினார். அதன் … Read more

பள்ளிப்பட்டில் மாணவிகளுக்கு போக்சோ சட்டம் குறித்து போலீசார் விழிப்புணர்வு

பள்ளிப்பட்டு: பள்ளிப்பட்டில் அரசுப் பள்ளி மாணவியருக்கு போக்சோ சட்டம், பெண் உரிமை குறித்து போலீசார் நேற்று விழிப்புணர்வு ஏற்ப்படுத்தினர். பள்ளிப்பட்டு அரசு பெண்கள் மேல் நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழிப்புணர்வு முகாமில் உதவி காவல் ஆய்வாளர் நாகபூஷணம், சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் கோபால் ஆகியோர் பங்கேற்று மாணவியருக்கு எதிராக நடைபெறும் சமூக விரோத செயல்கள் குறித்தும் சட்ட ரீதியில் எதிர்க்கொண்டு பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்ப்படுத்தினர். குறிப்பாக பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள், கேலி, கிண்டல், … Read more

சென்னை தினத்தின் சிறப்பு: ராபர்ட் கிளைவ் திருமணம், குண்டு துளைக்காத தேவாலயத்தின் வரலாறு

Chennai Tamil News: மெட்ராஸ் தினத்தை ஒட்டி சென்னையில் பல்வேறு நிகழ்ச்சிகள் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. 383 ஆண்டு பழமையான சென்னையைப் போற்றும் வகையில் நகரில் இருக்கும் பழமையான கட்டிடங்களில் ஒன்றான செயின்ட் மேரி தேவாலயத்தின் வரலாற்றை இந்த தொகுப்பில் காணலாம். 17ஆம் நூற்றாண்டிலேயே வெடிகுண்டு தடுப்புச் சுவரை சென்னையில் உள்ள செயின்ட் ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் உள்ள செயின்ட் மேரி தேவாலயத்தில் கட்டியுள்ளனர். இந்த தேவாலயத்தில்தான் மார்கரெட் மாஸ்கெலினிற்கும் ராபர்ட் கிளைவுக்கும் திருமணம் நடைபெற்றது. இந்தியாவில் … Read more

காஞ்சி, தஞ்சை, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு

சென்னை: காஞ்சிபுரம், கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழக கடலோரப் பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு சுழற்சிநிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் 26-ம் தேதி வரை இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். 23-ம் தேதி தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை … Read more

பெரியபாளையம் பஜார் பகுதியில் பழுதாகி கிடக்கும் உயர்கோபுர மின்விளக்கு; இருளில் பொதுமக்கள் தவிப்பு

பெரியபாளையம்: பெரியபாளையம் பஜார் பகுதியில் உள்ள உயர்கோபுர மின்விளக்கு எரியாததால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். பெரியபாளையம் – ஊத்துக்கோட்டை – திருவள்ளூர் மும்முனை சந்திப்பில் உயர் கோபுர மின் விளக்கு அமைக்கப்பட்டுள்ளன. இந்த மின்விளக்கு 3 மாத காலமாக சரியாக எரியாமல் உள்ளது. மேலும் இந்த சந்திப்பு சாலையை கடந்து தான் பக்தர்கள் புகழ்பெற்ற பெரியபாளையம் பவானி அம்மன் ஆலயத்திற்கு சென்று வருகின்றனர். தற்போது ஆடி திருவிழா நடைபெறும் நிலையில் மேலும் இப்பகுதி கடைகள், ஓட்டல், டீக்கடை, குடியிருப்பு … Read more