தடை காலம் முடிந்தது -அதிமுக அலுவலகத்திற்கு செல்ல தொண்டர்கள் அனுமதிக்கப்படுவார்களா?

அதிமுக அலுவலகத்தில் தொண்டர்கள் வருவதை தவிர்க்க வேண்டும் என நீதிமன்றம் அறிவித்திருந்த உத்தரவு நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், ஜூலை 11ஆம் தேதி நடந்த வன்முறை சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட்டுள்ளதால் தொண்டர்கள் கட்சி அலுவலகத்திற்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை கடந்த ஜூலை 11ம் தேதி பொதுக்குழு கூட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது, அதிமுக அலுவலகத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் மற்றும் ஆதரவாளர்கள் 200க்கும் மேற்பட்டோர் வருகை தந்தனர். இதனால் எடப்பாடி … Read more

பரந்தூர் பகுதியில் நீர்நிலைகள் பாதுகாக்கப்படும் – அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் முழு விவரம்

சென்னை: பரந்தூரில் புதிய விமான நிலையம் அமையும் பகுதியில் சுற்றுப்புற நீர்நிலைகள் எவ்வித பாதிப்பும் இன்றி பாதுகாக்கப்படும். மழை காலத்தில் வெள்ளம் ஏற்படுவது முற்றிலும் தடுக்கப்படும் என்று, ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் வெளியான கட்டுரைக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்துள்ளார். காஞ்சிபுரம் அருகே பரந்தூரில் சென்னையின் 2-வது விமான நிலையம் அமைய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் கடந்த 18-ம் தேதி ‘நீருக்குள் ஒரு விமான நிலையம்!’ என்ற தலைப்பில் … Read more

சென்னைக்கு தூது போன ர.ர.,க்கள்… அவசரமாய் ஊர் திரும்பிய எடப்பாடி!

தமிழகத்தில் எதிர்க்கட்சியாக விளங்கும் அதிமுகவில் ஒற்றை தலைமை என்ற கோஷம் உச்சம் தொட்டு, பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவுடன் பெரிய ட்விஸ்ட் கொடுத்து நாற்காலியை பிடித்தார். ஆனால் நீதிமன்ற வழக்குகள் ஓ.பன்னீர்செல்வத்திற்கு சாதகமாக முடிய எடப்பாடி தரப்பு போட்டு வைத்த கணக்குகள் அனைத்து தூள் தூளாக மாறின. இதனை எதிர் தரப்பினர் வெகு விமர்சையாக கொண்டாடி தீர்க்க எடப்பாடி பழனிசாமிக்கு சிக்கல் ஆரம்பித்தது. குறிப்பாக தனது சொந்த ஊரான சேலத்தில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக ஒரு குழுவினர் பட்டாசு வெடித்து, … Read more

திருத்தணி அருகே தமிழக-ஆந்திர எல்லையில் 35 கிலோ கஞ்சா பறிமுதல்: தனிப்படை போலீஸ் சோதனை

திருவள்ளூர்: திருத்தணி அருகே தமிழக-ஆந்திர எல்லையில் தனிப்படை போலீஸ் சோதனையில் 35 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. ஆந்திராவிலிருந்து பேருந்து மற்றும் ரயில் மூலம் கடத்தி வரப்பட்ட 35 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு 3 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் கடந்த 3 நாட்களில் திருத்தணி பகுதியில் ஆந்திராவிலிருந்து கடத்தி வரப்பட்ட 107 கிலோ கஞ்சா பறிமுதலில் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

‘ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் தவறு இல்லை’.. இறப்புக்கு காரணம் என்ன? – எய்ம்ஸ் குழு விரிவான அறிக்கை!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016ஆம் ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சுமார் 75 நாட்கள் அங்கு சிகிச்சையில் இருந்த அவர், அதே ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி உயிரிழந்தார். ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக ஓ. பன்னீர்செல்வம் கூறிய நிலையில், அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து உத்தரவிட்டார். ஆறுமுகசாமி ஆணையம் ஜெயலலிதா மரணம் தொடர்பாக பல்வேறு … Read more

அர்ச்சகர் நியமனம் தொடர்பான வழக்கில் நாளை தீர்ப்பு – அரசின் புதிய விதிகளை எதிர்த்து தொடரப்பட்டது

சென்னை: தமிழக கோயில்களில் அர்ச்சகர்கள் நியமனம் தொடர்பான அரசின் புதிய விதிகளை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளில் உயர் நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்க உள்ளது. தமிழகத்தில் உள்ள கோயில்களில் அர்ச்சகர்கள், பூசாரிகள் மற்றும் பரம்பரை அறங்காவலர்கள் பணி நியமனம் மற்றும் பணி நிபந்தனைகள் தொடர்பாக இந்து சமய அறநிலையத் துறை சார்பில் புதிய பணி விதிகள் கடந்த 2020-ம் ஆண்டு கொண்டு வரப்பட்டன. அதில் 18 வயது முதல் 35 வயதுக்கு உட்பட்டவர்கள் மட்டுமே அர்ச்சகராக முடியும், ஆகம … Read more

பிடிவாதம் பிடிக்கும் எடப்பாடி பழனிசாமி – பாஜக மேலிடம் செம ஷாக்!

ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைந்து செயல்பட முடியாது என, அடிக்கடி தெரிவித்து வருவது, டெல்லி பாஜக மேலிடத் தலைவர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த ஜூலை மாதம் 11 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து, , வைரமுத்து ஆகியோர் தொடர்ந்த வழக்கில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் அண்மையில் தீர்ப்பு அளித்தார். அதில், அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லாது என்றும், அதிமுகவில் … Read more

கள்ளக்காதலனுடன் சேர்ந்து கூலிப்படையை ஏவி கணவரை கொன்ற மனைவி கைது

தென்காசி: தென்காசி மாவட்டம் வீரசிகாமணியை அடுத்த வென்றிலிங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்த வைரவசாமியும் அவருடைய மனைவி முத்துமாரியும் தனியார் நிதி நிறுவனத்தில் பணியாற்றி வந்தனர். இவர்கள் நேற்று முன்தினம் காலையில் வழக்கம்போல் ஒரே மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்று விட்டு, இரவில் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தபோது, காரில் வந்த மர்மநபர்கள் திடீரென்று மோட்டார் சைக்கிளை வழிமறித்தனர். பின்னர் அவர்கள் கம்பு, கற்களால் வைரவசாமியை சரமாரியாக தாக்கி விட்டு, முத்துமாரி அணிந்திருந்த நகையை பறித்து சென்றனர்.  இதில் பலத்த காயமடைந்த … Read more

குழந்தைகளை தாக்கும் தக்காளி காய்ச்சல்: தமிழக கேரளா எல்லையில் கண்காணிப்பு தீவிரம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

வேலூர்: தக்காளி காய்ச்சலை கட்டுப்படுத்த கேரள மாநில எல்லைகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ், குரங்கு அம்மை பாதிப்பு வரிசையில் இந்தியாவில் இதுவரை 82 பேருக்கு தக்காளி காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் கேரள மாநிலம் கொல்லத்தில் 5 வயது குட்பட்ட குழந்தைகளுக்கே இந்த நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது சுகாதாரத்துறை அதிகாரிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. குழந்தைகளை தாக்கும் தக்காளி காய்ச்சல் பாதிப்பு இந்தியாவில் அதிகரித்து வருவதாக மருத்துவ … Read more

தொடங்கப்பட்ட பொறியியல் கலந்தாய்வு..!முதல் நாளில் கல்லூரிகளை தேர்வு செய்த மாணவர்கள்.!

பொறியியல் கலந்தாய்வு தொடங்கப்பட்ட நிலையில், முதல்நாளில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்லூரிகளை தேர்வு செய்தனர். அண்ணா பல்கலைக்கழகத்தின்கீழ் இயங்கும் 431 பொறியியல் கல்லூரிகளில் இளநிலைப் படிப்புகளுக்கு ஒரு லட்சத்து 48,811 இடங்கள் உள்ளன. இதற்கான மாணவர்சேர்க்கை கலந்தாய்வு நேற்று தொடங்கியது. முதல்கட்டமாக முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள், மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்கள் ஆகியோர் அடங்கிய சிறப்புப் பிரிவுக்கான கலந்தாய்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி முதல்நாளான நேற்று அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீட்டில் விண்ணப்பித்திருந்த விளையாட்டு வீரர்கள், … Read more