இனி தமிழில் கையெழுத்து போட வேண்டும் – ஆசிரியர்கள், மாணவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

சிறுவயதில் புத்தகத்தின் கடைசி பக்கங்களில் வெறும் கையெழுத்திட்டே பழகும் மாணவர்கள் இப்போதுவரை அந்தப் பழகத்தைத் தொடர்ந்துகொண்டே தான் இருக்கின்றனர். கையெழுத்தின் மீதான மோகம் ஒவ்வொருவருக்கும் அங்கிருந்தே தொடங்குகின்றன. அதன்பிறகு பருவத்துக்கு ஏற்றார் போல கையெழுத்து வடிவங்களோ, ஸ்டைலோ மாறிவிடுகின்றன. என்னதான் நம் இஷ்டத்துக்கு கையெழுத்துக்களை உபயோகித்து வந்தாலும், அரசின் அனைத்து பதிவேடுகளிலும் ஒரே கையெழுத்து அவசியமாகிறது.  பொதுவாக கையெழுத்து நாம் எப்படி போடுவோம். ஒன்று ஆங்கிலத்தில், இல்லையெனில் அவரவர் தாய்மொழியில். இது அவரவர் ரசனை சார்ந்தது. சிலர், … Read more

பஞ்சாயத்து தலைவர் கொலை; கைதான பா.ஜ. நிர்வாகி, மாணவன் பரபரப்பு வாக்குமூலம்

கோவில்பட்டி: தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள தெற்கு திட்டங்குளம் பஞ்சாயத்து தலைவர் பொன்ராஜ் (65). இவர் நேற்று மதியம் 12 மணி அளவில் அதே ஊர் விஜயாபுரி சாலையில் உள்ள தோட்டத்தில் மரத்தின் கீழ் அமர்ந்திருந்தபோது மர்மக் கும்பலால் வெட்டிக் கொல்லப்பட்டார். இதுகுறித்து கோவில்பட்டி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் தெற்கு திட்டங்குளம் கீழத் தெருவைச் சேர்ந்த கார்த்திக் (33), காளிதாஸ் மகன் வசந்த் (18) ஆகியோர் இந்தக் கொலையில் ஈடுபட்டது … Read more

ஒரு ஓவரில் 17 பந்துகள் வீசிய பாக்.வீரர்… கம்பீர் vs அக்மல்… ஆசிய கோப்பையில் வெடித்த டாப் 5 சர்ச்சை!

Asia Cup Tamil News: 15-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள் வருகிற 27 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இந்தப் போட்டிகள் இலங்கையில் நடைபெறவிருந்த நிலையில், தற்போது ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இத்தொடரின் கடைசி பதிப்பு ஒரு நாள் போட்டியாக நடத்தப்பட்டது. ஆனால், இம்முறை டி20 வடிவத்தில் இடம்பெற உள்ளது. இத்தொடரில் நடப்பு சாம்பியனான இந்தியா, 7 முறை கோப்பையை வென்ற அணியாக உள்ளது. இத்தொடரில் கிரிக்கெட்டில் பரம எதிரிகளான இந்தியா மற்றும் பாகிஸ்தான் … Read more

“இதுவரை 13 முறை தீர்மானம்… புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கேட்டு மீண்டும் வலியுறுத்துவோம்” – முதல்வர் ரங்கசாமி

புதுச்சேரி: “புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கேட்டு மீண்டும் ஒரு தீர்மானம் போட்டு மத்திய அரசை வலியுறுத்துவோம்” என்று புதுச்சேரி சட்டப்பேரவையில் அம்மாநில முதல்வர் ரங்கசாமி கூறியுள்ளார். புதுச்சேரி சட்டப்பேரவையில் இன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்தின் இறுதியில் முதல்வர் ரங்கசாமி பதிலளித்து பேசியது: “கடந்த 5 ஆண்டு காலத்தில் எப்படிப்பட்ட ஆட்சி நடந்தது, எப்படிப்பட்ட அதிகார பகிர்வுகள் மாறியுள்ளது என்பதை எம்எல்ஏக்கள் தெளிவாக வெளிப்படித்தியுள்ளனர். யாரும் மறைக்கவில்லை. எம்எல்ஏக்கள் எல்லோரும் ஆட்சியில் நடைபெற்றது என்ன, எவ்வாறு … Read more

இலவசங்கள் அடிப்படை உரிமை: கடைசியில் திராவிட மாடலுக்கு வந்து சேர்ந்த அண்ணாமலை!

ஹரியானா மாநிலம் பானிபட்டில் நிகழ்ச்சி ஒன்றில் அண்மையில் பேசிய பிரதமர் மோடி, சுயநலம் கொண்ட இலவச அறிவிப்புகள் நாடு தன்னிறைவு பெறுவதற்கு தடையாக இருக்கும் என்றும் வரி செலுத்துவோருக்கு மேலும் சுமையாக இருக்கும் என்றும் கூறியிருந்தார். அதேபோல், பாஜகவை சேர்ந்த வழக்கறிஞர் அஷ்வினி உபாத்யாய் அரசியல் கட்சிகளின் இலவச அறிவிப்புகளுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், தேர்தல்களின் போது இலவசங்கள் தருவதாக வாக்குறுதி அளிக்கும் அரசியல் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என … Read more

11ஆம் வகுப்பு துணை தேர்வு – முடிவுகள் நாளை வெளியீடு

தமிழ்நாட்டில் இந்த ஆண்டுக்கான 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு கடந்த மே மாதம் தொடங்கியது. இந்தத் தேர்வு 3,119 மையங்களில் நடைபெற்றது. இத்தேர்வை,  8,83,882 பேர் எழுதினர். அதனைத் தொடர்ந்து ப்ளஸ் 1 தேர்வு முடிவுகளானது ஜூன் 27ஆம் தேதி வெளியானது. அதில், தேர்வு எழுதியவர்களில் 7,59,856 பேர் தேர்ச்சி பெற்றனர். குறிப்பாக மாணவிகள் 94.99 சதவீதம் பேரும், மாணவர்கள் 84.86 சதவீதம் பேரும் தேர்ச்சியடைந்தனர். இந்தச் சூழலில் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியடைந்த மாணவ, மாணவிகளுக்கு … Read more

புதுவை சட்டசபையில் திமுக, காங். வெளிநடப்பு

புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபையில் இன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது திமுக எம்எல்ஏ சம்பத் பேசுகையில், ‘ஆளுநர் உரையை கேட்பதற்கு இனிமையாக இருந்தது. ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது என்பது போல் தான் ஆளுநரின் உரை இருந்தது. என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக கூட்டணி ஆட்சிக்கு வந்தால், மத்தியில் இருந்து நிதி கிடைக்கும் என மக்களிடம் வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்தார்கள். ஆனால் எந்த நிதியும் வரவில்லை.என்றார். அப்போது அமைச்சர் சாய் ஜெ சரவணன்குமார் குறுக்கிட்டு கூட்டணியில் இருப்பதால் … Read more

சேலம்: சொகுசு பேருந்தில் பயங்கரமாக மோதிய ஆம்னி கார்… சிறுமி உட்பட 6 பேர் பரிதாபமாக பலி

ஆத்தூர் அருகே சொகுசு பேருந்தின் மீது ஆம்னி கார் மோதிய விபத்தில் சிறுமி உட்பட ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். துக்க நிகழ்வுக்கு சென்ற போது விபத்து நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. சேலம் மாவட்டம், ஆத்தூர் கிரைன் பஜார் பகுதியை சேர்ந்த ஆட்டோ மெக்கானிக்கான ஆறுமுகம் என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன் உயிரிழந்தார். இவருடைய 30 வது நாள் காரியத்திற்காக உறவினர்கள் அவரது வீட்டிற்கு சென்றுள்ளனர். அவர்கள் சென்ற காரை ராஜேஷ் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். கார் சேலம் … Read more

வீடு கட்டும் திட்டத்தில் காமராஜர் பெயர் நீக்கம்: புதுச்சேரி பேரவையில் திமுக – பாஜக கடும் வாக்குவாதம்

புதுச்சேரி: வீடு கட்டும் திட்டத்தில் காமராஜர் பெயரை நீக்கியதற்கு திமுக எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து பாஜகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் புதுச்சேரி சட்டப்பேரவையில் பரபரப்பு ஏற்பட்டது. 2022-23ம் ஆண்டுக்கான் புதுச்சேரி நிதிநிலை அறிக்கையை அம்மாநில முதல்வரும், நிதியமைச்சருமான ரங்கசாமி நேற்று தாக்கல் செய்தார். பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் நாளான இன்று கேள்வி நேரம் நடைபெற்றது. அதில் பேசிய திமுக சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் “கல் வீடு கட்டும் திட்டம் காமராஜர் பெயரில் இருந்தது. தற்போது இத்திட்டத்தை பிரதம மந்திரி … Read more

ஓ.பன்னீர்செல்வம் கையில் அதிமுக – எடப்பாடி பழனிசாமி அப்செட்!

அணியில் உள்ள மாவட்ட செயலாளர்கள், பக்கம் தாவ இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த ஜூலை மாதம் 11 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக, ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கில், அண்மையில் தீர்ப்பு அளித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன், இடைக்காலப் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டது செல்லாது என்றும், அதிமுகவில் ஜூன் மாதம் 23 ஆம் தேதி இருந்த நிலையே தொடரும் என்றும் தீர்ப்பு அளித்தார். இந்த தீர்ப்பு, எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு … Read more