கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் சென்ற பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து..!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் சென்ற பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துள்ளான நிலையில், பேருந்தின் பின் பக்க கண்ணாடியை உடைத்து சுற்றுலா பயணகள் மீட்க்கப்பட்டனர். குஜராத்  மாநிலத்தில் இருந்து சுமார் 30க்கும் மேற்பட்டோர் கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்த நிலையில், சொந்த ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது டம்டம் பாறை அருகே சென்ற போது, எதிர்பாராதவிதமாக பேருந்து பிரெக் பிடிக்காததால், பேருந்து சாலையில் இருந்து விலகி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதனையடுத்து, பேருந்துக்கு உள்ளே இருந்த சுற்றுலா … Read more

சென்னையில் மழைநீர் வடிகால் பணிகளை அரசு விரைந்து மேற்கொள்ளுமா?: டிடிவி தினகரன்

சென்னை: முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளோடு சென்னை மழைநீர் வடிகால் பணிகளை திமுக அரசு விரைந்து மேற்கொள்ளுமா என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்: “சென்னையில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுவதால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். பல இடங்களில் இதற்காக தோண்டப்பட்டுள்ள கால்வாய்கள், பாதுகாப்பு தடுப்புகள் எதுவும் இன்றி அப்படியே திறந்த நிலையில் உள்ளன. செப்டம்பர் … Read more

உதயநிதியுடன் கமல் நெருக்கம்: திமுகவுடன் டீல் பேசும் மநீம!

பாஜகவுக்கு ரஜினிகாந்த் மட்டுமல்ல வந்தாலும் ஏற்றுக் கொள்வோம் என்று கோவை தெற்கு தொகுதியில் கமல்ஹாசனை தோற்கடித்த பாஜக மகளிரணி தேசிய தலைவரும், எம்.எல்.ஏ.வுமான வானதி சீனிவாசன் பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கும் சூழலில், கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யமோ, பக்கம் சாய்ந்து வருவதாக தெரிகிறது. நாடாளுமன்ற மக்களவை தேர்தல் 2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ளது. இதற்காக அரசியல் கட்சிகள் இப்போதே தங்களது பணிகளை தொடங்கி விட்டன. 2024 தேர்தலிலும் மோடி தலைமையிலான பாஜக ஆட்சிதான் என்று அமித் ஷா சூளுரைத்துள்ளார். … Read more

கோவில்பட்டியில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் படுகொலை – பழிக்குப் பழியா ?

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள தெற்கு திட்டங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் பொன்ராஜ். இவர் கடந்த 15 வருடங்களாக ஊராட்சி மன்ற தலைவராக தொடர்ந்து மூன்று முறை பதவி வகித்தவர். தற்போது இவரது மனைவி திட்டங்குளம் ஊராட்சி மன்றத் தலைவராக பதவி வகித்து வருகிறார். இந்நிலையில், சம்பவத்தன்று மாட்டுத்தொழுவத்தில் அமர்ந்து இருந்த பொன்ராஜ்ஜை மர்ம நபர்கள் சிலர் சுற்றி வளைத்துள்ளனர். ஏதோ அசம்பாவிதம் அரங்கேறப் போகிறது என்பதை சுதாரிப்பதற்குள் அவர்கள் கொண்டு வந்திருந்த அரிவாளால் அவரை சரமாரியாக வெட்டிவிட்டு … Read more

கோடப்பமந்து பகுதியில் நிலச்சரிவை தடுக்கும் ஹைட்ரோ சீடிங் தொழில்நுட்பம் ஆய்வு

ஊட்டி : ஊட்டி காந்தல் பகுதியில் ரூ.1.35 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் நூலகம், அறிவுசார் மையம் மற்றும் கோடப்பமந்து பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஹைட்ரோ சீடிங் முறையில் புற்கள் வளர்த்து நிலச்சரிவை தடுக்கும் புதிய தொழில்நுட்பம் ஆகியவற்றை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு செய்தார். பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள், இளைஞர்கள் புத்தகங்கள் வாசிப்பதன் மூலம் அறிவை வளர்த்து கொள்ளும் வகையிலும், போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் வசதிக்காகவும் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் அனைத்து … Read more

`பாலியல் புகாருக்குள்ளான நபரின் கீழ் பணியாற்ற முடியாது’- கடிதம் கொடுத்த பிற பேராசிரியர்கள்

திருச்சி தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய ஆங்கிலத்துறை தலைவரின் கீழ் பணியாற்ற முடியாது என 17 பேராசிரியர்கள் கல்லூரி முதல்வரிடம் கடிதம் கொடுத்துள்ளனர். திருச்சி தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆங்கிலத் துறை தலைவர் மீது முதுகலை மாணவி ஒருவர் தமிழக முதல்வரின் தனிப் பிரிவிற்குப் பாலியல் புகார் கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார். இதுகுறித்து கல்லூரி முதல்வர் தலைமையில் விசாரணைக் குழு அமைத்து விசாரணை … Read more

#BigBreaking | சேலத்தில் அரசு பள்ளி மாணவிகள் 4 பேர் கூட்டாக தற்கொலை முயற்சி – வெளியான அதிர்ச்சி காரணம்.!

சேலம் வாழப்பாடி அருகே, அரசு ஆதிதிராவிடர் நல விடுதியில் தங்கியிருந்த பத்தாம் வகுப்பு மாணவிகள் நான்கு பேர் கூட்டாக எலி பேஸ்ட் சாப்பிட்டு தற்கொலை முயற்சித்த சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியும் ஏற்படுத்தி உள்ளது. புதுப்பாளையம் அரசு ஆதிதிராவிடர் நல விடுதியில் தங்கி படித்து வந்த பத்தாம் வகுப்பு பள்ளி மாணவிகள் 4 பேர், நான்கு நாள் விடுமுறையை முன்னிட்டு விடுதியில், வீட்டுக்கு செல்வதாக கூறிவிட்டு, தனது நண்பர்களின் இல்லத்திற்கு சென்றதாக தெரிகிறது. நேற்று பள்ளி திறந்த … Read more

வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் அரசு கொள்கைகளை வகுக்கிறது: முதல்வர் ஸ்டாலின்

சென்னை: “தமிழக அரசை பொருத்தவரை எந்த திட்டமிடுதலாக இருந்தாலும் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதாகத்தான் அது அமையும். அவ்வாறு அமைய வேண்டும் என்று நான் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருக்கிறேன். இதை மனதில் வைத்துதான் தமிழக அரசின் அனைத்து திட்டங்களும், கொள்கைகளும் வகுக்கப்படுகிறது” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தக துறை சார்பில் நடைபெற்ற காலணிகள் மற்றும் தோல் பொருட்கள் மாநாட்டை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். பின்னர் … Read more

க்ரீன் சிக்னல்..! ஒன்றிணையும் ஓபிஎஸ் – சசிகலா; எடப்பாடி அன்கோ ஷாக்!

– வி.கே.சசிகலா சந்திப்பு விரைவில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளராக, எடப்பாடி கே.பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து, ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கில், கடந்த சில நாட்களுக்கு முன்பு தீர்ப்பு அளித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன், இடைக்காலப் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டது செல்லாது என்றும், அதிமுகவில் ஜூன் மாதம் 23 ஆம் தேதி இருந்த நிலையே தொடரும் என்றும் தீர்ப்பு அளித்தார். இந்த தீர்ப்பு, எடப்பாடி பழனிசாமி … Read more

காவல்துறையினர் கால்களை பிடித்துக்கொண்டு கதறி அழுத சகோதரிகள்: சேலத்தில் பரபரப்பு

சேலத்தில் காவல்துறையினரின் கால்களை பிடித்து அழுத சகோதரிகளின் வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோ பார்ப்பதற்கே பதபதைக்கும் வகையில் உள்ளது. மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த சகோதரரை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக அடித்து இழுத்துச் சென்றதாக இந்த சகோதரிகள் குற்றச்சாட்டை வைத்துள்ளார்கள்.  சேலம் மாமாங்கம் பகுதியில் சதீஷ்குமார் என்பவர் கஞ்சா விற்பனை செய்ததாக பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் கஞ்சா மொத்த வியாபாரிகளிடம் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து, அவர் … Read more