அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை: இந்து சமய அறநிலையத் துறை சார்பில் மேம்படுத்தப்பட்ட 6 அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகள் உள்பட 9 பயிற்சிப் பள்ளிகளின் பயிற்சி வகுப்புகளை காணொலிக் காட்சி வாயிலாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து, அப்பள்ளிகளில் பயிலவுள்ள மாணவர்களுக்கு சேர்க்கை அனுமதி ஆணைகளை வழங்கினார். இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி: தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (22.8.2022) தலைமைச் செயலகத்தில், இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள சென்னை, திருவண்ணாமலை, மதுரை, திருச்செந்தூர், … Read more

ஓபிஎஸ் கொடுத்த 2வது சான்ஸ்… சொதப்பிய எடப்பாடியின் ரூ.1,000 கோடி பிளான்!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள பாபா இல்லத்தில் கோவை மாநகர் மாவட்ட செயலாளரும், அணியை சேர்ந்தவருமான கோவை செல்வராஜ் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசுகையில், நேற்று செய்தியாளர் சந்திப்பில் ஓபிஎஸ் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருக்கிறார். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. ஜெயலலிதாவால் விரட்டி அடிக்கப்பட்டவர் கே.பி.முனுசாமி. அவருக்கு கட்சியில் இரண்டாம் தலைவராக வாய்ப்பு வழங்கியவர் ஓ.பன்னீர்செல்வம். ஒருகட்டத்தில் கே.பி.முனுசாமிக்கு எதிராக பேசினார். அப்போது அவருக்கு ஆதரவாக நின்று ஓ.பன்னீர்செல்வம் குரல் கொடுத்திருக்கிறார். ஓபிஎஸ் அதிமுகவிற்காக … Read more

சென்னைத் தமிழ் என்றாலே இழிவாக நினைப்பதா?

மதுரைத் தமிழ், கொங்குத் தமிழ், கரிசல் தமிழ், நாஞ்சில் தமிழ், ஈழத் தமிழ் போலச் சென்னைத் தமிழும் ஒரு வட்டார வழக்குதான். ஆனால், எந்த வட்டார வழக்கும் சந்திக்காத ஒரு விமர்சனத்தை அல்லது எதிர்வினையை சென்னைத் தமிழ் சந்திக்கிறது. சென்னை வட்டார வழக்கைப் பேசுகின்றபோதே முகம் சுளிக்கின்ற தன்மை இன்றளவும் குறைந்தபாடில்லை. சென்னைத் தமிழ் என்றாலே அதன் கொச்சைத்தன்மை, புரியாத தன்மைதான் முன்வைக்கப்படுகிறது.  சென்னைத் தமிழை மேலெழுந்தவாரியாகப் பார்க்கும்போது அது படிக்காத மக்களின் கொச்சை மொழி என்று … Read more

சிதம்பரம் நடராஜர் கோயிலில் நகை சரிபார்ப்பு ஆய்வு தொடக்கம்..!!

கடலூர்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் 17 ஆண்டுகளுக்கு பிறகு இன்று நகைகள் சரிபார்க்கும் பணிகள் தொடங்கியது. சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள நகைகளை சரிபார்ப்பதற்கு கடந்த ஜூலை மாதம் 25ம் தேதி ஆய்வுக்கு வருவதாக தீட்சிதர்களுக்கு இந்துசமய அறநிலையத்துறை கடிதம் அனுப்பியது. ஆனால் அதற்கு தீட்சிதர்கள் அனுப்பிய பதில் கடிதத்தில், நகை பாதுகாப்பு குழுவில் உள்ள சிலர் வடமாநிலங்களில் ஆன்மிக நிகழ்ச்சிகளில் இருப்பதால் ஆகஸ்ட் மாதம் 2வது வாரத்திற்கு பிறகு வருமாறு தெரிவித்திருந்தனர். அதன்படி இன்று இந்துசமய … Read more

`அடுத்த 5 நாள்களுக்கு இங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு’- வானிலை மையம் எச்சரிக்கை

தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் செந்தாமரை கண்ணன் தெரிவித்துள்ளனர். அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையின்படி, `22.08.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். டெல்டா மாவட்டங்கள், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், புதுக்கோட்டை, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்கள், புதுச்சேரி … Read more

வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் 4 நாட்களுக்கு பரவலாக மழையும், ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்: தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. … Read more

சசிகலா பக்கம் பலமாக சாய்ந்த ஓபிஎஸ்: எடப்பாடிக்கு வேற வழியே இல்லையா?

அதிமுகவுக்குள் உட்கட்சி மோதல்கள் எப்போது முடிவுக்கு வரும் என கட்சித் தொண்டர்கள் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருகின்றனர். உச்சபதவியை கைப்பற்றுவதில் உள்ள அதிகார மோதல் தற்போது எந்த பாதையில் செல்கிறது என்பது குறித்து விசாரிக்கையில் முக்கிய தகவல்கள் கிடைக்கின்றன. அதிமுக பொதுக்குழு செல்லாது என சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி அமர்வு உத்தரவிட்ட நிலையில் மேல்முறையீடு செய்தார் . அந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நாளை பட்டியலிட நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். ஆகஸ்ட் … Read more

தமிழகத்தில் இருமொழி கல்வி கொள்கையே பின்பற்றப்படும் -அமைச்சர் பொன்முடி

Bilingual Policy in Tamil Nadu: சென்னை சோழிங்கநல்லூர் அடுத்த செம்மஞ்சேரியில் இயங்கி வரும் ஜேப்பியார் பொறியியல் கல்லூரியில் நடந்த ஜேப்பியார் பல்கலைக்கழக துவக்க விழாவில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி கலந்துகொண்டு துவங்கி வைத்தார். நிகழ்ச்சி மேடையில் பேசும் போது, திராவிட மாடல் ஆட்சியில் தான் பெண்களுக்கான கல்வி மேம்படுத்தப்பட்டது. பெரியார் அண்ணா வழியில் தமிழகத்தில் இரு மொழி கல்வி கொள்கையே பின்படுத்தப்படும் எனக் கூறினார். இந்த நிகழ்ச்சியில் ஜேப்பியார் பல்கலைகழக வேந்தர் ரெஜினா, சோழிங்கநல்லூர் … Read more

இரண்டு ஆண்டு இடைவெளிக்குப் பிறகு வெளிநாடுகளுக்கு பறக்கும் பனை ஓலைப் பொருட்கள்-கைவினைப் பொருட்களால் கவரும் ராமநாதபுரம் மகளிர் குழுக்கள்

சாயல்குடி : கொரோனா பாதிப்பால் முடங்கியதால் 2 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு பனை ஓலை கைவினை பொருட்கள் அமெரிக்கா போன்ற வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகி வருவதால் தொழிலாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.ராமநாதபுரம் மாவட்டத்தில் பனைமரத் தொழில் முக்கிய தொழிலாக இருந்து வருகிறது. 15 லட்சத்திற்கு அதிகமான பனை மரங்கள் உள்ளன. 2 லட்சம் குடும்பங்கள் பனை மரம் மற்றும் பனைமரம் சார்ந்த உப தொழில் செய்து வருகின்றனர். சாயல்குடி அருகே கன்னிராஜபுரம், நரிப்பையூர் தொடங்கி திருப்புல்லாணி, உச்சிப்புளி, ராமேஸ்வரம், தொண்டி என … Read more

கள்ளக்குறிச்சி: பள்ளிக் கலவரம் தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் புதிய உத்தரவு

கள்ளக்குறிச்சி பள்ளி கலவரம் தொடர்பாக சட்ட விரோதமாக கைது செய்யப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கக்கோரிய வழக்கை வேறு அமர்வுக்கு மாற்ற சென்னை உயர் நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது. கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணத்தை அடுத்து மூன்று நாட்களுக்கு பின் பள்ளியில் நடந்த கலவரம், தீவைப்பு சம்பவங்கள் தொடர்பாக சிறப்பு புலனாய்வு போலீசார், அப்பகுதியைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர். இதில், அப்பாவிகளும் கைது செய்யப்பட்டுள்ளதால் அவர்களை அடையாளம் காணக் கோரியும், அவர்களுக்கு இழப்பீடு வழங்க அரசுக்கு உத்தரவிடக்கோரியும், மதுரையை … Read more