இப்படியும் ஓர் உயர்ந்த உள்ளம்: அரசுப் பள்ளி மாணவர்களை உயரே பறக்க வைத்து ஆனந்தப்பட்ட பஞ்சாயத்து தலைவர்!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே சிக்காரம்பாளையம் ஊராட்சி உள்ளது. இதன் ஊராட்சி தலைவராக ஞானசேகரன் உள்ளார். இவர் ஊராட்சியிலுள்ள இளைஞர்களின் கல்வி திறனை ஊக்குவிக்கவும், விளையாட்டு திறனை அதிகரிக்கவும் பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வருகிறார். இதன் ஒருகட்டமாக அரசு பள்ளியில் படித்து வரும் மாணவர்கள், விமானத்தில் பயணம் செய்வது என்பது கனவாக மட்டுமே இருந்தது. இதனை நிறைவேற்றும் விதமாக சிக்காரம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட கண்ணார்பாளையம் அரசு பள்ளியை சேர்ந்த மாணவ –  மாணவிகள் –  ஆசிரியைகள் உள்பட மொத்தம் … Read more

ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணைய இறுதி அறிக்கை இன்று தமிழக அரசிடம் சமர்ப்பிப்பு..?

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட ஆறுமுகசாமி ஆணையம் இன்று தனது இறுதி அறிக்கையை தமிழக அரசிடம் சமர்ப்பிக்க உள்ளதாக கூறப்படுகிறது. 2017ல் அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையம் அப்பல்லோ மருத்துவமனை, எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் குழு, ஓபிஎஸ், சசிகலா என பல்வேறு தரப்பிடம் விசாரணையை மேற்கொண்டது. இறுதி அறிக்கையை தயார் செய்துள்ள ஆறுமுகசாமி ஆணையம் இன்று தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பிக்க உள்ளதாக கூறப்படுகிறது. Source link

ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை முதல்வரிடம் இன்று சமர்ப்பிப்பு

சென்னை: ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்தின் கால நீட்டிப்பு நாளையுடன் முடிவடையும் நிலையில், அதன் விசாரணை அறிக்கை முதல்வரிடம் இன்று சமர்ப்பிக்கப்படும் என்று தெரிகிறது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 2016-ல் மறைந்தார். அவரதுமரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறப்பட்ட நிலையில், அதுபற்றிவிசாரிக்க முன்னாள் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டு, விசாரணைநடைபெற்று வந்தது. சசிகலா, ஓபிஎஸ், அப்போலோ மருத்துவமனை மருத்துவர்கள் உள்ளிட்ட 154 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணை தொடர்பான அறிக்கை தயாரிக்கும் பணி நடைபெற்ற … Read more

குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த காட்டு யானை! வீடியோ வைரல்!

கோவை தொண்டாமுத்தூர் சுற்றுவட்டர பகுதியான அட்டுக்கல், குப்பேபாளையம், தேவராயபுரம், சிலம்பனூர், நரசீபுரம் உள்ளிட்ட பகுதிகள் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய கிராமங்கள் ஆகும். இந்த பகுதி மக்கள் அதிக அளவில் விவசாயம் செய்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த சில வாரங்களாக யானைகள் கூட்டமாகவும், ஒற்றை யானை என இரவு நேரங்களில் விளை நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. இதில் சுமார்‌ 20 வயது மதிக்கத்தக்க ஒற்றை டஸ்கர் இன யானை குப்போபாளையம், அட்டுக்கல் உள்ளிட்ட பகுதியில் … Read more

ஆத்தூர் அருகே கார் மீது ஆம்னி பேருந்து மோதி கோர விபத்து: 4 பெண்கள், ஒரு குழந்தை உள்பட 6 பேர் பரிதாபமாக பலி

சேலம்: சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே துக்க நிகழ்வுக்கு சென்ற ஆம்னி கார் மீது தனியார் ஆம்னி பேருந்து மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பெண்கள், 1 குழந்தை உள்பட 6 பேர் பலியானது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியை சேர்ந்த ஆறுமுகம் என்பவர் கடந்த மாதம் உயிரிழந்தார். அவரது 30ம் நாள் துக்க நிகழ்வுக்கு பல்வேறு ஊர்களில் இருந்து உறவினர்கள் கலந்து கொண்டனர். அவர்களில் 11 பேர் டீ … Read more

வெளிநாட்டு படிப்பு : ஆதி திராவிடர் மாணவர்களுக்கு ஆண்டு வருமான வரம்பு உயர்வு

ஆதித்திராவிடர் நலத்துறையின் மூலம் வெளிநாடு சென்று படிக்கும் மாணவ,மாணவிகளின் குடும்ப ஆண்டு வருமானம் மூன்று லட்சத்திலிருந்து 8 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ள நிலையில் இந்த ஆண்டு வெளிநாடு சென்று படிக்க கொஞ்சம் அதிகமான விண்ணப்பங்கள் வந்துள்ளதாக ஆதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தெரிவித்துள்ளார் கைத்தறி தொழிலை ஊக்குவிக்கும் வகையிலும், கைத்தறி நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையிலும் “கைத்தறிக்கு கைகொடுப்போம்” என்ற நிகழ்ச்சி கோவை ரெட் பீல்ட்ஸ் பகுதியில் உள்ள நிர்மலா மகளிர் கல்லூரியில் நடைபெற்றது. கைத்தறி … Read more

ஓபிஎஸ் வாழ்த்து செய்தி ஜெயா டிவியில் ஒளிபரப்பு – சசிகலாவுடன் இணைவதற்கு அச்சாரமா?

சென்னை: அதிமுகவின் அதிகாரப்பூர்வ தொலைக்காட்சியாக இருந்த ஜெயா டிவி 24-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நிலையில், அந்த டிவிக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்திருப்பதும், அந்த வாழ்த்து செய்தி அதே டிவியில் ஒளிபரப்பாகி இருப்பதும் அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது சசிகலாவுடன் ஓபிஎஸ் இணைவதற்கான அச்சாரமாக கட்சியினர், அரசியல் நோக்கர்களால் பார்க்கப்படுகிறது. ஜெயலலிதா இருக்கும் வரை ஜெயா டிவி அதிமுகவின் அதிகாரப்பூர்வ தொலைக்காட்சியாகவும், ‘நமது எம்ஜிஆர்’ அதிகாரப்பூர்வ நாளிதழாகவும் இருந்து வந்தது. அவர் முதல்வராக இருக்கும்போதும், … Read more

கலெக்டர்களுக்கு கடிதம் எழுதிய இறையன்பு: எடுத்த நடவடிக்கை என்ன?

தேசியக் கொடி ஏற்றுவதில் பிரச்சினைகள் ஏற்படாதவாறு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை அரசுக்குத் தக்கல் செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்குத் தலைமைச்செயலாளர் இறையன்பு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், “ஒரு சில கிராம ஊராட்சிகளில், சாதிய பாகுபாடுகள் காரணமாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் தேசியக் கொடி ஏற்றுவதில் பிரச்சினைகள் ஏற்படலாம் என்ற தகவல் கிடைக்கப்பெற்றதும், 75ஆவது சுதந்திர தின அமுதப் பெருவிழாவில் எவ்வித சாதிய பாகுபாடின்றி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களைக் கொண்டு, அனைத்து உள்ளாட்சி அமைப்புகளின் தலைமை அலுவலகங்களில் … Read more

ஆத்தூர் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 6 பேர் உயிரிழப்பு

சேலம்: சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே ஆம்னி பேருந்து மோதியதில் காரில் சென்ற 4 பெண்கள் உள்பட 6 பேர் உயிரிழந்தனர். துலுக்கனூர் புறவழிச்சாலையில் கார் சென்ற போது சேலத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற ஆம்னி பேருந்து மோதியது. விபத்தில் பலத்த காயம் அடைந்த மேலும் 6 பேர் மேல் சிகிச்சைக்காக சேலம் மருத்துத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

போக்குவரத்து துறையின் வருவாயை பெருக்க நடவடிக்கை – சேவைக் கட்டணங்கள் பல மடங்கு உயர்த்தப்படுகின்றன

சென்னை: போக்குவரத்துத் துறையின் வருவாயை அதிகரிக்கும் நோக்கில், போக்குவரத்து சேவைகளுக்கான கட்டணங்களை தமிழக அரசு பலமடங்கு உயர்த்தியுள்ளது. இந்தக் கட்டண உயர்வு இம்மாத இறுதியில் அமலாகும் எனக் கூறப்படுகிறது. தமிழக உள்துறையின்கீழ் செயல்பட்டு வரும் போக்குவரத்துத் துறை, உரிமம் வழங்குதல், வாகனப் பதிவு, பதிவு புதுப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், தகுதிச்சான்று வழங்குதல், மோட்டார் வாகன வரி, பசுமை வரி உள்ளிட்டவற்றின் மூலம் வருவாய் ஈட்டி வருகிறது. கடந்த ஆண்டில் இந்த வகையில் அரசுக்கு ரூ.5,272 கோடி வருவாய் … Read more