விநாயகர் சிலைகள் அமைக்க கட்டுப்பாடு கோரி மனு: வழக்கு தள்ளுபடி!

விநாயகர் சதுர்த்தி பண்டிகை வரும் ஆகஸ்ட் 31ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் சிலைகள் அமைக்க கட்டுப்பாடு விதிக்க கோரி திருப்பூரைச் சேர்ந்த இந்து முன்னேற்ற கழக தலைவரும், வழக்கறிஞருமான கோபிநாத் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், விநாயகர் சதுர்த்தியின் போது பொது இடங்களிலும், சாலைகளிலும், பிற மத வழிபாட்டுத் தலங்களுக்கு அருகிலும் அனுமதியின்றி விநாயகர் சிலைகள் வைக்கப்படுவதாகவும், அவை போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்துவதுடன், சட்டம் – ஒழுங்கு … Read more

மது விற்பனை… மதுரைதான் இந்த முறையும் டாப்

தமிழ்நாடு அரசின் டாஸ்மாக் நிறுவனம் சில்லரை கடைகள் வாயிலாக பீர் மற்றும் மது வகைகளை விற்பனை செய்து வருகிறது. தினமும் சராசரியாக, பல கோடி ரூபாய் மதிப்பிலான மது வகைகள் விற்கப்படுகின்றன. இது சனி, ஞாயிறு வார விடுமுறை நாட்களில் அதிகரிக்கும். டாஸ்மாக்கை பொறுத்தவரை, சுதந்திர தினம், குடியரசு தினம், மே தினம், மகாவீர் ஜெயந்தி உள்ளிட்ட நாள்களில் விடுமுறை ஆகும். அந்த வகையில் இந்த வருட சுதந்திர தினத்துக்கும் டாஸ்மாக்குக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. எனவே குடிமகன்கள் … Read more

இறந்தவரை தகனம் செய்வதிலும் பிரச்னையா? நம்ம நாட்டுலதான் இப்படிலா நடக்குது: ஐகோர்ட் வேதனை

நமது நாட்டில் மட்டுமே அனைத்து செயல்பாடுகளுக்கும் பிரச்சனை எழுகிறது. இறந்த மனிதனை தகனம் செய்யவதில்கூட பிரச்னையா? என சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பியிருக்கிறார்கள். சிவகாசி திருத்தங்கல்லை சேர்ந்த பால்பாண்டி, உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், “விருதுநகர் மாவட்டம், சிவகாசி, கீழத்திருத்தங்கல் கிராமத்தில் சுமார் 2 ஹெக்டேர் பரப்பளவில் நீர்நிலை உள்ளது. இந்த நீர்நிலைக் கண்மாயே விவசாயத்திற்கும், இப்பகுதியின் நிலத்தடிநீர் ஆதாரமாகவும் உள்ளது. இந்த நீர்நிலையை ஆக்கிரமித்து உள்ளாட்சி அமைப்பு … Read more

பொறியியல் சேர்க்கை தரவரிசை வெளியீடு; 20-ம் தேதி முதல் கவுன்சலிங் என பொன்முடி அறிவிப்பு

Tamilnadu Engineering counselling rank list released: தமிழகத்தில் பொறியியல் படிப்புகளில் சேர விண்ணப்பித்தவர்களுக்கான தரவரிசைப் பட்டியலை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை அமைப்பு நடத்தி வருகிறது. இந்த ஆண்டு பொறியியல் படிக்க மாணவர்கள் இடையே ஆர்வம் அதிகரித்துள்ளது. இதனால் பொறியியல் கலந்தாய்வுக்கான விண்ணப்பங்கள் அதிகரித்து இருந்தது. இதையும் படியுங்கள்: பொறியியல் கவுன்சலிங்; எந்த கோர்ஸ் படிக்கலாம்? வேலைவாய்ப்பு அதிகம் உள்ள படிப்புகள் எவை? இந்தநிலையில், … Read more

'இயேசுவே இந்தியாவை ஆசீர்வதியும்' என சர்ச்சை வாசகம் எழுதி தேசியக்கொடி ஏற்றிய ஆசிரியர் கைது.!

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் குறிஞ்சி நகரை சேர்ந்தவர் எபின் (வயது 36). இவர் தாராபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் சுதந்திர தின அமுதப் பெருவிழாவை முன்னிட்டு பிரதமர் மோடி அனைத்து இல்லங்களிலும் தேசியக் கொடி ஏற்றி ஒற்றுமையை வகைப்படுத்த வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி வந்தார். அதன் அடிப்படையில் அனைத்து வீடுகளிலும் இந்திய தேசிய மூவர்ணக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தப்பட்டது. அந்த வகையில் பள்ளி ஆசிரியர் தேசியக் கொடியில் … Read more

பொறியியல் மாணவர் சேர்க்கை | இந்தாண்டு ரேண்டம் எண் இல்லை: என்ன காரணம்? 

சென்னை: பொறியியல் மாணவர்கள் சேர்க்கையில் இந்தாண்டு ரேண்டம் எண் வெளியிடப்படவில்லை. 2022ம் ஆண்டுக்கான பொறியியல் தரவரிசைப் பட்டியலை உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று வெளியிட்டார். விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட சிறப்புப் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு வரும் 20ம் தேதி முதல் தொடங்கும் என்று அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார். இந்தாண்டு குறிப்பாக ரேண்டம் எண் வெளியிடப்படவில்லை. தர வரிசையில் ஒரே கட் ஆப் மதிப்பெண் வரும் மாணவர்களில், முன்னுரிமை மாணவரை தேர்வு செய்ய ரேண்டம் எண் பயன்படுகிறது. … Read more

ஓபிஎஸ் க்ரீன் சிக்னல்.. அதிமுகவில் சசிகலா – டிடிவி தினகரன்; எடப்பாடி அன்கோ ஷாக்!

அதிமுகவில் வி.கே.சசிகலா, டிடிவி தினகரன் இணைவரா என்ற கேள்விக்கு, ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் வைத்திலிங்கம் பதில் அளித்துள்ளார். அஇஅதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளராக, கடந்த ஜூலை மாதம் 11 ஆம் தேதி, முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். ஒற்றைத் தலைமை விவகாரத்திற்கு தொடக்கத்தில் இருந்தே எதிர்ப்புத் தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்கினார். இதனால் கடும் அதிருப்தி அடைந்த ஓ.பன்னீர்செல்வம், பதிலுக்கு போட்டியாக, அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில், … Read more

TNEA 2022: பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு!

சென்னை கிண்டியில் உள்ள தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தில் 2022-23 ம் கல்வி ஆண்டிற்கான பொறியியல் மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியலை உயர்க்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி வெளியிட்டார்.  பொன்முடி வெளியிட்ட சில முக்கிய தகவல்கள்: – 2022-23 ம் ஆண்டிற்கான தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. சென்ற ஆண்டை காட்டிலும் அனைத்து பிரிவிலும் விண்ணப்பித்தோர் இந்த ஆண்டு அதிகம். இந்த ஆண்டு பொறியியல் படிப்பில் சேர மொத்தம் 2லட்சத்து 11 ஆயிரத்து  905  மாணவர்கள் விண்ணப்பித்தனர் .  … Read more

வானில் வர்ணஜாலம் காட்டிய பட்டங்கள் – பரவசத்தோடு கண்டுரசித்த பொதுமக்கள்

மாமல்லபுரம் கடற்கரையோரம் மூன்று நாட்களாக பட்டம் விடும் திருவிழா நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே பட்டம் விடும் திருவிழா கோலாகலமாக துவங்கி கடந்த மூன்று நாட்களாக நடைபெற்று வந்தது. இந்த பட்டம் விடும் திருவிழாவில் கிறிஸ்மஸ் தாத்தா, டிராகன், டால்பின் தேசியக்கொடி உள்ளிட்ட வடிவிலான காற்றாடிகள் வானில் பறந்து வர்ணஜாலம் காட்டின. தமிழகத்தில் முதல்முறையாக நடைபெற்ற இந்த காற்றாடி திருவிழாவை வெளிநாட்டவரும் வெளி மாநிலத்தவரும் கண்டுகளித்தனர். இறுதி நாளான நேற்று இந்த பட்டம் விடும் திருவிழாவை காண … Read more

மேட்டுப்பாளையம்: டாஸ்மாக் பாரில் புகுந்து கேஷியர் கொலை; அதிர வைக்கும் சி.சி.டி.வி காட்சிகள் 

Mettupalayam Tamil News: சிவகங்கை மாவட்டம் கன்டானபட்டி கிராமத்தை சேர்ந்தவர் காளையப்பன் (வயது 28). இவர் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள சிறுமுகையில் செயல்பட்டு வரும் அரசு மதுபான கடை எண் 1812 பாரில் கேஷியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று முன் தினம் 14-ம் தேதி காலை பாரில் வழக்கமாக பணியை மேற்கொண்டிருந்த காளையப்பனை கடை பாருக்குள் நுழைந்த ஆறு பேர் கொண்ட மர்ம கும்பல் கத்தியால் சராமாரியாக வெட்டினர். இதனால், அவர் ரத்த வெள்ளத்தில் … Read more