சென்னை வங்கிக் கொள்ளை | அச்சரப்பாக்கம் காவல் ஆய்வாளர் வீட்டில் 3.5 கிலோ தங்கம் பறிமுதல்

சென்னை: வங்கிக் கொள்ளையில் அச்சரப்பாக்கம் காவல் ஆய்வாளருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்ததை தொடர்ந்து அவரது வீட்டில் இருந்து 3.5 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சென்னை அரும்பாக்கம் ரசாக் கார்டன் சாலையில் பெடரல் வங்கியின் நகைக்கடன் பிரிவான பெட் வங்கி நிதிச் சேவைகள் மையம் இயங்கி வருகிறது. இந்த வங்கியில் வாடிக்கையாளர்கள் அடகு வைத்திருந்த 31.7 கிலோ தங்க நகைகள், கடந்த 13-ம் தேதி கொள்ளை போனது. பட்டப்பகலில் வங்கி ஊழியர்களை கத்திமுனையில் மிரட்டி கட்டிப் போட்டுவிட்டு … Read more

ஆரணி பஸ் நிலையத்தில் உள்ள ஓட்டலில் வழங்கிய காடை பிரையில் புழுக்கள்

ஆரணி: திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி டவுன் பழைய பஸ் நிலையம் அருகே அசைவ ஓட்டல் உள்ளது. இந்த ஓட்டலில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு 2 வாலிபர்கள் மதிய உணவு சாப்பிட்டுள்ளனர். அப்போது அவர்களுக்கு வழங்கப்பட்ட காடை பிரையில் புழுக்கள் இருந்ததாக கூறப்படுகிறது.  ஓட்டல் உரிமையாளர், அவை புழுக்கள் இல்லை. முட்டையை ப்ரை செய்யும்போது, அதன் கொழுப்பு சில நேரங்களில் திரிதிரியாக மாறி புழுக்களை போல் தெரியும் என கூறியுள்ளார். இதுகுறித்து அந்த வாலிபர்கள், ஆரணி உணவு … Read more

ரொம்ப மட்டமான ப்ளானா இருக்கே சிவகாமி…. இன்றைய கலாய் மீம்ஸ்

உலக நிகழ்வுகள் முதல் உள்ளூர் குழாயடி சண்டை வரை அனைத்தையும் மீம்ஸ்களாக பதிவிடும், நெட்டிசன்கள் தற்போது சீரியலையும் விட்டு வைப்பதில்லை. சின்னத்திரை சீரியல்கள் மற்றும் ரியாலிட்டி ஷோக்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தாலும், இந்த நிகழ்ச்சிகள் தொடர்பான மீம்ஸ்கள் அதிக ரசிகர்களை ஈர்த்துள்ளது. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் இந்த சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்களை விடவும் இது தொடர்பாக வரும் மீம்ஸ்களுக்கு ரசிகர்களின் எண்ணிக்கை அதிகம். “தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் … Read more

கேட்பாரற்று இருக்கும் தேசியக் கொடிகள்: கண்ணியமாக இறக்க நடவடிக்கை எடுக்குமா சென்னை மாநகராட்சி? 

சென்னை: 75வது சுதந்திர தின நிறைவு தினத்தை முன்னிட்டு வீடுகள், கடைகள், தெருக்களில் ஏற்ப்பட்ட தேசியக் கொடிகள் தற்போது கேட்பாரற்று உள்ளது. இந்தக் கொடிகளை கண்ணியத்துடன் இறக்க சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. நாடு சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவு பெறுவதைக் குறிக்கும் வகையில் ‘சுதந்திர தின அமுதப் பெருவிழா’ (அம்ரித் மஹோத்சவ்) என்ற பெயரில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. இதன் ஒரு பகுதியாக ஆக.13 முதல் 15ம் தேதி … Read more

தமிழ் அறிஞரும் பேச்சாளருமான நெல்லை கண்ணன் காலமானார்; முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

நெல்லை: தமிழ் அறிஞரும், பேச்சாளரும், காங்கிரஸ் பிரமுகருமான நெல்லை கண்ணன், உடல் நலக்குறைவால் நெல்லையில் நேற்று காலமானார். பட்டிமன்றம், இலக்கிய நிகழ்ச்சிகள், ஆன்மிகம் உள்ளிட்ட பொது நிகழ்ச்சிகளில் சிறந்த  பேச்சாளராக திகழ்ந்தவர் நெல்லை கண்ணன் (77). காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். நகைச்சுவையாகவும், நெல்லை தமிழில் அற்புதமாகவும் பேசக் கூடியவர். தமிழ்க்கடல் என்றும், நெல்லையைச் சேர்ந்தவர் என்பதால் நெல்லை கண்ணன் என்றும் அழைக்கப்பட்டார்.  இவருக்கு தமிழக அரசின் 2021ம் ஆண்டின் இளங்கோவடிகள் விருது சமீபத்தில் வழங்கப்பட்டது. சமீப காலமாக … Read more

மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்து – ஒருவர் பலி

மதுரை மாவட்டத்தில் மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி பகுதியை சேர்ந்தவர் துரைராஜ்(37). இவர் தனியார் நிறுவனத்தில் சர்வீஸ் மேனாக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி சங்கரேஸ்வரி. இந்நிலையில் நேற்று மாலை துரைராஜ் இருசக்கர வாகனத்தில் பாப்பநாயக்கன்பட்டி சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது எதிரே சக்திவேல் என்பவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் ஒன்று துரைராஜ் இருசக்கர வாகனம் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் படுகாயமடைந்த … Read more

புகழஞ்சலி – நெல்லை கண்ணன் | ''துணிவுடன் மேடையில் பேசும் ஆற்றல் மிக்கவர்'' – கி.வீரமணி

சென்னை: நெல்லை கண்ணன் மறைவினால் தமிழகம் ஒரு சிறந்த இலக்கியத் திறனாய்வாளரை இழந்தது என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: சிறந்த தமிழ் அறிஞரும், சமூகப் பார்வையுடன் கூடிய முற்போக்கு சிந்தனையாளரும், சிறந்த இலக்கியப் பேச்சாளரும், துணிவுடன் எந்த மேடையிலும் பேசும் ஆற்றல் கொண்டவருமான நண்பர் நெல்லை கண்ணன் வயது முதிர்வு காரணமாக நெல்லையில் இன்று (18.8.2022) காலமானார் என்ற செய்தி அறிந்து மிகவும் வருந்துகிறோம். தமிழகம் … Read more

ஆரணியில் தொடர் முறைகேடு, பால் கூட்டுறவு சங்க தலைவி பதவி பறிப்பு; சென்னை கூடுதல் ஆணையர் அதிரடி

ஆரணி: ஆரணி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில், தொடர் முறைகேட்டில் ஈடுபட்ட அதிமுகவை சேர்ந்த தலைவி பதவியை ரத்து செய்து, சென்னை கூடுதல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார். திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி டவுன், ஆரணிப்பாளையம் பகுதியில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் செயல்பட்டு வருகிறது. இங்கு நிர்வாகக்குழு தலைவியாக அதிமுகவை சேர்ந்த குமுதவல்லி, துணைத்தலைவராக சைதை சுப்பிரமணி மற்றும் உறுப்பினர்கள் உட்பட 11 பேர் உள்ளனர். இந்த கூட்டுறவு சங்கத்தில் கடந்த சில ஆண்டுகளாக சென்னை ஆவின் நிறுவனத்திற்கு … Read more

'தேசப்பற்று பெயரில் மக்களை திசைதிருப்பிவிட்டு பில்கிஸ் பானு வழக்கு குற்றவாளிகள் விடுதலை' – சீமான்

திருச்சி: “தேசிய கொடி, தேசப்பற்று என்று அனைவரையும் திசை திருப்பிவிட்டு, பில்கிஸ் பானு வழக்கு குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். திருச்சி நீதிமன்ற வளாகத்தில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: ” 16 ஆண்டுகள் சிறையில் இருந்த நேரு எங்கே? மோதிலால் நேருவின் மகன். மிகப்பெரிய பணக்காரரின் மகனான நேரு 16 ஆண்டுகள் சிறையில் இருந்தார். … Read more

அதிமுக பிரமுகரின் தம்பி வெட்டிக்கொலை

நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அருகே தெற்குபொய்கைநல்லூரை சேர்ந்தவர் மனோகர் (40). பைனான்ஸ் மற்றும் விடுதிகள் நடத்தி வந்தார். நேற்றுமுன்தினம் இரவு நண்பர் மணிவேலுடன் அலுவலகத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார். நள்ளிரவில் பைக்கில் ஹெல்மெட் அணிந்து வந்த 3 பேர் கொண்ட கும்பல், உள்ளே புகுந்து மனோகரை அரிவாளால் சரமாரி வெட்டியது. தடுக்க முயன்ற மணிவேலுக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. பின்னர் அந்த கும்பல் பைக்கில் தப்பியது. அப்பகுதியினர் வந்து இருவரையும் மீட்டு நாகப்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி … Read more