அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பிய இளையராஜாவுக்கு உற்சாக வரவேற்பு

சென்னை: இசையமைப்பாளர் இளையராஜா, தடகள வீராங்கனை பி.டி.உஷா உள்ளிட்டோர் மாநிலங்களவை எம்பியாக அண்மையில் அறிவிக்கப்பட்டனர். இசை நிகழ்ச்சிக்காக இளையராஜா அமெரிக்கா சென்றிருந்ததால் பலரும் சமூக வலைதளங்கள் மூலம் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வந்தனர். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளான நேற்று முன்தினம், புதிதாக தேர்வு செய்யப்பட்ட நியமன எம்பிக்களுக்கு மாநிலங்களவை தலைவர் வெங்கய்ய நாயுடு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அமெரிக்காவில் இருந்த காரணத்தால் இளையராஜாவால் பதவியேற்பு விழாவுக்கு வர இயலவில்லை. இந்நிலையில், இசை நிகழ்ச்சியை … Read more

கள்ளக்குறிச்சி: 3 மணி நேரம் நடந்த மறு உடற்கூராய்வு: மாணவியின் உடலை பெற்றுக்கொள்ள நோட்டீஸ்

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில், தனியார் பள்ளி மாணவியின் உடல் மறு கூராய்வு செய்யப்பட்டது. 3 மணி நேரத்திற்கும் மேலாக உடற்கூராய்வு நடந்த நிலையில், மாணவியின் உடல் மருத்துவமனையிலேயே வைக்கப்பட்டுள்ளது. சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் மாணவியின் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாகக்கூறி கலவரம் வெடித்தது. மாணவியின் பெற்றோர் கோரியதன் அடிப்படையில் மறு கூராய்வு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டன. மாணவியின் பெற்றோர் தரப்பினரையும் மறு கூராய்வில் அனுமதிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து நீதிமன்ற உத்தரவுபடி, கள்ளக்குறிச்சி … Read more

பீன்ஸ், முட்டை, வாழைப் பழம்… ‘வீட்டுல விசேஷம்’ நடைபெற டாப் 5 உணவுகள்!

கருவுறாமை என்பது பல நவீன தம்பதிகளின் வாழ்க்கையைத் தொந்தரவு செய்யும் ஒரு பிரச்சனையாகும். செயலற்ற வாழ்க்கை முறை தேர்வுகள் மற்றும் ஆரோக்கியமற்ற பழக்கவழக்கங்கள் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக இது கணிசமாக வளர்ந்து வருகிறது. கருவுறுதலின் முழு செயல்முறையையும் சீர்குலைக்கும் மிக முக்கியமான காரணிகளில் ஒன்று வாழ்க்கை முறை அல்லது ஒரு நபர் தனது அன்றாட வாழ்க்கையில் மேற்கொள்ளும் நிலையான ஆரோக்கியமற்ற நடைமுறைகள் ஆகும். ஒருவர் இனப்பெருக்க பிரச்சனைகளை எதிர்கொள்ளும் போது, ​​அது அவர்களின் வாழ்க்கை முறையை … Read more

ஓ பன்னீர்செல்வத்தின் தலையில் இடியை இறக்கிய செய்தி.. எடப்பாடி மாஸ்டர் பிளானில் ஓபிஎஸ் அவுட்.!!

அதிமுகவில் இருந்து முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் நீக்கப்படுவதாக அக்கட்சியின் இடைக்கால பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதையடுத்து, ஓ பன்னீர்செல்வம் வகித்து வந்த பொருளாளர் பதவிக்கு திண்டுக்கல் சீனிவாசன் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக கூறி வங்கிகளுக்கு கடிதம் அனுப்பினார்.  அதிமுக கட்சி தொடர்பான வங்கி வரவு, செலவு உள்ளிட்ட நடவடிக்கைகளை திண்டுக்கல் சீனிவாசன் மேற்கொள்வார். காசோலைகளில் கையெழுத்திடும் அதிகாரத்தை அவரே மேற்கொள்வார் எனவும் கடிதத்தில் எடப்பாடி பழனிசாமி தெரிவித்து இருந்தார். இதையடுத்து, ஓ பன்னீர்செல்வம் அதிமுக கணக்கு … Read more

வரும் 26-ம் தேதி இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை..!!

அரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரத்தில் மாமன்னன் ராஜேந்திர சோழனால் ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்புஅருள்மிகு பிரகதீஸ்வரர் ஆலயம்  கட்டப்பட்டுள்ளது.  உலக பிரசித்தி பெற்ற இந்த ஆலயத்தில் மாமன்னன் ராஜேந்திர சோழனின் பிறந்தநாளை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் திருவாதிரை விழாவானது அப்பகுதிவாழ் மக்களால் வெகு விமர்சையாகவும் சிறப்புடனும் கொண்டாடப்பட்டு வருகிறது.  மாவட்ட அளவில் கொண்டாடப்படும் இந்த விழாவை அரசு விழாவாக கொண்டாட வேண்டும் தமிழ்நாடு அரசு  அறிவித்திருந்தது.  இந்நிலையில் 26-ம் தேதி ஆடி திருவாதிரையில் மாமன்னன் … Read more

நீட் விலக்கு மசோதா குறித்து தமிழக அரசிடம் விளக்கம் கேட்டுள்ளோம் – மக்களவையில் மத்திய அரசு தகவல்

புதுடெல்லி: நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரும் மசோதா குறித்து தமிழ்நாடு அரசிடம் விளக்கம் கேட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. தமிழக அரசின் நீட் விலக்கு மசோதா தொடர்பான கேள்விக்கு, மக்களவையில் எழுத்துபூர்வமாக அளித்த பதிலில் மத்திய உள்துறை இணையமைச்சர் அஜய் குமார் மிஸ்ரா கூறியிருப்பதாவது: நீட் தேர்வில் இருந்து விலக்கு கோருவதற்காக, ‘இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான தமிழ்நாடு மாணவர் சேர்க்கை, 2021’ என்ற பெயரில் மசோதா ஒன்றை தமிழ்நாடு அரசு தயாரித்தது. மத்திய அரசின் பரிசீலனைக்காகவும், … Read more

பூமி பூஜையால் அப்செட் ஆன திமுக எம்பி: கார்த்தி சிதம்பரம் முதல் நீதிபதி சந்துரு வரை குவியும் விமர்சனம்

தர்மபுரி திமுக எம்பி செந்தில்குமார், சாலை திட்டத்தை துவக்கி வைக்கும் நிகழ்வில் பூமி பூஜை நடத்தப்பட்டது தொடர்பாக மூத்த அதிகாரியை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.  இவரிடன் நடவடிக்கையை பல விமர்சனங்களை உருவாக்கி உள்ளது.   2019 மக்களவை தொகுதி தேர்தலில் வியக்கத்தகுந்த வெற்றியைபெற்றவர் செந்தில்குமார். இவர் சமீபத்தில் சாலை திட்டம் தொடர்பான அரசு விழாவில் கலந்துகொண்டார். அப்போது பூமி பூஜை நடத்தப்பட்டது. இந்நிலையில் இது போன்ற விஷயங்களை ஏன் நடத்துகிறீர்கள்?. இது மதவாத ஆட்சியா இல்லை திராவிட … Read more

தர்மபுரி || குடும்ப தகராறு காரணமாக பெண் தற்கொலை.!

தர்மபுரியில் குடும்ப தகராறு காரணமாக பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளார். தர்மபுரி மாவட்டம் வேப்பம்பட்டி பகுதியை சேர்ந்தவர் முனுசாமி. இவரது மனைவி ஜீவா (45). இந்நிலையில் குடும்பத்தில் கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த தகராறு முற்றிய நிலையில், மன வேதனை அடைந்த ஜீவா தற்கொலை செய்வதற்காக விஷ செடி ஒன்றின் இலைகளை அரைத்து தின்றுவிட்டு மயங்கி கிடந்துள்ளார். இதை பார்த்த குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். … Read more

மாணவி மரணம் எதிரொலி.. அரசு அதிரடி அறிவிப்பு..!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தில், மாணவி பயின்ற சக்தி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி சூறையாடப்பட்டது. அப்பள்ளியின் பேருந்து உள்ளிட்ட வாகனங்கள் மட்டுமின்றி பள்ளி அலுவலகத்தில் இருந்த மாணவர்களின் சான்றிதழ்கள் உள்ளிட்ட பலவும் தீக்கிரையாக்கப்பட்டன. இந்நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் மற்றும் எஸ்.பி செல்வக்குமார் ஆகியோர் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தமிழக அரசின் தலைமைச் செயலர் இறையன்பு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். அதன்படி, கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் பணியிட மாற்றம் … Read more