மின்கட்டண உயர்வை கண்டித்து 23-ம் தேதி பாஜக போராட்டம்

சென்னை: தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: திமுக அரசு, தான் கொடுத்த வாக்குறுதிகளுக்கு மாறாக செயல்பட்டு வருகிறது. முதலில் சொத்து வரி உயர்வு, இப்போது மின் கட்டண உயர்வு. மத்திய அரசு, மாநில மின் பகிர்மான மையங்களில் சீர்திருத்தங்களைக் கொண்டு வர ரூ.3.03 லட்சம் கோடி செலவிடவுள்ளது. தமிழக மின் உற்பத்தி மற்றும் பகிர்மான நிறுவனத்துக்கு ரூ.35,981 கோடி வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. கட்டணத்தை உயர்த்தவில்லை என்றால் … Read more

‘உதயநிதியின் பணிகள்; தந்தையாக அல்லாமல் தலைவராக மகிழ்கிறேன்’: ஸ்டாலின் கடிதம்

திமுக தலைவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன்பிறப்புகளுக்கு எழுதியுள்ள கடிதத்தில், திமுக இளைஞரணியை உதயநிதி சிறப்பாக முன்னெடுத்து வருவதாகவும் அதைக் கண்டு தந்தையாக மட்டுமல்லாமல் தலைவராக மகிழ்கிறேன் என்று எழுதியுள்ளார். திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உடன்பிறப்புகளுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: “கழகம் வில்லென்றால் இளைஞரணி கணை என்றார் கலைஞர்! 42 ஆண்டுகள் கடந்தும் அக்கணையின் வேகமும் வலிமையும் கூர்மையும் குறையவில்லை! மாறாகக் கூடிக்கொண்டே போகிறது. காலத்திற்கும் களத்திற்கும் ஏற்ப கடமையாற்றி, கழகத்துக்கு இளைஞரணி துணைநிற்க வேண்டும்!எதையும் தாங்கும் … Read more

மீண்டும் பரபரப்பு.. சிக்கலில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. தமிழக அரசுக்கு பறந்த கடிதம்.!!

கடந்த 2016 ஆம் ஆண்டு குட்கா ஆலை அதிபர் மாதவராவின் குடோனில் வருமானவரித்துறை நடத்திய சோதனையில் சிக்கிய டைரியில், சென்னையின் முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் உள்ளிட்ட அதிகாரிகள், முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் உள்ளிட்டோரின் பெயர்கள் இடம்பெற்றிருந்ததாக தகவல் வெளியானது.  இது தொடர்பான வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்ட நிலையில், சுமார் 35 இடங்களில் அதிகாரிகள் திடீரென சோதனை ஈடுபட்டனர். குறிப்பாக சென்னை நொளம்பூரிலுள்ள முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் வீட்டில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அதேபோன்று … Read more

மனைவி என்று நினைத்து மகனைக் கொன்ற தந்தை!!

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த அங்குசெட்டிபாளையம் இருளர் குடியிருப்பை சேர்ந்த முருகன் என்பவர் செங்கல் சூளையில் கல் அறுக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சுமதி என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் 2 மகள்கள் உள்ளனர். மகன் அர்ஜுன் (14) அதே பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வந்தான்.  குடிபழக்கத்திற்கு அடிமையான முருகன், கடந்த சில நாட்களாக வேலைக்கு செல்லாமல் மனைவியிடம் குடிக்க பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு … Read more

அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பிய இளையராஜாவுக்கு உற்சாக வரவேற்பு

சென்னை: இசையமைப்பாளர் இளையராஜா, தடகள வீராங்கனை பி.டி.உஷா உள்ளிட்டோர் மாநிலங்களவை எம்பியாக அண்மையில் அறிவிக்கப்பட்டனர். இசை நிகழ்ச்சிக்காக இளையராஜா அமெரிக்கா சென்றிருந்ததால் பலரும் சமூக வலைதளங்கள் மூலம் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வந்தனர். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளான நேற்று முன்தினம், புதிதாக தேர்வு செய்யப்பட்ட நியமன எம்பிக்களுக்கு மாநிலங்களவை தலைவர் வெங்கய்ய நாயுடு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அமெரிக்காவில் இருந்த காரணத்தால் இளையராஜாவால் பதவியேற்பு விழாவுக்கு வர இயலவில்லை. இந்நிலையில், இசை நிகழ்ச்சியை … Read more

கள்ளக்குறிச்சி: 3 மணி நேரம் நடந்த மறு உடற்கூராய்வு: மாணவியின் உடலை பெற்றுக்கொள்ள நோட்டீஸ்

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில், தனியார் பள்ளி மாணவியின் உடல் மறு கூராய்வு செய்யப்பட்டது. 3 மணி நேரத்திற்கும் மேலாக உடற்கூராய்வு நடந்த நிலையில், மாணவியின் உடல் மருத்துவமனையிலேயே வைக்கப்பட்டுள்ளது. சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் மாணவியின் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாகக்கூறி கலவரம் வெடித்தது. மாணவியின் பெற்றோர் கோரியதன் அடிப்படையில் மறு கூராய்வு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டன. மாணவியின் பெற்றோர் தரப்பினரையும் மறு கூராய்வில் அனுமதிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து நீதிமன்ற உத்தரவுபடி, கள்ளக்குறிச்சி … Read more

பீன்ஸ், முட்டை, வாழைப் பழம்… ‘வீட்டுல விசேஷம்’ நடைபெற டாப் 5 உணவுகள்!

கருவுறாமை என்பது பல நவீன தம்பதிகளின் வாழ்க்கையைத் தொந்தரவு செய்யும் ஒரு பிரச்சனையாகும். செயலற்ற வாழ்க்கை முறை தேர்வுகள் மற்றும் ஆரோக்கியமற்ற பழக்கவழக்கங்கள் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக இது கணிசமாக வளர்ந்து வருகிறது. கருவுறுதலின் முழு செயல்முறையையும் சீர்குலைக்கும் மிக முக்கியமான காரணிகளில் ஒன்று வாழ்க்கை முறை அல்லது ஒரு நபர் தனது அன்றாட வாழ்க்கையில் மேற்கொள்ளும் நிலையான ஆரோக்கியமற்ற நடைமுறைகள் ஆகும். ஒருவர் இனப்பெருக்க பிரச்சனைகளை எதிர்கொள்ளும் போது, ​​அது அவர்களின் வாழ்க்கை முறையை … Read more

ஓ பன்னீர்செல்வத்தின் தலையில் இடியை இறக்கிய செய்தி.. எடப்பாடி மாஸ்டர் பிளானில் ஓபிஎஸ் அவுட்.!!

அதிமுகவில் இருந்து முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் நீக்கப்படுவதாக அக்கட்சியின் இடைக்கால பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதையடுத்து, ஓ பன்னீர்செல்வம் வகித்து வந்த பொருளாளர் பதவிக்கு திண்டுக்கல் சீனிவாசன் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக கூறி வங்கிகளுக்கு கடிதம் அனுப்பினார்.  அதிமுக கட்சி தொடர்பான வங்கி வரவு, செலவு உள்ளிட்ட நடவடிக்கைகளை திண்டுக்கல் சீனிவாசன் மேற்கொள்வார். காசோலைகளில் கையெழுத்திடும் அதிகாரத்தை அவரே மேற்கொள்வார் எனவும் கடிதத்தில் எடப்பாடி பழனிசாமி தெரிவித்து இருந்தார். இதையடுத்து, ஓ பன்னீர்செல்வம் அதிமுக கணக்கு … Read more

வரும் 26-ம் தேதி இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை..!!

அரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரத்தில் மாமன்னன் ராஜேந்திர சோழனால் ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்புஅருள்மிகு பிரகதீஸ்வரர் ஆலயம்  கட்டப்பட்டுள்ளது.  உலக பிரசித்தி பெற்ற இந்த ஆலயத்தில் மாமன்னன் ராஜேந்திர சோழனின் பிறந்தநாளை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் திருவாதிரை விழாவானது அப்பகுதிவாழ் மக்களால் வெகு விமர்சையாகவும் சிறப்புடனும் கொண்டாடப்பட்டு வருகிறது.  மாவட்ட அளவில் கொண்டாடப்படும் இந்த விழாவை அரசு விழாவாக கொண்டாட வேண்டும் தமிழ்நாடு அரசு  அறிவித்திருந்தது.  இந்நிலையில் 26-ம் தேதி ஆடி திருவாதிரையில் மாமன்னன் … Read more

நீட் விலக்கு மசோதா குறித்து தமிழக அரசிடம் விளக்கம் கேட்டுள்ளோம் – மக்களவையில் மத்திய அரசு தகவல்

புதுடெல்லி: நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரும் மசோதா குறித்து தமிழ்நாடு அரசிடம் விளக்கம் கேட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. தமிழக அரசின் நீட் விலக்கு மசோதா தொடர்பான கேள்விக்கு, மக்களவையில் எழுத்துபூர்வமாக அளித்த பதிலில் மத்திய உள்துறை இணையமைச்சர் அஜய் குமார் மிஸ்ரா கூறியிருப்பதாவது: நீட் தேர்வில் இருந்து விலக்கு கோருவதற்காக, ‘இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான தமிழ்நாடு மாணவர் சேர்க்கை, 2021’ என்ற பெயரில் மசோதா ஒன்றை தமிழ்நாடு அரசு தயாரித்தது. மத்திய அரசின் பரிசீலனைக்காகவும், … Read more