ஸ்ரீமுஷ்ணத்தில் அதிரடி சோதனை! கையும் களவுமாக சிக்கிய பதிவாளர்! 

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தில் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதில் சார் பதிவாளர் பழனிவேல், ஒப்பந்த பணியாளர் எழில் பிடிபட்டனர்.  கடலூர் மாவட்டம்  ஸ்ரீமுஷ்ணம் சார்பதிவாளர் அலுவலகத்தில், ராஜேந்திர பட்டினத்தைச் சேர்ந்த முத்தையன் மகன் வேல்முருகன் என்பவர், ராஜேந்திர பட்டினம் மற்றும் விருத்தாச்சலத்தில் எங்களுக்கு வீடு உள்ளது. தன்னுடைய நிலத்தை ஸ்ரீமுஷ்ணம் சார் பதிவாளர் அலுவலகத்தில் தான செட்டில்மெண்ட் பதிவு செய்வதற்காக கேட்டுள்ளார்.  அப்பொழுது பொறுப்பு சார்பதிவாளர் பழனிவேல் தான செட்டில்மெண்ட் செய்வதற்கு ரூபாய் … Read more

மதுரையில் இருந்து கேரளா செல்ல தயாராகும் விநாயகர் சிலைகள்: ஆன்லைனில் குவியும் ‘ஆர்டர்கள்’

மதுரை: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கேரளாவுக்கு அனுப்புவதற்காக மதுரை விளாச்சேரியில் விநாயகர் சிலைகள் தயாராகி வருகின்றன. மதுரை திருப்பரங்குன்றம் அருகே உள்ள விளாச்சேரியில் மண்பாண்ட கைவினைஞர்கள் 200-க்கும் அதிகமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு மண்பாண்டப்பொருட்கள் முதல் கலையம் உள்ள சாமி சிலைகள் வரை தயார் செய்யப்படுகின்றன. சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத களிமண், காகிதக்கூழ்களில் கைவினைப்பொருட்கள் உருவாக்கப்படுகின்றன. வரும் ஆகஸ்ட் 31ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ள நிலையில், விநாயகர் சிலைகள் தயார் செய்யும் … Read more

உள்ளாட்சி தேர்தல் முன்விரோதம் – கைகலப்பு கொலையில் முடிந்த பரிதாபம்

குமரி மாவட்டம் இடைக்கோடு அருகே உள்ளாட்சி தேர்தலின்போது ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக இருவருக்குள் ஏற்பட்ட கைகலப்பு மரணத்தில் முடிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  குமரி மாவட்டம் இடைக்கோடு அருகே குடுக்கச்சிவிளை பகுதியைச் சேர்ந்தவர் தாஸ் மற்றும் ஸ்டான்லி. கடந்த உள்ளாட்சி தேர்தலின்போது தாஸ் – காங்கிரஸ் கட்சிக்காகவும், ஸ்டான்லி – அதிமுக கட்சிக்காகவும் பணி செய்துள்ளனர். அன்றைய தினமே இருவருக்கும் இடையில் வாய்த்தகராறு ஏற்பட்டு கைகலப்பில் முடிந்துள்ளது. இதனால் அதிலிருந்து இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. … Read more

அப்பளம் போல் நொறுங்கிய வேன்.. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஓட்டுநர்.!

லாரி மீது வேன் மோதிய விபத்தில் 2 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பாளையம் பகுதியில் நேற்று முன்தினம் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில் அந்த வழியாக வேகமாக வந்த வேன் லாரி மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வேனின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. இதனை அடுத்து படுகாயமடைந்த வேன் ஓட்டுநர் மற்றும் கிளீனர் ஆகியோரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஓசூர் அரசு மருத்துவமனைக்கு … Read more

உளவுத் துறை புதிய ஐஜி-யாக செந்தில் வேலன் நியமனம்; ஆசியம்மாள் பணியிட மாற்றம்

சென்னை: தமிழக உளவுத் துறையின் புதிய ஐஜி-யாக செந்தில் வேலன் நியமிக்கப்பட்டுள்ளார். உளவுத் துறை ஐஜியாக இருந்த ஆசியம்மாள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு, அமலாக்கப் பிரிவு ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். உளவுத் துறையின் புதிய ஐஜி-யாக, காத்திப்போர் பட்டியலில் இருந்த செந்தில் வேலனை நியமித்து தமிழக உள்துறைச் செயலர் பனீந்தர ரெட்டி உத்தரவிட்டுள்ளார். கள்ளக்குறிச்சி வன்முறைச் சம்பவங்களின் எதிரொலியாக, இந்த மாற்றத்தை தமிழக அரசு மேற்கொண்டுள்ளதாக தெரிகிறது. உளவுத் துறை ஐஜி மட்டுமின்றி மேலும் சில ஐபிஎஸ் அதிகாரிகளை … Read more

’’கலவரம் நடக்கும்போது பொருட்களை திருடிச்சென்றவர்களே..’’ – கள்ளக்குறிச்சியில் தண்டோரா!

’’கலவரம் நடக்கும்போது பொருட்களை திருடிச்சென்றவர்களே பொருட்களை திருப்பித்தாருங்கள்… இல்லாவிட்டால் போலீசாரால் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என கள்ளக்குறிச்சியில் தண்டோரா போடப்பட்டுள்ளது.  கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளி மாணவி இறப்பு தொடர்பாக மாணவியின் உறவினர்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பள்ளி வளாகத்திற்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் பள்ளி பேருந்து மற்றும் அலுவலகத்திற்கு தீவைத்தனர். இதனால் போராட்டம் வன்முறையாக வெடித்தது. வன்முறை தீவிரமடைந்த நிலையில் பள்ளியிலிருந்து டேபிள், நாற்காலி உள்ளிட்ட பல்வேறு பொருட்களை போராட்டக்காரர்கள் தூக்கிச்சென்ற காட்சிகள் இணையங்களில் பரவி … Read more

‘கட்டிப் பிடிக்கச் சொன்னா, விஜயகாந்த் தள்ளி விட்ருவாரு..!’: பிரபல நடிகை ஃப்ளாஷ்பேக்

தமிழ் திரையுலகில் தனது நடிப்பு, சக நடிகர்கள் மீதான மரியாதை நடிகர் சங்கத்தின் கடனை அடைப்பதற்கான முயற்சி உள்ளிட்ட ஏராளமான செயல்கள் மூலம் இன்றுவரை ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்லாமல் சக நடிகர்கள் மத்தியிலும் புகழின் உச்சத்தில் இருப்பவர் விஜயகாந்த். சினிமாவில் தான் உச்ச நட்சத்திரம் என்றாலும் கூட, அதை பெரியதாக காட்டிக்கொள்ளாமல், நடிகர் சங்க கலைநிகழ்ச்சிக்ககாக சக நடிகர்களை அழைக்க அவர்களது வீட்டிற்கு செல்லும்போது சாதாரன மனிதனாக தரையில் அமர்ந்து அழைப்பாரம் விஜயகாந்த். இவரின் சொல்லுக்கு மதிப்பு … Read more

நாளை காலை திறக்கப்படுகிறது அ.தி.மு.க. அலுவலகம்..!

சென்னையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகம் நாளை திறக்கப்படுகிறது சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின் படி, சாவியை ஒப்படைக்கக்கோரி எடப்பாடி பழனிசாமி சார்பில் வருவாய் துறையிடம் கடிதம் அ.தி.மு.க. தலைமை கழக மேலாளர் மகாலிங்கத்திடம் சாவியை ஒப்படைக்குமாறு கடிதம் வழங்கப்பட்டது வருவாய்துறையினர் உரிய நடைமுறைகளை முடித்த பின்னர் நாளை காலை 10 மணிக்கு சாவியை ஒப்படைக்க உள்ளனர் – அ.தி.மு.க. தரப்பு நாளை காலை 10 மணிக்கு சாவியை பெற்ற பின்னர் தலைமை அலுவலகத்தை திறக்க நடவடிக்கை Source … Read more

“அவப்பெயர் ஏற்படுத்த முயற்சி” – அதிகாரிகள் ஆய்வு குறித்து தங்கமணி குற்றச்சாட்டு

நாமக்கல்: “பொதுமக்கள் மத்தியில் எனக்கு அவப்பெயர் ஏற்படுத்துவதற்காக எனது வீடு, அலுவலகம், தொழிற்சாலையில் பொதுப் பணித்துறை, லஞ்ச ஒழிப்புத் துறை மற்றும் வருவாய் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்” என அதிமுக முன்னாள் அமைச்சர் பி.தங்கமணி தெரிவித்தார். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளயைம் அருகே கோவிந்தம்பாளையத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் பி. தங்கமணி எம்எல்ஏ வீடு அமைந்துள்ளது. கடந்த 2021-ம் ஆண்டு அவரது வீடு உள்பட 32 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் … Read more

கணவனை இழந்த பெண்ணை அவரது கொழுந்தனார் அரிவாள் மனையால் ஓட ஓட வெட்டிய கொடூரம்

சொத்து பிரச்னை காரணமாக கணவனை இழந்த பெண்ணை உறவினர் ஒருவர் அரிவாள்மனையால் ஓட ஓட வெட்டிய சம்பவம் திட்டக்குடி அருகே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த நாவலூர் கிராமத்தில் வசித்துவருபவர் காவேரி. கணவனை இழந்த இவர் பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவருக்கும் இவரது கணவரின் சகோதரர், சகோதரிக்குமிடையே சொத்து சம்பந்தமான பிரச்னை இருந்து வருகிறது. இந்த நிலையில் இன்று மதியம் சுப்பிரமணியனுக்கும், அவரது அண்ணி காவிரிக்குமிடையே வாய் தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து பிரச்னை … Read more