இந்திய உழவாண்மை பிற்போக்கானதா?

த. வளவன் Is Indian agriculture processes are backward?: ‘இந்தியாவின் உழவாண்மை மிகவும் பிற்போக்கானது. உழவர்கள் பழைய மரக்கலப்பையை பயன்படுத்துகிறார்கள். பசுக்கள், ஐரோப்பிய பசுக்களை போல் நிறைய பால் கறக்க வில்லை. இந்திய உழவர்கள் திறமை இல்லாதவர்கள். ஆதலால் போதிய விளைச்சல் இல்லை. நாடெங்கும் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது.’ இங்கிலாந்து ராணிக்கு துரை ஒருவரால் எழுதப்பட்ட கடிதம் இது. 1880-ம் ஆண்டில் இந்தியாவில் ஏற்பட்ட கடுமையான உணவுப் பஞ்சத்துக்கு பிறகு தான் அவர் இப்படி எழுதினார். இந்தியாவில் … Read more

கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு.. கணவன் எடுத்த விபரீத முடிவு.!

குடும்ப பிரச்சினை காரணமாக கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வாவிளை பகுதியில் கொத்தனாரான பிரின்ஸ்(வயது 42) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு செல்வி என்ற மாணவி உள்ளார். இந்த தம்பதியினர் இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர்.  இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த பிரின்ஸ் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.  … Read more

கூண்டில் சிக்கி தப்பிச் சென்ற சிறுத்தையை மயக்க ஊசி செலுத்தி பிடித்த வனத்துறையினர்

ஈரோடு மாவட்டம் தாளவாடியில், வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கி தப்பிச் சென்ற சிறுத்தை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது. செயல்படாத கல்குவாரியில் பதுங்கியிருந்து கால்நடைகளை வேட்டையாடி வந்த சிறுத்தை அதிகாலையில் கூண்டில் சிக்கியது. ஆக்ரோஷத்துடன் காணப்பட்ட அந்த சிறுத்தையை அடர்ந்த வனப்பகுதியில் விட ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில், வேறு கூண்டுக்கு மாற்றும் போது அது தப்பிச் சென்றது. இதனையடுத்து மீண்டும் அந்த கல்குவாரியிலேயே பதுங்கியிருந்த சிறுத்தையை மயக்க ஊசி செலுத்தி பிடித்த வனத்துறையினர், பவானிசாகர் அடுத்துள்ள வனப்பகுதியில் … Read more

தமிழகத்தில் அனுமதி இல்லா கல்வி நிறுவன கட்டிடங்களுக்கு அனுமதி பெற மீண்டும் ஒரு வாய்ப்பு

சென்னை: அனுமதி இல்லா கல்வி நிறுவன கட்டிடங்களை முறைப்படுத்தி அனுமதி அளிக்க மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்படுவதாக தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. நகர் ஊரமைப்பு இயக்ககத்தின் (டிடிபிசி) எல்லைக்குள் அமையும் திட்டமில்லா பகுதிகளில் 2011-ம் ஆண்டுக்கு முன்னர் கட்டப்பட்டு இயங்கிவரும் அனுமதியற்ற கல்வி நிறுவனக் கட்டிடங்களுக்கு இசைவு வழங்கும் திட்டத்தின் வழிகாட்டு நெறிமுறைகள் கடந்த 2018-ம் ஆண்டில் வெளியிடப்பட்டன. இந்நிலையில், இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கத் தவறியவர்களுக்கு மேலும் ஒரு சந்தர்ப்பம் வழங்கும் விதமாக விண்ணப்பம் சமர்ப்பிக்க … Read more

"அதிமுகவை காப்பாற்றுங்கள் சின்னம்மா" – மதுரையில் வைக்கப்பட்ட பேனரால் பரபரப்பு

ஒற்றை தலைமை விவகாரம் அதிமுகவில் வெடித்துள்ள நிலையில், அதிமுகவை காப்பாற்றுங்கள் சின்னம்மா என்ற வாசகங்கள் அடங்கிய பேனரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதிமுகவில் ஒற்றை தலைமை தேவை என்ற கோரிக்கை எழுந்துள்ள நிலையில், எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தனித்தனியாக பிரிந்து தங்களது ஆதரவாளர்களுடன் செயல்பட்டு வருகின்றனர். நாள்தோறும் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மற்றும் அ.தி.மு.க. மாவட்டச்செயலாளர்கள் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், தொண்டர்கள் தன் பக்கம் உள்ளதாக ஓ.பன்னீர்செல்வம் பேசியது ஒற்றைத்தலைமை … Read more

தமிழகத்தில் பள்ளிகளில் முகக்கவசம் கட்டாயம்-பள்ளிக்கல்வி ஆணையர் உத்தரவு.!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. இதனையடுத்து பொது இடங்களில் மீண்டும் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் தொற்று பரவ அதிக வாய்ப்புள்ளதால் மாணவர்கள் ஆசிரியர்கள் கட்டாயம் மாஸ்க் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. பள்ளிக்கு வருகை தரும் போது அனைவரும் … Read more

அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.1.26 கோடி மோசடி செய்த இருவர் கைது

அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, மதுரை ஆட்சியர் அலுவலகத்திலேயே நேர்காணல் நடத்தி ஒரு கோடியே 26 லட்ச ரூபாய் மோசடி செய்த இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். முனீஸ்வரன் என்பவன் தனக்கு அறிமுகமான சேகர் என்பவரின் மகனுக்கும், மகளுக்கும் ஆட்சியர் அலுவலகத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி 8 லட்ச ரூபாய் பெற்று கொண்டு, பின் அவர்களது வீட்டிற்கு போலி பணி ஆணைகளை அனுப்பி உள்ளான். 26 பேரிடம், ஒன்றரை லட்ச ரூபாய் முதல் 8 … Read more

தென்னிந்தியாவில் முதல் முறை: திருநங்கைகளுக்கான ‘ரோட்டராக்ட் கிளப் ஆஃப் டிரான்ஸ்மாம்’ – கோவையில் தொடக்கம்

கோவை: தென்னிந்தியாவில் முதல் முறையாக, திருநங்கைகளுக்கான ‘ரோட்டராக்ட் கிளப் ஆஃப் டிரான்ஸ்மாம்’ கோவையில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த உலகில் ஆண்கள், பெண்கள் போல் மூன்றாம் பாலினத்தவர்களான திருநங்கைகளும் தற்போதைய சூழலில், சமுதாயத்தின் வளர்ச்சியில் முக்கியப் பங்கு ஆற்றுகின்றனர். பல்வேறு இடங்களில் திருநங்கைகள் தங்களைப் போல் உள்ளவர்களுடன் இணைந்து சிறு அமைப்பைத் தொடங்கி சேவையாற்றி வருகின்றனர். தங்களைப் போல் உள்ள ஆதரவற்ற திருநங்கைகளை மீட்டு அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்த தேவையான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் திருநங்கைகளின் வாழ்க்கையை … Read more

தேர்தல் ஆணையத்தின் படி பொருளாளருக்கே முழு அதிகாரம் – ஓபிஎஸ் ஆதரவாளர் குன்னம் ராமச்சந்திரன்

அதிமுக தொண்டர்களின் நலன் கருதி, எடப்பாடி பழனிசாமியுடன் கலந்தாலோசிக்க ஓ. பன்னீர்செல்வம் தயாராக இருப்பதாக பெரம்பலூர் மாவட்ட செயலாளர் குன்னம் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். அதிமுக உட்கட்சி பிரச்சனை நாளுக்கு நாள் அக்கட்சியின் தொண்டர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது என்றே கூறலாம். கடந்த சில நாட்களாக ஒற்றை தலைமை விவகாரத்தால் அதிமுக இரண்டாக பிரிந்து கிடக்கின்றன. முன்னாள் முதல்வரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக கட்சிகள் நிர்வாகிகள் பலரும் இருப்பதாகக் கூறப்படும் நிலையில், ஓ.பி.எஸ். ஆதரவாளர்களும் அவ்வப்போது கருத்து தெரிவித்து வருகின்றனர். … Read more

ஜெயலலிதா வீட்டை கட்சி சார்பில் வாங்க இ.பி.எஸ் உடன் படாதது ஏன்? ஓ.பி.எஸ் தரப்பு புது புகார்

OPS supporters says EPS no accepting ADMK buying Jayalalitha House: ஜெயலலிதா வீட்டை கட்சி வாங்க எடப்பாடி பழனிச்சாமி உடன்படாதது ஏன்? என கேள்வி எழுப்பியதோடு, உள்ளாட்சி தேர்தலில் அதிமுக போட்டியிட முடியாத நிலையை இ.பி.எஸ் தரப்பு உருவாக்கியுள்ளது என்றும் ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் கூறியுள்ளனர். இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த ஓ.பி.எஸ் தரப்பு ஆதரவாளர்கள் வெல்லமண்டி நடராஜன் மற்றும் குன்னம் ராமச்சந்திரன், உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடுபவர்கள் இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிட … Read more