அதிமுக அலுவலக கலவர வழக்கு: இபிஎஸ் ஆதரவாளர்கள் 14 பேருக்கு நிபந்தனை ஜாமீன்

அதிமுக பொதுக் குழு அன்று தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற கலவரம் தொடர்பாக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் 14 பேருக்கு சென்னை எழும்பூர் குற்றவியல் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில் ஜூலை 1-ஆம் தேதி இ.பி.எஸ் மற்றும் ஓ.பி.எஸ் ஆதரவாளர்களிடையே நடந்த கலவரம் தொடர்பாக, எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் 14 பேர் மீது ராயப்பேட்டை உதவி காவல் ஆய்வாளர் காசுப்பாண்டி அளித்த புகாரின் பேரில் கலவரத்தை தூண்டுதல், பயங்கர … Read more

முதலமைச்சர்களின் வெளிநாட்டுப் பயணங்கள் எப்படி, யாரால் அனுமதிக்கப்படுகிறது?

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், தனது சிங்கப்பூர் பயணத்திற்கான அனுமதியை மத்திய அரசு தாமதப்படுத்துகிறது என்று கூறியுள்ளார். முதலமைச்சர்கள், அமைச்சர்கள், எம்.பி.க்கள், அரசு ஊழியர்கள் வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ள என்ன வகையான அனுமதிகள் தேவை, யாரிடமிருந்து அனுமதி தேவை? டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ஜூலை 31 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 3 ஆம் தேதி வரை நடக்கவிருக்கும் உலக நகரங்களின் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள அழைக்கப்பட்டுள்ள சிங்கப்பூர் பயணத்தை மத்திய அரசு ஏன் … Read more

நுபுர் ஷர்மாவை கொலை செய்ய திட்டம்.! பாகிஸ்தானில் இருந்துவந்த இஸ்லாமிய நபர் கைது.!

ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீ கங்கா நகர் மாவட்டத்தில் உள்ள இந்துமல்கோட் எல்லைப் பகுதியில், நபிகள் நாயகத்திற்கு எதிராக கருத்து கூறிய நூபுர் சர்மாவை கொலை செய்ய ஊடுருவிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக எல்லைப் பாதுகாப்புப் படையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாவது, “இந்துமல்கோட் எல்லைப் பகுதியில் நூபுர் சர்மாவை கொலை செய்ய ஊடுருவிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், இவரிடமிருந்து 11 இன்ச் நீள கத்தி, மத புத்தகங்கள் மற்றும் மணல் மூட்டைகள் போன்றவை … Read more

அதிமுக தலைமை அலுவலகம் அருகே மோதல்: இபிஎஸ் ஆதரவாளர்களுக்கு  நிபந்தனை ஜாமீன்

சென்னை: கடந்த ஜூலை 11-ம் தேதி அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற கலவரம் தொடர்பாக அக்கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் 14 பேருக்கு சென்னை எழும்பூர் குற்றவியல் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜூலை 11-ம் தேதி இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே நடந்த கலவரம் தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளர்கள் 14 பேர் மீது ராயப்பேட்டை உதவி காவல் ஆய்வாளர் அளித்த புகாரின் பேரில் … Read more

யாசகம் கேட்பதுபோல் நடித்து ரூ.8 ஆயிரம் பணத்தை களவாடிய திருநங்கை – போலீஸ் விசாரணை

கோவையில் யாசகம் கேட்பதுபோல் நடித்து நூதன முறையில் தொழிலதிபரிடம் எட்டாயிரம் ரூபாய் பணம் பறித்த திருநங்கையை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை பீளமேடு அடுத்து ஜி.ஆர்.ஜி நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் தொழிலதிபர் மரியா பிரதீப்(46). இவரது மகன் கொடிசியா அருகில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 16-ஆம் தேதி பிரதீப் தனது மனைவியுடன் மகனை பள்ளியிலிருந்து அழைத்து வருவதற்காக சென்றுள்ளார். இருவரும் பள்ளியின் முன் காரில் காத்திருந்தபோது, … Read more

மாணவி ஸ்ரீமதி மரணம்: சேலம் டி.ஐ.ஜி தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து உத்தரவு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பள்ளி மாணவி மரணம் இந்திய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த சேலம் டி.ஐ.ஜி தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் விடுதயில் தங்கி படித்து வந்த ஸ்ரீமதி என்ற மாணவி விடுதியில் அதிகாலை நேரத்தில் மரணமடைந்த நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மாணவி மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டதாக … Read more

மின் கட்டண உயர்வு குறித்து கருத்துக்களை தெரிவிக்க மின் நுகர்வோர்களுக்கு 30 நாட்கள் அவகாசம்.!

மின் கட்டண உயர்வு குறித்து கருத்துக்களை தெரிவிக்க மின் நுகர்வோர்களுக்கு 30 நாட்கள் அவகாசம் அளித்து தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்துவது தொடர்பாக நேற்று அறிவித்த மின்சாரத்துறை அமைச்சர், கட்டண விபரங்கள் ஒழுங்கு முறை ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்பட்டதாக கூறினார். இந்நிலையில், அந்த விபரங்கள் மின்வாரிய இணையதளங்களில் வெளியிடப்படும் என்றும் அதனடிப்படையில் மின் நுகர்வோர்கள் கருத்துக்கள் தெரிவிக்கலாம் என்றும் மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது.  Source link

கள்ளக்குறிச்சி கலவரம் | விசாரணை வளையத்தில் வாட்ஸ் அப் குழுக்கள் – சிறப்பு புலனாய்வுக் குழு அமைப்பு

சென்னை: கள்ளக்குறிச்சி கலவரம் தொடர்பாக விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து டிஜிபி உத்தரவிட்டுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருககே கலவரம் நடைபெற்ற தனியார் பள்ளியை பொதுப்பணித் துறை அமைச்சர் ஏ.வ.வேலு, பள்ளிக் கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன் ஆகியோர் நேற்று நேரில் பார்வையிட்டனர். இதனைத் தொடர்ந்து கள்ளக்குறிச்சி விவகாரம் குறித்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை … Read more

மாணவி மரண வழக்கில் கலவரம் எதிரொலி – கள்ளக்குறிச்சி கலெக்டர், எஸ்.பி மாற்றம்!

கள்ளக்குறிச்சி 12 ஆம் வகுப்பு மாணவி மரண வழக்கில் போராட்டம் கலவரமாக மாறியதன் எதிரொலியாக அம்மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் இருவரும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தற்போது மாணவியின் உடல் மறுகூராய்வு, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. எஸ்.பி. மாற்றம்: மாணவி மரணம், கலவரம் எதிரொலியாக கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (எஸ்பி) செல்வகுமார் பணியிட மாற்றம் செய்யப்படுவதாக உள்துறை செயலாளர் பணீந்திர ரெட்டி அறிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக … Read more

உங்க போனில் உங்களை ‘உளவு’ பார்க்கும் ‘ஆப்’கள்: தடுப்பது எப்படி?

நவீன மயமான இந்த காலத்தில், ஃபோன் இன்றியமையாததாக ஆகிவிட்டது. அத்தியாவசிய பொருளாக ஃபோன் மாறிவிட்டது. ஃபோன் இருந்தால் அனைத்தும் வீட்டிலிருந்தபடியே செய்து முடித்தாகிவிடும். அந்த அளவிற்கு ஃபோன் பயன்பாடு மற்றும் தொழில்நுட்பம் வளர்ந்து விட்டது. ஒரு விதத்தில் நன்மை என்றாலும், நாணயத்தின் இருபக்கம் போல தீமையும் இருக்கத்தான் செய்கிறது. உங்கள் ஃபோனில் உங்களுக்கே தெரியாமல் பல செயலிகள் உங்களை நோட்டமிட்டு வருகிறது. அதாவது தேவையின்றி (லொகேஷனை) உங்கள் இருப்பிடத் தரவுகளை சேகரித்து வருகிறது. 1 வாரம், 1 … Read more