வாக்காளர் அட்டை எடுக்க போறீங்களா?: இனி உங்க ஆதார் எண்ணையும் கேட்பாங்க!

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான அரசாணையை மத்திய அரசு வெளியிட்டது. . போலி வாக்காளர்களுக்கு கடிவாளம் போட நடவடிக்கை… வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான அரசாணையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இது போலி வாக்காளர்களுக்கு கடிவாளம் போடும் நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. தேர்தல் நடக்கும்போதெல்லாம் போலி வாக்காளர்கள் குறித்த புகார்கள் எழுவதும் அவர்களை நீக்குவதும் வழக்கமான ஒன்றாக உள்ளது. எனவே, ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் வாக்காளர் அடையாள அட்டை வைத்திருப்பதை தடுக்கும் வகையில் ஆதார் எண்ணை இணைக்க … Read more

முழுசா தெரியாம அதை பற்றி பேசக்கூடாது… நடிகை சாய் பல்லவிக்கு விஜயசாந்தி அட்வைஸ்

Actress And MP Vijayashanthi Reply To Actress Sai Pallavi : பிரேமம் என்ற மலையாள படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகை சாய் பல்லவி தற்போது தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் இவர் ராணாவுடன் நடித்துள்ள விராட் பர்வம் என்ற திரைப்படம் நேற்று வெளியானது. நக்சலைட் இளைஞருடன் ஒரு இளம் பெண் காதல் கொண்ட ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து இந்த படத்திற்கு திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த … Read more

15 வயது சிறுமியை திருமணம் செய்த கூலித்தொழிலாளி கைது.!

15 வயது சிறுமியை திருமணம் செய்த கூலித் தொழிலாளியை போலீசார் கைது செய்துள்ளனர். கரூர் மாவட்டம் என்.புதூர் நாடுத்தெருவை சேர்ந்த மாற்றுத்திறனாளியான முரளி(37) ஜவுளி உற்பத்தி ஏற்றுமதி நிறுவனத்தில் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவர் ரத்னா என்ற பெண்ணின் உதவியோடு பெற்றோரை இழந்து கரூரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் படித்து வரும் 15 வயது சிறுமியை திருமணம் செய்துள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த கரூர் ஊராட்சி ஒன்றிய … Read more

காவிரியின் குறுக்கே மேகதாது அணையைக் கட்ட விடமாட்டோம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

காவிரியின் குறுக்கே மேகதாது அணையைக் கட்ட விடமாட்டோம் என்றும் காவிரி உரிமையைக் காக்க தமிழ்நாடு அரசு போராடும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாட்டின் காவிரி உரிமையைத் தடுப்பதும், நீர்வரத்தை குறைப்பதும் விவசாயிகளுக்கு செய்யும் துரோகம் என்றும் அது கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், மேகதாது அணை தொடர்பாக காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் விவாதிப்பது தவறானது என்றும் தமிழக அரசின் சட்டப்போராட்டம் உச்சநீதிமன்றத்தில் தொடரும் … Read more

“ஒற்றைத் தலைமை கோரிக்கை ‘சிதம்பர ரகசியம்’ கிடையாது” – தீர்மானக் குழு கூட்டத்துக்குப் பின் ஜெயக்குமார் பேட்டி

சென்னை: “ஒற்றைத் தலைமை குறித்து கட்சிதான் முடிவு செய்யும். என்னைப் பொறுத்தவரை தொண்டர்களின் மனநிலையை உள்ளங்கை நெல்லிக்கனி போல மாவட்டச் செயலாளர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள், இங்கு நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் தெரிவித்தார்கள். இது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான், சிதம்பர ரகசியம் ஒன்றும் கிடையாது” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். அதிமுக பொதுக்குழுக் கூட்டம் வரும் 23-ம் தேதி நடைபெறவுள்ளது. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் அடங்கிய பொதுக்குழு தீர்மானக் குழுக் கூட்டம், ராயப்பேட்டையில் … Read more

அக்னிபத் திட்டத்திற்கு எதிராக போராட்டம்: சென்னையில் போலீசார் தீவிர கண்காணிப்பு

மத்திய அரசு கொண்டுவந்துள்ள அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் சென்னையிலும் போராட்டம் வெடித்துள்ளது. இன்று காலை ஆரணி, கோவை, திருவண்ணாமலையில் இருந்து வந்த இளைஞர்கள், தலைமைச் செயலகம் அருகே ஒன்றுகூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த போலீசார், போராட்டக்காரர்களை அப்புறப்படுத்தி போர் நினைவு சின்னம் அழைத்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. இதையடுத்து போராட்டக்காரர்கள் அனைவரையும் கைது செய்து எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்திற்கு … Read more

இ.பி.எஸ் ஆதரவாளர் மீது தாக்குதல் : அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் அடிதடி மோதல்

கடந்த சில நாட்களாக அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், இது தொடர்பாக கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் இ.பி.எஸ் ஆதரவாளர் தாக்கப்பட்ட சம்பவம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கடந்த 2016-ம் ஆண்டு தொடர்ந்து 2-வது முறையாக ஆட்சியை பிடித்த அதிமுகவில், ஜெயலலிதா முதல்வராக பொறுப்பேற்ற நிலையில், அடுத்த சில மாதங்களில் அவர் திடீரென மரணமடைந்தார். அன்றுமுதல் தற்போதுவரை அதிமுகவில் பல அதிரடி திருப்பங்கள் … Read more

மர்ம முறையில் மரணம் அடைந்த விவசாயி.. செங்கல்பட்டு அருகே பரபரப்பு.. காவல்துறை விசாரணை..!

விவசாயி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். செங்கல்பட்டு மாவட்டம், ராமாபுரத்தை சேர்ந்தவர் கன்னியப்பன் (60). இவருக்கு திருமணமாகி மங்கம்மாள் என்ற மனைவியும் 3 மகள், ஒரு மகன் உள்ளனர். இந்நிலையில், சம்பவதன்று அவரது தோட்டத்தில் உள்ள சாமந்தி பூக்களை பறித்து ஒரு பகுதியை இருசக்கரவாகனத்தில் எடுத்துகொண்டு வீடு கொண்டு சென்றுள்ளார். மறுபகுதியை எடுக்க வராததால் அதிர்ச்சியடைந்த அவரது மனைவி அக்கம்பக்கத்தில் தேடியுள்ளார். அவரை காணாததால் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் … Read more

இன்று ஒற்றை தலைமை தீர்மானம்? 9 மா.செக்கள் ஓபிஎஸ் உடன் சந்திப்பு..!

அதிமுகவில் ஒற்றை தலைமை கோரிக்கை வலுத்துவரும் நிலையில், ஓபிஎஸ்சும், இபிஎஸ்சும் 5 வது நாளாக இன்றும் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்கள். கட்சிக்கு ஒற்றை தலைமை தேவை என்ற கோரிக்கை அதிமுகவில் வலுத்து வரும் நிலையில், 5 வது நாளாக இன்றும் ஓபிஎஸ்சும், இபிஎஸ்சும் கட்சி நிர்வாகிகளுடன் தொடர் ஆலோசனையில் ஈடுபட்டனர். சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம் தனது ஆதரவு மாவட்ட செயலாளர்கள், மாநில நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார் … Read more

'தன்னை முன்னிலைப்படுத்த அண்ணாமலை பொய்யான தகவலை பரப்புகிறார்' – அமைச்சர் நாசர் குற்றச்சாட்டு

நாமக்கல்: தன்னை முன்னிலைப் படுத்துவதற்கு அண்ணாமலை பொய்யான தகவலை கூறி வருகிறார், படித்த ஒரு ஐபிஎஸ் அதிகாரி இவ்வாறு கூறுவதா என்று பல்வளத்துறை அமைச்சர் நாசர் கேள்வி எழுப்பியுள்ளார். நாமக்கல் அருகே அக்கியம்பட்டி மற்றும் முதலைபட்டி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம், லத்துவாடி பால் குளிரூட்டும் நிலையம், புதிய பால் பண்ணை அமைய உள்ள இடம் ஆகிய இடங்களில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் சாமு நாசர் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கூறியதாவது: “பால்வளத் … Read more