காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாது குறித்து விவாதித்தால் வெளிநடப்பு: அமைச்சர் துரைமுருகன்

புதுடெல்லி: “காவரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் மேகதாது அணை குறித்து விவாதித்தால், அக்கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்வோம்” என்று தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் இன்று டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “மேகதாது அணை விவகாரம் தொடர்பான வழக்கு நாளை வரவிருக்கிறது. அது தொடர்பாக வழக்கறிஞர்களுடன் பேசுவதற்காக நான் வந்துள்ளேன். எங்களுடைய வாதத்தில் நியாயம் இருக்கிறது. நிச்சயமாக உச்ச நீதிமன்றத்தில் நல்ல தீர்ப்பு கிடைக்கும் என்று … Read more

`தேர்தலின்போது மின்கட்டணம் உயராது என சொல்லிவிட்டு இப்போது…’-திமுகவை சாடும் ஜெயக்குமார்

“தேர்தல் நேரத்தில் மின் கட்டணம் உயர்த்தப்படாது என வாக்குறுதி அளித்துவிட்டு தற்போது கட்டணத்தை உயர்த்துவதாக அரசு அறிவித்துள்ளது கண்டனத்திற்குரியது” என முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் “நிர்வாகத்தை ஒழுங்காக நடத்தாமல் கட்டண உயர்வுக்கு மத்திய அரசு மீது குறை கூறுகின்றனர்” என்ற குற்றச்சாட்டையும் மாநில அரசு மீது வைத்துள்ளார் அவர். காவல்துறை அதிகாரிகள் தன்னை கைது செய்யும்போது மனித உரிமைகளை மீறி செயல்பட்டதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என … Read more

சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஆர்.பி உதயகுமார் தேர்வு: இ.பி.எஸ் அறிவிப்பு

அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர் செல்வத்தை நீக்கிய நிலையில், சட்டமன்ற துணைத் தலைவராக ஆர்பி உதயகுமாரை நியமித்து முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்துக்கும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே ஒற்றை தலைமை விவகாரத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.இந்த நிலையில் தற்காலிக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றுக்கொண்டார். இதற்கு ஓ.பன்னீர் செல்வம் எதிர்ப்பு தெரிவிக்க அவரை கட்சியில் இருந்து நீக்கினார்.இந்த நிலையில், சட்டமன்ற துணை தலைவராக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமாரை நியமித்து … Read more

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியராக ஸ்ரவன்குமார் ஜடாவத் நியமனம்!

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் மாற்றம் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் பணியிடமாற்றம் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியராக ஸ்ரவன்குமார் ஜடாவத் நியமிக்கப்பட்டார் கள்ளக்குறிச்சிக்கு புதிய ஆட்சியரை நியமித்து தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவு கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்பியை தொடர்ந்து மாவட்ட ஆட்சியரும் மாற்றப்பட்டார் Source link

கண்வலிக்கிழங்கிற்கு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிக்க மத்திய அரசுக்கு தமிழகம் வலியுறுத்தல்

சென்னை: கண்வலிக்கிழங்கிற்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்ய மத்திய அரசை வலியுறுத்தி உள்ளதாக உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். கண்வலிக்கிழங்கு விதைகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்வது தொடர்பாக உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” மருத்துவக்குணம் கொண்ட பயிர்களில் குளோரி லில்லி (விஞ்ஞான பெயர் குளோரியோசா சூப்பர்பா) மிகவும் முக்கியமான மருத்துவப் பயிராகும். இதனை செங்காந்தள் மலர் என்றும், கண்வலிக்கிழங்கு என்றும் அழைப்பார்கள். செங்காந்தள் மலரானது நமது மாநில … Read more

காரைக்காலில் திடீரென விழுந்த அரசுப் பள்ளி மேற்கூரை… நல்வாய்ப்பாக தப்பித்த மாணவர்கள்!

காரைக்கால் அரசு மேல்நிலைப்பள்ளி வகுப்பறையின் மேற்கூறை இடிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மாணவர்கள் வகுப்பறையில் இல்லாததால் அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டிருக்கிறது. புதுச்சேரி மாநிலம் காரைக்கால் பகுதியை அடுத்த திருநள்ளாறு பகுதியில் அமைந்துள்ள தேனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 700-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில், இன்று காலை பள்ளி தொடங்கியவுடன் சிறிது நேரத்தில் பள்ளி கட்டிடத்தில் தட்டச்சு பயிற்சி வகுப்பறை மற்றும் மற்றொரு வகுப்பறையின் மேற்கூறை இடிந்து விழுந்துள்ளது. இதையடுத்து மாணவர்கள் வகுப்பறையில் இல்லாததால் பெரும் அசம்பாவி … Read more

முதலை தலை தெரியுதா பாஸ்… 6 செகண்ட்ல இன்னொரு பொருளை கண்டுபிடிங்க!

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்களின் சுவாரசியமான புதிருக்கு அடிமையாகதவர்களே இல்லை என்று கூறலாம். அந்த அளவுக்கும் இணையம் எங்கும் ஆப்டிகல் இல்யூஷன் படங்களை நெட்டிசன்கள் வெறித்தனமாக தேடிப்பார்த்து விடையளித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் முடிவில்லாத குழப்பத்தை அளித்து கண்ணுக்கும் மூளைக்கு வேலை தரக்கூடியவை. ஆப்டிகல் இல்யூஷன் படங்களின் சிறப்பே, முதல் பார்வையில் ஒரு மாதிரியாகவும் இரண்டாவது பார்வையில் வேறு மாதிரியாகவும் தெரியும். இதில் எது நிஜமான தோற்றம் என்று பார்ப்பவர்களை பைத்தியம் பிடிக்க … Read more

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம்.!

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், கரூர், நாமக்கல், திருப்பத்தூர், கோவை, திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல், நாளை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில … Read more

ஸ்டிக்கரை கிழிங்க.. காவலர்களுக்கு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு..!

“காவலர்கள், தாங்கள் பயன்படுத்தும் தனிப்பட்ட வாகனங்களில் ‘போலீஸ்’ என்ற ஸ்டிக்கர் ஒட்டி இருந்தால் அதை உடனடியாக அகற்ற வேண்டும்” என, டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி, சென்னை ஐகோர்ட் சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. அதில், காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் பயன்படுத்தும் தனிப்பட்ட வாகனங்களில் ‘போலீஸ்’ என்ற போர்டு மற்றும் ஸ்டிக்கரை பயன்படுத்தக் கூடாது’ என கூறப்பட்டுள்ளது. அந்த உத்தரவின் அடிப்படையில், தமிழகத்தில் உள்ள காவலர்கள் தாங்கள் பயன்படுத்தும் தனிப்பட்ட … Read more

மாணவியின் உடலுக்கு மறுகூறாய்வு.. பள்ளியில் சிபிசிஐடி, தடயவியல்துறை ஆய்வு

பெற்றோர் தரப்பில் யாரும் இல்லாமல், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் மாணவியின் உடலுக்கு மறுகூறாய்வு நடைபெற்றது. அதேவேளையில், கலவரம் நடந்த பள்ளியில் சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகளும், தடயவியல் துறையினரும் ஆய்வு மேற்கொண்டனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் கணியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு மாணவி கடந்த 13ஆம் தேதி உயிரிழந்தார். அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி சடலத்தை வாங்க மறுத்த பெற்றோர், மறு பிரேத பரிசோதனை செய்யக்கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதன் விசாரணையில், மாணவியின் சடலத்தை 3 … Read more