அக்னிபாத் போராட்டங்கள்: என்.டி.ஏ ஆளும் உ.பி., பீகார் மாநிலங்களில் கடும் நெருக்கடி

அக்னிபாத் ராணுவத்தில் ஆட்சேர்ப்புத் திட்டத்திற்கு எதிரான வன்முறைப் போராட்டங்கள் நாடு முழுவதும் வெள்ளிக்கிழமை இரண்டாவது நாளாகத் தொடர்ந்த நிலையில், செகந்திராபாத்தில் போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் தெலங்கானாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். பாஜக ஆளும் உத்தரபிரதேசத்தில் போராட்டங்கள் கடும் வன்முறையாக இருந்தது. அங்கே போராட்டக்காரர்கள் ரயில், பேருந்துகள் மற்றும் போலீஸ் தடுப்புகளுக்கு தீ வைத்தனர். மேலும், என்.டி.ஏ ஆளும் பீகாரிலும் தீ வைத்தனர். பீகாரில் மாநில பாஜக தலைவர் டாக்டர் சஞ்சய் ஜெய்ஸ்வால் மற்றும் துணை முதல்வர் … Read more

#தமிழகம் || 5 லட்சம் கொடு., காதலியை மிரட்டிய நாடக காதலன் கைது.!

புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டு விடுவதாக, காதலியை மிரட்டி 5 லட்சம் ரூபாய் கேட்ட நாடக காதலன் கைது செய்யப்பட்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மூவேந்தர் நகர் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவரும், திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடி சேர்ந்த முகேஷ் என்ற 22 வயது இளைஞரும் காதலித்து வந்ததாக சொல்லப்படுகின்றது. இந்தநிலையில், முகேஷின் நடவடிக்கை எதுவும் சரியில்லாத காரணத்தினால், அவரின் காதல் நாடகத்தனமாக இருந்த காரணத்தினாலும், அந்த கல்லூரி மாணவி அவருடன் பேசுவதையும், அவரின் காதலையும் முடித்துக் … Read more

எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு.!

சேலத்தில் இருந்து இன்று கள்ளக்குறிச்சி வழியாக  திருவண்ணாமலை சென்ற எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.  ஒற்றை தலைமை தேவை என்று அதிமுகவில் கோரிக்கைகள் வலுத்துவரும் நிலையில் சேலத்தில் நேற்று கட்சியின் மூத்த நிர்வாகிகளான தம்பிதுரை மற்றும் கேபி முனுசாமி ஆகியோருடன் ஆலோசனை நடத்திய எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக திருவண்ணாமலை சென்றார். வழியில் கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகத்தில் அதிமுகவை சேர்ந்த ஏராளமானோர் திரண்டு நின்று அவருக்கு … Read more

அதிமுக பொதுக்குழுக் கூட்டத்திற்கு தடை கோரி நீதிமன்றத்தில் மனு

சென்னை: அதிமுக உட்கட்சித் தேர்தலை முறையாக நடத்தாமல், இத்தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளைக் கொண்டு நடத்தப்படும் பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில், ஈரோடு மாவட்டம் பெருந்துறை ஒன்றிய அதிமுக மாணவர் அணி முன்னாள் பொருளாளரான சி.பாலகிருஷ்ணன் தாக்கல் செய்த மனுவில், ‘கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் உட்கட்சித் தேர்தலில் அடிப்படை உறுப்பினர்கள் போட்டியிட போதிய … Read more

"இரிடியம் ரைஸ் புல்லிங்.. இவங்ககிட்ட ஏமாந்தவர்கள் புகார் கொடுங்க” – சேலம் எஸ்.பி பேட்டி

ஓமலூரில் இரிடியம் என்று கூறி பணம் மோசடி செய்யப்பட்டது குறித்து சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ் செய்தியாளர்களை சந்தித்தார். இது குறித்து காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ் கூறும்போது, கடந்த 2 மாதங்களாக ஓமலூர் பகுதியில் பண மோசடி, இரிடியம் மோசடியில் சிலர் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வந்தது. அதன் அடிப்படையில் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதில் ராஜீ, வில்வேந்திரன் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் ராதாகிருஷ்ணன் என்பவரிடம் ரூ.20 … Read more

தங்கம் விலை உயர்வு: ஒரு சவரனுக்கு இவ்வளவு ரேட்!

Gold rates today in tamil: உக்ரைன் மீதான ரஷ்யாவின் படைப்பு உலகம் முழுதும் பொருளாதார அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக கச்சா எண்ணெய், தங்கம் போன்றவற்றின் விலை கடுமையாக உயர்ந்து வருகின்றன. மேலும், பங்குச்சந்தைகளின் சரிந்து வரலாறு காணாத அளவில் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. இதனால், உலகெங்கிலும் உள்ள முதலீட்டாளர்கள் பெருமளவில் பங்குச்சந்தைகளில் இருந்து வெளியேறி தங்கத்தில் தங்கள் முதலீடுகளை செய்து வருகின்றனர். இதன் எதிரொலியாக இந்தியாவிலும் தங்கத்தின் விலை உயர்ந்த வண்ணம் இருக்கிறது. கடந்த … Read more

சாலையில் சென்று கொண்டிருந்த போது தீப்பிடித்த எரிந்த இருசக்கர வாகனம்..!

திருவள்ளூர் மாவட்டம், கரிக்கலவாக்கம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் சந்தோஷ்.  இவர் அவரது மனைவியுடன் திருவள்ளூர் நோக்கி அவரது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். திடீரென இருசக்கர வாகனத்தின் எஞ்சினில் இருந்து புகை வந்துள்ளது. உடனடியாக இருசக்கர வாகனத்தை நிறுத்தினர. உடனடியாக அந்த இருசக்கர வாகனம் தீப்பற்றி எரிந்தது. சாலையில் நடுவில் இருசக்கர வாகனம் தீப்பற்றி எரிவதைக் கண்ட அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் தீயணைப்புதுறையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து … Read more

மதுரை மருத்துவ முகாமில் பாஜக பிரமுகர் பங்கேற்றதால் சர்ச்சை: விரைவு போக்குவரத்து கழக மேலாளர் சஸ்பெண்ட் ரத்து

மதுரை: மதுரை அரசு விரைவு போக்குவரத்துக் கழக இலவச கண் மருத்துவ முகாமில் பாஜக மாவட்ட தலைவர் பங்கேற்றதால், கிளை மேலாளரை பணியிடை நீக்கம் செய்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. மதுரை அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநர்கள், நடத்துனர்கள் மற்றும் பணியாளர்களுக்கான கண் பரிசோதனை மற்றும் கண்ணாடி வழங்கும் முகாம் நடைபெற்றது. இதில் மதுரை மாநகர் மாவட்ட பாஜக தலைவரும், மருத்துவருமான பி.சரவணன் பங்கேற்றார். அரசு விரைவு போக்குவரத்து கழக நிகழ்ச்சிக்கு … Read more

’சூடுபிடித்த ஒற்றை தலைமை’ – ஆதரவு நிர்வாகிகளுடன் ஓபிஎஸ், இபிஎஸ் தனித்தனியாக ஆலோசனை!

அதிமுக மூத்த தலைவர் பண்ருட்டி இராமச்சந்திரனை அவரது இல்லத்தில் வைத்து ஓ.பன்னீர்செல்வம் சந்தித்துப் பேசினார். கடந்த சில தினங்களாகவே அ.தி.மு.க.வில் ஒற்றைத் தலைமை பிரச்னை வலுத்து வருகிறது. இதன் காரணமாக ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரும் தங்களது ஆதரவாளர்களுடன் தனித்தனியாக ஆலோசனை நடத்தி வருகின்றனர். இதனால் அ.தி.மு.க.வில் தற்போது பரபரப்பான சூழல் ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இல்லத்திற்கு அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கம், மாநிலங்களவை உறுப்பினர் தர்மர், சட்டமன்ற உறுப்பினர் … Read more

பெல் தொழிற்சங்க தேர்தல்: 3-ம் இடத்தில் இருந்து முதல் இடத்திற்கு முன்னேறுமா அ.தி.மு.க?

திருவெறும்பூர் பெல் தொழிற்சாலையைச் சார்ந்த  தொழிற்சங்க அங்கிகார தேர்தல் வரும் 23-ம் தேதி நடக்கிறது. இதில் போட்டியிடும் பெல் அண்ணா தொழிற்சங்கத்திற்கான செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம்  நடந்தது. திருச்சி அதிமுக தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்பியுமான ப.குமார் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பேசிய அவர்,   எப்போதுமே தொழிலாளர்களது நலனிற்காக போராடும் அண்ணா தொழிற்சங்கம் தற்போது 3 வது இடத்தில் உள்ளது. பெல் தொழிற்சாலையின் பங்குபெறும் முதன்மை சங்கமாக முதலிடத்தைப் பிடிக்கும் வகையில் நமது  … Read more