மேட்டூர் அணையில் இருந்து 2-வது நாளாக 1 லட்சத்து 33 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு
சேலம்: காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்துவரும் தொடர் கனமழையால் கர்நாடகாவிலுள்ள அணைகள் நிரம்பி உபரி நீர் காவிரியில் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து அணையின் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. அணை நிரம்பியதால் அணைக்கு வரும் நீர் முழுவதும் காவிரியில் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேட்டூர் அணைக்கு நேற்று மாலை 4 மணியளவில் விநாடிக்கு 1 லட்சத்து 29 ஆயிரத்து 403 கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது. இதையடுத்து, நேற்று 2-வது நாளாக … Read more