கூடுதல் வரதட்சணை கேட்டு சித்ரவதை.. கர்ப்பிணிக்கு கட்டாய கருகலைப்பு செய்த கொடூரம்..!

கூடுதல் வரதட்சணை கேட்டு இளம்பெண்ணை கட்டாயப்படுத்தி கருக்கலைப்பு செய்த ஐவரை காவல்துறையினர் கைது செய்தனர். கடலூர் மாவட்டம் சிறுபாக்கத்தை சேர்ந்தவர் ஆர்த்.தி இவருக்கு நாமக்கல் மாவட்டம் எருமை பட்டியை சேர்ந்த பிரேம்குமார் என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் திருமணமான மறுநாளிலிருந்து பிரேம்குமாரின் குடும்பத்தினருக்கு வரதட்சணையாக கொடுக்கப்பட்ட நகைகளை போட்டு தகராறில் ஈடுபட்டுள்ளனர். அதனைத் தொடர்ந்து தினமும் கூடுதல் வரதட்சணை கேட்டு மாமனார் குடும்பத்தினர் ஆர்த்தியை தொல்லை செய்து வந்துள்ளனர். இந்நிலையில் கணவன் … Read more

திருவள்ளூரில் பத்தாயிரம் ரூபாய் கடன் பெற்று திருப்பித் தராமல் இழுத்தடித்து வந்த ட்ராக்டர் ஓட்டுனர் அடித்து கொலை.!

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே, பத்தாயிரம் ரூபாய் கடன் பெற்று திருப்பித் தராமல் இழுத்தடித்து வந்த ட்ராக்டர் ஓட்டுனர் அடித்து கொலை செய்யப்பட்டார். ஆவடி கெளரி பேட்டையைச் சேர்ந்த ஓட்டுனர் மோகன்குமார் என்பவர், பிரபு என்பவரிடம் கடன்பெற்றதாக கூறப்படுகிறது. கடனை திருப்பி தராமல் ஓட்டுனர் இழுத்தடித்து வந்த நிலையில், பிரபு அவரது நண்பர்களுடன் சென்று கடனை திருப்பி கேட்டுள்ளார். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில், மோகன்குமாரை 3 பேரும் அடித்துக்கொலை செய்தனர். Source link

`வங்கி கணக்கில் ரூ.15 லட்சம் செலுத்துவேன்' பிரதமர் கூறியதாக அமைச்சர் நிரூபித்தால் அரசியலை விட்டு விலக தயார்: ஹெச்.ராஜா பேட்டி

சிவகங்கை: ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் செலுத்துவேன் என்று பிரதமர் கூறியதாக அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் நிரூபித்தால் அரசியலை விட்டு விலகத் தயார் என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்தார். சிவகங்கையில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: திமுக தேர்தல் அறிக்கையில் கூறியபடி பெட்ரோல், டீசல் விலையை 30 நாட்களுக்குள் குறைக்க வேண்டும் இல்லை யெனில் ஜூன் 20-ல் மாநிலம் முழுவதும் 60 இடங்களில் உண் ணாவிரதம் இருக்க உள்ளோம். மே மாதம் வரையிலான ஜிஎஸ்டி நிலுவைத் … Read more

8ம் வகுப்பு மாணவன் தண்ணீரில் மூழ்கி பலி.. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்..!

கால்வாயில் மூழ்கியதால் வகுப்பு சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம், அந்தேரி கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ். இவருக்கு திருமணமாகி செல்வி என்ற மனைவியும் பூபதி என்ற மகனும் உள்ளனர். பூபதி அந்த பகுதியில் உள்ள பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டை விட்டு வெளியே சென்றபோது வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் அக்கம்பக்கத்தில் தேடியுள்ளனர். அப்போது அதே பகுதியில் செல்லும் கிருஷ்ணா கால்வாயில் கரையோரம் செருப்பு … Read more

உயிரிழந்த காதலனின் பெற்றோருக்கு மகளாக பணிவிடை செய்யும் காதலி…! உள்ளத்தில் கலந்த காதல் சோகம்

நாகை அருகே திருமணத்திற்கு 15 நாட்களுக்கு முன்பு காதலன் உயிரிழந்த நிலையில் 10 ஆண்டுகளாக காதலித்த பெண் காதலனின் நினைவாக காதலனின் வீட்டிலேயே தங்கி அவரது வயதான தாய் தந்தைக்கு மருமகளாக இருந்து பணிவிடை செய்து வருகின்றார் நாகப்பட்டிணம் மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்துள்ள பிராபராமபுரம் கிராமத்தை சேர்ந்த கோவிந்தராஜ் – பத்மாவதி தமதியினரின் மகன் சபரிகிருஷ்ணன். 26 வயதான இவர் வேளாங்கண்ணி மின்வாரிய அலுவலகத்தில் கேங் மேனாக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் ஆக்கூர் … Read more

அரசு பள்ளி வறுமையின் அடையாளமல்ல; பெருமையின் அடையாளம்: அமைச்சர் அன்பில் மகேஷ் பெருமிதம்

குன்னூர்: அரசு பள்ளி என்பது வறுமையின் அடையாளமல்ல பெருமையின் அடையாளம் என பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பெருமிதம் கூறியுள்ளார். நீலகிரி மாவட்டம் குன்னூரில், மாணவர்களுக்கான புதியன விரும்பு என்ற தலைப்பில் 5 நாள் கோடை கால பயிற்சி முகாம் நடைபெற்றது. இதனை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தொடங்கி வைத்தார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் கூறியதாவது: “கோடை விடுமுறை காலத்தை பயனுள்ள வகையிலும் மாணவ மாணவிகளின் தனித் திறமையினை வெளிக் … Read more

மனநலம் சரியில்லாத சகோதரனை கொலை செய்த சகோதரி குடும்பம் – விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி

சோழவரம் அருகே சொத்துக்காக மனநலம் சரியில்லாத சகோதரனை, அவரது சகோதரியும், சகோதரி கணவரும் அடித்துக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த மாபூஸ்கான்பேட்டை பகுதியை சேர்ந்தவர் பூபாலன் (41) திருமணமாகாதவர். சுவர்களில் விளம்பரம் எழுதுவது, படம் வரைவது என ஓவியராக தொழில் செய்து வந்த பூபாலன், கடந்த சில மாதங்களாக மனநலம் குன்றி வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். இவருக்கும் அருகில் வசித்து வரும் இவரது மூத்த சகோதரியான தனலட்சுமிக்கும் இடையே … Read more

வீறிட்டு அழுத சிறுமி.. ஓடிச்சென்ற அக்கம்பக்கத்தினர் கண்ட காட்சி.! 11 ஆம் வகுப்பு மாணவன் கொடூரம்.!

காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ரேவதி என்ற பெண் டி.என்.பி.எஸ்சி தேர்வுக்கு தயாராகி வந்த நிலையில், அவருக்கு நான்கு வயதில் ஒரு பெண் குழந்தை இறந்துள்ளது. மது போதையில் இருந்த கணவர் அந்த குழந்தையை பார்த்துக் கொள்வதாகக் கூறி அருகில் இருக்கும் பூங்காவிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.  அப்போது போதை தலைக்கு ஏறி ஆழ்ந்த தூக்கத்திற்கு அவர் சென்ற நிலையில் 11ஆம் வகுப்பு படிக்கும் சிறுவன் இதை கவனித்து கொண்டு இருந்துள்ளார். பின்னர், அந்த சிறுமியிடம் சென்று பேசி ஆளரவமற்ற … Read more

கார்த்தி சிதம்பரம் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு தள்ளுபடி – டெல்லி நீதிமன்றம்

விசா முறைகேடு வழக்கில் கார்த்தி சிதம்பரம் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. சீன நாட்டவர்களுக்கு சட்டவிரோதமாக விசா பெற்றுத்தர லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில், சட்ட விரோத பண பரிமாற்றம் தொடர்பாக அவர் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறது. இது தொடர்பான விசாரணைக்கு, கார்த்தி சிதம்பரம் அண்மையில் ஆஜரானார். இந்நிலையில், கைது நடவடிக்கையை தடுக்கும் நோக்கில், அவர் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. Source … Read more

மதுரை: ஒப்பந்த தொழிலாளர் மண்ணுக்குள் புதைந்து பலி – கண்காணிப்பு இல்லாததால் தொடரும் உயிரிழப்பு

மதுரை: மதுரை விளாங்குடியில் மாநகராட்சி சார்பில் புதிதாக பாதாளசாக்கடை அமைக்கும் பணிக்காக பள்ளம் தோண்டியபோது ஒப்பந்த நிறுவன தொழிலாளர் ஒருவர் மண்ணுக்குள் புதைந்து பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2 மாதம் முன்தான் பாதாள சாக்கடை பணியில் 3 மாநகராட்சி ஒப்பந்த நிறுவன தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இந்தநிலையில் தற்போது மீண்டும் மாநகராட்சி பணியில் உயிரிழப்பு ஏற்பட்டிருப்பது மாநகராட்சி கண்காணிப்பு இல்லாமல் பணிகள் நடப்பதை உறுதிசெய்துள்ளது. மதுரை மாநகராட்சி வார்டுகளில் புதிதாக பாதாள சாக்கடை அமைக்கும் பணிகள் … Read more