முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு: நீதிமன்றம் புதிய உத்தரவு

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் உள்ளிட்டோர் மீதான வழக்கில் விரைவாக குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முந்தைய அதிமுக ஆட்சிக் காலத்தில் உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த கே.பி.அன்பழகன், 2016 முதல் 2021 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக கிருஷ்ணமூர்த்தி என்பவர் புகார் அளித்திருந்தார். அதனடிப்படையில் தர்மபுரி லஞ்ச ஒழிப்பு போலீசார் கே.பி.அன்பழகன், அவரது மனைவி மல்லிகா, மகன்கள் சசிமோகன், சந்திரமோகன் மற்றும் மருமகள் … Read more

தமிழக போலீஸ் துறைக்கு 2-ம் நிலை காவலர் தேர்வு: ரெடி ஆகுங்க மக்களே!

TNUSRB announced Police constable jobs 2022 notification released soon: தமிழக காவல்துறையில் இரண்டாம் நிலை காவலர், சிறைக்காவலர், தீயணைப்பு வீரர்கள் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு ஜூன் 30 தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் காவல்துறையில் பணிபுரிய வேண்டும் என்பது பலரின் கனவு. இதற்காக தமிழகத்தில் உள்ள இளைஞர்கள், காக்கிச் சட்டையை எப்படியாவது போட்டே தீருவேன் என்ற உறுதியோடு, நாள்தோறும் தங்களை உடல் ரீதியாகயும், படிப்பு ரீதியாகவும் தயார்படுத்தி வருகின்றனர். இதையும் படியுங்கள்: … Read more

செங்கல்பட்டு அருகே அரங்கேறிய கொடூர படுகொலை – பெரும் அதிர்ச்சியில் மருத்துவர் இராமதாஸ்.!

ஏ.டி.எம் கொள்ளையர்களால் மகிழுந்து ஓட்டுனர் கொலை சம்பவம் பெரும் அதிர்ச்சியளிப்பதாகவும், ஓட்டுனர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும், பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், “விழுப்புரத்தில் வங்கி ஏ.டி.எம்மை கொள்ளையடிப்பதற்காக தாம்பரத்திலிருந்து மகிழுந்தை கடத்திய கொள்ளையர்கள், செங்கல்பட்டு அருகே அதன் ஓட்டுனர் அர்ஜுனை படுகொலை செய்து உடலை வீசியுள்ளனர். இரக்கமின்றி நிகழ்த்தப்பட்டுள்ள இந்த படுகொலை  பெரும் அதிர்ச்சி அளிக்கிறது! பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கொள்ளையர்கள் இதற்கு முன்பும் பல … Read more

கரோனா வழிகாட்டு நெறிமுறைகள்: மாவட்ட ஆட்சியர்களுக்கு சுகாதாரத்துறை உத்தரவு

சென்னை: மாவட்ட ஆட்சியர்கள் கரோனோ வழிகாட்டு நெறிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதை கண்காணிக்க சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் மீண்டும் கரோனோ பரவல் அதிகரித்து வரும் நிலையில் சுகாதாரத்துறை செயலாளர் செந்தில்குமார் மாவட்ட நிர்வாகங்களுக்கு கரோனோ வழிகாட்டு நெறிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதை கண்காணிக்க உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், ” உருமாறிய BA.5 மற்றும் BA2.38 என்ற ஓமிக்ரான் வகை பாதிப்புகள் பெருமளவில் பரவி வருகிறது. இதன் காரணமாக நோய் பாதிப்புகள் அதிகரிக்கும் … Read more

`பெண்கள் சாந்தமான நிறத்தில் துப்பட்டாவுடன் சுடிதார், சேலை அணியலாம்'- மின்வாரிய சீருடை விதி

சீருடை விதிகளை மீறும் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மின்வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பணியில் உள்ள மின்வாரிய ஊழியர்கள் சீருடை விதிகளை கட்டாயம் பின்பற்ற மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது. அதன்படி `பெண்கள், சேலை மற்றும் துப்பட்டாவுடன் கூடிய சுடிதார் அணிந்து கொள்ளலாம். பணியில் உள்ள ஆண்கள், பார்மல் பேண்ட், வேட்டி மற்றும் தமிழக, இந்திய கலாசாரத்தை பிரதிபலிக்கும் எந்த உடையையும் அணியலாம். கேசுவல் உடை அணியக்கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றம் அல்லது தீர்ப்பாயத்தில் ஆஜராக வேண்டியிருந்தால், … Read more

Chennai power cut: சென்னையில் இந்த பகுதிகளில் மின்வெட்டு!

சென்னையில் இன்று (ஜூன்:29) காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக பெரம்பூர் துணைமின் நிலையங்களில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். பெரம்பூர் பகுதி: சி.எம்.பி.டி.டி தேவி நகர், கங்கை அம்மன் கோயில் தெரு, ராஜன் நகர் ஐ.சி.எப் வெல்லால தெரு, தாகூர் நகர், செட்டி தொட்டம் செம்பியம் கௌதமபுரம், திருவள்ளுவர் தெரு, ஜோதி ராமலிங்கம் தெரு, கார் நகர். நெல்வாயல் சாலை, பெரம்பூர் நெடுஞ்சாலை, கஸ்தூரி … Read more

சுயேச்சை சின்னத்தில் களமிறங்கும் அதிமுக வேட்பாளர்கள்… ஓபிஎஸ், இபிஎஸ் சண்டையால் இரட்டை இலைக்கு சிக்கல்.!

அதிமுகவின் ஒற்றை தலைமை விவகாரம் காரணமாக, நடைபெற உள்ள உள்ளாட்சி இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் அக்கட்சி வேட்ப்பார்கள் போட்டியிடுவதால் சிக்கல் உண்டாகியுள்ளது. தமிழகத்தில் பல்வேறு காரணங்களுக்காக காலியாக உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத்தேர்தலானது வருகின்ற மாதம் ஒன்பதாம் தேதி நடைபெற உள்ளது. அதன்படி, தமிழகத்தில் இரண்டு மாவட்ட கவுன்சிலர்கள், 20 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர், 40 ஊராட்சி தலைவர், 436 கிராம ஊராட்சி உறுப்பினர் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் இருக்கக்கூடிய இரண்டு மாநகராட்சி கவுன்சிலர்கள், இரண்டு … Read more

கால் டாக்ஸி ஓட்டுனர் கழுத்தை அறுத்து கொடூரக் கொலை.. 2 மாத குழந்தையுடன் கண்ணீர் மல்க அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ள அவரது மனைவி.!

செங்கல்பட்டில், ஏ.டி.எம்மில் கொள்ளையடிப்பதற்காக ஓலா நிறுவன கால் டாக்சி ஓட்டுநரின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு காரை திருடிச் சென்ற வழக்கில், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது மனைவி இரண்டு மாத குழந்தையுடன் கண்ணீர் மல்க அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.  Source link

அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கத்துக்கு கரோனா

சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரும், கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளருமான வைத்திலிங்கத்துக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிமுக பொதுக்குழுக் கூட்டத்துக்குப் பின்னர், தனது சொந்த ஊரான தஞ்சைக்கு சென்றுவிட்டு கடந்த ஞாயிறன்று, சென்னை திரும்பினார் வைத்திலிங்கம். இந்நிலையில், கடந்த சில நாட்களாகவே அவர் சளி, காய்ச்சல் இருந்துள்ளது. இந்நிலையில் அவர் மேற்கொண்ட பரிசோதனையில் அவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து வைத்திலிங்கம் சென்னையில் உள்ள வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் … Read more

வறுமை ஆனாலும் மழலை பேச்சில் திறமை: அரசின் உதவியை எதிர்பார்த்து காத்திருக்கும் சிறுமி

கீழக்கரையில் கண்பார்வை குறைபாடுள்ள மாற்றுத்திறனாளி தாயை பராமரிக்கும் 13 வயது சிறுமி, தனது மழலை பேச்சால் 50-க்கும் மேற்பட்ட பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை பெற்றுள்ளார். இவர் வறுமையிலிருந்து மீள அரசு உதவி செய்ய கோரிக்கை வைத்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பகுதியைச் சேர்ந்த துரை – அமுதா லெட்சுமி தம்பதியரின் மகள் முகிலா. இந்த நிலையில் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு சிறுமி முகிலாவின் தாய் அமுதா லட்சுமிக்கு மூளை காய்ச்சல் ஏற்பட்டு கண் பார்வையை இழந்துள்ளார். … Read more