மேற்கூரையின் மீது தற்கொலை முயன்ற இளைஞர்.. தலைக்கீழாக குதித்ததில் மண்டை உடைந்து சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

சென்னை அம்பத்தூர் பட்டரவாக்கம் சர்வீஸ் சாலையில் உள்ள தனியார் நிறுவனத்திற்கு மதுபோதையில் வந்த இளைஞர், திடீரென 25 அடி உயரம் கொண்ட மேற்கூரையின் மேல் ஏறி தற்கொலை செய்துக்கொள்ளபோவதாக மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து தகவலறிந்து வந்த அம்பத்தூர் தொழிற்பேட்டை தீயணைப்புத்துறையினர், இளைஞரின் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அதை அலட்சியப்படுத்திய இளைஞர், திடீரென மேற்கூரையில் இருந்து தலைக்கீழாக குதித்தார். இதில் தலையில் பலத்த காயமடைந்த அவர் மீட்கப்பட்டு மருத்துவனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். … Read more

பேச்சுவார்த்தையில் உடன்பாடு: தனியார் பள்ளிகள் வேலை நிறுத்தம் வாபஸ் 

சென்னை: பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து கள்ளக்குறிச்சி சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அறிவிக்கப்பட்ட தனியார் பள்ளிகளின் வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி கலவரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (ஜூலை 18) முதல் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தனியார் பள்ளிகள் அறிவித்தன. அதேவேளையில், தனியார் பள்ளிகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில், இன்று தமிழகம் முழுவதும் 91 சதவீத தனியார் பள்ளிகள் இயங்கியதாக மெட்ரிக் … Read more

திருவள்ளூரில் விமர்சையாக நடைபெற்ற புவி இயற்கை அங்காடியின் முதலாம் ஆண்டு நிறைவு விழா

புவி இயற்கை அங்காடியின் முதலாம் ஆண்டு நிறைவு விழா 17.07.2022 ஞாயிறு அன்று, திருவள்ளூர் ராஜாஜி புரம் பகுதியில் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கிய அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் துளசி நாராயணன், பல்லுயிர் பெருக்கம் விவசாயத்தில் எத்தகைய முக்கியமான பங்கு வகிக்கிறது என்பது குறித்து விவசாயத்தில் ஈடுபாடு கொண்ட இளைஞர்களை ஊக்குவித்து பேசினார். இயற்கை விவசாயி பாலாஜி மற்றும் புவி நளினி ஆகியோர் தாங்கள் உருவாக்கிய … Read more

August Month Horoscope: ஆகஸ்ட் மாதத்தில் இந்த 3 ராசிகளுக்குதான் அதிர்ஷ்டம்

August Month Horoscope: ஆகஸ்ட் மாதம் முக்கிய கிரகங்கள் ராசி மாறுவதால், இந்த மூன்று ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்கள் ஏற்படும். அதிர்ஷ்டம் அடிக்கப்போகும் அந்த 3 ராசிகள் எந்த ராசிகள் தெரிந்துகொள்ளுங்கள். ஆகஸ்ட் மாதம் ராசி மாறும் மூன்று கிரகங்கள்: ஜோதிடத்தில் கிரங்களின் மாற்றம், நட்சத்திரங்களின் பெயர்ச்சி சிறப்பு வாய்ந்ததாக ஜோதிடர்களால் பார்க்கப்படுகிறது. கிரகங்களின் பெயர்ச்சி முக்கியத்தும் வாய்ந்தது என ஜோதிடர்கள் கூறுகிறார்கள். 2022 ஜூலை மாதம் 5 கிரகங்களின் பெயர்ச்சி நடைபெற்றது. அதே போல, ஆகஸ்ட் … Read more

அன்று நீட் வராது., வரவுடமாட்டோம்., இன்னிக்கு "செஸ்" பாட்டுக்கு ஆட்டம் – திமுக.,வை மறைமுகமாக போட்டு தாக்கிய தமிழ் நடிகை.!  

மக்கள் நீதி மய்யம் இன்று விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, “மருத்துவப் படிப்பிற்கான ‘நீட்’ நுழைவுத் தேர்வில் தோல்வி ஏற்பட்டு விடுமோ என்ற பயத்தால், அரியலூரைச் சேர்ந்த மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது மிகுந்த வேதனையையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. அவரது குடும்பத்தினருக்கு மநீம ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது. அனிதாவில் தொடங்கிய தற்கொலைகள் எவ்வளவு காலத்துக்கு தொடரப் போகின்றன? நீட் தேர்வை முன்வைத்து அரசியல் செய்யாமல், இதற்கு நிரந்தரத் தீர்வுகாண அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்படவேண்டிய  காலம் … Read more

மாவட்ட நிர்வாகம், காவல் துறை அலட்சியத்தால்தான் பள்ளி வளாகமே போர்க்களம் ஆனது: வைகோ

சென்னை: “மாணவியின் மரணத்துக்கான பின்னணி மற்றும் புதைந்து கிடக்கும் உண்மைகளை வெளிக்கொணர வேண்டும். குற்றவாளிகள் எவராக இருந்தாலும் கூண்டில் ஏற்றி தண்டிக்கப்பட வேண்டும்” என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலத்தை அடுத்த கனியாமூரில் இயங்கி வரும் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 12ம் வகுப்பு பயின்று வந்த மாணவி கடந்த ஜூலை 13ம் தேதி திடீரென்று உயிரிழந்ததாக பெற்றோருக்கு பள்ளி நிர்வாகம் தகவல் … Read more

Tamil News Highlights: தமிழில் உறுதி ஏற்ற ப.சிதம்பரம்

Go to Live Updates தமிழில் உறுதி ஏற்ற ப.சிதம்பரம்நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் ப.சிதம்பரம் தமிழில் உறுதிமொழி ஏற்றுக்கொண்டார். அப்போது, ‘மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் ப.சிதம்பரம் என்னும் நான் சட்டத்தினால் நிறுவப்பட்டுள்ள இந்திய அரசியல் சட்டத்தின் மீது உண்மையான பற்று ஆர்வமும், பற்று உறுதியும் கொண்டிருப்பேன் என்றும், இந்திய இறையாண்மையையும் உறுதிப்பாட்டையும் உறுதியாக பற்றி நிற்பேன் என்றும், நான் இப்போது ஏற்கவிருக்கும் கடைமையை நேர்மையாக நிறைவேற்றுவேன் என்றும் உறுதி கூர்கிறேன்” என்றார். டெல்லி செல்கிறார் துரைமுருகன்மேகதாது தொடர்பாக … Read more

விருதுநகர்.! பிளாஸ்டிக் கவர் விழுங்கிய 7 மாத ஆண் குழந்தை உயிரிழப்பு.!

விருதுநகர் மாவட்டத்தில் பிளாஸ்டிக் கவர் விழுங்கிய 7 மாத ஆண் குழந்தை உயிரிழந்துள்ளது. விருதுநகர் மாவட்டம் சிவகாசி துரைசாமிபுரம் அம்பேத்கர் காலனியை சேர்ந்த கார்த்தீஸ்வரன் என்பவருடைய 7 மாத ஆண் குழந்தை கலைக்கதிர். இந்நிலையில் சம்பவத்தன்று குழந்தை வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தான். அப்பொழுது கீழே கிடந்த பிளாஸ்டிக் கவர் துண்டு பேப்பரை எடுத்து குழந்தை கலைக்கதிர் விழுங்கி உள்ளான். இதையடுத்து சிறிது நேரத்தில் குழந்தையும் மயங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் உடனே சிகிச்சைக்காக விருதுநகர் அரசு … Read more

பழனி பேருந்து நிலையத்தில் நடைபாதையை ஆக்கிரமித்து வைக்கப்பட்ட கடைகள் அகற்றம்.!

திண்டுக்கல் மாவட்டம் பழனி பேருந்து நிலையத்தில் நடைபாதையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த கடைகள் அகற்றப்பட்டன. பழனி பேருந்து நிலையத்தில் 500 க்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டு வரும் நிலையில் நடைபாதையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள கடைகளால் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுவதாக புகார்கள் எழுந்தன. இதுகுறித்து பலமுறை எச்சரிக்கை விடுத்தும் கடைகள் அகற்றபடாததால், போலீஸ் பாதுகாப்புடன் பொக்லைன் இயங்திரங்களை கொண்டு நகராட்சி ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை இடித்து தள்ளி அகற்றினர். Source link

“முதல் 3 நாட்களில் அரசு மெத்தனம் காட்டியதே சின்னசேலம் வன்முறைக்கு காரணம்” – இபிஎஸ்

சென்னை: “கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே தனியார் பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரத்தில், 3 நாட்களாக அரசு மெத்தனப்போக்கு மற்றும் அலட்சியமாக இருந்ததால் இதுபோன்ற வன்முறை நடந்துள்ளது” என்று சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு, சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்று வருகிறது. அதிமுக இடைக்கால பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வாக்களித்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “கள்ளக்குறிச்சி சம்பவம் 13-ம் … Read more