சரக்குவேன் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 7 பேர் காயம்.!

சரக்கு வேன் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் ஓட்டுனர் உட்பட 7 பேர் காயமடைந்துள்ளனர். தென்காசி மாவட்டம் பிரானூர் பாடர் பகுதியை சேர்ந்தவர் சரக்கு வேன் டிரைவர் விக்னேஷ். இவர் நேற்று மேலூர் கதிரவன் காலனியை சேர்ந்த விறகு வெட்டும் 6 தொழிலாளர்களுடன் மதுரை மாவட்டம் காண்டை கிராமத்திற்கு சரக்கு வேனில் சென்று கொண்டிருந்தார். அப்போது எம். சப்புலாபுரம் பகுதியில் உள்ள பாலத்தில் திடீரென கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வேன் பாலத்தின் தடுப்பு சுவர் மீது மோதி பள்ளத்தில் … Read more

அடுத்த கட்டத்திற்கு தயாராகிறார் எடப்பாடி பழனிச்சாமி..!

அதிமுக சட்ட விதிகளின்படி பொதுக்குழுவை கூட்ட உள்ள அதிகாரம், ஒருங்கிணைப்பாளர்கள் பதவி காலாவதியானதற்கான விதிகளை குறிப்பிட்டு தேர்தல் ஆணையத்திற்கு அனுப்ப, பழனிசாமி தரப்பு பதில் மனு தயார் செய்வதாக தகவல் வெளியாகி உள்ளது. நேற்று அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டம் விதிமீறலாக கூட்டப்பட்டது அல்ல என்பது குறித்தும் விளக்கமளிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே, பொதுக்குழு தொடர்பான நீதிமன்ற உத்தரவு மீறப்பட்டதாக பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் உயர்நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். Source link

சென்னை – சைதாப்பேட்டை அரசு மருத்துவனை கிணற்றில் காலாவதியான மாத்திரைகள்

சென்னை: சென்னை – சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகத்தில் காலாவதியான மாத்திரைகள் கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை – சைதாப்பேட்டை கருணாநிதி நினைவு வளைவு அருகில் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் மகப்பேறு சிறப்பு பிரிவு உள்ளிட்ட பல பிரிவுகள் செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் கிணறு ஒன்று உள்ளது. இந்நிலையில், இந்த கிணற்றில் மாத்திரைகள் கொட்டப்பட்டுள்ளதை பார்த்து சிகிச்சை பெற வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ‘ இது தொடர்பாக சுகாதாரத் துறை … Read more

உச்ச நீதிமன்றம், தேர்தல் ஆணையம்… சட்ட யுத்தத்தை முடுக்கி விட்ட ஓ.பி.எஸ்!

அதிமுக பொதுக்குழு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் ஓ. பன்னீர்செல்வம் தரப்பில் திங்கள் கிழமை கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், தன்னிச்சையாக பொதுக்குழுவை கூட்ட எதிர்ப்பு தெரிவித்து, ஒ.பி.எஸ் தரப்பில் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. முன்னதாக, அதிமுக பொதுக்குழுவிற்கு தடை விதிக்கக் கோரி கடந்த 22- ஆம் தேதி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கினை விசாரித்த தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்தார். இதை எதிர்த்து, ஓ.பன்னீர்செல்வம் சார்பில் … Read more

காரை திருடுவதற்காக நடந்த கொலை.. விசாரணையில் வெளிவந்த உண்மை..!

ஓட்டுநரை கொலை செய்த மூவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். செங்கல்பட்டு மாவட்டம், ஒட்டியபாக்கம் பகுதியை சேர்ந்தவர் அர்ஜூனன். இவர் ஒலா நிறுவனத்தில் ஓட்டுநராக இருந்து வருகிறார். இந்நிலையில், கால் டாக்சி புக் செய்த கும்பல் அவரை கொலை செய்துவிட்டு தப்பி சென்றனர்.  சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் அங்குள்ள சிசிடிவி காட்சிகளையு, செல்போன் தரவுகளையும் … Read more

மதிய உணவு தொடர்பாக எழுந்த அதிருப்தி: தினமும் உணவு மாதிரி அனுப்ப புதுவை முதல்வர் ரங்கசாமி உத்தரவு

புதுச்சேரி: தனியார் அமைப்பினர் தயாரிக்கும் மதிய உணவு தொடர்பாக அதிருப்தி எழுந்ததையடுத்து, தினமும் மதிய உணவு மாதிரியை முதல்வர், கல்வியமைச்சர் அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்க முதல்வர் ரங்கசாமி அறிவுறுத்தியுள்ளார். முதல் நாளாக இன்று மதிய உணவின் மாதிரியை முதல்வர் ரங்கசாமி சாப்பிட்டு பார்த்தார். புதுச்சேரி பள்ளிக் கல்வி இயக்ககம், பெங்களூரைச் சேர்ந்த அட்சய பாத்ரா அறக்கட்டளையுடன் இணைந்து புதுச்சேரி பகுதி பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு அளிப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்ததில் கடந்த 2018 ஜூலையில் கையெழுத்தானது. இந்த … Read more

“நாங்க பாஸ் ஆகி 13 வருஷம் ஆச்சு” – டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் குமுறல்!

பள்ளிக் கல்வித் துறையில் தற்காலிக ஆசிரியர்களை பணி நியமனம் செய்யக்கூடாது என வலியுறுத்தி ஆசிரியர்கள் சென்னை டி.பி.ஐ வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களையே நிரந்தர பணியில் நியமனம் செய்ய வேண்டும் என்றும், இதற்காக பல ஆயிரம் ஆசிரியர்கள் காத்திருப்பதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். திமுக அரசு தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினார். இவர்களுடைய கோரிக்கையை தமிழக அரசுக்கு கொண்டு செல்வதாக பள்ளிக்கல்வி துறை அதிகாரிகள் உறுதியளித்தனர். … Read more

அயோத்தி ராமர் கோயில் போல, ஹனுமன் பிறந்த இடத்தை உருவாக்க கர்நாடகா திட்டமிடுவது எப்படி?

இந்துக் கடவுளான ஹனுமனின் பிறப்பிடமாகக் கருதப்படும் கொப்பல் மாவட்டத்தில் உள்ள அஞ்ஜெயநாத்ரி மலையில் உள்ள கோயிலை மறுசீரமைக்கும் பணியைத் தொடங்குமாறு அதிகாரிகளுக்கு கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது. 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து, மேம்பாட்டுப் பணிகளுக்கான வரைபடம் தயாராக உள்ளதாக மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் ஆனந்த் சிங் தெரிவித்துள்ளார். உண்மையான ஹனுமன் ‘ஜென்மஸ்தலம்’ தொடர்பாக கர்நாடகாவும் ஆந்திராவும் மோதலில் ஈடுபட்டுள்ள நேரத்தில் இந்த அறிவிப்பு வந்துள்ளது. வட கர்நாடகாவில் ஹம்பிக்கு அருகில் உள்ள கிஷ்கிந்தாவில் உள்ள அஞ்ஜெயநாத்ரி … Read more

கோவை : ஆடு மேய்த்துக் கொண்டிருந்த மூதாட்டிக்கு ஏற்பட்ட கொடூரம்.!

ஆடு மேய்த்துக் கொண்டிருந்த மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டத்தில் கிணத்துக்கடவு என்னும் பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் 65 வயது மூதாட்டி ஒருவர் காட்டுப் பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற வேலுச்சாமி என்ற நபர் மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்து இருக்கிறார்.  இதனால் மூதாட்டி கூச்சலிட்டதில் அக்கம் பக்கத்தினர் திரண்டதைப்பார்த்து வேலுச்சாமி தப்பிக்க முயற்சி செய்தார். இதனை தொடர்ந்து வேலுச்சாமியை விரட்டிப் பிடித்த பொதுமக்கள் … Read more

நடந்து சென்ற இளைஞர் அறிவிப்பு பலகை மீது மோதி உயிரிழப்பு..

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே மதுபோதையில் நடந்து சென்ற இளைஞர் அறிவிப்பு பலகையில் மோதி உயிரிழந்தார். சந்துரு என்ற அந்த இளைஞர் இரவு மது போதையில் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்த போது, அறிவிப்பு பலகையில் மோதி கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. பின் தள்ளாடியபடியே சாலையில் அமர்ந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார். அவ்வழியாக வந்த ரோந்து போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் அவர் உயிரிழந்துள்ளதாக மருத்துவர்கள் … Read more