“ஆளுநராக நான் இதையெல்லாம் செய்திருக்கிறேன்”.. முரசொலி கட்டுரைக்கு தமிழிசை காட்டமான அறிக்கை

ஆட்சிப்பணியோடு மாநில முதலமைச்சர் வேந்தர் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டால் அது கட்சிப்பணி ஆகிவிடும் என்று முரசொலி விமர்சனத்துக்கு தமிழிசை காட்டமான அறிக்கை வெளியிட்டுள்ளார். ஆளுநர்கள் பற்றிய தமிழிசையின் கருத்து குறித்து முரசொலி பத்திரிக்கையில் வெளியான விமர்சனத்திற்கு புதுவை துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் பதிலளித்துள்ளார். “ஆளுநர்கள் வேந்தர்களாக பல்கலைக்கழகங்களை மேம்படுத்திக்கொண்டிருக்கிறார்கள் என்று நான் கூறியது என் அனுபவத்தை வைத்துதான். ஆளுநர்கள் ஆக்கபூர்வமாகதான் செயல்பட்டு கொண்டிருக்கிறார்கள்” என்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ள தமிழிசை தெலுங்கானா ஆளுநராக வேந்தர் பொறுப்பிலிருந்து தெலுங்கானா … Read more

அரசு விழாவில் இந்துமத பூஜைக்கு எதிர்ப்பு – செந்தில்குமார் எம்பியின் கொந்தளிப்பும் எதிர்வினையும்

சென்னை: அரசு விழாவில் இந்துமத முறைப்படி பூஜை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்த திமுக எம்பி செந்தில்குமாரின் செயலுக்கு வரவேற்பும் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டியை அடுத்த ஆலாபுரம் ஏரி புனரமைக்கும் பணியை தருமபுரி திமுக எம்.பி., செந்தில்குமார் இன்று தொடங்கிவைக்க வந்திருந்தார். பொதுப் பணித்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பூமி பூஜையில் அர்ச்சகரை வைத்து இந்துமுறைப்படி பூஜை செய்யத் திட்டமிடப்பட்டு இருந்தது. இதை கண்ட எம்பி செந்தில்குமார் கண்டனம் தெரிவித்து இருந்தார். இதுதொடர்பான வீடியோவை தனது … Read more

செல்ஃபி எடுக்கச் சென்று வெள்ளத்தில் சிக்கிய இளைஞர்கள்.. மீட்கப்பட்டது எப்படி?

ஆபத்தை உணராமல் காவிரி ஆற்று வெள்ளத்தில் சிக்கிய மூன்று இளைஞர்கள் பெரும் போராட்டத்துக்கு பிறகு பத்திரமாக மீட்கப்பட்டனர். செல்ஃபி மோகத்தால் வெள்ளத்தின் பிடியில் சிக்கிய மூன்று இளைஞர்கள் தவிக்கும் காட்சிகள் தான் இவை. சேலம் மேட்டூர் அணையில் இருந்து மாலையில் ஒரு லட்சத்து 13 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டது. இதனால் காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடிய நிலையில், ஆபத்தை உணராமல் ஆற்றின் நடுப்பகுதிக்கு சென்று செல்ஃபி எடுக்க முயன்றுள்ளனர். ஆனால், சில நிமிடங்களில் நீர் … Read more

கோவை, தஞ்சை, கரூர்… 6 முதன்மை கல்வி அலுவலர்கள் இடமாற்றம்!

6 Chief educational officers transferred in Tamilnadu: தமிழகத்தில் கோவை, தஞ்சாவூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு புதிய முதன்மை கல்வி அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தமிழக பள்ளிக் கல்வி பணியைச் சார்ந்த முதன்மை கல்வி அலுவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்படுவதாக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. இதையும் படியுங்கள்: அகில இந்திய தரவரிசை; வேகமாக முன்னேறிய திருச்சி என்.ஐ.டி: இயக்குனர் அகிலா தகவல் அதன்படி, தஞ்சாவூர் சரஸ்வதி மகால் நூலகம் மற்றும் ஆய்வு மையத்தில் பணியாற்றி வந்த … Read more

ஆன்லைன் சூதாட்ட நிறுவனத்திடம் பல கோடி ரூபாய் கமிஷம் – தமிழக அரசு மீது எடப்பாடி கே பழனிச்சாமி பாய்ச்சல்.!

அதிமுக.,வின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று விடுத்துள்ள அறிக்கையில், “தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் ஆட்சியாளர்களின் பண பசிக்கு பல உயிர்கள் பலியிடப்பட்டு வருகின்றன. கொலை, கொள்ளை, ஆயுதங்கள், போதை மருந்து கடத்தல் மற்றும் ஆன்லைன் சூதாட்டங்களால் கடந்த ஓராண்டில் நாடும், நாட்டு மக்களும் சீரழிந்து, சீர்குலைந்துபோய் இருக்கிறார்கள். ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தில் பணத்தை இழந்தவர்கள் தங்கள் உயிரை மாய்த்துக்கொள்வதை கண்டு, அந்த சூதாட்டத்தையே தடை செய்து அதிமுக அரசு சட்டம் இயற்றியது.  ஆன்லைன் ரம்மி … Read more

அரியலூரில் நீட் தேர்வு எழுதவிருந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை

அரியலூர்: அரியலூரில் நாளை நீட் தேர்வு எழுத இருந்த மாணவி இன்று (ஜூலை 16) வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அரியலூர் நகரம் ரயில்வே காலனி தெருவை சேர்ந்தவர்கள் நடராஜன்-உமாராணி. நடராஜன் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். உமாராணி பிள்ளைகளை பார்த்துக்கொண்டு வீட்டில் உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகள், ஒரு மகன் என 2 குழந்தைகள். மகள் நிஷாந்தி (16) 2020-21-ம் கல்வியாண்டில் பிளஸ்2 முடித்துள்ளார். பிளஸ்2 பொதுத் தேர்வில் 430 மதிப்பெண்கள் பெற்றார். … Read more

மாணவி உடலை வாங்க மறுப்பு.. சாலைமறியல் போராட்டத்தால் அதிர்ந்த கள்ளக்குறிச்சி!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே தனியார் பள்ளி மேல்தளத்திலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட மாணவியின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் உள்ளிட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். கனியாமூர் பகுதியில் உள்ள அந்த மேல்நிலைப் பள்ளியின் விடுதியில் தங்கி 12ஆம் வகுப்பு படித்துவந்த மாணவி, பள்ளியின் 3ஆவது தளத்திலிருந்து கீழே குதித்து உயிரை மாய்த்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது. மாணவியின் மரணத்திற்கு பள்ளி நிர்வாகமே காரணம் எனக்கூறி அவரது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் கள்ளக்குறிச்சி நான்கு முறை சந்திப்பில் … Read more

'அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் விரைந்து நலம்பெற விழைகிறேன்' – முதல்வர் ஸ்டாலின்

சென்னை: கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் விரைந்து நலம் பெற விழைகிறேன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் ஓ.பன்னீர் செல்வம் விரைந்து நலம் பெற விழைகிறேன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். இது குறித்து முதல்வர் தனது ட்விட்டர் பக்கத்தில், ” கரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் … Read more

நீட் தேர்வு தோல்வி பயத்தால் மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை ; போலீசார் விசாரணை

அரியலூரில் நீட் தேர்வு தோல்வி பயத்தால் மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். அரியலூர் ரயில்வே காலனி பகுதியை சேர்ந்த நடராஜன் – உமா தம்பதியரின் மகள் நிஷாந்தினி 2020-ம் ஆண்டு 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 529 மதிப்பெண்கள் பெற்றிருந்தார். கடந்த ஆண்டு நீட் தேர்வில் 200 மதிப்பெண்கள் எடுத்திருந்த அவர், தொடர்ந்து இரண்டாவது முறையாக நீட் தேர்வை எதிர்கொள்ள பயின்று வந்த நிஷாந்தி, நாளை தேர்வு எழுத இருந்த … Read more

குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சையில் பெண் இறந்தால் ரூ.4 லட்சம் இழப்பீடு: அரசு தகவல்

சென்னை: அரசு மருத்துவமனைகளில் குடும்பக் கட்டுப்பாடு செய்துகொள்ளும் பெண் இறந்துவிட்டால், அவரின் குடும்பத்திற்கு வழங்க கூடிய இழப்பீடு 2 லட்சம் ரூபாயிலிருந்து 4 லட்சமாக உயர்த்தி உள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தை பெரிய கரும்பூர் என்ற பகுதியைச் சேர்ந்த கனிமொழி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த வழக்கில், “கடந்த 2016 ஆம் ஆண்டு பாலாஜி என்பவருடன் கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்துகொண்டேன். தங்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், … Read more