அடுத்த 75 நாட்களுக்கு அனைவருக்கும் இலவச பூஸ்டர் தடுப்பூசி : மத்திய அரசு அறிவிப்பு

கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும நிலையில், 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் வரும் ஜூலை 15 முதல் அடுத்த 75 நாட்கள் வரை இலவச கோவிட்-19 பூஸ்டர் டோஸ் வழங்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில், இன்று புதிதான சுமார் 16 ஆயிரம் பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மக்கள் கொரோனா விழிப்புணவு மற்றும் கட்டுப்பாட்டு விதிமுறைகளை … Read more

அரசுப் பேருந்துகள் தனியார்மயமாக்கப்படாது: அமைச்சர் சிவசங்கர் விளக்கம் 

பெரம்பலூர்: “அரசுப் பேருந்துகளை தனியார்மயமாக்குவது என்ற பேச்சுக்கே இடமில்லை. இந்தியாவிலேயே இவ்வளவு பெரிய அரசுப் போக்குவரத்துக் கழகத்தை உருவாக்கியவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி. அவருடைய வழியில் செயல்படும் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசில் தனியார்மயமாக்கல் என்ற பேச்சுக்கே இடமில்லை” என்று தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கூறியுள்ளார். தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பெரம்பலூரில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: ” தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்திற்கு, புதிதாக 2 … Read more

Sembaruthi Tamil Serial: மனைவி என நினைத்து வேறு பெண்ணுடன்… சாமியார் வேட காமெடி நடிகர் கலாட்டா!

செம்பருத்தி சீரியலில் பிரபல நடிகர் ஒருவர் என்ட்ரி கொடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் 1400 எபிசோடுகளை கடந்து படு விறுவிறுப்பாக கிளைமாக்ஸை நெருங்கி வரும் சீரியல் தான் செம்பருத்தி.  ஷபானா, அக்னி, பிரியா ராமன், ஊர் வம்பு லட்சுமி என பலர் இணைந்து நடித்து வரும் இந்த சீரியல் இந்த மாதத்துடன் முடிவுக்கு வருகிறது. தற்போது அகிலாண்டேஸ்வரி, புவனேஸ்வரி வீட்டில் இருந்து வர புவனேஸ்வரி அகிலாண்டேஸ்வரியாக நடித்து வருகிறார். இந்த … Read more

மருத்துவ ஊழியரை கத்தியால் குத்தி கொலை செய்த பெண்.. திருமணம் ஆனதும் தொடர்பை துண்டித்ததால் ஆத்திரம்..!

நாகர்கோவில் அருகே, திருமணம் ஆன பின் தகாத உறவை துண்டித்த மருத்துவ ஊழியரை, அவரது பெண் தோழி கத்தியால் குத்தி கொலை செய்தார். ஆரல்வாய்மொழி இ.எஸ்.ஐ மருத்துவமனையில் உதவியாளராக உள்ள ரதீஷ்குமாருக்கும், மேக்ஸன் என்பவரின் மனைவியான ஷீபா உடன் தொடர்பு இருந்ததாகவும், திருமணம் ஆன பின் ஷீபா உடனான தொடர்பை ரதீஷ்குமார் துண்டித்து விட்டதாகவும் கூறப்படுகிறது. அதனால் ஆத்திரமடைந்த ஷீபா, மருத்துவமனையில் இருந்த ரதிஷ்குமாரை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு போலீசில் சரணடைந்தார். Source link

“திருநெல்வேலி அல்வா, ஊத்துக்குளி வெண்ணை அனுப்பலாம்” – எஸ்இடிசி பேருந்து லக்கேஜ் பகுதி இனி வாடகைக்கு!

சென்னை: எஸ்இடிசி பேருந்துகளில் உள்ள லக்கேஜ் பகுதிகள் வாடகைக்கு விடப்படும் என்று போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. அரசு போக்குவரத்துக் கழகங்களின் வருவாயை பெருக்கும் வகையில் பேருந்துகளில் உள்ள உபயோகப்படுத்தப்படாத சுமை பெட்டிகளை மாத வாடகைக்கு விடும் திட்டம் அமல்படுத்தப்படும் என்று கடந்த சட்டப்பேரவை கூட்டத் தொடரில் அறிவிக்கப்பட்டது. இந்தத் திட்டம் வரும் ஆகஸ்ட் 3-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று போக்குவரத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்துள்ளார். இந்தத் திட்டம் குறித்து அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கூறுகையில், “அரசு … Read more

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு; ஆசிரியர் தேர்வு வாரியம் முக்கிய அறிவிப்பு

TRB announce no interview for Polytechnic lecturer exam: பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு கிடையாது என தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. 2017-18 ஆம் ஆண்டுக்கான பாலிடெக்னிக் விரைவுரையாளர் பணியிடங்களில் காலியாக இருந்த 1,060 இடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்கான எழுத்து தேர்வுகள் முடிந்து முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில், தற்போது இந்த நேரடி நியமன பணிக்கு நேற்று சான்றிதழ் சரிபார்ப்பு தொடர்பாக செய்தி வெளியிடப்பட்டது. இந்த பணிகளுக்கான தேர்வில் நேர்முகத் … Read more

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விவகாரம்: மதுரை தொழிலதிபரிடம் போலீஸார் விசாரணை

கோவை: கோடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கு விவகாரம் தொடர்பாக, மதுரை தொழிலதிபரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கொள்ளை முயற்சி நடந்தது. இதில், அந்த எஸ்டேடின் காவலாளி ஓம்பகதூர் கொல்லப்பட்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக நீலகிரி மாவட்ட போலீஸார் விசாரணை நடத்தி 10 பேரை கைது செய்தனர். தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர், கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை மீண்டும் தீவிரமடைந்தது. … Read more

Zee Tamil Serial: ஆசிரியரால் ஆபத்து; எப்படி சமாளிக்கிறார் வித்யா?

8 திருப்பங்களுடன் தனது ஒளிரப்பபை தொடங்கியுள்ள வித்யா நம்பர் 1 அடுத்த 2 திருப்பங்கள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தொடக்கத்திலே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள வித்யா நம்பர் 1சீரியலில, மூன்றாவது திருப்பமாக டுடோரியலில் படிக்க செல்லும் வித்யாவுக்கு ஆசிரியரால் ஆபத்து வர இந்த பிரச்சினையை தீர்க்க சஞ்சய் எடுக்கும் முடிவு பெரும் விறுவிறுப்பை ஏற்படுத்தும் என்கின்றனர் சீரியல் குழுவினர். தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல் வித்யா நம்பர் 1. தினமும் இரவு … Read more

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வில் குளறுபடி.. முதல் செமஸ்டர் வினாத்தாள் இரண்டாம் செமஸ்டரிலும் வழங்கப்பட்டது..!

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்திற்குட்பட்ட 74 கல்லூரிகளில் பயிலும் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு நடந்த இரண்டாம் பருவத் தேர்வில் வினாத்தாள் குளறுபடி நடந்துள்ளது. முதல் பருவத் தேர்வில் வழங்கப்பட்ட வினாத்தாளை, இரண்டாம் பருவத் தேர்விலும் அச்சடித்து வழங்கியதால் மாணவர்கள் குழம்பினர். இதையடுத்து அண்ணாமலைப் பல்கலைக்கழக பதிவாளர் இணையதளம் மூலம் அனுப்பி வைத்த புதிய வினாத்தாளை கொண்டு மாணவர்கள் தேர்வு எழுதினர். இதற்காக கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டது. சில கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் முதல் பருவத் தேர்வு வினாத்தாளை … Read more

ஏலகிரி மலையில் கிபி 10-ம் நூற்றாண்டைச் சேர்ந்த செக்குக் கல்வெட்டு கண்டெடுப்பு

திருப்பத்தூர்: திருப்பத்தூர் அடுத்த ஏலகிரி மலையில் சுமார் 1,000 ஆண்டுகளுக்கு முந்தைய ’செக்குக் கல்வெட்டு’ ஒன்று கண்டெடுபிடிக்கப்பட்டுள்ளது. திருப்பத்தூர் தூய நெஞ்சக்கல்லூரியின் தமிழ்த்துறைப் பேராசிரியர் முனைவர் க.மோகன்காந்தி, காணிநிலம் முனிசாமி, ஏலகிரி டான்போஸ்கோ கல்லூரி நூலகர் நீலமேகம், ஏலகிரி மலை அத்தனாவூர் பள்ளி ஆசிரியர் சீனிவாசன் ஆகியோர் அடங்கிய குழுவினர் திருப்பத்தூர் அடுத்த ஏலகிரி மலைப்பகுதிகளில் கள ஆய்வு நடத்தினர். அப்போது, கி.பி.10-ம் நூற்றாண்டைச் சேர்ந்த செக்குக் கல்வெட்டு ஒன்றை இந்த ஆய்வு குழுவினர் கண்டறிந்தனர். இது … Read more