ஸ்பீக்கர் பாக்ஸ் விழுந்து 3 மாத பெண் குழந்தை உயிரிழப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில், பரண் மீது இருந்த ஸ்பீக்கர் பாக்ஸ் விழுந்ததில் பச்சிளம் பெண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. பிச்சானந்தல் கிராமத்தை சேர்ந்த பரணி என்ற பெண்மணி, தனது 3 மாத பெண் குழந்தை சுபஸ்ரீ-யை ஹாலில் படுக்க வைத்துள்ளார். ஸ்லாப்பில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த ஸ்பீக்கர்களில் ஒன்று சுபஸ்ரீ-யின் தலை மீது விழுந்ததாக கூறப்படுகிறது. பரணியின் கூச்சல் சத்தத்தை கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் சுபஸ்ரீயை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். போலீசார் … Read more

ராமநாதபுரம்: 100 நாள் வேலையில் முள்மரங்களை அகற்றியபோது பார்வை பாதிப்பு: முதல்வரிடம் நிவாரணம் கோரி மீனவப் பெண் மனு

ராமேசுவரம்: நூறு நாள் வேலை திட்டத்தில் முள்மரங்களை அகற்றியபோது பார்வை பாதிக்கப்பட்ட மீனவப் பெண், முதல்வரிடம் நிவாரணம் கோரி குறைதீர் கூட்டத்தில் மனு அளித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் திங்கட்கிழமை நடைபெற்றது. இங்கு தங்கச்சிமடம் ஊராட்சி குடியிருப்பு கிராமத்தைச் சேர்ந்த பாலகுமார் என்பவர் மனைவி நாகவள்ளி (28) வந்திருந்தார். மீனவக் குடும்பத்தைச் சேர்ந்த இவர், கணவரின் … Read more

வீட்டை பூட்டிவிட்டு திருமணத்திற்குச் சென்ற குடும்பத்துக்கு காத்திருந்த அதிர்ச்சி!

வீட்டின் பூட்டை உடைத்து 26 பவுன் நகை மற்றும் ரூ.2 லட்சம் பணம் கொள்ளை; திருமணத்திற்கு சென்றிருந்த போது மர்ம நபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். மண்ணச்சநல்லூர் அருகே உள்ள ஸ்ரீதேவி மங்களம் நடுத்தெருவைச் சேர்ந்தவர் செல்வராஜ் (60). இவர், தனது மனைவி மற்றும் மகனுடன் வசித்து வருகிறார். இந்நிலையில், இன்று காலை தந்தையும் மகனும், பெரம்பலூர் மாவட்டம் செட்டிகுளத்தில் நடைபெற்ற உறவினர் இல்ல திருமணத்திற்கு சென்ற நிலையில், இவருடைய மனைவி 100 நாள் வேலைக்கு சென்றுள்ளார். இந்நிலையில், … Read more

நுபுர் சர்மா கருத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம்; வெளிநாட்டவர்களை நாடு கடத்தும் குவைத்

Kuwait government to deport expats who protested over remarks against Prophet at illegal demonstration: வளைகுடா நாட்டின் சட்டங்கள் அத்தகைய ஆர்ப்பாட்டங்களை அனுமதிக்காததால், முஹம்மது நபிக்கு எதிராக இரண்டு முன்னாள் பாஜக நிர்வாகிகளின் சர்ச்சைக்குரிய கருத்துகளுக்கு எதிராக போராட்டத்தில் கலந்து கொண்ட குறிப்பிடப்படாத எண்ணிக்கையிலான வெளிநாட்டினரை கைது செய்து நாடு கடத்த குவைத் அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக ஊடக அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முஹம்மது நபிக்கு ஆதரவாக வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பிறகு ஆர்ப்பாட்டம் … Read more

உறவினர் பெண் இறந்த துக்கத்தில் சிதையில் விழுந்த இளைஞர் பலி..!

உறவினர் சிதையில் விழுந்து இளைஞர் தற்கொலை  செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மத்திய பிரதேசம் மாநிலம் சாஹர் மாநிலம் மஞ்குவா கிராமத்தை சேர்ந்தவர் பீரித்தி டாங்கி. இவர் கடந்த வியாழக்கிழமை மாலை வயல்பகுதிக்கு சென்றுவிட்டு நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள் அவரை வாயலில் சென்றூ தேடியுள்ளனர். அப்போது அவர் அங்குள்ள கிணற்றில் தவறி விழுந்து  உயிரிழந்தது தெரியவந்தது. இந்நிலையில் அவரது உடலை மீட்ட குடும்பத்தினர் கடந்த … Read more

முதியவர் மீது மினி பேருந்து ஏறி இறங்கும் பதைபதைக்கும் CCTV காட்சிகள்..!

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் பேருந்து நிலையத்தில் முதியவர் மீது மினி பேருந்து ஏறி இறங்கி விபத்துக்குள்ளானது குறித்து சிசிடிவி காட்சியின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கருங்கல் பகுதியை சேர்ந்த அலெக்ஸ்சாண்டர் என்ற முதியவர், தனது உறவினர் வீட்டிற்கு செல்ல பேருந்து நிலையத்திற்கு சென்றார். அங்கு, மினி பேருந்து ஒன்றின் பக்கவாட்டை பிடித்தப்படி நடந்த அவர், திடீரென தடுமாறி கீழே விழுந்தார். இதனை அறியாத அப்பேருந்தின் ஓட்டுநர், வாகனத்தை இயக்கியதை அடுத்து, அதன் பின்சக்கரம் அவரின் … Read more

‘மண் காப்போம்’ இயக்கத்திற்கு மகாராஷ்டிரா ஆதரவு – புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து

மும்பை: இந்தியாவின் 5-வது மாநிலமாக மகாராஷ்டிரா அரசு தனது மாநிலத்தில் மண் வளத்தை மீட்டெடுப்பதற்காக ‘மண் காப்போம்’ இயக்கத்துடன் நேற்றுமுன்தினம் (ஜூன் 12) புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது. மும்பையில் நடந்த நிகழ்ச்சியில் சத்குரு ஜக்கி வாசுதேவ் மற்றும் மகாராஷ்டிரா சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஆதித்யா தாக்கரே ஆகிய இருவரும் இப்புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டனர். முன்னதாக, முதல்வர் உத்தவ் தாக்கரே இல்லத்திற்கு சென்ற ஜக்கி வாசுதேவ் மண் வளத்தை மீட்டெடுப்பதற்கான நடைமுறைக்கு உகந்த, அறிவியல் தீர்வுகள் அடங்கிய ‘கொள்கை … Read more

அர்ச்சகர் தாக்கியதில் பக்தர் மண்டை உடைப்பு?–ரத்த காயத்துடன் வாக்குவாதம்.. வைரலாகும் வீடியோ

பெரம்பலூர் அருகே கோவிலில் அர்ச்சகர் தாக்கியதால் பக்தர் ஒருவருக்கு மண்டை உடைந்ததாக கூறப்படும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் அருகே வாலிகண்டபுரத்தில் வாலிஸ்வரர் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் முகூர்த்த நாட்களில் திருமணங்கள் நடக்கும் என்பதால் அந்நாட்களில் வழக்கத்தை விட கூடுதலான பக்தர்கள் கூட்டம் காணப்படும். இந்நிலையில், இன்று 15-க்கும் மேற்பபட்ட திருமணங்கள் நடைபெற்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து பெரம்பலூர் அருகே ஒகளூரைச் சேர்ந்த ராகவேந்திரன் என்ற பக்தர் கோவிலுக்கு வந்துள்ளார். அப்போது அவர், … Read more

இந்த புல்டோசர் சீனா பக்கம் போகாதா?

பத்திரிகையாளர்கள், ஊடகவியலாளர்கள், கார்ட்டுனிஸ்ட்கள், அரசியல்வாதிகள் போல, மீம்ஸ் கிரியேட்டர்களும் அன்றாட அரசியல் நிகழ்வுகளுக்கு எதிர்வினையாற்றுகிறார்கள். உ.பி.யில் புல்டோசர்களை வைத்து வீடுகளை இடித்தது குறித்து மீம்ஸ் கிரியேட்டர்கள் சாட்டையை சுழற்றியுள்ளனர். இன்று சமூக ஊடகங்களில் கவனம் பெற்ற மீம்ஸ்களை இங்கே தொகுத்து தருகிறோம். இந்த புல்டோசர் சீனா பக்கம் போகாதா 🤔#ShameOnBJP pic.twitter.com/nRoJRZYmnD — Dr. T R B Rajaa (@TRBRajaa) June 13, 2022 திமுக சட்ட மன்ற உறுப்பினர் டி.ஆர்.பி ராஜா தனது ட்விட்டர் … Read more

தமிழக காவல் நிலையத்திற்கு சென்றால் உயிருடன் திரும்புவோமா? முதலமைச்சரை டேக் செய்த அரசியல் பிரபலம்.!

காவல் நிலையத்திற்கு சென்றால் உயிருடன் திரும்புவோமா என்ற அச்சத்தை விதைத்துள்ளது முதலமைச்சரின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறை என்று, பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். நேற்று சென்னை கொடுங்கையூர் காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட அன்பு என்ற ராஜசேகர் காவல் நிலையத்திலேயே மரணம் அடைந்ததாக சொல்லப்படுகிறது.  இந்த வழக்கு தற்போது சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், இன்று நாகப்பட்டினத்தில் விசாரணை கைதி ஒருவர் உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது. இந்த சம்பவங்கள் குறித்து பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை … Read more