நெல்லை : மணிமுத்தாறு அருவியில் சுற்றுலா பயணிகள் இன்று முதல் குளிக்க அனுமதி.!

நெல்லை மணிமுத்தாறு அருவியில் சுற்றுலா பயணிகள் இன்று முதல் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற அருவிகளில், திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மணிமுத்தாறு அருவியும் ஒன்றாகும். பாபநாசம் அகஸ்தியர் அருவி போன்று ஆண்டுதோறும் இந்த அருவியிலும் தண்ணீர் விழுவது வழக்கம். திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் விடுமுறை தினங்களில் மணிமுத்தாறு அருவிக்கு வந்து ஆனந்தமாக குளித்து செல்கின்றனர். இந்த நிலையில், தமிழகத்தில் கடந்த சில … Read more

பிரபல பாடகர் பூபிந்தர் சிங் காலமானார்..!!

பிரபல பாடகரான பூபிந்தர் சிங் காலமானார்..அவருக்கு வயது 82. பிரபல இந்தி பாடகரான பூபிந்தர் சிங், கடந்த சில தினங்களாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தார். இதனால் அவர் கடந்த 10 நாளுக்கு முன் மும்பை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.  இந்நிலையில், மும்பை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த பூபிந்தர் சிங் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர். ரசிகர்களும், … Read more

மின்கட்டணம் உயர்த்தும் முடிவை அரசு கைவிட வேண்டும்: சசிகலா

சென்னை: ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, திமுக அரசு மின்கட்டணத்தை உயர்த்தும் முடிவை உடனே கைவிட வேண்டும் என்று சசிகலா வலியுறுத்தியுள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: “திமுக அரசு மின் கட்டணத்தை உயர்த்த முடிவு எடுத்து இருப்பது கடும் கண்டனத்திற்குரியது. இந்த மக்கள் விரோத அறிவிப்பு, தமிழக மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏழை எளிய நடுத்தர சாமானிய மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கின்ற வகையில் யாராலும் தாங்கிக் கொள்ள முடியாத … Read more

தமிழக சட்டமன்ற எதிர்கட்சி துணைத்தலைவராக ஆர்.பி. உதயகுமார் தேர்வு..!

தமிழக சட்டமன்ற எதிர்கட்சி துணைத்தலைவராக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயக்குமாரும், சட்டமன்ற எதிர்கட்சி துணை செயலாளராக முன்னாள் அமைச்சர் அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தியும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக, எதிர்கட்சி தலைவரும், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். கடந்த 17 ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் அவர்கள் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பான அறிவிப்பு கடிதத்தை சட்டப்பேரவை தலைவர் அலுவலகத்தில் அதிமுக கொறடா எஸ்.பி. வேலுமணி அளித்துள்ளார். Source link

வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் 3 நாட்களுக்கு பரவலாக மழை வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் 3 நாட்களுக்கு பரவலாக மழையும், ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்: தமிழக பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. நீலகிரி, ஈரோடு, … Read more

நாமக்கல்: ரியல் எஸ்டேட் அதிபர் குத்திக் கொலை – நண்பரிடம் போலீசார் விசாரணை

நாமக்கல்லில் ரியல் எஸ்டேட் அதிபரை காரில் வைத்து குத்திக் கொலை. தொழில் போட்டியால் கொலையா என நண்பர் ஒருவரிடம் நாமக்கல் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். நாமக்கல் திருச்சி சாலை ஜெய் நகரைச் சேர்ந்தவர் குமரேசன். இவர் கடந்த சில ஆண்டுகளாக ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று அவரது நண்பர் ஒருவருடன் டாஸ்மார்க் மதுபான பாரில் இரவு 10 மணி வரை மது அருந்தி உள்ளனர். அதன் பின்னர் இருவரும் வீட்டுக்கு செல்ல முற்பட்டபோது … Read more

யார் யாருக்கு எவ்வளவு மின் கட்டணம் அதிகரிக்கும்? முழு விவரம்

தமிழ்நாட்டில் மின்சார கட்டணம் உயர்கிறது என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார். அதன்படி வீட்டு பயன்பாட்டுக்கான மின்சார கட்டணம் யூனிட்டுக்கு 85 பைசா வகையிலும், வணிக பயன்பாட்டுக்கான மின்சார கட்டணம் யூனிட்டுக்கு 2.72 வரையிலும் உயர்கிறது.எவ்வளவு உயர்கிறது: அதன்படி இரண்டு மாதத்துக்கு 200 யூனிட் வரை பயன்படுத்தும் நுகர்வோருக்கு ரூ.27.50 (26.73 சதவீதம்), 300 யூனிட் பயன்படுத்தும் வீடுகளுக்கு 15.30 சதவீதமும் (ரூ.72.50), 500 யூனிட் வரை பயன்படுத்தும் நபர்களுக்கு ரூ.297.50ம், 600 யூனிட் வரை பயன்படுத்தும் … Read more

ஆஸ்திரேலியாவில் வேலை வாங்கி தருவதாக கூறி ஆறுபது லட்சம் ரூபாயை ஆட்டைய போட்ட நபர் கைது!

வெளிநாட்டில் வேலை வாங்கித்தருவதாக கூறி  சிவகங்கையில் 90 க்கும் மேற்பட்டோரிடம் 60 லட்சம் ரூபாய் மோசடி செய்த கும்பலை சேர்ந்த நபரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். ஆஸ்திரேலியாவில் வேலைக்கு ஆட்கள் தேவைப்படுவதாக கூறி 90க்கும் மேற்பட்டோரிடம் தலா 50 ரூபாய் பணமும், பாஸ்போர்ட்டையும் பெற்று ஏமாற்றியதாக கூறப்படுகிறது. இது தொடர்பான புகாரில் மோசடி கும்பலை செர்ந்த திருப்பாசேத்தியை சேர்ந்த காளீஸ்வரனை சொந்த கிராமத்தில் இருந்து அழைத்து வந்த போலீசார் அவரிடமிருந்த பாஸ்போர்டுகளை கைப்பற்றி, அவரது … Read more

52% மின்கட்டண உயர்வை தாங்க முடியாது; உடனடியாக கைவிடுக: தமிழக அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: 52% வரை மின்கட்டண உயர்வை தாங்க முடியாது; உடனடியாக கைவிட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: ”தமிழகத்தில் மின்கட்டணங்களை ஓர் அலகிற்கு 27.50 பைசா முதல் ரூ.1.25 உயர்த்தப் போவதாக தமிழக அரசு அறிவித்திருக்கிறது. மின்சார பயன்பாட்டின் அடிப்படையில் சில பிரிவினருக்கு 52% வரை கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டிருக்கிறது. அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களால் மின் கட்டண உயர்வை … Read more

கள்ளக்குறிச்சி: `சான்றிதழ் இழந்த மாணவர்களுக்கு வருவாய்துறை மூலம் நடவடிக்கை'-அமைச்சர் உறுதி

கள்ளக்குறிச்சி கலவரத்தில் சான்றிதழ்கள் இழந்த மாணவர்களுக்கு வருவாய்துறை மூலம் சான்றிதழ்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள தனது இல்லத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, “முதலமைச்சர் அறிவுறுத்தல்படி நேற்று அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் பள்ளியை ஆய்வு செய்தோம். நீதிமன்றத்திற்கு சென்றதால் மாணவியின் பெற்றோரை நேற்று நேரில் சந்திக்க முடியவில்லை. மறைந்த மாணவியின் தாய் M.com படித்துள்ளார். அவர் கேட்டுள்ளபடி … Read more