“எங்களுடன் எட்டப்பர்களாக இருந்தவர்களின் முகத்திரை கிழிக்கப்பட்டுள்ளது” – இபிஎஸ்

விழுப்புரம்: “தொண்டர்கள், உழைத்து உருவாக்கிய கட்சி அதிமுக. இது உழைப்பால் உயர்ந்த கட்சி, ஆட்சிக்கு வந்த கட்சி. எனவே தமிழக முதல்வர் ஸ்டாலின், எங்களோடு இருந்த எட்டப்பர்களை வைத்து எங்களை வீழ்த்த நினைக்கிறீர்கள், ஒருபோதும் நடக்காது” என்று அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் இன்று நடந்த அதிமுக நிர்வாகி இல்ல விழாவில் கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியது: “இன்று அதிமுக … Read more

2 வயது வளர்ப்பு நாய்க்கு கோலாகலமாக நடைபெற்ற வளைகாப்பு – ஆச்சர்யத்தில் மூழ்கிய கிராமம்

பெண் ஒருவருக்கு நடத்துவதுபோன்று திருச்சியில் இரண்டு வயது வளர்ப்பு பெண் நாய்க்கு வளைகாப்பு நடத்தப்பட்ட சம்பவம் கிராம மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி சங்கிலியாண்டபுரம் பாரதி நகரைச் சேர்ந்தவர் மாதேஸ்வரன் (51). இவருக்கு வளர்மதி என்ற மனைவியும், மாலதி, அனனியா என்ற மகள்களும் உள்ளனர். மகள்கள் இருவருக்கும் மணமுடித்துக் கொடுத்து விட்ட நிலையில் தனிமையில் வாடியுள்ளனர். அப்போது அவர்களுக்கு ஆறுதலாக இருக்க வேண்டும் என்பதற்காக, லேபர்டாக் என்ற வகையை சேர்ந்த நாய் குட்டி ஒன்றை, மூத்தமகள் அனனியா பரிசாக … Read more

மதுரையில் 200-க்கும் மேற்பட்ட போலி பாஸ்போர்ட்கள் வழங்கிய வழக்கை என்ஐஏ விசாரிக்க வேண்டும்: அண்ணாமலை

சென்னை: “மதுரையில் இருக்கக்கூடிய சில அதிகாரிகள் தங்கள் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி 200-க்கும் மேற்பட்ட போலி பாஸ்போர்ட் வழங்கியுள்ளனர்.போலி பாஸ்போர்ட் வழங்கியது தொடர்பான வழக்கை என்ஐஏ விசாரிக்க வேண்டும்” என்று பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். சென்னையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “அடுத்து நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக, ஒருவேளை மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் வந்தால், அமைச்சர் பொன்முடி இதேபோல், பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ள … Read more

”வாக்கி டாக்கி ஊழல் தொடர்பாக 144 ஆவணங்கள் கிடைத்துள்ளது” – நீதிமன்றத்தில் அரசு சொன்ன தகவல்

மீனவர்களுக்கு வாக்கி டாக்கி வழங்கியதில் 35.72 கோடி ரூபாய் இழப்பீடு ஏற்பட்டுள்ளது தொடர்பான 144 ஆவணங்கள் கிடைத்துள்ளதாகவும், அதன் அடிப்படையில் விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது எனவும் ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை மதுரைக்கிளையில் தகவல் தெரிவித்திருக்கிறது. மதுரையைச் சேர்ந்த மோகன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் முன்னாள் மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் மீது புகார் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், “கடந்த 2011 ஆம் ஆண்டு எல்லை தாண்டும் மீனவர்களின் நலனைப் பாதுகாப்பதற்காக அதிநவீன வசதி கொண்ட வாக்கி-டாக்கி … Read more

வருமான வரி கணக்கு தாக்கல்: ஆன்லைனில் ஃபைல் செய்வது எப்படி?

file income statement without CA, some easy ways for you / CA இல்லாமல்வருமானஅறிக்கைதாக்கல்செய்யுங்கள், உங்களுக்கானசிலஎளியவழிகள்: 2021-22 மற்றும் 2022-23 ஆகிய நிதியாண்டுகளுக்கான வருமான வரிக் கணக்கை (ஐடிஆர் தாக்கல் – ITR – Income Tax Return filing) தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஜூலை 31 ஆகும். இந்த தேதியை நீட்டிப்பது தொடர்பாக மத்திய அரசு இன்னும் எந்த அறிவிப்பையும் இதுவரை வெளியிடவில்லை. இருப்பினும் ஒரு மாதம் அல்லது இரண்டு மாதம் … Read more

குழந்தைகளுக்கு தாயின் அரவணைப்பை தந்தை அளிக்க வேண்டும்: சிறுமி பாலியல் வழக்கில் உயர் நீதிமன்றம் கருத்து

மதுரை: திருச்சியில் 11 வயது சொந்த மகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த வழக்கில் தந்தைக்கு கீழமை நீதிமன்றம் வழங்கிய ஆயுள் தண்டனையை உயர் நீதிமன்றம் உறுதி செய்து உத்தரவிட்டுள்ளது. மேலும், மனைவி பிரிந்து சென்றால் குழந்தைகளுக்கு பாதுகாப்பாகவும், தாயின் அரவணைப்பை வழங்குபவராகவும் தந்தை இருக்க வேண்டும் என நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். திருச்சியைச் சேர்ந்தவர் ஜான்கென்னடி. மனைவி பிரிந்து சென்ற நிலையில் நான்கு குழந்தைகளுடன் ஜான் கென்னடி வசித்து வந்தார். இந்த நிலையில் தனது 11 வயது … Read more

தாமதமாகும் சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவு – யுஜிசி சுற்றறிக்கை கூறுவது என்ன?

சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாக இன்னும் ஒரு மாதம் ஆகலாம் என பல்கலைக்கழக மானிய குழு சுற்றறிக்கை அனுப்பி உள்ளதால், தமிழகத்தில் பொறியியல், துணை மருத்துவம் உள்ளிட்ட உயர் கல்வி மாணவர் சேர்க்கை எந்த அளவிற்கு பாதிக்கப்படும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம். நாடு முழுவதும் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத்தேர்வு 12 லட்சத்திற்கும் அதிகமான மாணவ மாணவிகள் எழுதியுள்ளார்கள். தமிழகத்தில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான … Read more

நடுத்தர மக்களின் அக்கறை எங்கே போனது?

ப சிதம்பரம் நடுத்தர வர்க்கத்தினரை அவர்கள் தமக்கு தாமே திணித்துக்கொண்ட தனிமைப்படுத்தலில் இருந்து எதுவும் தடுப்பதாக தெரியவில்லை. இடைவிடாத விலைவாசி உயர்வு, நசுக்கும் வரிச்சுமை, வேலையின்மை, 2020 ல் கோவிட் காரணமாக ஏற்பட்ட இடப்பெயர்வு, அதன் தொடர்ச்சியாக இறப்புகள், காவல்துறை மற்றும் புலனாய்வு அமைப்புகளின் அத்துமீறல்கள், மனித உரிமைகளின் அப்பட்டமான மறுப்பு, வெறுப்பூட்டும் பேச்சுக்கள், முஸ்லிம்கள் புறக்கணிப்பு மற்றும் கிறிஸ்தவர்கள், கடுமையான அரசியலமைப்பு மீறல்கள் என ஏகப்பட்ட பிரச்சனைகள் …. நடுத்தர வர்க்கத்தினரால் நடத்தப்பட்ட சுதந்திரப் போராட்டம் … Read more

தமிழகத்தில் 150 கோயில்கள் இடிப்பு: இந்து முன்னணி மாநிலத் தலைவர் குற்றச்சாட்டு

கரூர்: தமிழகத்தில் 150 கோயில்கள் இடிக்கப்பட்டுள்ளன என இந்து முன்னணி மாநிலத்தலைவர் காடேஸ்வர சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். இந்துக்களின் உரிமை மீட்க பிரச்சாரப் பயண பொதுக்கூட்டத்தில் பங்கேற்க இன்று (ஜூலை 13) கரூர் வந்த இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் செய்தியாளர்களிடம் மேலும் கூறியது, ”சர்ச் வருமானத்தை கிறிஸ்தவர்களும், மசூதி வருமானத்தை முஸ்லிம்கள் மத வளர்ச்சிக்காகவும், மத மாற்றத்திற்காகவும் பயன்படுத்தி வருகின்றனர். அவர்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு அனுமதி கேட்டால் உடனே வழங்கப்படுகிறது. ஆனால் இந்துக்கள் கட்டிடம் … Read more

”காமராஜர் சிறந்த தேசியவாதி; முன்மாதிரியாக திகழ்பவர்” – மதுரையில் ஆளுநர் ஆர்.என் ரவி பேச்சு

மதுரையில் தமிழக கல்வி கட்டமைப்பை உருவாக்கியவர் காமராஜர். தொழிற்சாலைகள் உருவாக்கியவர். சென்னை ஐஐடியை உருவாக்கியவர் இவரே. காமராஜரை நினைவு கூறுவதில் பெருமை கொள்கிறேன் என்று ஆளுநர் ரவி பேசியுள்ளார். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் 54வது பட்டமளிப்பு விழாவில் தமிழக ஆளுநர் ரவி பேசினார். அனைவருக்கும் வணக்கம் என உரையை துவக்கிய ஆளுநர், உங்களுக்கும் உங்களது நண்பர்கள் குடும்பத்தினருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். இந்த நாள் மகிழ்ச்சியான நாளாக அமைகிறது. உங்களின் கடுமையான உறுதியாலும் முயற்சியாலும் கிடைத்த பட்டம் இது. உங்களின் எதிர்காலம் … Read more