கொடைக்கானலில் கோடை விழா.. பவாய் கரகம், தோண்டி கரகம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளை ஆர்வமுடன் கண்டுகளித்த சுற்றுலாப் பயணிகள்..!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் நடைபெற்று வரும் கோடை விழாவின் 8வது நாளான நேற்று ராஜஸ்தான் பவாய் கரகம்,தோண்டி கரகம் மற்றும் மலைகிராம மக்களின் பாரம்பரிய நடனம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளை சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர். சாகச கரகாட்டம்,தப்பாட்டம்  மற்றும் பழமை வாய்ந்த இசை வாத்தியங்கள் முழங்க பூம்பாறை பூர்வகுடி மக்களின் பாரம்பரிய நடனம் உள்ளிட்டவையும் நடைபெற்றது. Source link

மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது: 6 இடங்களுக்கு 13 பேர் மனு தாக்கல்; இன்று பரிசீலனை

சென்னை: தமிழகத்தில் விரைவில் காலியாகும் 6 மாநிலங்களவை உறுப்பினர் இடங்களுக்கு, அரசியல் கட்சி களின் வேட்பாளர்கள் 6 பேர் உட்பட 13 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இன்று (ஜூன் 1) வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்பட உள்ளன. தமிழகத்தில் இருந்து தேர்வான 6 மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவிக்காலம் முடிவடைய உள்ளதையொட்டி, புதிய உறுப்பினர்களுக்கான தேர்தல் ஜூன்10-ம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. சட்டப்பேரவை உறுப்பினர்கள் பலத்தின் அடிப்படையில் இந்த தேர்தல் நடைபெறுவதால், 6-ல் … Read more

முதலாளி பாலியல் தொல்லை அளிக்கிறார்.. பெண் செய்த விபரீத செயல்..!

முதலாளி பாலியல் தொல்லை கொடுப்பதாக பெண் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம், பவானி பகுதியில் நவனீதன் என்பவருக்கு சொந்தமான துணிகடையில் அந்த பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் 11 ஆண்டுகளாகவேலை செய்து வந்தார். இந்நிலையில், அந்த பெண்ணுக்கு பல முறை பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், மருத்துவ செலவிற்கு பணம் கேட்டு அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது நவனீதனின் மனைவி மற்றும் சகோதரி ஆகியோர் அவரை தகாத வார்த்தைகளால்கூறி விரட்டியுள்ளனர்.  இந்நிலையில், … Read more

ஓய்வூதியர்களின் வீட்டுக்கே சென்று வாழ்நாள் சான்றிதழ் பெறும் சேவை: தமிழக அரசு – அஞ்சல் துறை இடையே ஒப்பந்தம்

சென்னை: அஞ்சல்துறை மூலம் ஓய்வூதியர்கள் இருப்பிடத்துக்கே சென்று வாழ்நாள் சான்றிதழை பெறுவதற்கான சேவை தொடர்பாக தமிழக அரசு மற்றும் இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. இதுகுறித்து தமிழக அரசின் நிதித்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு: மாநில அரசின் ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியர்கள், தங்கள் வாழ்நாள் சான்றிதழை ஆண்டுதோறும் ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் சமர்ப்பிக்கின்றனர். தற்போது ​​ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் பெறுவோர் தங்கள் விருப்ப அடிப்படையில், ஓய்வூதியம் வழங்கும் அலுவலரிடம் நேரடியாகச் … Read more

‘ஸ்டாலினுடன் பேச விடவில்லை… இறந்து போக நினைக்கிறேன்’ முகநூலில் நெல்லை கண்ணன் ஷாக்

தமிழ்க்கடல் என அழைக்கப்படும் நெல்லை கண்ணன், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஆவர். ஆரம்பக்காலத்தில் கருணாநிதி எதிர்ப்பு கொள்கை கொண்ட நெல்லை கண்ணன், அவருக்கு எதிராக பல இடங்களில் பேசியுள்ளார். 1996இல் சேப்பாக்கம் தொகுதியில் அன்றைய திமுக தலைவர் மு. கருணாநிதியை எதிர்த்து போட்டியிட்டவர். ஆனால், அண்மைக்காலமாக ஸ்டாலினையும், திமுகவையும் பாராட்டி பேசி வருகிறார். இந்நிலையில் நெல்லை கண்ணன் தனது பேஸ்புக் பக்கத்தில், 79 வயதுக் கிழவன் நொந்து போயுள்ளேன். யாராவது சொல்லுங்களேன் ஒரு நல்ல தலைவரோடு … Read more

பாஜக பிரமுகர் ஓட்டி வந்த கார் மோதி விபத்து.. ஊராட்சி ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் உயிரிழப்பு.!

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வடகரையை சேர்ந்தவர் பிரபாகரன். இவர் தீவிர பாஜக ஆதரவாளர். மேலும் பிரதமர் மோடியின் மீதான பற்றால் தனது பெயரை மோடி பிரபாகரன் என மாற்றிக் கொண்டுள்ளார். இவர் திருப்புவனம் பாஜக ஒன்றிய செயலாளராக பதவி வகித்து வருகிறார். இந்த நிலையில் இவர் நேற்று தனது காரில் மானாமதுரையில் இருந்து 4 வழி சாலை வழியாக திருப்புவனம் சென்று கொண்டிருந்தார். அப்போது கொத்தங்குளம் விலக்கு இடத்தின் அருகே கார் வந்து கொண்டிருந்த போது, முன்னால் … Read more

கலாமின் கொள்கைகளையும் நாம் கடைபிடிக்க வேண்டும் – அப்துல் கலாமுடன் இணைந்து பணியாற்றிய விண்வெளி விஞ்ஞானிகள் கருத்து

சென்னை: ‘‘அப்துல் கலாமை கொண்டாடுவதோடு அவரது கொள்கைகளையும் நாம் கடைபிடிக்க வேண்டும்’’ என்று ‘கலாமை கொண்டாடுவோம்’ ஆன்லைன் கலந்துரையாடல் நிகழ்வில் விண்வெளி விஞ்ஞானிகள் தெரிவித்தனர். முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் நினைவைப் போற்றும் வகையில், ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் சார்பில் ‘கலாமை கொண்டாடுவோம்’ எனும் ஆன்லைன் சிறப்பு கலந்துரையாடல் நிகழ்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் மூத்த விஞ்ஞானியும் சத்தீஸ்கர் அமிட்டி பல்கலைக்கழக வேந்தருமான டாக்டர் வி.செல்வமூர்த்தி, ராணுவ விஞ்ஞானியும் அறிவியல் எழுத்தாளருமான டாக்டர் … Read more

அரசு அலுவலகத்தில் தலித் ஊழியர் டம்ளர், கழிவறை பயன்படுத்த தடை.. 6 பேர் மீது வழக்குப் பதிவு !

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள குறவர் சமூகத்தை சேர்ந்த சக ஊழியரை, சாதியின் பெயரால் துன்புறுத்தியதாக தமிழக பொதுப்பணித்துறை ஊழியர்கள் 6 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. முதல் தகவல் அறிக்கையின்படி, விருதுநகர் செயற்பொறியாளர்  (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிபவர் மாரியப்பன் (48). இவர் குறவர் இனத்தைச் சேர்ந்தவர். இதனால் அங்கு பணிபுரியும் சக ஊழியர்கள் மாரியப்பன் சாதி பெயரை சொல்லி, அவரை தீண்டத்தகாதவர் போல நடத்தி உள்ளனர். சக ஊழியர்கள் தண்ணீர் குடிக்க … Read more

மனைவியை இழந்து மனவேதனையில் இருந்த கணவன், மகள் தூக்கிட்டு தற்கொலை.!

வேலூரில் மனைவியை இழந்து மனவேதனையில் இருந்த கணவன், மகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர். வேலூர் விருதம்பட்டு அருகே டி.கே.புரம் பகுதியை சேர்ந்த தினகரன் மின்வாரியத்தில் பணி புரிந்து வந்தார். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளன. மூத்தமகள் மனநலம் பாதிக்கப்பட்டவர்.  இந்நிலையில் இவருடைய மனைவி கடந்த வருடம் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். மனைவியின் இறப்பு தினகரனுக்கு மிகுந்த வேதனையை ஏற்படுத்தி வந்த நிலையில், ஏற்கனவே ஒரு முறை தற்கொலைக்கு முயற்சி செய்த நிலையில் நேற்று இரவு தினகரனும், … Read more

புதிய கல்விக் கொள்கையை படித்து புரிந்த பிறகு தான் அதனை எதிர்க்கிறோம் – அமைச்சர் பொன்முடி

புதிய கல்விக் கொள்கையை பலரும் படிக்காமல் எதிர்த்து வருவதாக நேற்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்திருந்த நிலையில், அதனை ஆழ்ந்து படித்து விட்டு தான் தாங்கள் கருத்து தெரிவிப்பதாக அமைச்சர் பொன்முடி பதிலளித்துள்ளார். சென்னை நந்தனம் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றப்பின் பேட்டியளித்த அவர், வேற்றுமையில் ஒற்றுமை என ஆளுநர் நேற்று பேசியதாகவும், அதன்படி மாநில அரசின் கருத்துக்களுக்கு அவர் உரிய முக்கியத்துவம் அளிப்பார் என நம்புவதாகவும் குறிப்பிட்டார். Source link