ராமர் பாலம் எப்படி, எப்போது, உருவானது? – தேசிய கடல்சார் நிறுவனம் கடலுக்கடியில் விரைவில் ஆய்வு

ராமேசுவரம்: இந்தியாவின் தனுஷ்கோடிக்கும், இலங்கையின் தலைமன்னாருக்கும் இடையில் ராமர் சேது பாலம் எப்படி, எப்போது, உருவானது என்பது குறித்து தேசிய கடல்சார் நிறுவனம் விரைவில் கடலுக்கடியில் ஆய்வு செய்ய உள்ளது. ராமேசுவரம் அருகே தனுஷ்கோடியிலிருந்து இலங்கையின் தலைமன்னார் வரையிலுமான கடற்பகுதியில் 13 மணல் தீடைகள் உள்ளன. தனுஷ்கோடியிலிருந்து முதல் 6 தீடைகள் இந்தியாவிற்கும், 7-ல் இருந்து 13 வரையிலான தீடைகள் இலங்கைக்கும் சொந்தமானவை. இந்த மணல் தீடைகள் இந்து, கிறிஸ்தவ, முஸ்லிம் மதங்களின் நம்பிக்கையோடு தொடர்புள்ளவைகளாக இருப்பதினால் … Read more

#தென்காசி || விஷம் குடித்து முதியவர் தற்கொலை.!

தென்காசி மாவட்டத்தில் விஷம் குடித்து முதியவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள சிவநாடானுர் அய்யனூர் பகுதியை சேர்ந்தவர் சேர்மக்கனி. இவர் நீண்ட நாளாக நீரிழிவு நோய்க்கு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இருப்பினும் நீரிழிவு நோயினால் மிகுந்த பாதிப்படைந்த சேர்மக்கனி மனவேதனையில் பூச்சிக்கொல்லி மருந்து குடித்து மயங்கி உள்ளார். இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் முதியவர் சேர்மக்கனி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் … Read more

பள்ளிகள் செயல்படும் நேரத்தை நிர்வாகமே முடிவெடுக்கலாம் – பள்ளிக்கல்வித்துறை

தமிழகத்தில் திங்கட்கிழமை முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், பள்ளிகள் செயல்படும் நேரத்தை அதன் நிர்வாகமே முடிவெடுக்கலாம் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. பள்ளிகளின் அமைவிடம், போக்குவரத்து வசதி உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு பள்ளிகள் செயல்படும் நேரத்தை, பள்ளி மேலாண்மை குழுக்களுடன் கலந்தாலோசித்து முடிவு செய்யலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும், 8 பாடவேளைகள் கொண்டதாக பள்ளிகள் செயல்பட வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.   Source link

சாதியை வைத்து மக்களை பிரித்து வரும் தமிழக அரசியல் கட்சிகள்: பாமக தலைவர் அன்புமணி குற்றச்சாட்டு

கோவை: தமிழக அரசியல் கட்சிகள் சாதியை வைத்து மக்களை பிரித்து வருவதாக பாமக தலைவர் அன்புமணி குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து கோவை விமானநிலையத்தில் இன்று (சனிக்கிழமை) இரவு செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: “தமிழ்நாட்டில் மற்ற கட்சிகள் எல்லாம் சாதி, மதம், இனம், மொழியை வைத்து பிரித்து வருகின்றனர். பாமக மக்களை இணைத்துக் கொண்டிருக்கிறது. சாதி ரீதியாக பாமக மீதான விமர்சனத்தில் உண்மை இல்லை. எங்கள் வளர்ச்சியை பிடிக்காத திராவிடக் கட்சிகள், எங்களை ஒரு வட்டத்துக்குள் அடைக்க திட்டமிடுகின்றனர். அந்த … Read more

இந்த இடங்களில் ஒருவருக்கு கொரோனா வந்தால், அனைவருக்கும் கொரோனா பரிசோதனை – அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு.!

கொரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த செய்ய வேண்டிய பணிகள் குறித்து அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் முக்கிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். இன்று தலைமைச் செயலகத்தில் தமிழகத்தில் கொரோனா தொற்று குறித்தும், எடுக்கப்படவேண்டிய தொடர் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் குறித்தும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வுக் கூட்டத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவது தொடர்பாக பல அறிவுறுத்தல்களை அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் முக்கிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். அதன் விவரம் பின்வருமாறு, > தமிழகத்தில் இதுவரை கொரோனா நோய்த்தொற்றின் … Read more

தலைக் கவசம் இல்லை.. தலைக் கனம் தான் இருக்கு.. போலீசிடம் வம்பிழுத்த இளைஞர்..! செல்போனை பறித்ததால் ஜெயில்

மதுரையில் தலைக்கவசம் அணியாமல் சென்ற இளைஞரின் வாகனத்தை தடுத்து வீடியோ பதிவு செய்த காவல்துறையினரிடம் செல்போனை பறித்துசென்ற இளைஞர் கைது செய்யப்பட்டார். மதுரை தல்லாகுளம் காவல்நிலையம் அருகேயுள்ள சாலையில் வெள்ளிக்கிழமை மாலை போக்குவரத்து காவலர்களான ஆல்வின் ஜெபாஸ்டின், சின்ன கருத்தபாண்டி ஆகிய இருவரும் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக தலைக்கவசம் அணியாமல் இரு சக்கர வாகனம் ஓட்டி வந்த இரு இளைஞர்களை தடுத்து நிறுத்தி அபராதம் விதிப்பதாக கூறியுள்ளனர். வாகனத்தில் வழக்கறிஞர் ஸ்டிக்கர் ஒட்டியுள்ள … Read more

சென்னை மாநகராட்சியில் உருவாக்கப்பட்ட சாலையோர விற்பனைக் குழுக்கள் கலைப்பு

சென்னை: சென்னை மாநகராட்சியில் உருவாக்கப்பட்ட சாலையோர விற்பனைக் குழுக்கள், உயர் நீதிமன்ற உத்தரவின்படி கலைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தெருவோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக தெருவோர வியாபாரிகள் வாழ்வாதார பாதுகாப்பு மற்றும் சாலையோர வியாபாரம் முறைப்படுத்துதல் சட்டத்தை கடந்த 2014-ம் ஆண்டு மத்திய அரசு இயற்றியது. இதனைப் பின்பற்றி தமிழ்நாடு அரசு 2015-ம் ஆண்டு தெரு வியாபாரிகள் வாழ்வாதார பாதுகாப்பு மற்றும் தெருவோர வியாபாரம் முறைப்படுத்துதல் விதிகளை உருவாக்கியது. இதன்படி, சென்னை தெருவோர வியாபாரிகளை கணக்கெடுக்கும் பணி நடந்தது. … Read more

வழக்கறிஞர் பிறந்தநாள் கொண்டாட்டம் – 5 கி.மீட்டருக்கு அணிவகுத்து நின்ற வாகனங்கள்

பட்டாபிராமில் வழக்கறிஞர் ஒருவரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தால் 1 மணி நேரமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் 5 கி.மீ வாகனங்கள் அணிவகுத்து நின்றன. ஆவடி அருகே பட்டாபிராமில் வழக்கறிஞர் ஒருவரின் பிறந்தநாளை முன்னிட்டு நல திட்டம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. ஆவடியில் இருந்து பட்டாபிராம் வரை சுமார் 100 க்கும் மேற்பட்டோர் செண்டை மேளம், தாரை தப்பட்டை, மயிலாட்டம், ஒயிலாட்டம் என ஊர்வலம் சென்று வருகின்றனர். இதனால் சுமார் ஐந்து கிலோமீட்டர் தொலைவில் சிடிஎச் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. … Read more

செங்கல்பட்டு.! கார் மீது லாரி மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு.!

செங்கல்பட்டு மாவட்டத்தில் கார் மீது லாரி மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் தேசுமுகிபேட்டை பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் டிரைவர். இவர் சென்னையிலிருந்து திருக்கழுக்குன்றம் நோக்கி காரில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது கீர்ப்பாக்கம் பகுதியில் எதிர்பாராதவிதமாக கார் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஆறுமுகம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதையடுத்து இந்த விபத்து குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஆறுமுகத்தின் உடலை மீட்டு … Read more

“தமிழ்நாட்டில் கொரோனா பெருந்தொற்று மீண்டும் அதிகரிப்பு” – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருவதாக குறிப்பிட்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன், வெளிநாடுகளில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் தொடர்ந்து கண்காணிக்கப்படுவதாக தெரிவித்தார். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் பேசிய அவர், தமிழகம் முழுவதும் நாளை சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடைபெற உள்ளதாகவும், பொதுமக்கள் இதனை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். Source link