ஆரூத்ரா கோல்டு நிறுவனத்தில் முதலீடு செய்தவர்கள் தவறுதலாக உயர் நீதிமன்ற வளாகத்தில் திரண்டதால் பரபரப்பு.!

ஆரூத்ரா கோல்டு நிறுவனத்தில் முதலீடு செய்தவர்கள் தவறுதலாக உயர் நீதிமன்ற வளாகத்தில்  திரண்டனர். அங்கு பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களை அப்புறப்படுத்த முயன்றனர். மாவட்ட வருவாய் அலுவலரை அணுகுமாறு அரசு வெளியிட்ட அறிவிப்பு குறித்து அங்கிருந்த வழக்கறிஞர்கள் எடுத்துரைத்ததும் அவர்கள் கலைந்து சென்றன்றர்.  Source link

மாவட்டங்களில் எதிரெதிர் அணியாக அரசியல்: கோஷ்டி பூசலை மறந்து இபிஎஸ் பக்கம் நின்றதன் பின்னணி என்ன?

மதுரை: தமிழகம் முழுவதும் மாவட்டங்களில் எதிரெதிர் அணியாக கோஷ்டி அரசியல் செய்து வந்த மாவட்டச் செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்கள் இன்று (ஜூலை 11) நடந்த பொதுக்குழுவில் தங்கள் பூசலை மறந்து ஒரே அணியாக கே.பழனிசாமி பக்கம் நின்றுள்ளனர். அதிமுகவில் எம்ஜிஆர் காலத்தில் இருந்தே காங்கிரஸ் கட்சிக்கு நிகராக மாவட்டங்கள் தோறும் கோஷ்டி பூசல் உண்டு. ஆனால், அது காங்கிரஸ் கட்சியை போல் அடிதடி சண்டை போட்டுக் கொள்ளும் அளவிற்கு வெளிப்படையாக தெரியாது. அதிமுக ராணுவ கட்டுப்போடுகளோடு இயங்கிய … Read more

நாமக்கல்: குளிர்பானத்தில் மிதந்த பூச்சி – உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி சோதனை

ராசிபுரம் அடுத்த அத்தனூர் பகுதி டீக்கடையில் குழந்தைகள் வாங்கிய குளிர்பானத்தில் பூச்சி, குப்பைகள் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த வெண்ணந்தூர் ஒன்றியத்திற்குட்பட்டு அத்தனூர், வெள்ளப்பிள்ளையார் கோவில், நாச்சிப்பட்டி, மல்லூர் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இதுபோன்ற பல்வேறு கிராமப் பகுதிகளை குறிவைத்து குறைந்த விலைக்கு காங்கேயம் பகுதியை சேர்ந்த (TILO)தனியார் குளிர்பான நிறுவனம் குளிர்பானத்தை விற்பனை செய்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அத்தனூர் பகுதியில் உள்ள டீக்கடையில் குழந்தைகள் குளிர்பானம் வாங்க சென்றுள்ளனர். … Read more

கையில் சிகரெட் உடன் போட்டோ… சர்ச்சையில் ராதிகா சரத்குமார்!

Radhika sarathkumar latest photo goes viral: நடிகை ராதிகா சரத்குமார் கையில் சிகரெட் உடன் வெளியாகியுள்ள திரைப்பட போஸ்டர் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 80 மற்றும் 90களில் தமிழ் சினிமாவின் முன்னனி நாயகியாக வலம் வந்தவர் ராதிகா. இவர் நடிகர் சரத்குமாரை திருமணம் செய்துள்ளார். தற்போது திரைப்படங்கள் மற்றும் சீரியல்களில் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார். இதையும் படியுங்கள்: கலைஞர் குடும்பத்தின் அடுத்த ஹீரோ… கிருத்திகா உதயநிதி வெளியிட்ட ரகசியம் தற்போது, இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனியின் … Read more

இதான் சரியான நேரம்… சசிகலா ஆவேச பேட்டி.!

இன்று செய்தியாளர்களை சந்தித்த சசிகலா தெரிவித்துள்ளதாவது,  “இன்று நடந்த நிகழ்வுகளை பார்க்கும்போது, அதிமுக தொண்டர்கள் அனைவரும் ஒன்று சேரும் நேரம் வந்துவிட்டது என்று தான் தோன்றுகிறது. தலைமை பதவியை அடித்துப் பிடிக்க நினைத்தால் அது நிலைக்காது.  பணம் அதிகாரம் கொண்டு அடைந்த எந்த ஒரு பதவியும் நிலைக்காது. இது சட்டப்படியும் செல்லாது. தொண்டர்கள் நிழலுக்காக சண்டையிட்டு நிஜத்தை இழந்து விடக்கூடாது.  ஒன்றரை கோடி தொண்டர்களும், பொதுமக்களும் என்னைதான் ஆதரிக்கிறார்கள். ஒட்டுமொத்த தொண்டர்களின் ஆதரவோடு, நிஜத்தை நிச்சயம் அடைவோம்.  … Read more

யார் கட்டுப்பாட்டில் அ.தி.மு.க. அலுவலகம்? இரு தரப்பினரும் ஆஜராகி விளக்கமளிக்க காவல்துறை நோட்டீஸ்

அ.தி.மு.க. தலைமை அலுவலகம் யாருடைய கட்டுப்பாட்டில் உள்ளது என்பதை முடிவு செய்ய வரும் 25ஆம் தேதியன்று இரு தரப்பினரும் ஆஜராகி விளக்கமளிக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இது குறித்த செய்திக்குறிப்பில், பிரச்சினையை தவிர்க்கும் வகையிலேயே, வருவாய் கோட்டாட்சியர் பார்வையிட்டு சீல் வைத்து நடவடிக்கை மேற்கொண்டதாகவும் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர். Source link

“முல்லைப் பெரியாறு அணையில் முழுக் கொள்ளளவு நீரைக் தேக்க பேபி அணையை கட்டி பலப்படுத்த வேண்டும்”

ராமநாதபுரம்: முல்லைப் பெரியாறு அணையில் முழுக் கொள்ளளவு நீர் தேக்க வேண்டுமெனில் தமிழக அரசு உடனடியாக பேபி அணையை கட்டி பலப்படுத்த வேண்டும் என தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் செ.நல்லசாமி தெரிவித்தார். தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு செயலருமான செ.நல்லசாமி ராமநாதபுரத்தில் செய்தியாளர்களிடம் கூறியது: “நாடாளுமன்ற தேர்தல் முதல் உள்ளாட்சி தேர்தல் வரை வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கும் சக்தியாக பணமே இருந்து வருகிறது. இது இந்திய ஜனநாயகத்திற்கு வந்திருக்கும் பேராபத்து. … Read more

தற்காலிக ஆசிரியர் நியமனம்: பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டுதல்கள்

தற்காலிக ஆசிரியர் நியமனம் தொடர்பான பணிகளை வேகப்படுத்த வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், டிஆர்பி நடத்திய சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்றவர்களை மட்டுமே தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு தேர்வு செய்ய வேண்டும் என்றும் அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களும் வரும் 15-ம் தேதிக்குள் தகுதியானவர்களை தேர்வு செய்ய வேண்டும் என்றும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, அரசு … Read more

ஆடு மேய்க்க சென்ற 9 வயது சிறுமிக்கு ஏற்பட்ட கொடூரம்.. 15 வயது சிறுவன் போக்சோவில் வழக்கு பதிவு.!

பாலியல் தொல்லை அளித்த சிறுவன் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள சந்தைவெளிபேட்டை பகுதியில் 9 வயதுடைய சிறுமி ஒருவர் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று அந்த சிறுமி தனது அண்ணனுடன் ஆபத்தானபுரம் பகுதிக்கு ஆடு மேய்க்க சென்றுள்ளார். அப்போது அதே பகுதியை சேர்ந்த 15 வயது சிறுவன் ஒருவன் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து சிறுமி அழுது கொண்டு தனது தாயிடம் கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் … Read more

ஓ.பி.எஸ் உள்ளிட்ட 3 பேரின் எம்.எல்.ஏ பதவி என்ன ஆகும்?

What will happen to OPS, Vaithilingam and Manoj Pandian MLA posts?: அ.தி.மு.க கட்சி அடிப்படை உறுப்பினர் பதவிலிருந்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களின் எம்.எல்.ஏ பதவி என்ன ஆகும் என்ற கேள்வி எழுந்துள்ளது. அ.தி.மு.க.,வின் சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் சென்னை வானகரத்தில் நடைபெற்றது. இதில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஒற்றை தலைமை பிரச்னையால் பொதுக்குழுவுக்கு செல்லாத ஓ.பி.எஸ் அ.தி.மு.க தலைமை அலுவலகம் வந்து … Read more