நீட் தேர்வு தோல்வி பயத்தால் மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை ; போலீசார் விசாரணை

அரியலூரில் நீட் தேர்வு தோல்வி பயத்தால் மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். அரியலூர் ரயில்வே காலனி பகுதியை சேர்ந்த நடராஜன் – உமா தம்பதியரின் மகள் நிஷாந்தினி 2020-ம் ஆண்டு 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 529 மதிப்பெண்கள் பெற்றிருந்தார். கடந்த ஆண்டு நீட் தேர்வில் 200 மதிப்பெண்கள் எடுத்திருந்த அவர், தொடர்ந்து இரண்டாவது முறையாக நீட் தேர்வை எதிர்கொள்ள பயின்று வந்த நிஷாந்தி, நாளை தேர்வு எழுத இருந்த … Read more

குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சையில் பெண் இறந்தால் ரூ.4 லட்சம் இழப்பீடு: அரசு தகவல்

சென்னை: அரசு மருத்துவமனைகளில் குடும்பக் கட்டுப்பாடு செய்துகொள்ளும் பெண் இறந்துவிட்டால், அவரின் குடும்பத்திற்கு வழங்க கூடிய இழப்பீடு 2 லட்சம் ரூபாயிலிருந்து 4 லட்சமாக உயர்த்தி உள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தை பெரிய கரும்பூர் என்ற பகுதியைச் சேர்ந்த கனிமொழி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த வழக்கில், “கடந்த 2016 ஆம் ஆண்டு பாலாஜி என்பவருடன் கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்துகொண்டேன். தங்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், … Read more

நெருங்கும் ஒலிம்பியாட் தொடர்.. செஸ் போர்டாக மாறிய நேப்பியர் பாலம்!

44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஜூலை 28 ஆம் தேதி முதல் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் முதன்முறையாக நடைபெற இருக்கிறது. ஆகஸ்டு 10 ஆம் தேதி வரை நடைபெறும் இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டியில் ஏராளமான சர்வதேச வீரர்கள் கலந்துக்கொள்ள உள்ளனர். இந்த போட்டியை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி சென்னை வர உள்ளார். தமிழ்நாடு அரசின் நிதிப்பங்களிப்புடன் மிகவும் பிரம்மாண்டமான முறையில் நடைபெற உள்ள இந்த போட்டியை பிரபலப்படுத்தும் பணிகளில் தமிழ்நாடு அரசு … Read more

தமிழக மக்களே இனி நிலைமை இப்படித்தான் இருக்கும்.., எச்சரிக்கும் தமிழ்நாடு வெதர்மேன்.!

நாடு முழுவதுமே பல்வேறு மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக அசாம், ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக, மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி உள்ளனர். அதேபோல் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலும், தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாகவும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், சென்னை மற்றும் தமிழகத்தின் உள் மாவட்டங்களில் இன்று முதல் இடியுடன் கூடிய கனமழை தொடங்கிவிடும் என்று, தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். இது … Read more

கார்த்திக் கோபிநாத் பணம் வசூலித்து முறைகேடு செய்துள்ளார்: உயர் நீதிமன்றத்தில் காவல் துறை அறிக்கை

சென்னை: கோயில் திருப்பணிகளுக்காக பணம் வசூலிக்கக் கூடாது என சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயில் செயல் அலுவலர் நோட்டீஸ் அனுப்பியதையும் மீறி கார்த்திக் கோபிநாத் பணம் வசூலித்து முறைகேடு செய்துள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக காவல்துறை பதில் மனுத் தாக்கல் செய்துள்ளது. பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூரில் உள்ள மதுரகாளியம்மன் கோயில் திருப்பணிக்களுக்காக முறைகேடாக பணம் வசூலித்து, அதை கோயில் பணிகளுக்கு பயன்படுத்தாமல் வேறு நோக்கத்திற்காக பயன்படுத்தி மோசடி செய்ததாக பாஜக ஆதரவாளரும், யூ டியூபருமான கார்த்திக் கோபிநாத்துக்கு … Read more

இது என்ன இந்துமத ஆட்சியா?.. அரசு விழாவில் பூஜை செய்தவர்களிடம் செந்தில்குமார் எம்.பி ஆவேசம்

பாப்பிரெட்டிப்பட்டி அருகே ஆலாபுரம் ஏரி புனரமைக்கும் பணியின்போது பூமி பூஜைக்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஏற்பாடு செய்திருந்தனர். அங்கு சென்ற எம்.பி செந்தில்குமார் இது திராவிட ஆட்சியா அல்லது இந்துமத ஆட்சியா என வெகுண்டெழுந்த வீடியோ இணையங்களில் பரவி வைரலாகி வருகிறது. தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த ஆலாபுரம் ஏரியில் ரூ.1.38 கோடி மதிப்பீட்டில் ஏரி புனரமைக்கும் பணியை தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் தொடங்கி வைக்க வருகைபுரிந்தார். அப்போது பொதுப்பணித்துறை சார்பில் பூமி பூஜை செய்ய ஐயர் … Read more

Tamil News Live Update: துணை குடியரசு தலைவர் தேர்தல்; பா.ஜ.க கூட்டணி வேட்பாளராக ஜெக்தீப் தன்கர் அறிவிப்பு

Go to Live Updates Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது. Tamil News Latest Updates தேர்வில் சாதி குறித்து கேள்வி.. விளக்கம் கேட்டு நோட்டீஸ் பெரியார் பல்கலை. தேர்வில் சாதி குறித்து கேள்வி இடம்பெற்ற விவகாரத்தில், பல்கலை. துணை வேந்தர், பதிவாளர், தேர்வுக் கட்டுப்பாட்டு … Read more

‘‘பிரேத பரிசோதனை அறிக்கை ஏற்கத்தக்கது இல்லை’’ – சின்னசேலம் மாணவி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்

கள்ளக்குறிச்சி: சின்னச்சேலம் தனியார் பள்ளியில் படித்த பிளஸ் 2 மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் அவரது பிரேத பரிசோதனை அறிக்கை ஏற்கத்தக்கது இல்லை எனக் கூறி மாணவியின் உடலை வாங்க மறுத்த உறவினர்கள் இன்று (சனிக்கிழமை) கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை எதிரே சாலை மறியலில் ஈடுபட்டனர். கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத்தை சேர்ந்த ஸ்ரீமதி என்பவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் விடுதியில் தங்கி பிளஸ் 2 … Read more

’முதியவர்களின் கொடூர மனத்தால் இளம் தம்பதியர் குற்றவாளிகள் ஆகிறார்கள்’ – நீதிமன்றம் வேதனை

இளம் தம்பதியர் வாழ்க்கை நடத்துவதற்கு, வீட்டில் இருக்கும் முதியவர்கள் வழிகாட்டியாக இருக்க வேண்டும் என்றும், அகங்காரம், கொடூர மனதால் குற்றவாளிகள் ஆகக்கூடாது என்றும், சென்னை மகளிர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சென்னை தேனாம்பேட்டையைச் சேர்ந்த குமாரவேல் என்பவருக்கும், அதேப்பகுதியைச் சேர்ந்த பிரியா என்பவருக்கும், 2001-ல் திருமணம் நடந்தது. திருமணத்தின்போது, 45 சவரன் நகை மற்றும் ஒரு லட்சம் ரொக்கம் உள்ளிட்டவையை, சீதனமாக பிரியா குடும்பத்தினர் வழங்கினர். திருமணத்துக்கு முன், தனியார் ஆட்டோமொபைல் நிறுவனத்தில் வேலை செய்வதாக்கூறி, ஏமாற்றி திருமணம் … Read more

நீட் தேர்வு விரக்தி: அரியலூரில் மேலும் ஒரு மாணவி மரணம்

நீட் தேர்வு அச்சத்தில் ஏற்கனவே அரியலூர் மாவட்டத்தில் அனிதா என்ற மாணவி தற்கொலை செய்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி அரசியலாக்கப்பட்ட நிலையில், நாளை நீட் தேர்வு எழுத இருந்த மாணவி இன்று  வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது. அரியலூர் நகரம் ரயில்வே காலனி தெருவை சேர்ந்தவர்கள் நடராஜன்-உமாராணி. நடராஜன் வெளிநாட்டில் வேலை செய்து வரும் நிலையில் உமாராணி பிள்ளைகளை பார்த்துக்கொண்டு வீட்டில் உள்ளார். இந்த தம்பதியினருக்கு … Read more