வாங்க நம்ம வலிமையை காட்டுவோம்., டெல்லிக்கு அழைக்கும் மம்தா பானர்ஜி.!

குடியரசுத் தலைவருக்கான தேர்தல் வரும் ஜூலை 18-ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் கடந்த வியாழக்கிழமை அறிவித்துள்ள நிலையில், எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு திரிணமூல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.  அதில், குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு வியூகம் வகுப்பது குறித்து ஆலோசனை நடத்த உள்ளதாகவும், அதில் அனைவரும் கலந்து கொள்ளவேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார். மேலும் அவரின் அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, குடியரசுத் தலைவர் தேர்தலை முன்னிட்டு, வரும் … Read more

விமானத்தில் கோளாறு.. 7 மணிநேரமாக காத்திருந்த பயணிகள்..!

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மதுரையிலிருந்து துபாய் செல்லவிருந்த ஸ்பைஸ் ஜெட் விமானம், 7 மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றதால் பயணிகள் அவதிக்குள்ளாகினர். 161 பயணிகளுடன் துபாய் செல்ல இருந்த அந்த விமானம், பகல் 12 மணியளவில் புறப்பட தயாராக இருந்த நிலையில், திடீரென ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால் விமானம் நிறுத்தப்பட்டது. கோளாறை சரிசெய்யும் பணி பல மணி நேரம் நடைபெற்ற நிலையில், இரவு 7 மணி அளவில் அந்த விமானம் துபாய் புறப்பட்டு சென்றது. Source … Read more

5,000 ச.கி.மீட்டராக குறைப்பு: 2 மாதங்களில் விரிவாக்கம் செய்யப்படுகிறது சென்னை பெருநகர் எல்லை

சென்னை: சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் எல்லைகளை விரிவாக்கம் செய்வது தொடர்பான உத்தரவு 2 மாதங்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் பரப்பளவு தற்போது 1,189 சதுர கிலோ மீட்டராக உள்ளது. இதில் சென்னை மாநகராட்சி, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள 16 நகராட்சிகள், 20 பேரூராட்சிகள் உள்ளன. இந்நிலையில், சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் எல்லை விரிவாக்கம் செய்யப்படும் என்று கடந்த செப்டம்பர் மாதம் தமிழக அரசு அறிவித்தது. இதன்படி திருவள்ளூர், … Read more

குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சைக்கு பின் மரணித்த இளம்பெண்.. நீதிமன்ற உத்தரவு படி பிரேதபரிசோதனை..!

சென்னை, வளசரவாக்கம் பகுதியை சேர்ந்தவர்  வினோதினி. இவருக்கு சின்னபோரூர் மருத்துவமனையில் குடும்ப கட்டுபாடு அறுவை சிகிச்சை நடைபெற்றது. அறுவை சிகிச்சைக்கு பின் உடல்நிலை மோசமானதை அடுத்து மேல்சிகிச்சைக்காக கீழ்பாக்கம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.  ஆனால், அங்கு சிகிச்ச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்தார். தவறான அறுவைசிகிச்சைதான் அவர் உயிரிழந்ததிற்கு காரணம் என அவரது உறவினர்கள் குற்றம்சாட்டினர்.இதனை அடுத்து, இதுகுறித்து வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், நீதிமன்ற உத்தரவின் படி அந்த பெண்ணின் உடலை பிரேதபரிசோதனைக்காக … Read more

“ராணுவம், பொருளாதாரம் போல ஆன்மீகத்திலும் வளர்ச்சி அவசியம்” – ஆளுநர் ஆர்.என்.ரவி

இந்தியாவில் ராணுவம் மற்றும் பொருளாதாரம் வளர்ச்சி அடைவதைப்போல ஆன்மீகத்திலும் வளர்ச்சி அடைவது அவசியம் என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். சென்னையில் ஹரிவராசனம் நூற்றாண்டு விழா நிகழ்ச்சியில் பேசிய அவர், வலிமையான தலைமை இந்தியாவை ஆட்சி செய்து கொண்டிருப்பதாகவும், ஆன்மீகத்தில் வளர்ச்சி, தேசத்தின் வளர்ச்சி என்றும் கூறினார். மேலும், காலநிலை மாற்றத்திற்கு எந்த நாடுகளும் முன்னேற்பாடுகள் செய்யாத நிலையில், அதற்காக முதல் அடியை எடுத்து வைத்துள்ள இந்தியா, வல்லரசு நாடாக வளர்ந்து வருவதாகவும் ஆளுநர் குறிப்பிட்டார். Source … Read more

இரண்டாவது நாளாக 200+ | தமிழகத்தில் புதிதாக 217  பேருக்கு கரோனா பாதிப்பு

சென்னை: தமிழகத்தில் இன்று ஆண்கள் 110, பெண்கள் 107 என மொத்தம் 217 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். அதிகபட்சமாக சென்னையில் 111 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 34 லட்சத்து 57,133 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 34 லட்சத்து 17,887 பேர் குணமடைந்துள்ளனர். இன்று மட்டும் 145 பேர் குணமடைந்து வீடுகளுக்கு சென்றனர். தமிழகம் முழுவதும் 1,231 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று உயிரிழப்பு இல்லை. தமிழகத்தில் நேற்று கரோனா தொற்று … Read more

கடைக்கு சென்ற மகளை கிண்டல் செய்த எலக்ட்ரீசியனை அரிவாளால் வெட்டிக் கொன்ற தந்தை..!

திருச்செந்தூர் அருகே, மகளை கிண்டல் செய்த நபரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்த தந்தையை போலீசார் கைது செய்தனர். எலெக்ட்ரீசியனான கண்ணன் என்பவர், தனது மனைவி, குழந்தைகளுடன் கரம்பவிளை பகுதியில் வசித்து வந்தார். இவர், அதே பகுதியைச் சேர்ந்த ராஜ் என்பவரின் 17 வயதான மகள் கடைக்கு செல்லும் போது அடிக்கடி கிண்டல் செய்து வந்ததாகவும் அதைத் தட்டிக் கேட்ட சிறுமியின் தந்தை ராஜ் மற்றும் தாய் மாமா வடிவேலனை கத்தியைக் காட்டி மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இது … Read more

சிவன்மலை கோயிலில் பக்தர்களுக்கு உடை கட்டுப்பாடுகள் இல்லை – ‘வைரல்’ சர்ச்சைக்குப் பின் உதவி ஆணையர் தகவல்

திருப்பூர்: சிவன்மலை கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு உடை கட்டுப்பாடுகள் எதுவும் இல்லை என சிவன்மலை உதவி ஆணையர் தெரிவித்துள்ளார். திருப்பூர் மாவட்டம், காங்கயம் அடுத்துள்ள சிவன்மலை சுப்பிரமணியசாமி கோயில், கொங்கு மண்டலத்தில் உள்ள மிக முக்கிய கோயிலாகும். வேறு எந்தக் கோயிலுக்கும் இல்லாத சிறப்பு இந்தக் கோயிலுக்கு உள்ளது. அது, இங்குள்ள ஆண்டவன் உத்தரவு பெட்டியாகும். முருகப் பெருமானே பக்தர்களின் கனவில் தோன்றி குறிப்பிட்ட பொருளை சுட்டிக் காட்டி, அதை உத்தரவு பெட்டியில் வைக்க ஆணையிடுவது வழக்கம். … Read more

கோவிலுக்கு சொந்தமான நிலத்தை விற்பனை செய்ய பத்திரப்பதிவு – ஆர்.பி.சௌத்ரி வழக்கு தள்ளுபடி

கோவிலுக்கு சொந்தமான நிலத்தை விற்பனை செய்வதற்கான பத்திரத்தை பதிவு செய்யும்படி உத்தரவிட மறுத்த சென்னை உயர் நீதிமன்றம், சூப்பர் குட் பிலிம்ஸ் சார்பில் ஆர்.பி.சௌத்ரி தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக பிரபல திரைப்பட தயாரிப்பு நிறுவனமான சூப்பர் குட் பிலிம்சின் சார்பில் அதன் நிர்வாக இயக்குனரான பிரபல தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி தாக்கல் செய்துள்ள மனுவில், சென்னை நுங்கம்பாக்கம் வடக்கு மாட வீதியில் உள்ள அருள்மிகு அகத்தீஸ்வரர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் திருக்கோயிலுக்கு சொந்தமான … Read more

ஆசிரியரின் வாட்ஸ் அப் ஸ்டெட்டஸால் அதிர்ந்து போன மாணவியின் குடும்பத்தினர்.. ஆசிரியரை நையப்புடைத்து காவல்துறையிடம் விசாரணை..!

மாணவியின் ஆபாசபடத்தை வாட்ஸ் அப் ஸ்டெட்டஸாக வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம், எக்குந்தி கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது.  இந்த பள்ளியில் அந்த பகுதியை சேர்ந்த பல மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் மகேஷ் சிவலிங்கப்பா பிரதாரா என்பவர் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் அந்த பள்ளியில் படித்து வந்த மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது. அந்த மாணவிக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனை அறிந்து ஆத்திரமடைந்த … Read more