மயிலாடுதுறையில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற மருத்துவர் விஜயலட்சுமி

மயிலாடுதுறை: மீன்களைக் கழுவி சுத்தம் செய்யும் பணியை செய்து தனது மகளை மருத்துவம் படிக்கவைத்த ரமணி மற்றும் அவரது மகளும் மருத்துவருமான விஜயலட்சுமி மற்றும் அவரது சகோதரர் ஆகியோர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர். மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூரில், மீன்களைக் கழுவி சுத்தம் செய்யும் பணியை செய்து தனது மகளை மருத்துவராக்கிய அவரது தாயார் ரமணி குறித்து தனியார் தொலைக்காட்சியில் செய்தி வெளியானது. இதனைத் தொடர்ந்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மருத்துவர் விஜயலட்சுமிக்கு தனது … Read more

நாமக்கல்: உலக புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மினி மாரத்தான் போட்டி

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு கே.எஸ்.ஆர் பல் மருத்துவக் கல்லூரி சார்பாக உலக புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது. இதில் 400க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்துகொண்டு ஓடினர். உலக புகையிலை ஒழிப்பு தினம் ஆண்டுதோறும் மே 31ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டு ’புகையிலையால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசுபாடு’ என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. அதன்படி திருச்செங்கோடு பல்மருத்துவ கல்லூரி சார்பில் மினி மாரத்தன் போட்டி நடத்தப்பட்டது. நாமக்கல் ரோடு … Read more

Hair care tips: வீட்டில் ஹெர்பல் ஷாம்பு செய்வது எப்படி?

அழுக்கைப் போக்க நீங்கள் உச்சந்தலையில் சேர்க்கும் அனைத்து இரசாயனப் பொருட்களும் அதன் தரத்தை மோசமாக்கும். இதனால்தான் தாய்மார்களும் பாட்டிகளும் கூந்தல் பராமரிப்புக்கு வீட்டில் தயாரிக்கப்பட்ட இயற்கை வைத்தியங்களைப் பயன்படுத்துவதை எப்போதும் வலியுறுத்துகின்றனர். இந்த ஹோம்மேட் ஷாம்பு, விலையுயர்ந்த ஷாம்பூக்களைப் போன்ற அதே முடிவுகளைத் தரும். இனி தீங்கு விளைவிக்கும் இரசாயனங்களால் உங்கள் கூந்தலை அழிக்க  தேவையில்லை. இந்த ஹோம்மேட் ஷாம்பூக்கள் உங்கள் தலைமுடி மற்றும் உச்சந்தலையில் மிகவும் சிறப்பாக செயல்படுகின்றன. இதோ வீட்டில் நீங்களே சொந்தமாக செய்யக்கூடிய, … Read more

குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சைக்கு பின் இளம்பெண் மரணம்.. தீவிர விசாரணை..!

குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்த பெண் உயிரிழந்த சம்பவத்தால் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டம் சம்பூர் பகுதியை சேர்ந்தவர் பூபதி. இவரின் மனைவி சங்கீதா குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்வதற்காக கடந்த 20 நாட்களுக்கு முன்பு எடப்பாடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளார். அதன் பின்னர் ஒரு வாரம் கழித்து அவருக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் திரும்பவும் அதே மருத்துவமனைக்கு சென்று மருத்துவரிடம் ஆலோசனை … Read more

பிறந்த நாளை இறந்த நாளாக்கிய குடிகார கூட்டாளீஸ்..!

பிறந்தநாளை கொண்டாடும் விதமாக  நண்பர்களுக்கு மது விருந்து அளித்த இளைஞர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அலமாதி ஏரிக்குள் அரங்கேறி இருக்கின்றது. பிறந்த நாளை இறந்த நாளாக்கிய ஓசிக்குடி கூட்டாளிகள் போலீசில் சிக்கிய பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு… திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த அலமாதி கிருஷ்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து. 21 வயதான இவர் பிளம்பிங் மற்றும் எலக்ட்ரிக்கல் பணி செய்து வந்தார். தனது பிறந்தநாளையொட்டி மாரிமுத்து தனது நண்பர்களுக்கு அலமாதி ஏரிக்குள் … Read more

சுற்றுச்சூழலை பாதுகாக்க நீதி, வனத்துறைகள் இணைந்து செயலாற்ற வேண்டும்: உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி

உதகை: சுற்றுச்சூழலை பாதுகாக்க நீதித்துறை மற்றும் வனத்துறை இணைந்து செயலாற்ற வேண்டும் என உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி தெரிவித்தார். நீலகிரி மாவட்டம் உதகை தமிழகம் விருந்தினர் மாளிகையில் வனத்துறை அதிகாரிகள் மாநாடு இன்று நடந்தது. வனத்துறை தலைமை முதன்மை வனப்பாதுகாவலர் சையது முஸமில் அப்பாஸ் வரவேற்றார். வனத்துறை செயலாளர் சுப்ரியா சாஹூ பேசும்போது, ”வன உயிரின பாதுகாப்புக்கு மாநில அரசு முன்னுரிமை அளித்து செயலாற்றுகிறது. பிராஜெக்ட் டைகர் மற்றும் பிராஜெக்ட் எலிஃபன்ட் … Read more

“கர்நாடகாவில் குட்கா விற்க தடை இல்லை என்பதால் தமிழகத்தில் கடத்தல் நடக்கிறது”-அமைச்சர்

கர்நாடகாவில் குட்கா விற்க தடை இல்லை என்பதால் தமிழகத்தில் கடத்தல் நடக்கிறது என்றும், அதனை கட்டுப்படுத்தி விரைவில் கஞ்சா இல்லா தமிழகம் உருவாக்கப்படும் என்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதியளித்துள்ளார். சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் நடைபெற்ற உலக புகையிலை ஒழிப்பு தின நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தமிழகத்தில் புதிதாக ராமநாதபுரம், சிவகங்கை, திருப்பத்தூர் உட்பட 10 மாவட்டங்களில் புகையிலை கட்டுப்பாட்டு மையங்கள் தொடங்கப்பட்டுள்ளது. இந்த மையங்கள் … Read more

சென்னையில் டைனோசர் திருவிழா: குழந்தைகளை மகிழ்விக்க வருகிறது ஜுராஸிக் வேல்ட்

சென்னையில் ஜூன் 10 ஆம் தேதி முதல் டைனோசர் திருவிழா நடைபெற உள்ளது. சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள அரசுப் பள்ளிகளுக்கு வெள்ளி மற்றும் திங்கட்கிழமைகளில் இலவச அனுமதி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த திருவிழாவுக்கு சென்று ஜுராசிக் உலகத்தை பார்ப்பதற்கு தயாராகி வரும் பார்வையாளர்கள், அதற்கு முன்னதாக, மில்லியன் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு நம் நாட்டில் சுற்றித் திரிந்த டைனோசர்களைப் பற்றி அறிந்துகொள்வோம். சென்னை செண்டரில் ஜூன் 10ஆம் தேதி முதல் … Read more

கன்னியாகுமரி மாவட்ட நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு.!!

கன்னியாகுமரி மாவட்ட நீதிமன்றத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் நிரந்தர லோக் அதாலத்தில் உறுப்பினர்கள் காலியிடங்களுக்கான  வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக பட்டப்படிப்பு  கொடுக்கப்பட்டுள்ளது.  இந்த வேலைவாய்ப்புக்கு பணியிடமாக கன்னியாகுமரி கொடுக்கப்பட்டுள்ளது. தகுதியுடையோர் மற்றும் திறமைமிக்க விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதி மற்றும் விருப்பம் உடையவர்கள் இந்த வேலைக்கு உடனே விண்ணப்பியுங்கள்.  நிறுவனம் : கன்னியாகுமரி மாவட்ட நீதி மன்றம் பணியின் பெயர் : நிரந்தர லோக் அதாலத்தில் உறுப்பினர்கள் கல்வித்தகுதி : பட்டப்படிப்பு  பணியிடம் … Read more

அமிர்த கடேஸ்வரர் கோவிலில் இளையராஜாவுக்கு ஆயுள் விருத்தி வேண்டி சிறப்பு ஹோமம்.!

மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் உள்ள ஸ்ரீ அமிர்த கடேஸ்வரர் கோவிலில் இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு ஆயுள் விருத்தி வேண்டி சிறப்பு ஹோமம் நடைபெற்றது. அவருக்கு 80 வயது தொடங்க இருப்பதை முன்னிட்டு நேற்று மாலை நூற்றுக்கால் மண்டபத்தில் 84 கலசங்கள், யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு முதற்கால பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து இன்று காலையில் 2-ம் கால பூஜைகள் நடைபெற்றன. அதில் இளையராஜா மற்றும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள், இயக்குநர் பாரதிராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். Source link