சத்தியமங்கலம்: கரும்பு லாரிகளை எதிர்நோக்கி சாலையில் காத்திருந்த காட்டு யானைகள்

கரும்பு தேடி சாலைக்கு வந்த காட்டு யானைகளை புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்க பேருந்து பயணிகள் ஆர்வம் காட்டினர். சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் ஏராளமான காட்டு யானைகள் வசிக்கின்றன. இந்த வனப்பகுதி வழியாக தமிழக கர்நாடக மாநிலங்களை இணைக்கும் சத்தியமங்கலம் – மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் காட்டு யானைகள் பகல் நேரங்களில் நடமாடுவது வாடிக்கையாக உள்ளது. இந்நிலையில், தாளவாடியில் இருந்து கரும்பு பாரம் ஏற்றி செல்லும் லாரிகளை காட்டு யானைகள் வழிமறித்து கரும்பு துண்டுகளை பறித்து திண்பது … Read more

தமிழ்நாடு போலீஸ் தேர்வு; கட் ஆஃப் எப்படி இருக்கும்? தேர்வுக்கு தயாராவது எப்படி?

TNUSRB Police exam Cut off, Syllabus and Preparation tips: தமிழ்நாடு காவல்துறையில் போலீஸ் பணியிடங்களுக்கான கட் ஆஃப், தேர்வு முறை, சிலபஸ் உள்ளிட்ட தகவல்களுடன், தேர்வு கடினமாக இருக்குமா? எளிதாக இருக்குமா? எவ்வாறு தயாராவது என்பதையும் இப்போது பார்ப்போம். தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் இரண்டாம் நிலை காவலர், சிறைக்காவலர், தீயணைப்பு வீரர்கள் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்தம் 3,552 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதையும் படியுங்கள்: பாதி நேரம் … Read more

தலித் இளைஞரின் திடீர் கோரிக்கை… உடனே நிறைவேற்றிய பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ்.!

திருவள்ளூர் மாவட்டத்தில் கிராமங்களை நோக்கிய சுற்றுப்பயணத்தை மேற்கொண்ட பாமக தலைவர் அன்புமணி, திருத்தணி தொகுதியில் 60 இடங்களை தேர்ந்தெடுத்து அங்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, பாமக கொடி ஏற்றி வைத்து நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.  பயணத்தின் போது திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டை ஒன்றியம், முருகம்பட்டு கிராமத்தில் கொடியேற்ற பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ்  சென்றார். அப்போது அங்கு வந்த அப்பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர், அந்த பகுதியில் உள்ள அண்ணல் அம்பேத்கரின் திருவுருவசிலைக்கு மாலை அணிவிக்க அழைத்தார். … Read more

பயனற்ற கழிவுநீர் தொட்டிக்குள் தவறி விழுந்த 70 வயது மூதாட்டி

மயிலாடுதுறையில், பயனற்ற கழிவுநீர் தொட்டிக்குள் தவறி விழுந்த 70 வயது மூதாட்டியை தீயணைப்புத்துறையினர் கயிறு கட்டி பத்திரமாக மீட்டனர். மயிலாடுதுறை காந்தி நகரைச் சேர்ந்த மூதாட்டி நிர்மலா, அவரது வீட்டுக் கொல்லைப்புறத்தை சுத்தம் செய்துக்கொண்டிருந்தார். அப்போது  அங்கிருந்த பயனற்ற கழிவுநீர் தொட்டி மேல் ஏறி சுத்தம் செய்த போது, கழிவுநீர் தொட்டி  மூடப்பட்டிருந்த சிமெண்ட் சிலாப் உடைந்ததில் மூதாட்டி தொட்டிக்குள் விழுந்தார். மூதாட்டியின் கூச்சல் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த … Read more

கோவையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு ரயில்கள்: மத்திய அமைச்சரிடம் வானதி கோரிக்கை

கோவை: கோவையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு விரைவு ரயில்களை இயக்க வேண்டும் என ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கு பாஜக மகளிரணி தேசியத் தலைவரும், எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் கடிதம் அனுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் அனுப்பியுள்ள கடிதத்தில், ”கடந்த மார்ச் மாதம், டெல்லியில் தங்களைச் சந்தித்தபோது, கோவையிலிருந்து, தென் மாவட்டங்களுக்கு ரயில்கள் இயக்கப்பட வேண்டும் என்ற பொதுமக்கள், வணிகர்கள், மாணவர்களின் கோரிக்கையை வலியுறுத்தினேன். தெற்கு ரயில்வேவுக்கு மூன்றாவது அதிக வருவாய் தரும் இடமாக கோவை உள்ளது. ஆனாலும், கோவையிலிருந்து … Read more

புதுக்கோட்டை: தாய் இறந்த சோகத்தில் மகனும் நெஞ்சுவலியால் உயிரிழப்பு

பொன்னமராவதி அருகே தாய் இறந்த சோகத்தில் மகனும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே பொன்-உசிலம்பட்டியைச் சேர்ந்தவர் மருதம்மாள் என்ற சின்னப்பிள்ளை (93). இவர், வயது முதிர்வினால் உயிரிழந்த நிலையில், இவரது இறுதிச் சடங்கிற்கான ஏற்பாடுகளை அவரது மகன் பழனியப்பன் (56) செய்து வந்தார். இந்நிலையில் தாய் இறந்த சோகத்தில் மனமுடைந்து காணப்பட்ட பழனியப்பனுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மயக்கமடைந்த அவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் உறவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பழனியப்பனுக்கு இதயக் … Read more

‘இவர் எல்லாம் ஒரு தலைவரா? கேவலமா இருக்கு!’: ஓ.பி.எஸ்-ஐ போட்டுத் தாக்கிய இ.பி.எஸ்

EPS attacks OPS and says selfish: ஓ.பன்னீர்செல்வம் தி.மு.க,வின் கைக்கூலியாக செயல்படுகிறார் என இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். அ.தி.மு.க சிறப்பு பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் நடைபெற்றது. இதில் ஒற்றை தலைமை தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பின்னர் பேசிய இ.பி.எஸ், சுயநலக்காரர் என ஓ.பி.எஸ்-ஐ தாக்கி பேசினார். இ.பி.எஸ் பேசியதாவது, கழகம் வலிமையடைய வேண்டும். கழகத்தை காக்க கூடிய நிலைக்கு நாம் தள்ளப்பட்டுவிட்டோம். சில எட்டப்பர்கள் … Read more

திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் பட்டியலில் இருந்த கட்சி., பாஜகவின் வேட்பாளருக்கு ஆதரவு.!

குடியரசுத் தலைவா் தோ்தல்  வருகின்ற 18-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தோ்தலில் பாரதிய ஜனதா கட்சியின்  கூட்டணி சாா்பில், திரௌபதி முா்முவும், எதிா்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹாவும் போட்டியிடுகின்றனா்.  திரௌபதி முா்முவுக்கு சிரோமணி அகாலி தளம், ஒய்.எஸ்.ஆா் காங்கிரஸ், பிஜு ஜனதா தளம், பகுஜன் சமாஜ் ஆகிய பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணியில் இல்லாத கட்சிகளும் ஆதரவு அளித்துள்ளது. இந்த வகையில் புதிதாக சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி, குடியரசுத் தலைவா் தோ்தலில் … Read more

முருகன் கோயிலில் 18 அடி உயர நித்யானந்தா சிலைக்கு குடமுழுக்கு: விழுப்புரம் மக்கள் திகைப்பு

விழுப்புரம்: புதுச்சேரி எல்லைப் பகுதியான விழுப்புரம் மாவட்டம் பெரம்பை ஐஸ்வர்யா நகரில் உள்ள முருகன் கோயிலில் சர்ச்சைக்குரிய நித்யானந்தாவிற்கு 18 அடி உயர சிலை வைக்கப்பட்டுள்ளது அப்பகுதி மக்களிடையே திகைப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி எல்லைப் பகுதியான விழுப்புரம் மாவட்டம் பெரம்பை ஐஸ்வர்யா நகரில் நித்யானந்தாவின் சீடர் எனக் கருதப்படும் பாலசுப்பிரமணியம் என்பவர், மலேசிய முருகன் கோயில் போன்று ஐஸ்வர்யா நகரில் கோயில் கட்டி வந்தார். 27 அடியில் முருகன் சிலை பிரமாண்டமாக கட்டி முடிக்கப்பட்டு, அதற்கு ஸ்ரீ … Read more

நீதிமன்ற உத்தரவுக்கு பின்புதான் அகற்றுவீர்களா?- தமிழக அரசை கேள்வியெழுப்பிய உயர்நீதிமன்றம்

ஆக்கிரமிப்புகள் என தெரிந்தும் அப்புறப்படுத்துவதில் என்ன சிரமம் உள்ளது என தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ள சென்னை உயர்நீதிமன்றம், நடவடிக்கை எடுக்கிறோம் என தங்களை நியாயப்படுத்திக் கொள்ள வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஆனந்தன் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டத்தில் பொதுமக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஆரணியாற்றில் கும்முனிமங்கலம் முதல் இலட்சுமிபுரம் அணைக்கட்டு வரையான இரு கரைகளிலும் சில தனியார் நிறுவனங்கள் ஆக்கிரமித்து வணிக வளாகங்களையும், வீடுகளையும் கட்டி ஆக்கிரமித்துள்ளதுள்னர், … Read more