நெல்லை மாவட்டத்தில் 12 கல்குவாரிகளுக்குத் விதித்திருந்த தடையை நீக்கியது உயர் நீதிமன்றம்..!

திருநெல்வேலி மாவட்டத்தில் கல்குவாரிகள் செயல்படவும், வாகனங்களில் கற்கள், சல்லி, சரளைமண், எம்.சாண்ட் கொண்டு செல்லவும் இருந்த தடையை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீக்கியுள்ளது. அடைமிதிப்பான்குளம் கல்குவாரியில் பாறைகள் சரிந்து விழுந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்ததால் திருநெல்வேலி மாவட்டத்தில் கல்குவாரிகளை மூடவும், கற்கள், சல்லி, சரளைமண், எம்.சாண்ட் ஆகியவற்றை வாகனங்களில் கொண்டு செல்லவும் வாய்மொழியாகத் தடை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்துத் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த குவாரி உரிமையாளர்கள் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில், இரண்டு மாதங்களாகக் குவாரிகள் … Read more

தமிழகத்தில் இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகளை தடை செய்ய வேண்டும்: வேலூர் இப்ராஹிம் பேட்டி

ராமநாதபுரம்: தமிழகத்தில் இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தடை செய்ய வேண்டும் என பாஜக சிறுபான்மை அணி தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் தெரிவித்தார். பாஜக சிறுபான்மை அணி தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் இன்று ராமநாதபுரத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது, “வரும் 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள எம்பி தேர்தலில் தமிழகத்தில் 25 இடங்களில் வெற்றி பெற தமிழக பாஜக தலைவர் பல்வேறு பணிகளை வழங்கியுள்ளார். அதன்படி பாஜக அரசின் 8 ஆண்டுகால ஆட்சியில் பயனடைந்த … Read more

வியப்பில் ஆழ்த்தும் புதுக்கோட்டை தொல்லியல், நாணயவியல் கண்காட்சி!

புதுக்கோட்டை மாலையீடு அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தொல்லியல் கழக கருத்தரங்கம் மற்றும் ஆவண வெளியீட்டு விழா இன்று தொடங்கி நாளை வரை நடைபெறவுள்ளது. இந்நிலையில் இந்த தொல்லியல் கழக கருத்தரங்கில் தனி அரங்கம் ஒன்றில் தொல்லியல் மற்றும் நாணயவியல் கண்காட்சியும் அதே போல் நெல் ஜெயராமன் குடும்பத்தினர் சார்பில் பாரம்பரிய நெல் ரகங்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக தொல்லியல் கண்காட்சியை தொல்லியல் கழகம் சார்பில் திருச்சி மாவட்டம் துறயூரைச் சேர்ந்த பெரியசாமி ஆறுமுகம் என்பவர் கடந்த … Read more

இலங்கையில் இருந்து அகதிகளாக 7 பேர் தமிழகம் வருகை.!

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அந்த நாட்டின் அன்னிய செலவாணி கையிருப்பு குறைந்து பெட்ரோல் டீசலுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது இதனால் தொழில்கள் பாதிப்படைந்து அத்தியாவசிய பொருட்களின் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகின்றன. அதன் காரணமாக இலங்கை அரசுக்கு எதிராக கொழும்பு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பொதுமக்கள் எதிர்க்கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடும் விலை உயர்வு வேலையில்லாத் திண்டாட்டம் போன்ற பல்வேறு காரணங்களுக்காக இலங்கை தமிழர்கள் கள்ளப்படகு மூலம் கடல் வழியாக தனுஷ்கோடிக்கு … Read more

“தி.மு.க.விற்கும், பா.ஜ.க.விற்கும் எந்த பகைமையும் கிடையாது” – அண்ணாமலை

தி.மு.க.விற்கும், பா.ஜ.க.விற்கும் எந்த பகைமையும் கிடையாது, கொள்கைகள் தான் வேறு என்றும் அவர்கள் செய்யும் தவறுகளை தான் மக்கள் மன்றத்தில் எடுத்து வைப்பதாகவும் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கோவையில் ‘நமக்காக நம்ம எம்.எல்.ஏ.’ என்ற மக்கள் குறை தீர்க்கும் நடமாடும் சேவையை தொடங்கி வைத்தபின், அண்ணாமலை  இவ்வாறு பேட்டியளித்தார். Source link

தமிழ் நாள் விழா | சென்னையில் கண்காட்சி, மனற்சிற்பம், கருத்தரங்கம்: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: தமிழ் நாள் விழாவை முன்னிட்டு சென்னையில் கண்காட்சி, மனற்சிற்பம், கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாடு விழா வரும் 18 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி சென்னையில் கண்காட்சி, மனற்சிற்பம், கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு அரசின் சார்பில் தமிழ்நாடு நாள் விழா முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை கலைவாணர் அரங்கத்தில், ஜூலை 18ம் … Read more

ஓபிஎஸ் உடல்நிலை எப்படி இருக்கிறது? – மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை

முன்னாள் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் நல்ல உடல்நலத்துடன் இருக்கிறார் என மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. ஜூலை 15ஆம் தேதி லேசான கொரோனா அறிகுறிகள் தென்பட்ட நிலையில் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் சென்னையிலுள்ள எம்ஜிஎம் ஹெல்த்கேரில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தற்போது அவருடைய உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டிருக்கிறது. அந்த அறிக்கையில், ‘’முன்னாள் தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஜூலை 15ஆம் தேதி லேசான கொரோனா அறிகுறிகளுடன் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். … Read more

இரவு தூங்கும் முன்பு வெதுவெதுப்பான நீரில் 2 ஏலக்காய்… சூப்பரான நன்மை இருக்கு!

Elakkai benefits in tamil: இந்திய மசாலா பொருட்களில் ஏலக்காய்க்கு என மிக முக்கிய இடம் உண்டு. சுவையும் மணமும் கொண்ட இந்த மசாலா பொருளில் எண்ணற்ற ஆரோக்கிய மற்றும் மருத்துவ நன்மைகள் உள்ளன. மேலும், இவை நமது உடலில் வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிப்பதன் மூலம் எடை இழப்பு செயல்முறையை துரிதப்படுத்தும் பண்புகளை பெற்றுள்ளது. நம்முடைய பகுதிகளில் ஏலக்காய் அதிகம் பயன்படுத்தப்படும் முக்கிய பொருளாக இருந்து வருகிறது. குறிப்பாக, இனிப்பு வகைகள் செய்வதற்கும், பால் பொருட்களில் சேர்க்கவும், … Read more

தமிழ்நாட்டு மக்கள் இனிமேல் கோட்டைக்குள் ஒருபோதும் நுழைய விடமாட்டார்கள் –  திமுக எம்.பி., கொந்தளிப்பு.!

திமுக.,வின் பொருளாளரும் எம்பி.,யுமான டி.ஆர்.பாலு இன்று விடுத்துள்ள அறிக்கையில், “சொந்தக் கட்சிக்குள்ளேயே தனக்கு ஆதரவு தேடி ஊர் ஊராக அலையும் பழனிசாமி, முதல்-அமைச்சராக இருந்தபோது கொள்ளையடித்த பணத்தில் கூட்டத்தைத் திரட்டி வைத்துக் கொண்டு, “இந்தக் கூட்டத்தைப் பார்க்கும்போது, அ.தி.மு.க. வெற்றி பெறுவதற்கான அச்சாரம் போடப்பட்டுள்ளது. மு.க.ஸ்டாலின் எத்தனை அவதாரம் எடுத்தாலும் அ.தி.மு.க.வை வீழ்த்த முடியாது” என்று வசனம் பேசியிருக்கிறார்.  தங்களுடைய கட்சியின் தலைமை அலுவலகத்தின் வாசலிலேயே பழனிசாமி கோஷ்டியும் பன்னீர்செல்வம் கோஷ்டியும் ரணகளமாக்கி, ரத்தம் சொட்டச் சொட்ட, … Read more

பாரதிதாசன் பல்கலை.யில் விடைத்தாள் திருத்த ஆசிரியர்கள் தட்டுப்பாடு: தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம்?

திருச்சி: திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக இளநிலை பருவத் தேர்வுவிடைத்தாள்கள் திருத்த ஆசிரியர்கள் வராததால், தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்படும் என தெரிகிறது. திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக இளநிலை பருவத்தேர்வுகளின் விடைத்தாள்கள் மதிப்பீட்டுப் பணிகள் கடந்த ஜூன் 23-ம்தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இப்பல்கலைக்கழக தேர்வு நெறியாளர், பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் இணைவு பெற்ற கல்லூரிகளுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், ‘‘பாரதிதாசன் பல்கலைக்கழக இளநிலை பருவத்தேர்வுகளின் விடைத்தாள்கள் திருத்தும் பணிகளுக்கு ஆசிரியர்கள் வருகைமிகக் குறைவாக … Read more