‘இடைநில்லாக் கல்வி… தடையில்லா வளர்ச்சி’ இலக்கை நோக்கி பயணிப்போம்: அன்பில் மகேஸ் பெய்யாமொழி

சென்னை: குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினத்தில் “இடைநில்லாக் கல்வி… தடையில்லா வளர்ச்சி” என்ற இலக்கை நோக்கி பயணிப்போம் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பெய்யாமொழி தெரிவித்துள்ளார். குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெளியிட்டுள்ள அறிக்கை: “ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு எழுமையும் ஏமாப் புடைத்து” என்ற திருக்குறளுக்கு ஒரு தலைமுறையில் பெறும் கல்வி அறிவானது ஏழேழு தலைமுறைக்கும் பாதுகாப்பாக அமையும் … Read more

’மோடியை பார்த்து கேட்டு இருக்கலாமே எடப்பாடி!'- வாசகர்களின் கமெண்ட்ஸ் #LikeDislike

தினமும் மாலை 7 மணிக்கு டிஜிட்டல் விவாத மேடையின் தலைப்பு புதிய தலைமுறையின் ட்விட்டர் & ஃபேஸ்புக் பக்கங்களில் வெளியாகும். அது பற்றிய உங்கள் கருத்துகளை அங்கேயே பதிவிடலாம். புதிய கோணத்தில், சுவாரஸ்யமாகச் சொல்லப்படும் கருத்துகளில் தேர்வு செய்யப்படுபவை, எழுதியவரின் பெயரோடு புதிய தலைமுறை இணையப் பக்கத்தில் வெளியாகும் என அறிவித்திருந்தோம். அதன்படி, ஜூன் 7-ஆம் தேதி தேதிக்கான தலைப்பாக ‘ஆதீன விவகாரங்களில் தமிழக அரசு தலையிடுவது தவறு… எடப்பாடியின் குரல் சொந்தமாக ஒலிக்கும் குரலா?’ எனக் கேட்டிருந்தோம். வந்திருந்த … Read more

#நாமக்கல் || பின்னோக்கி வந்த கார் 2 வயது குழந்தை மீது ஏறி இறங்கி விபத்து.!

நாமக்கல் மாவட்டத்தில் பின்னோக்கி வந்த கார் 2 வயது குழந்தை மீது ஏறி இறங்கி விபத்து ஏற்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே பட்டணம் நடுத்தெரு பகுதியே சேர்ந்தவர் கண்ணன். இவரது 2 வயது மகன் தருண் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தான். அப்பொழுது அவ்வழியாக வந்த கார், திருப்புவதற்காக டிரைவர் பின்னோக்கி இயக்கியபோது எதிர்பாராதவிதமாக குழந்தை மீது கார் மோதி குழந்தை கீழே விழுந்துள்ளான். இதைத்தொடர்ந்து குழந்தை கீழே விழுந்ததைக் கவனிக்காமல் டிரைவர் மீண்டும் காரை … Read more

நின்று கொண்டிருந்த லாரி மீது வேன் மோதிய விபத்தில் 3 பெண்கள் பலி… வளைகாப்பு நிகழ்ச்சிக்கு சென்ற போது நேர்ந்த விபத்து

காரைக்குடி அருகே, தேசிய நெடுஞ்சாலையில் நின்று கொண்டிருந்த லாரி மீது சுற்றுலா வேன் மோதிய விபத்தில் 3 பெண்கள் பலியான நிலையில், 7 குழந்தைகள் உள்பட 24 பேர் பலத்த காயமடைந்தனர். சிவகங்கை மாவட்டம் பூச்சியேந்தல் கிராமத்தை சேர்ந்த 25-க்கும் மேற்பட்டோர், வளைகாப்பு நிகழ்ச்சி ஒன்றிற்காக சுற்றுலா வேனில் காரைக்குடி சென்ற போது, காரைக்குடி-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நின்று கொண்டிருந்த லாரி மீது மோதியது. Source link

“ஆன்மிக பக்தி அல்ல… உங்களுக்கு இருப்பது தனியார் பக்தி மட்டும்தான்” – ரயில்வே மீது சு.வெங்கடேசன் எம்.பி காட்டம்

சென்னை: தெற்கு ரயில்வேயில் முதல் தனியார் ரயில் இயக்கப்படுவது தொடர்பான உத்தரவைப் திரும்ப பெற வேண்டும் என்று மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கோரிக்கை வைத்துள்ளார். ஜூன் 14-ஆம் தேதி மாலை 6 மணிக்கு வட கோவையில் இருந்து சீரடிக்கு முதல் தனியார் ரயில் இயங்க ரயில்வே அனுமதித்துள்ளது. கோவையைச் சேர்ந்த எம்என்சி பிராப்பர்ட்டி டெவலப்பர்ஸ் என்ற நிறுவனம் இதனை இயக்கவுள்ளது. இது தொடர்பாக சம்பந்தபட்ட நிறுவனம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த ரயில் இயக்கம் தொடர்பாக … Read more

மதுரை: மண்ணில் புதைந்த நிலையில் கண்டறியப்பட்ட 400 ஆண்டுகள் பழமையான மாலைக் கோவில்

மதுரை விமான நிலையம் அருகே பரம்புபட்டியில் 400 ஆண்டுகள் பழமையான மாலைக்கோவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லூரியின் வரலாற்றுத்துறை பேராசிரியர் முனீஸ்வரன், முனைவர் லட்சுமண மூர்த்தி ஆகியோர் மாணவர்களுடன் மேற்பரப்பு கள ஆய்வு மேற்கொண்டனர். அப்போது விமான நிலையம் பின்புறம் மண்ணில் புதைந்த நிலையில் கலை நுட்பத்துடன் கூடிய கி.பி. 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சதிக்கல் கண்டுபிடிக்கப்பட்டது. புதைந்த நிலையில் கண்டறியப்பட்ட சதிக்கல் தோரணவாயில் கலைநயத்தோடு 4 அடி உயரம் 3 அடி அகலமும் கொண்டது. … Read more

மகளை கிண்டல் செய்த நபரை கொலை செய்த தந்தை.. தூத்துக்குடி அருகே பரபரப்பு…!

நள்ளிரவில் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தூத்துகுடி மாவட்டம், கரம்பவிளை சேர்ந்தவர் ராஜ். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். அதே பகுதியை சேர்ந்த எலக்ட்ரீசியன் கண்ணன் என்பவர் அந்த பகுதியை சேர்ந்த சிறுமிகளை கேலி செய்து வந்துள்ளார். அப்போது கடைக்கு சென்றிருந்த ராஜின் மகளை கிண்டல் செய்துள்ளார். இதுகுறித்து அந்த சிறுமி தனது தந்தையிடம் தெரிவித்தார். இதனை கேட்டு ஆத்திரமடைந்த ராஜ் மைத்துனர் ராஜ வடிவேலுவுடன் … Read more

தமிழகத்தில் வரும் 13ம் தேதி பள்ளிகள் திறப்பு; வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

தமிழகத்தில் வரும் 13ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், பள்ளிகளில் பின்பற்றப்பட வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. இது தொடர்பான சுற்றறிக்கையில், பள்ளி வளாகம், கழிப்பறைகளை தூய்மையாக வைத்திருக்க வேண்டுமெனவும் மின் இணைப்புகள் சரியாக உள்ளனவா என்பதை ஆய்வு செய்ய வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சத்துணவு கூடங்களில் மாணவர்களுக்கு சுகாதாரமான உணவு வழங்குவதை தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டுமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. Source link

காரைக்குடியில் செயல்படாத சோதனைச்சாவடிகள்: குற்றங்களை தடுக்க முடியாமல் போலீஸார் திணறல்

காரைக்குடி: சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் குற்றங்களை தடுக்க அமைக்கப்பட்ட சோதனைச் சாவடிகள் செயல்படாமல் உள்ளன. மேலும் நகரில் 30 சதவீதம் கண்காணிப்பு கேமராக்களும் பழுதடைந்த நிலையில் உள்ளன. இதனால் குற்றங்களை தடுக்க முடியாமல் போலீஸார் திணறி வருகின்றனர். காரைக்குடி நகரில் குற்றங்களை தடுக்கவும், கடத்தல்களை கட்டுப்படுத்தவும் சில ஆண்டுகளுக்கு முன்பு, ஓ.சிறுவயல் சாலை, ரயில்வே ரோடு பழனியப்பா ஆர்ச் அருகில், கற்பக விநாயகர் நகர் அறிவியல் பல்கலைக்கழகம் அருகில், கோவிலூர், தேவகோட்டை ரஸ்தா, லீடர் ஸ்கூல் அருகில், … Read more

தினம் ஒரு ஆப்பிள்… எவ்ளோ நன்மை இருக்குன்னு பாருங்க!

வருடத்தில் எந்த சீசன் வந்தாலும் ஒரு பழத்தின் தேவையும், அதன் சத்துக்களும் மக்களுக்கு அதிகப்படியாக நன்மை அளிக்கக்கூடியது. அப்படிப்பட்ட ஆப்பிள் ஒரு சிறந்த பழமாகும், இது நம் வீட்டில் உள்ள தாத்தா பாட்டி மற்றும் பெரியவர்களால் அடிக்கடி பரிந்துரைக்கப்படும் என்பதை நாம் அறிவோம். தினம் ஒரு ஆப்பிள் சாப்பிடுவதால் மருத்துவ உபாதைகள் வராமல் முற்றிலுமாக தவிர்க்கலாம் என்று பெரியவர்கள் கூறி நாம் கேட்டிருப்போம். இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், செரிமான அமைப்புகளை சீராக வைத்திருக்கவும் உதவுகிறது. … Read more