பெட்ரோல் பங்க் அருகே திடீரென தீப்பற்றி எரிந்த டாட்டா மேஜிக் வாகனம்.. உடனடியாக பயணிகள் கீழே இறங்கியதால் உயிர் தப்பினர்..!
திருவள்ளூர் அருகே நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த வாகனம் திடீரென தீப்பற்றி எரிந்தது. திருவள்ளூர் நோக்கி பயணிகளை ஏற்றிச் சென்ற டாட்டா மேஜிக் வாகனம், நெமிலிச்சேரி பெட்ரோல் பங்க் அருகே வந்த போது வாகனத்தின் முன்பக்கத்தில் இருந்து கரும்புகை வந்ததாக கூறப்படுகிறது. சுதாரித்துக் கொண்ட ஓட்டுநர் பயணிகளுடன் உடனடியாக கீழே இறங்கிய நிலையில், சிறிது நேரத்தில் வாகனம் முழுவதும் தீப்பற்றி கொழுந்துவிட்டு எரிந்தது. Source link