`ஒழுங்கீனமாக இருந்தால், சர்வாதிகாரி போல் நடவடிக்கை எடுப்பேன்’- முதல்வர் ஸ்டாலின் உரை!

நாமக்கல்லில் நடைபெற்று வரும் நகர்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “நீங்கள் (உள்ளாட்சி பிரதிநிதிகள்) இந்த இடத்திற்கு வந்துள்ளீர்கள் என்றால் அது சாதாதணமானது அல்ல. உங்கள் உழைப்பு, உங்கள் திறமை, உங்கள் தியாகம் போன்றவையே அதற்கு காரணம். இங்கு ஆண்களை விட பெண்களே உள்ளாட்சி பொறுப்புகளில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளீர்கள். உள்ளாட்சி அமைப்புகள் மக்களாட்சியின் உயிர் நாடி. மக்கள் பணியில் முதல் பணி என்பது உள்ளாட்சிகள். இங்குதான் மக்கள் பணியாற்ற பயிற்சியும், வாய்ப்பும் கிடைக்கும். திமுகவை … Read more

இந்த பூனை உட்கார்ந்திருக்கிறதா? அந்தரத்தில் இருக்கிறதா? சரியா சொல்லுங்க!

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் சமீப காலமாக இணையத்தை புயல் போல தாக்கி வருகிறது. ஒரு சுவாரசியமான பொழுதுபோக்கு புதிராக நெட்டிசன்களை காந்தம் போல ஈர்த்து வருகிறது. ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் மூளைக்கு நல்ல பயிற்சியை அளிக்கின்றன. அதோடு, யதார்த்தத்தைக் கேள்விக்குட்படுத்தி, உண்மை இது அல்ல என்று எடுத்துரைக்கிறது. எல்லாமே தோற்ற மயக்கம், காட்சிப் பிழை என்று மனிதனை சிந்திக்க வைக்கிறது. பொதுவாக ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் முதல் பார்வையில் ஒரு மாதிரியாகவும் இரண்டாவது பார்வையில் வேறு மாதிரியாகவும் … Read more

கடலில் சிக்கிய மீனவர்கள் சடலமாக மீட்பு.. சோகத்தில் குடும்பத்தினர்..!

கடல் சீற்றத்தில் சிக்கி மாயமான மீனார்கள் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், மங்களேஸ்வரி நகரில் இருந்து நேற்று முன்தினம் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் மீன் பிடிக்க சென்றனர். அவர்கள் மீன் பிடித்து விட்டு கரைக்கு திரும்பும் போது எதிர்பாராத விதமாக அவர்கள் கடல் சீற்றத்தில் படகு கவிழ்ந்தது. அதில், படகில் பயணித்தவர்கள் கடலில் மூழ்கினர். அவர்களில் இருவரை சக மீனவர்கள் மீட்டனர். மற்ற இருவரும் கடலில் மாயமாகினர்.  அவர்களை தேடும் பணியில் மீனவர்களும், … Read more

புதுவையில் காங்கிரஸ் கூட்டணி யஷ்வந்த் சின்ஹாவுக்கு ஆதரவு: நாராயணசாமி

புதுச்சேரி: புதுச்சேரியில் காங்கிரஸ், திமுக தலைமையிலான மதசார்பற்ற கூட்டணி யஷ்வந்த் சின்ஹாவுக்கு ஆதரவாக உள்ளது என்று புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: ”குடியரசுத் தலைவர் என்பவர் சுதந்திரமாக செயல்பட வேண்டும். ரப்பர் ஸ்டாம்ப்பாக இருக்கக் கூடாது. பிரதமர், அமைச்சர்கள், நீதிபதிகளுக்கு எப்படி தனி அதிகாரம் உள்ளதோ, அதேபோல் குடியரசுத் தலைவருக்கும் உள்ளது. ஆளுங்கட்சிக்கு ஜால்ரா போடுபவராக குடியரசுத் தலைவர் இருக்கக் கூடாது. அவர் முடிவு எடுக்கும்போது இந்திய … Read more

விஜயகாந்தின் உடல்நிலையில் சற்று தொய்வு ஏற்பட்டுள்ளது – பிரேமலதா

விஜயகாந்தின் உடல்நிலையில் சற்று தொய்வு இருப்பதாகவும், விரைவில் அவர் மீண்டு வருவார் என்றும் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். சென்னையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசு தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்முவுக்கு ஆதரவு தெரிவிக்கும் நிகழ்ச்சியில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் விஜயகாந்தின் உடல்நிலையில் சற்று தொய்வு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். மருத்துவர்களின் அறிவுறுத்தல் படி தொடர் சிகிச்சை அளிக்கப்படுகிறது என்றும் விரைவில் பூரண … Read more

சென்னை ஆர்ப்பாட்டத்திற்கு புறப்பட்ட மாற்றுத் திறனாளிகள் 14 பேர் காயம்: சமயபுரம் அருகே வேன் விபத்து

14 Differently abled persons injured on accident near Trichy: திருச்சி மாவட்டம் சமயபுரம் சுங்கச்சாவடி அருகே முன்னால் சென்ற லாரி மீது வேன் மோதிய விபத்தில் வேனில் பயணம் செய்த 14 மாற்று திறனாளிகள் படுகாயம் அடைந்தனர். காயமடைந்த அனைவரும் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னை வள்ளுவர் கோட்டம் பகுதியில் நாளை 4-ம் தேதி மாற்றுத்திறனாளிகள் உரிமைக்கான இயக்கம் சங்கம் சார்பில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு திண்டுக்கல் மாவட்டம் … Read more

சேலம்.! இருசக்கர வாகனம் மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழப்பு.!

சேலம் மாவட்டத்தில் இருசக்கர வாகனம் மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழந்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டம் அரியாங்குப்பம் பகுதியை சேர்ந்த பழனி என்பவரின் மகன் பிரபு(22). இவர் அதே பகுதியை சேர்ந்த தனது நண்பர் நவீன் உடன் இரு சக்கர வாகனத்தின் வாழப்பாடி அருகே உள்ள முருகன் கோவிலுக்கு சென்றுள்ளார். அப்பொழுது சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில், சேலம் நோக்கி அதிவேகத்தில் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்று இருசக்கர வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த … Read more

10 ஆயிரம் கடனுக்கு மீட்டர் வட்டி போட்டு ஒரு கோடி.. போலீசாருக்கு வீடியோ அனுப்பிவிட்டு பாஜக நிர்வாகி தற்கொலை..!

கள்ளக்குறிச்சியில் மீட்டர் வட்டி கொடுமையால் பாதிக்கப்பட்டதாகக்கூறி போலீசாருக்கு வீடியோ அனுப்பி விட்டு பாஜக நிர்வாகி தற்கொலை செய்து கொண்டார். நகர பாஜக இளைஞர் அணி துணைத் தலைவராக இருந்த தினேஷ் என்பவர் வேல்முருகன் என்பவரிடம் 10 ஆயிரம் ரூபாய் கடன் பெற்றுள்ளார். அதற்கு மீட்டர் வட்டி போட்டு ஒரு கோடி ரூபாய்க்கு மேல் பணம் தர வேண்டும் எனக்கூறி வேல்முருகன் மிரட்டியதாக சொல்லப்படுகிறது. மேலும், பன்னீர்செல்வம் என்பவர் தினேஷிடமிருந்து பல லட்ச ரூபாயை பெற்று மோசடி செய்ததாகவும் … Read more

அதிமுகவில் பணம் உள்ளது; கொள்கை கிடையாது: சீமான்

சென்னை: “அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களை விலைகொடுத்து வாங்குவதற்கு வாய்ப்பு உள்ளது, அவர்களிடம் பணம் மட்டும்தான் உள்ளது, வேறு ஒன்றும் கிடையாது. கோடிகள் பல உள்ளது, கொள்கை கிடையாது” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். இந்திய ராணுவத்திற்கு ஆட்களைச் சேர்க்க மத்திய அரசு கொண்டுவந்துள்ள அக்னிபாதை திட்டத்தை கைவிடக்கோரி நாம் தமிழர் கட்சியின் சார்பில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் … Read more

எடப்பாடி பழனிசாமியிடம் ராகுல்காந்தி பேசினாரா? – பதறிபோய் விளக்கம் கொடுத்த காங்கிரஸ்

யஷ்வந்த் சின்ஹாவுக்கு ஆதரவாக எடப்பாடி பழனிசாமியிடம் ராகுல் பேசியதாக வெளியான தகவலை மறுத்துள்ள ஜெய்ராம் ரமேஷ் திமுக-காங்கிரஸ் கூட்டணியில் குழப்பத்தை விளைவித்து பலவீனப்படுத்த முயற்சி நடப்பதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.  குடியரசுத் தலைவர் தேர்தல் வரும் 18-ம் தேதி நடைபெற உள்ள நிலையில் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளரான திரௌபதி முர்முவும், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரான யஷ்வந்த் சின்ஹாவும் தங்களுக்கான ஆதரவைத் திரட்ட அரசியல் கட்சித் தலைவர்களை நேரில் சந்தித்து வருகின்றனர். அண்ணா அறிவாலயத்தில் தமிழ்நாடு முதல்வர் … Read more