விசாரணைக் கைதி மரண விவகாரம் -காவல்துறையினர் தாக்கவில்லை.. பிரேத பரிசோதனையின் முதற்கட்ட அறிக்கையில் தகவல்

சென்னை கொடுங்கையூர் விசாரணைக் கைதி மரணம் தொடர்பான பிரேத பரிசோதனையின் முதற்கட்ட அறிக்கை மூலம் காவல்துறையினர் அவரை தாக்கவில்லை என்பது தெரிய வந்துள்ளதாக சென்னை வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் அன்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், விசாரணை கைதி ராஜசேகரின் உடலிலுள்ள காயங்கள் உயிரிழப்பதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பு ஏற்பட்டது என்றார். Source link

அறந்தாங்கி அருகே விபத்தில் கிராம உதவியாளர் உயிரிழப்பு – உறவினர்கள் சாலை மறியல்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஏற்பட்ட விபத்தில் கிராம உதவியாளர் உயிரிழந்ததையடுத்து, அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அறந்தாங்கி அருகே இடையார் கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில் (29). இவர் ஆளப்பிறந்தான் பகுதியில் கிராம உதவியாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், செந்தில் இன்று (ஜூன் 15) குடிக்காடு கண்மாயில் மண் அள்ளப்படுவது குறித்து வந்த புகார் தொடர்பாக நேரில் சென்று விசாரித்துவிட்டு அந்த தகவலை ஆளப்பிறந்தான் பகுதி சாலையோரமாக நின்று செல்போனில் உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்ததாக … Read more

"தயவுசெய்து அமைதி காக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்" – தொண்டர்களுக்கு ஓபிஎஸ் வேண்டுகோள்

ஒற்றை தலைமை விவகாரத்தில் அதிமுக தொண்டர்களை அமைதி காக்குமாறு அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ட்வீட் செய்துள்ளார்.  சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமை வகித்தனர். வரும் 23-ம் தேதி பொதுக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டங்கள் நடைபெறவுள்ள நிலையில், இந்த ஆலோசனை நடைபெற்றது. இந்நிலையில், அலுவலகத்திற்கு வெளியே நின்றிருந்த தொண்டர்களில் சிலர் அதிமுகவுக்கு … Read more

சனாதனத்திற்கு சாவு மணி அடித்து விட்டோம்; எந்தக் கொம்பனாலும் உயிர்ப்பிக்க முடியாது: துரைமுருகன்

திமுக பொதுச் செயலாளரும் நீர் வளத்துறை அமைச்சருமான துரைமுருகன், “இந்த மண்ணினுடைய பெருமைத் தெரியாமல் ஆளுநர் ரவி பேசியிருக்கிறார். சனாதனத்துக்கு சாவு மணி அடித்த மண், இந்த மண். அதை மீண்டும் உயிர்ப்பிக்க எந்தக் கொம்பனாலும் முடியாது” காட்டமாகக் கூறியுள்ளார். வேலூர் மாவட்ட தி.மு.க சார்பில் திராவிட மாடல் பயிற்சி பாசறைக் கூட்டம் இன்று (ஜூன் 15) நடைபெற்றது. இதில், அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, எம்.பி ஆ.ராசா ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டு பேசினார்கள். திராவிட மாடல் … Read more

குடும்ப பிரச்சினை காரணமாக ஆட்டோ ஓட்டுநர் எடுத்த விபரீத முடிவு.. சோகத்தில் குடும்பத்தினர்.!

குடும்ப பிரச்சினை காரணமாக ஆட்டோ ஓட்டுநர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் குரங்கணி கிராமத்தில் ஆட்டோ ஓட்டுநரான பாலமுருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு லட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் பாலமுருகனுக்கும் அவரது மனைவி லட்சுமிக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. அதேபோல் நேற்றும் 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், மன உளைச்சலில் இருந்த பாலமுருகன் கோபித்து கொண்டு வெளியே … Read more

வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் டெபாசிட் தொகை உயர்வு

புதிய சமையல் எரிவாயு சிலிண்டர் இணைப்பு பெறுவதற்கான டெபாசிட் தொகை 750 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. 14.2 கிலோ எடை கொண்ட ஒரு சிலிண்டரைப் பெறுவதற்கு டெபாசிட் தொகை 1450 ரூபாய் என்று இருந்த நிலையில், இனி 2200 ரூபாய் செலுத்த வேண்டும் என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. அதே போன்று இரு சிலிண்டர்களுக்கான இணைப்பை பெற 4400 ரூபாய் செலுத்த வேண்டும். 5 கிலோ சமையல் எரிவாயு சிலிண்டருக்கான டெபாசிட் தொகையும், 800 ரூபாயில் இருந்து 1150 … Read more

‘விபத்து அவசர சிகிச்சை மையம்’ – தமிழக அளவில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை முதலிடம்

மதுரை: நோயாளிகளுக்கு உயிர் காக்கும் அவசர சிகிச்சை வழங்குவதில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையின் ‘விபத்து அவசர சிகிச்சை மையம்’ மாநிலத்தில் முதலிடம் பெற்றுள்ளது. மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை, தென் தமிழகத்தில் உள்ள அரசு மருத்துமவனைகளில் முதன்மையானது. மதுரை மட்டுமில்லாது, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை மற்றும் தேனி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இருந்து அனைத்து விதமான நோய்களுக்கும் நோயாளிகள் சிகிச்சைப்பெற வருகிறார்கள். இதற்காக அண்ணா பஸ் நிலையம் அருகே … Read more

ஜெயக்குமாரின் கருத்தெல்லாம் அதிமுகவின் அதிகாரப்பூர்வ கருத்தல்ல – கோவை செல்வராஜ்

இரட்டை தலைமையாக செயல்பட வேண்டும் என்பதுதான் ஒ.பன்னீர் செல்வத்தின் கருத்து என அதிமுக செய்தித் தொடர்பாளர் கோவை செல்வராஜ் தெரிவித்தார். ஓபிஎஸை அவரது இல்லத்தில் சந்தித்த அதிமுக செய்தித் தொடர்பாளர். கோவை செல்வராஜ் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, அதிமுகவில் ஒற்றை தலைமையை எந்த தொண்டர்களும் நிர்வாகிகளும் ஏற்றுக்கொள்ளவில்லை. ஒ.பன்னீர்செல்வம் தான் கட்சியை வழி நடத்துவார். இயக்கத்தையும் தொண்டர்களையும் காப்பாற்ற வேண்டும். இந்த இயக்கத்தை காப்பாற்றும் தகுதியும் பொறுப்பும் ஒ. பன்னீர் செல்வத்துக்கு மட்டும்தான் உள்ளது. மாவட்ட செயலாளர்கள் … Read more

திருச்சி அரசு மருத்துவக் கல்லூரிக்கு புதிய டீன்: புற்றுநோய் சிகிச்சை கருவி கொண்டு வர உறுதி

திருச்சி கி.ஆ.பெ. விசுவநாதம் அரசு மருத்துவக் கல்லூரி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் முன்னாள் டீன் வனிதா கடந்த மாதம் ஓய்வு பெற்றதை தொடர்ந்து மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் புதிய டீனாக மருத்துவர் நேரு பொறுப்பேற்றுக் கொண்டார். அவரை மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் பூங்கொத்து கொடுத்தும், பொன்னாடை அணிவித்தும் வரவேற்றனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், திருச்சி அரசு மருத்துவமனையில் 1603 படுக்கைகள் உள்ளது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிறியவர்களுக்கு 20, பெரியவர்களுக்கு 75 … Read more

ஆங்கிலேயன் பயந்து நடுங்கிய தமிழனின் தனித்துவமான ஆயுதம்.! பூலித்தேவருக்கு உதவ மறுத்த கட்ட பொம்மு.! 

தமிழகத்தில், அதிலும் குறிப்பாக தென் தமிழகத்தில், மருதநாயகத்தின் மறைவிற்குப் பின்னர், ஆங்கிலேயரின் அடக்கு முறை நேரடியாகவே நடைபெற்றது. ஆங்கிலேயரிடம் பீரங்கி உள்ளிட்ட நவீன ஆயுத பலம் இருந்தாலும், அவர்கள் பயந்தது, தமிழர்களின் ஒரு ஆயுதத்திற்கு மட்டுமே. அந்த ஆயுதத்தின் பெயர் வளரி. 147 டிகிரி வளைவு கொண்ட, இந்த வளைந்த வாள், கைப்பிடியுடன் சம எடையில் இருக்கும்.  இப்போது, நமக்கு தெரிந்த பூமராங் மாதிரி தான். ஆனால், இந்த ஆயுதத்தை முறையான பயிற்சி இல்லாமல் கையாள முடியாது. … Read more