அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்படுவீர்கள்.. ஓபிஎஸ், இபிஎஸ்.,க்கு வந்த பகிரங்க எச்சரிக்கை.!

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர், அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த பத்மகிரி பாபா ஆசிரமத்தின் தலைமை பொறுப்பாளர் சரவணகுமார் செய்தியாளர்களை சந்தித்து தெரிவிக்கையில், “கடந்த 10 தினங்களுக்கு முன்பு அதிமுகவின் தலைவர் எம்ஜிஆர் அவர்கள் ஒரு சில விஷயங்களை என்னிடம் தெரிவித்துள்ளார். நான் இதை எப்படி செய்தியாளர்களிடம் தெரிவிக்கலாம் என்று நினைத்தேன்.  நான் முதலில் சொல்ல வேண்டாம் என்றுதான் நினைத்தேன். கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு எனக்கு மன அழுத்தம் அதிகமாகியது. இதன் காரணமாக நான் இன்று இந்த … Read more

தியாகத் திருநாளாம் பக்ரீத் பண்டிகை இன்று கொண்டாட்டம்.. பள்ளிவாசல்களில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை..!

தியாகத் திருநாளாம் பக்ரீத் பண்டிகை இன்று தமிழகம் முழுவதும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. பண்டிகையை ஒட்டி, உலக புகழ்பெற்ற நாகூர் தர்காவில் நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை நடத்தினர். பின்னர் ஒருவரையொருவர் ஆரத்தழுவி வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டனர். இதே போல, சென்னை பிராட்வே டான் போஸ்கோ பள்ளியிலும் கோவை ஜமாத் மஸ்ஜித் மசூதியிலும் சேலம் சூரமங்கலம் பகுதியிலும் நாகர்கோவில் அடுத்த இளங்கடை பாபா ஹாசிம் பள்ளிவாசல் மைதானத்திலும் சிறப்பு தொழுகைகள் நடைபெற்றன. புதுச்சேரி கடற்கரை சாலையிலும் … Read more

எம்பிஏ, எம்சிஏ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை: தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அறிவிப்பு

சென்னை: எம்பிஏ, எம்சிஏ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தொடர்பான அறிவிப்பை தொழில்நுட்ப கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ளது. 2022-2023 ம் கல்வியாண்டில் அரசு/அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரி மற்றும் கலைக் கல்லூரிகள், அண்ணா பல்கலைக் கழகம், வட்டார மையங்கள், அண்ணாமலை பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக் கழகம், இதர பல்கலைக் கழகங்கள், சுயநிதி பொறியியற் கல்லூரிகள் மற்றும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் மற்றும் கல்லூரிக் கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் எம்பிஏ மற்றும் … Read more

கால் சென்டர்கள் மூலம் ரூ.11 கோடி அபராதம் வசூல்- சென்னை போக்குவரத்து காவல்துறை தகவல்

சென்னையில் போக்குவரத்து கால் சென்டர்கள் மூலம் 84 நாட்களில் ரூ.11,31,68,025 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை 2018 மார்ச் மாதம் முதல் பணமில்லா பரிவர்த்தனை முறைக்கு மாற்றப்பட்டது. ஆரம்ப காலங்களில் அபராதம் செலுத்துவது அதிகமாக இருந்த போதிலும், சாலை விதிமுறைகளை மீறுபவர்கள் பலர் அபராதம் செலுத்தாததால் அது காலப்போக்கில் தேக்கமடைந்தது. இந்த தேக்க நிலையை சரி செய்ய சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறையினர் அழைப்பு மையங்கள் முறையை … Read more

பக்ரீத் வாழ்த்து செய்தி: ஒன்றுபட்ட இபிஎஸ், ஒபிஎஸ்

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு எடப்பாடி பழசாமி எழுதிய வெளியிட்ட செய்தியிலும், பன்னீர் செல்வம் வெளியிட்ட வாழ்த்து செய்தியிலும் பல ஓற்றுமைகள் கொண்டாதாக இருக்கிறது. பக்ரீத் திருநாள் உலகம் முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது, இந்நிலையில் அரசியல் தலைவர்கள் மக்களுக்கு பக்ரீத் வாழ்த்தை முன்னதாகவே தெரிவித்தனர். இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ. பன்னீர் செல்வம் தனித் தனியே  வாழ்த்து தெரிவித்து செய்திகுறிப்பு வெளியிட்டுள்ளனர். இந்நிலையில் இவருவரின் வாழ்த்து செய்திகளிலும் சில வார்த்தைகள் மட்டுமே மாறுபட்டிருக்கிறது. மற்ற வார்த்தைகள் எல்லாம் … Read more

அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் ஓபிஎஸ், இபிஎஸ் புகைப்படங்கள் நீக்கம்.! 

அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் நாளை நடைபெற உள்ளது. அதை சமயத்தில் ஓபிஎஸ் அதிமுக பொது குழு கூட்டத்திற்கு தடைக்குரிய வழக்கின் தீர்ப்பும் நாளை காலை 9 மணிக்கு வரவுள்ளது. இந்த தீர்ப்பில் அதிமுக பொது குழு கூட்டத்திற்கு ஏதேனும் நிபந்தனைகள் அல்லது கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருந்த போதிலும் அதிமுகவின் பொதுக்குழுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இன்று ஓ பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி தங்களது ஆதரவாளர்களுடன் தனித்தனியாக ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.  இது ஒரு … Read more

பிஎஸ்என்எல் அலைக்கற்றையை சட்டவிரோதமாக பயன்படுத்திய இருவர் கைது.. 3 மாதங்களாக வெளிநாடுகளுக்கு பேசி வந்தது அம்பலம்..!

தேனியில் பி.எஸ்.என்.எல் அலைக்கற்றை சேவையை சட்டவிரோதமாக பயன்படுத்தி வெளிநாடுகளுக்கு பேசி வந்த கேரளாவைச் சேர்ந்த 2 பேரை கைது செய்த போலீசார், தீவிரவாத செயலா.? என விசாரித்து வருகின்றனர். தேனி பி.எஸ்.என்.எல் அலைக்கற்றை சேவையில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்லக்கூடிய ஐ.எஸ்.டி சேவை குறியீட்டுக்கான ஃபிரிக்குவன்சி நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிகமாக இருந்ததால் சந்தேகமடைந்த அதிகாரிகள் போலீசில் புகாரளித்தனர். விசாரணையில், ஆண்டிப்பட்டியில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்த சஜீர், முகமது ஆசிப் ஆகிய இருவர், அவர்கள் வைத்திருக்கும் … Read more

வெறுப்பைத் தூண்டும் ட்விட்டர் பதிவு: பாஜக நிர்வாகி சவுதாமணி கைது

தமிழக பாஜக செயற்குழு உறுப்பினரான சவுதாமணி, கடந்த ஜனவரி மாதம் தனது ட்விட்டர் பக்கத்தில், மதவாத வெறுப்பைத் தூண்டும் வகையில், ஒருவர் பேசிய காணொலியைப் பகிர்ந்து, கருத்தைப் பதிவிட்டிருந்தார். இது தொடர்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அவர் மீது புகார் அளிக்கப்பட்டு, 2 பிரிவுகளின் கீழ், வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு, சென்னை உயர் நீதிமன்றத்தில் சவுதாமணி மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால், அவரது மனுவைத் தள்ளுபடி செய்து, சென்னை உயர் … Read more

'நான் ஜெயலலிதா தந்தையின் முதல் மனைவியின் மகன்' – உயர்நீதிமன்றத்தில் புதிய வழக்கு

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தந்தை ஜெயராமின் முதல் மனைவியின் மகன் என கூறி, ஜெயலலிதாவின் சொத்துகளில் பாதி பங்கை தனக்கு வழங்க கோரி மைசூருவை சேர்ந்த வாசுதேவன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளராகவும், தமிழக முதல்வராகவும் இருந்து மறைந்த ஜெயலலிதாவின் சகோதரர் என கூறி, கர்நாடகா மாநிலம் மைசூருவில் உள்ள வியாசராபுரத்தை சேர்ந்த 83 வயது முதியவரான வாசுதேவன் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், ஜெயலலிதாவின் தந்தையான ஆர்.ஜெயராம் தான் தனக்கும் … Read more

கணவருடன் பிரிவு ஏன்? பர்சனல் சோகத்தை முதல் முறையாக பகிர்ந்த இசைவாணி

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான இசைவாணி தற்போது தனது திருமண வாழக்கை முறிவு குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பர் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், இதில் பங்கேற்கும் பலரும் திரைத்துரையில் வாய்ப்புகளை பெற்று வருகின்றன இதுவரை 5 சீசன்கள் முடிந்துள்ள இந்நிகழ்ச்சியில் விரைவில் 6-வது சீசன் தொடங்க உள்ளது. இந்நிலையில் கடந்த ஆண்டு நடைபெற்ற 5-வது சீசனில் பங்கேற்று புகழ்பெற்றவர் இசைவாணி. நாட்டுப்புற பாடகியான … Read more