அ.தி.மு.க-வில் ஒற்றைத் தலைமை: பெரும்பான்மை நிர்வாகிகள் ஆதரவு என ஜெயக்குமார் பேட்டி

அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அதிமுகவின் ஒற்றைத் தலைமை குறித்து விவாதிக்கப்பட்டது என்றும் பெரும்பான்மை நிர்வாகிகள் ஒற்றைத் தலைமைக்கு ஆதரவு தெரிவித்தனர் என்றும் அதிமுக மூத்த தலைவர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். இதனால், ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் இருவரில் அதிமுகவின் ஒற்றைத் தலைமை யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. அதிமுக முன்னாள் அமைச்சரும் மூத்த தலைவருமான ஜெயக்குமார், “அதிமுகவின் தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், ஒற்றைத் தலைமை குறித்து விவாதிக்கப்பட்டது. அந்த … Read more

விருந்துக்கு வரச்சொல்லி, அரிவாளால் வெட்டிக் கொலை செய்தது வேதனையளிக்கிறது – கமல்ஹாசன்.!

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அடுத்த சோழபுரம் அருகே உள்ளது துளுக்கவெளி. இந்த கிராமத்தை சேர்ந்த பட்டியில் இன வகுப்பை சேர்ந்தவர் என்று சொல்லப்படும் சரண்யா (24 வயது) என்பவரும், திருவண்ணாமலை மாவட்டம் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த மோகன் (31 வயது) என்பவரும் காதலித்து வந்துள்ளனர்.  காதல் விவகாரம் சரண்யா வீட்டில் தெரிய வரவே, காதலன் மாற்று சமூகம் என்பதால் அவரின் காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும், சரண்யாவின் சகோதரரான சக்திவேல் தனது மைத்துனர் ரஞ்சித் என்பவருக்கு … Read more

படப்பிடிப்புகளை ரத்து செய்துவிட்டு 12 நாட்களாக அமெரிக்காவில் உள்ள சிம்பு.. அவரை பெற்றதில் தான் பெருமையடைவதாக டி.ராஜேந்திர் கண்ணீர் மல்க பேட்டி..

தனது சிகிச்சை தொடர்பாக மகன் சிம்பு, படப்பிடிப்புகளை ரத்து செய்துவிட்டு 12 நாட்களாக அமெரிக்காவில் தங்கியிருப்பதாகவும், அவரை பெற்றதில் தான் பெருமையடைவதாகவும் இயக்குனர் டி.ராஜேந்திர் கண்ணீர் மல்க தெரிவித்தார். உயர் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்லும் முன் சென்னை விமான நிலையத்தில் பேட்டியளித்த அவர், தான் மேல் சிகிச்சைக்கு வெளிநாடு செல்ல மகன் சிம்பு தான் காரணம் என்றும் தன்னைப் பற்றி வரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் கூறினார். வயிற்றுப் பகுதியில் ரத்த கசிவு ஏற்பட்டதால் சென்னை … Read more

குமாரபாளையத்தில் 10 சிறு சாயப்பட்டறைகள் இடித்து அகற்றம்: வாழ்வாதாரத்தை முன்வைத்து கடும் வாக்குவாதம்

நாமக்கல்: குமாரபாளையத்தில் அனுமதியின்றி செயல்பட்ட 10 சிறு சாயப்பட்டறைகளை நாமக்கல் மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் உத்திரவின் பேரில் இடித்து அகற்றப்பட்டன. அப்போது சாயப்பட்டறை உரிமையாளர்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. குமாரபாளையத்தில் விசைத்தறி தொழில் பிரதானமாக மேற்கொள்ளப்படுகிறது. இதை மையப்படுத்தி அங்கு ஏராளமான சாயப்பட்டறைகள் இயங்கி வருகின்றன. அவற்றில் சில சாயப்பட்டறைகள் உரிய அனுமதியின்றி இயங்கி வருகின்றன. அவை சாயக்கழிவு நீரை சுத்திகரிப்பு செய்யாமல் நள்ளிரவு மற்றும் அதிகாலை வேளைகளில் காவிரி ஆற்றில் நேரடியாக … Read more

காவல்துறையினரின் துஷ்பிரயோகங்களை அரசு ஏன் கண்டுகொள்வதில்லை? – நீதிமன்றம் கேள்வி

காவல்துறையினர் மீதான குற்றச்சாட்டுகள் சமீப நாட்களில் அதிகரித்துள்ளதாகவும், இவற்றை பொறுத்துக்கொள்ள முடியாது என்றும் சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. காவலர் குடியிருப்பு ஒன்றில் ஒதுக்கப்பட்ட வீட்டை காலி செய்யும்படி 2014ஆம் ஆண்டு அனுப்பப்பட்ட நோட்டீசை எதிர்த்து காவல்துறையைச் சேர்ந்த மாணிக்கவேல் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், 2014 ஆம் ஆண்டிலேயே இடத்தை காலி செய்யுமாறு உத்தரவிட்டு, அதை உயர் நீதிமன்றம் உறுதி செய்த பிறகு இந்த ஆண்டு … Read more

காப்பீட்டு நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்படும் மத்திய, மாநில அரசுகள்; விவசாயிகள் குற்றச்சாட்டு!

Farmers accuse central and state governments of acting in favour of insurance companies: காப்பீட்டு நிறுவனங்களுக்கு ஆதரவாக மத்திய, மாநில அரசுகள் செயல்படுவதாக விவசாயிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர். கடந்த ஆண்டு சம்பா, தாளடி மற்றும் கோடை பயிர்கள் விளைவித்து காப்பீடு செய்திருந்த விவசாயிகளுக்கு ஏப்ரல் மாதம் வழங்கப்பட வேண்டிய பயிர் இழப்பீட்டு தொகை சுமார் ரூ.1,200 கோடி இன்னும் வழங்கப்படாததைக் கண்டித்து தமிழ்நாடு காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர், கைகளில் வாழைக் கன்றுகளை ஏந்தியவாறு, … Read more

4 முக்கிய மசோதாக்கள்.! நாட்டின் மிக முக்கிய தேர்தல்., கூடுகிறது பாராளுமன்றம்.!

பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 18-ம் தேதி தொடங்கப்படலாம் என்று ஒரு பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. குடியரசு தலைவர் பதவிக்கான தேர்தல் முடிவுகள் ஜூலை 21ம் தேதி அறிவிக்கப்பட உள்ளது. துணை ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படதா நிலையில், பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 18-ம் தேதி தொடங்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை மாதம் 18 முதல் ஆகஸ்ட் 12 ம் தேதி வரை நடக்கலாம் என்ற தகவல் … Read more

வருகிற 21 ஆம் தேதி வேலூருக்கு செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..

வேலூர் மாவட்டத்தில் 5 தொகுதி மக்கள் அளித்துள்ள கோரிக்கை மனுக்களின் படி, நலத்திட்ட உதவிகளை வருகிற 21 ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கவிருப்பதாக மாநில நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். முதலமைச்சரின் வருகை சம்பந்தமான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று பேசிய அவர், தமிழகத்தின் நிதி நிலைமையை கருத்தில் கொண்டு அதற்கேற்றால் போல் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும் என்று தெரிவித்தார். கூட்டுறவு சங்கங்களின் பதவி காலத்தை மூன்றாண்டுகளாக குறைக்கும் தீர்மானம் மூன்று முறை நிறைவேற்றி அனுப்பியும் ஆளுநர் … Read more

“பிரதான எதிர்க்கட்சியாக செயல்படுகிறார் அண்ணாமலை” – சரத்குமார் புகழாரம்

சேலம்: “பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பிரதான எதிர்க்கட்சியாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்” என்று சமக தலைவர் சரத்குமார் கூறியுள்ளார். சேலம் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வந்த சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவரும், நடிகருமான சரத்குமார் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு பிரச்சினை என்பது பெரிய அளவில் ஏதுமில்லை. பாஜக மதத்தை வைத்து அரசியல் நடத்துவதாக கூறப்பட்டாலும், பிற மதத்தவரை புண்படுத்தும் வகையில் கருத்து வெளியிட்ட பாஜகவினர் மீது கட்சி நிர்வாகம் … Read more

’பஞ்சமுக ஆஞ்சநேயர், நாயன்மார்’.. பட்டினப்பாக்கம் அருகே கரை ஒதுங்கிய கற்சிலைகள்!

பட்டினப்பாக்கம் அருகே கரை ஒதுங்கிய கற்களால் ஆன சாமி சிலைகள் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். சென்னை பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் துலுக்கானத்தம்மன் கோவில் எதிரில் கருப்பு கலரில் பெரிய கற்கள் போல கிடந்ததை அங்கு விளையாடி கொண்டிருந்த சிறுவர்கள் கண்டனர். அருகில் சென்று பார்த்தபோது தான் அது கற்களால் ஆன சாமி சிலைகள் எனத் தெரிந்தது. இதையடுத்து உடனே பட்டினப்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து கரை ஒதுங்கிய இரு சிலைகளையும் மீட்ட போலீசார், … Read more