குடும்ப தகராறில் கர்ப்பிணி பெண் எடுத்த விபரீத முடிவு.. தென்காசி அருகே நிகழ்ந்த அவலம்..!

கிணற்றில் குதித்து கர்ப்பிணி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தென்காசி மாவட்டம், கரையாளனூர் நடுத்தெருவைச சேர்ந்தவா் முருகன்.  இவருக்கு திருமணமாகி ராஜேஸ்வரி என்ற மனைவியும் 2 வயதில் குழந்தையும் உள்ளது. இந்நிலையில், ராஜேஸ்வரி ஐந்துமாத கர்ப்பிணியாக உள்ளார். கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்படும் என கூறப்படுகிறது. இதனால், மன உளைச்சலில் இருந்த ராஜேஸ்வரி அங்குள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்புதுறையினர் … Read more

கந்து வட்டி கேட்டு மிரட்டல் விடுத்த நிதி நிறுவன உரிமையாளர் கைது

சேலத்தில் கந்து வட்டி கேட்டு மிரட்டல் விடுத்தாக நிதி நிறுவன உரிமையாளர் கைதாகி உள்ளார். கே.பி. கரடை சேர்ந்த ஜவ்வரிசி வியாபாரி காளியப்பன் நெத்திமேட்டில் உள்ள ராஜவேல் பாபு என்பவருக்கு சொந்தமான நிதி நிறுவனத்தில் 2021-ம் ஆண்டில் 2 லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார். பின்னர் மாதம் 26 ஆயிரம் ரூபாய் வீதம் 10 தவணைகளில் அவர் அந்த தொகையை திருப்பி செலுத்தியுள்ளார். இந்நிலையில் மேலும் 1 லட்சம் ரூபாய் கேட்டு கடந்த 9-ம் தேதி ராஜவேல் … Read more

பொதுமக்களின் போக்குவரத்தாக மாறிவரும் சென்னை மெட்ரோ – ஒரு பின்புலப் பார்வை

ஒரு ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி. சாலைகளில் பொதுமக்கள் நடமாட்டம் குறைவாகவே இருந்தது. ஆனால், ஓர் இடத்தில் மட்டும் பொதுமக்கள் நடமாட்டம் அதிகமாக இருந்தது. விளையாடச் செல்பவர்கள் தொடங்கி பணிக்குச் செல்பவர்கள் வரை அனைவரும் அங்கு இருந்தனர். மற்றொரு நாள் இரவு 7 மணி. சென்னையில் முக்கிய இடத்தில் மக்கள் நீண்ட வரிசையில் காத்துக் கொண்டிருந்தனர். அந்த வரிசையில் நின்று நானும் அதை வாங்கிக் கொண்டு, அந்த இடத்திற்குச் சென்றேன். இந்த இரண்டு காட்சிகளும் நான் சென்னை … Read more

திருமணமான ஏழே மாதத்தில் இளம்பெண் தற்கொலை.. காவல்துறையினர் விசாரணை..!

திருமணமான 7 மாதத்தில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கூடலூர் 4-வது வார்டு மூனுசாமி கோவில்தெருவை சேர்ந்தவர்  ரவிகுமார். இவருக்கு கடந்த 7 மாதங்களுக்கு முன்பு அர்ச்சனா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. அர்ச்சனாவிற்கு உடல்நிலை சரியில்லை என கூறப்படுகிறது.  அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு ரவிக்குமார் அழைத்து சென்றார். ஆனால், அவரை ரவிக்குமார் வீட்டிற்கு அழைத்து வரவில்லை என கூறப்படுகிறது. இதனால், மனமுடைந்த அர்ச்சனா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து … Read more

பள்ளிப் பெருந்து ஓட்டுநர்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும்: ஓசூர் கோட்டாட்சியர்

ஓசூர்: பள்ளிப் பேருந்து ஓட்டுனர்கள் குழந்தைகளின் எதிர்காலம் மற்றும் குழந்தைகளின் குடும்பங்களை கவனத்தில் கொண்டு பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்று ஓசூர் கோட்டாட்சியர் தேன்மொழி வலியுறுத்தியுள்ளார். ஓசூர் வட்டாரத்தில் உள்ள தனியார் பள்ளி பேருந்துகளுக்கான சிறப்பு ஆண்டு ஆய்வுப்பணி கோட்டாட்சியர் தேன்மொழி தலைமையில் நடைபெற்றது. ஓசூர் பாகலூர் சாலையில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு ஓசூர் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் முன்னிலை வகித்தார். வட்டார போக்குவரத்து அலுவலர் துரைசாமி வரவேற்புரை … Read more

அதெல்லாம் வேணாம், இதை நேரடியா முடிச்சு விடுங்க முதல்வரே..  எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி டிவிட்.!

ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வதற்கு ஆய்வுக் குழு அமைப்பதை விட்டுவிட்டு, அவரச சட்டத்தை இயற்றி ஆன்லைன் ரம்மியை தடை செய்து மக்களை காக்க வேண்டும் என, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். ஆன்லைன் ரம்மி விளையாட்டு உள்ளிட்ட சூதாட்டங்கள் குறித்து, அவசர தடை சட்டம் தொடர்பான பரிந்துரைகளை அளிக்க, ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு அமைத்து முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டு இருந்தார். இந்நிலையில், இதுபோல் ஆய்வுக் குழு … Read more

கூட்டுறவு வங்கிகளில் போலியாக கணக்கு தொடங்கி மோசடி.. திமுக MP எச்சரிக்கை

கடந்த அதிமுக ஆட்சியில் நாமக்கல் ஆரியூர் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் அதிமுக பிரமுகர் முறைகேடாக கடன் பெற்று மோசடி செய்ததாக திமுக மாநிலங்களவை உறுப்பினர் ராஜேஷ் குமார் குற்றஞ்சாட்டியுள்ளார். நாமக்கலில் பேட்டியளித்த அவர், ஆரியூர் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தின் தலைவரான மணி என்பவர், தனது சகோதரர் பெயரில் கடன் பெற்று மோசடி செய்ததாக தெரிவித்துள்ளார். வெளிநாட்டில் இருக்கும் சகோதரர் சுப்ரமணி என்பவர் பெயரில் போலி கையெழுத்திட்டு கணக்கு தொடங்கி ஒரு லட்சத்து … Read more

கொளத்தூர் தொகுதியில் ரூ.17.63 கோடியில் புதிய அடுக்குமாடி குடியிருப்புகள்: முதல்வர் அடிக்கல் நாட்டினர்

சென்னை: கொளத்தூர் தொகுதியில் ரூ.17.63 கோடியில் புதிதாக கட்டப்படவுள்ள 130 அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினர். தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் கொளத்தூர், ஜமாலியா லேன் திட்டப்பகுதியில், ரூ.17.63 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள 130 புதிய அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார். ஜமாலியா லேன் பகுதியில் 1976ம் ஆண்டில் 326 சதுர அடியில் தரை மற்றும் மூன்று தளங்களுடன் கட்டப்பட்ட 128 குடியிருப்புகள் சிதிலமடைந்து வாழத் தகுதியற்ற … Read more

#செங்கல்பட்டு மாவட்டம் || கால்வாயில் மூழ்கிய 12 வயது சிறுவன் உயிரிழப்பு.!

செங்கல்பட்டு மாவட்டத்தில் கால்வாயில் மூழ்கிய 12 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளான். செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் பகுதியை சேர்ந்த ஆனந்தராஜ் என்பவரின் 12 வயது மகன் அர்ஷத் ஏழாம் வகுப்பு படித்து வந்தான். அர்ஷத் கல்பாக்கத்தில் உள்ள பக்கிங்காம் கால்வாயில் நண்பர்களுடன் குளிக்க சென்றப்பொழுது கால்வாயில் மூழ்கி உள்ளான். இதைப்பார்த்த நண்பர்கள் உதவி கேட்டு சத்தம் போட்டுள்ளனர். இதையடுத்து அப்பகுதியில் இருந்தவர்கள் கல்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், விரைந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் … Read more

கீழே கிடந்த பதினாறரை பவுன் நகையை காவல் நிலையத்தில் ஒப்படைத்த இளைஞருக்கு காவலர்கள் பாராட்டு.. உரியவரிடம் நகை ஒப்படைப்பு..!

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் தனது கடையின் படிக்கட்டில் கிடந்த பதினாறரை பவுன் தங்க நகைகளை காவல்நிலையத்தில் ஒப்படைத்த இளைஞருக்கு போலீசார் பாராட்டு தெரிவித்தனர். தேவகோட்டை – திருப்பத்தூர் சாலையில் கம்ப்யூட்டர் சென்டர் நடத்தி வரும் முகமது இப்ராஹிம், நேற்றிரவு கடையை மூடிவிட்டு சென்ற போது படிக்கட்டில் நகைப்பை கிடப்பதை பார்த்தார். பின்னர் உடனடியாக அதனை எடுத்துச்சென்று தேவகோட்டை காவல்நிலையத்தில் ஒப்படைத்தார். விசாரணையில் நகைப்பையை தவறவிட்டது போரிவயல் கிராமத்தைச் சேர்ந்த பிரியங்கா என தெரியவந்ததையடுத்து அவரிடம் நகைகளை போலீசார் … Read more