அமெரிக்காவில் விமானம் நொறுங்கி விழுந்து விபத்து – 4 பேர் பலி

வாஷிங்டன், அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணம் ஸ்னோஹோமிஷ் நகரில் உள்ள ஹார்வி பீல்ட் விமான நிலையத்தில் இருந்து தனியாருக்கு சொந்தமான சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது. விமானத்தில் விமானி உள்பட 4 பேர் இருந்தனர். கிளம்பிய சிறிது நேரத்தில் சுமார் 10 ஆயிரம் அடி உயரத்தில் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது விமானம் திடீரென உடைந்தது. அதை தொடர்ந்து அங்குள்ள குடியிருப்பு பகுதியில் விமானம் விழுந்தது. இந்த கோர விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 4 பேரும் … Read more

இந்தோனேசிய நிலநடுக்கம்: உயிரிழப்பு 44 ஆக அதிகரிப்பு; 300-க்கும் மேற்பட்டோர் காயம்

ஜகார்த்தா: இந்தோனேசியாவின் ஜாவா தீவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 44 ஆக அதிகரித்துள்ளது. இது தொடர்பாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில், இந்தோனேசியாவின் மத்திய ஜாவா தீவில் உள்ள சியான்ஜூர் என்ற பகுதியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோளில் 5.6 ஆக பதிவாகி இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் காரணமாக 10-க்கும் மேற்பட்ட கட்டடங்கள் இடிந்து விழுந்துள்ளன. இடிபாடுகளில் சிக்கி இதுவரை … Read more

தடையை நீக்கிய எலான் மஸ்க்: டிரம்பின் டுவிட்டர் கணக்கு மீண்டும் செயல்பட தொடங்கியது

நியூயார்க், அமெரிக்காவில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 6-ந் தேதி டிரம்பின் ஆதரவாளர்கள் நூற்றுக்கணக்கானோர் நாடாளுமன்றத்துக்குள் புகுந்து பெரும் கலவரத்தில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து டிரம்ப் தனது பதிவுகள் மூலம் வன்முறையை தூண்டியதாக கூறி பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் ஆகிய சமூகவலைத்தள நிறுவனங்கள் அவரது கணக்கை முடக்கின. இதில் டுவிட்டர் நிறுவனம் டிரம்புக்கு நிரந்த தடை விதித்தது. இதனால் டிரம்ப் ‘சோசியல் ட்ரூத்’ என்கிற பெயரில் தனக்கென சொந்தமாக சமூகவலைத்தளத்தை உருவாக்கினார். இந்த நிலையில் பெரும் தொகை … Read more

ஈரானில் ஹிஜாப் அணியாமல் வீடியோ பதிவிட்ட இரண்டு நடிகைகள் கைது..!

ஈரான் நாட்டில் ஹிஜாப் அணியாமல் வீடியோ பதிவிட்ட நடிகைகள் இரண்டு பேர் கைது செய்யப்பட்டு உள்ளதாக அந்த நாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்து உள்ளது. நடிகைகள் ஹெங்கமே காசியானி, காடாயூன் ரியாகி இரண்டு பேரும் ஹிஜாப் அணியாமல் வீடியோ பதிவிட்டது அந்த நாட்டில் நடைபெற்று வரும் போராட்டங்களுக்கு மறைமுகமாக ஆதரவளிக்கும் செயல் என்பது போலிசின் புகார் ஆகும். இரண்டு நடிகைகளில்  ஹெங்கமே காசியானி, ஹிஜாப் அணியாமல் வெளியிட்டு உள்ள இந்த பதிவுதான் தமது  கடைசி பதிவாகக்கூட இருக்கலாம் … Read more

இந்தோனேஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 20 பேர் பலி| Dinamalar

பாலி: இந்தோனேஷியாவில் 5.6 ரிக்டர் அளவில் பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 20 பேர் உயிரிழந்தனர். 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான இந்தோனேஷியாவில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும். அந்த வகையில் இன்று (நவ.,21) மேற்கு ஜாவா மாகாணத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 5.6 ஆக பதிவான நிலநடுக்கத்தால், மக்கள் அலறியடித்து வீதியில் ஓடினர். பலர் திறந்தவெளி மைதானங்களில் பதற்றத்துடன் கூடினர். சியாஞ்சூர் நகரில் அதிக பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. … Read more

Indonesia Earthquake : இந்தோனேஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்… 46 பேர் பலி

இந்தோனேஷியா நாட்டின் முக்கிய தீவான ஜாவாவில் இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் 46 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  இந்த நிலநடுக்கம் 5.4 ரிக்டர் அளவு கோளில் பதிவாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, ஆயிரக்கணக்கான வீடுகள் இடிந்து தரைமட்டமாகியுள்ளதாகவும், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகமாகவும் வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. தற்போது, 46 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 700க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்திருப்பதாகவும் உள்ளூர் நிர்வாகம் தெரிவித்துள்ளது.  தலைநகர் ஜகார்தாவிலும் நிலநடுக்கம் உணரப்பட்டாலும், சேதமா உயிரிழப்போ ஏதும் ஏற்படவில்லை என தெரிகிறது. … Read more

2030-க்குள் மனிதர்கள் நிலவில் வாழலாம்: நாசா

நியூயார்க்: 2030-க்குள் மனிதர்கள் நிலவில் வாழலாம், பணி செய்யலாம் என நாசா தெரிவித்துள்ளது. புதுமையான தொழில்நுட்பத்தை பயன்படுத்தி முன்பைக் காட்டிலும் துல்லியமான முறையில் நிலவை ஆராய்ச்சி செய்யும் நோக்கில் ஆர்டெமிஸ் திட்டத்தை நாசா கையில் எடுத்திருந்தது. அதன்படி ஆகஸ்ட் மாதமே ஆர்டெமிஸ் ஏவுகணையை விண்ணில் செலுத்த நாசா தயாராகி இருந்தது .எனினும் இந்த முயற்சி தோல்வியில் முடிந்தது. இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்னர் நிலவுக்கு ஆர்டெமிஸ் ஏவுகணையை நாசா விண்ணில் செலுத்தியது. இது குறித்து அமெரிக்க … Read more

இந்தோனேஷியாவில் நில நடுக்கம் – 20 பேர் உயிரிழப்பு

இந்தோனேஷியாவின் மேற்கு ஜாவா மாகாணத்தை உலுக்கிய நிலநடுக்கத்திற்கு 20 பேர் உயிரிழந்தனர். அங்குள்ள சியாஞ்சுர் நகரில், பூமிக்கடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் நேரிட்டது. ரிக்டர் அளவில் 5 புள்ளி 6 பதிவான இந்த நிலநடுக்கத்தால், சில அடுக்குமாடி கட்டடங்கள் இடிந்து விழுந்தன. இடிபாடுகளில் சிக்கி காயமடைந்த 300 க்கும் மேற்பட்டோரில், சிகிச்சை பலனின்றி 20 பேர் உயிரிழந்தனர். தலைநகர் ஜகார்த்தாவிலும் நில அதிர்வுகள் உணரப்பட்டதால், மக்கள் உடனடியாக வீடுகளை விட்டு வெளியேறினர். Source link

இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: 20 பேர் உயிரிழப்பு, காயம் 300

ஜகார்த்தா: இந்தோனேசியாவில் திங்கள்கிழமை ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் 20 பேர் பலியாகினர். இந்தோனேசியாவின் மேற்கு ஜாவாவில் இன்று (திங்கள்கிழமை) சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது, ரிகடர் அளவுகோலில் 5.6 ஆக பதிவாகியது. இந்த நிலநடுக்கத்துக்கு இதுவரை 20 பேர் பலியானதாகவும், 300 பேர் காயமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலநடுக்கம் காரணமாக கட்டிடங்கள் குலுங்கிய வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. Moderately strong #Earthquake in Jakarta, Indonesia just occurred few … Read more

இந்தோனேஷியாவில் நிலநடுக்கம்: 20 பேர் பலி; 300 பேர் படுகாயம்!

இந்தோனேஷிய நாட்டில் இன்று மதியம் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக, சுமார் 20 பேர் பலியாகி உள்ளனர். மேலும், 300க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தென் கிழக்கு ஆசிய நாடான இந்தோனேஷிய நாட்டில், அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுகிறது. ஜப்பான் நாட்டிற்கு அடுத்த படியாக இந்தோனேஷிய நாட்டில் தான் அதிக நிலநடுக்கம் ஏற்படுகிறது என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று மதியம், இந்தோனேஷிய நாட்டின் ஜாவா தீவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது, ரிக்டர் அளவு கோலில் 5.6 … Read more