எகிப்தின் 4300 ஆண்டு பழமையான தங்க மூலாம் பூசப்பட்ட மம்மி கண்டுபிடிப்பு!

தங்க முலாம் பூசப்பட்ட எகிப்திய மம்மி: பண்டைய வரலாற்றின் ஆயிரக்கணக்கான ரகசியங்கள் எகிப்தின் மணலுக்கு அடியில் புதைந்துள்ளன.   எகிப்தில் தற்போது அகழ்வாராய்ச்சியாளர்கள்  குழு தற்போது சுமார் 4300 ஆண்டுகள் பழமையான தங்கத்தால் பூசப்பட்ட மம்மியை கண்டுபிடித்துள்ளனர். 50 அடி ஆழத்தில் சுண்ணாம்புக் கல்லால் செய்யப்பட்ட சவப்பெட்டியில் காணப்படும் இந்த மம்மியின் பெயர்  ‘ஹெகாஷெப்ஸ்’ என்பதாகும். 4300 ஆண்டுகளுக்கு முன்பு எகிப்தின்  அரசின் காலவராக இருந்த மனிதனின் மம்மி தங்க முலாம் பூசப்பட்ட  நிலையில் கண்டெடுக்கப்பட்டது. முழுக்க முழுக்க … Read more

கொரோனா கட்டுப்பாடுகளில் தளர்வு; ஜப்பான் முதல்வர் அறிவிப்பு.!

கொரோனா வைரஸ் தொற்றின் பிறப்பிடமான சீனாவில், கடந்த சில நாட்களாக, கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தலைநகர் பெய்ஜிங், ஷாங்காய் உள்ளிட்ட நகரங்களில் கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுத்துள்ளது, சுகாதாரத் துறைக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதேபோல் அத்தியவசிய மருந்துகளின் தேவை அதிகரித்து வருவதால், பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. சீனாவில் கொரோனா மீண்டும் விஸ்வரூபமெடுத்து உள்ளது, இந்தியா உட்பட உலக நாடுகளை கதி … Read more

ஒரு டாலருக்கு ரூ.225 – வரலாறு காணாத வீழ்ச்சி கண்ட பாகிஸ்தான் நாணயம்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் ரூபாய் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு சரிந்துள்ளது. அதாவது பாகிஸ்தான் ரூபாய் மதிப்பில் 225 கொடுத்தால் தான் ஒரு அமெரிக்க டாலர் வாங்க முடியும். பாகிஸ்தானில் சமீப காலமாக கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தானில் பசி, பட்டினி தலை விரித்தாடுகிறது. உணவுப் பொருட்களின் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது. அந்நியச் செலாவணி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. வெளிநாட்டு டாலர்களை உள்ளூர் பணமாக மாற்ற மக்கள் கள்ளச்சந்தைகளில் குவியத் தொடங்கியுள்ளனர். மின்வெட்டு சமாளிக்க முடியாத அளவுக்கு பெரும் … Read more

பாலஸ்தீன எல்லைக்குள் நுழைந்து இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் பாலஸ்தீனர்கள் 10 பேர் பலி!

பாலஸ்தீனத்திற்குள் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில், பாலஸ்தீனர்கள் 10 பேர் உயிரிழந்தனர். 20 பேர் காயமடைந்தனர். ஜெனின் நகருக்குள், தீவிரவாத தடுப்பு நடவடிக்கை என்ற பெயரில் நுழைந்த இஸ்ரேல் ராணுவத்தினர் மீது பாலஸ்தீன ஆதரவாளர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இஸ்ரேல் ராணுவத்தினரும் பதிலடி கொடுத்ததால், இருதரப்பினருக்கும் இடையே 4 மணி நேரத்திற்கும் மேலாக சண்டை நீடித்த நிலையில், 9 பாலஸ்தீனியர்கள் பலியாகினர். இந்த தாக்குதலைக் கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது இஸ்ரேல் ராணுவத்தினர் சுட்டதில் மேலும் ஒருவர் கொல்லப்பட்டதாக, பாலஸ்தீனம் … Read more

ஆஸ்திரேலியாவில் இந்து கோவில்கள் மீது தாக்குதல்: இந்திய தூதரகம் கண்டனம்!

ஆஸ்திரேலியாவில் மூன்று இந்து கோவில்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதுடன், இந்தியாவுக்கு எதிரான வாசகங்கள் எழுதப்பட்டதற்கு இந்திய தூதரகம் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. ஆஸ்திரேலியாவில் கடந்த சில நாட்களில், மூன்று இந்து கோவில்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. அவற்றை சூறையாடியதுடன், கோவில் சுவரில், இந்தியாவுக்கு எதிரான வாசகங்களும் எழுதப்பட்டன. முதல் தாக்குதல், மெல்போர்னில் உள்ள சுவாமிநாராயண் கோவிலில் நடந்தது. இதைத் தொடர்ந்து விக்டோரியாவில் உள்ள சிவா விஷ்ணு கோவில், மெல்போர்னில் உள்ள இஸ்கான் கோவிலிலும் தாக்குதல்கள் … Read more

ஈரானில் உள்ள அஜர்பைஜான் தூதரகத்தில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பாதுகாப்பு அதிகாரி உயிரிழப்பு

ஈரானில் உள்ள அஜர்பைஜான் தூதரகத்தில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பாதுகாப்பு அதிகாரி உயிரிழந்தார். இன்று காலை தூதரகத்தில் உள்ள சோதனைச் சாவடியை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்த அந்த நபர், துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார். தாக்குதலை தடுக்க முயன்ற பாதுகாவலர்கள் இருவரும் படுகாயமடைந்தனர். உடனடியாக அந்த நபர் கைது செய்யப்பட்ட நிலையில், தாக்குதலுக்கான காரணம் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது. தூப்பாக்கிச்சூடு நடத்திய அந்த நபர், 2 குழந்தைகளுடன் தூதரகத்திற்குள் வந்ததாகவும், தனிப்பட்ட பிரச்சனைகளால் துப்பாக்கிச்சூடு நடத்தியிருக்கலாம் என்றும் … Read more

பூமிக்கு பாதிப்பை ஏற்படுத்தாமல் கடந்த ’2023 BU’ விண்கல்

நியூயார்க்: ’2023 BU’ என அழைக்கப்படும் ஒரு மினிபஸ் அளவிலான விண்கல் ஒன்று பூமியை கடக்க உள்ளதாக சில நாட்களுக்கு முன் விஞ்ஞானிகள் அறிவித்தனர். இந்த நிலையில் ’2023 BU’ விண்கல் எந்த வித ஆபத்தும் இல்லாமல் இன்று பூமியை கடந்து சென்றதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்தனர். ரஷ்யாவின் கட்டுப்பாட்டிலுள்ள, உக்ரைனின் க்ரிமியா பிராந்தியத்திலுள்ள அமெச்சூர் விண்வெளி நிபுணரான கென்னடி போரிசோ என்பவரால் கடந்த வாரம் தான் இவ்விண்கல் கண்டுபிடிக்கப்பட்டது. அதன்பின், இந்த விண்கல்லின் சுற்றுவட்டப்பாதை குறித்து … Read more

அமெரிக்க டாலருக்கு நிகரான பாகிஸ்தான் ரூபாய் மதிப்பு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு சரிவு

அமெரிக்க டாலருக்கு நிகரான பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு இதுவரை இல்லாத அளவிற்கு கடும் சரிவினைச் சந்தித்துள்ளது. நேற்றைய வர்த்தக நிலையில் டாலருக்கு நிகரான அந்நாட்டு ரூபாயின் மதிப்பு 24 ரூபாய் என்ற நிலைக்குச் சென்றது. இதையடுத்து முன் எப்போதும் இல்லாத வகையில் டாலருக்கு நிகரான மதிப்பு 225 ரூபாயாகச் சரிந்தது. இதனால் சர்வதேச நாணய நிதியம் தனது கட்டுப்பாட்டை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என பாகிஸ்தான் கோரிக்கை விடுத்துள்ளது. மேலும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 6 புள்ளி 5 … Read more

உணவில்லாமல் வாடும் மக்கள்! ஆடம்பரமாய் வாழும் நவாப்கள்! பாகிஸ்தானின் அவல நிலை!

அண்டை நாடான பாகிஸ்தானின் பொருளாதார நிலை மோசமாகி வருகிறது. நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பு குறைந்து வருகிறது. பாகிஸ்தானில் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் விண்ணை தொடுவதாலும், உணவு பொருட்கள் பற்றாக்குறை நீடிப்பதாலும், அங்கு மக்கள் உணவுக்காக அடித்திக் கொள்ளும் வீடியோக்கள் பல சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன. இந்த சூழ்நிலையில், உலக வங்கி, IMF கடன் வழங்குவார்கள் என பாகிஸ்தான் எதிர்பார்த்து காத்திருக்கிறது. இங்கு மக்களின் முக்கிய உணவாக இருக்கும் கோதுமை மாவு மற்றும் பருப்பு விலைகள் … Read more

கட்டுப்பாட்டை இழந்து ஏரியில் தலைகீழாய் கவிழ்ந்த பேருந்து… பதைபதைக்கும் சிசிடிவி காட்சி

துருக்கியில் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து ஏரிக்குள் பாய்ந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. மாலத்யாவில் 7 பயணிகளுடன் பேருந்து ஒன்றுசென்று கொண்டிருந்தது. அப்போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சாலையில் இருந்து விலகி அருகிலிருந்த ஏரிக்குள் பாய்ந்தது. பேருந்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளில் இந்த விபத்து காட்சிகள் பதிவாகி உள்ளன. Source link