பூமிக்கு பாதிப்பை ஏற்படுத்தாமல் கடந்த ’2023 BU’ விண்கல்

நியூயார்க்: ’2023 BU’ என அழைக்கப்படும் ஒரு மினிபஸ் அளவிலான விண்கல் ஒன்று பூமியை கடக்க உள்ளதாக சில நாட்களுக்கு முன் விஞ்ஞானிகள் அறிவித்தனர். இந்த நிலையில் ’2023 BU’ விண்கல் எந்த வித ஆபத்தும் இல்லாமல் இன்று பூமியை கடந்து சென்றதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்தனர். ரஷ்யாவின் கட்டுப்பாட்டிலுள்ள, உக்ரைனின் க்ரிமியா பிராந்தியத்திலுள்ள அமெச்சூர் விண்வெளி நிபுணரான கென்னடி போரிசோ என்பவரால் கடந்த வாரம் தான் இவ்விண்கல் கண்டுபிடிக்கப்பட்டது. அதன்பின், இந்த விண்கல்லின் சுற்றுவட்டப்பாதை குறித்து … Read more

அமெரிக்க டாலருக்கு நிகரான பாகிஸ்தான் ரூபாய் மதிப்பு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு சரிவு

அமெரிக்க டாலருக்கு நிகரான பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு இதுவரை இல்லாத அளவிற்கு கடும் சரிவினைச் சந்தித்துள்ளது. நேற்றைய வர்த்தக நிலையில் டாலருக்கு நிகரான அந்நாட்டு ரூபாயின் மதிப்பு 24 ரூபாய் என்ற நிலைக்குச் சென்றது. இதையடுத்து முன் எப்போதும் இல்லாத வகையில் டாலருக்கு நிகரான மதிப்பு 225 ரூபாயாகச் சரிந்தது. இதனால் சர்வதேச நாணய நிதியம் தனது கட்டுப்பாட்டை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என பாகிஸ்தான் கோரிக்கை விடுத்துள்ளது. மேலும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 6 புள்ளி 5 … Read more

உணவில்லாமல் வாடும் மக்கள்! ஆடம்பரமாய் வாழும் நவாப்கள்! பாகிஸ்தானின் அவல நிலை!

அண்டை நாடான பாகிஸ்தானின் பொருளாதார நிலை மோசமாகி வருகிறது. நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பு குறைந்து வருகிறது. பாகிஸ்தானில் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் விண்ணை தொடுவதாலும், உணவு பொருட்கள் பற்றாக்குறை நீடிப்பதாலும், அங்கு மக்கள் உணவுக்காக அடித்திக் கொள்ளும் வீடியோக்கள் பல சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன. இந்த சூழ்நிலையில், உலக வங்கி, IMF கடன் வழங்குவார்கள் என பாகிஸ்தான் எதிர்பார்த்து காத்திருக்கிறது. இங்கு மக்களின் முக்கிய உணவாக இருக்கும் கோதுமை மாவு மற்றும் பருப்பு விலைகள் … Read more

கட்டுப்பாட்டை இழந்து ஏரியில் தலைகீழாய் கவிழ்ந்த பேருந்து… பதைபதைக்கும் சிசிடிவி காட்சி

துருக்கியில் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து ஏரிக்குள் பாய்ந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. மாலத்யாவில் 7 பயணிகளுடன் பேருந்து ஒன்றுசென்று கொண்டிருந்தது. அப்போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சாலையில் இருந்து விலகி அருகிலிருந்த ஏரிக்குள் பாய்ந்தது. பேருந்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளில் இந்த விபத்து காட்சிகள் பதிவாகி உள்ளன. Source link

உக்ரைனில் ரஷ்யா நடத்திய தாக்குதலில் 11 பேர் உயிரிழந்ததாக அதிபர் ஜெலன்ஸ்கி அறிவிப்பு

உக்ரைனில் ரஷ்யா நடத்திய தாக்குதலில் 11 பேர் உயிரிழந்ததாக அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் நடத்தப்பட்ட தாக்குதல்களில் 11 பிராந்தியங்களில் 35 கட்டடங்கள் மற்றும் மின்நிலையங்கள் சேதமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். ரஷ்யா தாக்குதல் நடத்தும் முன்னதாக வான்வழி தாக்குதலுக்கான எச்சரிக்கை ஒலித்ததால் கீவ் பொதுமக்கள் ஏராளமானோர் மெட்ரோ ரயில் நிலையத்தில் தஞ்சமடைந்தனர். ரஷ்யா வீசிய 55 ஏவுகணைகளில், ஹைப்பர்சோனிக் ஏவுகணை உள்பட 47 ஏவுகணைகள் மற்றும் 24 ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக உக்ரைன் … Read more

பாகிஸ்தான் நாணய மதிப்பில் வரலாறு காணாத வீழிச்சி: பொருளாதார நெருக்கடியில் பாகிஸ்தான்

புதுடெல்லி: நமது அண்டை நாடான பாகிஸ்தானில் பல பிரச்சனைகள் தினம் தினம் முளைத்து வருகின்றன. விலைவாசி உயர்வு, நிலையற்ற பொருளாதாரம்,  பணவீக்கம், உறுதியற்ற அரசியல் தலைமை என ஏகப்பட்ட இன்னல்களுக்கு மத்தியில் பாகிஸ்தான் சிக்கித் தவிக்கின்றது. இந்த நிலையில், வியாழக்கிழமை அமெரிக்க டாலருக்கு நிகரான பாகிஸ்தானின் நாணய மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சியை அடைந்தது. ஒரு டாலருக்கு நிகரான பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு ரூ. 255 ஆக குறைந்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.  சர்வதேச நாணய … Read more

கடல் நீர்மட்டம் கணித்ததை விட வேகமாக அதிகரித்து வருகிறது…. நாசா விண்கலம் நடத்திய ஆய்வில் கண்டுபிடிப்பு

உலகில் கடல் நீர்மட்டம் ஏற்கனவே கணித்ததை விட வேகமாக அதிகரித்து வருவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். 2018ல் செலுத்தப்பட்ட ICESat-2  என்ற நாசா செயற்கைக்கோள் அளவீடுகளைக் கொண்டு கடல் நீர்மட்டம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில், விஞ்ஞானிகள் நினைத்ததை விட கடலுக்கும் நிலப்பரப்புக்குமான உயரம் குறைவாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடல் நீர்மட்டம் இரண்டு மீட்டர் அதிகரிக்கும் பட்சத்தில் பாங்காக்கின் பெரும்பகுதியையும், உலகம் முழுவதும் 24 கோடி மக்களையும் கடல் மட்டத்திற்கு கீழே வைக்கக்கூடும் எனத் தெரியவந்துள்ளது.  Source … Read more

1000 டன் அளவிற்கு பெயர்ந்து விழுந்த பிரமாண்ட பாறை

இங்கிலாந்தில் உள்ள கடற்கரையில் ஆயிரம் டன் எடை கொண்ட பழங்காலப் பாறை பெயர்ந்து விழுந்தது. டோர்செட் என்ற இடத்தில் உள்ள ஜூராசிக் கடற்கரையில் பிரமாண்ட பாறை அமைந்துள்ளது. மேற்கு விரிகுடா என்று அழைக்கப்படும் இந்த இடத்தில் பாறையில் விரிசல் ஏற்பட்டது. தொடர்ந்து சில நிமிடங்களில் 150 அடி உயரத்திற்கு பாறை பெயர்ந்து விழுந்தது. பாறை விழுந்த இடத்தில் பொதுமக்கள் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. பாறைக்கு அடியில் நீரோட்டம் அதிகமாக இருந்ததால் இந்தச் சரிவு ஏற்பட்டிருக்கலாம் … Read more

ஒசாமா பின் லேடனைப் போன்றே அதிரடியாய் ISIS தீவிரவாதத்தலைவரை சுட்டுக் கொன்ற அமெரிக்கா

சோமாலியாவில் அமெரிக்கா நடத்திய தாக்குதலில் இஸ்லாமிய அரசின் மூத்தத் தலைவரை அமெரிக்க ராணுவம் கொன்றது. ஆப்கானிஸ்தானைக் கட்டுப்படுத்தும் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் கிளைக்கும் நிதி உதவி செய்துவந்தார் பிலால் அல்-சூடானி. ஆப்ரிக்காவில் உள்ள ஐஎஸ் கிளைகளுக்கு நிதியுதவி அளித்து வந்தவர் அல்ப்சூடானி என்று பெயர் வெளியிட விரும்பாத அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்தார். வடக்கு சோமாலியாவில் உள்ள தனது மலைத் தளத்தில் இருந்து அல்-சூடானி இயங்கி வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  நேற்று, (ஜனவரி 26, வியாழன்) அமெரிக்க அதிபர் ஜோ … Read more

தென்கொரியா நோக்கிச் சென்ற சரக்குக் கப்பல் மூழ்கியதில் 8 பேர் உயிரிழந்ததாக அறிவிப்பு

ஜப்பான் மற்றும் தென் கொரியா இடையேயான கடல் பகுதியில் சரக்கு கப்பல் மூழ்கியதில் குறைந்தது 8 பேர் உயிரிழந்ததாக சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஜின் தியான் என்று பெயரிடப்பட்ட சரக்குக் கப்பலில் சீனாவைச் சேர்ந்த 14 பேரும், மியான்மரைச் சேர்ந்த 8 பேரும் இருந்ததாகக் கூறப்படுகிறது. தென் கொரியா நோக்கிச் சென்ற இந்தக் கப்பல் ஜப்பானின் நாகசாகிக்கு தென்மேற்கே, கடந்த புதன்கிழமை விபத்தில் சிக்கியது. இதையடுத்து மீட்புப் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், கப்பல் மூழ்கியதில் 8 … Read more