FBI சோதனைக்கு அமெரிக்க அதிபர் ஜோ பிடன் "முழு ஆதரவு"! ரகசிய ஆவணங்கள் கண்டுபிடிப்பு

அமெரிக்க அதிபர் ஜோ பிடனின் வீட்டில் FBI சோதனை நடத்தி வருகிறது. டெலாவேரில் உள்ள அவரது வீட்டில் தற்போது சோதனை நடத்தி வரும் எஃப்.பி.ஐ, இதற்கு முன்னதாக, ஜோ பிடனின் வாஷிங்டன், டி.சி.யில் உள்ள பிடனின் வில்மிங்டன் குடியிருப்பு மற்றும் திங்க் டேங்க் அலுவலகம் ஆகியவற்றில் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது. அந்த சோதனைகளின்போது வகைப்படுத்தப்பட்ட அடையாளங்களுடன் கூடிய ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.  ஃபெடரல் பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷன் (Federal Bureau of Investigation), அமெரிக்க ஜோ பிடனின் டெலாவேரில் உள்ள … Read more

பயங்கரவாதத்தை நாங்கள் விதைத்தோம்; பாகிஸ்தான் அமைச்சர் ஒப்புதல்.!

கடந்த ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தானில் கொல்லப்பட்ட டிடிபி கமாண்டர் உமர் காலித் குராசானிக்கு பழிவாங்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாகம், பாகிஸ்தானின் வடமேற்கு பெஷாவர் நகரில் உள்ள உயர் பாதுகாப்பு மண்டலத்தில் நேற்று முன் தின பிரார்த்தனையின் போது வழிபாட்டாளர்கள் நிரம்பியிருந்த மசூதிக்குள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது. மதியம் 1.40 மணியளவில் போலிஸ் லைன்ஸ் பகுதியில் உள்ள மசூதிக்குள் காவல்துறை, ராணுவம் மற்றும் வெடிகுண்டு செயலிழக்கும் படையினர் உட்பட 400க்கும் மேற்பட்ட காவல்துறையைச் சேர்ந்த வழிபாட்டாளர்கள் சுஹ்ர் (பிற்பகல்) … Read more

பாகிஸ்தான் குண்டுவெடிப்பில் 100 பேர் பலி; காவல்துறையை குறிவைத்து தாக்குதல்.!

பாகிஸ்தானின் அமைதியான வடமேற்கு பெஷாவர் நகரில் உள்ள உயர் பாதுகாப்பு மண்டலத்தில் நேற்று முன் தின பிரார்த்தனையின் போது வழிபாட்டாளர்கள் நிரம்பியிருந்த மசூதிக்குள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது. மதியம் 1.40 மணியளவில் போலிஸ் லைன்ஸ் பகுதியில் உள்ள மசூதிக்குள் காவல்துறை, ராணுவம் மற்றும் வெடிகுண்டு செயலிழக்கும் படையினர் உட்பட 400க்கும் மேற்பட்ட காவல்துறையைச் சேர்ந்த வழிபாட்டாளர்கள் சுஹ்ர் (பிற்பகல்) தொழுகையை நடத்திக் கொண்டிருந்த போது, சக்திவாய்ந்த குண்டுவெடிப்பு ஏற்பட்டது. முன் வரிசையில் இருந்த தற்கொலை குண்டுதாரி தன்னைத்தானே … Read more

ஈரான்: பொதுவெளியில் நடனம் ஆடிய இணையருக்கு 10 ஆண்டு சிறை

தெஹ்ரான்: பொதுவெளியில் நடனம் ஆடிய இணையருக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனையை ஈரான் நீதிமன்றம் விதித்துள்ளது. ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள பொது சதுக்கத்தின் முன் அஸ்தியாஜ் ஹகிகி மற்றும் அவரது வருங்கால கணவர் அமீர் முகமது அஹ்மதி இருவரும் நடனம் ஆடி வீடியோ பதிவு செய்து வெளியிட்டனர். மேலும், இந்த வீடியோவில் அஸ்தியாஜ், ஹிஜாப் அணியாமல் இருந்தார். ஈரானில் பெண்கள் பொதுவெளியில் நடனம் ஆடக் கூடாது என்று கூறப்படும் நிலையில், அஸ்தியாஜ் மற்றும் அமீர் முகமது … Read more

பொது வெளியில் நடனமாடிய ஈரானிய இளம் தம்பதியினர் 10 ஆண்டு சிறைத்தண்டனை!

ஈரானின் ஆடைக் கட்டுப்பாடு மற்றும் ‘ஒழுக்க’ சட்டங்கள் மிகவும் கடுமையானவை.  ஹிஜாப் கட்டுப்பாடுகளை மீறும் பெண்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஈரானில் சரியாக ஹிஜாப் அணியாததால் மஹ்சா அமினி என்ற இளம்பெண்ணை காவல் துறையினர் சரமாரியாக தாக்கி, இளம் பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஈரானின் “கலாச்சார காவல்துறை”யின் காவலில் இருந்த போது மஹ்சா அமினி இறந்ததை அடுத்து, நாடு தழுவிய போராட்டங்கள் வெடித்தன. இந்நிலையில், பெண்களின் உரிமைகளுக்காக நாட்டின் புரட்சியை ஊக்குவிப்பதற்காக … Read more

ஈரானில் முக்கிய நினைவுச் சின்னத்தின் முன்பு நடனமாடிய ஜோடிக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை!

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள முக்கிய நினைவுச் சின்னத்தின் முன்பு நடனமாடிய ஜோடிக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பொது இடங்களில் நடனமாட அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில், தெஹ்ரானின் நினைவுச் சின்னமான ஆசாதி கோபுரம் முன்பு, விதிகளை மீறி நடனமாடி சமூக வலைதளத்தில் பதிவிட்டதாக இருவர் கைது செய்யப்பட்டனர். இவர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, தலா 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. Source link

சுகாதார அவசரநிலை தொடர்கிறது கொரோனா பரவல் குறித்து எச்சரிக்கை| Health Emergency Continues Warning of Corona Spread

ஜெனீவா: ‘நான்காவது ஆண்டுக்குள் அடி எடுத்தும் வைக்கும் கொரோனா வைரஸ், உலகளாவிய சுகாதார அவசரநிலையாக தொடர்கிறது. இந்த நோய்த் தொற்று நீண்டகாலத்துக்கு மனிதர்கள் மற்றும் விலங்குகளிடம் நிரந்தர பாதிப்புகளை ஏற்படுத்தும்’ என, உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. நம் அண்டை நாடான சீனாவின் வூஹானில், 2019 டிச., மாதம் முதல் முறையாக கொரோனா வைரஸ் தென்பட்டது. இது, உலகெங்கும் பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை, உலகெங்கும், 75.25 கோடி பேருக்கு நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளது. இதில், … Read more

தென்மேற்கு இங்கிலாந்தில் வானில் வர்ணஜாலம் நிகழ்த்திய ஸ்டார்லிங் பறவைகள்!

தென்மேற்கு இங்கிலாந்தில் ஏராளமான ஸ்டார்லிங் பறவைகள் ஒன்றிணைந்து வானில் சாகச நடனத்தை அரங்கேற்றின. டெவ்க்ஸ்பரி நகருக்கு மேலே ஆயிரக்கணக்கான பறவைகள் ஒன்றிணைந்து விதவிதமான வடிவில் பறந்தன. குறிப்பிட்ட பகுதியில் தமக்கு அச்சுறுத்தல் உள்ளது எனத் தெரிந்ததும், ஸ்டார்லிங் பறவைகள் தங்களை தற்காத்துக் கொள்ள ஒரே நேரத்தில் வானில் எழுகின்றன என பறவை ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். Source link

இலங்கை ஈஸ்டர் தின குண்டு வெடிப்பு மன்னிப்பு கோரினார் மாஜி அதிபர்| இலங்கை ‘ஈஸ்டர்’ தின குண்டு வெடிப்பு மன்னிப்பு கோரினார் ‘மாஜி’ அதிபர்

கொழும்பு, இலங்கையில், 2019 ‘ஈஸ்டர்’ தினத்தன்று நடந்த மனித வெடிகுண்டு தாக்குதல்களில் 270 பேர் உயரிழந்த சம்பவத்துக்கு முன்னாள் அதிபர் மைத்ரிபால சிறிசேன மன்னிப்பு கோரினார். நம் அண்டை நாடான இலங்கையில், 2019 ஏப்., 21ல் நடந்த ஈஸ்டர் தின கொண்டாட்டங்களின் போது, மூன்று தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. இதில், 11 இந்தியர்கள் உட்பட 270 பேர் உயிரிழந்தனர்; 500க்கும் அதிகமானோர் காயம் அடைந்தனர். ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய உள்நாட்டைச் … Read more

கோடிகளில் போனஸ்..!! – ஊழியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய சீன நிறுவனம்: இணையத்தில் வைரல்

பீஜிங், கொரோனா நெருக்கடி மற்றும் உக்ரைன் போரால் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்த நிலையை காரணம் காட்டி உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களான கூகுள், பேஸ்புக், டுவிட்டர், அமேசான், மைக்ரோசாப்ட் போன்ற நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை கொத்து, கொத்தாக பணி நீக்கம் செய்து, ஊதியத்தையும் குறைத்து வருகின்றன. இந்த சூழலில் சீனாவைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று தனது ஊழியர்களுக்கு கோடிகளில் போனசையும் கொடுத்து, சம்பள உயர்வையும் வழங்கியிருக்கும் நிகழ்வு பலரையும் வியப்பில் புருவம் உயர்த்த வைத்துள்ளது. வருவாய் 23 … Read more