2019ல் இந்தியாவும், பாக்.,கும் அணு ஆயுத போருக்கு தயாரானதா? அமெரிக்க மாஜி அமைச்சர் அதிர்ச்சி தகவல்| India informed me Pak was preparing for nuclear attack post-Balakot strike, claims Pompeo

வாஷிங்டன்: கடந்த 2019 ல் இந்தியாவும், பாகிஸ்தானும் அணு ஆயுத போரை நடத்த இருந்ததாக அமெரிக்க வெளியுறவுத்துறை முன்னாள் அமைச்சர் மைக் பாம்பியோ, எழுதிய புத்தகத்தில் கூறியுள்ளார். கடந்த 2019 ம் ஆண்டு பிப்., மாதம் பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாத அமைப்பு காஷ்மீரின் புல்வாமாவில், துணை ராணுவ வீரர்கள் சென்ற பஸ்சை குறிவைத்து தாக்குதல் நடத்தினர். இதில் 40 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதற்கு பதிலடியாக, பாகிஸ்தானின் பாபாகோட் பகுதியில் உள்ள ஜெய்ஷ் … Read more

அமெரிக்காவில் இந்தியர்கள் மீது துப்பாக்கிச்சூடு.!

அமெரிக்காவில் துப்பாக்கி வன்முறை என்பது ஒரு பெரிய பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது. துப்பாக்கி வன்முறை காப்பக இணையதளத்தின்படி, கடந்த ஆண்டில் மட்டும் பொதுவெளியில் 647 துப்பாக்கிச் சூடுகள் நடந்துள்ளது. அந்தவகையில் அமெரிக்காவில் கடந்த ஆண்டு மட்டும் 44 ஆயிரம் பேர் துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் பள்ளிக்கூட துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பெருகி வருகின்றன. கடந்த மே மாதம் டெக்சாஸில் 18 வயது இளைஞன் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 19 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். அதேபோல் … Read more

நியூசிலாந்து புதிய பிரதமராக 44 வயது கிறிஸ் ஹிப்கின்ஸ் தேர்வு| 44-year-old Chris Hipkins has been chosen as the new Prime Minister of New Zealand

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வெலிங்டன்: நியூசிலாந்து புதிய பிரதமராக கிறிஸ் ஹிப்கின்ஸ் தேர்வு பெற்றார். தென்மேற்கு பசிபிக் பெருங்கடலில் உள்ள தீவு நாடான நியூசிலாந்தின் பிரதமராக, தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த ஜெசிந்தா ஆர்டன். 42, கடந்த 2017 முதல் பிரதமராக இருந்தார். கடந்த வாரம் தன் பதவியை ராஜினாமா செய்வதாக அதிரடியாக அறிவித்தார். வரும், பிப்., 7ம் தேதி பதவியில் இருந்து விலகுவதாகவும், வரும் அக். பொதுத் தேர்தல் நடத்தப்படும் என்றும் அவர் அறிவித்தார். … Read more

பயிற்சி விமானம் கட்டுப்பாட்டை இழந்து அதிவேகமாக கீழே விழுந்ததால் 2 விமானிகள் பலி..!

பிலிப்பைன்ஸின் படான் மாகாணத்தில், பயிற்சி விமானம் வயல்வெளியில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானதில் விமானப்படை விமானிகள் 2 பேர் உயிரிழந்தனர். SF-260 TP Marchetti ரக விமானம், சாங்க்லே விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட 40 நிமிடங்களில் விபத்து நேர்ந்துள்ளது.  அந்த விமானம் கட்டுப்பாட்டை இழந்து அதிவேகமாக கீழே விழுந்ததாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.  Source link

முன்னாள் அமெரிக்க தூதரின் இழிவான கருத்து; அமைச்சர் ஜெய்சங்கர் கண்டனம்.!

முன்னாள் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மைக் பாம்பியோ, சுஷ்மா ஸ்வராஜை ஒரு முக்கியமான அரசியல் தலைவராக பார்க்கவில்லை என்று கூறியுள்ளதற்கு, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கண்டனம் தெரிவித்துள்ளார். மைக் பாம்பியோ எழுதி நேற்று வெளியான ‘நெவர் கிவ் அன் இன்ச்: ஃபைட்டிங் ஃபார் தி அமெரிக்கா ஐ லவ்’ என்ற அவரது சமீபத்திய புத்தகத்தில், பாம்பியோ சுஷ்மா ஸ்வராஜை “கூஃப்பால்” மற்றும் “ஹார்ட்லேண்ட் அரசியல் ஹேக்” என்ற அமெரிக்க ஸ்லாங் வார்த்தைகளைப் பயன்படுத்தி சற்றே இழிவாக … Read more

உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்கும் போர் டாங்கிகள் எரிக்கப்படும் – ரஷ்யா எச்சரிக்கை

உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்கும் போர் டாங்கிகள் எரிக்கப்படும் என ரஷ்யா எச்சரித்துள்ளது. M1 ஆப்ராம்ஸ் போர் டாங்கிகளை உக்ரைனுக்கு வழங்க தயாராக இருப்பதாக அமெரிக்க அதிகாரிகள் நேற்று தெரிவித்திருந்தனர். இதற்கு பதிலளித்துள்ள ரஷ்ய அதிபர் அலுவலக செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், அமெரிக்கா உக்ரைனுக்கு ஆப்ராம்ஸ் போர் டாங்கிகள் வழங்குவது உறுதிப்படுத்தப்படவில்லை என்றாலும், அவை பணத்தை வீணடிக்கும் செயல் என்றும், மற்ற ஆயுதங்களை போலவே இந்த டாங்கிகளும் எரியும் என்றும் டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்தார். Source link

நியூசிலாந்து புதிய பிரதமராக கிறிஸ் ஹிப்கின்ஸ் பதவியேற்பு!

நியூசிலாந்து நாட்டின் 41வது பிரதமராக கிறிஸ் ஹிப்கின்ஸ் பதவி ஏற்றுக் கொண்டார். பிரதமர் பதவியில் இருந்து ஜெசிந்தா ஆர்டெர்ன் விலகியதை அடுத்து புதிய பிரதமராக பதவியேற்றுக் கொண்டார். கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் நியூசிலாந்தின் பிரதமராக இருந்து வந்தவர் ஜெசிந்தா ஆர்டெர்ன். இந்நிலையில் தனது பிரதமர் பதவியை ராஜினமா செய்யப் போவதாக கடந்த வியாழக்கிழமை அன்று திடீரென ஜெசிந்தா ஆர்டெர்ன் அறிவித்தார். “நியூசிலாந்து தலைமை ஏற்று நடத்த இனியும் தன்னால் முடியாது என்றும், அதற்கான ஆற்றல் … Read more

ஜெர்மனியில் விமான நிலைய ஊழியர்கள் வேலை நிறுத்தம்.. 35000 பயணிகள் அவதி..!

ஜெர்மனியில் விமான நிலைய ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் 300 க்கும் மேற்பட்ட விமானங்கள் புறப்படுவதும், தரையிறங்குவதும் தடைபட்டது. நடப்பாண்டில் அங்கு 6 சதவீதம் வரை விலைவாசி அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், தலைநகர் பெர்லினிலுள்ள சர்வதேச விமான நிலையத்தில் பணியாற்றும் ஊழியர்கள், 44 ஆயிரம் ரூபாய் கூடுதலாக வழங்கக்கோரி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். அதிகாலை மூன்றரை மணிக்கு தொடங்கிய வேலை நிறுத்தத்தால் 35 ஆயிரம் பயணிகள் பாதிக்கப்பட்டனர். Source link

வடகொரியாவில் கரோனா பரவல்? – ஊரடங்கு அறிவிப்பின் பின்னணி

பியோங்யாங்: மூச்சுத் திணறல் தொடர்பான நோய்கள் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து வடகொரிய தலைநகரில் 5 நாட்களுக்கு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக வடகொரிய தலைநகர் பியோங்யாங்கில் சுவாச நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேரும் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சிகிச்சை பெறும் அனைவரும் கடுமையான சளியினால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், வடகொரியா இதனை கரோனா என்று குறிப்பிடவில்லை. எனினும், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை கருதி அங்கு 5 நாட்களுக்கு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் வரும் ஞாயிற்றுக்கிழமை வரை … Read more

5 நாட்களுக்கு லாக்டவுன் அமல்… விநோத சுவாச பாதிப்பு- கலங்கும் வடகொரியா!

உலகம் கொரோனா வைரஸ் பிடியில் இருந்து விடுபட்டதாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில், உருமாறிய வைரஸ்கள் வரிசையாக படையெடுத்து வருகின்றன. இதனால் மீண்டும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக வடகொரிய நாட்டின் தலைநகர் பியோங்யாங்-கில் பலருக்கும் சுவாசப் பாதிப்புகள் உண்டாகியிருக்கிறது. இது வேகமாக பிறருக்கும் பரவுவதால் அச்சம் ஏற்பட்டுள்ளது. 5 நாட்கள் ஊரடங்கு இதனை கொரோனா பாதிப்புகள் என்று குறிப்பிட்டு சொல்ல முடியவில்லை. இருப்பினும் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு முடுக்கி விட்டுள்ளது. அதன்படி, வரும் ஞாயிறு … Read more