உக்ரைனுக்கு 3 பில்லியன் டாலர் மதிப்பில் ஆயுதங்கள்; அமெரிக்கா அறிவிப்பு.!

பல ஆண்டுகளாக உக்ரைன் நாட்டை ரஷ்யா சொந்தம் கொண்டாடி வருகிறது. உக்ரைன் நாட்டின் கலாச்சாரம், மொழி, பண்பாடு உள்ளிட்டவை ஒத்துப் போவதால், அந்நாடு, தங்களுக்கு தான் சொந்தம் என, ரஷ்யா உரிமை கோரி வருகிறது. ஆனால் இதற்கு உக்ரைன் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது. இதற்கிடையே, அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் அடங்கிய நேட்டோ அமைப்பில் இணைய, கடந்த ஜனவரி மாத தொடக்கத்தில், உக்ரைன் நாட்டு அதிபர் வோலோமிடிர் ஜெலன்ஸ்கி சம்மதம் தெரிவித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த … Read more

தண்ணீருக்கு மேல் பறப்பதுபோல் செல்லும் மின்சார படகு அமெரிக்காவில் அறிமுகம்..!

ஹைட்ரோபாயில் தொழில்நுட்பம் மூலம், தண்ணீருக்கு மேல் பறப்பதுபோல் தோற்றமளிக்கும் அதிவேக மின்சார படகு அமெரிக்காவில் நடைபெற்றுவரும் மின்னணு சாதன கண்காட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மின்சார கார்களுடன் ஒப்பிடுகையில் மின்சார படகுகளுக்கு 15 மடங்கு அதிக ஆற்றல் தேவைப்படுவதால் அவற்றின் புழக்கம் குறைவாக உள்ளது. மேலும், படகுகள் தண்ணீரை கிழித்துக்கொண்டு செல்லும்போது முன்புறத்தில் தண்ணீர் மோதி வேகம் குறைவதை தவிர்ப்பதற்காக, படகுக்கு அடியில் விமான இறக்கைகள் போல் காட்சியளிக்கும் ஹைட்ரோபாயில்-கள்  பொருத்தப்படுகின்றன. இவ்வாறு ஹைட்ரோபாயில் பொருத்தப்பட்டு, மணிக்கு 37 கிலோமீட்டர் … Read more

"இளவரசர் ஹாரி அப்பாவி ஆப்கன் மக்களை கொன்றிருக்கிறார்" – தலிபான்கள் குற்றச்சாட்டு

காபூல்: போர்ப் பயிற்சி என்ற பெயரில் ஹாரி அப்பாவி ஆப்கன் மக்களை கொன்றிருக்கிறார் என்று தலிபான்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இங்கிலாந்து இளவரசர் ஹாரி, தனது ராணுவ பயிற்சிகளை 20 ஆண்டுகளாக போர் நடந்து கொண்டிருந்த ஆப்கனில் மேற்கொண்டார். இந்த நிலையில் ராணுவ பயிற்சி தொடர்பான தனது அனுபவங்களை ஹாரி தான் எழுதியுள்ள சுயசரிதை புத்தகத்தில் குறிப்பிட்டு இருக்கிறார். அந்த வகையில் நேர்காணல் ஒன்றில் ஆப்கன் போரின் போது முஜாகீதின் அமைப்பை சேர்ந்த 25 பேரை கொன்றதாக ஹாரி தெரிவித்திருந்தார். … Read more

அலிபாபாவை தொடர்ந்து Ant குழுமத்தையும் இழக்கும் Jack Ma; தொடரும் சீனாவின் அடக்குமுறை!

Jack Ma: ஒரு காலத்தில் ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரராக இருந்த ஜாக் மாவுவின் நெருக்கடிகள் மேலும் மேலும் அதிகரித்து வருகின்றன. நீண்ட நாட்களாக அவர் காணாமல் போனதாக செய்திகள் வெளியாகி வந்த நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அவர் ஜப்பானில் வசிப்பதாக செய்தி வந்தது. தற்போது ஜாக் மாவுக்கு மிகப்பெரிய அடியாக மற்றொரு ஒரு செய்தி வந்துள்ளது. ஆண்ட் குழும நிறுவனர் ஜாக் மா தனது சொந்த நிறுவனத்தின் கட்டுப்பாட்டை இழந்துள்ளார். இப்போது ஆண்ட்  குழுமத்தில் … Read more

பாகிஸ்தானில் பயங்கரவாதத்தை ஒழிக்க மாகாண அரசுகள் ஒத்துழைக்க வேண்டும்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் பயங்கரவாதத்தை ஒழிக்க மாகாண அரசுகள் ஒத்துழைக்க வேண்டும் என்று அந்நாட்டு பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் வலியுறுத்தி உள்ளார். தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற தேசிய பாதுகாப்பு தொடர்பான மாநாட்டுக்கு தலைமை வகித்துப் பேசிய ஷெபாஸ் ஷெரீப், ”பாகிஸ்தானில் பயங்கரவாதம் மீண்டும் தலையெடுத்துள்ளது. அதனை ஒழிக்க அனைத்து மாகாண அரசுகளின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம். பயங்கரவாதிகளாலும், போராளிகளாலும் நாட்டின் உறுதியை ஒருபோதும் அசைக்க முடியாது. நாட்டின் பாதுகாப்பிற்காக எத்தகைய தியாகத்தையும் செய்ய அரசு தயாராக உள்ளது” என … Read more

ஆசிரியரை துப்பாக்கியால் சுட்ட 6 வயது மாணவன்: அமெரிக்காவில் பரபரப்பு!

அமெரிக்காவின் விர்ஜினியா மாகாணத்தில் ரிச்நெக் மழலையர் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் பயிலும் ஆறு வயது மாணவன் ஒருவன் வகுப்பறைக்குள் வைத்து 30 வயதான ஆசிரியை ஒருவரை சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுள்ளான். இதில் அந்த ஆசிரியை பலத்த காயமடைந்தார். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், துப்பாக்கி தோட்டாக்களால் துளைக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்த ஆசிரியையை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்ததனர். அங்கு அவருக்கு உயிர் காக்கும் தீவிர சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இதனிடையே, அந்த மாணவனை … Read more

அமெரிக்காவில் 6 வயது பள்ளிச் சிறுவன் துப்பாக்கிச் சூடு: ஆசிரியர் கவலைக்கிடம்

வர்ஜினியா: அமெரிக்காவில் 6 வயது பள்ளிச் சிறுவன் ஒருவன் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஆசிரியர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வேறு யாருக்கும் காயமில்லை. சம்பந்தப்பட்ட சிறுவனை காவல்துறை விசாரணைக்காக அழைத்துச் சென்றது. இந்த சம்பவம் வர்ஜினியா மாகாணத்தில் ரிச்நெக் மழலையர் பள்ளியில் நடந்துள்ளது. இது குறித்து காவல்துறை தலைவர் ஸ்டீவ் ட்ரூ கூறுகையில், “இந்த சம்பவம் எங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சம்பந்தப்பட்ட சிறுவனுக்கு 6 வயது தான் ஆகிறது. அவன் வகுப்பறையில் திடீரென்று துப்பாக்கியை எடுத்து … Read more

உக்ரைனுக்கு அமெரிக்கா ராணுவ உதவி | $3 Billion in Military Aid to Ukraine: US Announces

வாஷிங்டன்: உக்ரைனுக்கு 3 பில்லியன் டாலர் மதிப்பிலான ராணுவ தளவாடங்கள் வழங்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது, ரஷ்யா கடந்த, பிப்., 25ல் போர் தொடுத்தது. கடந்த சில மாதங்களாக போர் நீடித்து வருகிறது. ரஷ்யப் படைகளுக்கு எதிராக உக்ரைன் ராணுவம் கடும் எதிர்தாக்குதல் நடத்தி வருகிறது. போரை முடிவுக்கு கொண்டுவர இந்தியா உள்ளிட்ட நாடுகள் முயற்சித்து வருகின்றன. போரில் உக்ரைனுக்கு ஆதரவு அளித்து, அமெரிக்கா ஆயுதங்களை வழங்கி வருகிறது. இந்நிலையில், … Read more

பூமியை தாக்க வரும் செயற்கைகோள்… உதிரிபாகங்கள் மனிதர்கள் மீது விழுமா?

ERBS Satellite : 38 ஆண்டுகள் பழமைவாய்ந்த நாசா செயற்கைக்கோள் தற்போது செயலிழந்துள்ளது. அந்த செயற்கைகோள்  விண்ணில் இருந்து பூமிக்கு விழ உள்ளது. இந்நிலையில், செயற்கைகோளின் உதிரிபாகங்கள் மனிதர்கள் வசிக்கும் பகுதியில் விழுந்துவிடுமோ என்ற அச்சம் நிலவியது. ஆனால், அதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு என்று நாசா நேற்று தெரிவித்துள்ளது.  5,400 பவுண்டு (2,450 கிலோ) செயற்கைக்கோளில் பெரும்பாலானவை மீண்டும் பூமிக்கு நுழைந்தவுடன் எரிந்துவிடும் என்று நாசா தெரிவித்துள்ளது. ஆனால் சில துண்டுகள் எரியாமல் பூமியில் விழும் … Read more

மனைவி விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்ததால் விரக்தியில் குடும்பத்தினர் 7 பேரை சுட்டு கொன்ற கொடூர கணவன்..!

அமெரிக்காவின் உட்டா மாகாணத்தில் மனைவி விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்ததால் விரக்தியடைந்த கணவர் தனது குழந்தைகள் 5 பேர், மனைவி மற்றும் மாமியார் என 7 பேரை துப்பாக்கியால் சுட்டு கொலைசெய்துவிட்டு தானும் தற்கொலை செய்துள்ளார். உட்டாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள ஏனோக் நகரத்தில் உள்ள ஒரு வீட்டில் இருந்து நீண்ட நாட்களாக யாரும் வெளியே வராததால் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் வந்து வீட்டில் சென்று பார்த்ததில் 5 சிறுவர்கள் உள்பட 8 பேர் … Read more