50-ஆண்டுகளில் மிக மோசம்: சீன பொருளாதார வளர்ச்சி 3 சதவீதமாக சரிவு..!!

பீஜிங், சீனாவில் உருவான கொரோனா வைரஸ் பெருந்தொற்று நோய், உலக பொருளாதார வளர்ச்சியை பதம் பார்த்தது. இதில் உலகின் 2-வது பெரிய பொருளாதார நாடான சீனாவும் தப்பவில்லை. அங்கு கடந்த 2022-ம் ஆண்டின் பொருளாதார வளர்ச்சி 3 சதவீத அளவுக்கு சுருங்கிப்போய் விட்டது. இது கடந்த 50 ஆண்டுகளில் காணப்பட்டுள்ள 2-வது மோசமான பொருளாதார வளர்ச்சி ஆகும். 2022-ம் ஆண்டில் சீனாவின் மொத்த பொருளாதார மதிப்பு 17.94 டிரில்லியன் அமெரிக்க டாலர் ஆகும். (ஒரு டிரில்லியன் என்பது … Read more

ஆஸ்திரேலியாவில் உள்ள இந்து கோவில் மீது மீண்டும் தாக்குதல்

மெல்போர்ன், ஆஸ்திரேலியாவில் உள்ள இந்து கோவில் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஒரு வாரத்திற்குள் நடந்த இரண்டாவது தாக்குதல் இதுவாகும். கேரம் டவுன்ஸ் நகரில் உள்ள சிவ விஷ்ணு கோவில் மீது நேற்று தாக்குதல் நடத்திய நபர்கள், இந்தியாவுக்கு எதிரான வாசகங்களை எழுதி உள்ளதாக ஆஸ்திரேலிய இணையதளத்தில் செய்தி வெளியாகி உள்ளது. தமிழர்களால் மூன்று நாட்கள் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், பக்தர்கள் தரிசனம் செய்ய வந்தபோது, கோவில் மீது … Read more

நேபாள விமான விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 71 ஆக உயர்வு

காத்மண்டு, நேபாள தலைநகர் காட்மாண்டுவில் இருந்து சுற்றுலா தலமான பொக்காராவுக்கு நேற்று முன் தினம் காலை 10.33 மணிக்கு ‘எட்டி ஏர்லைன்ஸ்’ விமானம் புறப்பட்டு சென்றது. அதில் 68 பயணிகள் மற்றும் 4 விமான ஊழியர்கள் என மொத்தம் 72 பேர் பயணம் செய்தனர். அந்த விமானம் காலை 11 மணிக்கு பொக்காரா விமான நிலையத்தில் தரையிறங்க முயன்றது. பொக்காரா புதிய விமான நிலையம் கடந்த 1-ந்தேதி தான் திறந்து வைக்கப்பட்டது. விமான நிலையத்தில் தரை இறங்குவதற்கு … Read more

அமெரிக்காவில் 3.7 கோடி ரூபாய்க்கு விற்பனைக்கு வந்த தீவு

நிகராகுவா: மத்திய அமெரிக்காவின் நிகராகுவா பகுதியில் அமைந்துள்ள தீவு ஒன்று ரூ.3.7 கோடிக்கு விற்பனைக்கு வந்துள்ளதாக தகவல். இதே விலையில் இந்தியாவின் மும்பை அல்லது டெல்லி போன்ற நகரில் அப்பார்ட்மெண்ட் வாங்கலாம் என தெரிகிறது. நிகராகுவாவின் ப்ளூ ஃபீல்ட் கடற்கரையில் இருந்து சுமார் 19.5 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள ‘தி இகுவானா தீவு’தான் தற்போது விற்பனைக்கு வந்துள்ளது. இதை தீவுகளை விற்பனை செய்யும் நிறுவனம் ஒன்று அதன் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. 5 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்தத் … Read more

எண்ணெய் கப்பலில் வெடி விபத்து – ஒருவர் உயிரிழப்பு..!

தாய்லாந்து அருகே நிறுத்தப்பட்டிருந்த எண்ணெய் கப்பலில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார். ஸ்மூத் சீ-22 என்ற அந்த எண்ணெய் கப்பலில் பழுதுநீக்கும் பணிகள் நடைபெற்றுகொண்டிருந்தபோது திடீரென பலத்த சத்தத்துடன் வெடிவிபத்து ஏற்பட்டு கப்பலில் தீப்பற்றி எரிந்தது. இதனால் பல அடி உயரத்திற்கு கரும்புகை எழும்பியது. நெருப்பை கட்டுப்படுத்த கரையிலிருந்தும், சிறிய படகுகளிலிருந்தும் தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டது. இந்த விபத்தில், மியான்மரை சேர்ந்த வெல்டிங் தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார். 4 பேர் காயமடைந்தனர். மாயமான 7 பேரை … Read more

பாலியல் தொழிலுக்காக பாகிஸ்தானிய பெண்களை 'இறக்குமதி' செய்யும் சீனா!

சீனா பாகிஸ்தான் பொருளாதார வழித்தட (CPEC) திட்டத்தை  சட்டவிரோத நடவடிக்கைகளை மேற்கொள்ள சீனா பயன்படுத்துகிறது. வீழ்ச்சியடைந்து வரும் பொருளாதாரத்தை கையாள்வதில் பாகிஸ்தான் திணறி வரும் இந்த நேரத்தில், சீனா அதற்கு உதவாமல், நிலமையை தனக்கும் சாதகமாக பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கிறது. இருப்பினும், சுயநலமே குறியாக கொண்ட சீனா இவ்வாறு நடந்து கொள்வதில் ஆச்சரியமில்லை. சீனா, பாகிஸ்தானில் இந்த உள்கட்டமைப்பை உருவாக்குவதற்குப் பின்னால் சீனாவின் வஞ்சகமான நோக்கம் இன்னும் தெளிவாகத் தெரிகிறது. CPEC திட்டத்தைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, … Read more

ஆறு மாத குழந்தை சுட்டுக் கொலை… அமெரிக்காவில் அதிர்ச்சி சம்பவம்!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள பிரபலமான நகரங்களில் ஒன்றுதுலாரே. இந்த நகரின் ஒரு வீட்டில் இன்று துப்பாக்கி சூடு நடந்துள்ளது. தகவல் அறிந்து போலீசார் சம்பவம் நடந்த வீட்டுக்கு விரைந்துள்ளனர். அப்போது அங்கு ஆறு மாத குழந்தை, தாய் உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் சுட்டுக் கொல்லப்பட்டு பிணமாக கிடந்ததை கண்டு போலீசாரே ஒரு கணம் அதிர்ச்சி அடைந்தனர். துப்பாக்கி சூட்டில் காயமடைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்தவர்களை மீட்ட போலீசார் அவர்களை மருத்துவமனையில் அனுமதித்தனர். … Read more

இந்தியாவுடன் உண்மையான பேச்சுவார்த்தை நடத்த பாக். பிரதமர் விருப்பம்..!

இந்தியாவுடன் நடத்திய 3 போர்களால் துன்பம், வறுமை மற்றும் வேலையின்மை ஆகியவற்றை மட்டுமே பாகிஸ்தான் பெற்றிருப்பதாலும், அதிலிருந்து கற்றுக் கொண்ட பாடத்தாலும் இந்தியாவுடன் உண்மையான பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்தார். துபாயின் அரபி சேனலுக்கு ஷெபாஸ் ஷெரீப் அளித்த பேட்டியில், காஷ்மீர் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு பிரதமர் மோடியுடன் அமர்ந்து நேர்மையான முறையில் பேச்சுவார்த்தை நடத்துவதே தீர்வாக இருக்கும் என்று கூறினார். மேலும், அண்டை நாடான இந்தியாவுடன் எங்களின் உண்மையான பிரச்சனைகளை தீர்த்து, … Read more

பிரிட்டன் பிரதமர் அலுவலகத்தில் பொங்கல் விழா: தழைவாழையில் விருந்து| Pongal Celebrations at the British Prime Ministers Office: Feasting on the Leaf

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் லண்டன்: பிரிட்டன் பிரதமர் அலுவலகத்தில் நடந்த பொங்கல் பண்டிகையையொட்டி, பிரதமர் அலுவலக ஊழியர்களுக்கு தழைவாழை இலையில் விருந்து வைத்தார் பிரதமர் ரிஷிசுனாக். பிரிட்டன் பிரதமாக பதவியேற்ற ரிஷி சுனாக், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் ஆவார். இந்நிலையில் லண்டனில் 10. டவுனிங் தெருவில் பிரதமர் அலுவலகம் உள்ளது. இங்கு பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதையடுத்து பிரதமர் அலுவலக ஊழியர்கள், பாதுகாவலர்கள் ஆகியோருக்கு பிரதமர் சார்பில் விருந்து வைக்கப்பட்டது. இதில் தழைவாழை இலையில் … Read more

சீனாவில் குறைந்து வரும் மக்கள் தொகை எண்ணிக்கை – தேசிய புள்ளியல் துறை

சீனாவின் தேசிய புள்ளியல் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 1961ம் ஆண்டிற்குப் பிறகு முதல் முறையாக மக்கள் தொகை எண்ணிக்கை குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளது. அதாவது, 2021ம் ஆண்டில் இருந்ததை விட 2022ம் ஆண்டில் 8 லட்சத்து 50 ஆயிரம் எண்ணிக்கை குறைந்துள்ளதாகவும், மக்களிடம் அதிகரித்துள்ள கல்வியறிவால் “ஒரு குழந்தை” என்ற திட்டத்திற்கு நல்ல பலன் கிடைத்துள்ளதாகவும் சீனா தெரிவித்துள்ளது. தற்போது, சீனாவில் 141 கோடியே 17 லட்சம் மக்கள் உள்ள நிலையில், இந்தியா 2022ம் ஆண்டிலேயே 141 … Read more