சீனாவில் மீண்டும் கோவிட் பரவல்.. இரண்டு பேர் உயிரிழப்பு

சீனாவில் கோவிட் பாதிப்பில் அடுத்தடுத்து இரண்டு பேர் உயிரிழ்ந்து உள்ளதால் கட்டுப்பாடுகளை அதிகரிப்பது பற்றி அந்த நாடு யோசிக்கத் தொடங்கி உள்ளது. தலைநகர் பெய்ஜிங்கில் 91 வயது மூதாட்டியும் 88 வயது முதியவரும் சிகிச்சை பலனின்றி காலமானதான் கோவிட் பாதிப்பு மீணடும் அதிகரித்து விடுமோ என்ற பயம் அதிகரித்து இருக்கிறது. இந்த நிலையில் நாடு முழுவதும் கோவிட்  பரிசோதனைக்கு மாதிரிகளை கொடுத்த 27 ஆயிரம் பேரில் 2365 பேருக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.  கோவிட் … Read more

ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்துக்கு ஆதரவு: ஈரானின் பிரபல நடிகைகள் இருவர் கைது

தெஹ்ரான்: ஈரானில் ஹிஜாப் எதிர்ப்புப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த பிரபல நடிகைகள் இருவரை அந்நாட்டு அரசு கைது செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹென்காமெஹ் காசியானி, காதாயூன் ஆகியோர் ஈரானின் பிரபல நடிகைகள். இருவரும் சர்வதேச அளவில் சிறந்த நடிகர்களுக்கான விருதுகளை வென்றவர்கள். இவ்விருவரும் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து தங்கள் சமூக வலைதளப் பக்கங்களில் பதிவிட்டு வந்தனர். தங்களது நடவடிக்கைகளுக்காக இருவரும் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து ஹென்காமெஹ் … Read more

ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரை ஒட்டி மத சொற்பொழிவுகள்: கத்தாரில் ஜாகீர் நாயக்

தோஹா: இந்தியாவில் தடை செய்யப்பட்ட மதபோதகர் ஜாகீர் நாயக் கத்தார் நாட்டில் நிகழும் ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில் மதச் சொற்பொழிவுகள் நிகழ்த்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனை கத்தார் அரசுக்கு சொந்தமான அல்காஸ் என்ற விளையாட்டு சேனல் தொகுப்பாளர் ஃபைசல் அல்ஜாரி உறுதிப்படுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் “மத போதகர் ஷேக் ஜாகீர் நாயக் கத்தார் வந்துள்ளார். உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் முடிவுறும் வரையில் அவர் மத சொற்பொழிவுகள் நிகழ்த்துவார்” … Read more

பிபா உலகக் கோப்பை கால்பந்து: கத்தாரை 2-க்கு பூஜ்யம் என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஈகுவடார் அணி அபாரம்!

பிபா உலகக் கோப்பை கால்பந்து லீக் சுற்று முதல் போட்டியில், கத்தாரை 2-க்கு பூஜ்யம் என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஈகுவடார் அணி முதல் வெற்றியை பதிவு செய்தது. தோஹாவில் நடைபெற்ற போட்டியில் ஆரம்பம் முதலே ஈகுவடார் அணி அபாரமாக ஆடியது. அந்த அணி வீரர் என்னர் வலென்சியா 2 கோல்களை அடிக்கவே, முதல் பாதி ஆட்டத்திலேயே அந்த அணி முன்னிலை பெற்றது. கத்தார் அணி வீரர்கள் யாரும் கோல் அடிக்காததால், முடிவில் ஈகுவடார் அணி வெற்றி … Read more

அமெரிக்காவின் கொலோராடோ பகுதியில் இரவு விடுதியில் துப்பாக்கிச் சூடு: 5 பேர் பலி.. 18 பேர் காயம்!

அமெரிக்காவின் கொலோராடோ பகுதியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் கொல்லப்பட்டனர். 18 பேர் காயம் அடைந்தனர். இரவு விடுதியில்  ரைபிள் இயந்திரத் துப்பாக்கியுடன் புகுந்த ஒருவன் விடுதியில் இருந்தவர்களை சரமாரியாக சுட்டுத் தள்ளினான். தகவலின்பேரில் போலீசார் விரைந்து வந்து தாக்குதல் நடத்திய நபரை சுற்றி வளைத்து கைது செய்தனர். விசாரணையில், 22 வயதான ஆண்டர்சன் என்பது தெரிய வந்தது. இச்சம்பவத்துக்கு அதிபர் ஜோ பைடன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். வெறுப்புணர்வை சகித்துக் கொள்ள முடியாது என்று … Read more

ஹிஜாப் அணியாமல் வீடியோ பதிவிட்ட ஈரானிய நடிகை ஹெங்கமே காசியானி கைது..!

ஹிஜாப் அணியாமல் வீடியோ பதிவிட்ட ஈரானிய நடிகை ஹெங்கமே காசியானியை அந்நாட்டு போலீசார் கைது செய்தனர். ஹிஜாப்க்கு எதிரான போராட்டத்தை ஆதரித்து   இன்ஸ்டாகிராமில் நடிகை வீடியோ பதிவை வெளியிட்டார். அதில் அவர் ஹிஜாப் அணியாததுடன், அது தமது கடைசி பதிவாகக்கூட இருக்கலாம் என்றும் குறிப்பிட்டிருந்தார். Source link

அமெரிக்காவின் கொலோராடோ பகுதியில் இரவு விடுதியில் துப்பாக்கிச் சூடு: பேர் பலி.. 18 பேர் காயம்!

அமெரிக்காவின் கொலோராடோ பகுதியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் கொல்லப்பட்டனர். 18 பேர் காயம் அடைந்தனர். இரவு விடுதியில்  ரைபிள் இயந்திரத் துப்பாக்கியுடன் புகுந்த ஒருவன் விடுதியில் இருந்தவர்களை சரமாரியாக சுட்டுத் தள்ளினான். தகவலின்பேரில் போலீசார் விரைந்து வந்து தாக்குதல் நடத்திய நபரை சுற்றி வளைத்து கைது செய்தனர். விசாரணையில், 22 வயதான ஆண்டர்சன் என்பது தெரிய வந்தது. இச்சம்பவத்துக்கு அதிபர் ஜோ பைடன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். வெறுப்புணர்வை சகித்துக் கொள்ள முடியாது என்று … Read more

சீனாவின் வடமேற்கு பகுதியில் கடும் பனிப்பொழிவு..!

சீனாவின் வடமேற்கு பகுதியில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. சாரல் மழை போல் அங்கு பனி வீசி வருவதால், சாலைகளில் பனிக்கட்டிகள் குவிந்து கிடக்கின்றன. இதையடுத்து அந்த பனிக்கட்டிகளை அகற்றும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. Source link

ரஷ்ய அதிபர் புதினுக்கு மூளை நரம்பியல் அறுவை சிகிச்சை எனத் தகவல்.

ரஷ்ய அதிபர் புதின் தொடர்பான சில செய்திகள் அவரது உடல் நலம் பற்றிய கவலையை எழுப்பி வருகின்றன. அண்மையில் ரஷ்யப் படைகள் உக்ரைனின் தெற்கு பகுதி நகரமான கெர்சனில் இருந்து திரும்பப் பெறப்பட்டன. இது தொடர்பான அறிவிப்பை நவம்பர் 9ம் தேதி ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் மற்றும் உக்ரைனுக்கு எதிரான போரில் தலைமை வகிக்கும் ராணுவத் தளபதி ஆகியோர் ராணுவக் கட்டுப்பாட்டு அறையில் இருந்து செய்தியாளர்களின் கேமராக்களில் தோன்றி அறிவித்தனர். அப்போது புதினை காணவில்லை. அவர் மாஸ்கோவில் … Read more

நேபாளத்தில் பொதுத் தேர்தல்: விறுவிறுப்பான ஓட்டுப்பதிவு| Dinamalar

காத்மாண்டு-நம் அண்டை நாடான நேபாளத்தில் பார்லிமென்ட் தேர்தலுக்கான ஓட்டுப் பதிவு நேற்று விறுவிறுப்பாக நடந்தது. . நேபாளத்தில் 275 எம்.பி.,க்களைக் கொண்ட பார்லிமென்ட் மற்றும் 550 உறுப்பினர்களைக் கொண்ட மாகாண சட்டசபை தேர்தல் நேற்று நடந்தது. இதில் பார்லி.,க்கு 165 எம்.பி.,க்கள் நேரடி தேர்தல் வாயிலாகவும், 110 பேர் விகிதாசார அடிப்படையிலும் தேர்வு செய்யப்படுன்றனர். அதேபோல் மாகாண தேர்தலில் 330 பேர் நேரடி ஓட்டுப் பதிவு வாயிலாகவும், 220 பேர் விகிதாசார அடிப்படையிலும் தேர்வு செய்யப்படுகின்றனர். நாடு … Read more