கழுத்தை நெருக்கும் பொருளாதார நெருக்கடி; அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு.!

பணவீக்கம் அதிகரிப்பு, அந்நியச் செலாவணி கையிருப்பில் வீழ்ச்சி, வெள்ளம் ஆகியவை பாகிஸ்தானுக்கு மிகப்பெரிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் குறிப்பாக, பாகிஸ்தானின் எரிசக்தி துறையின் கடன் சுமை தாங்கமுடியாத அளவுக்கு உயர்ந்துள்ளது. அந்த நாட்டின் அன்றாட வாழ்கை முறையை புரட்டிப்போட்டுள்ளது. பாகிஸ்தான் மின்சார துறையின் கடன் கடந்தாண்டு செப்டம்பர் நிலவரப்படி ரூ.2.253 லட்சம் கோடியாக (பாக். மதிப்பில்) இருந்தது. இது, தற்போது ரூ.2.437 லட்சம் கோடியாக கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இதையடுத்து, பாகிஸ்தான் மக்கள் மின்சார பயன்பாட்டை வெகுவாக குறைத்துக் … Read more

அமெரிக்கா உளவு அமைப்பான சிஐஏ இயக்குனர் வில்லியம் ரஷ்யா சென்றதாக வெளியான செய்திக்கு ரஷ்யா நிராகரிப்பு!

அமெரிக்க உளவு அமைப்பான சிஐஏ இயக்குனர் வில்லியம் பர்ன்ஸ் உக்ரைன் போர் தொடர்பாக ரகசிய சமாதான திட்டத்துடன் ரஷ்யாவிற்கு சென்றதாக வெளியான செய்தியை ரஷ்யா நிராகரித்துள்ளது. உக்ரைன் அதன் 5-ல் ஒரு பகுதியை ரஷ்யாவிற்கு விட்டுக்கொடுக்கும் என்று ரஷ்யாவிடம் வில்லியம் பர்ன்ஸ் கூறியதாக சுவிட்சர்லாந்தை சேர்ந்த பத்திரிகை செய்தி வெளியிட்டது. பர்ன்ஸ் ரஷ்யாவிற்கு பயணம் செய்தாரா, சமாதான திட்டத்தை முன்வைத்தாரா என்ற கேள்விக்கு பதிலளித்த ரஷ்ய அதிபர் மாளிகை செய்தித்தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், பத்திரிகையின் முழு செய்தியும் … Read more

தென் ஆப்பிரிக்க நகரங்களில் மின் நெருக்கடியால் தண்ணீர் விநியோகம் தடை!

தென் ஆப்பிரிக்க நகரங்களில் நிலவும் மின்சார நெருக்கடி காரணமாக தண்ணீர் விநியோகம் தடைபட்டுள்ளது. மின்சார நெருக்கடியால் நாட்டில் நீர் பதப்படுத்துதல் மற்றும் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைகளுக்குகூட தண்ணீர் கிடைக்காமல் மக்கள் நெருக்கடியில் உள்ளதாக கூறப்படுகிறது. ஜோகன்னஸ்பர்க் நகரில் உள்ள நீர்த்தேக்கங்களும் குறைந்த மழைப்பொழிவு மற்றும் வெப்பம் காரணமாக வறண்டு உள்ளன. குடிநீர் தட்டுப்பாடு அதிகரித்து வருவதால், நகரம் முழுவதும் தண்ணீர் தொட்டிகள் வைக்கப்பட்டு வருகிறது. Source link

இந்தியர்கள் அதிகம் உட்கொள்ளும் ரொட்டியை தயாரித்து உட்கொண்ட பில்கேட்ஸ்!

அமெரிக்காவை சேர்ந்த உலகின் மிகப்பெரும் தொழிலதிபர்களில் ஒருவரான பில் கேட்ஸ் இந்தியர்கள் அதிகம் உட்கொள்ளும் ரொட்டி செய்யும் வீடியோ வெளியாகி உள்ளது. அமெரிக்காவை சேர்ந்த இளம் சமையல் கலைஞரான எய்டன் பெர்நாத்துடன் இணைந்து தனது வீட்டில் ரொட்டி தயாரித்து உட்கொண்டார். எய்டன் பெர்நாத் பீகார் வந்திருந்தபோது, கோதுமை விவசாயிகள் மற்றும் கேண்டீன்களில் ரொட்டி தயாரிக்கும் பெண்களை சந்தித்ததாகவும், சுவையான ரொட்டி தயாரிப்பதை அப்போது கற்றுக்கொண்டதாகவும் தெரிவித்தார். Source link

Super Cows: சீனாவின் ‘பால் புரட்சி’! கறவை மாடுகளை க்ளோனிங் செய்யும் சீன தொழில்நுட்பம்

சீன விஞ்ஞானிகள் ‘சூப்பர் பசுக்கள்’ என்று அழைக்கப்படும் குளோனிங் செய்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த பசுக்கள் தங்கள் வாழ்நாளில் அதிக அளவு பால் உற்பத்தி செய்யும் திறன் கொண்டவை என்று கூறப்படுகிறது. வெளிநாட்டு இனங்களை சீனா சார்ந்திருப்பதை குறைக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக பசுக்கள் குளோனிங் செய்யப்பட்டுள்ளன. சீனாவின் குளோபல் டைம்ஸின் கூற்றுப்படி, சீனாவின் கறவை மாடுகளில் 70 சதவீதம் மற்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. சீன விஞ்ஞானிகள் அதிக அளவு பால் … Read more

அணு ஆயுத ஏவுதளத்தின் மீது சீன 'உளவு' பலூன்: அமெரிக்கா கண்டனம்

மோண்டானா: தங்களது அணு ஆயுத ஏவுதளத்தின் மீது சீன ‘உளவு’ பலூன் காணப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க மூத்த பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கூறும்போது, “ மோண்டானாவில் உள்ள அணுசக்தி எவுதளத்தில் சீனாவின் உளவு பலூன் ஒன்று பறந்து வருவதைக் கண்டோம். நிச்சயம் அது ரகசியமான தகவல்களை சேகரிப்பதற்காக வந்ததாக நாங்கள் நம்புகிறோம். மக்களின் பாதுகாப்புக்காக அந்த பலுனை நாங்கள் சுடவில்லை. பலுனை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். ” என்று தெரிவித்தார். அமெரிக்க பாதுகாப்புத் துறை … Read more

நாஜி படைகளை தடுத்து நிறுத்தி, வீரமரணம் அடைந்த ரஷ்ய தளபதியின் நினைவிடத்தில் அதிபர் புதின் அஞ்சலி..!

இரண்டாம் உலகப் போரில், ஹிட்லரின் நாஜி படைகளை, சோவியத் ராணுவம் வீழ்த்தி வாகை சூடியதன் 80ம் ஆண்டு விழாவினை முன்னிட்டு ரஷ்யாவின் வோல்கோ கிராட் நகரில் கண்கவர் வாணவேடிக்கைகள் நிகழ்த்தப்பட்டன. இரண்டாம் உலகப் போரின் ஒரு முக்கிய திருப்புமுனையாக அமைந்த ஸ்டாலின்கிராட் போரில், 10 லட்சத்திற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். ரஷ்ய தளபதி ஸ்டாலின் இறந்தபிறகு இந்த நகருக்கு ”வோல்கோ கிராட்” என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. நாஜி படைகளை தடுத்து நிறுத்தி, வீரமரணம் அடைந்த ரஷ்ய தளபதியின் … Read more

தமிழர்களுக்கு ஆட்சி அதிகாரம்: புத்த மதத் தலைவர்கள் எதிர்ப்பு| Rulership for Tamils: Buddhist leaders protest

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் கொழும்பு: இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு அளிக்கும் அரசியல் சாசனத்தின் 13 ஏ பிரிவை செயல்படுத்த, புத்த மதத் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நம் அண்டை நாடான இலங்கையில், தமிழர்களுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்களிப்பு வழங்கக் கோரி நீண்ட காலமாக கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. ௧௯௮௭ல் இந்தியா – இலங்கை இடையேயான ஒப்பந்தத்தில் இது தொடர்பாக குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழர்களுக்கு அதிகாரம் வழங்கும் வகையில், அரசியல் சாசனத்தில் … Read more

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான இன்ஜினில் புகை வந்ததால் அபுதாபியில் தரையிறக்கம்..!

அபுதாபியில் இருந்து கோழிக்கோடு புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தின் இன்ஜின் ஒன்றில் புகை வந்ததையடுத்து விமானம் மீண்டும் அபுதாபியில் தரையிறக்கப்பட்டது. IX348 விமானம் 184 பயணிகளுடன் இன்று கோழிக்கோட்டிற்கு புறப்பட்டது. ஆயிரம் அடி உயரத்தில் சென்றபோது விமானத்தின் என்ஜின் ஒன்றில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு புகை வந்தது. இதனையடுத்து விமானம் பாதுகாப்பாக அபுதாபி விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டதாகவும், பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளதாகவும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. Source link

நடுவானில் இன்ஜினில் தீ: ஏர் இந்தியா விமானம் அவசர தரையிறக்கம்| Calicut-bound Air India Express flight lands in Abu Dhabi after flames detected mid-air

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் அபுதாபி: நடுவானில், ஏர் இந்தியா விமானத்தின் ஒரு இன்ஜீனில் தீப்பிடித்ததை தொடர்ந்து அந்த விமானம் ஐக்கிய அரபு எமீரேட்சின் அபுதாபியில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. ஏர் இந்தியாவிற்கு சொந்தமான ‘ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பி737-800’ என்ற விமானம் ஐக்கிய அரபு எமீரேட்சின் அபுதாபியில் இருந்து கேரளாவின் கோழிக்கோடு நோக்கி கிளம்பியது. விமானத்தில் 184 பயணிகள் இருந்தனர். விமானம் மேலே கிளம்பி 1000 அடி உயரத்தில் பறந்து கொண்டு இருந்த போது, ஒரு … Read more