கடலின் நடுவே ரூ.65,000 கோடியில் “ஆமை” வடிவில் மிதக்கும் நகரம்..!

சவூதி அரேபியாவில், 65 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் பிரம்மிக்க வைக்கக்கூடிய “ஆமை” வடிவிலான மிதக்கும் நகரம் உருவாக்கப்பட உள்ளன. இத்தாலியைச் சேர்ந்த லஸ்ஸாரினி என்றொரு கட்டுமான நிறுவனம் உலகின் மிகப்பெரிய மிதக்கும் நகரத்தை அடுத்த 8 ஆண்டுகளில் கட்டி முடிக்கவுள்ளனர். 1800 அடி நீளமும், 2000 அடி அகலமும் கொண்ட படகில் மால்கள், பூங்கா, பீச் கிளஃப், அடுக்குமாடி குடியிருப்புகள் என சகல வசதிகளுடன் உருவாக்கப்பட உள்ளது. கடலில் எங்கும் நிற்காமல் மிதக்கும் வகையில் வடிவமைக்கப்பட … Read more

'சிக்கனமாக இருங்க மக்களே' ஆனந்த் ஸ்ரீனிவாசனாக மாறிய அமேசான் சிஇஓ…

உலகின் பல நாடுகளில் தற்போது பொருளாதார மந்தநிலை நிலவுவதாக வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். வணிகர்கள், பொதுமக்கள் என பலரும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், அமேசான் நிறுவனரும், உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவருமான ஜெஃப் பெஸாஸ், மக்களுக்கு நிதி சேமிப்பு குறித்து சில அறிவுரைகளை வழங்கியுள்ளார்.  அதாவது,”இந்த விடுமுறை தினங்களில் நிலவும் பொருளாதார மந்தநிலையை சமாளிக்க வேண்டும் என்றால், பெரும் நிதி கொடுத்து பொருள்கள் வாங்கும் முடிவை சில காலம் தள்ளிவைக்க வேண்டும். தற்போது … Read more

வங்கதேசம்: காதலியை துண்டு துண்டாக வெட்டி சாக்கடையில் வீசிய நபர்.!

டெல்லியில் அப்தாப் என்ற நபர், தனது 28 வயது காதலி ஷ்ரத்தா வாக்கர் என்பவரை 35 துண்டுகளாக வெட்டி பல இடங்களில் வீசிய சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியது. அந்த பரபரப்பு அடங்குவதற்குள், அதேபோல் மற்றொரு சம்பவம் வங்கதேசத்தில் நடந்துள்ளது. வங்காளதேச நாட்டை சேர்ந்தவர் அபுபக்கர் சித்திக். திருமணம் ஆன இவர் தனது மனைவியுடன், கோபர்சக்கா சதுக்கம் பகுதியில் வசித்துவருகிறார். இதனிடையே கவிதா ராணி என்ற இந்து பெண்ணுடனும் அபுபக்கர் தொடர்பில் இருந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் அபுபக்கருக்கு திருமணம் … Read more

அமெரிக்க அதிபர் மாளிகையில் ஜோபைடன் பேத்திக்கு எளிமையான முறையில் நடந்த திருமணம்..!

அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் பேத்தி நவோமிக்கு, வெள்ளை மாளிகையில் திருமணம் நடந்தது. வெள்ளை மாளிகையின் தெற்கு பகுதியிலுள்ள புல்வெளியில் எளிமையான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த திருமண வரவேற்பில் இருதரப்பு உறவினர்கள் மட்டுமே பங்கேற்றனர். 28 வயதான நவோமி, தன்னுடன் சட்டக்கல்லூரியில் பயின்ற 25 வயதான பீட்டரை மணம் முடித்தார். அதிபர் ஜோபைடன் அவரது மனைவி ஜில்பைடன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். வெள்ளை மாளிகையில் அதிபரின் குடும்ப திருமண விழா நடைபெறுவதே இதுவே முதன்முறை என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது. Source … Read more

4 குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் பலி| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் மாஸ்கோ: ரஷ்யாவின் அடுக்கு மாடிகுடியிருப்பில் நடந்த காஸ் கசிவு விபத்தில் சிக்கி 4 குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் பலியாகி உள்ளனர். ரஷ்யாவின் தென்கிழக்கு பகுதியை சேர்ந்த ஷாக்லீன் தீவில் இச்சம்பவம் நடைபெற்று உள்ளது. இது குறித்து அம்மாகாண கவர்னர் வலோரி லிமாரென்கோ கூறுகையில் மாஸ்கோ நேரப்படி அதிகாலை 5.30 மணியளவில் இச்சம்பவம் நடந்துள்ளது. 1980 ம் ஆண்டில் கட்டப்பட்ட இந்த அடுக்குமாடி குடியிருப்பில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. முதற்கட்ட தகவலன்படி … Read more

சீனாவில் 5 மாதங்களுக்குப் பிறகு கொரோனா பாதிப்பால் ஒருவர் உயிரிழப்பு

பெய்ஜிங், சீனாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த மாதம் வரை ஆயிரத்துக்கும் கீழ் கொரோனா பாதிப்புகள் பதிவாகி வந்த நிலையில், இந்த மாதம் கொரோனா தொற்று மளமளவென உயர்ந்து, தினசரி 25 ஆயிரம் பாதிப்புகள் வரை பதிவாகி வருகிறது. இருப்பினும் அங்கு கொரோனாவால் உயிரிழப்புகள் எதுவும் பதிவு செய்யப்படாமலேயே இருந்து வந்தது. சீனாவில் கடைசியாக கடந்த மே 26-ந்தேதி கொரோனாவால் ஒருவர் உயிரிழந்தார். அதன் பிறகு கடந்த 5 … Read more

பெரிய ஆபத்து… ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுஉலை மீது தொடர் தாக்குதல் – எச்சரிக்கும் ஐநா

ரஷ்யா – உக்ரைன் போர் கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து நடைபெற்று வருகிறது. இதில், ரஷ்யா, உக்ரைன் என இரு தரப்பிலும் பல்லாயிரக்கணக்கான மக்களும், போர் வீரர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.  வீடுகளை இழந்து அண்டை நாடுகளுக்கு உக்ரைனிய மக்கள் பலரும் அகதிகளாக குடிபெயர்ந்து வருகின்றனர். மேலும், ரஷ்யா இதில் போர் நெறிமுறைகளை மீறி செயல்படுவதாக தொடர் குற்றச்சாட்டுகளும் எழுந்து வந்தன.  மேலும், உக்ரைனில் உள்ள பல்வேறு அணுமின் நிலையங்கள் தொடர் தாக்குதல்களுக்கு ஆளாகி வருகின்றன. இந்த தாக்குதலுக்கு … Read more

நேபாளத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது…!

காத்மண்டு, நேபாளத்தில் 275 உறுப்பினர்களை கொண்ட நாடாளுமன்றம், 550 உறுப்பினர்களை கொண்ட 7 மாகாண சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடக்கிறது. வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்கு வந்து தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். 7 மாகாணங்களிலும் 1.79 கோடி வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளனர். நாடாளுமன்றத்துக்கான 275 உறுப்பினர்களில் 165 பேர் நேரடி வாக்கு மூலமாகவும், மீதமுள்ள 110 … Read more

அமெரிக்காவில் ஆற்றில் தவறி விழுந்த 80 வயது முதியவரை கண்டுபிடித்த போலீஸ் நாய்

வாஷிங்டன், அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் 80 வயதான முதியவர் ஒருவர் காட்டில் வேட்டைக்குச் சென்ற போது, ஆற்றில் தவறி விழுந்துள்ளார். மேலும் காட்டுப் பகுதியில் அவர் தொலைந்து போனதற்கு அடையாளமாக 3 முறை துப்பாக்கியால் சுட்ட சத்தத்தை அந்த முதியவரின் மனைவி கேட்டுள்ளார். இது தொடர்பாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், முதியவரை தேடும் பணியில் கே9-லோகி என்ற போலீஸ் நாய் களமிறக்கப்பட்டது. நீண்ட நேர தேடுதலுக்குப் பிறகு ஆசேபில் என்ற ஆற்றின் கரையோரமாக முதியவரை அந்த … Read more

டொனால்டு டிரம்ப் டுவிட்டர் கணக்கின் தடை நீக்கம் – எலான் மஸ்க் அறிவிப்பு

வாஷிங்டன், அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்பின் டுவிட்டர் கணக்கு கடந்த 2020 ஆம் ஆண்டு முடக்கப்பட்டது. வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசியதாக டொனால்டு டிரம்பின் கணக்கு முடக்கப்பட்டது. தற்போது டுவிட்டரை எலான் மஸ்க் வாங்கியிருக்கும் நிலையில் டிரம்பிற்கு மீண்டும் அவரது டுவிட்டர் கணக்கை பயன்படுத்த அனுமதி அளிக்கப்படுமா? என்பது குறித்த விவாதங்கள் அதிகரித்தது. இதனையடுத்து, டொனால்டு டிரம்பை டுவிட்டரில் மீண்டும் சேர்க்கலாமா என்பது குறித்து எலான் மஸ்க் டுவிட்டரில் வாக்கெடுப்பை நடத்தினார். இந்த வாக்கெடுப்பில் பெரும்பாலானவர்கள் … Read more