பாகிஸ்தானில் பயங்கரவாதத்தை ஒழிக்க மாகாண அரசுகள் ஒத்துழைக்க வேண்டும்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் பயங்கரவாதத்தை ஒழிக்க மாகாண அரசுகள் ஒத்துழைக்க வேண்டும் என்று அந்நாட்டு பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் வலியுறுத்தி உள்ளார். தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற தேசிய பாதுகாப்பு தொடர்பான மாநாட்டுக்கு தலைமை வகித்துப் பேசிய ஷெபாஸ் ஷெரீப், ”பாகிஸ்தானில் பயங்கரவாதம் மீண்டும் தலையெடுத்துள்ளது. அதனை ஒழிக்க அனைத்து மாகாண அரசுகளின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம். பயங்கரவாதிகளாலும், போராளிகளாலும் நாட்டின் உறுதியை ஒருபோதும் அசைக்க முடியாது. நாட்டின் பாதுகாப்பிற்காக எத்தகைய தியாகத்தையும் செய்ய அரசு தயாராக உள்ளது” என … Read more

ஆசிரியரை துப்பாக்கியால் சுட்ட 6 வயது மாணவன்: அமெரிக்காவில் பரபரப்பு!

அமெரிக்காவின் விர்ஜினியா மாகாணத்தில் ரிச்நெக் மழலையர் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் பயிலும் ஆறு வயது மாணவன் ஒருவன் வகுப்பறைக்குள் வைத்து 30 வயதான ஆசிரியை ஒருவரை சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுள்ளான். இதில் அந்த ஆசிரியை பலத்த காயமடைந்தார். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், துப்பாக்கி தோட்டாக்களால் துளைக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்த ஆசிரியையை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்ததனர். அங்கு அவருக்கு உயிர் காக்கும் தீவிர சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இதனிடையே, அந்த மாணவனை … Read more

அமெரிக்காவில் 6 வயது பள்ளிச் சிறுவன் துப்பாக்கிச் சூடு: ஆசிரியர் கவலைக்கிடம்

வர்ஜினியா: அமெரிக்காவில் 6 வயது பள்ளிச் சிறுவன் ஒருவன் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஆசிரியர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வேறு யாருக்கும் காயமில்லை. சம்பந்தப்பட்ட சிறுவனை காவல்துறை விசாரணைக்காக அழைத்துச் சென்றது. இந்த சம்பவம் வர்ஜினியா மாகாணத்தில் ரிச்நெக் மழலையர் பள்ளியில் நடந்துள்ளது. இது குறித்து காவல்துறை தலைவர் ஸ்டீவ் ட்ரூ கூறுகையில், “இந்த சம்பவம் எங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சம்பந்தப்பட்ட சிறுவனுக்கு 6 வயது தான் ஆகிறது. அவன் வகுப்பறையில் திடீரென்று துப்பாக்கியை எடுத்து … Read more

உக்ரைனுக்கு அமெரிக்கா ராணுவ உதவி | $3 Billion in Military Aid to Ukraine: US Announces

வாஷிங்டன்: உக்ரைனுக்கு 3 பில்லியன் டாலர் மதிப்பிலான ராணுவ தளவாடங்கள் வழங்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது, ரஷ்யா கடந்த, பிப்., 25ல் போர் தொடுத்தது. கடந்த சில மாதங்களாக போர் நீடித்து வருகிறது. ரஷ்யப் படைகளுக்கு எதிராக உக்ரைன் ராணுவம் கடும் எதிர்தாக்குதல் நடத்தி வருகிறது. போரை முடிவுக்கு கொண்டுவர இந்தியா உள்ளிட்ட நாடுகள் முயற்சித்து வருகின்றன. போரில் உக்ரைனுக்கு ஆதரவு அளித்து, அமெரிக்கா ஆயுதங்களை வழங்கி வருகிறது. இந்நிலையில், … Read more

பூமியை தாக்க வரும் செயற்கைகோள்… உதிரிபாகங்கள் மனிதர்கள் மீது விழுமா?

ERBS Satellite : 38 ஆண்டுகள் பழமைவாய்ந்த நாசா செயற்கைக்கோள் தற்போது செயலிழந்துள்ளது. அந்த செயற்கைகோள்  விண்ணில் இருந்து பூமிக்கு விழ உள்ளது. இந்நிலையில், செயற்கைகோளின் உதிரிபாகங்கள் மனிதர்கள் வசிக்கும் பகுதியில் விழுந்துவிடுமோ என்ற அச்சம் நிலவியது. ஆனால், அதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு என்று நாசா நேற்று தெரிவித்துள்ளது.  5,400 பவுண்டு (2,450 கிலோ) செயற்கைக்கோளில் பெரும்பாலானவை மீண்டும் பூமிக்கு நுழைந்தவுடன் எரிந்துவிடும் என்று நாசா தெரிவித்துள்ளது. ஆனால் சில துண்டுகள் எரியாமல் பூமியில் விழும் … Read more

மனைவி விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்ததால் விரக்தியில் குடும்பத்தினர் 7 பேரை சுட்டு கொன்ற கொடூர கணவன்..!

அமெரிக்காவின் உட்டா மாகாணத்தில் மனைவி விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்ததால் விரக்தியடைந்த கணவர் தனது குழந்தைகள் 5 பேர், மனைவி மற்றும் மாமியார் என 7 பேரை துப்பாக்கியால் சுட்டு கொலைசெய்துவிட்டு தானும் தற்கொலை செய்துள்ளார். உட்டாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள ஏனோக் நகரத்தில் உள்ள ஒரு வீட்டில் இருந்து நீண்ட நாட்களாக யாரும் வெளியே வராததால் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் வந்து வீட்டில் சென்று பார்த்ததில் 5 சிறுவர்கள் உள்பட 8 பேர் … Read more

அலாஸ்காவில் இருந்து ஆஸ்திரேலியா வரை 13 ஆயிரம் கி.மீ. இடைவிடாமல் பறந்து உலக சாதனை படைத்த பறவை

சிட்னி, பறவைகள் சீதோஷ்ண நிலை காரணமாகவும், உணவு மற்றும் இனப்பெருக்கத்திற்காகவும் ஒவ்வொரு ஆண்டும் கண்டம் விட்டு கண்டம் தாண்டி வலசை செல்வது வழக்கம். தற்போது பூமியின் வட துருவ பகுதிகளில் கடும் பனிக்காலம் நிலவி வருவதால், அங்கிருந்து உலகின் பிற பகுதிகளுக்கு பறவைகள் இடம்பெயர்ந்து வருகின்றன. அந்த வகையில் வட அமெரிக்காவில் உள்ள அலாஸ்கா பகுதியில் இருந்து புறப்பட்ட ‘பார்-டெயில்ட் காட்விட்’ இனத்தைச் சேர்ந்த பறவை ஒன்று, 11 நாட்கள் இடைவிடாமல் மொத்தம் 13 ஆயிரத்து 560 … Read more

ரஷியாவின் போர் நிறுத்த அழைப்பை நிராகரித்தது உக்ரைன்

கீவ், உக்ரைன் மீது ரஷிய படைகள் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தாக்குதலை தொடங்கியது. போர் ஆரம்பித்து கிட்டத்தட்ட ஒரு ஆண்டை நெருங்கி விட்டது. ஆனாலும் இன்னும் சண்டை முடிவுக்கு வரவில்லை. உக்ரைனுக்கு அமெரிக்கா உள்ளிட்ட நட்பு நாடுகள் ஆயுதம் போன்ற உதவிகள் செய்து வருவதால் உக்ரைன் வீரர்களும் ரஷியாவை எதிர்த்து சளைக்காமல் போராடி வருகின்றனர். இந்தநிலையில் உக்ரைனில் ஆர்த்கோடக்ஸ் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் நாளை (சனிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி 36 மணி நேர போர்நிறுத்தத்தை ரஷிய அதிபர் … Read more

18 வயது முதல் 26 வயதுடைய இளைஞர்களுக்கு ஆணுறைகள் இலவசம் – பிரான்ஸ் அரசு

வாஷிங்டன், ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பிரான்சில் 18 வயது முதல் 26 வயதுடையவர்களுக்கு இலவசமாக ஆணுறைகள் வழங்கும் திட்டத்தை அந்த நாட்டு அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. பால்வினை நோய்களை பரவுவதை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் இந்த முடிவை பிரான்சு அரசு மேற்கொண்டுள்ளது. இது தொடர்பாக பிரான்ஸ் அரசின் செய்தி தொடர்பாளர் ஒலிவியர் வேரன் தனது ட்விட் பதிவில், “மருத்துவரின் பரிந்துரை சீட்டு இன்றி கருத்தடை சாதனங்களை இலவசமாக வழங்கும் திட்டத்தை பிரான்சு கொண்டு வந்து இருக்கிறது என்றார். மேலும் அவர் … Read more

சீனாவில் கொரோனா பலி கிடு…கிடு…| Corona victim in China…Kidu…

பீஜிங்: சீனாவில் கொரோனா பலிகள் தொடர்ந்து அதிகரித்து வருவது உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கம்யூனிஸ்ட் சீனாவில் இருந்து எப்போதுமே சரியான தகவல்கள் வெளிவராது. உலகை புரட்டிப்போட்ட கொரோனா சீனாவில் இருந்து தான் பரவியது. தற்போது அது சீனாவை மீண்டும் கலங்கடித்து வருகிறது. இதனால் உலக சுகாதார அமைப்பிற்கு தினசரி கொரோனா புள்ளி விவரங்கள் வழங்குவதை சீனா நிறுத்தியுள்ளது. டிசம்பரில் 22 கொரோனா இறப்புகளை மட்டுமே அறிவித்துள்ளது. ஆனால் பிரபல பாடகி சுலான்லான், நடிகர் கோங் ஜிண்டாங் போன்றோர் … Read more