பாலஸ்தீனியர் தாக்குதலில் மூன்று இஸ்ரேலியர்கள் பலி| Dinamalar

ஜெருசேலம் : ஜெருசேலம் நகரில், பாலஸ்தீனியர் ஒருவர் இரண்டு இஸ்ரேலியர்களை கத்தியால் குத்திக் கொன்றுவிட்டு தப்பிக்கையில் மற்றொரு இஸ்ரேலியர் மீது காரை மோதி கொன்றார். மேற்காசிய நாடான இஸ்ரேலின் ஜெருசேலம் நகரின் மேற்கு கரைப் பகுதியில் உள்ள குடியிருப்பில் நுழைந்த பாலஸ்தீனியர் ஒருவர், அங்கிருந்த இஸ்ரேலியர்களை கத்தியால் தாக்கினர். இதில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தாக்குதல் நடத்திய பாலஸ்தீனியர் அங்கிருந்த ஒரு காரை திருடி தப்பித்து சென்றார். வழியில் ஒரு இஸ்ரேலியர் மீது மோதினார். இதில் … Read more

நிலவை ஆராய அமெரிக்காவின் நாசா அனுப்பவுள்ள ஆர்டிமிஸ் ஒன் ராக்கெட்

நிலவை ஆராய அமெரிக்காவின் நாசா அனுப்பவுள்ள ஆர்டிமிஸ் ஒன் ராக்கெட் இன்று விண்ணில் ஏவப்படவுள்ளது. ஏற்கனவே இருமுறை ஆர்டிமிஸ் ஒன் ராக்கெட்டை ஏவும் முயற்சியில் பின்னடைவு ஏற்பட்ட நிலையில், இன்று புளோரிடாவில் இருந்து ராக்கெட்  விண்ணில் ஏவப்படுகிறது.  ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கான கவுண்ட் டவுன் ஏற்கெனவே தொடங்கியுள்ளது. Source link

48 ஆண்டுகளில் இரு மடங்காக அதிகரித்த உலக மக்கள் தொகை!| Dinamalar

நியூயார்க்: உலக மக்கள் தொகை 800 கோடியை தாண்டியுள்ளது. கடந்த 12 ஆண்டுகளில் மட்டும் மக்கள் தொகையில் 100 கோடி பேர் இணைந்துள்ளனர். கடந்த 1800களில் உலக மக்கள் தொகை ௧௦௦ கோடியை எட்டியது. இதைத்தொடர்ந்து 200 கோடியை எட்ட 100 ஆண்டுகளாகின.1974ல் 400 கோடியை எட்டிய மக்கள் தொகை, ௪௮ ஆண்டுகளில் இரண்டு மடங்குகளாக அதிகரித்துள்ளது. இதன்பின், மக்கள் தொகை இரட்டிப்பாகும் வாய்ப்பு இல்லை என்றே ஐ.நா., மக்கள் தொகை நிதி அமைப்பு தெரிவித்துள்ளது; அடுத்த … Read more

உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவுக்கு எதிராக தீர்மானம் – ஐ.நா. வாக்கெடுப்பில் இந்தியா பங்கேற்கவில்லை

நியூயார்க்: ஐ.நா. பொது சபை கூட்டத்தில் ரஷ்யாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானம் தொடர்பான வாக்கெடுப்பில் இந்தியா உட்பட 73 நாடுகள் பங்கேற்கவில்லை. கடந்த பிப்ரவரி இறுதியில் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தது. இரு நாடுகளுக்கும் இடையே கடந்த 9 மாதங்களாக போர் நீடித்து வருகிறது. இந்த சூழலில் உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யா சர்வதேசசட்ட விதிகளை மீறி செயல்பட்டிருப்பதாக குற்றம்சாட்டி ஐ.நா. பொது சபை கூட்டத்தில் நேற்று முன்தினம் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அமெரிக்கா … Read more

ஜி 20 தலைமையை ஏற்கும் இந்தியா வளரும் நாடுகளுக்குத் துணை நிற்கும் – பிரதமர் மோடி உறுதி!

டிசம்பர் 1 முதல் ஜி 20 கூட்டமைப்புக்குத் தலைமை ஏற்க உள்ள இந்தியா வளரும் நாடுகளின் கோரிக்கைகளுக்காக குரல் கொடுக்கும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்தோனேசியாவின் பாலித் தீவில் நடைபெற்றுவரும் ஜி 20 மாநாட்டின் இறுதியில் தலைமைப் பொறுப்பு இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. பொருளாதார வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு, உற்பத்திச் சங்கிலியில் கவனம், தொற்று நோய்கள், பருவநிலை மாற்றம் போன்ற சவால்களை எதிர்கொள்ளுதல் போன்றவற்றில் வளரும் நாடுகளுடன் இந்தியா தோளோடு தோள் கொடுத்து நிற்கும் என்று … Read more

ஜி-20 உச்சி மாநாட்டின்போது இரவு விருந்தை புறக்கணித்த ஜோ பைடன்

இந்தோனேசியாவில் ஜி-20 நாடுகளின் உச்சி மாநாட்டின்போது அளிக்கப்பட்ட இரவு விருந்தை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் புறக்கணித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. ஜோ பைடனை சந்தித்த கம்போடிய பிரதமர் ஹன் சென்னுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, ஜி-20 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்ற இரவு விருந்து மற்றும் அவர் பங்கேற்பதாக இருந்த நிகழ்ச்சியை தவிர்த்துவிட்டு ஹோட்டல் அறைக்கு திரும்பியதாக கூறப்படுகிறது. ஜோ பைடனின் இன்றைய நிகழ்ச்சிகள் திட்டமிட்டபடி நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர். Source link

800 ஆவது கோடியாக பிறந்த குழந்தைக்கு லியோனார்டோ என்று பெயர்..!

உலகின் மக்கள் தொகை 8 பில்லியனாக உயர்ந்துள்ளதாக ஐ.நா அறிவித்துள்ளது. இத்தாலியின் ரோம் நகரில் உள்ள சாண்டோ ஸ்பிரிட்டோ மருத்துவமனையில் விவியானா வாலண்டே என்பவருக்கு நவம்பர் 12 ஆம் தேதி பிறந்த குழந்தையின் மூலமாக இந்த எண்ணிக்கையை உலகம் எட்டியுள்ளது. 800 கோடி மக்கள் தொகை என்ற எண்ணிக்கையை எட்டிய அந்த குழந்தைக்கு லியோனார்டோ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. உலகின் மக்கள் தொகை உயர்ந்த போதும் இத்தாலியின் மக்கள் தொகை குறைந்து வருவதற்கு விவியானா வருத்தம் தெரிவித்துள்ளார். … Read more

எரிபொருள் விநியோகத்துக்கு கட்டுப்பாடு கூடாது: ஜி-20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி வலியுறுத்தல்

பாலி: இந்தோனேசியாவில் ஜி-20 உச்சி மாநாட்டுக்கு இடையே அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் உட்பட பல நாடுகளின் தலைவர்களை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேசினார். ஜி-20 மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, எரிபொருள் விநியோகத்துக்கு எந்தவித கட்டுப்பாடும் விதிக்ககூடாது என்று வலியுறுத்தினார். ஜி-20 அமைப்பில் அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், தென்கொரியா, மெக்சிகோ, ரஷ்யா, சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, … Read more

ரஷ்ய ஏவுகணைகள் போலாந்து மீது தாக்குதல்: 2 பேர் பலி| Dinamalar

மாஸ்கோ: உக்ரைன் மீது ரஷ்யா ஏவுகணை வீசிய சம்பவத்தில் அந்த ஏவுகணை போலாந்து நாட்டை தாக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன் மீது ரஷ்ய ராணுவம் கடந்த பிப்ரவரி மாதம் போரை தொடங்கி கடந்த 9 மாதங்களாக நடத்தி வருகிறது. இதில் கெர்சன், மரியுபோல் உள்ளிட்ட நகரங்களை ரஷிய படைகள் கைப்பற்றின. கெர்சன் நகரை மீட்டு உக்ரைன் படை கடுமையாக சண்டையிட்டு வந்தன. இந்தநிலையில் நேற்று ரஷ்ய ஏவுகணைகள் போலந்து மீது தாக்குதல் நடத்தியதாகவும், இதில் இரண்டு பேர் … Read more

நிலவை ஆராய நாசா அனுப்பவுள்ள ஆர்டிமிஸ் 1 ராக்கெட்டை விண்ணில் ஏவுவதற்கான கவுண்ட் டவுன் தொடங்கியது..!

நிலவை ஆராய அமெரிக்காவின் நாசா அனுப்பவுள்ள ஆர்டிமிஸ் ஒன் ராக்கெட், நாளை விண்ணில் ஏவப்படவுள்ளது. ஏற்கனவே இருமுறை ஆர்டிமிஸ் ஒன் ராக்கெட்டை ஏவும் முயற்சியில் பின்னடைவு ஏற்பட்ட நிலையில், புதன்கிழமை அதிகாலை சுமார் 1 மணியளவில், புளோரிடாவில் இருந்து ராக்கெட்டை விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டுள்ளது. சூறாவளியால், Orion விண்கலத்தை சுற்றியுள்ள RTV எனப்படும் மெல்லிய பொருள் சேதமடைந்துள்ளதா என விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வரும் நிலையில், அது சேதமடைந்திருப்பின், நவம்பர் 19 அல்லது 25-ம் தேதி ராக்கெட்டை … Read more