பாக். மசூதி குண்டுவெடிப்பில் உயிரிழப்பு 100 ஆக அதிகரிப்பு

பெஷாவர்: பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துன்கவா மாகாணத் தலைநகர் பெஷாவரில் பாதுகாப்பு மிகுந்த போலீஸ் லைன்ஸ் பகுதி உள்ளது. இங்குள்ள ஒரு மசூதியில் நேற்று முன்தினம் மதியம் தொழுகை நடைபெற்றது. இந்நிலையில் தொழுகையை இமாம் தொடங்கிய அடுத்த சில வினாடிகளில் முதல் வரிசை யில் இருந்த ஒருவர் தனது உடலில் பொருத்தியிருந்த சக்திவாய்ந்த வெடிகுண்டை வெடிக்கச்செய்தார். மதியம் 1.40 மணிக்கு நிகழ்ந்த இந்த குண்டுவெடிப்பில் மசூதியின் கூரை இடிந்து, தொழுகையில் ஈடுபட்டிருந்தவர் கள் மீது விழுந்தது. இதையடுத்து … Read more

அமெரிக்காவில் கருப்பின இளைஞரை தாக்கியதால் உயிரிழப்பு – 7 போலீஸார் பணியிடை நீக்கம்

வாஷிங்டன்: அமெரிக்காவில் கருப்பின இளைஞர் கொல்லப்பட்ட வழக்கில் 7 போலீஸார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர், 3 தீயணைப்பு வீரர்கள் டிஸ்மிஸ் செய்யப்பட்டனர். தாக்குதல் நடத்திய போலீஸார் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவின் டென்னசே மாகாணத்தை சேர்ந்த மெம்பிஸ் நகரில் டைரே நிக்கோலஸ்(29) என்ற கருப்பின இளைஞர் கடந்த ஜனவரி 7-ம் தேதி தனது காரை வீட்டிலிருந்து தாறுமாறாக ஓட்டிச்சென்றுள்ளார். அவரது வாகனத்தை வழிமறித்து நிறுத்திய போலீஸார் டைரே நிக்கோலஸை கண்மூடித்தனமாக தாக்கினர். முகத்தில் மிளகு … Read more

பாக்., மசூதி தற்கொலை படை தாக்குதலில் பலி எண்ணிக்கை 100 ஆக உயர்வு | Death toll rises to 100 in Pakistan mosque suicide attack

பெஷாவர் பாகிஸ்தான் மசூதியில், நேற்று முன்தினம் மதிய வேளை தொழுகையின்போது நடத்தப்பட்ட தற்கொலை படை தாக்குதலில் ௬௧ பேர் பலியாகி இருந்த நிலையில்,நேற்று பலி எண்ணிக்கை 100 ஆக உயர்ந்துள்ளது. நம் அண்டை நாடான பாகிஸ்தானில், வடமேற்கு பகுதியில் ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள பெஷாவர் நகரில், பல அடுக்கு போலீஸ் பாதுகாப்புடன் கூடிய ஒரு மசூதியில், நேற்று முன்தினம் மதிய வேளை தொழுகை நடைபெற்றது. இதில், ஏராளமான போலீசார், பாதுகாப்புப் படையினர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது, திடீரென … Read more

கனடாவில் ஹிந்து கோவில் மீது தாக்குதல்: இந்தியா கண்டனம் | Attack on Hindu temple in Canada: India condemns

டொரான்டோ, கனடாவில், காலிஸ்தான் ஆதரவாளர்களால் ஹிந்து கோவில் சேதப்படுத்தப்பட்டதுடன், இந்தியாவுக்கு எதிரான வாசகங்களும் எழுதி வைக்கப்பட்டது, அங்குள்ள இந்திய சமூகத்தினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. வட அமெரிக்க நாடான கனடாவில் பிராம்ப்டன் நகரில் கவுரி சங்கர் கோவில் அமைந்துள்ளது. இந்திய பாரம்பரியத்தின் அடையாளமாகத் திகழும் இக்கோவில் மீது, காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தி சேதப்படுத்தியதுடன், கோவில் சுவரில் இந்தியாவுக்கு எதிரான வாசகங்களையும் எழுதி உள்ளனர். இது, அங்குள்ள இந்திய சமூகத்தினர் மத்தியில் பதற்றத்தையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தி உள்ளது. … Read more

ஸ்பெயின் தீவுப்பகுதிகளில் சிக்கித் தவித்த 171 அகதிகள் பத்திரமாக மீட்பு..!

ஸ்பெயினின் தீவுப்பகுதிகளில் 3 படகுகளில் சிக்கித் தவித்த 171 அகதிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர். கேனரி தீவிற்கு ஒரு படகில் வந்த 55 பேரையும், ஃபூர்டெவென்ச்சுரா (Fuerteventura) தீவில் 2 படகுகளில் வந்த 116 பேரையும் ஸ்பெயின் கடலோர பாதுகாப்பு படையினர் மீட்டனர். கடும் குளிரில் சிக்கியவர்களுக்கு செஞ்சிலுவை சங்கத்தினர் மருத்துவ உதவி அளித்து தற்காலிக முகாம்களில் தங்க வைத்தனர். வடஅமெரிக்க நாடுகளிலிருந்து ஆபத்தான பயணம் மேற்கொண்டு அகதிகள் வருவதாகவும், ஜனவரி மாதத்தில் மட்டும் கனேரி தீவிற்கு 371 … Read more

இஸ்ரேல் துறைமுக கட்டுமான டெண்டரை பெற்றது அதானி குழுமம்| Adani Group wins Israel port construction tender

புதுடில்லி: அமெரிக்க முதலீட்டு நிறுவனம் அதானி குழுமத்தின் மீது குற்றச்சாட்டை வைத்துள்ள நிலையில், இஸ்ரேலின் முக்கிய துறைமுக கட்டுமான திட்டத்திற்கான டெண்டரை அதானி குழுமத்திற்கு அந்நாட்டு அரசு வழங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த முதலீட்டு நிறுவனமான ஹிண்டன்பரக் ரிசர்ச், என்ற நிறுவனம் தொழிலதிபர் அதானி குறித்து கடுமையான குற்றச்சாட்டுகளை கடந்த 24-ம் தேதி அறிக்கையாக வெளியிட்டது. இந்நிலையில் இஸ்ரேலில் ”ஹைபா” துறைமுக கட்டுமான மேம்பாட்டினை மேற்கொள்வதற்கான டெண்டரை அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அதானி குழுமத்திற்கு … Read more

”கூகுளின் பணி நீக்கத்தில் இது ஒரு ரகம்..” ஒருமாத பெண் குழந்தைக்கு புட்டி பால் புகட்டிக் கொண்டிருந்த போது பணிநீக்கம்..!

தனது ஒருமாத பெண் குழந்தைக்கு புட்டி பால் புகட்டிக் கொண்டிருந்த போது தான் கூகுள் நிறுவனத்திலிருந்து பணி நீக்கம் செய்யப்பட்டதற்கான இ-மெயில் செய்தியை தெரிந்துக் கொண்டேன் என்று சமூகவலைத்தளத்தில் கூகுள் ஊழியர் பகிர்ந்துள்ளார். பல்வேறு நிறுவனங்களில் ஆட்குறைப்பு நடவடிக்கைக்கு உள்ளானவர்கள், தங்களது பணிநீக்க அறிவிப்பை எவ்வாறு பெற்றார்கள் என்பதை சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில், அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரைச் சேர்ந்த நிக்கோலஸ் டுஃபாவ் என்ற கூகுள் சட்டப்பணியாளர், அதிகாலை 2 மணிக்கு பணிநீக்க செய்தியை அறிந்ததாக … Read more

அமெரிக்காவில் சுற்றுலா விசாவுக்கு விண்ணப்பித்த போல்சனாரோ – பின்னணி என்ன?

நியூயார்க்:பிரேசிலின் முன்னாள் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ ஆறு மாத கால அமெரிக்க சுற்றுலா விசாவிற்கு விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரேசிலில் அண்மையில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிபர் போல்சனரோ தோல்வியடைந்தார். முன்னாள் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா வெற்றி பெற்றார். இதையடுத்து, பிரேசிலின் புதிய அதிபராக லூயிஸ் பொறுப்பேற்றுக் கொண்டார். ஆனால், வாக்கு வித்தியாசம் குறைவாக இருந்ததால் தனது தோல்வியை ஏற்றுக்கொள்ளாத போல்சனேரோ தனது ஆதரவாளர்களுடன் அவ்வப்போது போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில், … Read more

பாகிஸ்தான் மசூதிக்குள் தற்கொலைப்படை தாக்குதல்; 93பேர் உயிரிழப்பு.!

பாகிஸ்தானின் அமைதியான வடமேற்கு பெஷாவர் நகரில் உள்ள உயர் பாதுகாப்பு மண்டலத்தில் நேற்று மதிய பிரார்த்தனையின் போது வழிபாட்டாளர்கள் நிரம்பியிருந்த மசூதிக்குள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது. தன்னைத்தானே வெடிக்கச் செய்ததாக சந்தேகிக்கப்படும் தற்கொலை குண்டுதாரியின் துண்டிக்கப்பட்ட தலையை மீட்பு அதிகாரிகள் இன்று மீட்டனர். தற்கொலைப்படை தாக்குதலில் இறந்தவர்களின் எண்ணிக்கை 93 ஆக உயர்ந்தது, மேலும் 221 பேர் பலத்த காயம் அடைந்தனர். இடிபாடுகளில் இருந்து மீதமுள்ள உடல்களை மீட்க மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்தாலும், போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். … Read more

பாகிஸ்தான் மசூதி குண்டுவெடிப்பு: இந்தியா கடும் கண்டனம்

புதுடெல்லி: பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் உள்ள மசூதி ஒன்றில் நேற்று நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பெஷாவர் நகரில் உள்ள மசூதி ஒன்றில் நேற்று நடைபெற்ற மதிய நேர தொழுகையின்போது நிகழ்ந்த தற்கொலைப் படைத் தாக்குதலில் 93 பேர் உயிரிழந்தனர். 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களில் பெரும்பாலானோர் காவல்துறை மற்றும் ராணுவத்தைச் சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகி உள்ளது. பாதுகாப்புப் படையினர் அதிகம் வசிக்கும் பகுதியில் உள்ள மசூதி என்பதால், … Read more