தென்மேற்கு ஜப்பானில், மோசமான வானிலையால் சரக்குக் கப்பல் மூழ்கிய விபத்தில் சிக்கி 2 பேர் உயிரிழப்பு..!

தென்மேற்கு ஜப்பானில், மோசமான வானிலையால் சரக்குக் கப்பல் மூழ்கிய விபத்தில் சிக்கி 2 பேர் Cந்தனர். ஜப்பானின் நாகசாகி மற்றும் தென் கொரியாவின் ஜெஜு தீவுக்கு இடையே சென்று கொண்டிருந்த கப்பலொன்று செவ்வாய்கிழமை அதிகாலை மூழ்கியது. கடலில் மூழ்கத் தொடங்கியதும், அபாயக் கட்டத்தில் இருப்பதாக கப்பலிலிருந்து சிக்னல் அனுப்பப்பட்டது. தகவலறிந்து விரைந்து வந்த தென்கொரிய மற்றும் ஜப்பான் கடலோரக் காவல் படையினர், கடும் குளிருக்கு மத்தியிலும் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். மொத்தம் இருந்த 22 ஊழியர்களில் 13 … Read more

அமெரிக்காவில் மீண்டும் சம்பவம்: சூப்பர் மார்க்கெட்டில் துப்பாக்கி சூடு; 3 பேர் பலி

வாஷிங்டன், அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் மான்டேரி பார்க் நகரில் கடந்த 21-ந் தேதி நடன பயிற்சி மையத்துக்குள் புகுந்து நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் 10 பேர் பலியாகினர்.இந்த பரபரப்பு அடங்குவதற்குள் கடந்த திங்கட்கிழமை கலிபோர்னியா, அயோவா மற்றும் இல்லினாய்ஸ் மாகாணங்களில் அடுத்தடுத்து நடந்த துப்பாக்கி சூடு சம்பவங்களில் 12 பேர் உயிரிழந்தனர். இந்த தொடர் துப்பாக்கி சூடு சம்பவங்களால் அமெரிக்காவே அதிர்ந்தது. இந்த நிலையில் வாஷிங்டன் மாகாணம் யாகிமா நகரில் உள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றில் நேற்று … Read more

பிலிப்பைன்சில் ராணுவ விமானம் வயலில் விழுந்து நொறுங்கியது – 2 விமானிகள் பலி

மணிலா, பிலிப்பைன்ஸ் நாட்டின் விமானப்படைக்கு சொந்தமான ‘மார்செட்டி எஸ்.எப். 260’ ரக விமானம், அந்த நாட்டின் படான் மாகாணத்தில் உள்ள பிலார் நகரில் இருந்து வழக்கமான பயிற்சிக்காக புறப்பட்டு சென்றது. விமானத்தில் 2 விமானிகள் இருந்தனர். இந்த விமானம் பிலார் நகருக்கு மேலே பறந்துகொண்டிருந்தபோது திடீரென விமானிகளின் கட்டுப்பாட்டை இழந்தது. அதை தொடர்ந்து அங்குள்ள வயல்வெளியில் விமானம் விழுந்து நொறுங்கியது. இந்த கோர விபத்தில் விமானிகள் 2 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்துக்கான காரணம் … Read more

ஜெர்மனியில் ஓடும் ரயிலில் கத்திக்குத்து – 2 பேர் பலி

ஜெர்மனியில் ஓடும் ரயிலில் இளைஞர் கத்தியால் குத்தியதில் இரண்டு பேர் உயிரிழந்தனர். ஹம்பர்க் – கீல் நகரங்களுக்கு இடையே சென்று கொண்டிருந்த ரயில், ப்ரோக்ஸ்டெட் நிலையத்தை நெருங்கியபோது, அங்கிருந்த பயணிகளைக் குறிவைத்து மர்மநபர் கத்தியால் சரமாரிக் குத்தினான். இதில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் பலர் காயமடைந்தனர். சம்பவ இடத்துக்குச் சென்ற போலீசார், தாக்குதல் நடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபரை மடக்கிப் பிடித்து கைது செய்து விசாரித்து வருகின்றனர். Source link

உலக அழிவை கணக்கிடும் 'டூம்ஸ்டே கடிகாரம்' – 90 வினாடிகள் மட்டுமே மீதம் இருப்பதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கை

வாஷிங்டன், கடந்த 1947-ம் ஆண்டு நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானிகள் மற்றும் பாதுகாப்பு சபை உறுப்பினர்களின் பங்களிப்புடன் ‘டூம்ஸ்டே கடிகாரம்’ உருவாக்கப்பட்டது. உலகில் நடக்கும் பருவநிலை மாற்றம், போர், அணுஆயுத ஆபத்து உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை வைத்து இந்த கடிகாரத்தின் நேரத்தை விஞ்ஞானிகள் மாற்றி அமைக்கின்றனர். அதன்படி நள்ளிரவு 12 மணியை இந்த கடிகாரம் தொட்டுவிட்டால் இந்த உலகம் அழிந்துவிடும் என்பது நம்பிக்கை. உலக அழிவிற்கான அபாயம் இருக்கும் சமயத்தில் இந்த கடிகாரத்தின் முள்ளானது 12 மணிக்கு … Read more

அமெரிக்க மாகாணத்தை புரட்டிப்போட்ட சூறாவளி.. மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் மக்கள் தவிப்பு..!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தை அதி பயங்கர சூறாவளி தாக்கியது. மணிக்கு 64 கிலோமீட்டர் வேகத்தில் சுழன்றடித்த சுழல் காற்றில் சிக்கி வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்கள், மின் கம்பங்கள் என அனைத்தும் துவம்சம் செய்யப்பட்டன. மரங்கள் முறிந்து விழுந்து சாலைகளை முடக்கின. பலத்த காற்றால், நெடுஞ்சாலயில் சென்று கொண்டிருந்த வாகனங்கள் சாலை தடுப்புகள் மீது மோதி விபத்துக்குள்ளாகின. வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்களின் மேற்கூறைகள் பல மைல் தொலைவுக்கு தூக்கி எறியப்பட்டன. மேலும், சூறாவளி காற்றில் சிக்கி மின் கம்பங்களும் … Read more

பிபிசி ஆவணப்படத்தில் பிரதமர் மோடி குறித்த சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம் பெற்றதற்கு அமெரிக்கா ஆட்சேபம்

பிபிசி ஆவணப்படத்தில் பிரதமர் மோடி குறித்த சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம் பெற்றதற்கு அமெரிக்கா ஆட்சேபம் தெரிவித்துள்ளது. இந்தியாவுடன் மதிப்பு மிக்க உறவை நாடுவதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.அதிபர் ஜோ பைடனின் நிர்வாக அதிகாரிகள் இந்திய அமெரிக்க உறவுகள் வலுவானநிலையில் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர். இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கும் பிபிசியின் ஆவணப்படத்துக்கு ஆதரவு அளிக்கவில்லை என்ற சூழலில் அமெரிக்காவும் பிபிசியின் ஆவணப்படத்தில் குஜராத் கலவரம் தொடர்பாக பிரதமர் மோடியை குற்றம் சாட்டியதை ஏற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  Source link

வடகொரிய தலைநகர் பியாங்யாங்கில் 5 நாட்களுக்கு முழு ஊரடங்கு

வடகொரிய தலைநகர் பியாங்யாங்கில் 5 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. சுவாச நோய் பாதிப்புகள் அதிகரித்து வருவதால் வரும் ஞாயிற்றுக்கிழமை வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அறிவித்துள்ள அந்நாட்டு அரசு, மக்கள் வீடுகளிலேயே இருக்கவும் உடல்வெப்பநிலை பரிசோதனை மேற்கொள்ளவும் உத்தரவிட்டுள்ளது. கொரோனா பரவலால் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக வடகொரிய அரசாங்கம் குறிப்பிடவில்லை. பியாங்யாங் தவிர மற்ற பகுதிகளில் ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதா என்ற தகவலும் வெளிவரவில்லை.  Source link

ஆப்கானிஸ்தானில் 15 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடும் குளிர்.. 158 பேர் உயிரிழப்பு..!

ஆப்கானிஸ்தானில் கடும் குளிர் நிலவி வருவதால் கடந்த 2 வாரத்தில் 158 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 15 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குளிர் அதிகமாக இருப்பதால் உயிரிழப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது. குளிரை எதிர்கொள்ள போதிய அளவில் அடுப்பு, நிலக்கரி, ஆடை, போர்வைகள் இல்லை எனக் கூறப்படும் நிலையில், தன்னார்வ தொண்டு நிறுவன பெண் பணியாளர்களுக்கு தலிபான் அரசு தடை விதித்திருப்பதால், நாட்டில் மனிதாபிமான உதவிகள் கிடைப்பதும் பாதிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் … Read more

லித்துவேனியாவிலிருந்து உக்ரைனுக்கு அனுப்பப்படும் டிரான்ஸ்பார்மர்

லித்துவேனியாவில், பல ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமலிருந்த ராட்சத டிரான்ஸ்பார்மர், கப்பல் மூலம் உக்ரைனுக்கு அனுப்பப்படுகிறது. உக்ரைனின் மின்சார கட்டமைப்பை குறிவைத்து ரஷ்ய படைகள் தாக்குவதால், லட்சக்கணக்கானோர் ஹீட்டர்களை பயன்படுத்த முடியாமல் மைனஸ் டிகிரி குளிரில் நடுங்கிவருகின்றனர். உக்ரைன் உள்ளிட்ட சோவியத் நாடுகளில் ஒரே மாதிரியான மின் கட்டமைப்பு உள்ளதால், லித்துவேனியாவில், 1980 ஆம் ஆண்டு வடிவமைக்கப்பட்டு பயன்பாட்டிலில்லாமலிருந்த 200 டன் டிரான்ஸ்பார்மர், பார்ட் பார்டாக பிரிக்கப்பட்டு உக்ரைனுக்கு அனுப்பப்படுகிறது. 18 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த டிரான்ஸ்பார்மர் மூலம் … Read more