இந்திய வம்சாவளியினருக்கு பிரிட்டன் மன்னர் கவுரவ விருது| British Kings Honorary Award for Indians of Indian Origin

லண்டன்-இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் அலோக் சர்மா உட்பட 30 பேர், ‘நைட்’ எனப்படும் பிரிட்டன் மன்னரின் கவுரவ விருதுக்கு தேர்வாகியுள்ளனர். ஐரோப்பிய நாடான பிரிட்டனில், சிறந்த சேவையாற்றுவோருக்கு, அரச குடும்பத்தின் சார்பில் ‘நைட் ‘ எனப்படும் உயரிய கவுரவ விருது வழங்கப்படுகிறது. நேற்று, 2023ம் ஆண்டுக்கான விருது பெறுவோர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த விருது, பிரிட்டன் மன்னராக மூன்றாம் சார்லஸ் பொறுப்பேற்ற பின் முதல் முறையாக வழங்கப்படுகிறது. இந்தப் பட்டியலில், 1,107 பேர் இடம்பெற்றுள்ளனர். … Read more

முன்னாள் போப் காலமானார்| The former Pope passed away

வாட்டிகன் சிட்டி-கத்தோலிக்க கிறிஸ்துவர்களின் தலைவரான, ‘போப்’ பதவியில் இருந்த ௧௬ம் பெனடிக்ட், ௯௫, வயது முதிர்வு மற்றும் உடல் நல பாதிப்பால் நேற்று காலமானார். கத்தோலிக்க கிறிஸ்துவர்களின் தலைவரான போப் பதவியில் ௨௦௦௫ முதல் ௨௦௧௩ வரை இருந்தவர், ஐரோப்பிய நாடான ஜெர்மனியைச் சேர்ந்த ௧௬ம் பெனடிக்ட். இவருடைய இயற்பெயர் ஜோசப் ராட்ஜிங்கர். கடந்த ௨௦௦௫ல் அப்போதைய போப் இரண்டாம் ஜான் பால் மறைவையடுத்து, இவர் போப்பாக பொறுப்பேற்றார். கடந்த ௨௦௧௩ பிப்ரவரியில் இவருக்கு எதிராக பல … Read more

துப்புரவு பணியாளர்கள் இல்லாததால் அலங்கோலமாக காட்சியளிக்கும் டுவிட்டர் அலுவலகம்

டுவிட்டர் நிறுவனத்தை பெரும் தொகை கொடுத்து வாங்கிய எலான் மஸ்க் அதன் அன்றாட நடவடிக்கைகளில் பல்வேறு அதிரடி மாற்றங்களை மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக நிறுவனத்தின் செலவினங்களை குறைப்பதற்காக அவர் எடுத்து வரும் நடவடிக்கைகள் தொடர்ந்து விமர்சனங்களுக்குள்ளாகி வருகின்றன. டுவிட்டரை வாங்கியதும் அதன் ஊழியர்களின் சரி பாதிக்கும் அதிகமானோரை பணிநீக்கம் செய்த எலான் மஸ்க், சான்பிரான்சிஸ்கோவில் டுவிட்டர் தலைமையகத்தில் பல்வேறு சிக்கன நடவடிக்கைகளில் மேற்கொண்டு வருகிறார்கள். இதனால் அதன் ஊழியர்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். இந்த நிலையில் … Read more

 புத்தாண்டு வந்த கதை | The story of the new year

புத்தாண்டு வந்த கதை ஆங்கில புத்தாண்டு (2023) இன்று பிறந்து உள்ளது. ‘கிரிகோரியன் காலண்டரை’ பின்பற்றும் உலகின் பெரும்பாலான நாடுகளில் ஆங்கில புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. ஆரம்ப காலத்தில் புழக்கத்தில் இருந்த ரோமானிய காலண்டரில் ஜனவரி, பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே, ஜூன், செப்டம்பர், அக்டோபர், நவம்பர், டிசம்பர் என பத்து மாதங்கள் ஒரு ஆண்டாக கணக்கிடப்பட்டது. ஆண்டின் தொடக்க நாளாக மார்ச் 1ம், இறுதி நாளாக ஏப்., 31ம் இருந்தது. கி.மு., 45ல் ரோமானிய தலைவர் ஜூலியஸ் … Read more

வட கொரியா மீண்டும் 3 ஏவுகணை சோதனைகளை நடத்தியதாக தென் கொரிய அதிபர் குற்றச்சாட்டு

சியோல், வட கொரியா தொடர் ஏவுகணை சோதனைகளை நடத்தி வரும் நிலையில், கொரிய தீபகற்பத்தில் பதற்றம் நிலவி வருகிறது. அண்மையில் கடந்த சில நாட்களுக்கு முன், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை வட கொரியா சோதனை செய்தது. இந்த நிலையில் பெயர் குறிப்பிடப்படாத 3 பாலிஸ்டிக் ஏவுகணைகளை கிழக்கு கடலில் வட கொரியா சோதனை செய்ததாக தென் கொரிய அதிபர் யூன் சுக் இயோல் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து பேசிய அவர், வட கொரியாவின் … Read more

சிரியாவில் எண்ணெய் வயல் தொழிலாளர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதலில் 12 பேர் உயிரிழப்பு

ஈராக் மற்றும் சிரியாவில் கடும் ஆதிக்கம் செலுத்தி வந்த ஐ.எஸ். பயங்கரவாதிகள் அமெரிக்க படைகளின் உதவியுடன் ஒடுக்கப்பட்டனர். இருநாடுகளிலும் ஐ.எஸ். பயங்கரவாதிகள் வசம் இருந்த அனைத்து பகுதிகளும் மீட்கப்பட்டு அவர்கள் விரட்டியடிக்கப்பட்டனர். ஆனால் சமீபகாலமாக ஈராக் மற்றும் சிரியாவில் மீண்டும் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் கை ஓங்கி வருகிறது. அப்பாவி பொதுமக்களை குறிவைத்து அடிக்கடி பயங்கரவாத தாக்குதல்களை அரங்கேற்றி வருகின்றனர். இந்த நிலையில் சிரியாவின் டெய்ர் அஸ் ஜோர் மாகாணத்தில் உள்ள எண்ணெய் வயலில் பணியாற்றும் தொழிலாளர்கள் பலர் … Read more

கொரோனா பரவல் தீவிரம் எதிரொலி; சீன அதிகாரிகளை அழைத்து உலக சுகாதார நிறுவனம் அவசர ஆலோசனை

சீனாவில் கொரோனா பரவல் தீவிரம் சீனாவின் உகான் நகரில் 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தோன்றிய கொரோனா வைரஸ் பெருந்தொற்று இந்த பூமிப்பந்தையே உருட்டிப்போட்டு விட்டது. ஆனால் சீனா ஆரம்பத்திலேயே விழித்துக்கொண்டு பொதுமுடக்கம் உள்ளிட்ட கடுமையான கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தியது. இதனால் உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட அந்த நாட்டில் கொரோனா கட்டுக்குள் இருந்தது. உலகமே பெரும் உயிரிழப்புகளை சந்தித்தாலும், சீனாவில் இறப்புகளும் கட்டுக்குள் இருந்தன. 2020, 2021 ஆகிய 2 ஆண்டுகள் உலகுக்கு அக்னி பரீட்சையாக … Read more

ஒரே நாளில் 3 ஏவுகணைகளை சோதித்து, அதிர வைத்த வடகொரியா

அணு ஆயுதங்களால் அச்சுறுத்தல் வடகொரியா தன்னிடம் இருக்கும் அணு ஆயுதங்களை கொண்டு பிராந்திய எதிரி நாடுகளான தென்கொரியா மற்றும் ஜப்பானை நீண்டகாலமாக அச்சுறுத்தி வருகிறது. இந்த விவகாரத்தில் தென்கொரியா மற்றும் ஜப்பானின் நெருங்கிய நட்பு நாடாக விளங்கும் அமெரிக்கா, வடகொரியா நேரடியாக எதிர்த்து வருகிறது. வடகொரியா தனது அணுஆயுதங்களை கைவிடுவதற்கு அந்த நாட்டின் மீது பொருளாதார தடைகளை விதிப்பது உள்ளிட்ட பல நடவடிக்கைகளை அமெரிக்கா உள்ளிட்ட 3 நாடுகளும் மேற்கொண்டு வருகின்றன. 70-க்கும் அதிகமான ஏவுகணைகள் இத்தகைய … Read more

பொலிவியாவில் பயங்கரவாத குற்றச்சாட்டில் எதிர்க்கட்சித் தலைவர் கைதானதை எதிர்த்து, அவரது ஆதரவாளர்கள் வன்முறை

பொலிவியா நாட்டில் எதிர்க்கட்சித் தலைவரும் சாண்டா குரூஸ் ஆளுநருமான லூயிஸ் பெர்னாண்டோ கமாச்சோ பயங்கரவாத குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அவரது ஆதரவாளர்கள் கார்களை எரித்து வன்முறையில் ஈடுபட்டனர். சாண்டா குரூஸில் நடைபெற்ற போராட்டத்தில் கட்டடங்கள் மீது தாக்குதல் நடத்திய போராட்டக்காரர்கள் நெடுஞ்சாலைகளைத் தடுத்து போக்குவரத்தை முடக்கினர். பல இடங்களில் டயர்களை எரித்ததுடன், போலீசார் மீது பட்டாசுகளை கொளுத்தி எரிந்ததால், போராட்டக்காரர்கள் மீது போலீசார் கண்ணீர் புகைகுண்டுகளை வீசினர். Source link