இந்திய இருமல் மருந்தை அருந்தி 18 குழந்தைகள் பலி: உஸ்பெகிஸ்தான் குற்றச்சாட்டு

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்தை அருந்தியதில் தங்கள் நாட்டைச் சேர்ந்த 18 குழந்தைகள் பலியானதாக உஸ்பெகிஸ்தான் அரசு குற்றஞ்சாட்டியுள்ளது. இது தொடர்பாக அந்நாட்டு சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியாவில் தயாரிக்கப்பட்ட Doc-1 Max என்ற இருமல் மருந்த உட்கொண்ட குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். இந்த மருந்து இந்தியாவின் நொய்டா நகரில் உள்ள மேரியான் பயோடெக் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த மருந்தை நாங்கள் ஆய்வுக்கூட பரிசோதனைக்கு உட்படுத்தியபோது அதில் எத்திலின் க்ளைக்கால் என்ற நச்சுப் பொருள் பயன்படுத்தப்பட்டிருப்பது உறுதி … Read more

கோவிட் மருந்துகளுக்குத் தட்டுப்பாடு.. இந்திய மருந்துகளை கள்ளச்சந்தையில் வாங்குவதில் சீனமக்கள் ஆர்வம்..!

சீனாவில் கொரோனா தொற்று வேகமாகப் பரவிவரும் சூழலில், அங்கு மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு, கள்ளச்சந்தையில் இந்திய மருந்துகளின் விற்பனை கூடியுள்ளது. சீனாவில் கோவிட் மருந்துகள் கிடுகிடுவென விலை உயர்ந்து வருவதால், இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட மலிவான மருந்துகளை கள்ளச்சந்தையில் வாங்க சீனர்கள் விரும்புகின்றனர். சீன அரசு நடப்பு ஆண்டில் இரண்டு கோவிட் தடுப்பு மருந்துகளை மட்டுமே அங்கீகரித்தது. ஃபைசர் நிறுவனத்தின் Paxlovid மற்றும் சீன நிறுவனத்தின் Azvudine, ஆகிய இந்த இரண்டு மருந்துகளும் சீனாவில் … Read more

விஷமாக மாறிய இந்திய இருமல் மருந்து… 18 குழந்தைகள் பலி!

Uzbekistan 18 children death : உஸ்பெகிஸ்தான் நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,”இந்தியாவின் நொய்டாவை சேர்ந்த மாரியோன் பயோடெக் நிறுவனம் தயாரித்த Doc-1 Max-1 Syrup இருமல் மருந்தை குடித்த 18 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். அந்த மருந்தை ஆய்வகத்தில் பரிசோதித்ததில் எதிலின் கிளைகோல்  (ethylene glycol) என்ற நச்சுப்பொருள் மருந்தின் தயாரிப்பில் பயன்படுத்தப்பட்டுள்ளது கண்டறியப்பட்டது. இந்த மருத்து, மருத்துவர்களின் பரிந்துரை இன்றி, வீட்டில் பெற்றோர்களால் குழந்தைகளுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. ஒன்று பெற்றோர்களாக இந்த மருந்தை வாங்கியிருக்க வேண்டும் … Read more

அமெரிக்காவில் வீசிய கடும் பனிபுயலால், பனிப்பாறையாக உறைந்த நயாகரா நீர்வீழ்ச்சி..!

அமெரிக்காவில் வீசிய கடும் பனிபுயலால், உலகப் புகழ் பெற்ற நயாகரா நீர்வீழ்ச்சி பனிப்பாறையாக உறைந்துள்ளது. வரலாறு காணாத அளவிற்கு வீசிய பனிப்புயல் காரணமாக அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்கள் ஸ்தம்பித்தன. குளிர்கால பனிப்புயலால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் முடங்கிய நிலையில், ஏரிகள், ஆறுகள் உறைந்துள்ளன. அமெரிக்கா – கனடாவின் எல்லையில் உள்ள நயாகரா நீர் வீழ்ச்சியின் ஒரு பகுதி முற்றிலும் பனிப் பாறையாக உறைந்துள்ளது. சில இடங்களில் மட்டும் பனிப்பாறைக்கு கீழ்ப்பகுதியில் இருந்து தண்ணீர் கொட்டுகிறது. Source … Read more

5 நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம்..!

சீனா, ஜப்பான், தென்கொரியா, ஹாங்காங், தாய்லாந்து மற்றும் சிங்கப்பூரில் மீண்டும் கோவிட் பரவல் அதிகரித்துள்ளதால் அங்கிருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு, விமான நிலையங்களில் கொரோனா பரிசோதனையை அடுத்த வாரம் முதல் கட்டாயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த இரண்டு நாட்களில் வெளிநாடுகளில் இருந்து திரும்பிய 6 ஆயிரத்துக்கும் அதிகமானோரை பரிசோதித்ததில் இதுவரை 39 பேருக்கு கோவிட் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனிடையே மத்திய சுகாதார அமைச்சர் மான்சுக் மாண்டவியா இன்று டெல்லி … Read more

நயாகரா நீர்வீழ்ச்சி உறைந்தது அமெரிக்காவில் தொடரும் பனி சூறாவளி| Niagara Falls is frozen by the ongoing snow storm in the United States

நியூயார்க்,-அமெரிக்காவில் வீசும் பனி சூறாவளி காரணமாக, உலகப் புகழ் பெற்ற நயாகரா நீர்வீழ்ச்சி பனிப்பாறையாக உறைந்தது. அமெரிக்காவில், கடந்த சில நாட்களாக கடும் பனி சூறாவளி வீசுகிறது. இதனால், நாடு முழுதும் பனிக்கட்டியால் உறைந்து கிடக்கிறது. இந்த கடும் சூறாவளிக்கு நேற்று வரை, 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால், மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டு அவதிப்படுகின்றனர். விமான சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஏரிகள், ஆறுகள் உறைந்து கிடக்கின்றன. இந்நிலையில், உலகப் புகழ் … Read more

பயங்கரவாதம் வேரோடு ஒழிக்கப்படும் வரை ஓயமாட்டோம்: ஐ.நா.வில் ருசிரா கம்போஜ் பேச்சு

நியூயார்க், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ஐ.நா.வுக்கான நிரந்தர இந்திய பிரதிநிதி ருசிரா கம்போஜ் இன்று பேசும்போது, உலக நாடுகள் தீவிர கவனத்தில் கொள்வதற்கு முன்பே தசாப்தங்களாக எல்லை கடந்த பயங்கரவாதத்தின் பயங்கரங்களை இந்தியா எதிர்கொண்டு வருகிறது. இதில் பல அப்பாவி உயிர்களை இழந்து விட்டோம். பூஜ்ய சகிப்பு தன்மையுடன் பயங்கரவாதத்திற்கு எதிராக நாங்கள் போராடி வருகிறோம். தொடர்ந்து போராடுவோம். எங்களது பிரதமர் குறிப்பிட்டது போன்று, பயங்கரவாதம் வேரோடு ஒழிக்கப்படும் வரை ஓயமாட்டோம். 2 … Read more

பாக்., மாஜி அமைச்சரின் மகனுக்கு மரண தண்டனை| Death sentence for son of former minister in Pak

லாகூர்,-பாகிஸ்தானில், மூன்று திருநங்கையரை சுட்டுக் கொன்ற வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் அமைச்சரின் மகனுக்கு, அந்நாட்டு நீதிமன்றம் நேற்று மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. நம் அண்டை நாடான பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண முன்னாள் அமைச்சர் அஜ்மல் சீமாவின் மகன் அஹமது பிலால் சீமா. இவர், ௨௦௦௮ல் சியால்கோட்டில் உள்ள பண்ணை வீட்டில் தன் நண்பர்களுக்கு விருந்து அளித்துள்ளார். இதில், நடனமாடுவதற்காக திருநங்கையர் மூன்று பேரை அழைத்து வந்துள்ளார். அப்போது, அவருடைய மற்றும், அவரது நண்பர்கள் விருப்பப்படி நடனமாடாததால், … Read more

நேபாளத்தில் 2 மணி நேர இடைவெளியில் அடுத்தடுத்து மூன்று முறை நிலநடுக்கம்

காத்மாண்டு, நேபாளத்தில் உள்ள 2 மணி நேர இடைவெளியில் அடுத்தடுத்து மூன்று முறை அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டது. பாக்லுங் மாவட்டத்தில் அடுத்தடுத்து மூன்று முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் இன்று அதிகாலை 1:23 மணி, 2:07 மணி மற்றும் 3:28 மணி அளவில் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் முறையே 4.7, 5.3 மற்றும் 4 என்ற அளவில் பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்பு அல்லது பொருட்சேதம் எதுவும் ஏற்பட்டதாக தகவல் வெளியாகவில்லை. தினத்தந்தி Related … Read more

பிலிப்பைன்சில் வெள்ளம்: பலியானோர் எண்ணிக்கை 29 ஆக உயர்வு

மணிலா, பிலிப்பைன்ஸ் நாட்டின் மத்திய மற்றும் தெற்கு பிராந்தியங்களில் கிறிஸ்துமஸ் தினத்தன்று பலத்த காற்றுடன் கனமழை கொட்டித் தீர்த்தது. இடைவிடாது கொட்டிய பேய் மழையால் அங்குள்ள பல நகரங்கள் வெள்ளக்காடாகின. குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ளம் புகுந்ததில் நூற்றுக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின. டஜன் கணக்கான வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. கனமழை, வெள்ளத்தால் மத்திய மற்றும் தெற்கு பிராந்தியங்களில் சுமார் 1 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளம் பாதித்த பகுதிகளில் சிக்கிய 45 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு … Read more