தைவானில் கட்டாய ராணுவ சேவை 4 மாதங்களில் இருந்து ஒரு வருடமாக நீட்டிப்பு

வரும் 2024-ஆம் ஆண்டு முதல், கட்டாய ராணுவ சேவையை நான்கு மாதங்களில் இருந்து ஒரு வருடமாக அதிகரிக்கவுள்ளதாக, தைவான் அரசு அறிவித்துள்ளது. ராணுவ, ராஜதந்திர மற்றும் பொருளாதார ரீதியில் சீனா அழுத்தம் கொடுத்து வரும் நிலையில், இந்த நடவடிக்கையை தைவான் எடுத்துள்ளது. அதிகரித்து வரும் சீனாவின் ராணுவ அச்சுறுத்தல்களை சமாளிக்க, தற்போதைய ராணுவ அமைப்புகள் திறனற்றதாகவும், போதுமானமானதாகவும் இல்லை என குறிப்பிட்ட தைவான் அதிபர் சாய் இங்-வென், அதனால் இந்த கடுமையான முடிவை எடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.  Source … Read more

ரொனால்டோவிற்கு அவரது காதலி ஜார்ஜினா புதிய ரோல்ஸ் ராய்ஸ் பரிசாக வழங்கியுள்ளார்..!

போர்ச்சுகல் நாட்டு நட்சத்திர கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவிற்கு, அவரது காதலி ஜார்ஜினா, விலை உயர்ந்த ரோல்ஸ் ராய்ஸ் காரை, கிறிஸ்துமஸ் பரிசாக அளித்த வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி, சுமார் 7 கோடி ரூபாய் மதிப்பிலான வெள்ளை நிற  Rolls-Royce Dawn convertible காரை, ஜார்ஜினா ரோட்ரிக்ஸ் பரிசாக அளித்து ரொனால்டோவை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். அவரது குழந்தைகளுக்கும் பரிசளித்த காட்சிகளை ஜார்ஜினா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். Source link

“போரில் இருந்து ராணுவத்தை உக்ரைன் விலக்கிக்கொள்ள வேண்டும். இல்லையேல்…” – ரஷ்யா எச்சரிக்கை

மாஸ்கோ: போரில் ஈடுபட்டு வரும் தனது ராணுவத்தை உக்ரைன் விலக்கிக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள ரஷ்யா, இல்லாவிட்டால் தாங்கள் அதைச் செய்யவாம் என எச்சரித்துள்ளது. கடந்த பிப்ரவரி 24ம் தேதி தொடங்கிய உக்ரைன் – ரஷ்ய போர், 10 மாதங்களுக்கும் மேலாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பலம் வாய்ந்த ரஷ்ய ராணுவத்தை எதிர்கொள்ள முடியாமல் உக்ரைன் ராணுவம் திணறி வருகிறது. இதன் காரணமாக, இந்தப் போரில் பல பகுதிகளை ரஷ்யாவிடம் உக்ரைன் இழந்துள்ளது. எனினும், அமெரிக்கா மற்றும் … Read more

வடகொரியாவின் ஆளில்லா விமானங்களை சுட்டு வீழ்த்திய தென்கொரியா

சியோல்: எல்லைத் தாண்டி வந்த வடகொரியாவின் ஆளில்லா விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக தென்கொரியா தெரிவித்துள்ளது. இதுகுறித்து தென்கொரிய ராணுவம் வெளியிட்ட அறிக்கையில், “திங்கட்கிழமை வடகொரியாவின் ஆளில்லா விமானங்கள் தென்கொரிய எல்லையைக் கடந்தன. அவற்றை நாங்கள் சுட்டு விழ்த்தினோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2017-ஆம் ஆண்டுக்குப் பிறகு, வடகொரியாவின் ஆளில்லா விமானங்கள், தென் கொரிய வான்வெளி எல்லையில் நுழைந்துள்ளது. இரு தினங்களுக்கு முன்னர்தான் எதிர்ப்புகளுக்கு மத்தியில் வடகொரியா இரு ஏவுகணை சோதனை நடத்தியது. இந்த நிலையில், வடகொரியாவின் ஆளில்லா விமானங்கள், … Read more

நியூயார்க்கை புரட்டி போடும் பனி பனிப்புயல்! இது வரை 50 பேர் பலி!

நியூயார்க்: இந்தியாவில் மக்கள் 5 டிகிரி வெப்பநிலையை தாங்க முடியாமல் நடுங்கும் நிலையில், -50 டிகிரி வெப்பநிலையில் அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தின் நிலை என்னவாக இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள். இந்த நேரத்தில் வட அமெரிக்காவின் பல பகுதிகளில் வானிலை மிக மிக மோசமாக ஆகி வருகிறது. மின்சாரம் இல்லாததால், ஹீட்டர் மற்றும் பிற சாதனங்களும் இயங்கவில்லை. மிகவும் நவீனமான மற்றும் நாகரீகமான நியூயார்க் நகரத்தின் பல இடங்களிலும் பனி பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.  நியூயார்க்கில் … Read more

இந்திய அரசின் மனிதாபிமான உதவிகள், ஆதரவுக்கு நன்றி: உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி

கீவ்: ஐ.நா.வில் இந்தியா அளித்த மனிதாபிமான உதவிகள் மற்றும் ஆதரவுக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நன்றி தெரிவித்துள்ளார். ஜி 20 நாடுகள் கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றுக் கொண்டுள்ளது. இந்த நிலையில் இதுகுறித்து பிரதமர் மோடி உக்ரைன் பிரதமர் ஜெலன்ஸ்கியின் தொலைபேசி வாயிலாக பேசினார். அப்போது தனது அமைதி திட்டத்திற்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று மோடி ஜெலன்ஸ்கியிடம் கோரிக்கை வைத்தார். மேலும் இந்த ஆண்டின் தொடக்கத்தில் போர் காரணமாக உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய … Read more

பாக்ஸிங் தினம் : 5 டிகிரி செல்சியஸ் குளிரில் நீச்சலடித்து மகிழ்ந்த ஆண்கள், பெண்கள்..!

செக் குடியரசின் பிரேக் நகரில் பாக்ஸிங் தினத்தையொட்டி உறைபனி ஆற்றில் ஆண்களும், பெண்களும் உற்சாகமாக நீச்சலடித்து மகிழ்ந்தனர். 1920 களில் அப்போதைய செக்கோஸ்லேவாக்கியாவில் குளிர்கால நீச்சலை பிரபலப்படுத்திய ஆல்பர்ட் நிகோடெமின் நினைவாக ஆண்டுதோறும் பாக்ஸிங் தின குளிர்கால நீச்சல் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த வருட போட்டியில், 5 டிகிரி செல்சியஸ் குளிரில், வல்டவா ஆற்றில் 100, 300 மற்றும் 750 மீட்டர் என மூன்று பிரிவுகளில் செக் குடியரசு, ஜெர்மனி, போலாந்து, இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவைச் … Read more

அமெரிக்காவில் வீசிய பனிப்புயல் எதிரொலி.. வீதிகளில் உறைந்து கிடக்கும் உடும்புகள்..!

அமெரிக்காவில் வீசிய கடும் பனி புயலின் தாக்கத்தால் உடும்புகள்,  உறைந்து தரையில் அசையாமல் கிடக்கின்றன. புளோரிடா தெருக்களில் உள்ள மரங்களில் வாழ்ந்த உடும்புகள் தரையில் விழுந்து கிடக்கின்றன. கை, கால்களை அவற்றால் அசைக்க முடியவில்லை. பனிப்புயலின் தாக்கமே இதற்கு காரணமாக கூறப்படுகிறது. விரைவில் பனிபுயலின் தாக்கம் குறைந்ததும், உடும்புகள் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பி விடும் என கூறப்படுகிறது. Source link

கொரோனா கட்டுப்பாடுகளால் 5ல்1 சீனர்கள் வேலையின்றி தவிப்பு..!

சீனாவில், கொரோனா கட்டுப்பாடுகளால் ஐந்தில் ஒரு சீனர்கள் வேலையின்றி தவித்து வருவதாக செய்தி வெளியாகி உள்ளது. சீன அதிபர் ஜி ஜின்பிங் தலைமையிலான அரசு விதித்துள்ள கடும் கட்டுப்பாடுகளால் புதிய வேலைவாய்ப்புகள் ஏதும் உருவாகாத சூழலாலும், லாக்டவுன் போன்ற காரணங்களாலும் 16 முதல் 24 வயதுக்குட்பட்ட 2 கோடி இளைஞர்கள் வேலை இல்லாமல் இருப்பதாக சி.என்.என் தெரிவித்துள்ளது. முன்னனி நிறுவனமான சியோமி, அண்மையில் 10 சதவீத ஊழியர்களை ஆட்குறைப்பு செய்துள்ளதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு … Read more