மக்கள் போராட்டம் தீவிரம் அடைந்ததால் கரோனா கட்டுப்பாடுகளை தளர்த்தியது சீனா

பெய்ஜிங்: சீனாவில் கரோனா வைரஸ் தொற்று மீண்டும் வேகமாக பரவி வருகிறது. நேற்று ஒரே நாளில் 36,061 பேருக்கு புதிதாக கரோனா தொற்று ஏற்பட்டது. இதைக் கட்டுப்படுத்த பல இடங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஜின்ஜியாங் மாகாணத்தில் உரும்கி நகரில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் கடந்த வாரம் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். கரோனா கட்டுப்பாடுகளால்தான் அவர்கள் வெளியேற முடியாமல் உயிரிழந்ததாக சமூக ஊடகங்களில் தகவல் பரவியது. இதையடுத்து சீனாவின் பல நகரங்களில் மக்கள் போராட்டத்தில் … Read more

ஆப்கானிஸ்தானில் பாதியில் நிறுத்தப்பட்ட 20 உள்கட்டமைப்பு திட்டங்களை மீண்டும் தொடர்கிறது இந்தியா

காபூல்: ஆப்கானிஸ்தானில் உள்நாட்டு போர் காரணமாக கைவிடப்பட்ட பணிகளை இந்தியா மீண்டும் தொடர இருப்பதாக தலிபான் அரசு அறிவித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். இதையடுத்து பாதுகாப்புக் கருதி, இந்திய தூதரகத்திலிருந்த அதிகாரிகளை இந்தியா திரும்ப அழைத்தது. இதையடுத்து, இரு நாடுகளுக்கு இடையிலான ராஜதந்திர உறவு தடைபட்டது. எனினும், மனிதாபிமான அடிப்படையில் உணவு மற்றும் மருத்துவ உதவிகளை ஆப்கானிஸ்தான் மக்களுக்கு இந்தியா வழங்கி வந்தது. இந்நிலையில், கடந்த ஜூன் மாதம் இந்தியா – … Read more

எலான் மஸ்கின் அடுத்த அதிரடி| Dinamalar

லண்டன்: எலான் மஸ்க் துணை நிறுவனராக உள்ள ‘நியுராலிங்க்’ நிறுவனம், மனித மூளையில் மிகச் சிறிய கம்ப்யூட்டரை பதிக்கும் சோதனை முயற்சியில், இன்னும் ஆறு மாதத்தில் இறங்க உள்ளதாக அறிவித்துள்ளது. சோதனை இந்நிறுவனம் நான்கு ஆண்டுகளுக்கு முன் துவங்கப்பட்டது. மனித உடலில் மிகச் சிறிய கம்ப்யூட்டர்களை பதிப்பதன் வாயிலாக, பாதிப்புக்குள்ளாகி இருக்கும் பாகங்களின் செயல்பாட்டை மீட்டெடுக்க முடியும் என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, மனித மூளையில் இந்த கம்ப்யூட்டரை பதிப்பதன் வாயிலாக, அவனது மூளையின் செயல்பாட்டை அந்த … Read more

இங்கிலாந்து அரச குடும்பத்தில் இனவெறி; ஆவணத் தொடர் ரெடி.!

இங்கிலாந்து இளவரசர் ஹாரி, ஆப்பிரிக்க வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்கரும், ஹாலிவுட் நடிகையுமான மேகன் மார்க்கல்லை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவரும் இங்கிலாந்து அரச குடும்பத்தில் சேர்ந்து வாழ்ந்தனர். பின்னர் திடீரென இங்கிலாந்து அரச குடும்பத்தின் இளவரசர், இளவரசி பதவிகளிலிருந்து விலகுவதாக அறிவித்தனர். அரச குடும்பத்தில் இருந்து விலகுவது குறித்து, அமெரிக்காவின் புகழ்பெற்ற தொலைக்காட்சி தொகுப்பாளர் ஓபரா வின்ப்ரேவுக்கு இருவரும் பேட்டி அளித்தனர். அப்போது மேகன் மார்க்கல் கூறும்போது, “நான் கர்ப்பமாக இருந்தபோது, பிறக்கப்போகும் குழந்தையின் நிறம் … Read more

சீனாவில் மக்கள் போராட்டம் எதிரொலி… ஊரடங்கை தளர்த்தியது அரசு

பீஜிங், உலக நாடுகளில் இரண்டரை ஆண்டுகளாக தீவிர அச்சுறுத்தலாக இருந்து வரும் கொரோனா பெருந்தொற்று முதன்முறையாக சீனாவில் உகான் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் கண்டறியப்பட்டது. அதன் பின்னர் உலக நாடுகளில் பல்வேறு அலைகளாக பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. எனினும், கடுமையான ஊரடங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளால் பிற நாடுகளை விட, பரவலை முன்பே சீனா கட்டுப்படுத்தி இருந்தது. இது சர்வதேச நாடுகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில், மீண்டும் சீனாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து … Read more

போலி டுவிட்டர் கணக்குகள் நீக்கம்; பின்தொடருபர்கள் எண்ணிக்கை குறையலாம் – எலான் மஸ்க் எச்சரிக்கை

சான் பிரான்சிஸ்கோ, டுவிட்டர் கணக்கு வைத்திருப்பவர்களை டுவிட்டரில் பின்தொடருபர்கள் எண்ணிக்கை குறைய வாய்ப்பு உள்ளதாக அதன் உரிமையாளர் எலான் மஸ்க் பதிவிட்டுள்ளார். தற்போது போலி டுவிட்டர் கணக்குகள் நீக்கப்பட்டு வருவதால் டுவிட்டரில் பின்தொடருபர்கள் எண்ணிக்கை குறையலாம் என்று தெரிவித்தார். Twitter is purging a lot of spam/scam accounts right now, so you may see your follower count drop — Elon Musk (@elonmusk) December 1, 2022 மேலும் டுவிட்டரில் … Read more

“ஒபாமாவிடம் இப்படி கேட்பீர்களா?” – செய்தியாளரிடம் நியூஸி. பிரதமர் ஜெசிந்தா ஆவேசம்

அக்லாந்து: பின்லாந்து பிரதமர் சன்னா மரின், நியூஸிலாந்துக்கு அரசியல் ரீதியாக பயணம் மேற்கொண்டிருக்கிறார். இதனைத் தொடர்ந்து, ஆக்லாந்தில் இன்று (வியாழக்கிழமை) பின்லாந்து பிரதமர் சன்னா மரின் மற்றும் நியூஸிலாந்து பிரதமர் ஜெசிகா இடையே நடந்த சந்திப்பில் காலநிலை மற்றம், உக்ரைன் போர், ஈரானில் பெண்களின் போராட்டம் குறித்து இருவரும் ஆலோசித்தனர். பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்றனர். அப்போது இருவரிடமும் செய்தியாளர் ஒருவர், ”நீங்கள் ஒரே பாலினம், ஒரே வயதை உடையவர்கள் என்பதால் சந்தித்துள்ளீர்கள் என்று … Read more

அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளின்டனுக்கு கொரோனா தொற்று உறுதி

வாஷிங்டன், அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளின்டன்(வயது 76) கொரோனா தொற்றல் பாதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், எனக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. எனக்கு லேசான அறிகுறிகள் இருந்தது, தற்போது நான் நன்றாக இருக்கிறேன். கொரோனா தடுப்பூசி மற்றும் பூஸ்டர் டோஸ் செலுத்தியதால் எனக்கு லேசான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே அனைவரும் தடுப்பூசி செலுத்தும்படி கேட்டுக்கொள்கிறேன். குறிப்பாக குளிர்கால மாதங்களில் வர உள்ளதால் தடுப்பூசி செலுத்தும் படி கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் … Read more

அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஜனநாயகக் கட்சி தலைவர் பதவிக்கு முதல்முறையாக கறுப்பின எம்.பி. தேர்வு!

வாஷிங்டன், அமெரிக்காவில் நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையில் (கீழ்சபை) மொத்தம் உள்ள 435 இடங்களுக்கும், செனட் சபையில் (மேல்சபை) 105 இடங்களில் 35 இடங்களுக்கும் கடந்த மாதம் 8-ந் தேதி தேர்தல் நடந்தது. அதில் ஜனாதிபதி ஜோ பைடனின் ஜனநாயகக் கட்சி செனட் சபையை கைப்பற்றியது. பிரதிநிதிகள் சபையில் குடியரசுக் கட்சியினர் மெலிதான பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றார்கள். (கீழ்சபை)பிரதிநிதிகள் சபையை குடியரசு கட்சி கைப்பற்றி விட்ட நிலையில், பிரதிநிதிகள் சபை சபாநாயகர் மற்றும் ஜனநாயக கட்சி தலைவர் பதவியில் … Read more

ஆப்கானிஸ்தான் பள்ளியில் குண்டுவெடிப்பு – உயிரிழப்பு எண்ணிக்கை 19 ஆக உயர்வு

காபுல், ஆப்கானிஸ்தானின் வடக்கு சமங்கன் மாகாண தலைநகரான அய்பக்கில் மதரசா பள்ளி ஒன்று உள்ளது. இங்கு, நேற்று நடந்த குண்டு வெடிப்பில் 16 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியாகினர். மேலும் பலர் பலத்த காயமடைந்தனர். இச்சம்பவத்துக்கு, எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை. இந்நிலையில் இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 24 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தினத்தந்தி Related Tags : … Read more