பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதியில் 5 சதவீத செலவினத்தை குறைத்துக் கொள்ளுங்கள்; இலங்கை மந்திரிகளுக்கு ரணில் விக்ரமசிங்கே உத்தரவு

இலங்கையில் கடந்த ஆண்டு தொடங்கிய பொருளாதார நெருக்கடி இன்னும் நீடித்து வருகிறது. இந்தநிலையில், மந்திரிசபை செய்தித்தொடர்பாளரும், போக்குவரத்து மந்திரியுமான பந்துல குணவர்த்தனே, நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:- இலங்கை கருவூலம் கடுமையான நிதி தட்டுப்பாட்டில் உள்ளது. அதனால், பட்ஜெட்டில் ஒவ்வொரு அமைச்சகத்துக்கும் ஒதுக்கப்பட்ட நிதியில் 5 சதவீத செலவினங்களை குறைத்துக் கொள்ளுமாறு மந்திரிகளுக்கு அதிபர் ரணில் விக்ரமசிங்கே உத்தரவிட்டுள்ளார். பொருளாதார நெருக்கடி, நாங்கள் எதிர்பார்த்ததை விட மோசமாக உள்ளது. இந்த ஆண்டின் முதல் சில மாதங்களில் … Read more

ராக்கெட் ஏவும் திட்டம் தோல்வி பிரிட்டன் விஞ்ஞானிகள் ஏமாற்றம்| British scientists are disappointed by the failure of the rocket launch project

லண்டன், ஐரோப்பிய நாடான பிரிட்டன் சார்பில் முதன்முறையாக விண்ணில் ஏவப்பட்ட செயற்கைக்கோள் ராக்கெட் திட்டம் தோல்வியில் முடிந்ததால், அந்த நாட்டு விஞ்ஞானிகள் அதிர்ச்சி அடைந்தனர். பிரிட்டன் தயாரிக்கும் செயற்கைக்கோள்கள் வெளிநாட்டு விண்வெளி நிலையங்கள் வாயிலாக விண்ணில் செலுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், பிரிட்டன் முதன்முறையாக விண்வெளிக்கு ராக்கெட்டை அனுப்பும் நடவடிக்கையில் இறங்கியது. இதற்காக, ‘விர்ஜின் ஆர்பிட்’ நிறுவனம் சார்பில் ‘போயிங் 747’ என்ற விமானத்தில் 70 அடி உயர ‘லாஞ்சர்- ஒன்’ என்ற ராக்கெட்டை பொருத்தி, அதை ஒன்பது … Read more

அமெரிக்க விண்வெளி நிறுவனம் நாசாவில் இந்தியருக்கு முக்கிய பதவி

இவர் தலைநகர் வாஷிங்டனில் உள்ள நாசா தலைமையகத்தில் தொழில்நுட்ப கொள்கை மற்றும் திட்டங்களில் நாசாவின் நிர்வாகி பில் நெல்சனின் முதன்மை ஆலோசகராக பணியாற்றுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்வெளி பொறியியலில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டம் பெற்றவரான ஏசி சரனியா நாசாவில் இணைவதற்கு முன்பு, சான்றிதழ் பெற்ற தனியார் விண்வெளி நிறுவனமான ரோபோடிக்ஸ் நிறுவனத்தில் தயாரிப்பு மூலோபாயத்தின் துணைத்தலைவராக பணியாற்றியுள்ளார். இது தவிர விண்வெளி தொழில்நுட்பம் தொடர்பான பல்வேறு முக்கிய பொறுப்புகளை அவர் வகித்துள்ளார். தினத்தந்தி Related Tags … Read more

அமெரிக்க விண்வெளி நிறுவனம் நாசாவில் இந்தியருக்கு முக்கிய பதவி

இவர் தலைநகர் வாஷிங்டனில் உள்ள நாசா தலைமையகத்தில் தொழில்நுட்ப கொள்கை மற்றும் திட்டங்களில் நாசாவின் நிர்வாகி பில் நெல்சனின் முதன்மை ஆலோசகராக பணியாற்றுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்வெளி பொறியியலில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டம் பெற்றவரான ஏசி சரனியா நாசாவில் இணைவதற்கு முன்பு, சான்றிதழ் பெற்ற தனியார் விண்வெளி நிறுவனமான ரோபோடிக்ஸ் நிறுவனத்தில் தயாரிப்பு மூலோபாயத்தின் துணைத்தலைவராக பணியாற்றியுள்ளார். இது தவிர விண்வெளி தொழில்நுட்பம் தொடர்பான பல்வேறு முக்கிய பொறுப்புகளை அவர் வகித்துள்ளார். தினத்தந்தி Related Tags … Read more

அமெரிக்காவில் அமேசான் விற்பனை நிலையத்தில் கர்ப்பிணி சுட்டுக்கொலை

அமெரிக்காவின் மின்னசோட்டா மாகாணம் லேக்வில்லே பகுதியில் அமேசான் விற்பனை நிலையம் உள்ளது. இங்குள்ள வாகன நிறுத்தத்தில் ஒரு கார் நீண்ட நேரம் நின்று கொண்டிருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த நிறுவன ஊழியர்கள் அந்த காரின் அருகே சென்று பார்த்தபோது காருக்குள் கர்ப்பிணி ஒருவர் துப்பாக்கி குண்டு காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனை பார்த்ததும் அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். எனினும் டாக்டர்கள் அறுவை … Read more

நாசாவில் இந்திய வம்சாவளி நிபுணர் உயர்பதவியில் நியமனம்| Appointed to senior post of Indian-origin specialist at NASA

வாஷிங்டன்: நாசாவின் புதிய தலைமை தொழில்நுட்ப நிபுணராக இந்திய வம்சாவளியை சேர்ந்த விண்வெளித் துறை நிபுணர் ஏசி சரனியா நியமிக்கப்பட்டுள்ளார். அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா தலைமையகத்தில் தொழில்நுட்ப கொள்கை மற்றும் திட்டங்களில் நாசாவின் நிர்வாகி பில் நெல்சன் உள்ளார். இவருக்கு ஆலோசகராகவும் தொழில்நுட்ப நிபுணராகவும், இந்திய வம்சாவளி விண்வெளியைச் சேர்ந்த ஏ.சி. சரணியா நியமிக்கப்படடுள்ளார். இவர் விண்வெளி பொறியியலில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டம் பெற்றார். நாசாவில் இணைவதற்கு முன்பு, சான்றிதழ் பெற்ற தனியார் விண்வெளி … Read more

ஹஜ் பயணம் மேற்கொள்வோர் குறித்த எண்ணிக்கை கட்டுப்பாடுகளை நீக்கியது சவூதி அரேபிய அரசு..!

மெக்காவுக்கு  ஹஜ் பயணம் மேற்கொள்வோர் குறித்த எண்ணிக்கை கட்டுப்பாடுகளை சவூதி அரேபிய அரசு அறிவித்துள்ளது. கடந்த 3 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக  ஹஜ் பயணிகள் வருகைக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது. தற்போது அந்த தடையை விலக்கி கொள்வதாக சவூதி அரேபியா அரசு அறிவித்துள்ளது. இந்த ஆண்டு ஹஜ் யாத்ரீகர்களின் வருகை எண்ணிக்கையில் எந்த தடையும் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.   Source link

இந்தோனேஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்| Powerful earthquake in Indonesia

ஜகார்த்தா, கிழக்காசிய நாடான இந்தோனேஷியாவில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது; இது, ரிக்டர் அளவில் 7.6 ஆக பதிவானது. இதனால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு, பின் விலக்கிக் கொள்ளப்பட்டது. இந்தோனேஷியாவின் கிழக்கு கடல் பகுதியில் நேற்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோளில் 7.6 ஆக பதிவானது. இதையடுத்து தனிம்பர் தீவில் உள்ள இரண்டு பள்ளி கட்டடங்களும், 15 வீடுகளும் சேதமடைந்தன. அதில் ஒரு வீடு பலத்த சேதமடைந்ததில் ஒருவர் படுகாயமடைந்தார். நில … Read more

இந்தோனேஷியாவில் நேரிட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கை வாபஸ்!

இந்தோனேஷியாவில் நேரிட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால்  சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு பின்னர் திரும்ப பெறப்பட்டது.  தனிம்பார் பகுதியில் பூமிக்கடியே 97 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம், ரிக்டர் அளவு கோலில் 7 புள்ளி 7 ஆக பதிவானதாக ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் ஆஸ்திரேலியாவின் டார்வின் பகுதியிலும்  உணரப்பட்டதாக அங்கிருந்து தகவல்கள் தெரிவிக்கின்றன. Source link