இந்திய அணி 219 ரன்னுக்கு ஆல்அவுட்| Dinamalar

கிறைஸ்ட்சர்ச்: நியூசிலாந்து அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 219 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. வாஷிங்டன் சுந்தர் அரைசதம் அடித்தார். நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் நியூசிலாந்து வென்றது. ஹாமில்டனில் நடந்த 2வது போட்டி மழையால் பாதியில் கைவிடப்பட்டது. இந்நிலையில் இன்று (நவ.,30) கிறைஸ்ட்சர்ச் நகரில் மூன்றாவது மற்றும் கடைசி போட்டி நடக்கிறது. இதில் ‛டாஸ்’ வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் வில்லியம்சன் … Read more

FIFA திட்டப் பணிகளில் 500 புலம் பெயர்ந்த தொழிலாளிகள் இறந்தனர்: ஒப்புக்கொண்ட கத்தார்

நியூடெல்லி: உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஃபீபா உலகக்கோப்பை போட்டி உலகம் முழுவதும் பார்க்கப்பட்டு வரும் நிலையில், தங்கள் நாட்டின் மீதான மிகப் பெரிய குற்றச்சாட்டை கத்தார் ஒப்புக்கொண்டுள்ளது. கத்தார் உலகக் கோப்பை போட்டிகளை பலரும் விமர்சிப்பதும், சர்ச்சைகளை எழுப்புவதும், விளையாட்டுப் போட்டிகள் தொடர்பானது மட்டுமே இல்லை, இந்த எதிர்ப்பு, ஆடுகளத்திற்கு வெளியே மனித உரிமை மீறல்கள் மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை கத்தார் நடத்திய மற்றும் கையாண்ட முறை ஆகியவற்றிற்கான விமர்சனங்களால் கத்தார் நாடு பல்வேறு குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு வந்தது.  இந்த நிலையில், … Read more

48,500 ஆண்டு பழமையான ஜாம்பி வைரஸ்: ஐரோப்பிய விஞ்ஞானி கண்டுபிடிப்பு| Dinamalar

பிரிட்டன்: 48 ஆயிரத்து 500 ஆண்டுகளுக்கு பழமையான ”ஜாம்பி வைரஸ்”- ஐ ஐரோப்பிய விஞ்ஞானி கண்டுபிடித்துள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ், பரவி மக்களின் இயல்பு வாழ்க்கையை முடக்கியது. இப்போது தான் கொரோனாவுக்கு பின், இயல்பு வாழக்கை திரும்பி வருகிறது. இந்நிலையில் உலகில் இருக்கும் பல்வேறு வைரஸ்கள் குறித்த ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதற்கிடையே பல ஆண்டுகளாக ஏரியின் கீழ் உறைந்த கிடந்த 10க்கும் மேற்பட்ட வைரஸ்களை கண்டறிந்துள்ளனர். இதையடுத்து, ரஷ்யாவில் சைபீரியா பகுதியில் … Read more

இந்தியா-சீனா இடையில் 2023ல் போர் நிச்சயம்! காரணங்களை அடுக்கும் அரசியல் நிபுணர்கள்

India China Tension: 2023ம் ஆண்டாக மலரவிருக்கும் புத்தாண்டில் சீனா, இந்தியாவுக்கு சவாலாக இருக்கும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர். அமெரிக்கா மீது கோபம் கொண்டுள்ள சீனா, இந்தியாவுடன் போர் தொடுத்து தனது பலத்தை காட்டலாம் என்று கூறப்படுகிறது. 2023ல் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே போர் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் ஏன் அதிகம்? இது தொடர்பான விரிவான அலசல் இது. கொரோனாவின் தாக்கத்திற்கு பிறகு உலகை உலுக்கும் விஷயமாக ரஷ்யா – உக்ரைன் போர்  இந்த ஆண்டு தொடங்கியது. 2022ஆம் ஆண்டை … Read more

தன்பாலின திருமண சட்ட மசோதா அமெரிக்க செனட் சபையில் நிறைவேற்றம்: பைடன் பெருமிதம்

வாஷிங்டன்: அமெரிக்காவில் ஒரே பாலினத்தைச் சேர்ந்தவர்கள் திருமணம் செய்து கொள்வதற்கு கூட்டாட்சிப் பாதுகாப்பை வழங்குவதற்கான மசோதா செனட் சபையிலும் வெற்றிகரமாக நிறைவேறியது. அமெரிக்காவில் கருக்கலைப்புக்கு தடை விதித்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பு பெரும் விவாதத்தையும், சர்ச்சையும் ஏற்படுத்தியது. இந்த நிலையில், தன்பாலின திருமண அங்கீகாரத்தை உச்ச நீதிமன்றம் ரத்து செய்யும் என்ற அச்சம் நிலவியது. இதனைத் தவிர்க்கும் வகையில் அமெரிக்க பிரதிநிதிகள் சபை, ஒரே பாலினத்தைச் சேர்ந்தவர்கள் திருமணம் செய்து கொள்வதற்கு கூட்டாட்சிப் பாதுகாப்பை வழங்குவதற்கான மசோதா … Read more

பெலராரஸ் வெளியுறவு அமைச்சரின் கொலைக்கு காரணம் நோவிசோக் விஷமா? தீவிர விசாரணை

Russia-Ukraine War: பெலாரஸ் வெளியுறவு அமைச்சர் விளாடிமிர் மெக்கி மரண விவகாரத்தில், ரஷ்யா மீது சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன. விளாடிமிர் மெக்கியின் இறுதிச்சடங்கில் கலந்துக் கொண்ட பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ, அவருக்கு அஞ்சலி செலுத்தியதுடன், விஷப் பரிசோதனை மேற்கொள்ள உத்தரவிட்டார். பெலாரஸ் தலைநகர் மின்ஸ்கில் செவ்வாய்க்கிழமையன்று (நவம்பர் 29) மெக்கியின் இறுதிச்சடங்குகள் நடந்து முடிந்தன. 64 வயதான முன்னாள் உளவாளி மற்றும் இராஜதந்திரி விளாடிமிர் மெக்கி ஒரு ஸ்டிங் ஆபரேஷனில் கொல்லப்பட்டதாக தி டெய்லி மெயிலின் அறிக்கை … Read more

வாரத்துக்கு 4 நாட்கள் வேலை திட்டம்: இங்கிலாந்து நிறுவனங்கள் அறிமுகம்

லண்டன்: இங்கிலாந்தில் உள்ள 100 நிறுவனங்கள் வாரத்துக்கு 4 நாட்கள் மட்டுமே வேலை செய்யும் திட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளன. இதுகுறித்து “தி கார்டியன்” நாளிதழில் கூறியிருப்பதாவது. முந்தைய பொருளாதார சூழலில் வாரத்துக்கு 5 நாட்கள் வேலை முறை என்பது சோர்வையும், சலிப்பையும் ஏற்படுத்துவதாக கூறி 4 நாட்கள் மட்டுமே வேலைபார்க்கும் திட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து அதனை நடைமுறைப்படுத்தக் கோரி தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில், முதல் கட்டமாக 100 நிறுவனங்கள் வாரத்துக்கு 4 நாட்கள் மட்டுமே … Read more

சீன அரசுக்கு எதிராக டேட்டிங் செயலிகள், டெலிகிராம் மூலம் தகவல் பரப்பும் போராட்டக்காரர்கள்

பெய்ஜிங்: சீனாவில் கரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிராக போராடும் மக்கள் டேட்டிங் செயலி, டெலிகிராம் மூலம் தகவல் பரப்புகின்றனர். சீனாவில் கரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிராக மக்கள் கடந்த வெள்ளிக்கிழமை முதல் போராட்டத்தில் குதித்துள்ளனர். ஊரடங்கு காரணமாகத்தான், உரும்கி நகரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டபோது, 10 பேர் வெளியேற முடியாமல் இறந்தனர் என சமூக ஊடகத்தில் தகவல் பரவியது. இது போராட்டத்தை தீவிரப்படுத்தியது. மக்கள் போராட்டம் தொடர்பான தகவல்கள், வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பரவுவதை தடுக்க … Read more

பாக்., ராணுவ தளபதியாக ஆசிம் முனீர் பொறுப்பேற்பு| Dinamalar

இஸ்லாமாபாத் பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதியாக ஆசிம் முனீர்அஹமது நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். நம் அண்டை நாடான பாகிஸ்தான் ராணுவத்தின் தலைமை தளபதியாக தொடர்ந்து இரண்டு முறை பதவி வகித்த கமார் ஜாவேத் பஜ்வாவின் பதவிக் காலம் நேற்றுடன் நிறைவடைந்தது. இதையடுத்து, தலைநகர் இஸ்லாமாபாதில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், பாகிஸ்தான் ராணுவத்தின் தலைமை தளபதியாக ஆசிம் முனீர் அஹமது பொறுப்பேற்றுக் கொண்டார். அவரிடம் பொறுப்புகளை ஒப்படைத்து பஜ்வா விடைபெற்றார். ஐ.எஸ்.ஐ., எனப்படும் பாக்., உளவு அமைப்பின் தலைவராக … Read more

எலியை கொன்றவர் மீது போலீசார் வழக்கு| Dinamalar

பதாயு, :எலி வாலில் கல்லைக்கட்டி சாக்கடையில் வீசி கொன்ற இளைஞர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். உத்தர பிரதேசத்தை சேர்ந்த மனோஜ் குமார் என்ற இளைஞர், எலி வாலில் கல்லைக் கட்டி அதை சாக்கடையில் வீசி எறிந்தார். கல்லின் கனத்தினால் மேலே வரமுடியாமல் எலி தண்ணீரில் மூழ்கி துடிதுடித்து இறந்தது. இறந்த எலியை சாக்கடையில் இருந்து எடுத்த விலங்குகள் நல ஆர்வலர் விகேந்திர சர்மா, போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து, மனோஜ் குமார் மீது போலீசார் … Read more