ஆஸ்திரேலியாவில் குடியிருப்பு பகுதிக்கு தவழ்ந்து வந்த கடல்நாயை கண்டு வியப்படைந்த மக்கள்!

ஆஸ்திரேலியாவில் கடல் நாய் ஒன்று, குடியிருப்பு பகுதிக்கு வந்ததைக் கண்டு மக்கள் வியப்படைந்தனர். கடலோர நகரமான பாயிண்ட் லான்ஸ்டேலில், கடல் நாய் ஒன்று தரையில் தவழ்ந்தபடி வந்துள்ளது. அங்குள்ள சேவை மையத்தை நோக்கி கடல் நாய் தவழ்ந்து சென்று கொண்டிருந்ததைக் காண, மக்கள் திரண்டனர். கடல் நாயின் பாதுகாப்புக்காக அங்கு சென்ற போலீசார், அது மீண்டும் பத்திரமாக கடலுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக தெரிவித்தனர். Source link

சீட் பெல்ட் அணியவில்லை… பிரதமர் ரிஷி சுனக்கிற்கு அபராதம் விதித்த காவல் துறை!

வீடியோ எடுப்பதற்காக சீட் பெல்ட் அணியாமல் காரில் சென்ற பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்கிற்கு வெள்ளிக்கிழமை அபராதம் விதித்து பிரிட்டன் காவல்துறை உத்தரவிட்டுள்ளது. முன்னதாக வடமேற்கு இங்கிலாந்தில் வாகனம் ஓட்டும்போது வீடியோ எடுக்க தனது சீட் பெல்ட்டை கழற்றியதற்காக இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் மன்னிப்பு கேட்டுள்ளார். அதே நேரத்தில், இது குறித்து விசாரணை நடத்தி வருவதாக உள்ளூர் போலீஸ் படை வெள்ளிக்கிழமை கூறியது. குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு 100 பிரிட்டிஷ் பவுண்டுகள் அபராதம் விதிக்கப்படலாம் என்று … Read more

ஆஸ்திரேலியாவில் சுறாக்கள் தாக்கியதில் இறந்து மிதந்து கொண்டிருந்த டால்பின் கரையில் இருந்து வெளியேற்றம்..!

ஆஸ்திரேலியாவில் சுறாக்கள் தாக்கியதில் டால்பின் உயிரிழந்தது. சிட்னியில் உள்ள மேன்லி கடற்கரைக்கு அருகே டால்பினை சுறாக்கள் தாக்கியுள்ளன. பின்னர் கரை ஒதுங்கி மிதந்துகொண்டிருந்த டால்பினை அங்கிருந்த நீச்சல் வீரர்கள் கரையில் இருந்து வெளியேற்றினர். இன்று காலை இரண்டரை மீட்டர் உயரமுள்ள 3 சுறாக்களை பார்த்ததாக நீச்சல் வீரர்கள் கூறியதால், மேன்லி மற்றும் அதனை சுற்றியுள்ள அனைத்து கடற்கரைகளும் மூடப்பட்டுள்ளன.  Source link

’எதிரி’ விவகாரம்: ஈரான் – தென்கொரியா மோதல்

தெஹ்ரான்: தென் கொரிய அதிபர் யூன் சுக்-யோல் ஈரானை ஐக்கிய அரபு எமிரேட்ஸின் “எதிரி” என்று அழைத்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. பாதுகாப்பு அச்சுறுத்தலுக்காக தென்கொரியாவை சேர்ந்த பாதுகாப்புப் படையினர் அமீரகத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் தென்கொரிய பாதுகாப்புப் படையினரிடம் நிகழ்வு ஒன்றில், தென்கொரிய அதிபர் யூன் சு- யோல் பேசும்போது, ”ஐக்கிய அரபு எமிரேட்ஸின் எதிரி ஈரான். மிகவும் அச்சுறுத்தல் கொண்ட நாடு ஈரான். எங்களின் எதிரி வடகொரியா.” என்று தெரிவித்தார். இந்த நிலையில் … Read more

நியூசிலாந்து புதிய பிரதமராக கிறிஸ் ஹிப்கின்ஸ் நியமிக்கப்பட உள்ளதாக அறிவிப்பு

நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்னுக்குப் பதிலாக தற்போது அமைச்சராக உள்ள கிறிஸ் ஹிப்கின்ஸ் பிரதமராக நியமிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆட்சியில் உள்ள தொழிலாளர் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜெசிந்த ஆர்டெர்னுக்குப் பதிலாக தொழிலாளர் கட்சியின் தலைவராகவும், புதிய பிரதமராகவும் ஹிப்கின்ஸ் நியமிக்கப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கிறிஸ் ஹிப்கின்ஸின் வேட்புமனுவை அங்கீகரிக்கவும், கட்சி தலைவராக உறுதி செய்வதற்கான கூட்டம் நாளை கூட உள்ளது. ஹிப்கின்ஸ் தற்போது காவல்துறை, கல்வி மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சராக உள்ளார். Source link

புடின் உயிருடன் இருக்கிறாரா இல்லையா… பரபரப்பை கிளப்பியுள்ள ஜெலென்ஸ்கி!

Vladimir Putin’s Health Update: ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே நடந்து வரும் போர் 11 மாதங்களாக நீடிக்கும் நிலையில், விளாடிமிர் புடின் குறித்து உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி அதிர்ச்சியுட்டும் கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். புடின் உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்பது உறுதியாகத் தெரியவில்லை என்று வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கூறினார். புடினின் இருப்பு குறித்து ஜெலென்ஸ்கி கேள்வி எழுப்பியுள்ளார். சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெற்ற உலகப் பொருளாதார மாநாட்டின் நிகழ்ச்சியில் காணொளிக் காட்சி மூலம் உரையாற்றும் போது … Read more

நிதி நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு இலங்கைக்கு உதவி: ஜெய்சங்கர்| Help Sri Lanka recover from financial crisis: Jaishankar

கொழும்பு: ”பொருளாதார நெருக்கடியிலிருந்து இலங்கை மீள்வதற்கு ஐ.எம்.எப்., எனப்படும், சர்வதேச நாணய நிதியம் கடன் அளிக்க முன்வந்துள்ளது; இதற்கு இந்தியா தான் முதன் முதலாக உத்தரவாதம் அளித்தது,” என, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார். இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. இந்நிலையில், இரண்டு நாள் பயணமாக இலங்கை வந்த, இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், இலங்கையின் அதிபர் ரணில் விக்ரமசிங்கே, பிரதமர் தினேஷ் குணவர்த்தனே, வெளியுறவுத் துறை அமைச்சர் அலி சாப்ரி ஆகியோரை சந்தித்துப் … Read more

மைக்ரோசாப்ட், அமேசானை தொடர்ந்து, கூகுளின் தாய் நிறுவனத்திலும் ஆட்குறைப்பு நடவடிக்கை

கூகுளின் தாய் நிறுவனமான ஆல்ஃபாபெட், 12 ஆயிரம் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யவிருப்பதாக அதன் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார். உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களான ட்விட்டர், மெட்டா, அமேஸான் தொடர்ந்து கூகுள் நிறுவனமும் அதன் மொத்த பணியாளர்களில், செயல்திறன் சரியில்லாத 6 சதவீத ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவெடுத்திருக்கிறது. செலவுகளை மறுசீரமைப்பு செய்யும் நோக்கத்துடனும், புதிய திட்டங்களுக்கான முன்னெடுப்பிற்காகவும் பணி நீக்க நடவடிக்கைகள் மேற்கொண்டதாகவும், தலைமை நிர்வாக அதிகாரியாக இதற்கு முழுப்பொறுப்பேற்பதாகவும் பணியாளர்களுக்கு அனுப்பிய … Read more

ஐநா.சபை குழுவினர் தாலிபன் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை… பெண்களுக்கு மறுக்கப்படும் உரிமைகளைத் திரும்ப வழங்கும்படி கோரிக்கை

ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு மறுக்கப்பட்ட கல்வி,வேலை மற்றும் கலாசார உரிமைகளை மீண்டும் வழங்க வேண்டும் என்று தாலிபன் தலைவர்களுடன் ஐநா.சபை அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. ஐநா.துணைப் பொதுச் செயலாளர் அமீனா முகமது தலைமையிலான குழு ஒன்று காபூலுக்குச் சென்றுள்ளது.அக்குழுவினர் தாலிபன் தலைவர்களுடன் பேச்சுவார்த்தையை நடத்தியதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசுகையில் தங்கள் பேச்சுவார்த்தை மூலம் பெண்களுக்கு எதிராக உள்ள சில தடைகள் நீக்கப்படும் என்று நம்பிக்கைத் தெரிவித்தனர். Source link