சீனாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்ததால் மருத்துவமனைகள், மயானங்கள் நிரம்பி வருகின்றன..!

சீனாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் மருத்துவமனைகள், தகனக்கூடங்கள் நிரம்பி வருவதாக கூறப்படுகிறது. பெய்ஜிங் மக்கள் தொகையில் 70 சதவீதத்திற்கும் அதிமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதால் லட்சக்கணக்கான மக்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர். பொதுமுடக்கம் மற்றும் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதில் இருந்து கடந்த சில நாட்களாக தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. சீனாவில் மொத்த மக்களில் 60 சதவீதத்திற்கும் அதிகமானோர் அதாவது பூமியின் மக்கள் தொகையில் 10 சதவீதத்தினர் அடுத்த 90 நாட்களில் தொற்றால் பாதிக்கப்படுவார்கள் எனவும், உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் … Read more

Omicron: சீனாவில் மீண்டும் ஒமிக்ரான் கோவிட் பீதி! இந்தியாவிலும் பரவும் கொரோனா பதற்றம்

Corona Updates: அண்டை நாடான சீனாவில் கொரோனா வழக்குகள் அதிகரித்துள்ளது. கொரோனாவின் தாயகமான சீனாவில் இருந்து மீண்டும் ஒருமுறை இந்த வைரஸ் இந்தியாவிற்கு வராமல் இருக்க சிறப்பு வியூகத்தை வகுத்து பணியை தொடங்கியுள்ளது இந்திய அரசு. சீனாவில் மீண்டும் கொரோனா பாதிப்புகள் வெடித்ததை அடுத்து, இந்திய அரசும் உஷார் நிலையில் உள்ளது. சீனா உள்ளிட்ட 5 நாடுகளில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதைக் கண்டு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனுடன், மாநிலங்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது மத்திய அரசு. கொரோனா … Read more

மீண்டும் தீவிரமடையும் கரோனா பரவல் – சீனாவின் பொருளாதார வளர்ச்சி 2.7% ஆக குறையும் என உலக வங்கி தகவல்

பெய்ஜிங்: நடப்பு ஆண்டில் சீனாவின் வளர்ச்சி பாதியாகக் குறையும் என்று உலக வங்கித் தெரிவித்துள்ளது. கடந்த ஜூன் மாதம் உலக வங்கி சீனாவின் வளர்ச்சி தொடர்பான கணிப்பை வெளியிட்டது. அதில், நடப்பு ஆண்டில் சீனாவின் வளர்ச்சி 4.6 சதவீதமாக இருக்கும் என்று தெரிவித்திருந்தது. இந்நிலையில், தற்போது அதை 2.7 சதவீதமாகக் குறைத்துள்ளது. 2023-ல் சீனாவின் வளர்ச்சி 8.1 சதவீதமாக இருக்கும்என்று முன்பு உலக வங்கி குறிப்பிட்டிருந்தது. தற்போது அதை 4.3 சதவீதமாகக் குறைத்துள்ளது. சீனாவின் தீவிர ஊரடங்குக் … Read more

சீனா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் வேகமாக பரவுகிறது கரோனா – இந்தியாவில் மரபணு பரிசோதனை நடத்த மத்திய அரசு உத்தரவு

புதுடெல்லி/பெய்ஜிங்: சீனா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் மீண்டும் அதிவேகமாக கரோனா வைரஸ் பரவுகிறது. இது தொடர்பாக மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. 2019 இறுதியில் சீனாவின் வூஹான் பகுதியில் கரோனா வைரஸ் பரவல் கண்டறியப்பட்டது. அங்கிருந்து 2020-ம் ஆண்டு தொடக்கத்தில் உலகம் முழுவதும் வைரஸ் பரவியது. அடுத்தடுத்து கரோனா அலைகள் உருவாகி, உலக நாடுகளை அச்சுறுத்தின. எனினும், கடந்த ஓராண்டாக இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் கரோனா வைரஸ் பரவல் … Read more

பதில் சொல்லாத எலான் மஸ்க்| Dinamalar

புதுடில்லி: ‘டுவிட்டர்’ நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி பதவியிலிருந்து விலகுவது குறித்து, எலான் மஸ்க் நடத்திய வாக்கெடுப்பில், அவர் பதவி விலகுவதற்கு ஆதரவாக, பெரும்பான்மையானவர்கள் வாக்களித்துள்ளனர். வாக்கெடுப்பு டுவிட்டர் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பை தொடர்ந்து வகிக்கவா அல்லது வேண்டாமா என்பது குறித்து, தன்னை பின்பற்றும் 12.2 கோடி பேரிடம், வாக்கெடுப்பு ஒன்றை நடத்தினார், அந்நிறுவனத்தின் புதிய தலைவரான எலான் மஸ்க்.மேலும், இந்த வாக்கெடுப்பின் முடிவுக்கு கட்டுப்படுவதாகவும் அவர் உறுதி கூறிஇருந்தார்.வாக்கெடுப்பு முடிவடைந்த நிலையில், அவர் பொறுப்பிலிருந்து விலகலாம் … Read more

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் சக்திவாய்ந்த நடுக்கம்| Dinamalar

வாஷிங்டன், :அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் சகதிவாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் வடக்கு பகுதியில் ஹம்போல்ட் கவுன்டி பகுதியில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவாகி உள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலநடுக்கம் 16.1 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. இதனால் அப்பகுதியில் கட்டடங்கள் குலுங்கின. அங்கு குடியிருந்து வந்த ஆயிரக்கணக்கானோர் வீடுகளில் மின் வினியோகம் துண்டிக்கப்பட்டது. தவிர வீடுகளின் ஜன்னல்கள் … Read more

ஆப்கானிஸ்தான் | பல்கலைக்கழகங்களில் பயில மாணவிகளுக்கு தடை விதித்தது தலிபான்

காபூல்: ஆப்கானிஸ்தானில் பல்கலைக்கழகங்களில் பெண்கள் படிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு தலிபான்கள் மீண்டும் ஆட்சியை கைப்பற்றியுள்ள நிலையில், அங்கு பெண்களுக்கு எதிராக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. தலிபான்களின் ஓராண்டு ஆட்சியில் அடிப்படைவாதம் தலைதூக்கி, பெண்களின் உரிமைகள் முழுமையாகப் பறிக்கப்பட்டுள்ளன. புர்கா அணியாமல் வெளியே செல்லும் பெண்களின் தலை துண்டிக்கப்படுகிறது. நெயில் பாலிஷ் செய்தால் விரல்கள் வெட்டப்படுகின்றன. வேறு ஆண்களுடன் பேசினால் பொது இடத்தில் பெண்கள் கல்லெறிந்து கொல்லப்படுகின்றனர். முந்தைய ஆட்சியில் அலுவலக பணிக்குச் … Read more

மீ டூ மூலமாக 80 பெண்கள் ஹார்வி வெய்ன்ஸ்டீன் மீதான பாலியல் புகார் உறுதி

மீ டூ மூலமாக பாலியல் புகாருக்கு உள்ளான பிரபல ஆங்கில சினிமா தயாரிப்பாளர் ஹார்வி வெய்ன்ஸ்டீன் மீதான குற்றச்சாட்டுகளை, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நீதிமன்றம் உறுதிப்படுத்தியது. ஷேக்ஸ்பியரின் காதல் உள்ளிட்ட புகழ்பெற்ற ஏராளமான திரைப்படங்களை தயாரித்தவரான அமெரிக்காவின் ஹார்வி வெய்ன்ஸ்டீனுக்கு எதிராக, 2017ம் ஆண்டில் சுமார் 80 பெண்கள் பாலியல் புகார்களை தெரிவித்திருந்தனர். இதில், 2 பெண்கள் அளித்த புகாரில், 70 வயதான ஹார்விக்கு 23 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு, தற்போது சிறையில் உள்ளார். இந்நிலையில், 5 … Read more

பிரிட்டன் மன்னர் படத்துடன் புதிய கரன்சிகள் அறிமுகம்| Dinamalar

லண்டன்,:பிரிட்டனின் புதிய மன்னர் மூன்றாம் சார்லஸ் படத்துடன் கூடிய புதிய கரன்சிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இது, ௨௦௨௪ல் புழக்கத்துக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடான பிரிட்டனின் நீண்ட கால ராணியாக இருந்த இரண்டாம் எலிசபெத் சமீபத்தில் மரணமடைந்தார். இதையடுத்து அவருடைய மகன் சார்லஸ், ௭௪, நாட்டின் மன்னராக பொறுப்பேற்றார். பிரிட்டனில் உள்ள கரன்சி நோட்டுகளில், அரசாளும் மன்னர் அல்லது ராணியின் படம் இடம் பெறும். இதன்படி, நீண்டகாலமாக இரண்டாம் எலிசபெத்தின் படங்களுடன் கூடிய கரன்சிகளே பயன்படுத்தப்பட்டு … Read more

ரஷியாவில் எரிவாயு பைப்லைனில் வெடிப்பு: 3 பேர் பலி

மாஸ்கோ, ரஷியாவில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு இயற்கை எரிவாயு கொண்டு செல்லும் பைப்லைனில் வெடித்து சிதறியது. எரிவாயு பைப்லைன் வெடித்ததில் 3 பேர் பலியாகினர். பைப்லைனில் வெடிப்பு ஏற்பட்ட போதும் ஐரோப்பிய நாடுகளுக்கான ஏற்றுமதியில் பாதிப்பு எதுவும் இல்லை என்று ரஷிய அதிகாரிகள் தெரிவித்தனர். ரஷியாவின் சுவஷியா பிராந்தியத்தில் உள்ள பைப்லைனில் பழுது பார்க்கும் பணி நடைபெற்ற போது இந்த வெடி விபத்து ஏற்பட்டதாக ரஷிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. தினத்தந்தி Related Tags : ரஷியா பைப் … Read more