ஜன.1, 2009-ல் இருந்து பிறந்தவர்களுக்கு புகைப்பிடிக்க வாழ்நாள் தடை: நியூசிலாந்து அதிரடி சட்டம்

வெலிங்டன்: நியூசிலாந்து இளைஞர்களை புகைப்பிடிக்கும் பழக்கத்திலிருந்து விடுவிப்பதற்கான புதிய தனித்துவமானதும், அதிரடியானதுமான சட்டத்தை நியூசிலாந்து அறிமுகப்படுத்தி உள்ளது. 2025-ம் ஆண்டுக்குள் நியூசிலாந்தை புகைப்பிடிக்காத நாடாக மாற்ற பல்வேறு நடவடிக்கைகளை பிரதமர் ஜெசிந்தா தலைமையிலான அரசு எடுத்து வருகிறது. அதன் ஓர் அங்கமாக நியூசிலாந்து செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் புதிய சட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அந்தப் புதிய சட்டம்படி ஜனவரி 1, 2009 அன்று அல்லது அதற்குப் பிறகு பிறந்த எவருக்கும் புகையிலைப் பொருட்கள் விற்க முடியாது. இதன்படி, சிகரெட் வாங்குவதற்கான … Read more

கார் விபத்தில் காயமடைந்தார் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஆண்ட்ரூ பிளின்டாஃப்

லண்டனில் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி படப்பிடிப்பின்போது நிகழ்ந்த கார் விபத்தில், இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஆண்ட்ரூ பிளின்டாஃப் காயமடைந்தார். உடனடியாக மீட்கப்பட்ட அவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருவதாகவும், ஆண்ட்ரூ பிளின்டாஃப் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் அளவிற்கு காயம் ஏற்படவில்லை எனவும் மருத்துவர்கள் தெரிவித்ததாக பிரிட்டிஷ் செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. Source link

இந்திய – சீன எல்லையில் பதற்றத்தை தணிக்க ஐ.நா வேண்டுகோள்

இந்திய – சீன எல்லையில் பதற்றத்தை தணிக்கும்படி, இரு நாடுகளுக்கும் ஐ.நா. வேண்டுகோள் விடுத்துள்ளது. அருணாச்சல் பிரதேசத்தின் தவாங் பகுதியில், அத்துமீறி நுழைய முயன்ற சீன ராணுவ வீரர்களை, இந்திய ராணுவ வீரர்கள் தடுத்து நிறுத்தியதால், இருதரப்புக்கும் இடையே மோதல் வெடித்தது. இந்நிலையில் இந்த மோதல் குறித்து கருத்து தெரிவித்த ஐ.நா.பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்ரெஸின் செய்தித்தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் , இந்திய – சீன எல்லையில் பதற்றம் அதிகரிக்காதவாறு, இருநாடுகளும் செயல்படுமாறு, கேட்டுக்கொண்டார். Source link

ரஷ்ய ட்ரோன் தாக்குதலில் உக்ரைன் தலைநகர் கீவ்வில் 2 கட்டடங்கள் சேதம்..!

ரஷ்ய ட்ரோன் தாக்குதலில், உக்ரைன் தலைநகர் கீவ்வில் இரண்டு நிர்வாக கட்டடங்கள் சேதமடைந்ததாக, கீவ் மேயர் விட்டலி க்லிட்ச்கோ தெரிவித்தார். எனினும் ரஷ்யா ஏவிய 10 ஷாஹெட் ட்ரோன்களை, உக்ரைன் எல்லையில் நிலைநிறுத்தப்பட்டுள்ள வான் பாதுகாப்பு அமைப்புகள் சுட்டு வீழ்த்தியதாகவும், ஷெவ் சென் கிவ்ஸ்கி மாவட்டத்தில், பல்கலைக்கழகங்கள், காட்சிக்கூடங்கள் மற்றும் உணவகங்களில் குண்டுவெடிப்பு நிகழ்ந்ததாகவும் கீவ் மேயர் கூறினார். ரஷ்யாவின் இந்த தாக்குதலில் குடியிருப்புக்கட்டடம் ஒன்றும் தீப்பற்றி எரிந்ததாகவும் கீவ் மேயர் விட்டலி க்லிட்ச்கோ தெரிவித்துள்ளார். Source … Read more

செவ்வாய் கிரக தூசிப் புயலின் ஒலி வடிவம்: ரோவரின் பதிவால் நாசா மகிழ்ச்சி

வாஷிங்டன்: செவ்வாய் கோளில் ஏற்பட்ட தூசிப் புயல் காற்றின் ஒலியை நாசா அனுப்பிய ரோவர் விண்கலம் பதிவுச் செய்துள்ளது. இது நாசா விஞ்ஞானிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. செவ்வாய் கிரகத்திற்கு ரோவர் என்ற விண்கலத்தை அனுப்பி அங்கு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது நாசா. இந்த ரோவர் விண்கலம்தான் தற்போது சிவப்பு கோள் என்று அழைக்கப்படும் செவ்வாய் கோளில் (இக்கிரகத்தில் அதிக அளவில் தூசிப் புயல்கள் ஏற்படும்) ஏற்பட்ட தூசிப் புயலின் ஒலியை தனது மைக்ரோபோனில் பதிவுச் செய்து, அதன் … Read more

பனி உறைந்த ஏரிக்குள் விழுந்து பலியான சிறுவர்கள்.. காப்பாற்ற முயன்று உயிர்தியாகம் செய்த 10 வயது சிறுவனுக்கு ஹீரோ அந்தஸ்து!

இங்கிலாந்தில் பனி உறைந்த ஏரிக்கு அருகே விளையாடிக்கொண்டிருந்த 4 சிறுவர்கள் ஏரிக்குள் விழுந்து மூழ்கியபோது அவர்களை காப்பாற்ற முயன்று உயிரிழந்த 10 வயது சிறுவனுக்கு ஹீரோ அந்தஸ்து கிடைத்துள்ளது. பர்மிங்ஹாம் அருகே சோலிஹல் என்னும் இடத்தில் உள்ள பாப்ஸ் மில்ஸ் ஏரியில்  சிறுவர்கள் சிலர் விளையாட சென்றுள்ளனர் அப்போது  உறைந்த பனிக்குள் தவறி விழுந்த 3 சிறாரை காப்பாற்ற 10 வயது நிறைந்த ஜாக்ஜான்சன் என்ற சிறுவன் துணிச்சலுடன் ஏரிக்குள் இறங்கியுள்ளான். இதில் அவன் உள்ளிட்ட 4 … Read more

இந்திய – சீன எல்லையில் பதற்றம் தணிக்கப்பட வேண்டும்: ஐ.நா

நியூயார்க்: தவாங் பகுதியில் நிகழ்ந்த மோதலை அடுத்து, இந்திய – சீன எல்லையில் பதற்றம் தணிக்கப்பட வேண்டும் என்று ஐ.நா வலியுறுத்தியுள்ளது. அருணாச்சலப் பிரதேச எல்லையில் உள்ள தவாங் பகுதிக்குள் கடந்த 9-ம் தேதி நுழைய முயன்ற சீன துருப்புகளை இந்திய ராணுவம் விரட்டி அடித்தது. அப்போது இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இரு தரப்பும் கம்புகளைக் கொண்டு தாக்குதலில் ஈடுபட்டனர். இந்திய ராணுவ வீரர்களின் தொடர் தாக்குதலை அடுத்து, சீன துருப்புகள் பின்வாங்கிச் சென்றன. … Read more

பிரிஸ்பேன் நடந்த துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு துக்கம் அனுசரிக்கும் விதமாக, நீல நிறத்தில் ஒளிரவிடப்பட்ட முக்கிய கட்டடங்கள்

ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு துக்கம் அனுசரிக்கும் விதமாக, முக்கிய கட்டடங்கள் நீல நிறத்தில் ஒளிரவிடப்பட்டன. கடந்த திங்கட்கிழமை, காணாமல் போன நபர் குறித்து விசாரிக்கச்சென்ற போலீசார் மீது ஆயுதமேந்திய மர்மநபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 2 காவலர்களும், அலன் டேர் என்ற நபரும் உயிரிழந்தனர். உடனடியாக அப்பகுதியை சுற்றிவளைத்த போலீசார், துப்பாக்கிச்சூடு நடத்திய மூவரையும் சுட்டுக் கொன்றனர். இந்நிலையில், பிரிஸ்பேனில் உயிரிழந்தவர்களுக்கு துக்கம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. Source link

நியூசிலாந்தில் சிகரெட் புகைக்க வாழ்நாள் தடை| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் ஆக்லாந்து: நியூசிலாந்து நாட்டில் புகைப்பிடிக்கும் பழக்கத்தை நாட்டு மக்களிடம் குறைத்து 2025க்குள் புகைப்பிடிக்காத நாடாக மாற்ற சிகரெட் வாங்குவதற்கும், புகைப்பதற்கும் வாழ்நாள் தடை விதித்துள்ளது அந்நாட்டு அரசு. 2025ம் ஆண்டுக்குள் நியூசிலாந்தை புகைப்பிடிக்காத நாடாக மாற்ற வேண்டும் என்ற இலக்கை அந்நாட்டு அரசு கொண்டுள்ளது. அதன் அடிப்படையில் மக்களிடம் புகை பிடிக்கும் பழக்கத்தை குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. இந்த நிலையில் நியூசிலாந்தில் இளைஞர்கள் சிகரெட் வாங்குவதற்கும், … Read more

அமெரிக்காவில் ஒரே பாலினத்தவர்களின் திருமண மசோதாவை சட்டமாக்க பைடன் ஒப்புதல்

அமெரிக்காவில் ஒரே பாலினத்தவர்களின் திருமண மசோதாவை சட்டமாக்க அதிபர் ஜோ பைடன் கையெழுத்திட்டார். அமெரிக்கா சமத்துவத்தை நோக்கி முக்கிய படியை எடுத்திருப்பதாகவும், சுதந்திரம் மற்றும் நீதி சிலருக்கு மட்டுமல்ல, அது அனைவருக்குமானது என்றும் கையெழுத்திடும் நிகழ்வில் ஜோ பைடன் தெரிவித்தார். திருமண சமத்துவத்திற்காக போராடியவர்கள் மற்றும் வழக்கறிஞர்களின் முயற்சிகளைப் பாராட்டுவதாகவும் ஜோ பைடன் தெரிவித்தார். Source link