தாய்லாந்து இளவரசியின் உடல்நிலை எப்படி உள்ளது? அரண்மனை வெளியிட்ட தகவல்…!

தாய்லாந்தின் மன்னரான மஹா வஜிரலோங்கோர்னின் முதல் மனைவியின் ஒரே வாரிசான இளவரிசி பஜ்ராகிதியாபா மஹிடோல் (44) கடந்த ஒரு வாரத்துக்கு முன்பாக பாங்காக்கின் வடக்கே உள்ள நகோன் ராட்சசிமாவில் ராணுவ நாய் பயிற்சியின் போது இளவரசி பஜ்ரகிதியாபா மஹிடோல் திடீரென மயங்கி விழுந்தார். இதனையடுத்து அவர் உடனடியாக பாங்காக்கிற்கு கொண்டு செல்லப்பட்டு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்துவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் அரண்மனை வெளியிட்ட அறிக்கையில், இளவரிசியின் உடல்நலத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் தற்போது வரை … Read more

‘ஜெட்-ஸ்கி’யிலிருந்து, திடீரென கடலில் தவறிவிழுந்த வீரர் உயிரிழப்பு.. போட்டியின்போது, பக்கவாதம் ஏற்பட்டிருக்க வாய்ப்பு என தகவல்..!

தாய்லாந்தில், ஜெட்-ஸ்கி பந்தயத்தின்போது கடலில் தவறிவிழுந்த தென் கொரிய நாட்டு வீரர் உயிரிழந்தார். 40 வயதான சங் வோன் கிம் போட்டியின்போது திடீரென ஜெட் ஸ்கி வாகனத்திலிருந்து கடலில் விழுந்துள்ளார். அவரை மீட்டு சி.பி.ஆர் சிகிச்சை அளித்த மீட்பு குழுவினர், பின்னர் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். ஜெட் ஸ்கி வாகனங்கள் ஒன்றோடொன்று மோதாத நிலையில், தானாக தண்ணீருக்குள் விழுந்ததால், அவருக்கு பக்கவாதம் ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.  Source link

அமெரிக்காவில் பற்றி எரிந்த வீடு… இந்திய வம்சாவளி பெண் தொழிலதிபர் உடல்கருகி பலி

வாஷிங்டன், அமெரிக்காவின் நியூயார்க் மாகாணம் லாங் ஐஸ்லாந்து என்ற பகுதியில் ‘டோனட்ஸ்’ இனிப்புக்கடை நடத்தி வரும் பெண் தொழிலதிபர் தான்யா பதிஜா (வயது 32). இவரது தந்தை கோபிந்த் பதிஜா. இந்தியாவை பூர்வீகமாக கொண்ட கோபிந்த் பதிஜா அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்து அங்கு வசித்து வருகிறார். தான்யா பதிஜாவின் வீடும் அவரது தந்தை, தாயார் வசித்து வரும் வீடும் லாங் ஐஸ்லாந்து பகுதியில் அருகருகே உள்ளது. இந்நிலையில் கடந்த 14-ம் தேதி இரவு தான்யா பதிஜா வீட்டில் உறங்கியுள்ளார். … Read more

ருமேனியாவின் நாட்டுப்புற விழாவில் விலங்குகள்போல் உடையணிந்து உற்சாக நடனமாடிய மக்கள்..!

2022ம் ஆண்டிற்கு விடையளித்து, 2023ம் புத்தாண்டை வரவேற்கும் வகையில், ஐரோப்பாவிலுள்ள ருமேனியாவின் புச்ராஸ்ட் தெருவில் நடைபெற்ற நாட்டுப்புற விழாவில், விலங்குகள் போன்று உடையணிந்து பொதுமக்கள் பங்கேற்றனர். ஆண்டு இறுதி நாட்களில் பாரம்பரியமாக நடத்தப்பட்டுவரும் இந்த விழாவில், முந்தைய காலங்களில் கரடிகளுடன் மக்கள் பங்கேற்று வந்த நிலையில், தற்போது தலை முதல் கால் வரை கரடி போன்ற ஆடைகளை அணிந்துக்கொண்டு, தெருக்களில் டிரம்ஸின் தாளத்திற்கும், விசில்களின் ஒலிக்கும் நடனமாடினர். கிராமங்களில் மாறுவேடமிட்டுக்கொண்டு வீடு வீடாக ஊர்வலமாகச் செல்வதையும் ருமேனியர்கள் … Read more

பாகிஸ்தானில் கடும் பனி மூட்டம்: பஸ்கள் நேருக்கு நேர் மோதல்: 8 பேர் பலி; 23 பேர் காயம்

இஸ்லாமாபாத், பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் ராஜன்பூர் மாவட்டத்தில் உள்ள சிந்து நெடுஞ்சாலையில் கடும் மூடுபனியால் மூடப்பட்டிருந்தது. இதனால் சாலையில் எதிரில் வரும் வாகனங்கள் வருவதை கூட கணிக்கமுடியவில்லை. இந்தநிலையில் எதிரெதிர் திசையில் இருந்த வந்த பஸ் ஒன்றொடொன்று மோதி விபத்திற்க்குள்ளானது. இந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். 23 பேர் காயமடைந்தனர். ஒரு பஸ் பெஷாவரில் இருந்து கராச்சிக்கும், மற்றொரு பஸ் ராஜன்பூருக்குச் சென்று கொண்டிருந்தது. விபத்தில் காயடைந்த பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்பட பலர் அருகிலுள்ள … Read more

புயலில் சிக்கி 106 வீரர்களுடன் நடுக்கடலில் மூழ்கிய போர் கப்பல்

பாங்காக், தாய்லாந்து நாட்டின் கடற்படைக்கு சொந்தமான போர் கப்பல் நேற்று நள்ளிரவு தாய்லாந்து வளைகுடா பகுதியில் உள்ள கடற்பகுதியில் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தது. அந்த போர் கப்பலில் கடற்படை வீரர்கள் உள்பட 106 பேர் பயணித்தனர். அப்போது, கடலில் திடீரென புயல் காற்று வீசியது. கடல் சீற்றமும் ஏற்பட்டது. இதனால், போர் கப்பலில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மேலும், கப்பலுக்குள் கடல் நீர் புகுந்தது. மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் கப்பலில் புகுந்த கடல்நீரை வெளியேற்ற முடியவில்லை. கடல் நீர் … Read more

ட்விட்டர் வாக்கெடுப்பில் எலான் மஸ்க் தோல்வி – சம்மதிப்பாரா… சமாளிப்பாரா?

பிரபல சமூக வலைதளமான ட்விட்டரை, 44 கோடி அமெரிக்க டாலர் கொடுத்து வாங்கிய எலான் மஸ்க், கடந்த மாதம் அதன் தலைமை பொறுப்பை ஏற்றார். அவர் ட்விட்டரின் நிறுவனத்தின் அந்த உச்ச பொறுப்பை ஏற்றதில் இருந்து பல்வேறு அதிரடி நடவடிக்களையும், செயல்பாட்டையும் மேற்கொண்டார்.  ஆட்குறைப்பு, ப்ளூ டிக் வெரிபிகேஷனுக்கு கட்டணம் உள்ளிட்டவை பெரும் விமர்சனங்களுக்கு உள்ளானது. எலான் மஸ்கின் இதுபோன்ற செயல்பாடுகளை நெட்டிசன்கள் பெரிதாக ரசிக்கவில்லை என்றே கூறப்பட்டது. அவரை பகடி செய்து நாள்தோறும் பல்வேறு மீம்கள் … Read more

Rewind 2022 | மனித உரிமை மீறல்களும், எழுச்சிப் போராட்டங்களும் – ஓர் உலகளாவிய பார்வை

வளர்ச்சியை நோக்கி மனித இனம் எவ்வளவு வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறதோ, அதே வேகத்தில் நாகரிகத்தைப் பின்னோக்கி இழுக்கும் மனித உரிமை மீறல்களும் தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றன. உலக அளவில் 2022-ஆம் ஆண்டில் நடந்த மனித உரிமை மீறல்களையும், மக்களின் எழுச்சிப் போராட்டங்களையும் ஒரு விரைவுப் பார்வையாக நோக்குவோம். உக்ரைன் – ரஷ்யா போர்: வருடத்தின் தொடக்க நிகழ்வாக அமைந்த உக்ரைன் – ரஷ்யா போர், வருடம் முழுவதும் தொடர்ந்தது. ஆம், ஐரோப்பிய யூனியனில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு … Read more

கனடாவில் அடுக்குமாடி குடியிருப்பில் ஒவ்வொரு வீடாக புகுந்து துப்பாக்கிச்சூடு நடத்திய மர்ம நபர் – 5 பேர் பரிதாபமாக பலி

கனடாவின், டொரண்டோ நகரிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில், ஒவ்வொரு வீடாக புகுந்து மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் உயிரிழந்தனர். தகவலறிந்து விரைந்த போலீசார், அந்த நபரை சம்பவ இடத்திலேயே சுட்டுக்கொன்றனர். அங்கு, உயிருக்கு போராடிக்கொண்டிருந்த குடியிருப்புவாசி ஒருவரை மீட்டு, மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். தாக்குதலுக்கான நோக்கம் குறித்து போலீசார் ஆராய்ந்துவருகின்றனர். கனடாவில், கைத்துப்பாக்கிகள் விற்பனைக்குத்தடை விதிக்கப்பட்டு, 2 ஆண்டுகள் நிறைவடைந்தபோதும், அங்கு துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அண்மை காலமாக அதிகரித்துள்ளன. Source link

நான் டுவிட்டர் தலைமை நிர்வாக அதிகாரி பதவியில் இருந்து விலக வேண்டுமா?: கருத்துக்கணிப்பை தொடங்கிய எலான் மஸ்க்

வாஷிங்டன், டுவிட்டரின் தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க், தனது சமீபத்திய டுவிட்டில் ‘டுவிட்டர் தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டுமா?’ என்று ஒரு கேள்வியைக் கேட்டுள்ளார். மேலும், கருத்துக் கணிப்பு முடிவைக் கடைப்பிடிப்பதாக அவர் உறுதியளித்துள்ளார். முன்னதாக, டுவிட்டரின் தலைமை நிர்வாக அதிகாரியாக நீண்ட காலம் பணியாற்ற விரும்பவில்லை என்று மஸ்க் கூறியிருந்தார். அந்த வேலைக்கு வேறு ஒருவரைக் நியமிப்பேன் என்று சூசகமாகத் தெரிவித்திருந்தார். சமீபத்தில் அவரது செயல்பாடுகள் திருப்திகரமானதாக இல்லாததால், கடும் விமர்சனங்களை எதிர்கொண்டார். … Read more