இந்திய கப்பல் ஊழியர்கள் 16 பேர் சிறைப்பிடிப்பு| Dinamalar

மலோபா, மத்திய ஆப்ரிக்கா நாடான எக்குவடோரியல் கினியில், இந்தியாவைச் சேர்ந்த கப்பல் ஊழியர்கள், 16 பேரை, அந்த நாட்டு கடற்படை சிறைப்பிடித்து வைத்துள்ளதால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடான நார்வேக்கு சொந்தமான சரக்கு கப்பலில், இந்தியாவைச் சேர்ந்த, 16 பேர் உட்பட, 26 பேர் சென்றனர். இந்த கப்பல் எண்ணெய் ஏற்றிச் சென்றது. சர்வதேச கடல் எல்லையில் சென்ற இந்த கப்பலை, எக்குவடோரியல் கினி நாட்டைச் சேர்ந்த கடற்படையினர் சிறைப்பிடித்தனர். இந்த சரக்கு கப்பல் அத்துமீறி தங்கள் … Read more

அந்த ஆளோட மூஞ்சகூட காட்டக்கூடாது… ஊடகங்களுக்கு பயங்கர கட்டுப்பாடு!

இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான பாகிஸ்தானில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வு உள்ளிட்ட காரணங்களால், இம்ரான் கான் (70) தலைமையிலான அரசு, கடந்த சில மாதங்களுக்கு முன்பு கவிழ்ந்தது. இதனால் கோபமடைந்த அவர், தனது தலைமையிலான அரசு கவிழ்க்கப்பட்டதில் வெளிநாட்டு சதி இருப்பதாக தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். இதனை காரணமாக வைத்து ஆளும் ஷபாஷ் செரீப் அரசுக்கு எதிராக இம்ரான் கான் மோதல் போக்கை கடைபிடித்து வருகிறார். இந்த நிலையில், பாகிஸ்தான் நாடாளுமன்றத்துக்கு முன்கூட்டியே … Read more

உலகின் உயரமான கட்டடமான புர்ஜ் கலிபா அருகேயுள்ள 35 மாடி கட்டடத்தில் தீ விபத்து.!

துபாயில், உலகின் உயரமான கட்டடமான புர்ஜ் கலிபா அருகேயுள்ள 35 மாடி கட்டடத்தில் தீ பரவிய காட்சி இணையத்தில் பரவி வருகிறது. டவுன்டவுனில் உள்ள எமார் பவுல்வார்டு வாக் கட்டடத்தில் நள்ளிரவில் பற்றிய தீ, மளமளவென கட்டடத்தின் மேல் பகுதி நோக்கி பரவத்தொடங்கியது. அதிகாலையில் தீ அணைக்கப்பட்ட நிலையில், கட்டடத்தின் ஒருபகுதி சேதமானது. Source link

306 இலங்கை அகதிகளை ஏற்றிச் சென்ற கப்பல் மூழ்குகிறது …| Dinamalar

306 இலங்கை அகதிகளை ஏற்றிச் சென்ற கப்பல் காற்றினால் தாக்கப்பட்டு, பிலிப்பைன்ஸ் மற்றும் வியாட்நாமுக்கு இடையே மூழ்கி வருகிறது. இலங்கையைச் சோந்த 306 பேருடன் கனடாவுக்கு சட்டவிரோதமாக பயணித்த கப்பலொன்று பிலிப்பையன்ஸிற்கும் வியட்நாமிற்கும் இடையிலுள்ள கடல்பரப்பில் சூறாவளி காற்றில் சிக்கி கடலில் முழ்கிவருவதாகவும் கப்பலில் உள்ளவர்களை உடனடியாக காப்பாற்றுமாறும் அந்த கப்பலில் இருந்த ஒருவர் தோலைபேசியில் அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. 306 இலங்கை அகதிகளை ஏற்றிச் சென்ற கப்பல் காற்றினால் தாக்கப்பட்டு, பிலிப்பைன்ஸ் மற்றும் வியாட்நாமுக்கு … Read more

டிவிட்டரை தொடர்ந்து ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணி நீக்கம் செய்ய மெட்டா நிறுவனம் திட்டம்..!

டுவிட்டரை எலன் மஸ்க் கையக்கப்படுத்திய பின்னர் அங்கு ஆட்குறைப்பை அதிரடியாக செய்து வரும் நிலையில் பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டாவும், ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணி நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது. சுமார் 87 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றும் மெட்டா நிறுவனத்தின் மூன்றாம் காலாண்டு லாபம், கடந்த ஆண்டை காட்டிலும் 52 சதவீதம் குறைந்து, 4.4 பில்லியன் அமெரிக்க டாலராக சரிந்தது. மேலும், அந்நிறுவனத்தின் மொத்த மதிப்பு 600 பில்லியன் அமெரிக்க டாலராக குறைந்த நிலையில், அதன் பங்கு விலையும் … Read more

அமெரிக்கா இடைக்கால தேர்தலில் குடியரசு கட்சியை ஆதரிக்கும் எலான் மஸ்க்

வாஷிங்டன்: அமெரிக்காவில் நடக்கவுள்ள இடைக்கால தேர்தல்களில் குடியரசு கட்சி வேட்பாளரை மீண்டும் தேர்வு செய்ய வேண்டும் என டுவிட்டரை விலைக்கு வாங்கிய எலான் மஸ்க் கூறியுள்ளார். அமெரிக்க பாராளுமன்ற பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் சபை என இரண்டு சபைகளில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும். அமெரிக்க அதிபரின் நான்கு ஆண்டுகள் பதவிக்காலத்திற்கு மத்தியில் இந்த தேர்தல்கள் நடைபெறுவதால், இது இடைக்கால தேர்தல் என அழைக்கப்படுகிறது.வரும் 8-ம் தேதி இடைக்கால தேர்தல் நடக்கிறது. இதற்கான பிரசாரத்தில் அதிபர் … Read more

ஆயுத இடைத்தரகர் சஞ்சய் பண்டாரியை நாடு கடத்த லண்டன் கோர்ட்டில் வழக்கு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: பிரிட்டன் தப்பியோடியுள்ள ஆயுத இடைத்தரகர் சஞ்சய் பண்டாரியை நாடு கடத்தி கொண்டு வர லண்டன் கோர்ட்டில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த காங்., தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது ஆயுத இடை தரகராக இருந்தவர் சஞ்சய் பண்டாரி. இவர் காங்., தலைவர் சோனியாவின் மருமகனும், பிரியங்காவின் கணவருமான ராபர்ட் வாத்ராவின் நெருங்கிய நண்பர் என கூறப்படுகிறது. இவர் மீது 2002ம் ஆண்டு பண மோசடி, … Read more

டுவிட்டர் நிறுவனத்தை தொடர்ந்து மெட்டாவிலும் ஆட்குறைப்பு?| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன் : ‘டுவிட்டர்’ சமூக வலைதளத்தை தொடர்ந்து, ‘பேஸ்புக்’கின் தாய் நிறுவனமான, ‘மெட்டா’விலும் ஆட் குறைப்பு நடவடிக்கையை மேற்கொள்ள அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அமெரிக்காவை தலைமையகமாக வைத்து செயல்படும், ‘டுவிட்டர்’ சமூக வலைதளத்தை, அந்நாட்டு தொழிலதிபர் எலான் மஸ்க் சமீபத்தில் கையகப்படுத்தினார். இதையடுத்து அதிரடியாக ஆட் குறைப்பு நடவடிக்கையில் அவர் ஈடுபட்டார். உலகம் முழுதும் அந்நிறுவனத்துக்காக பணியாற்றும் 7,500 ஊழியர்களில் 50 சதவீத ஊழியர்களை பணி நீக்கம் … Read more

மூடிக்கொண்டு வாழைப்பழத்தை சாப்பிட்ட சீன பெண்… இதுக்குமா அரசு கட்டுப்பாடு?

சீனாவின் ஹூபே மாகாணத்தை சேர்ந்த பெண் ஒருவர் மெட்ரோ ரயிலில் பயணம் செய்துள்ளார். அங்கு பொது இடங்களில் கரோனா கட்டுப்பாடு மிகத்தீவிரமாக கடைபிடிக்கப்படுவதால், அந்த பெண், பிளாஸ்டிக் கவரால் தன்னை மறைத்துக்கொண்டு ஒரு வாழைப்பழத்தை சாப்பிட்டுள்ளார். மேலும், மெட்ரோவில் உணவருந்துவதும் தடை செய்யப்பட்டுள்ளது.   இதை, அந்த ரயிலில் பயணித்த மற்றொரு பயணி கவனித்து, வித்தியாசமான ஆடையை அந்த பெண் அணிந்துள்ளார் என தனது செல்போனில் வீடியோவில் எடுத்துள்ளார். பின்னர், அதில், அந்த பெண் வாழைப்பழத்தை சாப்பிடுவது தெரியவந்தது.  … Read more

‘ஆம், ரஷ்யாவுக்கு ட்ரோன்களை விநியோகித்தோம்’ – ஈரான் முதல் முறையாக ஒப்புதல்

தெஹ்ரான்: ரஷ்யாவுக்கு ட்ரோன்களை விநியோகம் செய்ததை ஈரான் முதல் முறையாக ஒப்புக் கொண்டுள்ளது. கடந்த சில நாட்களாக ரஷ்யாவுக்கு ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை ஈரான் ஏற்றுமதி செய்தது தொடர்பாக கடுமையாக விமர்சனம் எழுந்து வந்தது. இதுவரை ஈரான் தயாரித்த 300 ட்ரோன்களை தாக்கி அழித்துள்ளோம் என்று உக்ரைனும் கூறியது. ஆனால், தாங்கள் ரஷ்யாவுக்கு ட்ரோன்களை ஏற்றுமதி செய்யவில்லை என்று ஈரான் தொடர்ந்து கூறி வந்தது. இந்த நிலையில், ரஷ்யாவுக்கு ட்ரோன்களை ஏற்றுமதி செய்ததை ஈரான் முதல் முறையாக … Read more