ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக சேர்க்க இந்தியாவுக்கு பிரான்ஸ் ஆதரவு
நியூயார்க்: ஐ.நா. சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ரஷ்யா, சீனா ஆகிய 5 நாடுகள் நிரந்தர உறுப்பினர்களாக உள்ளன. சர்வதேச பாதுகாப்பு, ராணுவம், வெளியுறவுக் கொள்கை போன்றவற்றை தீர்மானிக்கும் அமைப்பாக இந்த கவுன்சில் உள்ளது. இதில் நிரந்தர உறுப்பினராக இந்தியா முயன்று வருகிறது. இதற்கு உலக நாடுகளின் ஆதரவை திரட்டி வருகிறது. இந்நிலையில் ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் சீர்திருத்தம் குறித்த பொதுச்சபை கூட்டத்தில் ஐ.நா.வுக்கான பிரான்ஸ் துணை பிரதிநிதி நதாலி பிராட்ஹர்ஸ்ட் பேசியதாவது: ஐ.நா. பாதுகாப்பு … Read more