நெடுஞ்சாலையில் கவிழ்ந்த பேருந்து – 27 பேர் உயிரிழப்பு; 20 பேர் காயம்!

சீனாவில் நெடுஞ்சாலையில் பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்கு உள்ளான சம்பவத்தில், 27 பேர் உயிரிழந்து உள்ளனர். தென் மேற்கு சீனாவின் மலைப் பகுதியான குய்சோவு மாகாணத்தில், இன்று அதிகாலை, 47 பேருடன் பேருந்து ஒன்று சென்றுக் கொண்டிருந்தது. இந்தப் பேருந்து, மாகாண தலைநகரான குயாங்கிற்கு தென் கிழக்கே 170 கிலோ மீட்டர் (105 மைல்) தொலைவில் உள்ள சாண்டு கவுண்டி என்ற இடத்திற்கு வந்த போது, திடீரென்று ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து நெடுஞ்சாலையில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. … Read more

பிரிட்டனின் ஓரின சேர்க்கை ‘தந்தையர்களுக்கு’ வாடகை தாய் மூலம் குழந்தை!

பிரிட்டனில், கடந்த 1999 ஆம் ஆண்டில், பாரி மற்றும் டோனி மிகவும் பிரபலமடைந்தனர்.  பிரித்தானியாவில்  தாய் இல்லாமல் தந்தை இருவர் என்ற அந்தஸ்தைப் பெறும் முதல் ஓரினச்சேர்க்கை ஜோடி இதுவாகும். பாரி ட்ரெவிட் பார்லோ மற்றும் ஸ்காட் ஹட்சின்சன் என்ற ஓரின சேர்க்கை ஜோடி,  பிரிட்டனின் முதல் ஓரின சேர்க்கை தந்தைகளாக அங்கீகரிக்கப்பட்டனர்.  1999 ஆம் ஆண்டில், பாரி ட்ரெவிட் பார்லோ மற்றும் டோனி  டிராவிட் பார்லோ என்பவரை மணந்தார். அவர்களுக்கு 5 குழந்தைகள் உள்ளனர். ஆனால்  … Read more

லண்டன் சென்றார் ஜனாதிபதி திரவுபதி முர்மு| Dinamalar

லண்டன்: மறைந்த பிரிட்டன் அரசி எலிசபெத்தின் இறுதிச் சடங்கில் பங்கேற்க, ஜனாதிபதி திரவுபதி முர்மு லண்டன் சென்றடைந்தார். அப்பொழுது, கேட்விக் விமான நிலையத்தில் இந்திய தூதர்கள் சிறப்பு வரவேற்பு மேற்கொண்டர். பிரிட்டன் ராணி எலிசபெத்: பிரிட்டனின் இரண்டாம் ராணி எலிசபெத் கடந்த 9 ஆம் தேதி உடல் நலக்குறைவால் மறைந்தார். அதனைத் தொடர்ந்து அவருடைய உடல் ஸ்காட்லாந்தின் பால்மரால் அரண்மனையில் இருந்து லண்டனில் உள்ள பக்கிங்ஹாம் அரண்மனைக்கு அஞ்சலிக்காகக் கொண்டுவரப்பட்டது. அங்கு லண்டனில் பிரிட்டன் பார்லிமெண்ட் அடங்கிய … Read more

பிரிட்டன் ராணி இறுதிச்சடங்கு: லண்டன் வந்தார் அமெரிக்க அதிபர் பைடன்!

பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்வதற்காக, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் லண்டன் வந்துள்ளார். பிரிட்டன் நாட்டின் ராணி இரண்டாம் எலிசபெத் கடந்த 8 ஆம் தேதி உயிரிழந்தார். அவர் தனது 96வது வயதில் ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் பண்ணை மாளிகையில் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்து உள்ளனர். ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக உலகத் … Read more

ராணி எலிசபெத்தின் இறுதிச்சடங்கு: லண்டன் சென்றடைந்தார் ஜனாதிபதி திரவுபதி முர்மு

லண்டன், இங்கிலாந்து நாட்டின் ராணி 2-ம் எலிசபெத் கடந்த 8-ம் தேதி உயிரிழந்தார். அவர் தனது 96-வது வயதில் ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் பண்ணை மாளிகையில் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்து உள்ளனர். ஸ்காட்லாந்தில் இருந்து விமானம் மூலம் ராணி எலிசபெத்தின் உடல் கடந்த 13-ந்தேதி இங்கிலாந்து சென்றடைந்தது. லண்டனில் ராணியின் உடலை மன்னர் சார்லசும், ராணி கமிலாவும் பெற்றுக்கொண்டனர். விமான நிலையத்தில் … Read more

பாகிஸ்தான் கனமழை, வெள்ளத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 1,545 ஆக உயா்வு

இஸ்லாமாபாத், பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பானது இதுவரை இல்லாத சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. நாட்டின் மொத்த பரப்பில் மூன்றில் ஒரு பங்குக்கு அதிகமான பகுதிகள் நீரில் மூழ்கி உள்ளன. இந்நிலையில், பாகிஸ்தானில் நேற்று காலையுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் கனமழை மற்றும் வெள்ளம் தொடர்பான சம்பவங்களில் 16 சிறுவர்கள், 7 பெண்கள் உள்பட 37 பேர் பலியாகினர். இதை தொடர்ந்து அங்கு கடந்த ஜூன் மாதத்தில் இருந்து தற்போது வரை கனமழை, வெள்ளத்துக்கு பலியானவர்களின் எண்ணிக்கை … Read more

‘போர் தொடுப்பதற்கான காலம் அல்ல இது’ – அதிபர் புதினிடம் கூறிய பிரதமர் மோடிக்கு அமெரிக்க பத்திரிகைகள் பாராட்டு

வாஷிங்டன்: ‘போர் தொடுப்பதற்கான காலம் அல்ல இது ’ என ரஷ்ய அதிபர் புதினிடம் நேரடியாக தனது கருத்தை நாசுக்காக தெரிவித்த பிரதமர் மோடியை அமெரிக்க பத்திரிகைகள் பாராட்டியுள்ளன. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி உஸ்பெகிஸ்தானின் சாமர்கண்ட் நகருக்கு சென்றிருந்தார். இதில் ரஷ்ய அதிபர் புதின், சீன அதிபர் ஜீ ஜின்பிங் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, கரோனா தொற்று காலத்துக்குப்பின், உலகம் … Read more

அமெரிக்க நாடாளுமன்ற தாக்குதலில் ஈடுபட்ட நபருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை..!!

வாஷிங்டன், அமெரிக்க நாடாளுமன்றத்தின் மீது டிரம்ப் ஆதரவாளர்கள் வன்முறை தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் ஒரு போலீஸ் அதிகாரி உள்பட 5 பேர் உயிரிழந்தனர். அமெரிக்க நாடாளுமன்றத்திற்குள் நடந்த இந்த தாக்குதல் சம்பவம், அந்த நாட்டின் நாடாளுமன்ற வரலாற்றில் மிக மோசமான நிகழ்வாக பதிவானது. இந்த தாக்குதலுக்கு முக்கிய காரணமாக அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டிரம்ப் மீது குற்றம் சாட்டப்பட்டது. அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகளில் குளறுபடி நடந்துள்ளதாக டிரம்ப் கூறி வந்த நிலையில், தனது ஆதரவாளர்களிடையே … Read more

சீனாவில் புதிதாக 718 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

பெய்ஜிங், உலகின் முதல் கொரோனா வைரஸ் தொற்று சீனாவின் உகான் நகரில் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அங்கிருந்து உலகம் முழுவதும் பரவி வரலாறு காணாத தாக்கத்தை கொரோனா வைரஸ் தொற்று நோய் ஏற்படுத்தி விட்டது. கொரோனா தடுப்பூசி உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக உலக நாடுகள் தற்போது படிப்படையாக கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வருகின்றன. இந்த நிலையில் சீனாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் 986 பேருக்கு … Read more

ஜோர்டனில் கட்டிட விபத்தில் சிக்கிய 10 மாத குழந்தை – சிறிய காயமும் இன்றி உயிர்தப்பிய அதிசயம்

அம்மான், ஜோர்டன் நாட்டின் தலைநகர் அம்மானில், 4 மாடிகளைக் கொண்ட குடியிருப்பு கட்டிடம் ஒன்று திடீரென இடிந்து விழுந்தது. அந்த சமயத்தில் கட்டிடத்தில் இருந்தவர்களில் 10 பேர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர். மேலும் பலர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து கட்டிட இடிபாடுகளை அகற்றிம் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்டு வந்தனர். அந்த சமயத்தில் யாரும் எதிர்பார்க்காத அதிசயம் ஒன்று நிகழ்ந்தது. விபத்து நடந்து சுமார் 24 மணி நேரங்களுக்குப் பிறகு, மீட்புப் படையினர் … Read more