380 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் இருதயம் எப்படி இருந்தது? அபூர்வ தகவல்கள் தரும் இதயம்

சிட்னி: உலகின் பழமையான இதயத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். ஆஸ்திரேலியாவில், 380 மில்லியன் ஆண்டுகள் பழமையான மீன் வகைகளில் இந்த இதயம் கண்டறியப்பட்டுள்ளது. பெர்த்தில் உள்ள கர்டின் பல்கலைக்கழகத்தின் தலைமையில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் இந்த அரிய கண்டுபிடிப்பு நிகழ்ந்துள்ளது. மனித உடல்கள் எவ்வாறு உருவாகியுள்ளன என்பதை வெளிப்படுத்தும் இந்த ஆய்வு என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். மேற்கு ஆஸ்திரேலியாவின் கிம்பர்லி பகுதியில் உள்ள கோகோ அமைப்பில் உள்ள ஆராய்ச்சியாளர்களால் மீன்களின் புதைபடிவம் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த புதைபடிமங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் … Read more

“கிறிஸ்தவம் மட்டுமல்ல, அனைத்து மதங்களையும் பாதுகாப்பேன்” – இங்கிலாந்து மன்னர் சார்லஸ்

லண்டன்: “கிறிஸ்துவம் மட்டுமல்ல, அனைத்து மதங்களையும் பாதுகாப்பேன்” என்று இங்கிலாந்து மன்னர் சார்லஸ் தெரிவித்துள்ளார். 70 ஆண்டுகளுக்கு மேலாக பிரிட்டனை ஆட்சி செய்த ராணி இரண்டாம் எலிசபெத் மறைவைத் தொடர்ந்து அவரது மகனான இளவரசர் சார்லஸ், மன்னராக பதவியேற்றார். ராணியின் இறுதிச் சடங்கு வரும் திங்கள்கிழமை நடக்கவுள்ள சூழலில், மன்னர் சார்லஸ் முக்கிய நிகழ்வுகளில் பங்கெடுத்து வருகிறார். அந்த வகையில் வெள்ளிக்கிழமை பக்கிங்காம் அரண்மனையில் மதத் தலைவர்களை இங்கிலாந்து மன்னர் சார்லஸ் சந்தித்தார். அப்போது அவர் பேசும்போது, … Read more

சீனாவுக்கும் பரவியது குரங்கு அம்மை – வெளிநாட்டில் இருந்து வந்தவருக்கு பாதிப்பு!

சீனாவில், வெளி நாட்டில் இருந்து வந்த ஒரு நபருக்கு குரங்கு அம்மை தொற்று இருப்பது பரிசோதனையில் கண்டறியப்பட்டு உள்ளது. கொரோனா வைரஸ் தொற்றைத் தொடர்ந்து உலக நாடுகளை குரங்கு அம்மை என்ற நோய் அச்சுறுத்தி வருகிறது. உடலில் கொப்புளங்கள் தோன்றி காய்ச்சல் ஏற்படுத்தும் இந்த நோய், சர்வதேச அவசரநிலையாக அறிவிக்கப்பட்டு உள்ளது. குரங்கு அம்மை சுமார் 90 நாடுகளில் பரவி உள்ளதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. இந்த வைரஸ் நோயை தீவிரமாக கண்காணிக்க வேண்டுமெனவும், உலக … Read more

ரஷ்யாவின் கோர தாண்டவம்: உக்ரைன் அதிபர் வேதனை| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் கீவ்-”ரஷ்யாவின் பிடியில் இருந்து மீட்கப்பட்ட இசியம் நகரில், 400க்கும் மேற்பட்டோர் கொன்று புதைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இங்கு, புதைக்கப்பட்டோரை அடையாளம் காணும் பணி நடக்கிறது. ”ரஷ்யா நடத்திய இந்தப் படுகொலைகளை விரைவில் ஆதாரத்துடன் அம்பலப்படுத்துவோம்,” என, உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி கூறினார்.கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது, பிப்., 24ல் ரஷ்யா தாக்குதலை துவக்கியது. இன்று வரை நீடிக்கும் இந்தப் போரில், ஏராளமான உக்ரைன் வீரர்கள், பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். உக்ரைனும் … Read more

சர்வதேச பயங்கரவாதி அசார் எங்கே?பாகிஸ்தானுக்கு தலிபான்கள் பதில்!| Dinamalar

காபூல்:’பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ் – இ – முகமது தலைவர் மசூத் அசார் பாகிஸ்தானில் தான் இருக்கிறார்’ என, ஆப்கானிஸ்தான் தெரிவித்துள்ளது. தாக்குதல் நம் அண்டை நாடான பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ் – இ – முகமது பயங்கரவாத இயக்க தலைவர் மசூத் அசார், 1994ல் போலி ஆவணங்கள் வாயிலாக, ஜம்மு – காஷ்மீருக்குள் நுழைந்த போது, கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து, அந்த இயக்கத்தின் பயங்கரவாதிகள், 1999ல் நம் நாட்டின் பயணியர் விமானத்தை கடத்தினர். … Read more

ஜெய்ஷ் இ முகம்மது தலைவர் மசூத் அசார் ஆப்கனில் இருக்கிறார்: பிலாவல் பூட்டோ ஜர்தாரி

சமர்கண்ட்: தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்பான ஜெய்ஷ் இ முகம்மது அமைப்பின் தலைவர் மசூத் அசார், ஆப்கனிஸ்தானில் இருப்பதாக பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் பிலாவல் பூட்டோ ஜர்தாரி தெரிவித்துள்ளார். பிலாவல் பூட்டோ ஜர்தாரி பேட்டி: உஸ்பெகிஸ்தானின் சமர்கண்ட் நகரில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் பங்கேற்ற அவர், செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளிக்கும்போது இதனைத் தெரிவித்தார். எனவே, மசூத் அசார் விவகாரம் இனி இந்தியா – பாகிஸ்தான் இடையேயானது மட்டுமல்ல, ஆப்கனிஸ்தானையும் சேர்த்து மூன்று … Read more

'ஹிஜாப் சரியாக அணியவில்லை' – போலீசார் தாக்கியதில் இளம் பெண் உயிரிழப்பு

தெஹ்ரான், இஸ்லாமிய மதத்தை பின்பற்றும் நாடு ஈரான். இந்நாட்டில் பெண்கள் மற்றும் 9 வயதிற்கு மேற்பட்ட சிறுமிகள் இஸ்லாமிய மத உடையான ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தலை மற்றும் முகத்தை மூடும் வகையிலான உடையான ஹிஜாப் அணிவது ஈரானில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதை மீறுபவர்களுக்கு கடுமையான தண்டனைகளும் வழங்கப்படுகிறது. இதனிடையே, அந்நாட்டின் குர்திஸ்தான் மாகாணத்தை சேர்ந்த 22 வயதான மாஷா அமினி தனது குடும்பத்துடன் கடந்த செவ்வாய்கிழமை தலைநகர் தெஹ்ரானுக்கு சென்றுள்ளார். அதேவேளை, ஈரானில் உடை தொடர்பான நெறிமுறைகளை … Read more

சீனாவில் புதிதாக 986 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

பெய்ஜிங், உலகின் முதல் கொரோனா வைரஸ் தொற்று சீனாவின் உகான் நகரில் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அங்கிருந்து உலகம் முழுவதும் பரவி வரலாறு காணாத தாக்கத்தை கொரோனா வைரஸ் தொற்று நோய் ஏற்படுத்தி விட்டது. கொரோனா தடுப்பூசி உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக உலக நாடுகள் தற்போது படிப்படையாக கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வருகின்றன. இந்த நிலையில் சீனாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் 1,083 பேருக்கு … Read more

ராணி எலிசபெத்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்த சீன எம்.பி.க்கள் குழுவுக்கு அனுமதி மறுப்பு

லண்டன்: இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்த சீன எம்.பி.க்கள் குழுவுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. கடந்த 8-ம் தேதி ஸ்காட்லாந்தின் பால்மோரல் அரண்மனையில் இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் (96) உயிரிழந்தார். தலைநகர் லண்டனில் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள வெஸ்ட்மினிஸ்டர் அரங்கில் ராணியின்உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கிறது. இந்த சூழலில் ராணியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த சீனாவை சேர்ந்த 5 எம்.பி.க்கள் உட்பட 7 பேர் குழு அனுமதி கோரியது. அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக … Read more

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்றுவிட்டு இந்தியா புறப்பட்டார் பிரதமர் மோடி

சமர்கண்ட், ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு உஸ்பெகிஸ்தான் நாட்டில் நடைபெற்றது. 2001-ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் மொத்தம் 8 நாடுகள் நிரந்தர உறுப்பினர்களாக உள்ளனர். அதன்படி, சீனா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், ரஷியா, தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், இந்தியா, பாகிஸ்தான் ஆகிய 8 நாடுகள் நிரந்தர உறுப்பினர்களாக உள்ளனர். இதனிடையே, உஸ்பெகிஸ்தான் நாட்டின் சமர்கண்ட் நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு நேற்று நடைபெற்றது. இதில், இந்திய பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷிய அதிபர் விளாடிமிர் … Read more