எலான் மஸ்கிற்கு கிரீன் சிக்னல் கொடுத்த டிவிட்டர் பங்குதாரர்கள்; அடுத்தது என்ன!

சமூக வலைதள நிறுவனமான ட்விட்டரை கைப்பற்றுவதற்காக உலகின் மிகப்பெரிய பணக்காரரான எலான் மஸ்க் தொடர்ந்து முயற்சித்து வந்தார். ட்விட்டர் நிறுவனத்தின் 9.2 சதவீத பங்குகளை முதலில் வாங்கிய உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க், பின்னர் அனைத்து பங்குகளையும் வாங்க முன்வந்தார். ஒரு பங்கு 54.2 அமெரிக்க டாலர் என ட்விட்டர் நிறுவனத்தின் மொத்த பங்குகளையும், 4,400 கோடி அமெரிக்க டாலர்களுக்கு வாங்க எலான் மஸ்க் பேச்சு வார்த்தைஇந்திய ரூபாயில் இதன் மதிப்பு, ரூ.3.37 லட்சம் கோடி … Read more

6 மாதங்களுக்குப் பிறகு உக்ரைன் கட்டுப்பாட்டின் கீழ் வந்த கார்கிவ் நகரம்

கார்கிவ்: கடந்த 6 மாதங்களாக ரஷ்ய படைகளின் கட்டுப்பாட்டில் இருந்த கார்கிவ் நகரத்தை தனது கட்டுப்பாட்டின் கீழ் உக்ரைன் கொண்டு வந்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து கார்க்கிவ் நகரின் முக்கிய இடங்களில் உக்ரைனின் கொடி உயர பறந்து வருகிறது. உக்ரைனின் கார்கிவ் மாகாணத்தில் இசியம் என்ற பகுதியில் ரஷ்யப் படைகள் குவிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை அங்கு உக்ரைன் படைகள் எதிர்பாராத அளவில் பலம் பொருந்திய தாக்குதலை நடத்தின. இதனைத் தொடர்ந்து ரஷ்ய வீரர்கள் அங்கிருந்து பின்வாங்கினர். அவர்கள் … Read more

ராணி எலிசபெத்திற்கு அஞ்சலி செலுத்த 2 நாட்களாகக் காத்திருக்கும் பெண்

பிரிட்டன் ராணி 2-ம் எலிசபெத் கடந்த 8-ம் தேதி உயிரிழந்தார். ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் மாளிகையில் அவர் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து, பால்மோரல் மாளிகையில் இருந்து கடந்த 11-ந்தேதி, அவரது உடல் ஸ்காட்லாந்தின் தலைநகரான எடின்பரோ நகருக்கு கொண்டு செல்லப்பட்டது.   முதலில் ஹோலிரூட் ஹவுஸ் மாளிகையில் வைக்கப்பட்ட உடல், செயிண்ட் கில்ஸ் தேவாலயத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டது. அங்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் ராணியின் உடலுக்கு மரியாதை செலுத்தினர்.  இதனைத் தொடர்ந்து, ஸ்காட்லாந்தில் இருந்து விமானம் மூலம் 2-ம் … Read more

எலிசபெத் ராணியின் உடல் பக்கிங்காம் அரண்மனை வந்தது

லண்டன்: ராணி இரண்டாம் எலிசபெத்தின் உடல் பக்கிங்காம் அரண்மனைக்கு வந்து சேர்ந்தது. கடந்த 70 ஆண்டுகளாக பிரிட்டனின் ராணியாக இருந்த இரண்டாம் எலிசபெத்,கடந்த 8 ஆம் தேதி தனது 96 வயதில் ஸ்காட்லாந்தில் மரணமடைந்தார். ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச் சடங்குகள் வரும் 19-ம் தேதி நடைபெறும் என்று பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்திருக்கிறது. மறைந்த ராணி எலிசபெத்தின் உடல், ஓக் மரத்தாலான சவப்பெட்டியில் வைக்கப்பட்டு, அவர் தலைநகரான எடின்பர்க் கொண்டு செல்லப்பட்டது. முதலில் எலிசபெத்தின் உடல், ஹோலிரூட் … Read more

பிரிட்டிஷ் மகாராணியின் கிரீடத்தில் இருக்கும் கோஹினூர் வைரம் பூரி ஜெகன்னாதருக்கு சொந்தமானது.. வைரத்தை இந்தியா கொண்டுவர ஒடிஷா அமைப்பு கோரிக்கை..!

மறைந்த பிரிட்டிஷ் மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் கிரீடத்தை அலங்கரிக்கும் கோகினூர் வைரம் பூரி ஜெகநாதர் ஆலயத்திற்கு சொந்தமானது என்று ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சமூக கலாச்சார கூட்டமைப்பு கூறியுள்ளது. ஆப்கானிஸ்தானை சேர்ந்த நாதிர் ஷாவை போரில் வென்றதன் நினைவாக, பஞ்சாப் மன்னர் ரஞ்சித் சிங், பூரி ஜெகநாதருக்கு கோகினூர் வைரத்தை நன்கொடையாக அளித்தார் என்றும் மகாராஜா ரஞ்சித்சிங்கின் மறைவுக்கு பிறகு அவரது மகன் துலிப்சிங்கிடம் இருந்து கோகினூர் வைரத்தை ஆங்கிலேயர்கள் பறித்து சென்றதாக கூறியுள்ளனர். இதுதொடர்பாக தாங்கள் … Read more

எலான் மஸ்க் வசம் செல்கிறது டுவிட்டர்: பங்குதாரர்கள் பச்சைக்கொடி| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன்: டுவிட்டர் நிறுவனத்தை உலகின் பெரும் பணக்காரர் எலான் மஸ்கிடம் விற்க அந்நிறுவனத்தின் பங்குதாரர்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர். பங்குதாரர்களின் முடிவை எலான் மஸ்க் ஏற்பாரா என்பது விரைவில் தெரியவரும். உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க், சமூக ஊடக நிறுவனமான டுவிட்டரை, ரூ.3.34 லட்சம் கோடிக்கு வாங்க உள்ளதாக கடந்த சில மாதங்களுக்கு முன் அறிவித்தார். இதற்கான ஒப்பந்தம் நிறைவடையவில்லை. டுவிட்டரில் 20 சதவீத கணக்குகள் போலி எனவும், 5 … Read more

கென்யாவின் 5வது அதிபராக பதவியேற்றார் வில்லியம் ரூட்டோ.!

கிழக்கு ஆப்பிரிக்க குடியரசு நாடான கென்யாவின் ஐந்தாவது அதிபராக வில்லியம் ரூட்டோ பதவியேற்றார். அதிபர் தேர்தலில் 50.5 சதவீத வாக்குகளுடன் வில்லியம் ரூட்டோ வெற்றி பெற்றவராக அறிவிக்கப்பட்டாலும், அந்த முடிவை எதிர்த்து எதிர்க்கட்சித் தலைவர் ரய்லா ஒடிங்கா கென்யா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் கடந்த வாரம் அந்த மனுக்களை நிராகரித்ததைத் தொடர்ந்து, முன்னாள் துணை அதிபராக பதவி வகித்த வில்லியம் ரூட்டோ அதிபராக பதவியேற்றுக் கொண்டார். கென்யாவின் அதிபராக இருந்து பதவி விலகும் … Read more

இலங்கைக்கு இந்த ஆண்டில் மட்டும் 380 கோடி டாலர் உதவி – இந்தியா தகவல்

புதுடெல்லி: இலங்கையில் உள்ள தமிழ் சிறுபான்மையினர் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வுகளை ஏற்படுத்துவதில் அந்நாட்டு அரசு அலட்சியத்துடன் செயல்பட்டு வருவதாகவும், குறிப்பிடத்தக்க அளவிலான முன்னேற்றம் எதுவும்இல்லை என்றும் ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் (யுஎன்ஹெச்ஆர்சி) இந்தியா கவலை தெரிவித்துள்ளது. இதுகுறித்து மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இலங்கை தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்பதில் இந்தியா உறுதியுடன் உள்ளது. அந்த வகையில், இலங்கை அரசியலமைப்பின் 13-வது திருத்தத்தை முழுமையாக செயல்படுத்துதல், மாகாண சபைகளுக்கு அதிகாரங்களை வழங்குதல், இனப்பிரச்சினை தீர்வுக்கான அர்ப்பணிப்பு … Read more

ரஷ்யா, சீனா இடையிலான உறவு வலுவடைகிறது

பெய்ஜிங்: உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்திருப்பதால் சர்வதேச அரங்கில் ரஷ்யா தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் ரஷ்யா மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதித்து உள்ளன. இதுகுறித்து அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் செயல்படும் சீன திட்டம் அமைப்பின் இயக்குநர் யூன் சன் கூறும்போது, “அமெரிக்கா, சீனா இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடுகள் ரஷ்யா உடனான பொருளாதார உறவை துண்டித்துள்ளன. உலக நாடுகள் பல்வேறு அணிகளாக பிரிந்து செயல்படுகின்றன. உக்ரைன் போரின் எதிர்விளைவாக ரஷ்யா, … Read more

கத்தாரில் பள்ளி பேருந்து உள்ளே கேரள சிறுமி மூச்சு திணறி பலி| Dinamalar

தோஹா, கத்தாரில், ஆரம்ப பள்ளியில் படித்து வந்த கேரளாவை சேர்ந்த 4 வயது சிறுமியை பள்ளி பேருந்துக்குள் வைத்து தவறுதலாக பூட்டியதை அடுத்து சிறுமி மூச்சுத் திணறி உயிரிழந்தார்.கேரளாவின் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள செங்கனசேரியை சேர்ந்த அபிலாஷ் சாக்கோ, சவும்யா தம்பதியினர், மேற்காசிய நாடான கத்தாரில் பணியாற்றுகின்றனர்.இவர்களுக்கு, 4 வயதில் மின்ஸா மரியம் ஜேகப் என்ற மகள் இருந்தார்.கத்தாரின் அல் வாக்ராவில் உள்ள ஆரம்ப பள்ளியில் படித்து வந்த இவர், 11ம் தேதி காலை பேருந்தில் பள்ளிக்குச் … Read more